சென்ற udக்கு லைக், கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி!!! நன்றி!!
ஆதித்யாவை அங்கு எதிர்பார்க்காத வெண்பா அதிசயித்து போய் நிற்க ஆதித்யாவோ வெகு நாட்களுக்குப் பிறகு நேருக்கு நேராக வெண்பாவைப் பார்த்த மகிழ்ச்சியில் இருந்தான்.
"கம் இன்" என்ற வெங்கட்ராமனின் அழைப்பில் நடப்புக்கு வந்தவள் அவர்களுக்கு முன் போய் அமர்ந்து கொண்டாள்.
வெங்கட்ராமன் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் எவ்வித பதட்டமோ, படபடப்போ இன்றி பதிலளித்தவள் ஆதித்யாவை மறந்தும் கூட திரும்பி பார்க்கவில்லை.
ஆனால் ஆதித்யாவோ வெண்பாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
எளிமையான ஆகாய நீல நிற காட்டன் புடவையில் இடை வரை நீண்டிருந்த கூந்தலை பின்னலிட்டு வந்திருந்தாள் வெண்பா.
தன் மனைவியின் அழகை கண்களால் ஆசை தீர ரசித்து கொண்டிருந்தான் ஆதித்யா.
ஆதித்யாவின் பார்வை தன் மேல் தான் இருக்கிறது என்பதை உணர்ந்த வெண்பா அவனை நேர் கொண்டு பார்க்க தயங்கினாள்.
வெங்கட்ராமன் வெண்பாவிடம் "சரிமா வெண்பா. நீங்க போய் வெளியில் வெயிட் பண்ணுங்க. ஒரு அரை மணி நேரம் கழித்து யாரு செலக்ட்னு என்னோட பி.ஏ வந்து சொல்லுவாறு" எனவும்
"ஓகே ஸார் தாங்க்ஸ்" என்று விட்டு வெண்பா வெளியேற அவளை தொடர்ந்து ஆதித்யாவும் வெளியேறி செல்ல எழுந்தான்.
"என்ன ஆதி!!! வைப்ப பிரிஞ்சு ஐந்து நிமிஷம் கூட இருக்க முடியலயோ?" என்று கேட்க
"அங்கிள் உங்களுக்கு எப்படி தெரியும்??? வெண்பா என்னோட வைப்னு. நீங்க என் மேரேஜ்க்கு கூட வரலயே?" என்று சந்தேகமாக கேட்க
"மேரேஜ்க்கு தான் என்னால வர முடியல. கேஸ் விஷயமாக மும்பை போயிட்டேன். ஆனா ரிசப்சனுக்கு வந்தேனே. நீ தான் கவனிக்கல. உன் கவனமெல்லாம் வேற எங்கேயோ இருந்துச்சே" என்று வெங்கட்ராமன் கூற
"அப்படி எல்லாம் இல்லை அங்கிள்" என்று வெட்கப்பட்டவாறே ஆதித்யா கூற
" அடடே ஆதி வெட்கமெல்லாம் படுற போல" என்று கூறி வெங்கட்ராமன் சிரித்தார்.
"அப்போ அதனாலதான் என்ன நீங்க இண்டர்வியூவ பார்க்க இருக்க சொன்னீங்களா?" என்று ஆதித்யா கேட்க
"ஆமா உன் ஆபீஸ் இருக்குறது அந்த சைட். நீ இந்த வழியா வேலைனு சொன்னதுமே புரிஞ்சுடுச்சு. நானே ஊரை விட்டு தள்ளி இவ்வளவு தூரத்துல தான் ஆபீஸ் கட்டியிருக்கேன். இந்த ஏரியால உனக்கு வேர்க்கா?? படவா" என்றவாறு ஆதித்யாவின் காதை அவர் பிடிக்க
"பரவாயில்லையே அங்கிள் நல்லா கெஸ் பண்ணுறீங்க. லாயர்னு நிருபிச்சுட்டீங்க. வெல் டன்" என்றவாறு அவர் பிடியிலிருந்து விலகி கொண்டவன்
"அப்போ நான் என் வைப் கூட போய் பேசிட்டு இருக்கேன். உங்களுக்கு தான் தெரிஞ்சுடுச்சே நான் எதற்காக வந்தேனு. இனி தெரியாத மாதிரி காட்டிக் கொள்ள தேவையில்லை தானே. பாய் அங்கிள்" என்று கூறி விட்டு வெண்பாவைக் காண விரைந்து சென்றான்.
வெங்கட்ராமன் சிரித்துக்கொண்டே அவர் வேலைகளை கவனிக்க தொடங்கினார்.
வெளியில் வந்து அமர்ந்த வெண்பா அவள் தலையை பிய்க்காத குறையாக யோசித்து கொண்டிருந்தாள்.
"விக்ரம் எப்படி இங்க?? ஏதும் வேலையா வந்துருப்பாரோ? வேலையா வந்தா இண்டர்வியூ நடக்கும் போது அங்க எப்படி வர முடியும்? அவர் லாயர் இல்லையே! எப்படி வந்துருப்பாரு? எதற்காக வந்துருப்பாரு?" என்று பலவாறாக யோசித்து கொண்டிருந்தாள் வெண்பா.
வெளியில் வந்த ஆதித்யா சேரில் அமர்ந்து கொண்டு நகத்தை கடித்தவாறு கடுமையாக யோசித்து கொண்டிருந்த வெண்பாவைப் பார்த்து சிரித்துக் கொண்டவன் அவள் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.
ஆதித்யா வந்து அருகில் அமரவும் நிமிர்ந்து பார்த்த வெண்பா "நீங்க இப்படி எங்க? எதுக்கு வந்தீங்க? ஏன் வந்தீங்க? எப்படி வந்தீங்க?" என்று கேட்க
அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யா "இவ்வளவு நீளமாக என்கூட பேச இப்போ தான் உனக்கு மனசு வந்ததா வெண்பா?" என்று கேட்க வெண்பாவிற்கு மனதினுள் சுருக்கென்று இருந்தது.
"அப்படி எல்லாம் இல்லை. இண்டர்வியூக்கு ரெடி ஆகுறதுக்காக தான் பேச டைம் கிடைக்கல. மத்தபடி வேணும்னு நான் பண்ணல" என்று வெண்பா கூறவும்
"ஓஹ்....அப்போ அம்மாகிட்ட, வீட்ல வேலை செய்ற பாட்டிகிட்ட, தோட்டகாரன் கிட்ட எல்லாம் பேச டைம் இருக்கா?" என்று ஆதித்யா கேட்க என்ன சொல்வது எனப் புரியாமல் விழித்தாள் வெண்பா.
"அதை விடு இன்னைக்கு இண்டர்வியூ போறத எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வந்துருக்க. அத கூட என்கிட்ட சொல்லத் தோணலயா உனக்கு?" என்று ஆதித்யா வருத்தமாக கேட்க வெண்பாவிற்கு பேச நா எழவில்லை.
"சொல்லு வெண்பா எதற்காக இப்படி என்ன அவாய்ட் பண்ணுற? உன் கூட நான் பேசுறது, பழகுறது உன்ன ஹேர்ட் பண்ணுதுனா சொல்லிடு. இப்படி அவாய்ட் பண்ணாத. எதுவா இருந்தாலும் ஓபனா சொல்லு. கமான் சொல்லு. என்ன உன் ப்ராப்ளம். டெல் மீ டெல் மீ ரைட் நவ்" என்று ஆதித்யா கேட்டு கொண்டே இருக்க
பொறுமை இழந்த வெண்பா "நீங்க தான் ப்ராப்ளம்" என்று சத்தம் போட்டு கத்தினாள்.
வெண்பாவின் சத்தம் கேட்டு எல்லோரும் திரும்பி பார்க்க தன்னை சுதாரித்துக் கொண்ட வெண்பா "ஸாரி ஸாரி" என்றவாறு வெளியே செல்ல அவளைத் தொடர்ந்து ஆதித்யா சென்றான்.
ஆதித்யாவை அங்கு எதிர்பார்க்காத வெண்பா அதிசயித்து போய் நிற்க ஆதித்யாவோ வெகு நாட்களுக்குப் பிறகு நேருக்கு நேராக வெண்பாவைப் பார்த்த மகிழ்ச்சியில் இருந்தான்.
"கம் இன்" என்ற வெங்கட்ராமனின் அழைப்பில் நடப்புக்கு வந்தவள் அவர்களுக்கு முன் போய் அமர்ந்து கொண்டாள்.
வெங்கட்ராமன் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் எவ்வித பதட்டமோ, படபடப்போ இன்றி பதிலளித்தவள் ஆதித்யாவை மறந்தும் கூட திரும்பி பார்க்கவில்லை.
ஆனால் ஆதித்யாவோ வெண்பாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
எளிமையான ஆகாய நீல நிற காட்டன் புடவையில் இடை வரை நீண்டிருந்த கூந்தலை பின்னலிட்டு வந்திருந்தாள் வெண்பா.
தன் மனைவியின் அழகை கண்களால் ஆசை தீர ரசித்து கொண்டிருந்தான் ஆதித்யா.
ஆதித்யாவின் பார்வை தன் மேல் தான் இருக்கிறது என்பதை உணர்ந்த வெண்பா அவனை நேர் கொண்டு பார்க்க தயங்கினாள்.
வெங்கட்ராமன் வெண்பாவிடம் "சரிமா வெண்பா. நீங்க போய் வெளியில் வெயிட் பண்ணுங்க. ஒரு அரை மணி நேரம் கழித்து யாரு செலக்ட்னு என்னோட பி.ஏ வந்து சொல்லுவாறு" எனவும்
"ஓகே ஸார் தாங்க்ஸ்" என்று விட்டு வெண்பா வெளியேற அவளை தொடர்ந்து ஆதித்யாவும் வெளியேறி செல்ல எழுந்தான்.
"என்ன ஆதி!!! வைப்ப பிரிஞ்சு ஐந்து நிமிஷம் கூட இருக்க முடியலயோ?" என்று கேட்க
"அங்கிள் உங்களுக்கு எப்படி தெரியும்??? வெண்பா என்னோட வைப்னு. நீங்க என் மேரேஜ்க்கு கூட வரலயே?" என்று சந்தேகமாக கேட்க
"மேரேஜ்க்கு தான் என்னால வர முடியல. கேஸ் விஷயமாக மும்பை போயிட்டேன். ஆனா ரிசப்சனுக்கு வந்தேனே. நீ தான் கவனிக்கல. உன் கவனமெல்லாம் வேற எங்கேயோ இருந்துச்சே" என்று வெங்கட்ராமன் கூற
"அப்படி எல்லாம் இல்லை அங்கிள்" என்று வெட்கப்பட்டவாறே ஆதித்யா கூற
" அடடே ஆதி வெட்கமெல்லாம் படுற போல" என்று கூறி வெங்கட்ராமன் சிரித்தார்.
"அப்போ அதனாலதான் என்ன நீங்க இண்டர்வியூவ பார்க்க இருக்க சொன்னீங்களா?" என்று ஆதித்யா கேட்க
"ஆமா உன் ஆபீஸ் இருக்குறது அந்த சைட். நீ இந்த வழியா வேலைனு சொன்னதுமே புரிஞ்சுடுச்சு. நானே ஊரை விட்டு தள்ளி இவ்வளவு தூரத்துல தான் ஆபீஸ் கட்டியிருக்கேன். இந்த ஏரியால உனக்கு வேர்க்கா?? படவா" என்றவாறு ஆதித்யாவின் காதை அவர் பிடிக்க
"பரவாயில்லையே அங்கிள் நல்லா கெஸ் பண்ணுறீங்க. லாயர்னு நிருபிச்சுட்டீங்க. வெல் டன்" என்றவாறு அவர் பிடியிலிருந்து விலகி கொண்டவன்
"அப்போ நான் என் வைப் கூட போய் பேசிட்டு இருக்கேன். உங்களுக்கு தான் தெரிஞ்சுடுச்சே நான் எதற்காக வந்தேனு. இனி தெரியாத மாதிரி காட்டிக் கொள்ள தேவையில்லை தானே. பாய் அங்கிள்" என்று கூறி விட்டு வெண்பாவைக் காண விரைந்து சென்றான்.
வெங்கட்ராமன் சிரித்துக்கொண்டே அவர் வேலைகளை கவனிக்க தொடங்கினார்.
வெளியில் வந்து அமர்ந்த வெண்பா அவள் தலையை பிய்க்காத குறையாக யோசித்து கொண்டிருந்தாள்.
"விக்ரம் எப்படி இங்க?? ஏதும் வேலையா வந்துருப்பாரோ? வேலையா வந்தா இண்டர்வியூ நடக்கும் போது அங்க எப்படி வர முடியும்? அவர் லாயர் இல்லையே! எப்படி வந்துருப்பாரு? எதற்காக வந்துருப்பாரு?" என்று பலவாறாக யோசித்து கொண்டிருந்தாள் வெண்பா.
வெளியில் வந்த ஆதித்யா சேரில் அமர்ந்து கொண்டு நகத்தை கடித்தவாறு கடுமையாக யோசித்து கொண்டிருந்த வெண்பாவைப் பார்த்து சிரித்துக் கொண்டவன் அவள் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.
ஆதித்யா வந்து அருகில் அமரவும் நிமிர்ந்து பார்த்த வெண்பா "நீங்க இப்படி எங்க? எதுக்கு வந்தீங்க? ஏன் வந்தீங்க? எப்படி வந்தீங்க?" என்று கேட்க
அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யா "இவ்வளவு நீளமாக என்கூட பேச இப்போ தான் உனக்கு மனசு வந்ததா வெண்பா?" என்று கேட்க வெண்பாவிற்கு மனதினுள் சுருக்கென்று இருந்தது.
"அப்படி எல்லாம் இல்லை. இண்டர்வியூக்கு ரெடி ஆகுறதுக்காக தான் பேச டைம் கிடைக்கல. மத்தபடி வேணும்னு நான் பண்ணல" என்று வெண்பா கூறவும்
"ஓஹ்....அப்போ அம்மாகிட்ட, வீட்ல வேலை செய்ற பாட்டிகிட்ட, தோட்டகாரன் கிட்ட எல்லாம் பேச டைம் இருக்கா?" என்று ஆதித்யா கேட்க என்ன சொல்வது எனப் புரியாமல் விழித்தாள் வெண்பா.
"அதை விடு இன்னைக்கு இண்டர்வியூ போறத எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வந்துருக்க. அத கூட என்கிட்ட சொல்லத் தோணலயா உனக்கு?" என்று ஆதித்யா வருத்தமாக கேட்க வெண்பாவிற்கு பேச நா எழவில்லை.
"சொல்லு வெண்பா எதற்காக இப்படி என்ன அவாய்ட் பண்ணுற? உன் கூட நான் பேசுறது, பழகுறது உன்ன ஹேர்ட் பண்ணுதுனா சொல்லிடு. இப்படி அவாய்ட் பண்ணாத. எதுவா இருந்தாலும் ஓபனா சொல்லு. கமான் சொல்லு. என்ன உன் ப்ராப்ளம். டெல் மீ டெல் மீ ரைட் நவ்" என்று ஆதித்யா கேட்டு கொண்டே இருக்க
பொறுமை இழந்த வெண்பா "நீங்க தான் ப்ராப்ளம்" என்று சத்தம் போட்டு கத்தினாள்.
வெண்பாவின் சத்தம் கேட்டு எல்லோரும் திரும்பி பார்க்க தன்னை சுதாரித்துக் கொண்ட வெண்பா "ஸாரி ஸாரி" என்றவாறு வெளியே செல்ல அவளைத் தொடர்ந்து ஆதித்யா சென்றான்.
Last edited: