தன்னை நோக்கி வெண்பா வருவதைப் பார்த்ததும் ஆதித்யா ஒரு புறம் சந்தோஷம் அடைந்தாலும் மறுபுறம் சிறிது அசசம் கொண்டான்.
"ஐயோ!!!! இவ எதுக்கு நம்மளையே பார்த்துட்டு வரா? ஒரு வேளை எல்லாருக்கும் முன்னாடி வைச்சு அடிக்கப் போறாளோ?" என யோசித்தவன்
"சேச்சே!! வெண்பா அப்படி எல்லாம் பண்ண மாட்டா. நான் சும்மா தானே அவளைப் பார்த்தேன். அதுல தப்பு எதுவும் இல்லையே" என தனக்குள் தைரியம் கூறிக் கொண்டாலும் அவனுக்குள் சிறிது பதட்டம் இருக்கவே செய்தது.
வெண்பா நெருங்கி வர வர ஆதித்யாவிற்கு உதறல் எடுத்தது.
தன்னை நோக்கி சிரித்தவாறே பார்த்து கொண்டு வந்த வெண்பாவைப் பார்த்து ஆதித்யாவிற்கு குழப்பமாக இருந்தாலும் அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
ஆதித்யாவும் வெண்பாவைப் பார்த்து சிரித்துக் கொண்டு "ஹாய்!!!..." என்று கூற வெண்பாவோ அவனைக் கடந்து சென்றாள்.
ஏமாற்றத்துடன் ஆதித்யா திரும்பி பார்க்க அவன் பின்னால் நின்றிருந்த நிகிலோடு வெண்பா பேசிக் கொண்டிருந்தாள்.
மனதில் சிறு ஏமாற்றம் எழுந்தாலும் தன்னை வேண்டுமென்றே வெறுப்பேற்ற வெண்பா இவ்வாறு செய்தால் என்பதை அவன் அறியாமல் இல்லை.
நிகில் அருகில் சென்ற ஆதித்யா "ஹாய்!!! நிகில். எப்படி இருக்க? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு" எனக் கேட்க
"மாமா உங்க தலையில ஏதும் அடி பட்டுச்சா என்ன? இப்போ ஒரு பத்து, பதினைந்து நிமிஷத்துக்கு முன்னாடி தானே பேசிட்டு இருந்தோம். அதற்குள்ள மறந்து போச்சா?" என நிகில் ஆச்சரியமாக கேட்டான்.
வெண்பா முன்னால் அவமானப் பட்டு விடக்கூடாது என்பதற்காக உடனே தன்னை சமாளித்து கொண்டவன் "இந்த டிரஸ் உனக்கு ரொம்ப மேட்சிங்கா இருக்கு நிகில். அதுவும் இந்த கலர் சான்ஸே இல்லை" என்று வெண்பாவை பார்த்து கொண்டே கூறினான் ஆதித்யா.
"மாமா இதெல்லாம் ரொம்ப ஓவர். நல்லா பஞ்சு மிட்டாய் கலர்ல டிரஸ் எடுத்து தந்திருக்காங்க எங்க அம்மா. இந்த டிரஸோட கலரப் பார்த்துமா நல்லா இருக்குதுனு சொல்றீங்க?" என்று நிகில் தலையில் அடித்துக் கொண்டான்.
"சரி சரி ரொம்ப தட்டாதே. உள்ளே இருக்குற மண்ணெல்லாம் கொட்டிட போகுது" என்று ஆதித்யா நிகிலை கேலி செய்து கொண்டிருக்க வெண்பாவோ தனக்கும் அவர்கள் இருவருக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
நிகிலோடு பேசுவதும் நொடிக்கொரு தடவை வெண்பாவைப் பார்ப்பதுமாக ஆதித்யா நிற்க இதை கண்டு கொண்ட நிகில் மெதுவாக ஆதித்யா அறியா வண்ணம் அவ்விடத்தை விட்டு நழுவி கொண்டான்.
வெண்பாவை பார்ப்பதில் மும்முரமாக இருந்த ஆதித்யாவோ நிகில் சென்றதை கவனிக்கவில்லை.
ஆதித்யா தனியாக நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவனருகில் வந்த மகேஷ் "என்ன ஆதி? இப்போ தனியா பேசுறதுக்கெல்லாம் ஸ்டார்ட் பண்ணிட்டீங்களா?" என்று கேட்க அப்போது தான் நிகிலைத் தேடினான் ஆதித்யா.
அவன் அங்கு இல்லாததை கண்டவன் "பாவிப்பயலே!! இப்படி பண்ணிட்டியேடா" என்று வாய்க்குள்ளே முணுமுணுத்துக் கொண்டவன் மகேஷைப் பார்த்து சமாளிப்பாக சிரித்தான்.
"சரி சரி நான் வெளியே யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். பயப்படாதே" என்று மகேஷ் கூறவும்
"தெய்வமே!!! நீ சொல்ல மாட்டேனு சொல்லிட்டு தான் ஊர் பூரா சொல்லிட்டு திரிவ. ஆள விட்றா சாமி" என ஆதித்யா பயப்படுவது போல் கூறவும் மகேஷ் சிரித்துக் கொண்டான்.
வெண்பா அருகில் வந்த மித்ரா "தனியா இங்க என்ன பண்ணிட்டு இருக்க? வா ஸ்வேதா கூட போட்டோ எடுத்துக்கலாம்" என்று அழைத்தவள் ஆதித்யாவின் புறம் திரும்பி "அண்ணா நீங்களும் வாங்கண்ணா" என்று அழைத்தாள்.
வெண்பா வேண்டாம் என்று மித்ராவிற்கு சைகை செய்ததை மித்ரா கவனிக்காமல் முன்னே செல்ல ஆதித்யா அதை கண்டு விட்டான்.
வெண்பா அருகில் சென்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு "என் பக்கத்தில் நிற்க கூட உனக்கு பிடிக்கலையா வெண்பா?" என்று கேட்ட ஆதித்யாவின் குரலில் அத்தனை வேதனை.
அவன் வேதனை நிரம்பிய குரலைக் கேட்க மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும் எதுவும் நடவாதது போல வெண்பா மேடையை நோக்கி சென்றாள்.
அவள் பின்னே ஆதித்யாவும், மகேஷும் மேடை நோக்கி சென்றனர்.
கவியரசன் அருகில் ஆதித்யா மற்றும் மகேஷ் நிற்க ஸ்வேதாவின் அருகில் வெண்பாவும், மித்ராவும் நின்றனர்.
போட்டோகிராபர் அருகில் வந்த நிகில் அவரின் காதில் ஏதோ கூற அவரும் சரியென்று நிகிலைப் பார்த்து சொல்வதை கண்டு கொண்ட வெண்பா "இந்த நிகில் ஏதோ எட்டப்பன் வேலை பார்க்குறான் போல. இவன் நடந்துக்குற விதமே டவுட்டா இருக்கு. ஏதாச்சும் ஏடா கூடமா நடக்கட்டும். அப்போ கவனிச்சுக்குறன்" என்று மனதினுள் நிகிலை அர்சித்துக் கொண்டிருந்தாள்.
கவியரசனை அழைத்த போட்டோகிராபர் "சார் உங்க தம்பிக்கும் இன்னைக்கு தானே மேரேஜ் ஆச்சு. ஸோ அவங்களும் ஜோடியாக நின்று போட்டோ எடுத்தா நல்லா இருக்கும்னு தம்பி சொல்றாரு. அப்படியே பண்ணிடலாமா?" என்று கேட்க கவியரசனும் சரி என்று கூறி விட்டு சென்றான்.
"என்ன சொன்னாரு போட்டோகிராபர்?" என்று ஸ்வேதா கேட்க
"அது....அது.....ஆஹ்..... வெண்பா நிற்கிற சைட்ல கொஞ்சம் பிரைட்டா லைட் இருக்குறதனால அவ பேஸ்க்கு போகஸ் சரியா வரலயாம். அதனால வெண்பாவ அந்த சைட் மாற சொன்னாரு" என்று கவியரசன் தட்டு தடுமாறி வாய்க்கு வந்த காரணங்களை எல்லாம் சேர்த்து கூறி முடித்தான்.
"சரிண்ணா நானும் மித்ராவும் அந்த சைட் மாறுறோம். அவங்க இரண்டு பேரும் இந்த சைட் வரட்டும்" என்று விட்டு வெண்பா மாறப்போக
"அப்படி இல்லை வெண்பா. உனக்கு மட்டும் தான் அந்த சைட் அப்படி இருக்காம். மித்ராவிற்கு இல்லை"என்று கூற வெண்பா இது நிகிலின் வேலை எனப் புரிந்து கொண்டாள்.
"பரவாயில்லை நான் அப்புறம் போட்டோ எடுத்துக்கிறேன்" என்று வெண்பா மேடையை விட்டு இறங்கப் போக "மேடம் போட்டோ எடுத்துட்டே போங்க. நிறைய பேர் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க" என்று போட்டோகிராபர் கூறவும்
"முதல்ல உன்ன கொல்லனும். அந்த எருமை நிகில் சொல்றத கேட்டு இப்படி பண்ணுறியா? இந்த ரிசப்சன் முடிந்து போறதுக்கு முதல் உன் கேமராவையும், தலையையும் உடைக்கலனா பாரு" என வாய்க்குள் முணுமுணுத்தவாறே போட்டோகிராபரைத் திட்டிக் கொண்டிருந்தாள் வெண்பா.
இது தான் சந்தர்ப்பம் என்று நினைத்த மகேஷும் "ஆமாம் சிஸ்டர் எல்லாரும் வெயிட் பண்றாங்க பாருங்க. நான் அந்த சைட் மாறி நிற்குறேன். நீங்க இந்த சைட் நில்லுங்க. எனக்கு ஒரு ப்ராபளமும் இல்லை" என்றவாறு மித்ராவின் பக்கம் போய் நின்று கொண்டான்.
"இவன் யாருடா புது கோமாளி" என்று மனதினுள் நினைத்தவாறே ஆதித்யாவின் பக்கம் சென்று நின்றாள் வெண்பா.
தன்னருகில் நின்ற மகேஷைப் பார்த்த மித்ரா "இது அந்த ஒட்டடைகுச்சியோட பிரண்ட் ஆச்சே. இந்த லூசு ஏன் இப்படி ஓவர் ஆக்டிங் பண்ணுது?" என யோசிக்கையில் "மேடம் கொஞ்சம் ரைட் சைட் தள்ளி வாங்க" என்ற போட்டோகிராபரின் குரலில் நிமிர்ந்த மித்ரா யாரைச் சொல்கிறார் எனப் பார்த்தாள்.
தன்னை இல்லை எனப் புரிந்து கொண்ட மித்ரா மறுபுறம் பார்க்க அங்கு வெண்பாவோ
ஆதித்யாவை விட்டு ஐந்து,ஆறு அடி தள்ளி நின்று கொண்டிருந்தாள்.
"மேடம் இப்படி நின்னா எப்படி போட்டோ எடுக்கிறது? டைம் ஆகுது பாருங்க" என்று போட்டோகிராபர் அழாத குறையாக கெஞ்சி கொண்டிருந்தார்.
இரண்டு அடி ஆதித்யாவின் பக்கம் நகர்ந்தவள் "இவ்வளவு போதும். இப்போ எடுங்க" என்று கூற "சார் என்ன சார் இது?" என விட்டால் அழுது விடுவது போல் போட்டோகிராபர் கேட்கவும் நான் பார்த்து கொள்கிறேன் என்றவாறு சைகை செய்த ஆதித்யா வெண்பா எதிர் பார்க்க வண்ணம் சட்டென்று அவள் கைகளை பிடித்து இழுத்தான்.
ஆதித்யா இவ்வாறு செய்வான் என்று எதிர் பார்க்காத வெண்பாவோ தடுமாறி ஆதித்யாவின் மேல் விழப் போனாள்.
அவளை விழாதவாறு நிற்க செய்த ஆதித்யா "இப்போ சரி தானே. போட்டோவை எடுங்க" எனக் கூற வெண்பா ஆதித்யாவை விட்டு விலகி நிற்க முயன்றாள்.
ஆனால் ஆதித்யாவோ அவள் தோளில் அவன் கரத்தை வைத்து அழுத்தி பிடித்ததால் வெண்பாவால் அசைந்து கொள்ள கூட முடியாமல் போனது.
போட்டோ எடுத்து முடியும் வரை அசையாது நின்றவள் போட்டோ எடுத்து முடிந்ததும் அவசரமாக மேடையை விட்டு இறங்கினாள்.
அவள் பின்னே வந்த ஆதித்யா அவள் கைகளை பிடித்து கொள்ள "இப்போ எதுக்கு இப்படி எல்லாம் பண்ணுறீங்க??? கையை விடுங்க நான் போகணும்" என்று விட்டு ஆதித்யாவின் கைகளில் இருந்து தன் கையினை வலுக்கட்டாயமாக எடுத்துக் கொண்டாள்.
"உன்கிட்ட பேசனும். மொட்டை மாடிக்கு வா" என்று விட்டு ஆதித்யா செல்ல போக
"நான் எதுக்கு வரணும்? நான் வரமாட்டேன். நீங்க கூப்பிட்ட உடனே நான் வரணுமா? அதெல்லாம் முடியாது" என வெண்பா கூற ஆதித்யா திரும்பி அவளை பார்த்தான்.
"ஐயோ!!!! இவ எதுக்கு நம்மளையே பார்த்துட்டு வரா? ஒரு வேளை எல்லாருக்கும் முன்னாடி வைச்சு அடிக்கப் போறாளோ?" என யோசித்தவன்
"சேச்சே!! வெண்பா அப்படி எல்லாம் பண்ண மாட்டா. நான் சும்மா தானே அவளைப் பார்த்தேன். அதுல தப்பு எதுவும் இல்லையே" என தனக்குள் தைரியம் கூறிக் கொண்டாலும் அவனுக்குள் சிறிது பதட்டம் இருக்கவே செய்தது.
வெண்பா நெருங்கி வர வர ஆதித்யாவிற்கு உதறல் எடுத்தது.
தன்னை நோக்கி சிரித்தவாறே பார்த்து கொண்டு வந்த வெண்பாவைப் பார்த்து ஆதித்யாவிற்கு குழப்பமாக இருந்தாலும் அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
ஆதித்யாவும் வெண்பாவைப் பார்த்து சிரித்துக் கொண்டு "ஹாய்!!!..." என்று கூற வெண்பாவோ அவனைக் கடந்து சென்றாள்.
ஏமாற்றத்துடன் ஆதித்யா திரும்பி பார்க்க அவன் பின்னால் நின்றிருந்த நிகிலோடு வெண்பா பேசிக் கொண்டிருந்தாள்.
மனதில் சிறு ஏமாற்றம் எழுந்தாலும் தன்னை வேண்டுமென்றே வெறுப்பேற்ற வெண்பா இவ்வாறு செய்தால் என்பதை அவன் அறியாமல் இல்லை.
நிகில் அருகில் சென்ற ஆதித்யா "ஹாய்!!! நிகில். எப்படி இருக்க? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு" எனக் கேட்க
"மாமா உங்க தலையில ஏதும் அடி பட்டுச்சா என்ன? இப்போ ஒரு பத்து, பதினைந்து நிமிஷத்துக்கு முன்னாடி தானே பேசிட்டு இருந்தோம். அதற்குள்ள மறந்து போச்சா?" என நிகில் ஆச்சரியமாக கேட்டான்.
வெண்பா முன்னால் அவமானப் பட்டு விடக்கூடாது என்பதற்காக உடனே தன்னை சமாளித்து கொண்டவன் "இந்த டிரஸ் உனக்கு ரொம்ப மேட்சிங்கா இருக்கு நிகில். அதுவும் இந்த கலர் சான்ஸே இல்லை" என்று வெண்பாவை பார்த்து கொண்டே கூறினான் ஆதித்யா.
"மாமா இதெல்லாம் ரொம்ப ஓவர். நல்லா பஞ்சு மிட்டாய் கலர்ல டிரஸ் எடுத்து தந்திருக்காங்க எங்க அம்மா. இந்த டிரஸோட கலரப் பார்த்துமா நல்லா இருக்குதுனு சொல்றீங்க?" என்று நிகில் தலையில் அடித்துக் கொண்டான்.
"சரி சரி ரொம்ப தட்டாதே. உள்ளே இருக்குற மண்ணெல்லாம் கொட்டிட போகுது" என்று ஆதித்யா நிகிலை கேலி செய்து கொண்டிருக்க வெண்பாவோ தனக்கும் அவர்கள் இருவருக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
நிகிலோடு பேசுவதும் நொடிக்கொரு தடவை வெண்பாவைப் பார்ப்பதுமாக ஆதித்யா நிற்க இதை கண்டு கொண்ட நிகில் மெதுவாக ஆதித்யா அறியா வண்ணம் அவ்விடத்தை விட்டு நழுவி கொண்டான்.
வெண்பாவை பார்ப்பதில் மும்முரமாக இருந்த ஆதித்யாவோ நிகில் சென்றதை கவனிக்கவில்லை.
ஆதித்யா தனியாக நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவனருகில் வந்த மகேஷ் "என்ன ஆதி? இப்போ தனியா பேசுறதுக்கெல்லாம் ஸ்டார்ட் பண்ணிட்டீங்களா?" என்று கேட்க அப்போது தான் நிகிலைத் தேடினான் ஆதித்யா.
அவன் அங்கு இல்லாததை கண்டவன் "பாவிப்பயலே!! இப்படி பண்ணிட்டியேடா" என்று வாய்க்குள்ளே முணுமுணுத்துக் கொண்டவன் மகேஷைப் பார்த்து சமாளிப்பாக சிரித்தான்.
"சரி சரி நான் வெளியே யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். பயப்படாதே" என்று மகேஷ் கூறவும்
"தெய்வமே!!! நீ சொல்ல மாட்டேனு சொல்லிட்டு தான் ஊர் பூரா சொல்லிட்டு திரிவ. ஆள விட்றா சாமி" என ஆதித்யா பயப்படுவது போல் கூறவும் மகேஷ் சிரித்துக் கொண்டான்.
வெண்பா அருகில் வந்த மித்ரா "தனியா இங்க என்ன பண்ணிட்டு இருக்க? வா ஸ்வேதா கூட போட்டோ எடுத்துக்கலாம்" என்று அழைத்தவள் ஆதித்யாவின் புறம் திரும்பி "அண்ணா நீங்களும் வாங்கண்ணா" என்று அழைத்தாள்.
வெண்பா வேண்டாம் என்று மித்ராவிற்கு சைகை செய்ததை மித்ரா கவனிக்காமல் முன்னே செல்ல ஆதித்யா அதை கண்டு விட்டான்.
வெண்பா அருகில் சென்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு "என் பக்கத்தில் நிற்க கூட உனக்கு பிடிக்கலையா வெண்பா?" என்று கேட்ட ஆதித்யாவின் குரலில் அத்தனை வேதனை.
அவன் வேதனை நிரம்பிய குரலைக் கேட்க மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும் எதுவும் நடவாதது போல வெண்பா மேடையை நோக்கி சென்றாள்.
அவள் பின்னே ஆதித்யாவும், மகேஷும் மேடை நோக்கி சென்றனர்.
கவியரசன் அருகில் ஆதித்யா மற்றும் மகேஷ் நிற்க ஸ்வேதாவின் அருகில் வெண்பாவும், மித்ராவும் நின்றனர்.
போட்டோகிராபர் அருகில் வந்த நிகில் அவரின் காதில் ஏதோ கூற அவரும் சரியென்று நிகிலைப் பார்த்து சொல்வதை கண்டு கொண்ட வெண்பா "இந்த நிகில் ஏதோ எட்டப்பன் வேலை பார்க்குறான் போல. இவன் நடந்துக்குற விதமே டவுட்டா இருக்கு. ஏதாச்சும் ஏடா கூடமா நடக்கட்டும். அப்போ கவனிச்சுக்குறன்" என்று மனதினுள் நிகிலை அர்சித்துக் கொண்டிருந்தாள்.
கவியரசனை அழைத்த போட்டோகிராபர் "சார் உங்க தம்பிக்கும் இன்னைக்கு தானே மேரேஜ் ஆச்சு. ஸோ அவங்களும் ஜோடியாக நின்று போட்டோ எடுத்தா நல்லா இருக்கும்னு தம்பி சொல்றாரு. அப்படியே பண்ணிடலாமா?" என்று கேட்க கவியரசனும் சரி என்று கூறி விட்டு சென்றான்.
"என்ன சொன்னாரு போட்டோகிராபர்?" என்று ஸ்வேதா கேட்க
"அது....அது.....ஆஹ்..... வெண்பா நிற்கிற சைட்ல கொஞ்சம் பிரைட்டா லைட் இருக்குறதனால அவ பேஸ்க்கு போகஸ் சரியா வரலயாம். அதனால வெண்பாவ அந்த சைட் மாற சொன்னாரு" என்று கவியரசன் தட்டு தடுமாறி வாய்க்கு வந்த காரணங்களை எல்லாம் சேர்த்து கூறி முடித்தான்.
"சரிண்ணா நானும் மித்ராவும் அந்த சைட் மாறுறோம். அவங்க இரண்டு பேரும் இந்த சைட் வரட்டும்" என்று விட்டு வெண்பா மாறப்போக
"அப்படி இல்லை வெண்பா. உனக்கு மட்டும் தான் அந்த சைட் அப்படி இருக்காம். மித்ராவிற்கு இல்லை"என்று கூற வெண்பா இது நிகிலின் வேலை எனப் புரிந்து கொண்டாள்.
"பரவாயில்லை நான் அப்புறம் போட்டோ எடுத்துக்கிறேன்" என்று வெண்பா மேடையை விட்டு இறங்கப் போக "மேடம் போட்டோ எடுத்துட்டே போங்க. நிறைய பேர் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க" என்று போட்டோகிராபர் கூறவும்
"முதல்ல உன்ன கொல்லனும். அந்த எருமை நிகில் சொல்றத கேட்டு இப்படி பண்ணுறியா? இந்த ரிசப்சன் முடிந்து போறதுக்கு முதல் உன் கேமராவையும், தலையையும் உடைக்கலனா பாரு" என வாய்க்குள் முணுமுணுத்தவாறே போட்டோகிராபரைத் திட்டிக் கொண்டிருந்தாள் வெண்பா.
இது தான் சந்தர்ப்பம் என்று நினைத்த மகேஷும் "ஆமாம் சிஸ்டர் எல்லாரும் வெயிட் பண்றாங்க பாருங்க. நான் அந்த சைட் மாறி நிற்குறேன். நீங்க இந்த சைட் நில்லுங்க. எனக்கு ஒரு ப்ராபளமும் இல்லை" என்றவாறு மித்ராவின் பக்கம் போய் நின்று கொண்டான்.
"இவன் யாருடா புது கோமாளி" என்று மனதினுள் நினைத்தவாறே ஆதித்யாவின் பக்கம் சென்று நின்றாள் வெண்பா.
தன்னருகில் நின்ற மகேஷைப் பார்த்த மித்ரா "இது அந்த ஒட்டடைகுச்சியோட பிரண்ட் ஆச்சே. இந்த லூசு ஏன் இப்படி ஓவர் ஆக்டிங் பண்ணுது?" என யோசிக்கையில் "மேடம் கொஞ்சம் ரைட் சைட் தள்ளி வாங்க" என்ற போட்டோகிராபரின் குரலில் நிமிர்ந்த மித்ரா யாரைச் சொல்கிறார் எனப் பார்த்தாள்.
தன்னை இல்லை எனப் புரிந்து கொண்ட மித்ரா மறுபுறம் பார்க்க அங்கு வெண்பாவோ
ஆதித்யாவை விட்டு ஐந்து,ஆறு அடி தள்ளி நின்று கொண்டிருந்தாள்.
"மேடம் இப்படி நின்னா எப்படி போட்டோ எடுக்கிறது? டைம் ஆகுது பாருங்க" என்று போட்டோகிராபர் அழாத குறையாக கெஞ்சி கொண்டிருந்தார்.
இரண்டு அடி ஆதித்யாவின் பக்கம் நகர்ந்தவள் "இவ்வளவு போதும். இப்போ எடுங்க" என்று கூற "சார் என்ன சார் இது?" என விட்டால் அழுது விடுவது போல் போட்டோகிராபர் கேட்கவும் நான் பார்த்து கொள்கிறேன் என்றவாறு சைகை செய்த ஆதித்யா வெண்பா எதிர் பார்க்க வண்ணம் சட்டென்று அவள் கைகளை பிடித்து இழுத்தான்.
ஆதித்யா இவ்வாறு செய்வான் என்று எதிர் பார்க்காத வெண்பாவோ தடுமாறி ஆதித்யாவின் மேல் விழப் போனாள்.
அவளை விழாதவாறு நிற்க செய்த ஆதித்யா "இப்போ சரி தானே. போட்டோவை எடுங்க" எனக் கூற வெண்பா ஆதித்யாவை விட்டு விலகி நிற்க முயன்றாள்.
ஆனால் ஆதித்யாவோ அவள் தோளில் அவன் கரத்தை வைத்து அழுத்தி பிடித்ததால் வெண்பாவால் அசைந்து கொள்ள கூட முடியாமல் போனது.
போட்டோ எடுத்து முடியும் வரை அசையாது நின்றவள் போட்டோ எடுத்து முடிந்ததும் அவசரமாக மேடையை விட்டு இறங்கினாள்.
அவள் பின்னே வந்த ஆதித்யா அவள் கைகளை பிடித்து கொள்ள "இப்போ எதுக்கு இப்படி எல்லாம் பண்ணுறீங்க??? கையை விடுங்க நான் போகணும்" என்று விட்டு ஆதித்யாவின் கைகளில் இருந்து தன் கையினை வலுக்கட்டாயமாக எடுத்துக் கொண்டாள்.
"உன்கிட்ட பேசனும். மொட்டை மாடிக்கு வா" என்று விட்டு ஆதித்யா செல்ல போக
"நான் எதுக்கு வரணும்? நான் வரமாட்டேன். நீங்க கூப்பிட்ட உடனே நான் வரணுமா? அதெல்லாம் முடியாது" என வெண்பா கூற ஆதித்யா திரும்பி அவளை பார்த்தான்.