சென்ற udக்கு லைக்,கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி!!!!
வீதி முழுவதும் இரத்தம் படிந்து இருப்பதை பார்த்த ஆதித்யாவின் இதயம் ஒரு கணம் நின்றது.
அருகில் நின்ற நபரிடம்
"ஆக்சிடெண்டான அந்த பொண்ணு எங்கே?" என்று ஆதித்யா கேட்க
"இப்போது ஒரு ஐந்து நிமிஷத்துக்கு முன்னாடி தான் ஆம்புலன்ஸ்ல கொண்டு போனாங்க தம்பி" என்று அந்த நபர் கூறவும்
"எந்த ஹாஸ்பிடல்??" என்று பதட்டத்துடன் வினவினான்.
"எந்த ஹாஸ்பி்டல்னு தெரியல தம்பி. அதோ அந்த பொண்ணு தான் போன் பண்ணி போலீஸையும், ஆம்புலன்ஸையும் வர வைச்சா" என்று எதிரில் கை காட்ட அந்த திசையில் பார்த்தவன் சிலையென உறைந்தான்.
வெண்பா போலீஸாருடன் நின்று எதைப் பற்றியோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தாள்.
விரைந்து அவளருகில் ஓடி சென்ற ஆதித்யா வெண்பாவின் தோள் தொட திரும்பிப் பார்த்த வெண்பா ஆதித்யாவை அங்கு காணவும் ஆச்சரியமாக அவனை பார்த்தாள்.
ஆதித்யா ஒரு கணம் கூட தாமதிக்காது தாவி அவளை அணைத்துக் கொள்ள நிலை தடுமாறி போனாள் வெண்பா.
"விக்ரம் என்ன இது?? நடு ரோட்டில் வைச்சு. எல்லாரும் பார்க்குறாங்க விடுங்க" என்று கூற
சூழ்நிலை அறிந்து விலகியவன்
"வெண்பா உனக்கு ஒண்....ஒண்ணும் ஆகலலே. நீ....நீ நல்லா இருக்க தானே?" என்று அவள் முகம், கை, கால்களை ஆராய்ந்து பார்த்தவாறு ஆதித்யா கேட்க
"எனக்கு எதுவும் ஆகலபா. நான் நல்லா தான் இருக்கேன். நான் இந்த தெருவிற்குள் நுழையும் போது தான் சரியா ஆக்சிடெண்டும் நடந்துச்சு. என் முன்னாடி தான் அந்த பொண்ணு போய்ட்டு இருந்தா. ஒரு செக்கன்ல எல்லாம் நடந்து முடிஞ்சுடுச்சு. பாவம் அந்த பொண்ணு நிறைய ப்ளட் லாஸ் ஆகிடுச்சு" என்று வருத்தத்துடன் கூறிய வெண்பா
"ஆமா நீங்க எப்படி இங்க? இந்த டைம்ல?" என்று கேட்கவும்
அது வரை இருந்த மனநிலை மாற
"உன் போன் என்னாச்சு??" என்று கோபத்துடன் வினவினான் ஆதித்யா.
"அது என் பேக்ல...." என்று விட்டு கைப்பையில் இருந்த போனை எடுத்து பார்த்தவள் தன் தலையில் தட்டி கொண்டாள்.
"போன்ல சார்ஜும் கம்மியாக இருக்கு. டவர் கூட இந்த ஏரியால இல்ல போலிருக்கே" என்று போனை பார்த்து கொண்டு வெண்பா கூற
"வண்டியை எடுத்துட்டு பாஸ்டா வீட்டுக்கு வந்து சேரு" என்று கோபமாய் ஆதித்யா கூறி விட்டு செல்ல போக
"என்கியுரி முடியாமல் எப்படி நான்..." என்று கேட்டவளை ஆதித்யா பார்த்த பார்வையில் சர்வமும் நடுங்கி போக அமைதியாக வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் வெண்பா.
சிறிது இடைவெளி விட்டு காரில் அவளைப் பின்தொடர்ந்து ஆதித்யாவும் சென்றான்.
வீட்டிற்குள் நுழைந்ததும் வாசலிலேயே காத்திருந்த கலையரசி
"எங்கப்பா போனீங்க இரண்டு பேரும் இவ்வளவு நேரமா?? உங்கள காணோம்னு எவ்வளவு பதறிப் போயிட்டோம் தெரியுமா? கவியை உங்க இரண்டு பேரையும் தேடி பார்க்க சொல்லி அனுப்பி வைச்சேன். எங்க இருந்தீங்க இரண்டு பேரும்?" என்று கேட்க
வெண்பாவை உறுத்து விழித்த ஆதித்யா
"கவிக்கு போன் பண்ணி நாங்க வந்துட்டோம்னு சொல்லி வீட்டுக்கு வரச் சொல்லிடுங்கமா" என்று விட்டு வெண்பாவின் கை பிடித்து இழுக்காத குறையாக அவளை அறைக்கு அழைத்துச் சென்றான்.
அறைக்குள் வந்து கதவை சாத்தி விட்ட பின்பும் வெண்பாவின் கைகளை ஆதித்யா விடவில்லை.
"விக்ரம் வலிக்குது. ப்ளீஸ் கையை விடுங்க. ஏன் இப்படி ரூடா பிஹேவ் பண்ணுறீங்க??" என்ற வெண்பா அவன் கைகளில் இருந்து தன் கைகளை உருவிக் கொள்ள முயன்று கொண்டிருக்க மேலும் அவள் கைகளை அழுந்தப் பிடித்தவன்
"உன்னை காணோம்னு தெருத் தெருவா அலைந்து திரிந்து தேடிட்டு இருந்தா நீ சாவகாசமாக நின்னுட்டு அங்கே பேசிட்டு நிற்குற. ஏதாவது வேலையா வெளியில் போனா இன்பார்ம் பண்ண தெரியாதா உனக்கு?? அட்லீஸ்ட் வர லேட் ஆகும்னு யார்கிட்டயாவது சொல்லனும்னு கூட உன் புத்திக்கு தெரியாதா?? இன்னும் நீ என்ன சின்ன குழந்தையா?? இங்க எத்தனை பேரு உன்ன காணாம தவிச்சுப் போயிட்டோம். கொஞ்சம் கூட யோசித்து நடக்கமாட்டியா??" என்று கோபம் கொண்ட சிங்கமாய் அவன் கர்ஜிக்க அரண்டு போனாள் வெண்பா.
காலையில் பார்த்த கடிதம், மாலையில் கண்ட கனவு, வெண்பாவைக் காணாமல் தவித்தது, ஆக்சிடெண்ட் செய்தி என எல்லாம் சேர்ந்து ஆதித்யாவை மொத்தமாய் நிலை குலைய செய்து இருந்தது.
"இப்போ என்ன ஆயிடுச்சுனு இப்படி கோபப்படுறீங்க?? வர்ற வழியில் ஒரு ஆக்சிடெண்ட் அதனால கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. அதற்கு போய் ஏன் இப்படி டென்சனாகுறீங்க??" என்று வெண்பா கேட்க
கை முஷ்டி இறுக தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு நின்ற ஆதித்யா
"இங்கே பார். எல்லா விஷயத்தையும் உன்கிட்ட விலாவாரியாக சொல்லிட்டு இருக்க முடியாது. நீ தான் புரிஞ்சு நடந்துக்கணும். இனி நீ வெளியே எங்க போனாலும் என் கிட்ட சொல்லிட்டு தான் போகணும். எங்க போற, எங்க வர எல்லா டீடெய்ல்ஸும் என்கிட்ட சொல்லணும். அதோட முக்கியமான விஷயம் இப்போ உனக்கு கிடைச்சுருக்குற இந்த கேஸை நீ விட்டுடனும்" என்று கூற
அதிர்ச்சியடைந்த வெண்பா
"வாட்???? கேஸை விட்டுடனுமா?? நான் என்ன கேஸ் டீல் பண்ணுறேனு உங்களுக்கு எப்படி தெரியும்?? இதோ பாருங்க ஒரு ஹஸ்பன்டா நான் எங்க போறன், வரேனு நீங்க தெரிஞ்சுக்குறது பரவாயில்லை. ஆனா அதுக்காக என் கேரியர்ல தலையிடுற உரிமை உங்களுக்கு இல்லை. திடீர்னு இந்த கேஸை விட்டுட சொல்லுறீங்க ஏன்???
ஓஹ்... ஒரு வேளை உங்களையும் காசு கொடுத்து வாங்கிட்டாங்களா? அது தான் அவங்களுக்கு ஜால்ரா...." என்று கூறியவளின் கன்னத்தில் இடியென இறங்கியது ஆதித்யாவின் கை.
வீதி முழுவதும் இரத்தம் படிந்து இருப்பதை பார்த்த ஆதித்யாவின் இதயம் ஒரு கணம் நின்றது.
அருகில் நின்ற நபரிடம்
"ஆக்சிடெண்டான அந்த பொண்ணு எங்கே?" என்று ஆதித்யா கேட்க
"இப்போது ஒரு ஐந்து நிமிஷத்துக்கு முன்னாடி தான் ஆம்புலன்ஸ்ல கொண்டு போனாங்க தம்பி" என்று அந்த நபர் கூறவும்
"எந்த ஹாஸ்பிடல்??" என்று பதட்டத்துடன் வினவினான்.
"எந்த ஹாஸ்பி்டல்னு தெரியல தம்பி. அதோ அந்த பொண்ணு தான் போன் பண்ணி போலீஸையும், ஆம்புலன்ஸையும் வர வைச்சா" என்று எதிரில் கை காட்ட அந்த திசையில் பார்த்தவன் சிலையென உறைந்தான்.
வெண்பா போலீஸாருடன் நின்று எதைப் பற்றியோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தாள்.
விரைந்து அவளருகில் ஓடி சென்ற ஆதித்யா வெண்பாவின் தோள் தொட திரும்பிப் பார்த்த வெண்பா ஆதித்யாவை அங்கு காணவும் ஆச்சரியமாக அவனை பார்த்தாள்.
ஆதித்யா ஒரு கணம் கூட தாமதிக்காது தாவி அவளை அணைத்துக் கொள்ள நிலை தடுமாறி போனாள் வெண்பா.
"விக்ரம் என்ன இது?? நடு ரோட்டில் வைச்சு. எல்லாரும் பார்க்குறாங்க விடுங்க" என்று கூற
சூழ்நிலை அறிந்து விலகியவன்
"வெண்பா உனக்கு ஒண்....ஒண்ணும் ஆகலலே. நீ....நீ நல்லா இருக்க தானே?" என்று அவள் முகம், கை, கால்களை ஆராய்ந்து பார்த்தவாறு ஆதித்யா கேட்க
"எனக்கு எதுவும் ஆகலபா. நான் நல்லா தான் இருக்கேன். நான் இந்த தெருவிற்குள் நுழையும் போது தான் சரியா ஆக்சிடெண்டும் நடந்துச்சு. என் முன்னாடி தான் அந்த பொண்ணு போய்ட்டு இருந்தா. ஒரு செக்கன்ல எல்லாம் நடந்து முடிஞ்சுடுச்சு. பாவம் அந்த பொண்ணு நிறைய ப்ளட் லாஸ் ஆகிடுச்சு" என்று வருத்தத்துடன் கூறிய வெண்பா
"ஆமா நீங்க எப்படி இங்க? இந்த டைம்ல?" என்று கேட்கவும்
அது வரை இருந்த மனநிலை மாற
"உன் போன் என்னாச்சு??" என்று கோபத்துடன் வினவினான் ஆதித்யா.
"அது என் பேக்ல...." என்று விட்டு கைப்பையில் இருந்த போனை எடுத்து பார்த்தவள் தன் தலையில் தட்டி கொண்டாள்.
"போன்ல சார்ஜும் கம்மியாக இருக்கு. டவர் கூட இந்த ஏரியால இல்ல போலிருக்கே" என்று போனை பார்த்து கொண்டு வெண்பா கூற
"வண்டியை எடுத்துட்டு பாஸ்டா வீட்டுக்கு வந்து சேரு" என்று கோபமாய் ஆதித்யா கூறி விட்டு செல்ல போக
"என்கியுரி முடியாமல் எப்படி நான்..." என்று கேட்டவளை ஆதித்யா பார்த்த பார்வையில் சர்வமும் நடுங்கி போக அமைதியாக வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் வெண்பா.
சிறிது இடைவெளி விட்டு காரில் அவளைப் பின்தொடர்ந்து ஆதித்யாவும் சென்றான்.
வீட்டிற்குள் நுழைந்ததும் வாசலிலேயே காத்திருந்த கலையரசி
"எங்கப்பா போனீங்க இரண்டு பேரும் இவ்வளவு நேரமா?? உங்கள காணோம்னு எவ்வளவு பதறிப் போயிட்டோம் தெரியுமா? கவியை உங்க இரண்டு பேரையும் தேடி பார்க்க சொல்லி அனுப்பி வைச்சேன். எங்க இருந்தீங்க இரண்டு பேரும்?" என்று கேட்க
வெண்பாவை உறுத்து விழித்த ஆதித்யா
"கவிக்கு போன் பண்ணி நாங்க வந்துட்டோம்னு சொல்லி வீட்டுக்கு வரச் சொல்லிடுங்கமா" என்று விட்டு வெண்பாவின் கை பிடித்து இழுக்காத குறையாக அவளை அறைக்கு அழைத்துச் சென்றான்.
அறைக்குள் வந்து கதவை சாத்தி விட்ட பின்பும் வெண்பாவின் கைகளை ஆதித்யா விடவில்லை.
"விக்ரம் வலிக்குது. ப்ளீஸ் கையை விடுங்க. ஏன் இப்படி ரூடா பிஹேவ் பண்ணுறீங்க??" என்ற வெண்பா அவன் கைகளில் இருந்து தன் கைகளை உருவிக் கொள்ள முயன்று கொண்டிருக்க மேலும் அவள் கைகளை அழுந்தப் பிடித்தவன்
"உன்னை காணோம்னு தெருத் தெருவா அலைந்து திரிந்து தேடிட்டு இருந்தா நீ சாவகாசமாக நின்னுட்டு அங்கே பேசிட்டு நிற்குற. ஏதாவது வேலையா வெளியில் போனா இன்பார்ம் பண்ண தெரியாதா உனக்கு?? அட்லீஸ்ட் வர லேட் ஆகும்னு யார்கிட்டயாவது சொல்லனும்னு கூட உன் புத்திக்கு தெரியாதா?? இன்னும் நீ என்ன சின்ன குழந்தையா?? இங்க எத்தனை பேரு உன்ன காணாம தவிச்சுப் போயிட்டோம். கொஞ்சம் கூட யோசித்து நடக்கமாட்டியா??" என்று கோபம் கொண்ட சிங்கமாய் அவன் கர்ஜிக்க அரண்டு போனாள் வெண்பா.
காலையில் பார்த்த கடிதம், மாலையில் கண்ட கனவு, வெண்பாவைக் காணாமல் தவித்தது, ஆக்சிடெண்ட் செய்தி என எல்லாம் சேர்ந்து ஆதித்யாவை மொத்தமாய் நிலை குலைய செய்து இருந்தது.
"இப்போ என்ன ஆயிடுச்சுனு இப்படி கோபப்படுறீங்க?? வர்ற வழியில் ஒரு ஆக்சிடெண்ட் அதனால கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. அதற்கு போய் ஏன் இப்படி டென்சனாகுறீங்க??" என்று வெண்பா கேட்க
கை முஷ்டி இறுக தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு நின்ற ஆதித்யா
"இங்கே பார். எல்லா விஷயத்தையும் உன்கிட்ட விலாவாரியாக சொல்லிட்டு இருக்க முடியாது. நீ தான் புரிஞ்சு நடந்துக்கணும். இனி நீ வெளியே எங்க போனாலும் என் கிட்ட சொல்லிட்டு தான் போகணும். எங்க போற, எங்க வர எல்லா டீடெய்ல்ஸும் என்கிட்ட சொல்லணும். அதோட முக்கியமான விஷயம் இப்போ உனக்கு கிடைச்சுருக்குற இந்த கேஸை நீ விட்டுடனும்" என்று கூற
அதிர்ச்சியடைந்த வெண்பா
"வாட்???? கேஸை விட்டுடனுமா?? நான் என்ன கேஸ் டீல் பண்ணுறேனு உங்களுக்கு எப்படி தெரியும்?? இதோ பாருங்க ஒரு ஹஸ்பன்டா நான் எங்க போறன், வரேனு நீங்க தெரிஞ்சுக்குறது பரவாயில்லை. ஆனா அதுக்காக என் கேரியர்ல தலையிடுற உரிமை உங்களுக்கு இல்லை. திடீர்னு இந்த கேஸை விட்டுட சொல்லுறீங்க ஏன்???
ஓஹ்... ஒரு வேளை உங்களையும் காசு கொடுத்து வாங்கிட்டாங்களா? அது தான் அவங்களுக்கு ஜால்ரா...." என்று கூறியவளின் கன்னத்தில் இடியென இறங்கியது ஆதித்யாவின் கை.