thanks saranya akka..Arumaiyana thodakkam..
thanks saranya akka..Arumaiyana thodakkam..
thanks rathi sis..Nice
தேங்க்ஸ் லக்ஷ்மி சிஸ்டர்Nice start sis
thanks sisterStarting UD very nice...... Anabu Ezhil cute name....
நன்றி சிஸ்...nice start
Vry nice sis, enaku எழில் Peru rmbaa pidikumm sis azhagana starting ???அவளின் குரலில் வரப்பில் தண்ணிக் கட்டிக்கொண்டிருந்த சுந்தரம் நிமிர்ந்து மகளைப் பார்த்தார். பள்ளி சீருடையில் நின்றிருந்த மகளைப் பார்த்தவர், “சாப்பிட்டியா எழில்விழி..?!” என்று கேட்டார்.
“ம்ம் சாப்பிடேன் அப்பா.. நான் கிளம்புகிறேன்..” என்று சொல்ல, வரப்பில் இருந்து வெளியே வந்தவர், “இந்த பாப்பா..பஸ்சிற்கு காசு.. பார்த்து சூதானமாக போய்ட்டு வரணும்..” என்று சொல்லி மகளை அனுப்பி வைத்தார். அவரின் முகத்தில் மகளைப் பார்த்து ஒரு அழகிய புன்னகை அழகாக மலர்ந்தது.
சுந்தரம் – பார்வதி இருவரும் பெயரில் மட்டும் பொருத்தம் இல்லை அவர்களின் மனமும் பொருத்தமே. இருவரும் அதிகம் பேசிக்கொள்ளாமலேயே மனதில் நினைப்பதைப் பகிரும் ஒரு ஜோடி. இவர்களுக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் இருக்கிறது.. அதில் விவசாயம் செய்து குடும்பத்தை நடத்துகின்றனர். அவர்களுக்கு மொத்தம் இரண்டு பிள்ளைகள்.
முதல் மகன் முத்துக்குமார் வயது 19. அவனுக்கு அதிகமாக படிப்பு ஏறவில்லை.. அதனால் அவன் தந்தையுடன் வேலை செய்கிறான்.. அவனுக்கு குடும்பத்தின் மீது எல்லாம் பாசம் கிடையாது.. அவனிற்கு தேவையானவற்றிற்கு மட்டும் தாய், தந்தையைத் தேடுவான்.. அவன் காரியம் முடிந்தால் அடுத்து அவனின் வேலையைப் பார்க்க போய்விடுவான். சரியான சுயநலவாதி தான் மட்டும் தனக்கு மட்டும் என்று யோசிக்கும் குணம் உடையவன்..
இரண்டாவது எழில்விழி. அவள் இருக்கும் அழகிற்கு அவள் இந்த வீட்டில் பிறக்க வேண்டிய பெண்ணே அல்ல என்று பெற்றோர்கள் அதிகமுறை நினைத்தது உண்டு. அவளின் அமைதி அதற்கு எடுத்துக்காட்டு. பார்ப்பவர்களை திரும்பப் பார்க்க தூண்டும் ஒரு குத்துவிளக்கின் சுடர்விடும் தீபத்தின் அமைதியான அழகு என்றே எழிலின் அழகு என்று சொல்லலாம்.
எழில்விழி என்ற பெயருக்கு ஏற்ற அழகும் இருக்கும் அவளிடம் பலரும் கேட்கும் ஒரே கேள்வி, உன்னோட பெயரால் உனக்கு அழகா..? இல்லை உன்னால் அந்த பெயருக்கு அழகா..? என்பதே ஆகும்.
அவள் முத்துக்குமாரை விடவும் ஐந்து வருடம் சிறியவள். இப்பொழுது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பெண். இவள் யாரிடமும் அதிகம் பேசமாட்டாள். வீட்டில் உள்ள பெற்றோரிடம் மட்டும் கொஞ்சம் பேசுவாள். அவள் அமைதி எந்த அளவிற்கோ அதே அளவு அவளை ஒருவர் சீண்டினால் அவர்களுக்கு பதிலடிக் கொடுக்கும் அளவிற்கு தைரியம் மிகுந்தவள்.
ஆனால் வீட்டில் அண்ணனுக்கு மட்டும் அதிகம் பயப்படுவாள்.. அவன் பார்க்கும் ஒரு பார்வையில் எழில்விழிக்கு உள்ளே உதறல் எடுக்கும். அந்த அளவிற்கு அண்ணனைப் பார்த்தால் அவளிற்கு மிகவும் பயம்.
எட்டாம் வகுப்பு வரையில் கிராமத்தில் இருந்த பள்ளியில் படித்தவள் இப்பொழுது அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறாள்.
அவளுக்கு ஒன்பதாம் வகுப்பின் முதல் நாள் இன்று. அவள் சரியான நேரத்திற்கு பள்ளிக்குள் சென்றுவிட்டாள். அந்த பள்ளிகூடத்தில் இருபாலினரும் படிக்கின்றனர்..அவள் உள்ளே சென்றதும் சென்றதும் கொஞ்சம் மிரண்டாள்..
அந்த பள்ளிக்கூடத்தைப் பார்த்து.. பால்மஞ்சள் நிறம் கொண்ட கட்டடம்.. வெளியே வர பள்ளியின் வாயிலைத் தவிர வேறு வழிகள் இல்லை.. கேட்டை தாண்டி உள்ளே சென்றதும் இடதுபுறம் கேண்டின், இன்னும் முன்னோக்கி நகர்ந்தால் ப்ரின்ஸிபால் ரூம், அதற்கு பக்கத்திலே ஸ்டாப் ரூம், அதற்கு பக்கத்தில் கோடி மரம், நடுவே பள்ளியின் வளாகம், சதுர வடிவ கட்டிடம் இரண்டு மாடிகள், மூன்று மாடியிலும் சேர்த்தும் மொத்தம் நாற்பது வகுப்பறைகள், ஒருபக்கம் வெளியே செல்லும் முன்வாயில், இரண்டு மாடிக்கும் சேர்த்து மூன்று பக்கமும் மாடிப்படிகள், எந்த மாடியில் இருக்கும் எந்த ரூமிற்கும் இந்த மூன்று வழிகளிலும் செல்லலாம்..
அந்த கட்டிடத்தை கடந்து பின்புறம் சென்றால் அங்கே இரண்டு பிரிவுகள் ஒன்று பாத்ரூம் செல்லும் வழி இன்னொன்று நூலகம் செல்லும் வழி அதக்கும் பக்கத்தில் ஒரு கட்டிடம் அதில் இரண்டு மாடிகள் அதில் பத்து வகுப்பறைகள்.. இந்த பள்ளியில் வளாகத்தைச் சுற்றியும் மரங்கள் இருக்கும் அதுவும் வளாகத்தின் நடுவே இருக்கும் வேப்பமரம் மொத்த வளாகத்திற்கும் நிழல் கொடுக்கும்..
அவளின் வகுப்பிற்கு செல்லும் வழி தெரியாமல் மிரண்ட வண்ணம் வந்தவள், மாடிப்படியின் அருகில் இருந்த சில பெண்களைக் கேட்க, அவர்கள் இங்கே அங்கே என்று மாற்றி மாற்றி சொல்ல சம்யுக்தாவிற்கு தலையே சுற்றியது..
இருந்தும் படிகளில் ஏறிச்சென்று அங்கே எந்தப்பக்கம் செல்வது என்று புரியாமல் விழித்தவள், அங்கே பள்ளி சீருடையில் கையில் புத்தகத்துடன் நின்றிருந்த ஒருவனைப் பார்த்தாள்.
அலையலையாக கேசமும் அளவான உடல்வாகும், அடர்ந்த புருவம், பார்ப்பவர்கள் என்ன நினைக்கின்றனர் என்று சொல்லும் அளவிற்கு அவர்களை ஊடுருவும் பார்வை! கூர்மையான நாசி, செதுக்கப்பட்ட உதடுகள், அரும்பு மீசையுடன் பார்ப்பதற்கு ஆறு அடி உயரம் கொண்டவன் பார்வை கையில் இருந்த புத்தகத்தில் இருக்க அவனின் கவனமும் அதில் தான் இருந்தது. நொடியில் அவனைப் பார்வையால் அளந்தாள் எழில்விழி..!
அவனைப் பார்த்தும் எழில்விழி மனதில், ‘இவரிடம் கேட்கலாமா..? இல்ல வேண்டாமா..?’ என்று தனது மனத்திற்கு தனக்கு தானே கேள்வி எழுப்ப, அதுவரைப் படித்துக் கொண்டிருந்தவன் தன்னருகில் நிழலாட அவனே நிமிர்ந்து அவளைப் பார்த்தான்..
அவள் மனத்திற்கு ஏதோ பேசிக்கொண்டிருக்க, அவனது மனதில், ‘கொஞ்ச நேரத்திற்கு முன்னால் நான் பார்த்த அதே எழில்..’ என்று மனம் சொல்ல, ‘எதற்கு இங்கே நிற்கிறாள்..?’ என்று அவனின் மனம் கேள்வி எழுப்ப, ஒரு புருவம் உயர்த்தி அவளைக் கேள்வியாகப் பார்த்தான்.
மீண்டும் ஒருமுறை அவனது பார்வை அவளைப் பார்வையால் அளந்து முடிக்க, தன்னை யாரோ பார்க்கிறார்கள் என்று உணர்ந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க இருவரின் விழிகளும் ஒரு நொடி நேருக்கு நேர் சந்தித்து அவள் தயங்கித் தயங்கி, “இங்கே ஒன்பதாம் வகுப்பு எ செக்சன் எங்கே இருக்கிறது..” என்று கேட்டாள்..
அவள் தயக்கத்துடன் கேட்டதும், அவளைப் பார்த்தவன், “இந்த மாடிப்படியில் ஏறிச்சென்றால் வலதுபுறம் நான்காவது அறை நீ கேட்ட கிளாஸ் ரூம்..” என்று சொல்ல, சரியென்று தலையசைத்தவள்,
அவனிற்கு நன்றி சொல்லும் முன்னரே பள்ளியில் இறைவணக்க நேரத்திற்கு செல்லும் பெல் அடிக்க அவள் எதுவும் பேசாமல் அவளின் கிளாசிற்கு செல்லும் படியில் ஏறிச்செல்ல, அவளையே பார்த்தவன் முகத்தில் ஏன் என்றே அறியாமல் அரும்ப புன்னகை அவனின் கிளாஸ் ரூம் நோக்கி நடந்தான்.
அவனின் எதிரே வந்த அவனின் வகுப்பறை தோழன் பிரதாப், “என்னடா யாரோ ஒரு பொண்ணு கூட பேசியது போல தெரிந்தது..?” என்று விளையாட்டாகக் கேட்டதும்,
“ம்ம் பொண்ணுதான் கிளாஸ் ரூமிற்கு செல்ல வழிக் கேட்டாள் சொன்னேன்..” என்று அவன் சொல்ல அவனையே சந்தேகமாகப் பார்த்தவன் தோள் மேல் கைபோட்டுக் கொண்டு,
“உண்மையைச் சொன்னால் நம்பனும்.. இப்படி பார்வை எல்லாம் பார்க்க கூடாது.. வா அடுத்து நமக்கு தமிழ் கிளாஸ் இருக்கு.. வா நாம் அதைக் கவனிப்போம்..” என்று அழைத்துச் சென்றான்..
இவர்களின் சந்திப்பு அடுத்த சந்திப்பு எப்படி நிகழுமோ..? அவள் விழியில் தொலைந்தவன் கிடைப்பான அதை எழில்விழியே சொல்ல வேண்டும்..