எதுக்கு கோபம் சிஸ் ?
எதுக்கு கோபம் சிஸ் ?
நன்றி ஷாலு சிஸ்.. மைத்ரேயி வாக்குக்காக தான். அவள் வாரிசை அவள் வாழ வைப்பாள் ??gowthamum iranthutana?? vetil irunthathu jikki thana..kottai semaya plan poduthu..anal aval varisai alichutale..maithreyikku kudutha vakkukagava?? athai eppadi aval vaarisu eduthukum? adutha epiku waiting sis..
Sha..........இங்கு ஜிக்கி மைத்ரேயி உடலை நேராக மும்பைக்கு கொண்டு சென்றாள், அங்கு சென்று “ மைத்ரேயி உடலில் இருந்து கன்னத்து பாகம் மட்டும் அறுவைசிகிச்சையில் எடுத்துக் கொண்டு, அமெரிக்காவில் இருந்து பெரிய பெரிய மருத்துவரைக் கொண்டு பல லட்சம் செலவு செய்து இவள் முகத்தை மைத்ரேயி முகமாக மாற்றினாள்...
(ஷாங்காய், சீனாவில், 59 வயது பெண், கடன் தொல்லை யில் இருந்து தப்பிக்க, 'பிளாஸ்டிக் சர்ஜரி' மூலம், முகத்தில் அறுவை சிகிச்சை செய்து, இளமையான தோற்றத்துக்கு மாறி, போலீசாரிடம் வசமாக சிக்கினார்… இந்த சிகிச்சை தான் இப்பொழுது ஜிக்கிக்கு தொடங்கி அவள் முக மாற்றம் மாறியது... அதிலும் மைத்ரேயி இறந்து போனதால் மட்டுமே இச்சிகிச்சை சாத்தியப்பட்டது.. இல்லையென்றால் இது முடியாத காரியம்... )
அப்படியே முக அமைப்பில் மைத்ரேயியாக மாறினாள் ஜிக்கி, அந்த கண்களை தவிர, அவளின் முக அமைப்பு மட்டுமே மாறியது, அந்த மருத்துவர்களுக்கே ஆச்சரியம் உடனே பொருந்தி போனதில், லட்சத்தில் ஒருவருக்கு தான் அழகாக பொருந்தி போவது இந்த சர்ஜரி..
ஆனால்இவள் அந்த லட்சத்தில் ஒருவளாய் மாறினாள் கோட்டை உபயத்தால்... மீண்டும் 2 மாதம் முழு ஓய்வில் இருந்தாள் ஜிக்கியாகிய மைத்ரேயி....
அவளுக்கு வெறி கௌதமை அழிக்க வேண்டும் என்ற வெறி அப்படி தான் அவள் எண்ணிக் கொண்டு இருக்கிறாள்.. ஆனால் அவளுக்கு பின்னால் இருந்து செய்வது எல்லாம் கோட்டையே....
அதன் பிறகு ஜிக்கியாகிய மைத்ரேயிக்கு, ஜிக்கி வீட்டில் இறுதி சடங்கு நடந்தது, அந்த சடங்கில் மைத்ரேயி, கோட்டை இருவரும் நடப்பதை பார்த்து கொண்டிருந்தனர். ஜிக்கி மருத்துவமனையில் இருந்தாள் .
ஜிக்கி அங்கு கோட்டைநல்லூர் வந்த அன்றே கோட்டை எண்ணிவிட்டாள் மைத்ரேயி ஆசையை இவள் மூலமாக நிறைவேற்றவேண்டும் என்று..
அதுதான் அன்றே மைத்ரேயியை இவள் அருகில் செல்ல அனுமதிக்க வில்லை.. அப்படி அவள் சென்று இருந்தால் கண்டிப்பாக எப்படியாவது இவளை ஜிக்கிக்கு உணர்த்தி இருப்பாள், கௌதக்கு உணர்த்தியதை போல்,
எல்லாரையும் ஆட்டுவிக்கும் ஆட்டகாரனாய் அவள், அவள் எண்ணத்திற்கேற்ப ஆடும் நாடகர்களாய் நாம்... இப்பொழுது நடக்கும் ஒவ்வொரு செயலுக்கு பின்னும் இருப்பது கோட்டையே...
இனி தான் கோட்டை, மைத்ரேயிக்காகசெய்வது ஏராளம்.. கோட்டை ஆசையை நிறை வேற்றிய ஒரே காரணத்துக்காக, அவளை நம்பிய ஒரே காரணத்துக்காக.... எல்லாம் மாற்ற போகிறாள் கோட்டை...
மீண்டும் ஜிக்கி இங்கு மைத்ரேயியாக மாறிய பிறகு அவள் கூடவே கெளதம் வீட்டில் காலெடுத்து வைத்தாள்... இருவராக உள்ள ஒருவள்...
இப்படியாக ஜிக்கி, மைத்ரேயி ஆக கெளதம் வீட்டில் வலம் வந்தாள். மையூரியின் சந்தேகபார்வையில் ஒரு நிமிடம் அதிர்ந்தாள் ஜிக்கி அதையும் மேலேஆராயாமல்மாற்றிவிட்டாள் கோட்டை ...... . .
.
வீட்டில் உள்ளவர்களை மனதில்தோன்றிய உறுத்தலுடனே ஜிக்கி இறந்த விஷயத்தை தெரிய படுத்தினாள் ஜிக்கி ஆகிய மைத்ரேயி ....
இப்படியாக பல மாதங்கள் கடந்த பின்னும் இவள் மேலுள்ள கெளதம், சியோரா இருவரின் சந்தேக பார்வையையும் தைரியமாக எதிர் கொண்டாள் மனதில் தோன்றிய பயத்துடனும், நடுக்கத்துடனும்...
ஒருகரையில் மையூரி குழந்தை விஷயம் மைத்ரேயியை பாடாக படுத்தியது, அதை கண்டும் காணாமல் இருந்தாள் கோட்டை..
அவள் முக்காலமும் அறிந்தவள்.. நாளை நடக்க போறதை குறிப்பவள். ஒருவரின் தலைஎழுத்தை எழுதுபவள்.. எழுதியதை மாற்றவும் வல்லமை படைத்தவள்...
இப்படியாக மாதங்கள் கழிந்தது கெளதம் – மைத்ரேயி உறவை ஆவியாகிய மைத்ரேயி பார்த்துக் கொண்டு இருந்தாள் கூடவே பார்வையாளராக அந்த காவல் தெய்வம்...
அவள் கெளதம் மனத்தையும், மைத்ரேயி மனத்தையும் ஒருங்கே அறிந்தவள்.. அப்படி தான் இருவரின் மனதிலும் காதல் விதையை கொஞ்சமாக தூவினாள் அதை மைத்ரேயி பலமாக பற்றிக் கொண்டாள்... கூடவே கெளதம் அவள் ஆட்டுவிக்கும் பொம்மையாக மாறினான்...
அவர்கள் காதலை வாய்விட்டு சொல்லும் அளவுக்கு வரவும் தான் மைத்ரேயி உணர்ந்துக் கொண்டாள் அவர்களின் காதலையும், கெளதம் துரோகத்தையும்..
ஆம் அவள் அப்படி தான் உணர்ந்துக் கொண்டாள்... அது தான் அந்த நொடியில் இருந்து அவனுக்கு அவளின் இருப்பை உணர்த்திக் கொண்டு இருந்தாள், அவன் அருகில் இருக்கும் மைத்ரேயி நியாபகம் வராமல் இருக்க....
இதை கோட்டை தடுக்கவில்லை... நாளை வருவதை எண்ணியே கோட்டை பேசாமல் இருந்தாள்...
ஆனால் இப்பொழுது எல்லாம் ஜிக்கிக்கு கௌதமை அழிக்கும் எண்ணம் வரவில்லை மாறாக அவன் மேல் காதல் தான் அதிகமாகியது.... இதை அவளும் உணர்ந்துக் கொண்டாள் ஆனால் வலுக்கட்டாயமாக அவள் அப்பாவை நினைவில் கொண்டு வந்து அவனை அழிக்கஎண்ணினாள்...
இதை எல்லாம் அவனுக்கு விளக்கிய மைத்ரேயி மீண்டும் அந்த போடோவில் இருந்து வெளியில் வந்து அவன் முன் நின்றாள்...
அதே நேரம் கணேஷ் இங்கு கெளதம் வந்திருக்கும் விஷயத்தை அங்கு இருக்கும் ஜிக்கிக்கு தெரிவித்ததும், காலேஜ் வேலை என்று கிளம்பிவிட்டாள்.. அதே நேரம் சியோராவும் இவளை தொடர்ந்து வந்தார் அவளுக்கு தெரியாமலே..
எல்லாம் கேட்ட கெளதம் பிரம்மை பிடித்த நிலையில் இருந்தான், ஏதோ மர்ம தேசத்தில் இருக்கும் உணர்வு அவனுக்கு... ஆனால் எல்லாம் அவன் வாழ்வில் நடந்துக் கொண்டிருக்கும் மர்மம்.. பல கேள்விகளுக்கு அவனுக்கு பதில் கிடைத்து விட்டது ஆனால் இன்னும் ஒரு கேள்விக்கு அவனுக்கு பதில் கிடைக்க வில்லை...
அது கோட்டை சத்தியம்“ மைத்ரேயி ஆசை அவளுக்கு கௌதமை திருமணம் செய்வது, கோட்டை ஆசை சொத்தை இவர்கள் ஆள்வது.. சொத்து இவர்கள் கைக்கு வந்து விட்டது, ஆனால் ஆவியாகிய அவளை மனித உருவில் இருக்கும் தான் எப்படி திருமணம் செய்வது, கோட்டை என்ன எண்ணத்தில் சத்தியம் செய்தாள் என்பது ஒரு புரியாத புதிராக இருந்தது....
அதிலும் இவன் ஆவியானால் மட்டுமே அது நடக்கும்.. ஆனால் கோட்டை வாரிசான இவனை அவள் அழிக்க மாட்டாள்... ஜிக்கியும் இவனை அழிப்பது போல் தெரியவில்லை.. அவள் தான் இவன் மேல் உண்மையான நேசம் கொண்டுவிட்டாளே ” என்று பலவாறாக யோசனை அவனிடம்..
இவனின் யோசனை எல்லாம் கோட்டை கண்டுக் கொண்டாள்... ஆனால் ஒன்றும் கூறாமல் இருந்தாள்.. ஆனால் மைத்ரேயியால் அவனின் யோசனையை எல்லாம் படிக்கும் அளவுக்கு அவள் இல்லை...
அதிலும் கோட்டை இவன் கண்களுக்கு தெரியவே இல்லை. ஆனால் மைத்ரெயி பார்வை செல்லும் இடம் எல்லாம் கண்டு இங்கு இன்னும் ஒருவர் இருக்கிறார்கள் என்று அறிந்துக் கொண்டான் கெளதம்.. அது கோட்டையாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டான்...
மைத்ரேயியை பார்த்து நான் நாளை கிளம்புறேன் வீட்டுக்கு... வீட்டில் உள்ளவர்களிடம் எல்லாம் கூற வேண்டும் என்றுக் கூறி அவனின் அறைக்கு யோசனையோடு சென்றான்...
அவனை அங்கு மும்பைக்கு மீண்டும் அனுப்ப மைத்ரேயிக்கு விருப்பம் இல்லை. அவளின் யோசனையை கண்ட கோட்டை அவளை தடுத்து விட்டாள்.” அவன் அங்கு செல்லட்டும்” என்று...
அடுத்த நாள் காலையே கிளம்பி விட்டான் கெளதம், கூடவே மைத்ரேயியும் கிளம்ப இருந்தாள் ஆனால் கோட்டை தடுத்துவிட்டாள்...
கெளதம் கிளம்பிய பல மணி நேரங்களில் மைத்ரேயிக்கு இங்கு இருக்க முடியவில்லை அவனுக்கு ஏதோ நடக்க போகிறது என்று.. ஆனால் கோட்டை அவளை அனுப்பவே இல்லை..
மேலும் சில மணி நேரம் கழித்து, பல யோசனையுடனும், கோட்டை, மைத்ரேயிக்கு குடுத்த வாக்கு பற்றியும் சிந்தித்துக் கொண்டு சென்ற கெளதம், சாலையில் கவனம் இல்லாமல், அவன் கவனம் கோட்டை நோக்கி செல்லவும் ஒரு நிமிட தடுமாற்றத்தில் அந்த பைபாஸ் ரோட்டில் வந்த கன்டைனர் பெரும் வேகத்துடன் வந்துக் கொண்டு இருந்தது,சிந்தனை சாலையில் இல்லாமல் வந்த கெளதம் நேராக அந்த கன்டைனரில் வண்டியை விட்டான்..
“ டமால்” என்று பெரும் சத்தத்துடன் வண்டி மோதிக் கொண்டது.. இதை தூரத்தில் வந்துக் கொண்டிருந்த ஜிக்கி, சியோரா இருவரும் அதிர்சியுடன் பார்த்துக் கொண்டு இருந்தனர்...
அச்செயல் உடனே கோட்டை, மைத்ரேயி இருவரும் அறிந்துக் கொண்டனர்... கோட்டை ஒரு நிமிடம் வேதனையாக கண்களை மூடிக் கொண்டாள்.. மைத்ரேயி அதிர்ச்சியாக கோட்டையை பார்த்துக் கொண்டு இருந்தாள்.. அவள் பார்வையில் " இதற்க்கு தான் என்னை மாமா கூட அனுபலியா" என்ற வாக்கியம் தொக்கி நின்றது..
அந்த ஆக்சிடெண்ட்டை கண்ட ஜிக்கி அந்த இடத்திலையே வண்டியை நிறுத்தி விட்டு பிரம்மை பிடித்தவள் போல் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தாள்..
சியோரா இவன் காரை பார்த்து அப்படியே அதிர்ச்சியாகி நெஞ்சை பிடித்து கார் ஸ்டீரிங்கில் விழுந்து விட்டார்... அதில் அவர் கார், காரன் ஓசை அந்த இடத்தையே நிறைத்தது.. " கீர்ர்ர்ர்ர்ர்ர்" என்று..
உயிர் எடுப்பாள்......
என்னாச்சு.. இவ்ளோ ஷாக் ???Sha..........
இப்போ தான் அடுத்த எபி எழுத போறேன் அனி.. திக் திக்னு இருக்கு.. மைண்ட்ல ஓண்ணுமே இல்லை ????nxt update venum Sha gowtham ku enna aachu jikki(mike) enna panna poringa...???plz...update sha
accident aachula gowtham athanஎன்னாச்சு.. இவ்ளோ ஷாக் ???
semya eluti nxt update kudunga take ur time all the best all is wellஇப்போ தான் அடுத்த எபி எழுத போறேன் அனி.. திக் திக்னு இருக்கு.. மைண்ட்ல ஓண்ணுமே இல்லை ????
ரெண்டு பேரையும் கொண்டு வரணும்.. கோட்டை மேஜிக் பண்ணணும் ???semya eluti nxt update kudunga take ur time all the best all is well
kottai kandipa magic panuvangaரெண்டு பேரையும் கொண்டு வரணும்.. கோட்டை மேஜிக் பண்ணணும் ???