• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thulirvidum Nesamadi - 38

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 38

என்னில் கலந்த உன்னைப்

பிரிந்து உடல் மட்டும் செல்கிறது..

என் மனம் என்றுமே உன்வசம்

என்று அறிவாயோ என் நிலவே

மலரும் நிலவும் உறவில்

கலந்த பிறகும் நினைவு

இன்றும் உன்னிடமே பெண்ணே..

இரவு முழுவதும் அவளிடம் உறவாடியவன் விடியும் வேளையில் அவளுக்கு ஓய்வு தந்து அவளை தன மார்போடு அணைத்தபடியே உறக்கத்தில் ஆழ்ந்துவிட, அவனுடன் சேர்ந்து அவளும் தூங்கிவிட ஜன்னலின் வழியே பரவிய விடியலின் வெளிச்சம் அந்த அறையிலும் பரவியது.. அந்த வெளிச்சம் கண்டு மெல்ல கண்விழித்த மகிழன், “ஓ விடிஞ்சிருச்சா..” என்று நினைத்தவன் மார்பில் தூங்கிய வளர்மதியின் முகத்தைப் பார்த்தான்.. அவளின் நெற்றி வகிட்டில் சூடியிருந்த குங்குமம் கலைந்து அவளின் கூந்தலில் சூடிருந்த மல்லிகை எல்லாம் கூடல் பொழுதில் வாடிருக்க துவண்ட முல்லை கொடிபோல அவனின் மார்பில் தூங்கிக்கொண்டிருந்தாள் வளர்மதி..

அவளின் தூக்கத்தைப் பார்த்தவன் குறுஞ்சிரிப்புடன், “ஏய் பொண்டாட்டி எழுந்திருடி..” என்று அவளின் கன்னத்தில் விரலால் கோலமிட்டவனின் அழைப்பிற்கு எல்லாம் அசையாமல் படுத்திருந்த வளர்மதியைப் பார்த்த மகிழன், “ம்ம் இது சரிப்பட்டு வராது..” என்று தனக்குதானே அவளின் இதழில் முத்தமிட அதில் தூக்கம் கலைந்தவள், “என்ன மாமா.. விடிய இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கு.. நீ நைட்டே தூங்க விடல.. இப்பொழுதாவது தூங்க விடு மாமா..” என்று சொல்லிவிட்டு அவனின் மார்பில் முகம் புதைத்து தூங்க ஆரம்பித்தாள்..

அதிலிருந்தே அவளின் களைப்பை உணர்ந்த மகிழன், “சரிங்க மேடம் நீங்க தூங்குங்க மேடம்..” என்று சிரிப்புடன் கூறிய மகிழனும் அவளை அணைத்துக்கொண்டு மீண்டும் தன்னுடைய தூக்கத்தை தொடர்ந்தான்.. எங்கோ ஒரு வெப்ப மரத்தில் அமர்ந்திருந்த கருங்குயில் ஒன்று, “கூ..கூ..குக்கூ..” என்று தன்னுடைய கானத்தை இசைக்க மெல்ல விழிதிறந்து பார்த்த வளர்மதி, “ஐயோ விடிஞ்சிருச்சா..?” என்று கேட்டுக்கொண்டே வேகமாக அவனைவிட்டு விலகியேழ நினைத்தாள்..

ஆனால் அது முடியாத அளவிற்கு அவளை அணைத்தபடியே தூங்கிக் கொண்டிருந்தான் மகிழன்.. அவள் நகர நினைத்தும் அவனின் அணைப்பு இறுக, “மாமா..” என்று செல்லமாக அழைத்தாள்.. அவளின் அழைப்பில் அவனின் இறுக்கம் கொஞ்சம் தளர அந்த இடைவெளியில் அவனைவிட்டு விலகி எழுந்தவள் மணியைப் பார்த்த வளர்மதி அதிர்ந்து நின்றாள்..

காலைபொழுது விடிந்து மணி ஒன்பது ஆகியிருக்க, “ஐயோ இந்நேரம் வரையில தூங்கினேன்.. ஐயோ இன்னைக்கு அம்மாகிட்ட நல்ல திட்டு வாங்க போறேன்.. எல்லாம் இந்த மாமாவால வந்தது..” என்றவனைத் திட்டியபடியே அங்கிருந்த அலைமாரியைத் திறந்தாள்..

அதில் இருந்த உடைகள் எல்லாம் அவளுக்கான அனைத்து விதமான சேலைகள், சுடிதார் என்று விதவிதமாக இருந்த துணிகள் அதற்கு ஏற்றது போலவே இருந்த நகைகள் எல்லாம் பார்த்தவளுக்கு தலையே சுற்றியது.. அதிலிருந்து ஒரு நீலநிறத்தில் சேலை ஒன்றை எடுத்தவள், “எனக்காக ஜவுளிக்கடையை வாங்கி அலைமாரியில் வெச்சிருக்கு பாரு இந்த லூசு..” என்றவனை செல்லமாக கடிந்துக் கொண்டாள்.. அவனின் இந்த செயல் கூட அவளின் உதட்டில் புன்னகையை வரவழைத்தது..

“இன்னும் நாலு அஞ்சு வருஷத்துக்கு துணியே எடுக்கக்கூடாது..” என்று சொல்லிவிட்டு திரும்பிய வளர்மதியைப் பார்த்த மகிழன் குறும்புடன் ஒரு புருவம் உயர்த்தி என்ன என்பது போல அவளைப் பார்க்கவும் நாக்கைக் கடித்துக்கொண்டு, “மாமா நீங்க எப்போ எழுந்தீங்க..?” என்று கேட்டதும், “நான் உனக்கு முன்னாடியே எழுந்துட்டேன்..” என்று சிரித்துக்கொண்டே கூறிய மகிழன், “துளிரு இங்கே வாடா..” என்றவன் அழைக்க, “நான் வரமாட்டேன் போ..” என்று சொல்லிவிட்டு அந்த அறையைவிட்டு வேகமாக வெளியே சென்றாள்..

அவள் செல்வதைப் பார்த்தபடி தங்களின் அறையில் இருந்து எழுந்து வந்த சக்தி, “வளரு எழுந்திருச்சுட்டா போல..” என்று சொல்லிக் கொண்டே சமையலறைக்குள் நுழைய அங்கே எப்பொழுதும் போலவே காலை உணவுகளை செய்து கொண்டிருந்தார் லட்சுமி.. அவரைப் பார்த்தும், “அக்கா வளர்மதி எழுந்துட்டா..” என்ற சக்தியின் குரல்கேட்டு திரும்பிய லட்சுமி, “வா லட்சுமி.. ரஞ்சிதா நல்ல தூங்கினாளா..?” என்று கேட்டதும், “அவளுக்கு என்ன அக்கா அவள் நல்ல நிம்மதியாக தூங்குகிறாள்.. வளர்மதி குளிக்க போகிறாள் பார்த்தீங்களா..?” என்று புன்னகையுடன் கேட்டாள்..

“ம்ம் நானும் பார்த்தேன் சக்தி.. அவள் குளிச்சிட்டு வரட்டும்.. அதுக்குள்ள சமையல் வேலையும் முடிஞ்சிரும்..” என்று கூறியவர் அவள் குளித்துவிட்டு வெளியே வருவதற்குள் சமையல் வேலைகளை முடிக்க சக்தியும், பொன்னுத்தாயும் மற்ற வேலைகளைக் கவனித்தனர்..

அவள் குளித்துவிட்டு வருவதற்குள் மின்னல் வேகத்தில் முடித்த லட்சுமி சாம்ராணி புகை போட்டு எடுத்துக்கொண்டு பின் வாசலுக்கு வந்தாள்.. ஜில்லென்று இருந்த நீரில் தலைக்கு குளித்துவிட்டு வெளியே வந்த வளர்மதி சாம்ராணி புகை போட்டு எடுத்து வந்து தயாராக நிற்கும் அத்தையைக் கண்டு, “அத்தை என்ன இது..?” என்று கேட்டு வாய்விட்டுச் சிரித்தாள்.. அவள் சிரிக்கும் அழகைப் பார்த்த லட்சுமி, “பார்த்த தெரியல உனக்குத்தான் சாம்ராணி புகை போட்டு எடுத்துட்டு வந்தேன்.. வா வா தலையை நல்ல துவட்டி முடியை காயவைக்கலாம்..” என்று அழைத்தார்..

அவரின் முகத்தில் பானுமாவின் முகம் வந்து போக, “அத்தை எனக்கு எதுக்கு இதெல்லாம்..?” என்று கேட்டவள் அங்கிருந்த படிகட்டில் அமர அவளின் தலையை விரித்து துவட்டிவிட்ட லட்சுமியோ, “என்னோட அத்தையுடன் இருக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கல அம்மு.. அதனால் எனக்கு எங்க அத்தையோட குணம் அவங்களுக்கு பிடிச்சது, பிடிக்காதது என்று எல்லாமே சக்தியிடம் இருந்து கேட்டு தெரிஞ்சுக்குவேன்..” என்று ஏக்கத்துடன் ஒலித்தது அவரின் குரல்..

அவரின் ஏக்கத்தைப் பார்த்த வளர்மதி, “என்ன அத்தை இதுக்கு எல்லாம் வருத்தமா..? பானுமாவுக்கு யாரையும் காயப்படுத்த தெரியாது அத்தை.. அவங்க ரொம்ப நல்லவங்க..” என்று கூறியவளின் கன்னத்தில் பாசத்துடன் வருடிய லட்சுமி, “என்னோட அத்தையிடம் எனக்கு கிடைக்காத எல்லாம் உன்னோட அத்தையாக இருந்து நான் செய்யணும்டா அம்மு..” என்று கூறியவரின் மனதில் இருக்கும் ஏக்கத்தை அறிந்தவள் அதற்கு ஏற்றார் போல நடந்துக் கொண்டாள்..

இருவரும் பேசுவதைக் கேட்டபடியே பின் வாசலுக்கு வந்த பானுமா, “இப்போ மட்டும் என்ன லட்சுமி.. உன்னோட அத்தை நான் இப்போ உன்னோட பக்கத்தில் தானே இருக்கேன்.. இனிமேல் உனக்கு என்ன வேணுமோ அதை நான் செய்யறேன்..” என்று சொன்ன பானுமாவின் குரல்கேட்டுத் திரும்பிய லட்சுமி, “நான் என்ன சின்ன பொண்ணா அத்தை.. எனக்கு மகள் இல்ல.. அதன் என்னோட மருமகளை நல்ல பார்த்துகொள்கிறேன்..” என்றவர் சொல்ல அங்கிருந்த திண்ணையில் வந்து அமர்ந்தார் பானுமா..

அவரின் பின்னோடு பின் வாசலுக்கு வந்த பொன்னுத்தாய், “ஏய் வளரு.. காலையில் சீக்கிரம் எழுந்திருச்சு வரணும் என்று தெரியாதா..?” என்றவர் மிரட்ட அவரின் பின்னோடு கொட்டாவி விட்டபடியே வந்த ரஞ்சிதா, “என்னம்மா இதுக்கு எல்லாம் அக்காவைத் திட்றீங்க.. நான் இப்போதான் எழுந்து வரேன்.. மணி இப்போதானே ஒன்பது ஆகுது.. அதுக்குள்ள எதுக்கு அக்காவைத் திட்றீங்க.. அக்கா சீக்கிரம் வந்தால் தான் கவலைப்படனும்..” என்று முதலில் வளர்மதிக்கு சப்போர்ட் பண்ணுவது போல ஆரம்பித்து பிறகு அவளை மாட்டிவிட்டுவிட்டு, “என்னக்கா நான் சொன்னது உண்மைதானே..?” என்று கேட்ட ரஞ்சிதாவை முறைத்தாள் வளர்மதி..

அவள் முறைப்பதைப் பார்த்தும் அசடு வழிய சிரித்தவள், “அம்மா நான் குளிச்சுட்டு வரேன்..” என்று பாத்ரூம் நோக்கிச் சென்ற ரஞ்சிதாவைப் பார்த்து பெரியவர்கள் மூவருமே சிரித்தனர்.. அந்தநேரம் பின் வாசலுக்கு வந்த மகிழனைப் பார்த்த பானுமா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, ‘நல்ல வேலை பாட்டி எதுவும் கேட்கல..’ என்று நினைத்தபடியே நேராக சென்ற மகிழனைப் பார்த்து அவள் தனியாக சிரிப்பதைக் கவனித்த பொன்னுத்தாய், “ஏய் வளரு.. கேள்வி கேட்ட சிரிக்கிற..” என்று அதட்டினார்.. அதற்கு பதில் சொல்லாமல், “அத்தை கூந்தல் நல்ல காய்ந்துவிட்டது..” என்று சொல்லிவிட்டு வீட்டின் உள்ளே சென்றுவிட எதிரே வந்த சக்தி கூட அவளின் மனதில் பதியவில்லை..

தன்னுடைய கேள்விக்கு பதிலே சொல்லாமல் சென்ற மகளை வினோதமாகப் பார்த்த பொன்னுத்தாய், “என்ன லட்சுமி.. இங்க வந்ததில் இருந்து இப்படிதான் இருக்காளா.. மனுஷனை வம்பிற்கு இழுப்பதே வேலையாக வெச்சிருப்பா.. இப்போ ரொம்ப அமைதியாக வீட்டுக்குள் போறா.. ஆமா வீட்டுக்குள் போறது வளருதானே..?” என்று சந்தேகமாகக் கேட்டதும் பானுமாவிற்கு சிரிப்பை அடக்கவே முடியாமல், “உன்னோட மகள் வாலு வளருதான் பொன்னுத்தாயி.. அப்போ அவ நம்ம பொண்ணு... இப்போ இந்த வீட்டு வாழ வந்த பொண்ணு இல்ல அதன் அமைதியாக வீட்டுக்குள் போறா..” என்று வளர்மதிக்கு சப்போர்ட் பண்ணினார் பானுமா..

அவரின் முகத்தில் இருந்த சந்தோஷத்தை பார்த்த பொன்னுத்தாய், “அம்மா நான் ஊருக்கு போறேன்ம்மா..” என்று சொல்ல அதுவரை அமைதியாக இருந்த லட்சுமி, “என்ன ராசாத்தி இப்படி சொல்ற.. நீ இங்கேயே இருக்க வேண்டியதுதானே..” என்று கேட்டதும் தோழியின் முகத்தைப் பார்த்த பொன்னுத்தாய், “அது எல்லாம் சரிவாராது ஜெயா.. நமக்குள் எந்த பிரச்சனையும் வராதுன்னு வை ஆனால் ஊர்காரங்கள் வேற மாதிரி நினைப்பாங்க.. நம்ம நட்பு இதனால் கெடக்கூடாது..” என்று தெளிவாக கூறியதும் லட்சுமி அமைதியாக இருந்தார்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஒரு வகையில் பொன்னுத்தாய் சொல்வதை அங்கிருக்கும் பானுமாவால் கூட மறுக்க முடியவில்லை.. லட்சுமியின் தோழமை பாசமும், பொன்னுத்தாயின் கௌரவம் இரண்டையும் பார்த்த பானுமா, “பொண்ணை கட்டிகொடுத்த வீட்டில் இருக்க உனக்கு விருப்பம் இல்ல.. அது எல்லோரின் கண்களுக்கும் தப்பாக படும் என்று நீ நினைச்சா நீ பழையபடி ஊருக்கு போ பொன்னுத்தாயி..” என்று சொல்ல அத்தையின் முகத்தைப் புரியாமல் பார்த்தார் லட்சுமி.. “அங்க நான் வர வரைக்கும் நீ எப்பவும் பார்க்கும் வேலையைப் பார்த்துட்டு வீட்டைப் பத்திரமாக பார்த்துக்கோ.. நான் கொஞ்சநாள் என்னோட மகன், மருமகள், பேரன் பேத்தியுடன் இருந்துட்டு வரேன்.. நீ வாரம் ஒரு முறை இங்கே வந்துட்டு போ..” என்று சொல்லவும் பொன்னுத்தாயின் முகம் மலர்ந்தது..

வீட்டின் உள்ளே சென்ற வளர்மதி அவளின் எதிரே வந்த சக்தியைக் கூட கவனிக்காமல் அவரைக் கடந்து செல்ல “என்ன இந்த வளரு இந்த ஓட்டம் ஓடுகிற..” எனு தனக்குதானே கேள்வி கேட்டபடியே பின்வாசலுக்கு வரும்பொழுது இன்னொரு பாத்ரூமில் குளித்துவிட்டு வெளியே வந்த மகிழனின் பார்வை வளர்மதியைத் தேட அங்கே வளர்மதியைத் தவிர மற்ற எல்லோரும் அங்கிருந்தனர்.. அவன் குளித்துவிட்டு தலைதுவட்டிக் கொண்டே வருவதைப் பார்த்த சக்தி, “மகிழா சாப்பிட வா..” என்று அழைத்தார்..

“ம்ம் வரேன்ம்மா..” என்று சொல்லிவிட்டு வேகமாக படியேறி தன்னுடைய அறைக்குள் சென்றான்.. அவனின் வேகத்தைப் பார்த்த சக்தி பின் வாசலில் படிக்கட்டில் அமர்ந்திருந்த லட்சுமியிடம், “என்ன அக்கா மகிழன் இந்த வேகத்தில் போறான்.. ஒரு வேலை ஊருக்கு கிளம்ப போறானோ..” என்று யோசிக்கும் பொழுதே, “அப்படியாத்தான் இருக்கும் சக்தி.. நேற்றே அவன் ஊருக்கு போக வேண்டியது.. என்னோ மனம் ஒப்பாமல் மறுபடியும் வீட்டுக்கே வந்துட்டான்..” என்று கூறிய லட்சுமி எழுந்து வீட்டின் உள்ளே செல்ல அங்கிருக்கும் அமைதியை மனதார விரும்பியபடி அமர்ந்திருந்தார் பானுமா..

பானுமாவின் முகம் பாத்தா ஜெயா அவரின் அருகில் சென்று, “அத்தை நான் வேணுன்னு பொய் சொல்லல.. நீங்க என்னைத் தப்பாக நினைக்காதீங்க..” என்றவள் சொல்லி முடிக்க, “உன்மேல எனக்கு எந்த வருத்தமும் இல்ல ஜெயா.. போம்மா போய் லட்சுமிக்கு ஒத்தாசை பண்ணும்மா..” என்றவர் சொல்லி முடிக்க சரியே தலையசைத்தவள் வீட்டின் உள்ளே சென்று மறந்தாள்.. சிவசங்கரன் தோட்டத்தைப் பார்க்க காலையில் சீக்கிரமே சென்றுவிட அவருடன் சுகுமாறன் சென்றுவிட மிதிலன் மணி பத்தாகியும் தூங்கிக் கொண்டிருந்தான்.. சிவராமன், மாரிமுத்து இருவரும் வேறு விசயமாக வெளியே சென்று இருந்தனர்..

எப்பொழுதும் போல குளித்துவிட்டு தன்னுடைய அறைக்குள் வந்த மகிழன் அங்கே டிராசிங் டேபிள் முன்னாடி நின்ற வளரின் பளிங்கு முகம் கண்ணாடியின் வழியாக மகிழனுக்கு தெரிய அவளின் அழகை ரசித்தபடியே அவளை நெருங்கியவன் அவளின் இடையோடு கைகொடுத்து இறுக்கி அணைத்துக்கொண்டான்.. அவனின் முகத்தைக் கண்ணாடி வழியாகப் பார்த்த வளர்மதி, “மாமா ஊருக்கு போகல.. இன்னும் இரண்டு நாளில் மீட்டிங் மாமா..” என்று சிணுங்களுடன் கூறினாள்..

அவள் மீட்டிங் பற்றி சொல்லிக் கொண்டிருக்க அவளின் கூந்தலில் முகம் புதைத்த மகிழன், “துளிரு நீயும் என்னோட அமெரிக்கா வந்திரும்மா.. உன்னை விட்டுவிட்டு என்னால அங்க நிம்மதியாக இருக்க முடியாதுடி..” என்றவன் சொல்லிமுடிக்கவும் கண்ணாடி வழியாக கணவனை முறைத்த வளர்மதி, “இந்த வேலை எல்லாம் ஆகாது மாமா.. நீங்க ஊருக்கு கிளம்பிபோங்க..” என்றவள் சொல்ல அவளை முறைப்பது இப்பொழுது மகிழனின் முறையானது..

அவனின் முறைப்பைப் பார்த்த வளர்மதி திரும்பி நின்று, “மாமா என்னால உங்கக்கூட வரமுடியாது மாமா..” என்று கூறியவளை அவன் புரியாத பார்வைப் பார்க்க, “நீங்களும் இல்லாமல் நானும் இல்லாமல் அத்தை, மாமா, பானுமா, அப்பாரு எல்லோரும் தனியாக இருப்பாங்க.. அதுமட்டும் இல்ல நான் இங்கே இருந்தால் தான் மாமா நீங்க அங்கிருந்து சீக்கிரமே வருவீங்க..” என்றவள் தலையைக்குனிந்து கொண்டே சொல்ல ஒரு விரலால் அவளின் முகத்தை நிமிர்த்தி விழிகளை பார்த்தான்..

அவளும் அவனை இமைக்காமல் பார்க்க, “சரி நிலா.. நீ சொல்றதும் ஒரு வகையில் சரிதான்.. நீ என்னுடனே இருந்தால் நானும் வேலையை ஒழுங்கா செய்ய மாட்டேன்.. ஆனால் உன்னிடம் ஒன்னு மட்டும் சொல்றேன்..” என்றவன் சொல்ல அவள் என்ன என்பது போல விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.. அவளின் பார்வையில் அவனின் முகத்தில் புன்னகை மலர, “மூன்று மாசத்தில் வருவதற்கு முயற்சி பண்றேன்..” என்றவன் அவளை இறுக்கியணைத்து அவளின் இதழில் முத்தமிட்டு நிமிர்ந்து பார்த்தான்..

அவளின் விழிகள் கண்ணீரில் கலங்கி இருந்தாலும், “மாமா இன்னைக்கு ஊருக்கு கிளம்பிபோங்க.. நீங்க இங்கே வரும் வரையில் அத்தை, மாமா எல்லோரையும் நான் பத்திரமாகப் பார்த்துகிறேன்..” என்று கூறிய வளர்மதி அவனைக் குறும்புடன் பார்த்துக் கொண்டே, “மாமா இது என்னது..” என்றுகேட்டு டேபிளில் அருகில் இருந்த பாஸ்போர்ட், விசாவை நோக்கி பார்வையைத் திருப்பினாள்.. அவளின் பார்வை சென்ற திசையைப் பார்த்த மகிழன், “நீ ஊருக்கு வருவேன்னு நினைச்சேன்.. அதன் உனக்கே தெரியாமல் எடுத்து வெச்சேன்..” என்றான்..

“சரி மாமா நீங்க ஊருக்கு கிளம்புங்க.. நான் போய் உங்களுக்கு சாப்பாடு எடுர்த்து வைக்கிறேன்..” என்று சொல்லிவிட்டு நகர்ந்த வளர்மதியைப் பார்த்த மகிழன் ஊருக்கு கிளம்பு ஆரம்பித்தான்.. அவன் தயாராகிக் கீழே வரும் பொழுது மித்லனும் எழுந்து குளித்துவிட்டு வந்தான்.. அவனைப் பார்த்தும் மகிழனோ, “டேய் நான் ஊருக்கு போறேன்.. நான் வேலையை முடித்துவிட்டு வருவதற்குள் நீயும் உன்னோட படிப்பை முடித்துவிட்டு இந்தியா வந்துவிடு..” என்றவன் சொல்ல மிதிலனும் சரியென தலையசைத்தான்..

அங்கே நடப்பதை எல்லாம் பார்த்துகொண்டிருந்த பானுமா, “மகிழா ஊருக்கு போயிட்டு சீக்கிரம் வந்திருப்பா..” என்று சொல்லி முடிக்கவும், “சரிங்க பாட்டி.. நான் வரும் வரையில் இவளை பத்திரமாக பார்த்துகோங்க..” என்று கூறியதும், “நீங்க போயிட்டு வாங்க மாமா.. அக்காவை நான் பத்திரமாக பார்த்துக்கிறேன்..” என்று புன்னகையுடன் பதில் கொடுத்தாள் ரஞ்சிதா..

அவன் சாப்பிட்டு எழுந்து செல்லவும் சங்கரன் வீடு வரவும் சரியாக இருக்க வீட்டின் உள்ளே நுழைந்த சுகுமாறன், “சக்தி நீ ஊருக்கு கிளம்பு.. அங்கே முக்கியமான கிளைன்ட் ஒருத்தங்க நாளைக்கு வராங்களாம்.. நான் சென்னை போய் ஆகணும்..” என்று சின்னமகன் சொல்ல, “என்ன ராஜா நீயும் ஊருக்கு போறேன்னு சொல்ற..” என்று ஆதங்கத்துடன் கேட்டார் பானுமா..

அவரின் அருகில் சென்ற சுகுமாறன், “அம்மா இன்னும் கொஞ்சநாள் பையன் படிப்பு முடிச்சுட்டு வந்தால் நானும் அங்கிருந்து இங்கே வந்துவிடுவேன்.. அவன் தொழிலைப் பார்க்கட்டும்.. இப்போ எல்லா பொறுப்பும் என்னிடம் இருக்கும்மா.. கொஞ்சம் புரிஞ்சிகோங்க..” என்று சொல்ல அவரும் சக்தியைப் பார்த்து, “நீயும் கிளம்புமா.. மிதிலனும், ரஞ்சிதாயும் இரண்டுநாள் இங்கே இருந்துட்டு வரட்டும்..” என்று சொல்ல அவரும் சரியென தலையசைத்துவிட்டு தன்னுடைய அறையை நோக்கிச் சென்றார்..

மகிழன் அவனின் அறையில் இருந்து, “வளரு..” என்றழைக்க, “இதோ வரேன் மாமா..” என்று குரல்கொடுத்துவிட்டு வேகமாக படியேறி அறையின் உள்ளே சென்றாள்.. அவள் அறைக்குள் நுழைந்த மறுநொடியே அவளை இழுத்து அணைத்த மகிழன், “நான் ஊருக்கு போகிறேன்.. நீ பத்திரமாக இருடா.. நான் சீக்கிரமே வருவேன்.. தினமும் மறக்காமல் போன் பண்றேன்..” என்று கூறிய மகிழன் அவளின் முகம் பார்த்து, “நீ இங்கே இருந்துப்பா இல்ல..” என்று கேட்டதும் அவளும் கண்ணீரோடு தலையசைத்தாள்..

அதிகநேரம் இல்லாத காரணத்தால், “சரிடா நான் கிளம்பறேன்..” என்று கூறியவன் அவளை விட்டு விலகிச்செல்ல அவனின் பின்னோடு மாடியைவிட்டு கீழிறங்கி வந்த வளர்மதி வாசலுக்கு வர அவனை வழியனுப்ப எல்லோரும் வாசலில் காத்திருந்தனர்.. பானுமாவின் அருகில் சென்று நின்ற வளர்மதி அவனைப் பார்த்து கையசைக்க அவனும் எல்லோரின் முகம் பார்த்து தலையசைத்தவன் வளர்மதியின் முகம் பார்த்தான்.. அதில் புன்னகையுடன் ஒரு நிறைவு இருப்பதைப் காரை எடுத்தான்..

இப்பொழுது அவளின் முகத்தில் இருக்கும் நிறைவு அவன் திரும்பி வரும் பொழுதும் அவளின் முகத்தில் இருக்குமா..? புழுதியை கிளப்பிக்கொண்டு மின்னலென சென்ற காரைப் பார்த்த வளர்மதியின் கண்ணிமையோரம் கண்ணீர் துளிகளின் சாயல்...

நேசம் துளிர்விடும்..
 




Last edited:

Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
ஒரு வகையில் பொன்னுத்தாய் சொல்வதை அங்கிருக்கும் பானுமாவால் கூட மறுக்க முடியவில்லை.. லட்சுமியின் தோழமை பாசமும், பொன்னுத்தாயின் கௌரவம் இரண்டையும் பார்த்த பானுமா, “பொண்ணை கட்டிகொடுத்த வீட்டில் இருக்க உனக்கு விருப்பம் இல்ல.. அது எல்லோரின் கண்களுக்கும் தப்பாக படும் என்று நீ நினைச்சா நீ பழையபடி ஊருக்கு போ பொன்னுத்தாயி..” என்று சொல்ல அத்தையின் முகத்தைப் புரியாமல் பார்த்தார் லட்சுமி.. “அங்க நான் வர வரைக்கும் நீ எப்பவும் பார்க்கும் வேலையைப் பார்த்துட்டு வீட்டைப் பத்திரமாக பார்த்துக்கோ.. நான் கொஞ்சநாள் என்னோட மகன், மருமகள், பேரன் பேத்தியுடன் இருந்துட்டு வரேன்.. நீ வாரம் ஒரு முறை இங்கே வந்துட்டு போ..” என்று சொல்லவும் பொன்னுத்தாயின் முகம் மலர்ந்தது..

வீட்டின் உள்ளே சென்ற வளர்மதி அவளின் எதிரே வந்த சக்தியைக் கூட கவனிக்காமல் அவரைக் கடந்து செல்ல “என்ன இந்த வளரு இந்த ஓட்டம் ஓடுகிற..” எனு தனக்குதானே கேள்வி கேட்டபடியே பின்வாசலுக்கு வரும்பொழுது இன்னொரு பாத்ரூமில் குளித்துவிட்டு வெளியே வந்த மகிழனின் பார்வை வளர்மதியைத் தேட அங்கே வளர்மதியைத் தவிர மற்ற எல்லோரும் அங்கிருந்தனர்.. அவன் குளித்துவிட்டு தலைதுவட்டிக் கொண்டே வருவதைப் பார்த்த சக்தி, “மகிழா சாப்பிட வா..” என்று அழைத்தார்..

“ம்ம் வரேன்ம்மா..” என்று சொல்லிவிட்டு வேகமாக படியேறி தன்னுடைய அறைக்குள் சென்றான்.. அவனின் வேகத்தைப் பார்த்த சக்தி பின் வாசலில் படிக்கட்டில் அமர்ந்திருந்த லட்சுமியிடம், “என்ன அக்கா மகிழன் இந்த வேகத்தில் போறான்.. ஒரு வேலை ஊருக்கு கிளம்ப போறானோ..” என்று யோசிக்கும் பொழுதே, “அப்படியாத்தான் இருக்கும் சக்தி.. நேற்றே அவன் ஊருக்கு போக வேண்டியது.. என்னோ மனம் ஒப்பாமல் மறுபடியும் வீட்டுக்கே வந்துட்டான்..” என்று கூறிய லட்சுமி எழுந்து வீட்டின் உள்ளே செல்ல அங்கிருக்கும் அமைதியை மனதார விரும்பியபடி அமர்ந்திருந்தார் பானுமா..

பானுமாவின் முகம் பாத்தா ஜெயா அவரின் அருகில் சென்று, “அத்தை நான் வேணுன்னு பொய் சொல்லல.. நீங்க என்னைத் தப்பாக நினைக்காதீங்க..” என்றவள் சொல்லி முடிக்க, “உன்மேல எனக்கு எந்த வருத்தமும் இல்ல ஜெயா.. போம்மா போய் லட்சுமிக்கு ஒத்தாசை பண்ணும்மா..” என்றவர் சொல்லி முடிக்க சரியே தலையசைத்தவள் வீட்டின் உள்ளே சென்று மறந்தாள்.. சிவசங்கரன் தோட்டத்தைப் பார்க்க காலையில் சீக்கிரமே சென்றுவிட அவருடன் சுகுமாறன் சென்றுவிட மிதிலன் மணி பத்தாகியும் தூங்கிக் கொண்டிருந்தான்.. சிவராமன், மாரிமுத்து இருவரும் வேறு விசயமாக வெளியே சென்று இருந்தனர்..

எப்பொழுதும் போல குளித்துவிட்டு தன்னுடைய அறைக்குள் வந்த மகிழன் அங்கே டிராசிங் டேபிள் முன்னாடி நின்ற வளரின் பளிங்கு முகம் கண்ணாடியின் வழியாக மகிழனுக்கு தெரிய அவளின் அழகை ரசித்தபடியே அவளை நெருங்கியவன் அவளின் இடையோடு கைகொடுத்து இறுக்கி அணைத்துக்கொண்டான்.. அவனின் முகத்தைக் கண்ணாடி வழியாகப் பார்த்த வளர்மதி, “மாமா ஊருக்கு போகல.. இன்னும் இரண்டு நாளில் மீட்டிங் மாமா..” என்று சிணுங்களுடன் கூறினாள்..

அவள் மீட்டிங் பற்றி சொல்லிக் கொண்டிருக்க அவளின் கூந்தலில் முகம் புதைத்த மகிழன், “துளிரு நீயும் என்னோட அமெரிக்கா வந்திரும்மா.. உன்னை விட்டுவிட்டு என்னால அங்க நிம்மதியாக இருக்க முடியாதுடி..” என்றவன் சொல்லிமுடிக்கவும் கண்ணாடி வழியாக கணவனை முறைத்த வளர்மதி, “இந்த வேலை எல்லாம் ஆகாது மாமா.. நீங்க ஊருக்கு கிளம்பிபோங்க..” என்றவள் சொல்ல அவளை முறைப்பது இப்பொழுது மகிழனின் முறையானது..

அவனின் முறைப்பைப் பார்த்த வளர்மதி திரும்பி நின்று, “மாமா என்னால உங்கக்கூட வரமுடியாது மாமா..” என்று கூறியவளை அவன் புரியாத பார்வைப் பார்க்க, “நீங்களும் இல்லாமல் நானும் இல்லாமல் அத்தை, மாமா, பானுமா, அப்பாரு எல்லோரும் தனியாக இருப்பாங்க.. அதுமட்டும் இல்ல நான் இங்கே இருந்தால் தான் மாமா நீங்க அங்கிருந்து சீக்கிரமே வருவீங்க..” என்றவள் தலையைக்குனிந்து கொண்டே சொல்ல ஒரு விரலால் அவளின் முகத்தை நிமிர்த்தி

விழிகளை பார்த்தான்..

அவளும் அவனை இமைக்காமல் பார்க்க, “சரி நிலா.. நீ சொல்றதும் ஒரு வகையில் சரிதான்.. நீ என்னுடனே இருந்தால் நானும் வேலையை ஒழுங்கா செய்ய மாட்டேன்.. ஆனால் உன்னிடம் ஒன்னு மட்டும் சொல்றேன்..” என்றவன் சொல்ல அவள் என்ன என்பது போல விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.. அவளின் பார்வையில் அவனின் முகத்தில் புன்னகை மலர, “மூன்று மாசத்தில் வருவதற்கு முயற்சி பண்றேன்..” என்றவன் அவளை இறுக்கியணைத்து அவளின் இதழில் முத்தமிட்டு நிமிர்ந்து பார்த்தான்..

அவளின் விழிகள் கண்ணீரில் கலங்கி இருந்தாலும், “மாமா இன்னைக்கு ஊருக்கு கிளம்பிபோங்க.. நீங்க இங்கே வரும் வரையில் அத்தை, மாமா எல்லோரையும் நான் பத்திரமாகப் பார்த்துகிறேன்..” என்று கூறிய வளர்மதி அவனைக் குறும்புடன் பார்த்துக் கொண்டே, “மாமா இது என்னது..” என்றுகேட்டு டேபிளில் அருகில் இருந்த பாஸ்போர்ட், விசாவை நோக்கி பார்வையைத் திருப்பினாள்.. அவளின் பார்வை சென்ற திசையைப் பார்த்த மகிழன், “நீ ஊருக்கு வருவேன்னு நினைச்சேன்.. அதன் உனக்கே தெரியாமல் எடுத்து வெச்சேன்..” என்றான்..

“சரி மாமா நீங்க ஊருக்கு கிளம்புங்க.. நான் போய் உங்களுக்கு சாப்பாடு எடுர்த்து வைக்கிறேன்..” என்று சொல்லிவிட்டு நகர்ந்த வளர்மதியைப் பார்த்த மகிழன் ஊருக்கு கிளம்பு ஆரம்பித்தான்.. அவன் தயாராகிக் கீழே வரும் பொழுது மித்லனும் எழுந்து குளித்துவிட்டு வந்தான்.. அவனைப் பார்த்தும் மகிழனோ, “டேய் நான் ஊருக்கு போறேன்.. நான் வேலையை முடித்துவிட்டு வருவதற்குள் நீயும் உன்னோட படிப்பை முடித்துவிட்டு இந்தியா வந்துவிடு..” என்றவன் சொல்ல மிதிலனும் சரியென தலையசைத்தான்..

அங்கே நடப்பதை எல்லாம் பார்த்துகொண்டிருந்த பானுமா, “மகிழா ஊருக்கு போயிட்டு சீக்கிரம் வந்திருப்பா..” என்று சொல்லி முடிக்கவும், “சரிங்க பாட்டி.. நான் வரும் வரையில் இவளை பத்திரமாக பார்த்துகோங்க..” என்று கூறியதும், “நீங்க போயிட்டு வாங்க மாமா.. அக்காவை நான் பத்திரமாக பார்த்துக்கிறேன்..” என்று புன்னகையுடன் பதில் கொடுத்தாள் ரஞ்சிதா..

அவன் சாப்பிட்டு எழுந்து செல்லவும் சங்கரன் வீடு வரவும் சரியாக இருக்க வீட்டின் உள்ளே நுழைந்த சுகுமாறன், “சக்தி நீ ஊருக்கு கிளம்பு.. அங்கே முக்கியமான கிளைன்ட் ஒருத்தங்க நாளைக்கு வராங்களாம்.. நான் சென்னை போய் ஆகணும்..” என்று சின்னமகன் சொல்ல, “என்ன ராஜா நீயும் ஊருக்கு போறேன்னு சொல்ற..” என்று ஆதங்கத்துடன் கேட்டார் பானுமா..

அவரின் அருகில் சென்ற சுகுமாறன், “அம்மா இன்னும் கொஞ்சநாள் பையன் படிப்பு முடிச்சுட்டு வந்தால் நானும் அங்கிருந்து இங்கே வந்துவிடுவேன்.. அவன் தொழிலைப் பார்க்கட்டும்.. இப்போ எல்லா பொறுப்பும் என்னிடம் இருக்கும்மா.. கொஞ்சம் புரிஞ்சிகோங்க..” என்று சொல்ல அவரும் சக்தியைப் பார்த்து, “நீயும் கிளம்புமா.. மிதிலனும், ரஞ்சிதாயும் இரண்டுநாள் இங்கே இருந்துட்டு வரட்டும்..” என்று சொல்ல அவரும் சரியென தலையசைத்துவிட்டு தன்னுடைய அறையை நோக்கிச் சென்றார்..

மகிழன் அவனின் அறையில் இருந்து, “வளரு..” என்றழைக்க, “இதோ வரேன் மாமா..” என்று குரல்கொடுத்துவிட்டு வேகமாக படியேறி அறையின் உள்ளே சென்றாள்.. அவள் அறைக்குள் நுழைந்த மறுநொடியே அவளை இழுத்து அணைத்த மகிழன், “நான் ஊருக்கு போகிறேன்.. நீ பத்திரமாக இருடா.. நான் சீக்கிரமே வருவேன்.. தினமும் மறக்காமல் போன் பண்றேன்..” என்று கூறிய மகிழன் அவளின் முகம் பார்த்து, “நீ இங்கே இருந்துப்பா இல்ல..” என்று கேட்டதும் அவளும் கண்ணீரோடு தலையசைத்தாள்..

அதிகநேரம் இல்லாத காரணத்தால், “சரிடா நான் கிளம்பறேன்..” என்று கூறியவன் அவளை விட்டு விலகிச்செல்ல அவனின் பின்னோடு மாடியைவிட்டு கீழிறங்கி வந்த வளர்மதி வாசலுக்கு வர அவனை வழியனுப்ப எல்லோரும் வாசலில் காத்திருந்தனர்.. பானுமாவின் அருகில் சென்று நின்ற வளர்மதி அவனைப் பார்த்து கையசைக்க அவனும் எல்லோரின் முகம் பார்த்து தலையசைத்தவன் வளர்மதியின் முகம் பார்த்தான்.. அதில் புன்னகையுடன் ஒரு நிறைவு இருப்பதைப் காரை எடுத்தான்..

இப்பொழுது அவளின் முகத்தில் இருக்கும் நிறைவு அவன் திரும்பி வரும் பொழுதும் அவளின் முகத்தில் இருக்குமா..? புழுதியை கிளப்பிக்கொண்டு மின்னலென சென்ற காரைப் பார்த்த வளர்மதியின் கண்ணிமையோரம் கண்ணீர் துளிகளின் சாயல்...

நேசம் துளிர்விடும்..

Nice update
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top