ஹாய் டியர்ஸ்...
உன் உயிர் தா..!! நாம் வாழ..!!! 24 ( PRE - FINAL ) எபி போடுறேன்..
படிச்சு கருத்தை சொல்லுங்க...
கெளதம் - மைத்ரேயி லவ் இன்னைக்கு எபியில்..
அதே போல் மைத்ரேயி அவனை அறிந்துக் கொள்வது..
பல யோசனைக்கு பின் இந்த எபி போடுறேன் தவறுகள் இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்...
அடுத்த எபியில் கதை முடிந்து விடும்.. கோட்டை எண்ணம் கனவு எல்லாம் நிறைவேறும் எபி அடுத்த எபி.....
உயிர்– 24
அவன் சென்ற காட்சியை கண்ட மைத்ரேயிக்கு மனதில் “ டேய் கெளதம், உன்னை பின்னால் இருந்து பார்த்தால் என் கனவில் வரும் மாமா போல் இருக்க.. ஆனால் முன்னால் பார்த்தால் கௌசிக் மாமா பையன் மாதிரி இருக்க, கௌதமா உன்னையும் என் மனசு விரும்புது, அதே போல என் கனவில் வரும் அவனையும் மனசு விரும்புது, இதில் எந்த உருவம் நிஜம், இதில் எந்த உருவம் எனக்கு சொந்தமானது எதுவுமே எனக்கு புரியலை.. ஒரே குழப்பமா இருக்கு. ஆனால் இங்கு நீங்க பேசுனதை பார்த்தா கெளதம், கனவில் வரும் மாமா இருவரும் ஒருவர் போலவே தெரிகிறதே.. ஆஆ...” என்று தலையை பிடித்து அமர்ந்துவிட்டாள் மைத்ரேயி... அவளுக்கு பைத்தியமே பிடித்துவிடும் போல் இருந்தது..
அவள் இங்கு இருந்து யோசித்துக் கொண்டு இருக்க... பைக்கில் தோட்டத்தை சுற்றி பார்த்து விட்டு வந்த கெளதம்.. போன் வரவே புல்லட்டை கோவில்முன் நிறுத்தி விட்டு.போனை எடுத்து பேசிக் கொண்டே அந்த பூவரசம் மரத்தின் அருகில் வந்து நின்று ஒரு கையை பூவரசம் மரத்தின் மேலும், இன்னொரு கையில் போன் வைத்து பேசிக் கொண்டு இருந்தான்...
புல்லட் சத்தம் கேட்கவும் குரல் வந்த திசையை நோக்கி திரும்பிய மைத்ரேயிக்கு இதுவரை குழம்பிய குழப்பதுக்கு பதில் கிடைத்தது... மைத்ரேயி கண்டுக் கொண்டாள் அவளின் கனவும் மாமாவும்,கௌதமும் ஒன்று என்று.. அவளுக்கு சந்தேகமே இல்லை இது தான் அவளின் “ கெளதம் மாமா ” என்று. அவளின் குழப்பத்துக்கு எல்லாம் விடையாக அவளின் “ மாமா “இருக்கவும்... இங்கிருந்தே “ மாமா “ என்று அழைத்துக் கொண்டே அவனை நோக்கி ஓடினாள் மைத்ரேயி..
இவளின் மாமா என்ற குரலை கேட்ட வீட்டில் இருந்த எல்லாரும் ஓடி வந்தனர். வந்து கண்ட காட்சியில் அனைவர் மனமும் நிறைந்தது.. கோட்டைத்தாயின்மனதுமிக மிக சந்தோசம் அடைந்தது...
ஓடி வந்த வேகத்தில் “ மாமா “ என்று அவனை தாவி அணைத்துக் கொண்டாள் மைத்ரேயி.. கண்களில் வழிந்த நீர் அவன் சட்டையை நனைத்தது...
அவனின் சின்னுவின் கண்ணீர் அவனுக்கு வேதனை அளித்தது, அவளின் முகத்தை நிமிர்த்தி “ என்ன சின்னு, என்னாச்சும்மா எதுக்கு அழுற” என்று அவளின் கண்ணீரை துடைத்துவிட்டுக் கொண்டே கேட்டான் கெளதம். அவனுக்கு அவளின் மாமா என்ற அழைப்பு கேட்கவே இல்ல... அவளின் கண்ணீர் தான் முதலில் தெரிந்தது....
“ மாமா, நீ எதுக்கு மாமா என்கிட்டே உண்மையை சொல்லல.. நீ தான் என்கனவுல வந்த மாமா. ஆனா எனக்கு அது நீதான்னு தெரியவே இல்ல.. ஆனாலும் உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சுது மாமா, நீ தான் என் கனவுல வாரேன்னு தெரிஞ்சதும் எவ்ளோ சந்தோசமா இருந்துச்சு தெரியுமா? ஆனா நீ என்கிட்டே ஏதுமே சொல்லல போ மாமா” என்று அவனின் நெஞ்சில் செல்லமாக குத்தினாள் மைத்ரேயி.. இல்லை அவனின் சின்னு..
அப்பொழுது தான் அவனுக்கு அவள் அழைத்த “ மாமா “ என்ற வார்த்தை அவன் காதில் தேனாக பாய்ந்தது.. “ ஏஏய் சின்னு இப்போ என்ன சொன்ன சொல்லு ” என்று அவள் அருகில் நெருங்கி நின்று கேட்டான் அவளின் மாமா.
அவன் அருகில் வரவும் படபடத்தை மனதை அடக்கி அவனை நோக்கி “ எ....என்ன! சொன்னேன் கெளதம்” என்று கவனமாக“மாமா” என்ற வார்த்தையை கூறாமல் தவிர்த்தாள் சின்னு...
“சின்னு நீ சொன்ன நான் ரொம்ப வருசமா கேட்ட ஆசைப்பட்ட அந்த வார்த்தையை நீ சொன்ன” என்று அவளிடம் கேட்டுக் கொண்டே அவளின் கையை பிடித்து சுழற்றி அப்படியே அந்த பூவரசம் மரத்தின் மேல் அவளை சாய்த்து வைத்து அவளின் மேல் சரியவும்... வாய் தானாக“ மாமா “ என்று உச்சரித்தது... “இந்த வார்த்தையை தான் கேட்டேன் சின்னு”என்றுக் கூறிக் கொண்டே அவளின் இருபக்கமும் கையை வைத்து அவளை அந்த மரத்தோடு சேர்த்துவைத்து அவளின் பக்கமாய் சாயும் நேரம் மைத்ரேயி கண்களில் நீர் வழிய திரும்பி அந்த மரத்தின் மீது கையை வைத்து, அவனை நோக்கி “ மாமா நான் இந்த மரத்தால் தான் இறந்துப் போனேனா” என்றுக் கேட்டாள் அவள்...
அந்த மரத்தின் அருகில் வந்து நிற்கவும் அவளுக்கு எல்லாம் நினைவு வந்து விட்டது என்பதை உணர்ந்த கெளதம் “ அவளை தன் பக்கமாய் இழுத்துக் கொண்டு அப்படியே அந்த மரத்தின் மீது சாய்த்து நின்று அவளை தன் நெஞ்சில் சாய்த்து அவளின் தலையில் தன் கன்னத்தை பதித்து அவளுக்கு “ஆம்” என்ற பதிலை தந்தான்... அவனுக்கும் வருத்தமே.. அந்த நேரம் கோட்டைத்தாய் மிக மிக வேதனையடைந்தள்..
இனி வரம் காலம் இந்த ஜோடிகளுக்கானது என்பதை உணர்ந்துக் கொண்ட கோட்டைத்தாய் அந்த மரத்துக்கு கட்டளை இட்டு, அவள் கூறியது போல் இப்பொழுது தான் அந்த மரத்தை ஏறெடுத்துப் பார்த்தாள்.. அந்த மரத்தை நோக்கி பார்த்து“ இவர்களை வாழ்த்து” என்றுக் கூறவும் தன் மரத்தில் உள்ள, இனி மேல் பூக்கின்ற அத்தனை பூக்களையும் தூவி அவர்களை வாழ்த்தி நிகழ் காலத்துக்கு கொண்டு வந்தது மரம்...
தங்கள் மேல் பூக்கள் விழுவதை கண்ட இருவரும் நிகழ்காலத்துக்கு திரும்பி அண்ணாந்துப் பார்த்து பூக்கள் விழும் அழகை கண்டு ரசித்தனர்.. கெளதம் அவனின் சின்னுவை அணுவணுவாக ரசித்தான்...
அவனின்கள்ள பார்வையை உணர்ந்த அவள்“ டேய் திருடா “ என்றுக் கூறி அவனை அடிக்க கை ஓங்கவும் அவளின் கைக்கு அகப்படாமல் அவளுக்கு ஓட்டம் காட்டி பிறகு அவளின் கைக்குள் சுகமாய் அடங்கி“ ஏய் என்னடி என்னையே அடிக்க கையோங்குற “ என்று கூறி அவனின் முதுகு பின் நின்றவளை தன் நோக்கி இழுத்து செல்லமாக மிரட்டிய கெளதம் அவளை தன் கைவளைவில் கொண்டு வந்து அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்... அவன் மனது என்றும் இல்லாமல் இன்று நிறைந்து இருந்தது.. அவனுக்கு, அவனின் சின்னு கிடைத்து விட்டாள்....
அவனின் நெடுநாளைய ஆசையை நிறைவேற்றும் படியாக அவளை அப்படியே கைகளில் ஏந்திக் கொண்டான் கெளதம்.. அவனின் செயலில் அதிர்ந்த சின்னு “ மாமா என்ன இது எல்லாரும் பாக்குறாங்க பாரு “ என்று கூறி கூச்சத்துடன் சிணுங்கலாக கூறி அவன் நெஞ்சில் முகத்தை வைத்து அழுத்திக் கொண்டாள்.. அவள் செயலில் அவனின் காதல் மனது வெகுவாக தடுமாறியது...
அவன், அவளை தூக்கியதில் அவளின் குட்டி ஷர்ட் மேல் எழும்பி அவனுக்கு ஒரு நல்ல காரியம் செய்தது. அவளின் வெற்று இடுப்பில் கையை அழுந்த பிடித்துக் கொண்டான். அவன் செயலில் அவள் தான் பெரும் சிரமத்துக்கு உள்ளானாள்.. அதிலும் இவர்களை பார்த்த அந்த ஊர் ஜனங்கள் அவனிடம் வந்து “ சின்னைய்யா, சின்னம்மாவாவை இப்போவே இப்படி தூக்கிட்டு போறீங்க “ என்று கிண்டலாக கூறி செல்லவும்,
இவனும் அவர்களை பார்த்து “ ஆமா சின்னமாவுக்கு கால் வலிக்குதாம், அது தான் என் அழகு ராணியை கையில் ஏந்தி விட்டேன் “ என்று காதலுடன் அவளை பார்த்து கூறிக் கொண்டே அவனின் புல்லட் நோக்கி சென்றான்.. அவளைதன் புல்லட்டில் அமரவைத்து அவனின் தோட்டத்தை சுற்றிக் காட்டினான்.. அவனின் முதுகின் பின் சாய்ந்து அமர்ந்துக் கொண்டு அவனின் வயிற்றை கெட்டியாக பிடித்துக் கொண்டு ரசித்தாள்.. தோட்டத்தின் உள்ளே ஒரு சொர்க்கமே இருந்தது என்று தான் மைத்ரேயி எண்ணினாள். எங்கும் பசுமை....! பசுமை....! மட்டுமே..
அவளை, அவனுக்கு பிடித்த மாமரத்தின் அருகில் அழைத்து சென்றான் கெளதம்.. அங்கு சென்று மேல் தொங்கிக் கொண்டு கிடந்த ஒரு பழத்தை எட்டி பறித்து அதை துடைத்து அவளிடம் கொடுத்தான்... ஆசையாக அவனிடம் வாங்கி சுவைத்து சாப்பிட்டாள் மைத்ரேயி.. அவள்சாப்பிடுவதையே ரசனையாக பார்த்துக் கொண்டு இருந்தான் கெளதம்..
அவள் முழு பழத்தையும் சாப்பிட்டு முடிக்கும் தருணம், அவள் மாம்பழத்தை கடிக்கும் பொழுதே ஒரே நொடியில் அவள் அருகில் சென்று அவள் சுதாரிக்கும் முன்னே அவள் கன்னம் தாங்கி, மாம்பழத்தோடு... அவள் இதழையும் சிறைசெய்தான் அந்த கள்வன்...
ஒரு நொடியில் விலகிவிடுவான் என அவள் எதிர் பார்த்திருக்க... இன்னும் அழுத்தியவன்... அந்த மாம்பழத்தோடு, அவள் இதழ்களையும் மென்மையாக உள்வாங்கிக் கொண்டான்... ஒருமாதிரி கதகதப்பாய்... அடிநாக்கில் தித்திப்பாய்... உடல் முழுவதும் சிலிர்ப்பாய்.. அவன் இதழ் முத்தத்தில் மூழ்கிப் போனாள்....கையில் இருந்த மாம்பழம் நழுவி கீழே விழுந்தது....
அவன் வலக்கரம் அவள் காதுமடலை வருட, இடக்கரமோ... விரிந்திருந்தஅவள் கூந்தலுக்குள் நுழைந்து.... அழுத்தமாக வருடியது, பிரிய மனமின்றி... அவள் இதழ்களுக்குள் இன்னும் தன் தேடலை அதிகரிக்க, தன் கரத்தால்... அவன்கழுத்தை கட்டிக் கொண்டாள்....
அந்த மாம்பழத்தின் சுவையோடும், அவளின் இதழையும் சேர்த்து சுவைத்தான் அந்த காதல் திருடன்... நீண்ட முத்தம்... போதும் என்ற மனமில்லாமல் வேண்டும் வேண்டும் என்றே இருவருக்கும் கேட்டது.. பத்து நிமிட அந்த முத்தத்தில் மாம்பழம் கரைந்து காணாமல் போனது, அதன் சுவையோடு,முத்த மாயமும்,பல மாயாஜாலம் செய்து அவர்களை மீண்டும் மீண்டும் கட்டிப் போட்டது...
சுற்றுப்புறம் உறைந்துப் போக.... தேகம் மொத்தமும் நெகிழ.. உருகிகரைந்தாள்... மென்மையாக இருந்த அவன் இதழ் தீண்டல்.... அவள் உயிர்வரை தீண்டும் வகையில்முற்றுகையாக மாற, இதழ் தீண்டல்இப்படி தான் இருக்குமா? உயிர்வரை தீண்டுமா?
விலகவே வேண்டாம் என வதைக்குமா? விலகிட கெஞ்சுமா? ஒரு முத்தத்தில் அவளை துவள செய்தான்அந்த கள்வன்... மூச்சுக்காகதவிக்கவும் தான் அவளை விட்டான் அந்த மாயாஜலகாரன்... தேகம் நடுங்க அவனின் இதயத்தில் தஞ்சமடைந்தாள்..
நெஞ்சில் சாய்ந்தவளை வலுகட்டாயமாக அவனிடம் இருந்து பிரித்தெடுத்து, அவளை அணைத்துக் கொண்டே அருகில் இருந்த நீர் நிறைந்த தொட்டியில் குதித்தான் அந்த காதல் கள்வன்... அவளை சரியாக்கும் பொருட்டு....
உன் உயிர் தா..!! நாம் வாழ..!!! 24 ( PRE - FINAL ) எபி போடுறேன்..
படிச்சு கருத்தை சொல்லுங்க...
கெளதம் - மைத்ரேயி லவ் இன்னைக்கு எபியில்..
அதே போல் மைத்ரேயி அவனை அறிந்துக் கொள்வது..
பல யோசனைக்கு பின் இந்த எபி போடுறேன் தவறுகள் இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்...
அடுத்த எபியில் கதை முடிந்து விடும்.. கோட்டை எண்ணம் கனவு எல்லாம் நிறைவேறும் எபி அடுத்த எபி.....
உயிர்– 24
அவன் சென்ற காட்சியை கண்ட மைத்ரேயிக்கு மனதில் “ டேய் கெளதம், உன்னை பின்னால் இருந்து பார்த்தால் என் கனவில் வரும் மாமா போல் இருக்க.. ஆனால் முன்னால் பார்த்தால் கௌசிக் மாமா பையன் மாதிரி இருக்க, கௌதமா உன்னையும் என் மனசு விரும்புது, அதே போல என் கனவில் வரும் அவனையும் மனசு விரும்புது, இதில் எந்த உருவம் நிஜம், இதில் எந்த உருவம் எனக்கு சொந்தமானது எதுவுமே எனக்கு புரியலை.. ஒரே குழப்பமா இருக்கு. ஆனால் இங்கு நீங்க பேசுனதை பார்த்தா கெளதம், கனவில் வரும் மாமா இருவரும் ஒருவர் போலவே தெரிகிறதே.. ஆஆ...” என்று தலையை பிடித்து அமர்ந்துவிட்டாள் மைத்ரேயி... அவளுக்கு பைத்தியமே பிடித்துவிடும் போல் இருந்தது..
அவள் இங்கு இருந்து யோசித்துக் கொண்டு இருக்க... பைக்கில் தோட்டத்தை சுற்றி பார்த்து விட்டு வந்த கெளதம்.. போன் வரவே புல்லட்டை கோவில்முன் நிறுத்தி விட்டு.போனை எடுத்து பேசிக் கொண்டே அந்த பூவரசம் மரத்தின் அருகில் வந்து நின்று ஒரு கையை பூவரசம் மரத்தின் மேலும், இன்னொரு கையில் போன் வைத்து பேசிக் கொண்டு இருந்தான்...
புல்லட் சத்தம் கேட்கவும் குரல் வந்த திசையை நோக்கி திரும்பிய மைத்ரேயிக்கு இதுவரை குழம்பிய குழப்பதுக்கு பதில் கிடைத்தது... மைத்ரேயி கண்டுக் கொண்டாள் அவளின் கனவும் மாமாவும்,கௌதமும் ஒன்று என்று.. அவளுக்கு சந்தேகமே இல்லை இது தான் அவளின் “ கெளதம் மாமா ” என்று. அவளின் குழப்பத்துக்கு எல்லாம் விடையாக அவளின் “ மாமா “இருக்கவும்... இங்கிருந்தே “ மாமா “ என்று அழைத்துக் கொண்டே அவனை நோக்கி ஓடினாள் மைத்ரேயி..
இவளின் மாமா என்ற குரலை கேட்ட வீட்டில் இருந்த எல்லாரும் ஓடி வந்தனர். வந்து கண்ட காட்சியில் அனைவர் மனமும் நிறைந்தது.. கோட்டைத்தாயின்மனதுமிக மிக சந்தோசம் அடைந்தது...
ஓடி வந்த வேகத்தில் “ மாமா “ என்று அவனை தாவி அணைத்துக் கொண்டாள் மைத்ரேயி.. கண்களில் வழிந்த நீர் அவன் சட்டையை நனைத்தது...
அவனின் சின்னுவின் கண்ணீர் அவனுக்கு வேதனை அளித்தது, அவளின் முகத்தை நிமிர்த்தி “ என்ன சின்னு, என்னாச்சும்மா எதுக்கு அழுற” என்று அவளின் கண்ணீரை துடைத்துவிட்டுக் கொண்டே கேட்டான் கெளதம். அவனுக்கு அவளின் மாமா என்ற அழைப்பு கேட்கவே இல்ல... அவளின் கண்ணீர் தான் முதலில் தெரிந்தது....
“ மாமா, நீ எதுக்கு மாமா என்கிட்டே உண்மையை சொல்லல.. நீ தான் என்கனவுல வந்த மாமா. ஆனா எனக்கு அது நீதான்னு தெரியவே இல்ல.. ஆனாலும் உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சுது மாமா, நீ தான் என் கனவுல வாரேன்னு தெரிஞ்சதும் எவ்ளோ சந்தோசமா இருந்துச்சு தெரியுமா? ஆனா நீ என்கிட்டே ஏதுமே சொல்லல போ மாமா” என்று அவனின் நெஞ்சில் செல்லமாக குத்தினாள் மைத்ரேயி.. இல்லை அவனின் சின்னு..
அப்பொழுது தான் அவனுக்கு அவள் அழைத்த “ மாமா “ என்ற வார்த்தை அவன் காதில் தேனாக பாய்ந்தது.. “ ஏஏய் சின்னு இப்போ என்ன சொன்ன சொல்லு ” என்று அவள் அருகில் நெருங்கி நின்று கேட்டான் அவளின் மாமா.
அவன் அருகில் வரவும் படபடத்தை மனதை அடக்கி அவனை நோக்கி “ எ....என்ன! சொன்னேன் கெளதம்” என்று கவனமாக“மாமா” என்ற வார்த்தையை கூறாமல் தவிர்த்தாள் சின்னு...
“சின்னு நீ சொன்ன நான் ரொம்ப வருசமா கேட்ட ஆசைப்பட்ட அந்த வார்த்தையை நீ சொன்ன” என்று அவளிடம் கேட்டுக் கொண்டே அவளின் கையை பிடித்து சுழற்றி அப்படியே அந்த பூவரசம் மரத்தின் மேல் அவளை சாய்த்து வைத்து அவளின் மேல் சரியவும்... வாய் தானாக“ மாமா “ என்று உச்சரித்தது... “இந்த வார்த்தையை தான் கேட்டேன் சின்னு”என்றுக் கூறிக் கொண்டே அவளின் இருபக்கமும் கையை வைத்து அவளை அந்த மரத்தோடு சேர்த்துவைத்து அவளின் பக்கமாய் சாயும் நேரம் மைத்ரேயி கண்களில் நீர் வழிய திரும்பி அந்த மரத்தின் மீது கையை வைத்து, அவனை நோக்கி “ மாமா நான் இந்த மரத்தால் தான் இறந்துப் போனேனா” என்றுக் கேட்டாள் அவள்...
அந்த மரத்தின் அருகில் வந்து நிற்கவும் அவளுக்கு எல்லாம் நினைவு வந்து விட்டது என்பதை உணர்ந்த கெளதம் “ அவளை தன் பக்கமாய் இழுத்துக் கொண்டு அப்படியே அந்த மரத்தின் மீது சாய்த்து நின்று அவளை தன் நெஞ்சில் சாய்த்து அவளின் தலையில் தன் கன்னத்தை பதித்து அவளுக்கு “ஆம்” என்ற பதிலை தந்தான்... அவனுக்கும் வருத்தமே.. அந்த நேரம் கோட்டைத்தாய் மிக மிக வேதனையடைந்தள்..
இனி வரம் காலம் இந்த ஜோடிகளுக்கானது என்பதை உணர்ந்துக் கொண்ட கோட்டைத்தாய் அந்த மரத்துக்கு கட்டளை இட்டு, அவள் கூறியது போல் இப்பொழுது தான் அந்த மரத்தை ஏறெடுத்துப் பார்த்தாள்.. அந்த மரத்தை நோக்கி பார்த்து“ இவர்களை வாழ்த்து” என்றுக் கூறவும் தன் மரத்தில் உள்ள, இனி மேல் பூக்கின்ற அத்தனை பூக்களையும் தூவி அவர்களை வாழ்த்தி நிகழ் காலத்துக்கு கொண்டு வந்தது மரம்...
தங்கள் மேல் பூக்கள் விழுவதை கண்ட இருவரும் நிகழ்காலத்துக்கு திரும்பி அண்ணாந்துப் பார்த்து பூக்கள் விழும் அழகை கண்டு ரசித்தனர்.. கெளதம் அவனின் சின்னுவை அணுவணுவாக ரசித்தான்...
அவனின்கள்ள பார்வையை உணர்ந்த அவள்“ டேய் திருடா “ என்றுக் கூறி அவனை அடிக்க கை ஓங்கவும் அவளின் கைக்கு அகப்படாமல் அவளுக்கு ஓட்டம் காட்டி பிறகு அவளின் கைக்குள் சுகமாய் அடங்கி“ ஏய் என்னடி என்னையே அடிக்க கையோங்குற “ என்று கூறி அவனின் முதுகு பின் நின்றவளை தன் நோக்கி இழுத்து செல்லமாக மிரட்டிய கெளதம் அவளை தன் கைவளைவில் கொண்டு வந்து அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்... அவன் மனது என்றும் இல்லாமல் இன்று நிறைந்து இருந்தது.. அவனுக்கு, அவனின் சின்னு கிடைத்து விட்டாள்....
அவனின் நெடுநாளைய ஆசையை நிறைவேற்றும் படியாக அவளை அப்படியே கைகளில் ஏந்திக் கொண்டான் கெளதம்.. அவனின் செயலில் அதிர்ந்த சின்னு “ மாமா என்ன இது எல்லாரும் பாக்குறாங்க பாரு “ என்று கூறி கூச்சத்துடன் சிணுங்கலாக கூறி அவன் நெஞ்சில் முகத்தை வைத்து அழுத்திக் கொண்டாள்.. அவள் செயலில் அவனின் காதல் மனது வெகுவாக தடுமாறியது...
அவன், அவளை தூக்கியதில் அவளின் குட்டி ஷர்ட் மேல் எழும்பி அவனுக்கு ஒரு நல்ல காரியம் செய்தது. அவளின் வெற்று இடுப்பில் கையை அழுந்த பிடித்துக் கொண்டான். அவன் செயலில் அவள் தான் பெரும் சிரமத்துக்கு உள்ளானாள்.. அதிலும் இவர்களை பார்த்த அந்த ஊர் ஜனங்கள் அவனிடம் வந்து “ சின்னைய்யா, சின்னம்மாவாவை இப்போவே இப்படி தூக்கிட்டு போறீங்க “ என்று கிண்டலாக கூறி செல்லவும்,
இவனும் அவர்களை பார்த்து “ ஆமா சின்னமாவுக்கு கால் வலிக்குதாம், அது தான் என் அழகு ராணியை கையில் ஏந்தி விட்டேன் “ என்று காதலுடன் அவளை பார்த்து கூறிக் கொண்டே அவனின் புல்லட் நோக்கி சென்றான்.. அவளைதன் புல்லட்டில் அமரவைத்து அவனின் தோட்டத்தை சுற்றிக் காட்டினான்.. அவனின் முதுகின் பின் சாய்ந்து அமர்ந்துக் கொண்டு அவனின் வயிற்றை கெட்டியாக பிடித்துக் கொண்டு ரசித்தாள்.. தோட்டத்தின் உள்ளே ஒரு சொர்க்கமே இருந்தது என்று தான் மைத்ரேயி எண்ணினாள். எங்கும் பசுமை....! பசுமை....! மட்டுமே..
அவளை, அவனுக்கு பிடித்த மாமரத்தின் அருகில் அழைத்து சென்றான் கெளதம்.. அங்கு சென்று மேல் தொங்கிக் கொண்டு கிடந்த ஒரு பழத்தை எட்டி பறித்து அதை துடைத்து அவளிடம் கொடுத்தான்... ஆசையாக அவனிடம் வாங்கி சுவைத்து சாப்பிட்டாள் மைத்ரேயி.. அவள்சாப்பிடுவதையே ரசனையாக பார்த்துக் கொண்டு இருந்தான் கெளதம்..
அவள் முழு பழத்தையும் சாப்பிட்டு முடிக்கும் தருணம், அவள் மாம்பழத்தை கடிக்கும் பொழுதே ஒரே நொடியில் அவள் அருகில் சென்று அவள் சுதாரிக்கும் முன்னே அவள் கன்னம் தாங்கி, மாம்பழத்தோடு... அவள் இதழையும் சிறைசெய்தான் அந்த கள்வன்...
ஒரு நொடியில் விலகிவிடுவான் என அவள் எதிர் பார்த்திருக்க... இன்னும் அழுத்தியவன்... அந்த மாம்பழத்தோடு, அவள் இதழ்களையும் மென்மையாக உள்வாங்கிக் கொண்டான்... ஒருமாதிரி கதகதப்பாய்... அடிநாக்கில் தித்திப்பாய்... உடல் முழுவதும் சிலிர்ப்பாய்.. அவன் இதழ் முத்தத்தில் மூழ்கிப் போனாள்....கையில் இருந்த மாம்பழம் நழுவி கீழே விழுந்தது....
அவன் வலக்கரம் அவள் காதுமடலை வருட, இடக்கரமோ... விரிந்திருந்தஅவள் கூந்தலுக்குள் நுழைந்து.... அழுத்தமாக வருடியது, பிரிய மனமின்றி... அவள் இதழ்களுக்குள் இன்னும் தன் தேடலை அதிகரிக்க, தன் கரத்தால்... அவன்கழுத்தை கட்டிக் கொண்டாள்....
அந்த மாம்பழத்தின் சுவையோடும், அவளின் இதழையும் சேர்த்து சுவைத்தான் அந்த காதல் திருடன்... நீண்ட முத்தம்... போதும் என்ற மனமில்லாமல் வேண்டும் வேண்டும் என்றே இருவருக்கும் கேட்டது.. பத்து நிமிட அந்த முத்தத்தில் மாம்பழம் கரைந்து காணாமல் போனது, அதன் சுவையோடு,முத்த மாயமும்,பல மாயாஜாலம் செய்து அவர்களை மீண்டும் மீண்டும் கட்டிப் போட்டது...
சுற்றுப்புறம் உறைந்துப் போக.... தேகம் மொத்தமும் நெகிழ.. உருகிகரைந்தாள்... மென்மையாக இருந்த அவன் இதழ் தீண்டல்.... அவள் உயிர்வரை தீண்டும் வகையில்முற்றுகையாக மாற, இதழ் தீண்டல்இப்படி தான் இருக்குமா? உயிர்வரை தீண்டுமா?
விலகவே வேண்டாம் என வதைக்குமா? விலகிட கெஞ்சுமா? ஒரு முத்தத்தில் அவளை துவள செய்தான்அந்த கள்வன்... மூச்சுக்காகதவிக்கவும் தான் அவளை விட்டான் அந்த மாயாஜலகாரன்... தேகம் நடுங்க அவனின் இதயத்தில் தஞ்சமடைந்தாள்..
நெஞ்சில் சாய்ந்தவளை வலுகட்டாயமாக அவனிடம் இருந்து பிரித்தெடுத்து, அவளை அணைத்துக் கொண்டே அருகில் இருந்த நீர் நிறைந்த தொட்டியில் குதித்தான் அந்த காதல் கள்வன்... அவளை சரியாக்கும் பொருட்டு....