• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thulirvidum Nesamadi - 39

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 39

நிமிடத்தில் நினைவில் வந்து

எனது நெஞ்சில் நிறைந்து

எனது உயிராக மாறி

உறவாடிச் சென்றவனே..

உனது நினைவுகளை

சுமந்த வண்ணம் தேய்கிறதடா

உனது காதல் நிலவு..

இதுதான் துளிர்விடும் நேசமோ..

அந்தபக்கம் மகிழன் சென்றதும் அதே வழியைப் பார்த்து நின்ற வளர்மதியின் தோளில் கைவைத்த பானுமாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் வளர்மதி.. அவளின் கண்கள் கண்ணீரில் நனைய அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்ட பானுமா, “உனக்காகவே அவன் சீக்கிரமாக இங்கே வந்துவிடுவான்..” என்று சொல்ல அவளின் முகத்தில் புன்னகை வந்து சென்றது.. அவளை சுற்றி நின்றிருந்த சிவசங்கரன், சுகுமாறன், மிதிலன் மற்றும் லட்சுமி, சக்தி, பொன்னுத்தாய், ரஞ்சிதா எல்லோருக்குமே அவளைப் பார்த்து கவலையாகவே இருந்தது..

ஆனாலும் கூட அதை வெளியே காட்டிகொள்ளாத மிதிலன், “என்ன அண்ணி இதுக்கு எல்லாம் கண்ணு கலங்கிட்டு இருக்கீங்க.. அண்ணா சீக்கிரமே வந்துவிடுவான்.. அவன் வரல என்றால் என்னிடம் சொல்லுங்க நான் வானத்தில பறந்து போயி கூட அவனை அழைச்சுட்டு வந்துருவேன்..” என்றவன் சொல்லி முடிக்க, “நீ என்ன ஹனுமானா மிதிலா..” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு வளர்மதி கேட்டதும் அவன் முகம் போன போக்கைப் பார்த்து எல்லோருக்கும் சிரிப்பு வந்தது..

பேரனின் பிரிவில் நின்ற வளர்மதியின் முகத்தில் புன்னகை மலர பானுமாவின் மனம் கொஞ்சம் நிம்மதியடைய, “மிதிலா அப்போ நீ.. நீ.. குரங்கா.. போயும் போயும் ஒரு குரங்கை காதலிச்சு இருக்கேனே என்னை என்னதான் பண்றதோ தெரியல..” என்று தலையில் அடித்த ரஞ்சிதாவைப் பார்த்து மிதிலன் முறைக்க வளர்மதி வாய்விட்டுச் சிரித்தாள்.. வளர்மதியின் சிரித்த முகம் பார்த்து கண்கலங்கி நின்ற பொன்னுத்தாயைப் பார்த்த லட்சுமி, “என்ன ராசாத்தி நீயும் சின்ன புள்ள போல கண்கலங்கிட்டு நிற்கிற..” என்று கேட்டதும் கண்களைத் துடைத்தார் பொன்னுதாய்..

“இல்ல லட்சுமி என்னோட மகள் அழுது நான் பார்த்ததே இல்ல.. பானுமா அவளை அலுக்கவே விட மாட்டாங்க.. இப்போன்னு இல்ல அவள் பிறந்த நாளில் இருந்தே அவள் அழுததே இல்ல.. ஆனால் இப்போ எல்லாம் அடிக்கடி அழுகற..” என்றவர் சொல்லி முடித்து வீட்டின் உள்ளே செல்ல நினைக்கும் பொழுது வாசலில் வந்து நின்ற லாரியைப் பார்த்த வளர்மதி வாசலில் நின்றுவிட் அவள் தன்னுடன் வராமல் வாசலில் நிற்பதைக் கண்டு வாசலுக்கு வந்தார் பானுமா..

மற்ற எல்லோரும் லாரியைப் பார்க்க அது நிறைய பாத்திரங்கள், கட்டில், பீர்வா மற்றும் வீட்டுக்கு தேவையான எல்லா பொருட்களும் இருப்பதைக் கவனித்த வளர்மதி பானுமாவின் முகத்தை புரியாமல் பார்க்க அவளின் பார்வையின் பொருள் புரிந்த பானுமா, “உன்னோட சீர்வரிசை தான் செல்லம்..” என்று கூறியதும், “இது எதுக்கு அத்தை..” என்று சங்கடமாக கேட்ட மருமகளின் முகம் பார்த்த பானுமா, “நீயும் நானும் மாமியார் மறுமகளாக இருந்தாலும் ஊரின் வழக்கம் என்று ஒன்று இருக்கு இல்ல லட்சுமி..” என்று வழக்கத்தை அவருக்கு அமைதியாக எடுத்துக்கூறினார் பானுமா..

அவர் சொன்னது புரியாமல் நின்ற சக்தி, “நம்ம வீட்டு புள்ளைக்கு எதுக்கு அத்தை சீர்வரிசை என்றுதான் அத்தை அக்கா கேட்டாங்க..” என்று சக்தி சொல்லவும், “இங்க பாரு ஜெயா.. நம்ம புள்ளைய இருந்தாலும் ஊரார் ஒரு சொல் சொல்ற அளவுக்கு வெச்சுக்கக்கூடாது.. என்னோட மகளை விளையாட்டு கூட யாரும் எதுவும் சொல்லக்கூடாது..” என்று கறாராக பதில் கொடுக்க சக்தி வாயை மூடிக்கொள்ள ரஞ்சிதா அங்கே நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள்..

‘தன்னுடைய மகளை மற்றவர்கள் தவறாகப் பேசக்கூடாது..’ என்று நினைப்பது ஒரு தாயின் இயல்பு.. ஆனால் தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் ஒரு பெண்ணின் குழந்தையை எடுத்து வளர்த்தி அவளை தன்னுடைய பேரனுக்கே கட்டிவைத்து அவளுக்கு சீர்வரிசை எல்லாம் கொடுக்கும் பானுமாவைப் பார்த்து வியந்து நின்றாள் ரஞ்சிதா.. அவள் வாழ்ந்த ஊரில் இது எல்லாம் அவள் பார்த்ததும் இல்லை இந்த மாதிரி கேள்விபட்டதும் இல்லை.. ஆனால் இந்த கிராமத்தில் எத்தனை எத்தனை நிகழ்வுகள் புதைந்து இருக்கிறது என்று பானுமாவினால் உணர்ந்தாள் ரஞ்சிதா

“அதில் என்னோட மகளுக்கு நான் கொடுக்கிற சீதனமும் இருக்கு லட்சுமி.. நீ வேண்டான்னு சொல்லாதடி.. என்னோட மகளுக்கு நான் செய்கிற சீர்வரிசை இது..” என்று சொல்ல லட்சுமி அமைதியாக கணவரின் முகம் பார்த்தார்.. அவரும் சரியென தலையசைக்க, “பெரிய வீட்டில் கீழே பெரிய ரூம் ஒன்று காலியாக இருக்கும் அதில் வெச்சிருப்பா..” என்று கூறிய லட்சுமி, “நீங்களும் கூட போய்ட்டு வாங்க..” என்று கணவரை அனுப்பி வைத்தவர் தன்னுடைய மருமகளின் கரம்பிடித்து வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றார்..

எல்லோரும் வீட்டின் உள்ளே நுழைய ஊருக்கு செல்ல தயாராக எல்லாம் எடுத்து வைத்து ரெடியாக இருந்தனர்.. பானுமா சோபாவில் அமர்ந்திருக்க அவரின் மடியில் படுத்திருந்த மகளின் தலையை வருடியபடியே அமர்ந்திருந்த பானுமாவின் அருகில் வந்த சக்தி, “அத்தை நான் ஊருக்கு போயிட்டு வரேன்..” என்று சொல்ல அவளின் குரல்கேட்டு கவனம் கலைந்து நிமிர்ந்த பானுமா, “ம்ம் சரிம்மா.. ஊருக்கு போனதும் போன் பண்ணு..” என்று சொல்ல அவர்களின் கார் வந்து வாசலில் நிறுத்திய டிரைவர் எல்லாவற்றையும் எடுத்து வைத்தார்..

சக்தி கிளம்புவதைப் பார்த்த ரஞ்சிதா, “அத்தை நானும் உங்களோட வரட்டுமா..?” என்று பாவமாகக் கேட்டதும் அவளின் அருகில் வந்த மிதிலன், “இல்ல ரஞ்சிதா பாட்டியுடன் கொஞ்சநாள் இருந்துட்டு போலாம்..” என்று சொல்ல அவளின் முகம் மாறியது.. அதை கவனித்த லட்சுமி, “ஏன் ரஞ்சிதா இங்கே இருக்க பிடிக்கலையா..?” என்று கேட்டதும் இல்லையென தலையசைத்து மறுத்த ரஞ்சிதா, “அதெல்லாம் இல்லங்க அத்தை.. மாமா படிப்பு முடிக்க சொல்லிட்டு போயிருக்கார்.. நான் சென்னை போயிட்டு அப்படியே ஊருக்கு கிளம்பிப் போறேன்..” என்று தயக்கத்துடன் கூறினாள்..

அவளின் தயக்கம் உணர்ந்து, “லட்சுமி அவங்க எல்லோரும் கல்யாணத்திற்கு வந்தாங்க.. இப்போ அவங்க அவங்க வேலையைப் பார்க்க போறாங்க.. அவனும் ஒரு முடிவுடன் ஊருக்கு போயிருக்கான்.. அவன் வருவதற்குள் அவங்க படிப்பை முடித்துவிட்டு வந்தால் தான் மிதிலனின் திருமணம் நல்லபடியாக நடக்கும்..” என்றவர் சொல்லி முடிக்க அவரின் கன்னத்தில் முத்தமிட்ட ரஞ்சிதா, “தேங்க்ஸ் பானுமா..” என்று சொல்லிட்டு ஓடிச்சென்று தன்னுடைய பொருட்களை எல்லாம் எடுத்து வந்தாள்..

அவளின் வேகத்தைப் பார்த்த வளர்மதி பானுமாவின் மடியில் இருந்து எழுந்து, “வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவளுக்கு இந்த கிராமம் பிடிக்குமா அம்மா.. அவளோட ஓட்டமே சொல்லுதே.. என்னை விட்டால் போதும் என்று ஓடுகிறாள் பாருங்க..” என்றவள் சொல்லிவிட்டுச் சிரிக்க அறையின் உள்ளிருந்து வெளியே வந்த ரஞ்சிதா, “அக்கா நீங்க அப்படி மட்டும் நினைக்காதீங்க.. எனக்கு கிராமம் ரொம்ப பிடிக்கும்.. படிப்பு முடிச்சுட்டு இங்கேதான் வருவேன்.. அப்போ உங்களைக் கவனிச்சுக்கிறேன்..” என்றவள் செல்லமாக மிரட்ட மற்ற எல்லோரின் முகத்திலும் புன்னகை அரும்பியது..

தம்பியின் முகம் பார்த்த சங்கரன், “ஊருக்கு போயிட்டு போன் பண்ணுடா..” என்று சொல்ல சரியென தலையசைத்த சுகுமாறன், “அம்மா நான் கிளம்பறேன்..” என்று சொல்ல பானுமா சரியென தலையசைக்க அவரின் மௌனம் பார்த்த சுகுமாறன், “அம்மா இன்னும் கொஞ்சநாள் அப்புறம் நாங்களும் இங்கே வந்துவிடுவோம்..” என்று சொல்ல, “டேய் சுகுமாறா நீ கிளம்பு.. அவளை நான் சமாதானம் பண்ணிக்கிறேன்..” என்றவர் சொல்லி முடிக்க மிதிலனும் தன்னுடைய பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்..

அவர்கள் எல்லோரும் கிளம்புவது அங்கிருந்த எல்லோருக்கும் கஷ்டமாக இருந்தாலும் எல்லோரையும் வாசல் வரையில் வந்து வழியனுப்ப அவர்களின் கார் கிளம்பும் வரையில் அமைதியாக இருந்த மாரிமுத்து, “அம்மா நாங்களும் ஊருக்கு கிளம்பறோம்..” என்று மெல்லிய குரலில் சொன்னதும், “பெண் வாழ்ற வீட்டில் அதிகநாள் தங்கக்கூடதுன்னு கிளம்பற இல்ல மாரிமுத்து..” என்று கேட்டார் பானுமா..

“அது எல்லாம் இல்ல அம்மா.. நீங்க அவளோட இருக்கிறீங்க.. அப்புறம் நாங்க எதுக்கு கவலைப்படனும்..” என்றவர் சொல்ல வளர்மதியோ, “அம்மா என்னம்மா நீங்களும் கிளம்பறீங்க..” என்று அம்மாவின் தோளில் சாய்ந்து அழுத மகளின் கூந்தலை வருடிய பொன்னுத்தாய், “நாங்க போகணும் வளரு.. நீ உன்னோட விளையாட்டு எல்லாத்தையும் விட்டுவிட்டு அத்தைக்கு எல்லா வேலையும் செஞ்சுகொடுக்கனும்..” என்று கூறினார்..

தாயின் கண்டிப்பை மனதில் பதிய வைத்தவள் நிமிர்ந்து மாரிமுத்துவின் முகம் பார்க்க, “வாடாம்மா..” என்று அழைத்து மகளைத் தோளில் சாயவைத்த மாரிமுத்து, “என்னோட மகள் அழுமூஞ்சி இல்ல.. அவள் எப்பவும் சிரிச்சுட்டே இருப்பா..” என்று சொல்ல அந்த அழுகையிலும் அவளின் முகம் புன்னகையில் மலர, “பானுமா வீட்டிற்கு மருமகளாக வந்திருக்கடா.. எக்காரணத்தைக் கொண்டும் அவங்களுக்கு தலைகுனிவு வர மாதிரி நீ நடந்துக்க கூடாது...” என்றவர் சொல்ல அவள் அமைதியாக இருந்தாள்..

இருவரும் மாறிமாறி அறிவுரை சொல்வதை விலகி நின்று பார்த்த சிவராமன் மற்றும் பானுமா இருவரும், “நீங்க இருவரும் கிளம்புங்க.. அவளை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்..” என்று அதட்டியபிறகு லட்சுமி சங்கரனிடம் சொல்லிவிட்டு அவர்களும் ஊருக்கு கிளம்பிச் செல்ல வீடே விருச்சொடி கிடந்தது.. வீட்டின் உள்ளே நுழைந்ததும் அங்கிருக்கும் அமைதியை பார்த்த வளர்மதிக்கு இரண்டு நாளும் வீட்டில் இருந்தவர்களின் நினைவு வந்தது..

“இரண்டு நாளும் வீட்டில் எல்லோரும் இருக்க வீடே கலகலன்னு இருந்தது.. இப்போ வீடே அமைதியாக இருக்கு..” என்று சொல்லிபடியே எப்பொழுதும் போல தன்னுடைய வேலையைக் கவனிக்க ஆரம்பித்தனர் லட்சுமி.. அத்தையுடன் சென்று தன்னுடைய வேலையைக் கவனித்த வளர்மதியைப் பார்த்த லட்சுமி, “இங்க ஒரு வேலையும் இல்லாடா.. நீ போய் உட்காரு.. அத்தை எல்லா வேலையையும் பார்க்கிறேன்..” என்று கூறியவர் அவளை சமையறையில் இருந்து வெளியே அனுப்பி வைத்தார்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அங்கிருந்து வெளியே வந்த வளர்மதிக்கு பொழுது போகாமல் இருக்க பின் வாசலுக்கு சென்றவள் அங்கே காலியாக இருந்த இடத்தைப் பார்த்துவிட்டு வேகமாக வீட்டின் உள்ளே வந்தாள்.. அவள் மீண்டும் வெளியே செல்ல அவளின் பின்னோடு சென்ற பானுமா அவள் செய்யும் வேலையைப் பார்த்துகொண்டு பின் வாசலில் அமைந்தார்.. அங்கிருந்த மண்ணில் நல்ல தண்ணீர் தெளித்து ஊறியதும் மண்ணைத் தொண்டியவள் பன்னீர் ரோஜா செடி நட்டுவைத்து அதற்கு தண்ணீர் ஊறினாள்..

அவள் நிமிர்ந்து பானுமாவின் முகம் பார்க்க, “இந்த செடியை இப்போ எதுக்கு நட்டுவெச்ச வளரு..?” என்றவர் கேட்டதும், “பானுமா மாமா இன்னைக்கு ஊருக்கு போயிருக்காரு.. அவரு வரும் வரையில் நான் தனியாக இருக்க முடியாது இல்ல.. அதன் செடியை நட்டுவேச்சேன்.. என்னோட மனசில் தோன்றுவதை எல்லாம் நான் அதனிடம் பேசுவேன் இல்ல..” என்று கேட்டு புன்னகைத்தபடி செடிக்கு தண்ணீர் விட்டாள்.. அன்றைய நாள் மின்னல் வேகத்தில் சென்றுவிட அடுத்தடுத்த நாளும் அதே வேகத்தில் சென்றது..

இங்கிருந்து அமெரிக்கா சென்ற மிதிலனோ தன்னுடைய கம்பெனியில் சரியான நேரத்திற்கு மீட்டிங் அட்டன் செய்து அதை வெற்றிகரமாக முடித்து மற்றுமொரு ப்ராஜெக்ட் ஒன்றை கைபற்ற அவன் மீட்டிங் முடிந்து வெளியே வந்து வந்தவர்களை புன்னகையுடன் அனுப்பி வைத்தபிறகு ஓய்வாக சீட்டில் அமர்ந்தவனின் எதிரே வந்து அமர்ந்த ராகவி, “மகிழா.. நீயா இது..? என்னால நம்பவே முடியல.. வளர்மதி உன்னை மொத்தமாக மாற்றிவிட்டாள்..” என்று திகைப்பு மாறாமல் கூறினாள்..

அவளின் முகத்தைப் புன்னகையுடன் பார்த்த மகிழனின் எதிரே வந்து அமர்ந்த ஷீலாவின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிக்க மகிழனோ கூலாக அமர்ந்திருந்தான்.. அவனின் முகத்தையே பார்த்தவள், “மகிழா சொன்னது போலவே நீ நினைச்சதை நடத்தி காட்டிட்ட இல்ல.. என்னிடம் இல்லாத என்ன அவளிடம் இருக்குன்னு என்னோட காதலை நீ தூக்கி எரிஞ்ச..?” என்று கோபத்துடன் அவள் கேட்டதுமே வாய்விட்டுச் சிரித்தாள் ராகவி..

“உன்னிடம் எதுவுமே இல்ல.. அதன் உன்னோட மைனஸ் பாயின்ட்..” என்று கம்பீரமாக சொல்ல அதையெல்லாம் காதில் வாங்காத ஷீலா, “மகிழ் இவ ஊருக்கு போயிட்டு வந்ததில் இருந்தே வளர்மதி புகழ் பாடுறேன் அவள் என்ன என்னைவிட அழகா..?” என்று திமிராக கேட்டவளை முறைத்தான் மகிழன்.. அவளின் கேள்விக்கு அவனிடம் இருந்து பதில் இல்லை என்றதும் அவளை மட்டம் தட்டும் விதமாக, “எட்டாவது தானே படிச்சதாக ராகவி சொன்னாள்.. உன்னோட அறிவிற்கும் திறமைக்கும் அவள் எந்த விதத்தில் ஈடு என்று நீ நினைக்கிற..” என்றவள் அவனின் கோபத்தைத் தூண்டிவிட்டாள்..

அவனின் முன்னாடியே துளிர்நிலாவை அவள் மட்டம் தட்டி பேசவும் மகிழனின் கோபம் அதிகரிக்க, “ஜெஸ்ட் ஸ்டாப் இட்..” என்று கோபத்தில் கத்திய மகிழனைப் பார்த்து அதிர்ந்த விழித்த ஷீலாவைப் பார்த்த மகிழன், “நீ என்னிடம் காதலைச் சொன்னதும் அதை நான் ஏத்துக்கணும் என்ற எந்த ரூலும் இல்ல.. என்னோட மனசுக்கு யாரைப் பிடிச்சிருக்கோ யாரோட வாழ்ந்தால் என்னோட மனசு நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்குன்னு நினைக்கிறேனோ அவளைத்தான் நான் கல்யாணம் பண்ண முடியும்..” என்று கூறியவனின் வார்த்தைகள் அவளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது..

“காதல் என்று நீ நினைப்பது வெறும் பணம்.. நீ மனுஷங்களை பணத்தை வெச்சு எடை போட்ற.. ஒருத்தர் படிச்சு இருக்காங்களா..? பணம் இருக்கா..? அழகு இருக்கா..? திறமை இருக்கான்னு நீ ஆயிரம் கேள்வி உனக்குள் கேட்டு அதுக்கு கிடைத்த பதிலை மட்டும் காதல் என்று நினைச்சு என்னிடம் வந்து காதலைச் சொன்ன..” என்று அவளின் மனதைப் படித்து போலவே கூறினான் மகிழன்.. அவளறிந்த மகிழன் யார் எது சொன்னாலும் ஒரு புன்னகையுடன் தேவைக்கு மட்டுமே பேசிவிட்டு நகர்ந்துவிடும் மகிழனைத்தான் அவள் இதுநாள் வரை பார்த்திருந்தாள்..

அவனின் மனைவியை அவள் மட்டம் தட்டிய மறுநொடியே ருத்ரமூர்த்தியாக நிற்கும்இந்த மகிழன் அவளுக்கு முற்றிலும் புதியவனாகத் தெரிந்தான்.. அவள் அதிர்ச்சியில் நிற்பதைப் பார்த்த மகிழன், “நான் காதல் என்று நினைச்சது.. சின்ன சின்ன விஷயத்தில் எனக்கே தெரியாமல் என்னோட மனதிற்குள் நுழைந்து காதலின் ஒவ்வொரு விஷயத்தையும் வேறொரு கோணத்தில் எனக்கு புரியவைக்கும் ஒரு பெண்ணைத்தான் நான் தேடினேன்.. நான் தேடியதைவிட எல்லாவற்றிலும் பேஸ்ட் என்னோட நிலா.. அவளுக்கு இணை யாருமே இல்ல..” என்று கூறிய மகிழன் அவளை பார்த்த பார்வையில் அவளின் கர்வம் முற்றிலும் காணாமல் போனது..

“என்னோட ஒய்ப் எயித் தான் படிச்சிருக்கா.. பட் இப்போ இந்த நிர்வாகத்தைக் கொடுத்தாலும் அவளால் உன்னைவிட திறமையாக நடத்த முடியும்.. ஹி இஸ் தி டேலண்ட் ஃபர்சன்.. என்னோட ஒய்ப் தகுதியைப் பற்றி பேச உனக்கு எந்த தகுதியும் இல்ல.. யூ மைண்டிட்..” என்று சொன்னவன் அந்த அறையைவிட்டு வெளியே சென்றான்..

அங்கே நடப்பதைப் புன்னகையுடன் பார்த்த ராகவி, “ஷீலா உன்னோட குணத்திற்கும் அவனோட குணத்திற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.. சோ நீ உனக்கு மேட்ச் யாருன்னு பார்த்து சீக்கிரம் கல்யாணம் பண்ணு..” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்ற ராகவியை ஒன்னும் செய்ய முடியாமல் முறைத்தாள் ஷீலா.. அவனைப் பார்த்த நாளில் இருந்து அவள் கட்டிய கோட்டை எல்லாம் மண் கோட்டையாக மாறியது..

அவனைப் பார்த்த நாளில் இருந்தே ஷீலா அவனை அடைய நினைப்பது அங்கிருக்கும் எல்லோருக்கும் தெரியும்.. ஆனால் அவன் ஊருக்கு சென்று அத்தை மகளை கல்யாணம் பண்ணிவிட்டு வருவான் என்று அங்கிருந்த யாருமே நினைக்காத ஒன்று..! அவன் திருமணம் செய்த விசயத்தில் ராகவி சந்தோஷப்பட அவளுக்கு அப்படியே எதிராக மகிழனின் திருமணத்திற்கு எதிர்ப்பாக நின்றவள் ஷீலா மட்டுமே..! அது என்னவோ அவன் அவளை விட்டு விலகி நின்றது அவளுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.. அவன் கடைசியாக ஊருக்குச் செல்லும் நேரத்தில் அவனிடம் வந்து காதலைச் சொல்ல அவனோ, “எனக்கு அத்தை மகள் ஊரில் இருக்கா.. அவளை கல்யாணம் பண்ணிட்டுதான் நான் இங்கே வருவேன்..” என்றவன் சொல்ல ஷீலாவுக்கு கோபம் வந்தது..

“நீ எல்லாம் அப்பாடி செய்ய மாட்டாய் மகிழ்..” என்று திமிராக பதில் சொல்லியவளை நிமிர்ந்து பார்த்த மகிழன், “என்னோட முடிவை நீ எடுக்காதே.. என்னோட வாழ்க்கையில் நான் மட்டும் தான் முடிவு எடுப்பேன் ஷீலா.. நாடு விட்டு நாடு வந்திருக்கான்.. இவனிடம் நம்ம பாட்சா பலிக்கும் என்று மட்டும் கனவிலும் நினைக்காதே.. நான் என்னோட மனசுக்கு பிடிச்ச ஒரு பெண்ணை பார்த்து காதலித்து திருமணம் பண்ணிட்டுதான் அடுத்த ப்ராஜெக்ட் மீட்டிங் அட்டன் பண்ண அமெரிக்கா வருவேன்.. தட்ஸ் இட்..” என்று கூறியவன் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்..

அவளிடம் சொல்லிவிட்டு வந்த விஷயத்தை அவனே மறந்துவிட அவனையும் அறியாமல் துளிரைக் காதலித்து திருமணம் முடிந்த பிறகே மீண்டும் அமெரிக்கா சென்றான்.. அவன் அவனுடைய நிலவுடன் சேர இந்த ஷீலா தடையாக இருப்பாளா..? காத்திருப்போம்..

நேசம் துளிர்விடும்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top