இருவரையும் யோசனையாக பார்த்த சியோரா... சரி அவர்களுக்குள் ஏதோ நடக்குது என்று எண்ணி பேசாமல் இருந்தார்.. கௌதமும் அவளை யோசனையோடு பார்த்துவிட்டு முத்து கொண்டு வந்த காபியை குடித்து விட்டு அவனின் ரூம் நோக்கி சென்றான்..
அவன் செல்லவும் அவர்களை சாப்பிட அழைத்தார் சத்ரியா.. அவர் அழைக்கவும் எழுந்து எல்லாரும் சாப்பிட்டு முடிக்கவும் ஜிக்கி, மைக் இருவரும் கிளம்ப ஆயத்தம் ஆகவும் அவர்களை தடுத்த சியோரா “ இங்கயே இருந்து தங்கி படிக்க “ கூறினார் அவர் கூறவும் மறுத்த இருவரும் அடிக்கடி வருவதாக கூறி சென்றனர்...
அவர்கள் செல்லவும் மையூரியும், வர்ஷிக் கூடவே வீட்டுக்கு கிளம்பிவிட்டான்..
ஹாஸ்டல் போகும் வழி எல்லாம் மைக் யோசித்துக் கொண்டே வந்தாள், அவளின் யோசனை முகத்தை பார்த்த ஜிக்கி என்ன என்று கேட்டதற்கு “ எங்க சொத்தை எல்லாம் சீக்கிரம் இவங்களுக்கு எழுதி குடுக்கணும் ஊருக்கு போகணும் அது தான் எப்படின்னு யோசிக்கிறேன் “ என்றுக் கூறினாள்..
அவள் கூறவும் ஜிக்கி மனதில் ஒரு யோசனை வந்து போனது, அதன் படி சீக்கிரம் இவளை அங்கு கோட்டைநல்லூர் அனுப்ப முடிவெடுத்து விட்டாள்....
ஹாஸ்டல் சென்ற சிறிது நேரத்தில் ஜிக்கி வெளியில் சென்று வந்தாள்... அவள் வந்த சிறிது நேரத்தில் மைக்குக்கு அங்கு கோட்டைநல்லூரில் இருந்து போன் வந்தது....
அவளின் தாத்தா கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார் என்று கணேசன் அழைத்துக் கூறவும், அப்படியே போனை தவறவிட்ட மைத்ரேயி அலறி அடித்துக் கொண்டு கோட்டைநல்லூர் நோக்கி விமானத்தில் பயணித்தாள்...
ஆனால்கோட்டைநல்லூர் சென்ற மைக் ஒரு மாதம் ஆனா நிலையிலும் இங்கு மும்பை வரவே இல்லை... 3 மாதம் கழித்து மும்பை வந்தாள் மைத்ரேயி, வித்தியாசமாக.. முற்றிலும் வேறுபட்டவளாக . வந்து ஜிக்கியை அவளும் சியோராவும் தேடவும் தான் அவர்களுக்கு தெரிந்தது ஒரு ஆக்சிடென்ட்டில் ஜிக்கி இறந்து விட்டாள் என்று.......
உயிர் எடுப்பாள்...