இன்று ஆதித்யாவின் நிச்சயதார்த்தம்.
நினைக்கும் போதே வெண்பாவின் மனமெல்லாம் கனமாக இருந்தது.
என்னதான் அவள் வெளியில் தைரியமாக காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் மொத்தமாக நொறுங்கிப் போய் இருந்தாள்.
இன்று ஞாயிற்றுக்கிழமை வேறு காலேஜும் லீவ் என்ன செய்யலாம் என்று பால்கனியில் நின்று யோசித்துக் கொண்டிருந்தாள் வெண்பா.
"வெண்பா!! வெண்பா!!" என அழைத்தவாறு வந்த மஞ்சுளா அறையில் அவளைக் காணாது பால்கனிக்கு செல்ல அங்கு நின்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் வெண்பா.
"இங்கே என்ன பண்ணிட்டுருக்க? பங்க்சனுக்கு போக நீ இன்னும் ரெடி ஆகலயா? டைம் ஆகுதுலே" என்று மஞ்சுளா கூறவும்
"ப்ச்..நான் எங்கேயும் வரலமா. நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க" என்று வெண்பா சலிப்பாக கூறினாள்.
"என்ன நீ வரலயா?? ஏன் வரல?ஆதித்யா உங்க எல்லாருக்கும் பிரண்ட்னு மித்ரா,ஸ்வேதாலாம் சொன்னாங்களே? மித்ரா, ஸ்வேதா மாதிரி ஆதித்யாவும் உன் பிரண்ட் தானே? அப்புறம் ஏன் வர மாட்டனு சொல்ற? மித்ரா,ஸ்வேதா கூட ஏதும் சண்டையா? நேற்று காலேஜ் போயிட்டு நல்லா தானே வந்த ஏதும் பிரச்சினை நடந்த மாதிரி தெரியலயே. ஏன் வர மாட்ட?" என மஞ்சுளா கேள்விகளாக கேட்டார்.
"ஐயோ!! அம்மா ஏன் இவ்வளவு கேள்வி கேட்குற. நான் வரலமா ப்ளீஸ்" என வெண்பா கெஞ்சலாக கூறவும்
"அதெல்லாம் இல்ல நீ ரெடியாகிட்டு வர்ற அவ்வளவு தான். டிரஸ் எடுத்து மேஜை மேல வைச்சிருக்கன். சீக்கிரம் ரெடி ஆகிட்டு வா" எனக் கூறி விட்டு சென்றார் மஞ்சுளா.
"இந்த அம்மா வேற என் சிட்டுவேஷன் புரிஞ்சுக்காம. எல்லாம் எனக்கு சதி பண்ற மாதிரியே நடக்குதே" என புலம்பிக் கொண்டே வந்த வெண்பா மேஜை மீது இருந்த ஆடையை பார்த்து விட்டு "அம்மா!!!!!!!!!" என கத்தினாள்.
"ஏன்டீ!!! இப்படி வீடே அதிர்ற மாதிரி கத்துற?" என்று கேட்டவாறே வந்த மஞ்சுளாவை பார்த்து
"என்னம்மா டிரஸ் எடுத்து வைச்சிருக்க?" என இடுப்பில் கை வைத்து முறைத்தவாறு கேட்டாள் வெண்பா.
"ஏன்டீ இந்த டிரஸ்க்கு என்ன குறை? கலர் சரியில்லையா ?" என கேட்டவாறே மேஜை மேல் இருந்த ஆடையை எடுத்து பார்த்தார்.
"கலர் சரியில்லைனு நான் சொன்னனா? சாரி எடுத்து வைச்சிருக்கியேமா. காலங்காத்தாலேயே இப்படி கடுப்பேத்துறியேமா?" என வெண்பா கூறவும் சிரித்த மஞ்சுளா
"இதுக்கு தான் இந்த சத்தம் போட்டியா? ஸ்வேதா நிச்சயதார்த்தம் அப்போ சாரி தானே கட்டுன. இப்போவும் சாரி தான் கட்டுவேனு நினைச்சேன்" எனக் கூறினார் மஞ்சுளா.
"நான் சாரி கட்டமாட்டேன்" என வெண்பா கோபம் காட்டிக் கொண்டு நிற்க "விளையாட இப்போ டைம் இல்ல வெண்பா. கீழே அப்பா வெயிட் பண்ணிட்டு இருக்காரு. லேட் ஆகிட்டு இருக்கு. இங்கே வா நான் கட்டி விடுறன்" என்று வெண்பா கை பிடித்து அழைத்து சென்றார் மஞ்சுளா.
விருப்பமே இன்றி தயாராகி வந்த வெண்பா நிச்சயதார்த்த வீட்டை நோக்கி பயணமானாள்.
வெண்பாவை கண்டதும் ஓடி வந்து கட்டி கொண்ட ஸ்வேதா"வாங்க ஆன்டி வாங்க அங்கிள்" என மஞ்சுளாவையும், கோபால கிருஷ்ணனையும் அழைத்தவள் வெண்பா புறம் திரும்பி
"ஏன்டீ இவ்வளவு லேட்? எவ்வளவு நேரம் வெயிட் பண்ணன் தெரியுமா? நீ இல்லாம பங்க்சன் செம போர். சரி சரி வா உள்ளே போகலாம். மித்ராவும் நானும் உனக்காக தான் வெயிட் பண்றோம். வா" என்று அவள் கை பிடித்து அழைத்து சென்றாள்.
தடதடக்கும் இதயத்தோடு வீட்டினுள் நுழைந்தாள் வெண்பா.
வெண்பாவின் கால்கள் பின்னிக் கொள்ள இதயமோ பந்தயக் குதிரை போல வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.
ஆதித்யாவைப் பார்த்து விடக்கூடாது என நினைத்தாலும் உள் மனமோ அவன் எங்காவது இருக்கிறானா? எனப் பார்க்க எண்ணியது.
சிரமப்பட்டு மனதை கட்டுக்குள் கொண்டு வந்தவள் "உன்ன அவ்வளவு அழ வைச்சு கஷ்டம் தந்தவன் பற்றி இனி யோசிக்கக் கூடாது" என முடிவெடுத்தாள்.
ஆனால் அவள் எடுக்கும் முடிவுகளுக்கோ ஆயுட்காலம் மிக குறைவு என்பதை அவளே அறிவாள்.
மித்ரா, ஸ்வேதாவுடன் பேசும் போது சாதாரணமாக இருப்பது போல் காட்டிக் கொள்ள பெரும் பாடுபட்டாள் வெண்பா.
வெண்பா வீட்டினுள் நுழைந்தது முதல் இந்த நொடி வரை அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் இரு கண்கள் பார்த்துக் கொண்டே இருந்தது.
அந்த கண்களில் தெரிந்தது பாசமா? பரிவா? ஏக்கமா? கவலையா? காதலா? என அக் கண்களின் சொந்தக்காரன் ஆதித்யாவிற்கே புரியவில்லை.
ஆதித்யாவிற்கு தன் மனதில் என்ன மாதிரியான உணர்வு ஏற்படுகிறது என்பதை அவனாலே புரிந்து கொள்ள முடியவில்லை.
வெண்பா கடைசியாக கூறி விட்டு சென்ற வார்த்தைகள் அவனை ஏதோ செய்தது.
அவனைப் பார்க்க மாட்டேன் பேச மாட்டேன் என்று வெண்பா கூறி விட்டு சென்றதும் முதலில் பெரிதாக அலட்டிக் கொள்ளாதவன் நாட்கள் செல்லச் செல்ல எதையோ இழந்தது போல உணர்ந்தான்.
ஆனால் ஒன்றில் மட்டும் உறுதியாக இருந்தான் ஆதித்யா.
தன் மனதில் வெண்பா மேல் காதல் இல்லை வெறும் நட்பு மட்டுமே உள்ளது என தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்.
நிஜத்தை அவன் உணரும் நாள் எப்போது வருமோ தெரியவில்லை.
நினைக்கும் போதே வெண்பாவின் மனமெல்லாம் கனமாக இருந்தது.
என்னதான் அவள் வெளியில் தைரியமாக காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் மொத்தமாக நொறுங்கிப் போய் இருந்தாள்.
இன்று ஞாயிற்றுக்கிழமை வேறு காலேஜும் லீவ் என்ன செய்யலாம் என்று பால்கனியில் நின்று யோசித்துக் கொண்டிருந்தாள் வெண்பா.
"வெண்பா!! வெண்பா!!" என அழைத்தவாறு வந்த மஞ்சுளா அறையில் அவளைக் காணாது பால்கனிக்கு செல்ல அங்கு நின்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் வெண்பா.
"இங்கே என்ன பண்ணிட்டுருக்க? பங்க்சனுக்கு போக நீ இன்னும் ரெடி ஆகலயா? டைம் ஆகுதுலே" என்று மஞ்சுளா கூறவும்
"ப்ச்..நான் எங்கேயும் வரலமா. நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க" என்று வெண்பா சலிப்பாக கூறினாள்.
"என்ன நீ வரலயா?? ஏன் வரல?ஆதித்யா உங்க எல்லாருக்கும் பிரண்ட்னு மித்ரா,ஸ்வேதாலாம் சொன்னாங்களே? மித்ரா, ஸ்வேதா மாதிரி ஆதித்யாவும் உன் பிரண்ட் தானே? அப்புறம் ஏன் வர மாட்டனு சொல்ற? மித்ரா,ஸ்வேதா கூட ஏதும் சண்டையா? நேற்று காலேஜ் போயிட்டு நல்லா தானே வந்த ஏதும் பிரச்சினை நடந்த மாதிரி தெரியலயே. ஏன் வர மாட்ட?" என மஞ்சுளா கேள்விகளாக கேட்டார்.
"ஐயோ!! அம்மா ஏன் இவ்வளவு கேள்வி கேட்குற. நான் வரலமா ப்ளீஸ்" என வெண்பா கெஞ்சலாக கூறவும்
"அதெல்லாம் இல்ல நீ ரெடியாகிட்டு வர்ற அவ்வளவு தான். டிரஸ் எடுத்து மேஜை மேல வைச்சிருக்கன். சீக்கிரம் ரெடி ஆகிட்டு வா" எனக் கூறி விட்டு சென்றார் மஞ்சுளா.
"இந்த அம்மா வேற என் சிட்டுவேஷன் புரிஞ்சுக்காம. எல்லாம் எனக்கு சதி பண்ற மாதிரியே நடக்குதே" என புலம்பிக் கொண்டே வந்த வெண்பா மேஜை மீது இருந்த ஆடையை பார்த்து விட்டு "அம்மா!!!!!!!!!" என கத்தினாள்.
"ஏன்டீ!!! இப்படி வீடே அதிர்ற மாதிரி கத்துற?" என்று கேட்டவாறே வந்த மஞ்சுளாவை பார்த்து
"என்னம்மா டிரஸ் எடுத்து வைச்சிருக்க?" என இடுப்பில் கை வைத்து முறைத்தவாறு கேட்டாள் வெண்பா.
"ஏன்டீ இந்த டிரஸ்க்கு என்ன குறை? கலர் சரியில்லையா ?" என கேட்டவாறே மேஜை மேல் இருந்த ஆடையை எடுத்து பார்த்தார்.
"கலர் சரியில்லைனு நான் சொன்னனா? சாரி எடுத்து வைச்சிருக்கியேமா. காலங்காத்தாலேயே இப்படி கடுப்பேத்துறியேமா?" என வெண்பா கூறவும் சிரித்த மஞ்சுளா
"இதுக்கு தான் இந்த சத்தம் போட்டியா? ஸ்வேதா நிச்சயதார்த்தம் அப்போ சாரி தானே கட்டுன. இப்போவும் சாரி தான் கட்டுவேனு நினைச்சேன்" எனக் கூறினார் மஞ்சுளா.
"நான் சாரி கட்டமாட்டேன்" என வெண்பா கோபம் காட்டிக் கொண்டு நிற்க "விளையாட இப்போ டைம் இல்ல வெண்பா. கீழே அப்பா வெயிட் பண்ணிட்டு இருக்காரு. லேட் ஆகிட்டு இருக்கு. இங்கே வா நான் கட்டி விடுறன்" என்று வெண்பா கை பிடித்து அழைத்து சென்றார் மஞ்சுளா.
விருப்பமே இன்றி தயாராகி வந்த வெண்பா நிச்சயதார்த்த வீட்டை நோக்கி பயணமானாள்.
வெண்பாவை கண்டதும் ஓடி வந்து கட்டி கொண்ட ஸ்வேதா"வாங்க ஆன்டி வாங்க அங்கிள்" என மஞ்சுளாவையும், கோபால கிருஷ்ணனையும் அழைத்தவள் வெண்பா புறம் திரும்பி
"ஏன்டீ இவ்வளவு லேட்? எவ்வளவு நேரம் வெயிட் பண்ணன் தெரியுமா? நீ இல்லாம பங்க்சன் செம போர். சரி சரி வா உள்ளே போகலாம். மித்ராவும் நானும் உனக்காக தான் வெயிட் பண்றோம். வா" என்று அவள் கை பிடித்து அழைத்து சென்றாள்.
தடதடக்கும் இதயத்தோடு வீட்டினுள் நுழைந்தாள் வெண்பா.
வெண்பாவின் கால்கள் பின்னிக் கொள்ள இதயமோ பந்தயக் குதிரை போல வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.
ஆதித்யாவைப் பார்த்து விடக்கூடாது என நினைத்தாலும் உள் மனமோ அவன் எங்காவது இருக்கிறானா? எனப் பார்க்க எண்ணியது.
சிரமப்பட்டு மனதை கட்டுக்குள் கொண்டு வந்தவள் "உன்ன அவ்வளவு அழ வைச்சு கஷ்டம் தந்தவன் பற்றி இனி யோசிக்கக் கூடாது" என முடிவெடுத்தாள்.
ஆனால் அவள் எடுக்கும் முடிவுகளுக்கோ ஆயுட்காலம் மிக குறைவு என்பதை அவளே அறிவாள்.
மித்ரா, ஸ்வேதாவுடன் பேசும் போது சாதாரணமாக இருப்பது போல் காட்டிக் கொள்ள பெரும் பாடுபட்டாள் வெண்பா.
வெண்பா வீட்டினுள் நுழைந்தது முதல் இந்த நொடி வரை அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் இரு கண்கள் பார்த்துக் கொண்டே இருந்தது.
அந்த கண்களில் தெரிந்தது பாசமா? பரிவா? ஏக்கமா? கவலையா? காதலா? என அக் கண்களின் சொந்தக்காரன் ஆதித்யாவிற்கே புரியவில்லை.
ஆதித்யாவிற்கு தன் மனதில் என்ன மாதிரியான உணர்வு ஏற்படுகிறது என்பதை அவனாலே புரிந்து கொள்ள முடியவில்லை.
வெண்பா கடைசியாக கூறி விட்டு சென்ற வார்த்தைகள் அவனை ஏதோ செய்தது.
அவனைப் பார்க்க மாட்டேன் பேச மாட்டேன் என்று வெண்பா கூறி விட்டு சென்றதும் முதலில் பெரிதாக அலட்டிக் கொள்ளாதவன் நாட்கள் செல்லச் செல்ல எதையோ இழந்தது போல உணர்ந்தான்.
ஆனால் ஒன்றில் மட்டும் உறுதியாக இருந்தான் ஆதித்யா.
தன் மனதில் வெண்பா மேல் காதல் இல்லை வெறும் நட்பு மட்டுமே உள்ளது என தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்.
நிஜத்தை அவன் உணரும் நாள் எப்போது வருமோ தெரியவில்லை.