• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un Uyir Thaa..! Naam Vazha..! ~ 21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய்... ஹாய்...
உன் உயிர் தா..!! நாம் வாழ....!!!
அடுத்த எபி கொண்டு வந்துட்டேன்...
ஆச்சரியமா இருக்கா... ஹி ஹி நானே தான்..உங்கள் கேள்விக்கு விடைகள் எல்லாம் இந்த எபியில் இருக்கு படிச்சு சொல்லுங்க... நீங்கள் எதிர் பார்க்காத திருப்பம்.. இப்படி வரும் என்று எதிர் பார்த்திருந்தால் சொல்லுங்க... அப்படியே அடுத்து என்ன வரும் என்று கெஸ் பண்ணுங்க...
உங்க கருத்தை படிக்க ஆவலுடன் நான்....


உயிர்– 21

அந்த மரத்தின் முன் அமர்ந்து இருந்த மைத்ரேயி “ என் மாமாவை எப்படியாவது என் கூடவே சேர்த்து வை, என் தாத்தாவையும் சீக்கிரம் கண் முழிக்க வை. நான் நீ ஆசை பட்ட படியே சொத்தை உன் வாரிசுக்கு எழுதி வைத்து விட்டேன்...

என் ஆசையை இபொழுது நீ நிறைவேற்று.. என் மாமாவை எனக்கு தா, நானும் என் மாமாவும் சேர்ந்து உன் ஆசையை நிறைவேற்றுகிறோம். அவர் இந்த மண்ணை, இந்த கோட்டையை ஆள்வார்.. எனக்கு உதவி செய்“ என்று கண்ணீர் மல்க மனமுருகவேண்டிக் கொண்டு இருந்தாள்....

அவளின் வேண்டுதலை கேட்டு அவளுக்கு கௌதமை எப்படியும் இவளுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கோட்டை எண்ணவும் மரம் தன் காரியத்தை செய்து முடித்திருந்தது...

இச்செயலைகோட்டை சுத்தமாக எதிர் பார்க்கவில்லை... அவன் எண்ணம் எல்லாம் அவளின் வாரிசு இந்த நிலத்தை ஆளவேண்டும், அதை இப்பொழுது மைத்ரேயி நிறைவேற்றிவைத்தாள் சொத்தை அவர்கள் பெயருக்கு எழுதி வைத்து விட்டாள், எப்படியும் அவர்கள் இங்கு வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை அவளுக்கு, ஆனால் இப்பொழுது எல்லாம் அவளை விட்டு போய்விட்டது,

“ இப்பொழுது மைத்ரேயி இறந்துவிட்டாள், இனி எப்படி அவன் கெளதம்மை இவளுடன் சேர்த்து வைப்பது “ என்றுகோட்டை எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது,

தீராத ஆசையில் உயிரை விட்ட மைத்ரேயி உடலில் இருந்து அவளின் ஆவி அவளை விட்டு எழுந்து கோட்டை முன் ஆக்ரோசமாக நின்றது,

மைத்ரேயிக்கு அவளை கோட்டை ஏமாற்றிவிட்டதாகவே பட்டது, “கோட்டை ஆசைப்படி அவளின் சொத்தை அவளின் வாரிசுக்கு மைத்ரேயி எழுதி வைத்துவிட்டாள் அதன்படி பார்த்தால், இவளையும் அவள் அழிக்க கூடாதே, ஆனால் எடுத்து விட்டாளே..இவள் இந்த கோட்டையை எத்தனை நம்பி அவள் ஆசையை நிறைவேற்றினாள், ஆனால்அதற்கு நன்றி கடனாக இவள் உயிரையும் பறித்து விட்டாளே” என்று கோட்டையை பார்த்து முறைத்து நின்றாள்...

அந்த நேரம் கோட்டை என்ன செய்வது என்று ஒரு நிமிடம் தடுமாறினாள், ஆனால் முன்பு போல் பழைய கோட்டை இருந்தால், இவள் அழிந்து போனால் போகட்டும் என்று இருந்திருப்பாள், ஆனால் இப்பொழுது இருப்பதோ தேவியால் மனம் மாறிய கோட்டை,

அதிலும் இப்பொழுது மைத்ரேயியால் முற்றிலும் மாறிய கோட்டை, இவளை அழிப்பேன் என்று கூறியதையும் பொருட்படுத்தாமல், இவள் உயிரையும் பற்றி கவலைபடாமல், கோட்டை ஆசையை நிறை வேற்ற வந்தவளாக தான் இப்பொழுது மைத்ரேயி, கோட்டை கண்களுக்கு தெரிந்தாள்...

அதனால் தான் தீராத ஆசையால் இறந்த மைத்ரேயி ஆவியாக இவள் முன் நிற்கவும் மைத்ரேயியை பார்த்து கணீர் குரலில்,ஒரு ஆளுமையாக, மைத்ரேயி நம்பும்படியாக சிலையை விட்டு எழும்பி நின்றாள்,

கோட்டை எழும்பி நிற்கவும் அவளை ஒரு தாயாக எண்ணிய மைத்ரேயி கண்களில்“அவளின் மாமா மீதான காதலை அவளுக்கு உணர்த்தினாள், எப்பொழுதும் அவனை விட்டு நீங்க மாட்டேன் என்பதான பார்வை அது, அந்த பார்வையை கண்டுகோட்டையே ஒரு நிமிடம் ஆடிபோனாள், அவளுக்கு சியோரா மீதான காதலை விட அதிகமான காதல்”

அவளை பார்த்து முதல் முறையாக எதிரியாக பார்க்காமல், அவளின் தாயாக பார்த்தாள் கோட்டை, “ மகளே, உன்ஆசையை கண்டிப்பாக நிறைவேற்றுவேன், உன் எல்லா செயலுக்கும் நான் துணை இருப்பேன், என் வாரிசான கெளதம் உன்னுடன் இணைவது என் பொறுப்பு ” என்று கூறி அவள் மறையும் முன்னே மைத்ரேயி அவளின் எண்ணத்தை நிறைவேற்ற ஆயத்தம் ஆகி விட்டாள்,

கணேஷ் அங்கு ஜிக்கிக்கு இங்கு நடந்ததை அழைத்து மும்பைக்கு கூறவும், அவள் அரண்மனை பயிற்சியை பாதியில் நிறுத்தி விட்டு உடனே இங்கு கோட்டைநல்லூர்க்கு கிளம்பிவிட்டாள்....

அவளுக்கு வந்தபதில், அவளைஅதிரவைத்தது, கணேஷ்கூறியவையே, சத்ரியன்னுக்கு தீடிர் என்று ஏதோ நடக்க போகிறது என்று தோன்றிக் கொண்டு இருக்கவுமே கையும், காலும் இழுக்க ஆரம்பித்தது, அதே நேரம் தான் மைத்ரேயிமேல் கோவில்மணி விழுந்து அவள் உயிர் அவளை விட்டு பிரிந்துவிட்டது என்று எல்லாம் கூறினான் கணேஷ்......

கணேஷ் கூறியதில் இவளுக்கு உண்மையாக என்ன செய்வது என்று தெரியவில்லை... அவள் கூடவே இருந்த உயிர்தோழி அவள்.. அவளை கடைசி ஒரு முறை பார்க்கவேண்டும் என்று எண்ணி உடனே கோட்டைநல்லூர் கிளம்பினாள்...

அவளுக்கு என்றும் கடவுள் பக்தி என்பது கிடையாது.. அப்படி கடவுள் இருந்தால் என் அம்மாவையும், என் அப்பாவையும்காப்பாற்றிஇருப்பார்...

அதுதான்அன்றுசத்ரியன்அவர்கள்ஊர்பற்றிகூறியதையும், கோட்டைபற்றிகூறியதையும்கேட்டுகௌதமைபழிவாங்கமட்டுமேஎண்ணினாள்...


ஆனால்மைத்ரேயிஇறப்பாள்என்றுசொன்னதைஅவளால்நம்பமுடியவில்லை... ஆனால்அவள்அந்தகோட்டைநடத்திமுடித்துவிட்டாளே என்று எண்ணியே இங்கு கோட்டைநல்லூர் வரவும்,
அவர்கள் ஊர் மக்கள் சேர்ந்து சத்ரியனையும், மைத்ரேயியையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.. அவர்கள் கூடவே மைத்ரேயி ஆவியும் சென்றது,


அதே நேரம் ஜிக்கியும் வந்தாள் கண்ணீருடன், ஜிக்கியை பார்த்ததும் மைத்ரேயிக்கு அவளிடம் சென்று “ நான் சாகலை ஜிக்கி இன்னும் உயிருடன் இருக்கிறேன் என்று கூற ஆசை, அதே ஆசையோடு அவள் அருகில் செல்லவும், கோட்டை அவளை அவள் அருகில் செல்ல முடியாமல் தடுத்துவிட்டாள்” ..
மைத்ரேயி“ ஏன்“ என்று கேட்டதற்கு..


கூடிய சீக்கிரமே தெரிந்துக் கொள்வாய் என்று கூறி அமைதியாக வரக் கூறினாள், அவளும் அமைதியாகவே வந்தாள்,

மருத்துவமனைக்கு சென்று, மருத்துவரிடம் நேராக சென்றாள் ஜிக்கி... அதை பார்த்த கோட்டை, மைத்ரேயியை பார்த்து “ ஜிக்கி பின்னால் செல் “ என்று கட்டளையிடவும் அவள் பின்னாலையே சென்றாள் மைத்ரேயி..

( ஜிக்கி – மருத்துவருக்கு இடையில் நடந்த உரையாடல் தமிழில்) டாக்டர் அருகில் சென்ற ஜிக்கி “ டாக்டர் இவள் இப்போ எப்படி இருக்கிறாள்” என்று படுத்திருக்கும் மைத்ரேயியை கை காட்டி கேட்டாள்..

அவளை ஒரு நொடி கூர்ந்து கவனித்த டாக்டர் “ அவங்க இறந்து அரைமணி நேரம் ஆகிவிட்டது “ என்று கூறினார்..

அவர் அப்படி கூறவும் ஜிக்கி முகத்தில் ஒரே ஒரு நிமிட வேதனை வந்து போனது அப்பொழுது மைத்ரேயி அவள் அருகில் சென்று அவள் முகத்தை உற்று பார்த்தாள், அந்த நேரம் ஜிக்கி தன்னை யாரோ பார்க்கும் உணர்வில் சுற்றும் முற்றும் பார்த்தாள்,

அவளின் சுற்றிப்பார்க்கும் பார்வையில்,

டாக்டர் “என்ன” என்று கேட்டதற்கு “ஒன்றும் இல்லை” என்றுக் கூறி அவரை பார்த்து தயக்கத்துடன் “ டாக்டர், நீங்க ஒரு உதவி பண்ணனும் “ என்று கூறி அவர் முகத்தை பார்த்தாள் ஜிக்கி...

அவரும் என்ன என்று கேள்வியாக பார்க்கவும் “ அவளை நான் மும்பை அழைச்சுட்டு போறேன், இவளை வைத்து எனக்கு ஒரு வேலை ஆகவேண்டும் எத்தனை பணம் செலவானாலும் நான் உங்களுக்கு தருகிறேன்...

இந்த ஊர் மக்கள் அத்தனை படிப்பறிவு கிடையாது, போலிஸ் என்று எங்கும் செல்ல மாட்டார்கள், மேல் சிகிசைக்கு அவளை வேற ஹாஸ்பிடல் அனுப்புகிறோம், என்று மட்டும் கூறுங்கள் “ என்று கூறினாள்...

அவருக்கும் இந்த கோட்டைநல்லோர் பற்றி நன்கு அறியவும் இவளிடம் இருந்து அவருக்கு தேவையான பணம் பெற்றுக் கொண்டு அவர் மைத்ரேயியை அவளுடன் அனுப்பி விட்டார்...

அடுத்த அறையில் சத்ரியன் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார், அந்த ஊர் மக்கள் மைத்ரேயியை வேற ஹாஸ்பிடல் அழைத்து செல்வது பற்றி ஏதும் கூறவில்லை, அவர்களுக்கு இந்த சத்ரியன் போனால் கூட நன்றாக இருக்கும் என்று எண்ணினார்கள்...

சொத்து கைமாறியது அவர்களுக்கு தெரியாதே, இப்படியாக இருக்க அடுத்த ஒரு வாரத்தில் சத்ரியன் வீட்டுக்கு வந்துவிட்டார், ஒரு கை, கால்அசையாத நிலையிலும், வாய் கோணியும் வீட்டுக்கு வந்தார்.. இவரை கவனிக்க என்று ஜிக்கி கணேசனை இங்கு இருக்க சொல்லிவிட்டாள்...

சத்ரியன் முதலில் தேடியது மைத்ரேயியை, அவள் இங்கு வந்து சொத்தை எல்லாம் அவன் பெயருக்கு மாற்றியது அவருக்கு பிடிக்கவில்லை, அவள் இங்கு வந்ததே அவருக்கு பிடிக்கவில்லை.. அவள் இறந்தது அதன் பிறகு மெதுவாக தான் அவருக்கு சொல்லப்பட்டது...
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
இங்கு ஜிக்கி மைத்ரேயி உடலை நேராக மும்பைக்கு கொண்டு சென்றாள், அங்கு சென்று “ மைத்ரேயி உடலில் இருந்து கன்னத்து பாகம் மட்டும் அறுவைசிகிச்சையில் எடுத்துக் கொண்டு, அமெரிக்காவில் இருந்து பெரிய பெரிய மருத்துவரைக் கொண்டு பல லட்சம் செலவு செய்து இவள் முகத்தை மைத்ரேயி முகமாக மாற்றினாள்...

(ஷாங்காய், சீனாவில், 59 வயது பெண், கடன் தொல்லை யில் இருந்து தப்பிக்க, 'பிளாஸ்டிக் சர்ஜரி' மூலம், முகத்தில் அறுவை சிகிச்சை செய்து, இளமையான தோற்றத்துக்கு மாறி, போலீசாரிடம் வசமாக சிக்கினார்… இந்த சிகிச்சை தான் இப்பொழுது ஜிக்கிக்கு தொடங்கி அவள் முக மாற்றம் மாறியது... அதிலும் மைத்ரேயி இறந்து போனதால் மட்டுமே இச்சிகிச்சை சாத்தியப்பட்டது.. இல்லையென்றால் இது முடியாத காரியம்... )

அப்படியே முக அமைப்பில் மைத்ரேயியாக மாறினாள் ஜிக்கி, அந்த கண்களை தவிர, அவளின் முக அமைப்பு மட்டுமே மாறியது, அந்த மருத்துவர்களுக்கே ஆச்சரியம் உடனே பொருந்தி போனதில், லட்சத்தில் ஒருவருக்கு தான் அழகாக பொருந்தி போவது இந்த சர்ஜரி..

ஆனால்இவள் அந்த லட்சத்தில் ஒருவளாய் மாறினாள் கோட்டை உபயத்தால்... மீண்டும் 2 மாதம் முழு ஓய்வில் இருந்தாள் ஜிக்கியாகிய மைத்ரேயி....

அவளுக்கு வெறி கௌதமை அழிக்க வேண்டும் என்ற வெறி அப்படி தான் அவள் எண்ணிக் கொண்டு இருக்கிறாள்.. ஆனால் அவளுக்கு பின்னால் இருந்து செய்வது எல்லாம் கோட்டையே....

அதன் பிறகு ஜிக்கியாகிய மைத்ரேயிக்கு, ஜிக்கி வீட்டில் இறுதி சடங்கு நடந்தது, அந்த சடங்கில் மைத்ரேயி, கோட்டை இருவரும் நடப்பதை பார்த்து கொண்டிருந்தனர். ஜிக்கி மருத்துவமனையில் இருந்தாள் .

ஜிக்கி அங்கு கோட்டைநல்லூர் வந்த அன்றே கோட்டை எண்ணிவிட்டாள் மைத்ரேயி ஆசையை இவள் மூலமாக நிறைவேற்றவேண்டும் என்று..

அதுதான் அன்றே மைத்ரேயியை இவள் அருகில் செல்ல அனுமதிக்க வில்லை.. அப்படி அவள் சென்று இருந்தால் கண்டிப்பாக எப்படியாவது இவளை ஜிக்கிக்கு உணர்த்தி இருப்பாள், கௌதக்கு உணர்த்தியதை போல்,

எல்லாரையும் ஆட்டுவிக்கும் ஆட்டகாரனாய் அவள், அவள் எண்ணத்திற்கேற்ப ஆடும் நாடகர்களாய் நாம்... இப்பொழுது நடக்கும் ஒவ்வொரு செயலுக்கு பின்னும் இருப்பது கோட்டையே...

இனி தான் கோட்டை, மைத்ரேயிக்காகசெய்வது ஏராளம்.. கோட்டை ஆசையை நிறை வேற்றிய ஒரே காரணத்துக்காக, அவளை நம்பிய ஒரே காரணத்துக்காக.... எல்லாம் மாற்ற போகிறாள் கோட்டை...

மீண்டும் ஜிக்கி இங்கு மைத்ரேயியாக மாறிய பிறகு அவள் கூடவே கெளதம் வீட்டில் காலெடுத்து வைத்தாள்... இருவராக உள்ள ஒருவள்...

இப்படியாக ஜிக்கி, மைத்ரேயி ஆக கெளதம் வீட்டில் வலம் வந்தாள். மையூரியின் சந்தேகபார்வையில் ஒரு நிமிடம் அதிர்ந்தாள் ஜிக்கி அதையும் மேலேஆராயாமல்மாற்றிவிட்டாள் கோட்டை ...... . .
.
வீட்டில் உள்ளவர்களை மனதில்தோன்றிய உறுத்தலுடனே ஜிக்கி இறந்த விஷயத்தை தெரிய படுத்தினாள் ஜிக்கி ஆகிய மைத்ரேயி ....


இப்படியாக பல மாதங்கள் கடந்த பின்னும் இவள் மேலுள்ள கெளதம், சியோரா இருவரின் சந்தேக பார்வையையும் தைரியமாக எதிர் கொண்டாள் மனதில் தோன்றிய பயத்துடனும், நடுக்கத்துடனும்...

ஒருகரையில் மையூரி குழந்தை விஷயம் மைத்ரேயியை பாடாக படுத்தியது, அதை கண்டும் காணாமல் இருந்தாள் கோட்டை..

அவள் முக்காலமும் அறிந்தவள்.. நாளை நடக்க போறதை குறிப்பவள். ஒருவரின் தலைஎழுத்தை எழுதுபவள்.. எழுதியதை மாற்றவும் வல்லமை படைத்தவள்...

இப்படியாக மாதங்கள் கழிந்தது கெளதம் – மைத்ரேயி உறவை ஆவியாகிய மைத்ரேயி பார்த்துக் கொண்டு இருந்தாள் கூடவே பார்வையாளராக அந்த காவல் தெய்வம்...

அவள் கெளதம் மனத்தையும், மைத்ரேயி மனத்தையும் ஒருங்கே அறிந்தவள்.. அப்படி தான் இருவரின் மனதிலும் காதல் விதையை கொஞ்சமாக தூவினாள் அதை மைத்ரேயி பலமாக பற்றிக் கொண்டாள்... கூடவே கெளதம் அவள் ஆட்டுவிக்கும் பொம்மையாக மாறினான்...

அவர்கள் காதலை வாய்விட்டு சொல்லும் அளவுக்கு வரவும் தான் மைத்ரேயி உணர்ந்துக் கொண்டாள் அவர்களின் காதலையும், கெளதம் துரோகத்தையும்..

ஆம் அவள் அப்படி தான் உணர்ந்துக் கொண்டாள்... அது தான் அந்த நொடியில் இருந்து அவனுக்கு அவளின் இருப்பை உணர்த்திக் கொண்டு இருந்தாள், அவன் அருகில் இருக்கும் மைத்ரேயி நியாபகம் வராமல் இருக்க....

இதை கோட்டை தடுக்கவில்லை... நாளை வருவதை எண்ணியே கோட்டை பேசாமல் இருந்தாள்...

ஆனால் இப்பொழுது எல்லாம் ஜிக்கிக்கு கௌதமை அழிக்கும் எண்ணம் வரவில்லை மாறாக அவன் மேல் காதல் தான் அதிகமாகியது.... இதை அவளும் உணர்ந்துக் கொண்டாள் ஆனால் வலுக்கட்டாயமாக அவள் அப்பாவை நினைவில் கொண்டு வந்து அவனை அழிக்கஎண்ணினாள்...

இதை எல்லாம் அவனுக்கு விளக்கிய மைத்ரேயி மீண்டும் அந்த போடோவில் இருந்து வெளியில் வந்து அவன் முன் நின்றாள்...

அதே நேரம் கணேஷ் இங்கு கெளதம் வந்திருக்கும் விஷயத்தை அங்கு இருக்கும் ஜிக்கிக்கு தெரிவித்ததும், காலேஜ் வேலை என்று கிளம்பிவிட்டாள்.. அதே நேரம் சியோராவும் இவளை தொடர்ந்து வந்தார் அவளுக்கு தெரியாமலே..

எல்லாம் கேட்ட கெளதம் பிரம்மை பிடித்த நிலையில் இருந்தான், ஏதோ மர்ம தேசத்தில் இருக்கும் உணர்வு அவனுக்கு... ஆனால் எல்லாம் அவன் வாழ்வில் நடந்துக் கொண்டிருக்கும் மர்மம்.. பல கேள்விகளுக்கு அவனுக்கு பதில் கிடைத்து விட்டது ஆனால் இன்னும் ஒரு கேள்விக்கு அவனுக்கு பதில் கிடைக்க வில்லை...

அது கோட்டை சத்தியம்“ மைத்ரேயி ஆசை அவளுக்கு கௌதமை திருமணம் செய்வது, கோட்டை ஆசை சொத்தை இவர்கள் ஆள்வது.. சொத்து இவர்கள் கைக்கு வந்து விட்டது, ஆனால் ஆவியாகிய அவளை மனித உருவில் இருக்கும் தான் எப்படி திருமணம் செய்வது, கோட்டை என்ன எண்ணத்தில் சத்தியம் செய்தாள் என்பது ஒரு புரியாத புதிராக இருந்தது....

அதிலும் இவன் ஆவியானால் மட்டுமே அது நடக்கும்.. ஆனால் கோட்டை வாரிசான இவனை அவள் அழிக்க மாட்டாள்... ஜிக்கியும் இவனை அழிப்பது போல் தெரியவில்லை.. அவள் தான் இவன் மேல் உண்மையான நேசம் கொண்டுவிட்டாளே ” என்று பலவாறாக யோசனை அவனிடம்..

இவனின் யோசனை எல்லாம் கோட்டை கண்டுக் கொண்டாள்... ஆனால் ஒன்றும் கூறாமல் இருந்தாள்.. ஆனால் மைத்ரேயியால் அவனின் யோசனையை எல்லாம் படிக்கும் அளவுக்கு அவள் இல்லை...

அதிலும் கோட்டை இவன் கண்களுக்கு தெரியவே இல்லை. ஆனால் மைத்ரெயி பார்வை செல்லும் இடம் எல்லாம் கண்டு இங்கு இன்னும் ஒருவர் இருக்கிறார்கள் என்று அறிந்துக் கொண்டான் கெளதம்.. அது கோட்டையாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டான்...

மைத்ரேயியை பார்த்து நான் நாளை கிளம்புறேன் வீட்டுக்கு... வீட்டில் உள்ளவர்களிடம் எல்லாம் கூற வேண்டும் என்றுக் கூறி அவனின் அறைக்கு யோசனையோடு சென்றான்...
அவனை அங்கு மும்பைக்கு மீண்டும் அனுப்ப மைத்ரேயிக்கு விருப்பம் இல்லை. அவளின் யோசனையை கண்ட கோட்டை அவளை தடுத்து விட்டாள்.” அவன் அங்கு செல்லட்டும்” என்று...


அடுத்த நாள் காலையே கிளம்பி விட்டான் கெளதம், கூடவே மைத்ரேயியும் கிளம்ப இருந்தாள் ஆனால் கோட்டை தடுத்துவிட்டாள்...

கெளதம் கிளம்பிய பல மணி நேரங்களில் மைத்ரேயிக்கு இங்கு இருக்க முடியவில்லை அவனுக்கு ஏதோ நடக்க போகிறது என்று.. ஆனால் கோட்டை அவளை அனுப்பவே இல்லை..

மேலும் சில மணி நேரம் கழித்து, பல யோசனையுடனும், கோட்டை, மைத்ரேயிக்கு குடுத்த வாக்கு பற்றியும் சிந்தித்துக் கொண்டு சென்ற கெளதம், சாலையில் கவனம் இல்லாமல், அவன் கவனம் கோட்டை நோக்கி செல்லவும் ஒரு நிமிட தடுமாற்றத்தில் அந்த பைபாஸ் ரோட்டில் வந்த கன்டைனர் பெரும் வேகத்துடன் வந்துக் கொண்டு இருந்தது,சிந்தனை சாலையில் இல்லாமல் வந்த கெளதம் நேராக அந்த கன்டைனரில் வண்டியை விட்டான்..

“ டமால்” என்று பெரும் சத்தத்துடன் வண்டி மோதிக் கொண்டது.. இதை தூரத்தில் வந்துக் கொண்டிருந்த ஜிக்கி, சியோரா இருவரும் அதிர்சியுடன் பார்த்துக் கொண்டு இருந்தனர்...

அச்செயல் உடனே கோட்டை, மைத்ரேயி இருவரும் அறிந்துக் கொண்டனர்... கோட்டை ஒரு நிமிடம் வேதனையாக கண்களை மூடிக் கொண்டாள்.. மைத்ரேயி அதிர்ச்சியாக கோட்டையை பார்த்துக் கொண்டு இருந்தாள்.. அவள் பார்வையில் " இதற்க்கு தான் என்னை மாமா கூட அனுபலியா" என்ற வாக்கியம் தொக்கி நின்றது..

அந்த ஆக்சிடெண்ட்டை கண்ட ஜிக்கி அந்த இடத்திலையே வண்டியை நிறுத்தி விட்டு பிரம்மை பிடித்தவள் போல் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தாள்..

சியோரா இவன் காரை பார்த்து அப்படியே அதிர்ச்சியாகி நெஞ்சை பிடித்து கார் ஸ்டீரிங்கில் விழுந்து விட்டார்... அதில் அவர் கார், காரன் ஓசை அந்த இடத்தையே நிறைத்தது.. " கீர்ர்ர்ர்ர்ர்ர்" என்று..

உயிர் எடுப்பாள்......
 




Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,196
Reaction score
1,920
Location
Hosur
Ayyyayyo chellam kodutha vaakuga than varisaye alichitangale kottai
Appa Kandipa adutha piravi mithigowtham ku undu thane ena than varisu aalanum dradhutana Kootai asai
Ana trumba en uir edupl sathiya irandal tan mudiumo
Waiting aavaludan
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top