"என்ன வெண்பா இது? உன்னோட ஹஸ்பன்ட் கல்யாணத்துக்கு அப்புறம் பெர்ஸ்ட் டைம் உன்கிட்ட பேச வந்துக்குறன். இப்படி முறைச்சு பார்க்குறியே! நான் பாவம் இல்லையா?" என ஆதித்யா சிரித்துக் கொண்டே கேட்கவும் வெண்பாவின் கோபம் கூடிக்கொண்டே போனது.
"சரி நீ தான் பேச மாட்ட. நானாச்சும் பேசுறன். உள்ளே போய் பேசலாம் வா" என்று விட்டு ஆதித்யா அறைக்குள் நுழைய பார்க்க வழியை மறித்துக் கொண்டு நின்றாள் வெண்பா.
"நான் உங்க கிட்ட எதுவும் பேசுறதா இல்ல. நீங்க போகலாம்" என வேறெங்கோ பார்த்து கொண்டு வெண்பா கூற அவள் பார்த்து கொண்டு இருந்த இடத்தை திரும்பி பார்த்து விட்டு
"அங்கே யாரைப் பார்த்து பேசுற? உன் பிரண்ட்ஸ் யாராச்சும் இருக்காங்களா என்ன? ஆனா உன் பிரண்ட்ஸ் அந்தரத்துலயா இருக்காங்க? மேல பார்த்துட்டு சொல்றியே!" என ஆதித்யா சிரித்துக் கொண்டே கூற அவனை மேலும் முறைத்தாள் வெண்பா.
"இப்படி வாசல்ல நிற்க வைச்சு என்ன ரசிச்சு பார்க்கத்தான் போறேனே நல்லா பார்த்துக்கோ" என முன்னும் பின்னும் திரும்பி பல்வேறு போஸ்களில் ஆதித்யா நிற்க தலையில் அடித்துக் கொண்டு வழி விட்டாள் வெண்பா.
அறைக்குள் நுழைந்த உடன் ஆதித்யா கதவை லாக் செய்ய பதற்றமடைந்த வெண்பா "இப்போ எதுக்கு கதவ லாக் பண்ணிங்க. முதல்ல கதவ திறங்க.எதுவா இருந்தாலும் கதவை ஓபன் பண்ணி வைச்சிட்டு பை மினிட்ஸ்ல சொல்லிட்டு போங்க." என அவனை மிரட்டும் தொனியில் கூறினாள்.
"என் வைப் கிட்ட பேசும் போது எனக்கு பிரைவஸி வேணும்லே. அதோட ஹஸ்பன்ட் அன்ட் வைப் ஆயிரம் பேசுவோம். அதை மத்தவங்க கேட்டா நல்லா இருக்காதுலே"என ஆதித்யா வெண்பாவைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டு கூறினான்.
"ஸ்டாப் இட் விக்ரம். நானும் நீங்க வந்ததுல இருந்து பார்க்குறன். ஹஸ்பன்ட் ஹஸ்பன்ட்னு சொல்லி ஓவரா சீன் போடுறீங்க. தாலி கட்டிட்டீங்க தான். அதுக்காக இப்படி ஓவர் ஆக்டிங்லாம் பண்ண வேணாம். நேற்று வரைக்கும் என்ன பிடிக்காதுனு சொல்லிட்டு இருந்தீங்க. இப்போ என்னடனா அப்படி எதுவும் நடக்காத மாதிரியே வந்து பேசுறீங்க. ஏன் என் லைப்ல இப்படி விளையாடுறீங்க. அடுத்தவங்க பீலிங்ச புரிஞ்சுக்காம அவங்கள ஹேர்ட் பண்றது தானே உங்க பழக்கம். மத்தவங்க முன்னாடி நடிக்குற மாதிரி ஏன் என்கிட்டயும் நடிக்குறீங்க. இன்னொரு தரம் உங்கள நம்பி நான் ஏமாற மாட்டேன்" என வெண்பா கோபமாக கூறினாள்.
"சூப்பர்!!! சூப்பர்!!!" என ஆதித்யா கை தட்ட அவனைப் புரியாத பார்வை பார்த்தாள் வெண்பா.
"நீ ரொம்ப அழகாப் பேசுற வெண்பா. நீ பேசும் போது உன் இரண்டு கண்ணும் அவ்வளவு எக்ஸ்பிரசன்ஸ் காட்டுது. அப்படியே உன் கண்ணுல விழுந்துட்டேன். அந்த....."என்று ஆதித்யா மேலும் கூறப் போக அவனை போதும் என்பது போல கை காட்டி நிறுத்தச் சொன்னாள் வெண்பா.
"சொல்ல வந்த விஷயத்தை சொல்லிட்டு சீக்கிரம் கிளம்புங்க. உங்க வெட்டிப் பேச்சுக்கள எல்லாம்
கேட்டுட்டு இருக்க எனக்கு நேரம் இல்லை" என வெண்பா கூறவும் ஆதித்யாவின் முகம் ஒரு கணம் வாடியது.
உடனே தன்னை சரி செய்து கொண்டவன் "அதுவும் சரிதான். இனி வாழ்க்கை பூரா பேசிட்டுதானே இருக்கப் போறோம். இப்போவே எல்லாம் பேசி முடிச்சுட்டா அப்புறம் பேசுறதுக்கு விஷயம் இருக்காதுலே" என்றவனை முறைத்து பார்த்தாள் வெண்பா.
"உன்ன பார்த்தா நான் இப்படி தான் டைவர்ட் ஆயிடுறன். முக்கியமான விஷயம் பேச வந்துட்டு அதை மறந்தே போயிட்டேன். இன்னைக்கு நைட் கவி-ஸ்வேதா ரிசப்ஸன் மட்டும் தான் நடக்கும். நம்மளோட ரிசப்சன் டூ டேஸ் கழிச்சு வைச்சுக்கலாம்னு யோசிச்சிருக்கோம். ஏன்னா மேரேஜ் தான் தீடிர்னு நடந்துடுச்சு. உங்க ரிலேடிவ்ஸ் யாரையும் இன்வைட் பண்ண முடியாம போச்சு. அட்லீஸ்ட் ரிசப்சனுக்காச்சும் இன்வைட் பண்ணனும்லே அதனாலதான் டூ டேஸ்க்கு அப்புறம் வைக்க டிசைட் பண்ணன். உனக்கு ஓகே தானே?" என ஆதித்யா கேட்க
"இங்க நடக்குறது ஒவ்வொரு சம்பவமும் என்கிட்ட பெர்மிஸன் கேட்டு என்னோட சம்மதத்தை கேட்டா நடக்குது? இல்லைலே? அப்புறம் ஏன் இதை மட்டும் வந்து கேட்கனும்? உங்க விருப்பங்களை எல்லாம் என் மேல தானே போடுறீங்க. அப்படியே இதையும் போட்டுட்டு போங்க" என வேதனையுடன் கூறினாள் வெண்பா.
"வெண்பா..." என ஆதித்யா பேச ஆரம்பிக்க "விஷயத்தை சொல்லிட்டீங்களே இனி நீங்க போகலாம்" எனக் கதவை நோக்கி கை காட்டினாள் வெண்பா.
அதற்கு மேல் அங்கு நின்றால் வெண்பா கோபம் கொள்வாள் எனத் தெரிந்ததால் எதுவும் பேசாமல் சென்றான் ஆதித்யா.
என்னதான் ஆதித்யாவிடம் கோபமாக பேசினாலும் அவன் முகம் வாடி செல்வதை வெண்பாவினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவனை மனதார கணவனாக ஏற்கவும் முடியாமல் எதிரியாக நினைத்து விலகவும் முடியாமல் இரு தலைக் கொள்ளி எறும்பாய் தவித்தாள் வெண்பா.
அவளுக்கு ஒரு விடயம் தான் இப்போது வரை குழப்பமாக இருந்து கொண்டே இருக்கிறது.
நேற்று வரை வேறொரு பெண்ணுடன் திருமணம் என்று இருந்தவன் இன்று சடுதியாக நடந்த திருமணத்தை எவ்வாறு ஏற்றுக் கொண்டான்?
தன் மேல் காதலே இல்லை எனக் கூறியவன் இப்போது காதலாக கசிந்துருகி பேசுவது எப்படி?
உன்னை என் தோழியாக மட்டுமே பார்க்கிறேன் எனக் கூறியவன் இப்போது வார்த்தைக்கு வார்த்தை மனைவி எனக் கூறுகிறானே இதில் எதை நம்புவது?
எல்லாவற்றையும் யோசிக்க யோசிக்க வெண்பாவிற்கு தலையே வெடித்து விடும் போல் இருந்தது.
சாப்பிட வருமாறு மஞ்சுளா அழைக்கவும் "எனக்கு பசியில்லை. கொஞ்ச நேரம் தூங்கி எழும்பி வரேன்" என்று விட்டு கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவள் அவ்வாறே தூங்கி போனாள்.
அவள் தூங்கிய பின் ஆதித்யா அறைக்குள் வந்ததோ அவளை நேராக கட்டிலில் படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்டு அவளை ரசித்து கொண்டு இருந்ததையோ வெண்பா அறியவில்லை.
சிறு குழந்தை போல உறங்கும் தன் மனைவியின் அழகை ரசித்து பார்த்தவன் அவளருகில் இருந்த கதிரையில் அமர்ந்து தன் மனைவியின் அழகை மீண்டும் மீண்டும் ரசித்து கொண்டிருந்தான்.
"இந்த மூக்கு மேல எவ்வளவு கோவம் வருது?" என அவள் மூக்கைப் பிடித்து செல்லமாக மெதுவாக ஆட்ட வெண்பா சிறிது அசைய உடனே கையை பின்னிழுத்துக் கொண்டான்.
"நான் உன்ன ரொம்ப ஹேர்ட் பண்ணிருக்கன் வெண்பா. நீ என் மேல வைச்சிருந்த லவ்வ நான் சரியா புரிஞ்சுக்காம நடந்திருக்கன். ஒரு ஸாரி என்ற வார்த்தையால நீ பட்ட கஷ்டத்தை எல்லாம் சரியாக்கிட முடியாது. காலம் பூரா என் காதலால உன்ன சந்தோஷமா வைச்சிருப்பேன். நீ எவ்வளவு தான் என் மேல கோபப்பட்டாலும் உன் மேல எனக்கு கோபமே வராது" என்று தன் மனதில் உள்ளவற்றை எல்லாம் நன்றாக தூங்கி கொண்டிருந்த வெண்பாவிடம் கூறிக்கொண்டு இருந்தான் ஆதித்யா.
"சரி நீ தான் பேச மாட்ட. நானாச்சும் பேசுறன். உள்ளே போய் பேசலாம் வா" என்று விட்டு ஆதித்யா அறைக்குள் நுழைய பார்க்க வழியை மறித்துக் கொண்டு நின்றாள் வெண்பா.
"நான் உங்க கிட்ட எதுவும் பேசுறதா இல்ல. நீங்க போகலாம்" என வேறெங்கோ பார்த்து கொண்டு வெண்பா கூற அவள் பார்த்து கொண்டு இருந்த இடத்தை திரும்பி பார்த்து விட்டு
"அங்கே யாரைப் பார்த்து பேசுற? உன் பிரண்ட்ஸ் யாராச்சும் இருக்காங்களா என்ன? ஆனா உன் பிரண்ட்ஸ் அந்தரத்துலயா இருக்காங்க? மேல பார்த்துட்டு சொல்றியே!" என ஆதித்யா சிரித்துக் கொண்டே கூற அவனை மேலும் முறைத்தாள் வெண்பா.
"இப்படி வாசல்ல நிற்க வைச்சு என்ன ரசிச்சு பார்க்கத்தான் போறேனே நல்லா பார்த்துக்கோ" என முன்னும் பின்னும் திரும்பி பல்வேறு போஸ்களில் ஆதித்யா நிற்க தலையில் அடித்துக் கொண்டு வழி விட்டாள் வெண்பா.
அறைக்குள் நுழைந்த உடன் ஆதித்யா கதவை லாக் செய்ய பதற்றமடைந்த வெண்பா "இப்போ எதுக்கு கதவ லாக் பண்ணிங்க. முதல்ல கதவ திறங்க.எதுவா இருந்தாலும் கதவை ஓபன் பண்ணி வைச்சிட்டு பை மினிட்ஸ்ல சொல்லிட்டு போங்க." என அவனை மிரட்டும் தொனியில் கூறினாள்.
"என் வைப் கிட்ட பேசும் போது எனக்கு பிரைவஸி வேணும்லே. அதோட ஹஸ்பன்ட் அன்ட் வைப் ஆயிரம் பேசுவோம். அதை மத்தவங்க கேட்டா நல்லா இருக்காதுலே"என ஆதித்யா வெண்பாவைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டு கூறினான்.
"ஸ்டாப் இட் விக்ரம். நானும் நீங்க வந்ததுல இருந்து பார்க்குறன். ஹஸ்பன்ட் ஹஸ்பன்ட்னு சொல்லி ஓவரா சீன் போடுறீங்க. தாலி கட்டிட்டீங்க தான். அதுக்காக இப்படி ஓவர் ஆக்டிங்லாம் பண்ண வேணாம். நேற்று வரைக்கும் என்ன பிடிக்காதுனு சொல்லிட்டு இருந்தீங்க. இப்போ என்னடனா அப்படி எதுவும் நடக்காத மாதிரியே வந்து பேசுறீங்க. ஏன் என் லைப்ல இப்படி விளையாடுறீங்க. அடுத்தவங்க பீலிங்ச புரிஞ்சுக்காம அவங்கள ஹேர்ட் பண்றது தானே உங்க பழக்கம். மத்தவங்க முன்னாடி நடிக்குற மாதிரி ஏன் என்கிட்டயும் நடிக்குறீங்க. இன்னொரு தரம் உங்கள நம்பி நான் ஏமாற மாட்டேன்" என வெண்பா கோபமாக கூறினாள்.
"சூப்பர்!!! சூப்பர்!!!" என ஆதித்யா கை தட்ட அவனைப் புரியாத பார்வை பார்த்தாள் வெண்பா.
"நீ ரொம்ப அழகாப் பேசுற வெண்பா. நீ பேசும் போது உன் இரண்டு கண்ணும் அவ்வளவு எக்ஸ்பிரசன்ஸ் காட்டுது. அப்படியே உன் கண்ணுல விழுந்துட்டேன். அந்த....."என்று ஆதித்யா மேலும் கூறப் போக அவனை போதும் என்பது போல கை காட்டி நிறுத்தச் சொன்னாள் வெண்பா.
"சொல்ல வந்த விஷயத்தை சொல்லிட்டு சீக்கிரம் கிளம்புங்க. உங்க வெட்டிப் பேச்சுக்கள எல்லாம்
கேட்டுட்டு இருக்க எனக்கு நேரம் இல்லை" என வெண்பா கூறவும் ஆதித்யாவின் முகம் ஒரு கணம் வாடியது.
உடனே தன்னை சரி செய்து கொண்டவன் "அதுவும் சரிதான். இனி வாழ்க்கை பூரா பேசிட்டுதானே இருக்கப் போறோம். இப்போவே எல்லாம் பேசி முடிச்சுட்டா அப்புறம் பேசுறதுக்கு விஷயம் இருக்காதுலே" என்றவனை முறைத்து பார்த்தாள் வெண்பா.
"உன்ன பார்த்தா நான் இப்படி தான் டைவர்ட் ஆயிடுறன். முக்கியமான விஷயம் பேச வந்துட்டு அதை மறந்தே போயிட்டேன். இன்னைக்கு நைட் கவி-ஸ்வேதா ரிசப்ஸன் மட்டும் தான் நடக்கும். நம்மளோட ரிசப்சன் டூ டேஸ் கழிச்சு வைச்சுக்கலாம்னு யோசிச்சிருக்கோம். ஏன்னா மேரேஜ் தான் தீடிர்னு நடந்துடுச்சு. உங்க ரிலேடிவ்ஸ் யாரையும் இன்வைட் பண்ண முடியாம போச்சு. அட்லீஸ்ட் ரிசப்சனுக்காச்சும் இன்வைட் பண்ணனும்லே அதனாலதான் டூ டேஸ்க்கு அப்புறம் வைக்க டிசைட் பண்ணன். உனக்கு ஓகே தானே?" என ஆதித்யா கேட்க
"இங்க நடக்குறது ஒவ்வொரு சம்பவமும் என்கிட்ட பெர்மிஸன் கேட்டு என்னோட சம்மதத்தை கேட்டா நடக்குது? இல்லைலே? அப்புறம் ஏன் இதை மட்டும் வந்து கேட்கனும்? உங்க விருப்பங்களை எல்லாம் என் மேல தானே போடுறீங்க. அப்படியே இதையும் போட்டுட்டு போங்க" என வேதனையுடன் கூறினாள் வெண்பா.
"வெண்பா..." என ஆதித்யா பேச ஆரம்பிக்க "விஷயத்தை சொல்லிட்டீங்களே இனி நீங்க போகலாம்" எனக் கதவை நோக்கி கை காட்டினாள் வெண்பா.
அதற்கு மேல் அங்கு நின்றால் வெண்பா கோபம் கொள்வாள் எனத் தெரிந்ததால் எதுவும் பேசாமல் சென்றான் ஆதித்யா.
என்னதான் ஆதித்யாவிடம் கோபமாக பேசினாலும் அவன் முகம் வாடி செல்வதை வெண்பாவினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவனை மனதார கணவனாக ஏற்கவும் முடியாமல் எதிரியாக நினைத்து விலகவும் முடியாமல் இரு தலைக் கொள்ளி எறும்பாய் தவித்தாள் வெண்பா.
அவளுக்கு ஒரு விடயம் தான் இப்போது வரை குழப்பமாக இருந்து கொண்டே இருக்கிறது.
நேற்று வரை வேறொரு பெண்ணுடன் திருமணம் என்று இருந்தவன் இன்று சடுதியாக நடந்த திருமணத்தை எவ்வாறு ஏற்றுக் கொண்டான்?
தன் மேல் காதலே இல்லை எனக் கூறியவன் இப்போது காதலாக கசிந்துருகி பேசுவது எப்படி?
உன்னை என் தோழியாக மட்டுமே பார்க்கிறேன் எனக் கூறியவன் இப்போது வார்த்தைக்கு வார்த்தை மனைவி எனக் கூறுகிறானே இதில் எதை நம்புவது?
எல்லாவற்றையும் யோசிக்க யோசிக்க வெண்பாவிற்கு தலையே வெடித்து விடும் போல் இருந்தது.
சாப்பிட வருமாறு மஞ்சுளா அழைக்கவும் "எனக்கு பசியில்லை. கொஞ்ச நேரம் தூங்கி எழும்பி வரேன்" என்று விட்டு கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவள் அவ்வாறே தூங்கி போனாள்.
அவள் தூங்கிய பின் ஆதித்யா அறைக்குள் வந்ததோ அவளை நேராக கட்டிலில் படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்டு அவளை ரசித்து கொண்டு இருந்ததையோ வெண்பா அறியவில்லை.
சிறு குழந்தை போல உறங்கும் தன் மனைவியின் அழகை ரசித்து பார்த்தவன் அவளருகில் இருந்த கதிரையில் அமர்ந்து தன் மனைவியின் அழகை மீண்டும் மீண்டும் ரசித்து கொண்டிருந்தான்.
"இந்த மூக்கு மேல எவ்வளவு கோவம் வருது?" என அவள் மூக்கைப் பிடித்து செல்லமாக மெதுவாக ஆட்ட வெண்பா சிறிது அசைய உடனே கையை பின்னிழுத்துக் கொண்டான்.
"நான் உன்ன ரொம்ப ஹேர்ட் பண்ணிருக்கன் வெண்பா. நீ என் மேல வைச்சிருந்த லவ்வ நான் சரியா புரிஞ்சுக்காம நடந்திருக்கன். ஒரு ஸாரி என்ற வார்த்தையால நீ பட்ட கஷ்டத்தை எல்லாம் சரியாக்கிட முடியாது. காலம் பூரா என் காதலால உன்ன சந்தோஷமா வைச்சிருப்பேன். நீ எவ்வளவு தான் என் மேல கோபப்பட்டாலும் உன் மேல எனக்கு கோபமே வராது" என்று தன் மனதில் உள்ளவற்றை எல்லாம் நன்றாக தூங்கி கொண்டிருந்த வெண்பாவிடம் கூறிக்கொண்டு இருந்தான் ஆதித்யா.