நன்றி சகோ..Nice
நன்றி அக்கா..அருமையான பதிவு
நன்றி சிஸ்...Interesting
எல்லாரும் குளித்து நெற்றி நிறைய திருநீரு பூசிக் கொண்டு நின்றிருந்தனர்.. இதில் அந்த பூசாரி வேற வந்து கெளதம் நெத்தியில் ஒரு பட்டையை போட்டு விட்டு சென்றார்... அது மட்டும் இல்லாமல் அவனின் அழகான வழு வழு கன்னத்தில் இரு புறமும் சந்தனம் பூசி மேலும் அவனை கடுப்பாகிட்டு அவர் பாட்டுக்கு சென்றார்... இதில் கடுப்பான கெளதம் அவரை பார்த்து முறைக்கவும், அவனின் கார்ட்ஸ் இவனை பார்த்து சிரித்தனர்.தாத்தாவின் பயம் தான் இதற்கு காரணம் என்று எண்ணிக் கொண்டும், இனி எப்படி கௌதமை பார்ப்பது என்ற யோசனையுடன் அமர்ந்து இருந்தாள் மைத்ரேயி....
அதே நேரம் கோட்டைநல்லூரில்கோவில் கதவுகள் திடிரென திறந்துக் கொண்டது... அதே போல்அந்த ஊர் மக்கள் பக்தியாக எடுத்து ஊற்றிய நீர்கள் எல்லாம் கோட்டை கதவுகள் திறக்கவும் அந்த பூவரசம் மரத்தின் அடியில் இருந்து தண்ணீர் கொப்பளித்துக் கொண்டு வெளியில் வழிந்து ஓடியது...
இத்தனை நேரம் வறண்ட இடமாக இருந்த பூவரசம் மரத்தின் அடிப்பகுதி இப்பொழுது
மிக மிக செழிப்பாக மாறி தண்ணீர் வெளியில் ஓடியது.. இதை பார்த்த மக்கள் தாயின் கோபம் குறைந்து விட்டது என்று எண்ணி அந்த மரத்தின் கீழ்
விழுந்து வணங்கி கொண்டு அவரவர் வீடு நோக்கி சென்றனர்... அந்த ஓர் மக்களுக்கு அளவுக்கு அதிகமான நம்பிக்கை. அதனால்தான் இந்த விசயத்தை எல்லாம் அவர்கள் சாதரணமாக எண்ணினார்கள்...
அவனின் கார்ட்ஸ் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் பார்த்துக் கொண்டு இருந்தனர்... ஆனால் கௌதமால் அப்படி பார்க்கமுடியவில்லை. அவனுக்குதோணியதும், அவன் அப்பா கூறியதை வைத்து பார்க்கும் பொழுது கோட்டை அவளின் வம்சத்தை அழிக்காமல் விடமாட்டாள்.. என்னையும் அவளை காப்பாற்ற விடமாட்டாள். இப்பொழுது அவர்களையும் காணவில்லை...
கோவில் கதவையும் இவ்ளோ நேரம் அடைத்து வைத்திருந்தாள்... என்ன தான் அவள் செய்ய போகிறாளோ தெரியவில்லை என்று யோசித்துக் கொண்டு இருந்தான்..
கூடவே மீண்டும் ஒரு முடிவு எடுத்தான் கெளதம் கோட்டை விஷயத்தில் தலையிடவே கூடாது என்று... அவள் சித்தம் எதுவோ அதுவே நடக்கட்டும் என்று எண்ணி அவனின் வேலையை பார்க்க கிளம்பினான்...
அவர்கள் எல்லாரும் கிளம்பிய சிறிது நேரத்தில் சடசடவென பெரும் சத்தம் கேட்கவும் எல்லாரும் வெளியில் வந்து பார்த்தனர், கௌதமும் என்ன இப்படி பயங்கரமா சத்தம் கேட்கிறது என்ற யோசனையுடன் வெளியில் வந்தான். அப்பொழுதுஅந்த ஊரில்1௦௦ வருடங்களுக்கு முன் கோட்டைத்தாய் கூறி கட்டிய கோட்டை மதில் இடது பக்கமாக உள்ள மதில் சுவர் இடிந்து அதன் கற்கள் சரிந்து விழுந்து கொண்டு இருந்தது.....
கோட்டைத்தாய் கதவுகள் எப்படி திறந்துக் கொண்டது??கோட்டை மதில் சுவர் ஏன் விழுந்தது? இதனால் ஊரில் அடுத்து என்ன நடக்கும்? கோட்டை அந்த பெட்டி விட்டு வெளியில் வந்து விட்டாளா?? இனி மைத்ரேயிக்கு ஆபத்து இல்லையா?? மீண்டும் கௌதமை மைத்ரேயி சந்திப்பாளா?? இப்படி பல கேள்விகளுடன் நானும் உங்களுடன்...
உயிர் எடுப்பாள்...
எல்லாரும் குளித்து நெற்றி நிறைய திருநீரு பூசிக் கொண்டு நின்றிருந்தனர்.. இதில் அந்த பூசாரி வேற வந்து கெளதம் நெத்தியில் ஒரு பட்டையை போட்டு விட்டு சென்றார்... அது மட்டும் இல்லாமல் அவனின் அழகான வழு வழு கன்னத்தில் இரு புறமும் சந்தனம் பூசி மேலும் அவனை கடுப்பாகிட்டு அவர் பாட்டுக்கு சென்றார்... இதில் கடுப்பான கெளதம் அவரை பார்த்து முறைக்கவும், அவனின் கார்ட்ஸ் இவனை பார்த்து சிரித்தனர்.
Gowtham hahaha????da machan ??????