வெண்பா கூறிய வார்த்தைகளை உள் வாங்கிக் கொள்ள ஆதித்யாவிற்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் திடீரென்று சத்தம் போட்டு சிரிக்கத் தொடங்கினான்.
அவனைப் புரியாத பார்வை பார்த்த வெண்பா "இப்போ நான் என்ன சொல்லிட்டனு இப்படி சிரிக்குறீங்க?" என்று சற்று கோபமாக கேட்டாள்.
"ஸாரி ஸாரி வெண்பா. சீரியஸ்லி நீ சொன்னத கேட்டு எனக்கு சிரிப்பு வந்துடுச்சு. என்னாச்சு வெண்பா உனக்கு? இன்னைக்கு ஏப்ரல் 1 கூட இல்லையே நீ என்ன ஏமாத்தனும்னு நினைச்சாலும்" என்று கூறி மேலும் ஆதித்யா சிரிக்கத் தொடங்க
"ஸ்டாப் இட் ஆதித்யா. எல்லாரும் நம்மள தான் பார்க்குறாங்க" என்று வெண்பா கூற சுற்றி பார்த்தவன் எல்லோரும் அவர்களையே பார்த்து கொண்டிருப்பதை பார்த்தவன் சிரிப்பதை நிறுத்தினான்.
"சரி இங்க வா" என்று அவளை அழைத்து சென்று அருகில் இருந்த பெஞ்சில் அமர சொன்னவன் அவள் எதிரில் அமர்ந்து கொண்டான்.
"வெண்பா வாட் ஹெப்பன்ட் டூ யூ? எனிதிங் ராங்?" என ஆதித்யா கேட்கவும் "நான் என்ன சொல்றனு உங்களுக்கு புரியலயா? இல்ல புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்குறீங்களா ?" என சற்று கவலையுடன் கேட்டாள் வெண்பா.
"வெண்பா நீ இன்னும் சின்ன குழந்தையாவே இருக்க. உனக்கு இன்னும் மெச்சூரிட்டி வரணும். என்ன உனக்கு ஜஸ்ட் வன் இயர்க்கு குறைவாக தான் தெரியும். அதுக்குள்ள லவ்....நாட் பாசிபிள்" என ஆதித்யா கூறவும்
"ஏன் லவ் வர முடியாது. பார்த்து ஒரு செகன்ட்ல கூட லவ் வர முடியும். நான் உங்கள பெர்ஸ்ட் டைம் பார்த்தப்போவே ஐ பீல் சம்திங் டிபரன்ட். உங்க கூட நான் பேசி பழகுனது கொஞ்ச காலமா இருந்தாலும் நீங்க எப்போவோ என் மனசுக்குள்ள வந்துட்டீங்க. அது மட்டுமில்ல...." என மேலும் தொடரப் போனவளை "வன் மினிட்... வன் மினிட்" என இடை நிறுத்தினான் ஆதித்யா.
"இங்க பாரு வெண்பா. உனக்கு வந்திருக்குறது லவ் இல்ல ஜஸ்ட் அட்ரக்ஷன்" எனக் கூறிய ஆதித்யாவை அதிர்ச்சியாக பார்த்த வெண்பா "வாட் அட்ரக்ஷனா???" என கேட்கவும் "வெயிட் வெயிட் நான் பர்ஸ்ட் புல்லா சொல்லி முடிச்சுக்குறன்" என்றான் ஆதித்யா.
"சரி சொல்லுங்க" என்று வெண்பா உள்ளிருந்த கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கூறினாள்.
"நான் லண்டன்ல இருந்த டைம் நிறைய பேர் ப்ரபோஸ் பண்ணிருக்காங்க. பட் எனக்கு யார் மேலயும் அந்த பீல் வரல. இன்பாக்ட் உன் மேல கூட அந்த பீல் வரல. பட் அட்ராக்ஸன் எல்லார் மேலயும் வரும். உன் மேல எனக்கு அட்ராக்ஸன் வந்துச்சு கவியோட நிச்சயதார்த்த பங்சன் அன்னைக்கு. பட் அத நான் அன்னைக்கே மறந்துட்டன் ஆனா நீ உனக்கு வந்த அட்ராக்ஸன லவ்னு நினைச்சு இவ்வளவு நாளா உன்னையே கன்பியுஸ் பண்ணிட்டு இருந்துருக்க. நீ படிச்சு நல்ல பொசிஸன்க்கு வரணும். கொஞ்ச நாள் கழிச்சு நீ இதப் பத்தி யோசிச்சுப் பார்த்தா உனக்கே சிரிப்பா இருக்கும். இப்போ என் மேல அட்ராக்ஷன் வந்த மாதிரி என்ன விட பெட்டரா வந்தா அவங்க மேல கூட உனக்கு அட்ராக்ஷன் வரலாம். இதப் போய் யாராச்சும் லவ்னு சொல்லுவாங்களா?" என்று ஆதித்யா பேசிக் கொண்டே போக "ஸ்டாப் இட்" என்று கத்தினாள் வெண்பா.
கோபத்தினால் அவளது முகமும், கண்களும் சிவக்க அவன் முன் எல்லையில்லா கோபத்தோடு நின்றிருந்தாள் வெண்பா.
"உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? ஒரு பொண்ணு அவளா முன் வந்து அவ மனசுல பட்டத ஓபனா பேசுனா அது தப்பா? லாஸ்டா என்ன சொன்னிங்க? வேற ஒருத்தர பார்த்தா அவர் மேலயும் எனக்கு அட்ராக்ஷன் வரும் அப்படித்தானே? ஏன் இதுக்கு முதல் உங்கள விட அழகா யாரயும் நான் சந்திச்சது இல்லனா நினைச்சுட்டீங்க? உங்க வெளித் தோற்றத்தப் பார்த்து நான் இந்த முடிவுக்கு வரல. உங்களோட பழகுன இந்த கொஞ்ச நாள் நான் அவ்வளவு ஸ்பெஷலா பீல் பண்ணன். வாழ்க்கை பூரா உங்க கூட வாழனும்னு ஆசைப்பட்டேன். ஆனா நீங்க ஒரு செக்கன்ட்ல உங்க மேல வைச்சிருந்த லவ்வ அசிங்கப்படுத்திட்டீங்க. இந்த செக்கன் நான் யோசிக்குறன் ஏன்டா உங்கள என் லைப்ல மீட் பண்ணுணனு?" என்று மூச்சு விடாமல் அவனிடம் தன் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள் வெண்பா.
"நீங்க என்னப் பிடிக்கலனு ஒரு வார்த்தைல சொல்லிருந்தாக் கூட உங்க மனசு மாறும்னு நினைச்சு வெயிட் பண்ணிருப்பன். ஆனா எப்போ நீங்க என்ன இவ்வளவு சீப்பா பேசிட்டீங்களோ உங்கள பார்க்கவே பிடிக்கல. இனி உங்கள என் லைப்ல தவறுதலாக கூட மீட் பண்ணிடக் கூடாது" என்று மனம் நிறைந்த வலியுடன் கூறி விட்டு வெண்பா அவனை நிமிர்ந்தும் பார்க்காது செல்ல முயல
"வெண்பா ஒரு நிமிஷம்" என்று தடுத்தது ஆதித்யாவின் குரல்.
"நீ எப்படி வேணா எடுத்துக்கோ. பட் யூ ஆர் ஆல்வேஸ் மை பிரண்ட். அடுத்த வாரம் எனக்கு நிச்சயதார்த்தம். எங்க அப்பாவோட பிரண்டோட டாட்டரதான் பிக்ஸ் பண்ணிருக்காங்க. அததான் அம்மா போன் பண்ணி சொல்லிட்டு இருந்தாங்க" என்று கூறினான் ஆதித்யா.
ஏற்கனவே அவன் கூறிய வார்த்தைகள் அவள் மனதை வாள் கொண்டு அறுத்துக் கொண்டிருக்க இப்போது கூறிய வார்த்தைகள் மொத்தமாய் அவளை நிலைகுலையச் செய்தது.
ஏற்கனவே பதட்டத்தினால் அவள் உடல் நடுங்கிக் கொண்டு இருக்க மேலும் கண்களை இருட்டிக் கொண்டு வர சிறிது தள்ளாடினாள் வெண்பா.
விழப் போவது போல இருந்த வெண்பாவைப் பிடிக்க ஆதித்யா நெருங்கி வர அவனை கை காட்டி தடுத்து நிறுத்தியவள் "என்ன பார்த்துக்க எனக்கு தெரியும். ஆல் த பெஸ்ட் டூ யுவர் மேரிட் லைப்" என்று அவன் பக்கம் மறந்தும் கூட திரும்பி பார்க்காது சென்றாள் வெண்பா.
வெண்பா செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவன் மனதில் ஏதோ ஓர் இனம் புரியாத உணர்வு.
ஆனால் அதைப் பற்றி அவன் மேலும் சிந்திக்காது ஏனைய விடயங்களில் தன் கவனத்தை செலுத்தினான்.
ஆதித்யாவிடம் கோபமாக பேசி விட்டு வந்தாலும் அவள் மனம் முழுவதும் அவன் கூறிய வார்த்தைகளே அவள் நெஞ்சை குத்திக் காயப்படுத்திக் கொண்டு இருந்தது.
அவள் கண்களில் கண்ணீரோ இப்போது வந்து விடுவேன் என்ற நிலையில் இருக்க கோபத்தோடும், ஆற்றாமையோடும் வந்த வெண்பா ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்ய அதுவும் ஸ்டார்ட் ஆக மாட்டேன் என்று அவள் பொறுமையை சோதித்தது.
"சே" என்று சலிப்புடன் ஸ்கூட்டரை உதைத்தவள் மீண்டும் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்ய இம்முறை வண்டி அவள் கோபத்தை அதிகரிக்காமல் ஸ்டார்ட் ஆனது.
மீண்டும் மீண்டும் அவன் கூறிய வார்த்தைகள் அவள் காதில் கேட்டுக் கொண்டே இருக்க அவளை மீறி அவள் கண்ணீர் அருவியாய் வழிந்து கொண்டிருந்தது.
இப்படி அழுது கொண்டே சென்றாள் மஞ்சுளா கேட்கும் கேள்விகளை சமாளிக்க முடியாது என நினைத்தவள் வண்டியை பார்க் அருகில் நிறுத்தியவள் அங்கிருந்த பெஞ்சில் சென்று அமர்ந்தாள்.
அப்போது தான் அவளுடைய கைப்பையில் ஆதித்யாவிற்காக வாங்கிய பரிசு இருப்பதை கவனித்தவள் அதை நடுங்கும் கரங்களால் எடுக்க சென்றவளுக்கு கண்ணீர் உடைப்பெடுக்க தன் முகத்தை இரு கைகளாலும் மூடிக் கொண்டு தேற்றுவார் யாருமின்றி அழுது கொண்டிருந்தாள் வெண்பா.
அழுது கொண்டிருந்தவள் தோளில் யாரோ தட்டவும் முகம் மேலிருந்த கையை விலக்கி முகம் நிமிர்ந்து பார்த்தாள் வெண்பா.....
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் திடீரென்று சத்தம் போட்டு சிரிக்கத் தொடங்கினான்.
அவனைப் புரியாத பார்வை பார்த்த வெண்பா "இப்போ நான் என்ன சொல்லிட்டனு இப்படி சிரிக்குறீங்க?" என்று சற்று கோபமாக கேட்டாள்.
"ஸாரி ஸாரி வெண்பா. சீரியஸ்லி நீ சொன்னத கேட்டு எனக்கு சிரிப்பு வந்துடுச்சு. என்னாச்சு வெண்பா உனக்கு? இன்னைக்கு ஏப்ரல் 1 கூட இல்லையே நீ என்ன ஏமாத்தனும்னு நினைச்சாலும்" என்று கூறி மேலும் ஆதித்யா சிரிக்கத் தொடங்க
"ஸ்டாப் இட் ஆதித்யா. எல்லாரும் நம்மள தான் பார்க்குறாங்க" என்று வெண்பா கூற சுற்றி பார்த்தவன் எல்லோரும் அவர்களையே பார்த்து கொண்டிருப்பதை பார்த்தவன் சிரிப்பதை நிறுத்தினான்.
"சரி இங்க வா" என்று அவளை அழைத்து சென்று அருகில் இருந்த பெஞ்சில் அமர சொன்னவன் அவள் எதிரில் அமர்ந்து கொண்டான்.
"வெண்பா வாட் ஹெப்பன்ட் டூ யூ? எனிதிங் ராங்?" என ஆதித்யா கேட்கவும் "நான் என்ன சொல்றனு உங்களுக்கு புரியலயா? இல்ல புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்குறீங்களா ?" என சற்று கவலையுடன் கேட்டாள் வெண்பா.
"வெண்பா நீ இன்னும் சின்ன குழந்தையாவே இருக்க. உனக்கு இன்னும் மெச்சூரிட்டி வரணும். என்ன உனக்கு ஜஸ்ட் வன் இயர்க்கு குறைவாக தான் தெரியும். அதுக்குள்ள லவ்....நாட் பாசிபிள்" என ஆதித்யா கூறவும்
"ஏன் லவ் வர முடியாது. பார்த்து ஒரு செகன்ட்ல கூட லவ் வர முடியும். நான் உங்கள பெர்ஸ்ட் டைம் பார்த்தப்போவே ஐ பீல் சம்திங் டிபரன்ட். உங்க கூட நான் பேசி பழகுனது கொஞ்ச காலமா இருந்தாலும் நீங்க எப்போவோ என் மனசுக்குள்ள வந்துட்டீங்க. அது மட்டுமில்ல...." என மேலும் தொடரப் போனவளை "வன் மினிட்... வன் மினிட்" என இடை நிறுத்தினான் ஆதித்யா.
"இங்க பாரு வெண்பா. உனக்கு வந்திருக்குறது லவ் இல்ல ஜஸ்ட் அட்ரக்ஷன்" எனக் கூறிய ஆதித்யாவை அதிர்ச்சியாக பார்த்த வெண்பா "வாட் அட்ரக்ஷனா???" என கேட்கவும் "வெயிட் வெயிட் நான் பர்ஸ்ட் புல்லா சொல்லி முடிச்சுக்குறன்" என்றான் ஆதித்யா.
"சரி சொல்லுங்க" என்று வெண்பா உள்ளிருந்த கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கூறினாள்.
"நான் லண்டன்ல இருந்த டைம் நிறைய பேர் ப்ரபோஸ் பண்ணிருக்காங்க. பட் எனக்கு யார் மேலயும் அந்த பீல் வரல. இன்பாக்ட் உன் மேல கூட அந்த பீல் வரல. பட் அட்ராக்ஸன் எல்லார் மேலயும் வரும். உன் மேல எனக்கு அட்ராக்ஸன் வந்துச்சு கவியோட நிச்சயதார்த்த பங்சன் அன்னைக்கு. பட் அத நான் அன்னைக்கே மறந்துட்டன் ஆனா நீ உனக்கு வந்த அட்ராக்ஸன லவ்னு நினைச்சு இவ்வளவு நாளா உன்னையே கன்பியுஸ் பண்ணிட்டு இருந்துருக்க. நீ படிச்சு நல்ல பொசிஸன்க்கு வரணும். கொஞ்ச நாள் கழிச்சு நீ இதப் பத்தி யோசிச்சுப் பார்த்தா உனக்கே சிரிப்பா இருக்கும். இப்போ என் மேல அட்ராக்ஷன் வந்த மாதிரி என்ன விட பெட்டரா வந்தா அவங்க மேல கூட உனக்கு அட்ராக்ஷன் வரலாம். இதப் போய் யாராச்சும் லவ்னு சொல்லுவாங்களா?" என்று ஆதித்யா பேசிக் கொண்டே போக "ஸ்டாப் இட்" என்று கத்தினாள் வெண்பா.
கோபத்தினால் அவளது முகமும், கண்களும் சிவக்க அவன் முன் எல்லையில்லா கோபத்தோடு நின்றிருந்தாள் வெண்பா.
"உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? ஒரு பொண்ணு அவளா முன் வந்து அவ மனசுல பட்டத ஓபனா பேசுனா அது தப்பா? லாஸ்டா என்ன சொன்னிங்க? வேற ஒருத்தர பார்த்தா அவர் மேலயும் எனக்கு அட்ராக்ஷன் வரும் அப்படித்தானே? ஏன் இதுக்கு முதல் உங்கள விட அழகா யாரயும் நான் சந்திச்சது இல்லனா நினைச்சுட்டீங்க? உங்க வெளித் தோற்றத்தப் பார்த்து நான் இந்த முடிவுக்கு வரல. உங்களோட பழகுன இந்த கொஞ்ச நாள் நான் அவ்வளவு ஸ்பெஷலா பீல் பண்ணன். வாழ்க்கை பூரா உங்க கூட வாழனும்னு ஆசைப்பட்டேன். ஆனா நீங்க ஒரு செக்கன்ட்ல உங்க மேல வைச்சிருந்த லவ்வ அசிங்கப்படுத்திட்டீங்க. இந்த செக்கன் நான் யோசிக்குறன் ஏன்டா உங்கள என் லைப்ல மீட் பண்ணுணனு?" என்று மூச்சு விடாமல் அவனிடம் தன் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள் வெண்பா.
"நீங்க என்னப் பிடிக்கலனு ஒரு வார்த்தைல சொல்லிருந்தாக் கூட உங்க மனசு மாறும்னு நினைச்சு வெயிட் பண்ணிருப்பன். ஆனா எப்போ நீங்க என்ன இவ்வளவு சீப்பா பேசிட்டீங்களோ உங்கள பார்க்கவே பிடிக்கல. இனி உங்கள என் லைப்ல தவறுதலாக கூட மீட் பண்ணிடக் கூடாது" என்று மனம் நிறைந்த வலியுடன் கூறி விட்டு வெண்பா அவனை நிமிர்ந்தும் பார்க்காது செல்ல முயல
"வெண்பா ஒரு நிமிஷம்" என்று தடுத்தது ஆதித்யாவின் குரல்.
"நீ எப்படி வேணா எடுத்துக்கோ. பட் யூ ஆர் ஆல்வேஸ் மை பிரண்ட். அடுத்த வாரம் எனக்கு நிச்சயதார்த்தம். எங்க அப்பாவோட பிரண்டோட டாட்டரதான் பிக்ஸ் பண்ணிருக்காங்க. அததான் அம்மா போன் பண்ணி சொல்லிட்டு இருந்தாங்க" என்று கூறினான் ஆதித்யா.
ஏற்கனவே அவன் கூறிய வார்த்தைகள் அவள் மனதை வாள் கொண்டு அறுத்துக் கொண்டிருக்க இப்போது கூறிய வார்த்தைகள் மொத்தமாய் அவளை நிலைகுலையச் செய்தது.
ஏற்கனவே பதட்டத்தினால் அவள் உடல் நடுங்கிக் கொண்டு இருக்க மேலும் கண்களை இருட்டிக் கொண்டு வர சிறிது தள்ளாடினாள் வெண்பா.
விழப் போவது போல இருந்த வெண்பாவைப் பிடிக்க ஆதித்யா நெருங்கி வர அவனை கை காட்டி தடுத்து நிறுத்தியவள் "என்ன பார்த்துக்க எனக்கு தெரியும். ஆல் த பெஸ்ட் டூ யுவர் மேரிட் லைப்" என்று அவன் பக்கம் மறந்தும் கூட திரும்பி பார்க்காது சென்றாள் வெண்பா.
வெண்பா செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவன் மனதில் ஏதோ ஓர் இனம் புரியாத உணர்வு.
ஆனால் அதைப் பற்றி அவன் மேலும் சிந்திக்காது ஏனைய விடயங்களில் தன் கவனத்தை செலுத்தினான்.
ஆதித்யாவிடம் கோபமாக பேசி விட்டு வந்தாலும் அவள் மனம் முழுவதும் அவன் கூறிய வார்த்தைகளே அவள் நெஞ்சை குத்திக் காயப்படுத்திக் கொண்டு இருந்தது.
அவள் கண்களில் கண்ணீரோ இப்போது வந்து விடுவேன் என்ற நிலையில் இருக்க கோபத்தோடும், ஆற்றாமையோடும் வந்த வெண்பா ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்ய அதுவும் ஸ்டார்ட் ஆக மாட்டேன் என்று அவள் பொறுமையை சோதித்தது.
"சே" என்று சலிப்புடன் ஸ்கூட்டரை உதைத்தவள் மீண்டும் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்ய இம்முறை வண்டி அவள் கோபத்தை அதிகரிக்காமல் ஸ்டார்ட் ஆனது.
மீண்டும் மீண்டும் அவன் கூறிய வார்த்தைகள் அவள் காதில் கேட்டுக் கொண்டே இருக்க அவளை மீறி அவள் கண்ணீர் அருவியாய் வழிந்து கொண்டிருந்தது.
இப்படி அழுது கொண்டே சென்றாள் மஞ்சுளா கேட்கும் கேள்விகளை சமாளிக்க முடியாது என நினைத்தவள் வண்டியை பார்க் அருகில் நிறுத்தியவள் அங்கிருந்த பெஞ்சில் சென்று அமர்ந்தாள்.
அப்போது தான் அவளுடைய கைப்பையில் ஆதித்யாவிற்காக வாங்கிய பரிசு இருப்பதை கவனித்தவள் அதை நடுங்கும் கரங்களால் எடுக்க சென்றவளுக்கு கண்ணீர் உடைப்பெடுக்க தன் முகத்தை இரு கைகளாலும் மூடிக் கொண்டு தேற்றுவார் யாருமின்றி அழுது கொண்டிருந்தாள் வெண்பா.
அழுது கொண்டிருந்தவள் தோளில் யாரோ தட்டவும் முகம் மேலிருந்த கையை விலக்கி முகம் நிமிர்ந்து பார்த்தாள் வெண்பா.....