அத்தியாயம் – 39
அந்தபக்கம் மகிழன் சென்றதும் அதே வழியைப் பார்த்து நின்ற வளர்மதியின் தோளில் கைவைத்த பானுமாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் வளர்மதி.. அவளின் கண்கள் கண்ணீரில் நனைய அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்ட பானுமா, “உனக்காகவே அவன் சீக்கிரமாக இங்கே வந்துவிடுவான்..” என்று சொல்ல அவளின் முகத்தில் புன்னகை வந்து சென்றது.. அவளை சுற்றி நின்றிருந்த சிவசங்கரன், சுகுமாறன், மிதிலன் மற்றும் லட்சுமி, சக்தி, பொன்னுத்தாய், ரஞ்சிதா எல்லோருக்குமே அவளைப் பார்த்து கவலையாகவே இருந்தது..
ஆனாலும் கூட அதை வெளியே காட்டிகொள்ளாத மிதிலன், “என்ன அண்ணி இதுக்கு எல்லாம் கண்ணு கலங்கிட்டு இருக்கீங்க.. அண்ணா சீக்கிரமே வந்துவிடுவான்.. அவன் வரல என்றால் என்னிடம் சொல்லுங்க நான் வானத்தில பறந்து போயி கூட அவனை அழைச்சுட்டு வந்துருவேன்..” என்றவன் சொல்லி முடிக்க, “நீ என்ன ஹனுமானா மிதிலா..” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு வளர்மதி கேட்டதும் அவன் முகம் போன போக்கைப் பார்த்து எல்லோருக்கும் சிரிப்பு வந்தது..
பேரனின் பிரிவில் நின்ற வளர்மதியின் முகத்தில் புன்னகை மலர பானுமாவின் மனம் கொஞ்சம் நிம்மதியடைய, “மிதிலா அப்போ நீ.. நீ.. குரங்கா.. போயும் போயும் ஒரு குரங்கை காதலிச்சு இருக்கேனே என்னை என்னதான் பண்றதோ தெரியல..” என்று தலையில் அடித்த ரஞ்சிதாவைப் பார்த்து மிதிலன் முறைக்க வளர்மதி வாய்விட்டுச் சிரித்தாள்.. வளர்மதியின் சிரித்த முகம் பார்த்து கண்கலங்கி நின்ற பொன்னுத்தாயைப் பார்த்த லட்சுமி, “என்ன ராசாத்தி நீயும் சின்ன புள்ள போல கண்கலங்கிட்டு நிற்கிற..” என்று கேட்டதும் கண்களைத் துடைத்தார் பொன்னுதாய்..
“இல்ல லட்சுமி என்னோட மகள் அழுது நான் பார்த்ததே இல்ல.. பானுமா அவளை அலுக்கவே விட மாட்டாங்க.. இப்போன்னு இல்ல அவள் பிறந்த நாளில் இருந்தே அவள் அழுததே இல்ல.. ஆனால் இப்போ எல்லாம் அடிக்கடி அழுகற..” என்றவர் சொல்லி முடித்து வீட்டின் உள்ளே செல்ல நினைக்கும் பொழுது வாசலில் வந்து நின்ற லாரியைப் பார்த்த வளர்மதி வாசலில் நின்றுவிட் அவள் தன்னுடன் வராமல் வாசலில் நிற்பதைக் கண்டு வாசலுக்கு வந்தார் பானுமா..
மற்ற எல்லோரும் லாரியைப் பார்க்க அது நிறைய பாத்திரங்கள், கட்டில், பீர்வா மற்றும் வீட்டுக்கு தேவையான எல்லா பொருட்களும் இருப்பதைக் கவனித்த வளர்மதி பானுமாவின் முகத்தை புரியாமல் பார்க்க அவளின் பார்வையின் பொருள் புரிந்த பானுமா, “உன்னோட சீர்வரிசை தான் செல்லம்..” என்று கூறியதும், “இது எதுக்கு அத்தை..” என்று சங்கடமாக கேட்ட மருமகளின் முகம் பார்த்த பானுமா, “நீயும் நானும் மாமியார் மறுமகளாக இருந்தாலும் ஊரின் வழக்கம் என்று ஒன்று இருக்கு இல்ல லட்சுமி..” என்று வழக்கத்தை அவருக்கு அமைதியாக எடுத்துக்கூறினார் பானுமா..
அவர் சொன்னது புரியாமல் நின்ற சக்தி, “நம்ம வீட்டு புள்ளைக்கு எதுக்கு அத்தை சீர்வரிசை என்றுதான் அத்தை அக்கா கேட்டாங்க..” என்று சக்தி சொல்லவும், “இங்க பாரு ஜெயா.. நம்ம புள்ளைய இருந்தாலும் ஊரார் ஒரு சொல் சொல்ற அளவுக்கு வெச்சுக்கக்கூடாது.. என்னோட மகளை விளையாட்டு கூட யாரும் எதுவும் சொல்லக்கூடாது..” என்று கறாராக பதில் கொடுக்க சக்தி வாயை மூடிக்கொள்ள ரஞ்சிதா அங்கே நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள்..
‘தன்னுடைய மகளை மற்றவர்கள் தவறாகப் பேசக்கூடாது..’ என்று நினைப்பது ஒரு தாயின் இயல்பு.. ஆனால் தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் ஒரு பெண்ணின் குழந்தையை எடுத்து வளர்த்தி அவளை தன்னுடைய பேரனுக்கே கட்டிவைத்து அவளுக்கு சீர்வரிசை எல்லாம் கொடுக்கும் பானுமாவைப் பார்த்து வியந்து நின்றாள் ரஞ்சிதா.. அவள் வாழ்ந்த ஊரில் இது எல்லாம் அவள் பார்த்ததும் இல்லை இந்த மாதிரி கேள்விபட்டதும் இல்லை.. ஆனால் இந்த கிராமத்தில் எத்தனை எத்தனை நிகழ்வுகள் புதைந்து இருக்கிறது என்று பானுமாவினால் உணர்ந்தாள் ரஞ்சிதா
“அதில் என்னோட மகளுக்கு நான் கொடுக்கிற சீதனமும் இருக்கு லட்சுமி.. நீ வேண்டான்னு சொல்லாதடி.. என்னோட மகளுக்கு நான் செய்கிற சீர்வரிசை இது..” என்று சொல்ல லட்சுமி அமைதியாக கணவரின் முகம் பார்த்தார்.. அவரும் சரியென தலையசைக்க, “பெரிய வீட்டில் கீழே பெரிய ரூம் ஒன்று காலியாக இருக்கும் அதில் வெச்சிருப்பா..” என்று கூறிய லட்சுமி, “நீங்களும் கூட போய்ட்டு வாங்க..” என்று கணவரை அனுப்பி வைத்தவர் தன்னுடைய மருமகளின் கரம்பிடித்து வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றார்..
எல்லோரும் வீட்டின் உள்ளே நுழைய ஊருக்கு செல்ல தயாராக எல்லாம் எடுத்து வைத்து ரெடியாக இருந்தனர்.. பானுமா சோபாவில் அமர்ந்திருக்க அவரின் மடியில் படுத்திருந்த மகளின் தலையை வருடியபடியே அமர்ந்திருந்த பானுமாவின் அருகில் வந்த சக்தி, “அத்தை நான் ஊருக்கு போயிட்டு வரேன்..” என்று சொல்ல அவளின் குரல்கேட்டு கவனம் கலைந்து நிமிர்ந்த பானுமா, “ம்ம் சரிம்மா.. ஊருக்கு போனதும் போன் பண்ணு..” என்று சொல்ல அவர்களின் கார் வந்து வாசலில் நிறுத்திய டிரைவர் எல்லாவற்றையும் எடுத்து வைத்தார்..
சக்தி கிளம்புவதைப் பார்த்த ரஞ்சிதா, “அத்தை நானும் உங்களோட வரட்டுமா..?” என்று பாவமாகக் கேட்டதும் அவளின் அருகில் வந்த மிதிலன், “இல்ல ரஞ்சிதா பாட்டியுடன் கொஞ்சநாள் இருந்துட்டு போலாம்..” என்று சொல்ல அவளின் முகம் மாறியது.. அதை கவனித்த லட்சுமி, “ஏன் ரஞ்சிதா இங்கே இருக்க பிடிக்கலையா..?” என்று கேட்டதும் இல்லையென தலையசைத்து மறுத்த ரஞ்சிதா, “அதெல்லாம் இல்லங்க அத்தை.. மாமா படிப்பு முடிக்க சொல்லிட்டு போயிருக்கார்.. நான் சென்னை போயிட்டு அப்படியே ஊருக்கு கிளம்பிப் போறேன்..” என்று தயக்கத்துடன் கூறினாள்..
அவளின் தயக்கம் உணர்ந்து, “லட்சுமி அவங்க எல்லோரும் கல்யாணத்திற்கு வந்தாங்க.. இப்போ அவங்க அவங்க வேலையைப் பார்க்க போறாங்க.. அவனும் ஒரு முடிவுடன் ஊருக்கு போயிருக்கான்.. அவன் வருவதற்குள் அவங்க படிப்பை முடித்துவிட்டு வந்தால் தான் மிதிலனின் திருமணம் நல்லபடியாக நடக்கும்..” என்றவர் சொல்லி முடிக்க அவரின் கன்னத்தில் முத்தமிட்ட ரஞ்சிதா, “தேங்க்ஸ் பானுமா..” என்று சொல்லிட்டு ஓடிச்சென்று தன்னுடைய பொருட்களை எல்லாம் எடுத்து வந்தாள்..
அவளின் வேகத்தைப் பார்த்த வளர்மதி பானுமாவின் மடியில் இருந்து எழுந்து, “வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவளுக்கு இந்த கிராமம் பிடிக்குமா அம்மா.. அவளோட ஓட்டமே சொல்லுதே.. என்னை விட்டால் போதும் என்று ஓடுகிறாள் பாருங்க..” என்றவள் சொல்லிவிட்டுச் சிரிக்க அறையின் உள்ளிருந்து வெளியே வந்த ரஞ்சிதா, “அக்கா நீங்க அப்படி மட்டும் நினைக்காதீங்க.. எனக்கு கிராமம் ரொம்ப பிடிக்கும்.. படிப்பு முடிச்சுட்டு இங்கேதான் வருவேன்.. அப்போ உங்களைக் கவனிச்சுக்கிறேன்..” என்றவள் செல்லமாக மிரட்ட மற்ற எல்லோரின் முகத்திலும் புன்னகை அரும்பியது..
தம்பியின் முகம் பார்த்த சங்கரன், “ஊருக்கு போயிட்டு போன் பண்ணுடா..” என்று சொல்ல சரியென தலையசைத்த சுகுமாறன், “அம்மா நான் கிளம்பறேன்..” என்று சொல்ல பானுமா சரியென தலையசைக்க அவரின் மௌனம் பார்த்த சுகுமாறன், “அம்மா இன்னும் கொஞ்சநாள் அப்புறம் நாங்களும் இங்கே வந்துவிடுவோம்..” என்று சொல்ல, “டேய் சுகுமாறா நீ கிளம்பு.. அவளை நான் சமாதானம் பண்ணிக்கிறேன்..” என்றவர் சொல்லி முடிக்க மிதிலனும் தன்னுடைய பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்..
அவர்கள் எல்லோரும் கிளம்புவது அங்கிருந்த எல்லோருக்கும் கஷ்டமாக இருந்தாலும் எல்லோரையும் வாசல் வரையில் வந்து வழியனுப்ப அவர்களின் கார் கிளம்பும் வரையில் அமைதியாக இருந்த மாரிமுத்து, “அம்மா நாங்களும் ஊருக்கு கிளம்பறோம்..” என்று மெல்லிய குரலில் சொன்னதும், “பெண் வாழ்ற வீட்டில் அதிகநாள் தங்கக்கூடதுன்னு கிளம்பற இல்ல மாரிமுத்து..” என்று கேட்டார் பானுமா..
“அது எல்லாம் இல்ல அம்மா.. நீங்க அவளோட இருக்கிறீங்க.. அப்புறம் நாங்க எதுக்கு கவலைப்படனும்..” என்றவர் சொல்ல வளர்மதியோ, “அம்மா என்னம்மா நீங்களும் கிளம்பறீங்க..” என்று அம்மாவின் தோளில் சாய்ந்து அழுத மகளின் கூந்தலை வருடிய பொன்னுத்தாய், “நாங்க போகணும் வளரு.. நீ உன்னோட விளையாட்டு எல்லாத்தையும் விட்டுவிட்டு அத்தைக்கு எல்லா வேலையும் செஞ்சுகொடுக்கனும்..” என்று கூறினார்..
தாயின் கண்டிப்பை மனதில் பதிய வைத்தவள் நிமிர்ந்து மாரிமுத்துவின் முகம் பார்க்க, “வாடாம்மா..” என்று அழைத்து மகளைத் தோளில் சாயவைத்த மாரிமுத்து, “என்னோட மகள் அழுமூஞ்சி இல்ல.. அவள் எப்பவும் சிரிச்சுட்டே இருப்பா..” என்று சொல்ல அந்த அழுகையிலும் அவளின் முகம் புன்னகையில் மலர, “பானுமா வீட்டிற்கு மருமகளாக வந்திருக்கடா.. எக்காரணத்தைக் கொண்டும் அவங்களுக்கு தலைகுனிவு வர மாதிரி நீ நடந்துக்க கூடாது...” என்றவர் சொல்ல அவள் அமைதியாக இருந்தாள்..
இருவரும் மாறிமாறி அறிவுரை சொல்வதை விலகி நின்று பார்த்த சிவராமன் மற்றும் பானுமா இருவரும், “நீங்க இருவரும் கிளம்புங்க.. அவளை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்..” என்று அதட்டியபிறகு லட்சுமி சங்கரனிடம் சொல்லிவிட்டு அவர்களும் ஊருக்கு கிளம்பிச் செல்ல வீடே விருச்சொடி கிடந்தது.. வீட்டின் உள்ளே நுழைந்ததும் அங்கிருக்கும் அமைதியை பார்த்த வளர்மதிக்கு இரண்டு நாளும் வீட்டில் இருந்தவர்களின் நினைவு வந்தது..
“இரண்டு நாளும் வீட்டில் எல்லோரும் இருக்க வீடே கலகலன்னு இருந்தது.. இப்போ வீடே அமைதியாக இருக்கு..” என்று சொல்லிபடியே எப்பொழுதும் போல தன்னுடைய வேலையைக் கவனிக்க ஆரம்பித்தனர் லட்சுமி.. அத்தையுடன் சென்று தன்னுடைய வேலையைக் கவனித்த வளர்மதியைப் பார்த்த லட்சுமி, “இங்க ஒரு வேலையும் இல்லாடா.. நீ போய் உட்காரு.. அத்தை எல்லா வேலையையும் பார்க்கிறேன்..” என்று கூறியவர் அவளை சமையறையில் இருந்து வெளியே அனுப்பி வைத்தார்..
நிமிடத்தில் நினைவில் வந்து
எனது நெஞ்சில் நிறைந்து
எனது உயிராக மாறி
உறவாடிச் சென்றவனே..
உனது நினைவுகளை
சுமந்த வண்ணம் தேய்கிறதடா
உனது காதல் நிலவு..
இதுதான் துளிர்விடும் நேசமோ..
அந்தபக்கம் மகிழன் சென்றதும் அதே வழியைப் பார்த்து நின்ற வளர்மதியின் தோளில் கைவைத்த பானுமாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் வளர்மதி.. அவளின் கண்கள் கண்ணீரில் நனைய அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்ட பானுமா, “உனக்காகவே அவன் சீக்கிரமாக இங்கே வந்துவிடுவான்..” என்று சொல்ல அவளின் முகத்தில் புன்னகை வந்து சென்றது.. அவளை சுற்றி நின்றிருந்த சிவசங்கரன், சுகுமாறன், மிதிலன் மற்றும் லட்சுமி, சக்தி, பொன்னுத்தாய், ரஞ்சிதா எல்லோருக்குமே அவளைப் பார்த்து கவலையாகவே இருந்தது..
ஆனாலும் கூட அதை வெளியே காட்டிகொள்ளாத மிதிலன், “என்ன அண்ணி இதுக்கு எல்லாம் கண்ணு கலங்கிட்டு இருக்கீங்க.. அண்ணா சீக்கிரமே வந்துவிடுவான்.. அவன் வரல என்றால் என்னிடம் சொல்லுங்க நான் வானத்தில பறந்து போயி கூட அவனை அழைச்சுட்டு வந்துருவேன்..” என்றவன் சொல்லி முடிக்க, “நீ என்ன ஹனுமானா மிதிலா..” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு வளர்மதி கேட்டதும் அவன் முகம் போன போக்கைப் பார்த்து எல்லோருக்கும் சிரிப்பு வந்தது..
பேரனின் பிரிவில் நின்ற வளர்மதியின் முகத்தில் புன்னகை மலர பானுமாவின் மனம் கொஞ்சம் நிம்மதியடைய, “மிதிலா அப்போ நீ.. நீ.. குரங்கா.. போயும் போயும் ஒரு குரங்கை காதலிச்சு இருக்கேனே என்னை என்னதான் பண்றதோ தெரியல..” என்று தலையில் அடித்த ரஞ்சிதாவைப் பார்த்து மிதிலன் முறைக்க வளர்மதி வாய்விட்டுச் சிரித்தாள்.. வளர்மதியின் சிரித்த முகம் பார்த்து கண்கலங்கி நின்ற பொன்னுத்தாயைப் பார்த்த லட்சுமி, “என்ன ராசாத்தி நீயும் சின்ன புள்ள போல கண்கலங்கிட்டு நிற்கிற..” என்று கேட்டதும் கண்களைத் துடைத்தார் பொன்னுதாய்..
“இல்ல லட்சுமி என்னோட மகள் அழுது நான் பார்த்ததே இல்ல.. பானுமா அவளை அலுக்கவே விட மாட்டாங்க.. இப்போன்னு இல்ல அவள் பிறந்த நாளில் இருந்தே அவள் அழுததே இல்ல.. ஆனால் இப்போ எல்லாம் அடிக்கடி அழுகற..” என்றவர் சொல்லி முடித்து வீட்டின் உள்ளே செல்ல நினைக்கும் பொழுது வாசலில் வந்து நின்ற லாரியைப் பார்த்த வளர்மதி வாசலில் நின்றுவிட் அவள் தன்னுடன் வராமல் வாசலில் நிற்பதைக் கண்டு வாசலுக்கு வந்தார் பானுமா..
மற்ற எல்லோரும் லாரியைப் பார்க்க அது நிறைய பாத்திரங்கள், கட்டில், பீர்வா மற்றும் வீட்டுக்கு தேவையான எல்லா பொருட்களும் இருப்பதைக் கவனித்த வளர்மதி பானுமாவின் முகத்தை புரியாமல் பார்க்க அவளின் பார்வையின் பொருள் புரிந்த பானுமா, “உன்னோட சீர்வரிசை தான் செல்லம்..” என்று கூறியதும், “இது எதுக்கு அத்தை..” என்று சங்கடமாக கேட்ட மருமகளின் முகம் பார்த்த பானுமா, “நீயும் நானும் மாமியார் மறுமகளாக இருந்தாலும் ஊரின் வழக்கம் என்று ஒன்று இருக்கு இல்ல லட்சுமி..” என்று வழக்கத்தை அவருக்கு அமைதியாக எடுத்துக்கூறினார் பானுமா..
அவர் சொன்னது புரியாமல் நின்ற சக்தி, “நம்ம வீட்டு புள்ளைக்கு எதுக்கு அத்தை சீர்வரிசை என்றுதான் அத்தை அக்கா கேட்டாங்க..” என்று சக்தி சொல்லவும், “இங்க பாரு ஜெயா.. நம்ம புள்ளைய இருந்தாலும் ஊரார் ஒரு சொல் சொல்ற அளவுக்கு வெச்சுக்கக்கூடாது.. என்னோட மகளை விளையாட்டு கூட யாரும் எதுவும் சொல்லக்கூடாது..” என்று கறாராக பதில் கொடுக்க சக்தி வாயை மூடிக்கொள்ள ரஞ்சிதா அங்கே நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள்..
‘தன்னுடைய மகளை மற்றவர்கள் தவறாகப் பேசக்கூடாது..’ என்று நினைப்பது ஒரு தாயின் இயல்பு.. ஆனால் தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் ஒரு பெண்ணின் குழந்தையை எடுத்து வளர்த்தி அவளை தன்னுடைய பேரனுக்கே கட்டிவைத்து அவளுக்கு சீர்வரிசை எல்லாம் கொடுக்கும் பானுமாவைப் பார்த்து வியந்து நின்றாள் ரஞ்சிதா.. அவள் வாழ்ந்த ஊரில் இது எல்லாம் அவள் பார்த்ததும் இல்லை இந்த மாதிரி கேள்விபட்டதும் இல்லை.. ஆனால் இந்த கிராமத்தில் எத்தனை எத்தனை நிகழ்வுகள் புதைந்து இருக்கிறது என்று பானுமாவினால் உணர்ந்தாள் ரஞ்சிதா
“அதில் என்னோட மகளுக்கு நான் கொடுக்கிற சீதனமும் இருக்கு லட்சுமி.. நீ வேண்டான்னு சொல்லாதடி.. என்னோட மகளுக்கு நான் செய்கிற சீர்வரிசை இது..” என்று சொல்ல லட்சுமி அமைதியாக கணவரின் முகம் பார்த்தார்.. அவரும் சரியென தலையசைக்க, “பெரிய வீட்டில் கீழே பெரிய ரூம் ஒன்று காலியாக இருக்கும் அதில் வெச்சிருப்பா..” என்று கூறிய லட்சுமி, “நீங்களும் கூட போய்ட்டு வாங்க..” என்று கணவரை அனுப்பி வைத்தவர் தன்னுடைய மருமகளின் கரம்பிடித்து வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றார்..
எல்லோரும் வீட்டின் உள்ளே நுழைய ஊருக்கு செல்ல தயாராக எல்லாம் எடுத்து வைத்து ரெடியாக இருந்தனர்.. பானுமா சோபாவில் அமர்ந்திருக்க அவரின் மடியில் படுத்திருந்த மகளின் தலையை வருடியபடியே அமர்ந்திருந்த பானுமாவின் அருகில் வந்த சக்தி, “அத்தை நான் ஊருக்கு போயிட்டு வரேன்..” என்று சொல்ல அவளின் குரல்கேட்டு கவனம் கலைந்து நிமிர்ந்த பானுமா, “ம்ம் சரிம்மா.. ஊருக்கு போனதும் போன் பண்ணு..” என்று சொல்ல அவர்களின் கார் வந்து வாசலில் நிறுத்திய டிரைவர் எல்லாவற்றையும் எடுத்து வைத்தார்..
சக்தி கிளம்புவதைப் பார்த்த ரஞ்சிதா, “அத்தை நானும் உங்களோட வரட்டுமா..?” என்று பாவமாகக் கேட்டதும் அவளின் அருகில் வந்த மிதிலன், “இல்ல ரஞ்சிதா பாட்டியுடன் கொஞ்சநாள் இருந்துட்டு போலாம்..” என்று சொல்ல அவளின் முகம் மாறியது.. அதை கவனித்த லட்சுமி, “ஏன் ரஞ்சிதா இங்கே இருக்க பிடிக்கலையா..?” என்று கேட்டதும் இல்லையென தலையசைத்து மறுத்த ரஞ்சிதா, “அதெல்லாம் இல்லங்க அத்தை.. மாமா படிப்பு முடிக்க சொல்லிட்டு போயிருக்கார்.. நான் சென்னை போயிட்டு அப்படியே ஊருக்கு கிளம்பிப் போறேன்..” என்று தயக்கத்துடன் கூறினாள்..
அவளின் தயக்கம் உணர்ந்து, “லட்சுமி அவங்க எல்லோரும் கல்யாணத்திற்கு வந்தாங்க.. இப்போ அவங்க அவங்க வேலையைப் பார்க்க போறாங்க.. அவனும் ஒரு முடிவுடன் ஊருக்கு போயிருக்கான்.. அவன் வருவதற்குள் அவங்க படிப்பை முடித்துவிட்டு வந்தால் தான் மிதிலனின் திருமணம் நல்லபடியாக நடக்கும்..” என்றவர் சொல்லி முடிக்க அவரின் கன்னத்தில் முத்தமிட்ட ரஞ்சிதா, “தேங்க்ஸ் பானுமா..” என்று சொல்லிட்டு ஓடிச்சென்று தன்னுடைய பொருட்களை எல்லாம் எடுத்து வந்தாள்..
அவளின் வேகத்தைப் பார்த்த வளர்மதி பானுமாவின் மடியில் இருந்து எழுந்து, “வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவளுக்கு இந்த கிராமம் பிடிக்குமா அம்மா.. அவளோட ஓட்டமே சொல்லுதே.. என்னை விட்டால் போதும் என்று ஓடுகிறாள் பாருங்க..” என்றவள் சொல்லிவிட்டுச் சிரிக்க அறையின் உள்ளிருந்து வெளியே வந்த ரஞ்சிதா, “அக்கா நீங்க அப்படி மட்டும் நினைக்காதீங்க.. எனக்கு கிராமம் ரொம்ப பிடிக்கும்.. படிப்பு முடிச்சுட்டு இங்கேதான் வருவேன்.. அப்போ உங்களைக் கவனிச்சுக்கிறேன்..” என்றவள் செல்லமாக மிரட்ட மற்ற எல்லோரின் முகத்திலும் புன்னகை அரும்பியது..
தம்பியின் முகம் பார்த்த சங்கரன், “ஊருக்கு போயிட்டு போன் பண்ணுடா..” என்று சொல்ல சரியென தலையசைத்த சுகுமாறன், “அம்மா நான் கிளம்பறேன்..” என்று சொல்ல பானுமா சரியென தலையசைக்க அவரின் மௌனம் பார்த்த சுகுமாறன், “அம்மா இன்னும் கொஞ்சநாள் அப்புறம் நாங்களும் இங்கே வந்துவிடுவோம்..” என்று சொல்ல, “டேய் சுகுமாறா நீ கிளம்பு.. அவளை நான் சமாதானம் பண்ணிக்கிறேன்..” என்றவர் சொல்லி முடிக்க மிதிலனும் தன்னுடைய பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்..
அவர்கள் எல்லோரும் கிளம்புவது அங்கிருந்த எல்லோருக்கும் கஷ்டமாக இருந்தாலும் எல்லோரையும் வாசல் வரையில் வந்து வழியனுப்ப அவர்களின் கார் கிளம்பும் வரையில் அமைதியாக இருந்த மாரிமுத்து, “அம்மா நாங்களும் ஊருக்கு கிளம்பறோம்..” என்று மெல்லிய குரலில் சொன்னதும், “பெண் வாழ்ற வீட்டில் அதிகநாள் தங்கக்கூடதுன்னு கிளம்பற இல்ல மாரிமுத்து..” என்று கேட்டார் பானுமா..
“அது எல்லாம் இல்ல அம்மா.. நீங்க அவளோட இருக்கிறீங்க.. அப்புறம் நாங்க எதுக்கு கவலைப்படனும்..” என்றவர் சொல்ல வளர்மதியோ, “அம்மா என்னம்மா நீங்களும் கிளம்பறீங்க..” என்று அம்மாவின் தோளில் சாய்ந்து அழுத மகளின் கூந்தலை வருடிய பொன்னுத்தாய், “நாங்க போகணும் வளரு.. நீ உன்னோட விளையாட்டு எல்லாத்தையும் விட்டுவிட்டு அத்தைக்கு எல்லா வேலையும் செஞ்சுகொடுக்கனும்..” என்று கூறினார்..
தாயின் கண்டிப்பை மனதில் பதிய வைத்தவள் நிமிர்ந்து மாரிமுத்துவின் முகம் பார்க்க, “வாடாம்மா..” என்று அழைத்து மகளைத் தோளில் சாயவைத்த மாரிமுத்து, “என்னோட மகள் அழுமூஞ்சி இல்ல.. அவள் எப்பவும் சிரிச்சுட்டே இருப்பா..” என்று சொல்ல அந்த அழுகையிலும் அவளின் முகம் புன்னகையில் மலர, “பானுமா வீட்டிற்கு மருமகளாக வந்திருக்கடா.. எக்காரணத்தைக் கொண்டும் அவங்களுக்கு தலைகுனிவு வர மாதிரி நீ நடந்துக்க கூடாது...” என்றவர் சொல்ல அவள் அமைதியாக இருந்தாள்..
இருவரும் மாறிமாறி அறிவுரை சொல்வதை விலகி நின்று பார்த்த சிவராமன் மற்றும் பானுமா இருவரும், “நீங்க இருவரும் கிளம்புங்க.. அவளை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்..” என்று அதட்டியபிறகு லட்சுமி சங்கரனிடம் சொல்லிவிட்டு அவர்களும் ஊருக்கு கிளம்பிச் செல்ல வீடே விருச்சொடி கிடந்தது.. வீட்டின் உள்ளே நுழைந்ததும் அங்கிருக்கும் அமைதியை பார்த்த வளர்மதிக்கு இரண்டு நாளும் வீட்டில் இருந்தவர்களின் நினைவு வந்தது..
“இரண்டு நாளும் வீட்டில் எல்லோரும் இருக்க வீடே கலகலன்னு இருந்தது.. இப்போ வீடே அமைதியாக இருக்கு..” என்று சொல்லிபடியே எப்பொழுதும் போல தன்னுடைய வேலையைக் கவனிக்க ஆரம்பித்தனர் லட்சுமி.. அத்தையுடன் சென்று தன்னுடைய வேலையைக் கவனித்த வளர்மதியைப் பார்த்த லட்சுமி, “இங்க ஒரு வேலையும் இல்லாடா.. நீ போய் உட்காரு.. அத்தை எல்லா வேலையையும் பார்க்கிறேன்..” என்று கூறியவர் அவளை சமையறையில் இருந்து வெளியே அனுப்பி வைத்தார்..