lakshmiperumal
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 4,840
- Reaction score
- 3,628
விதி நினைத்தால் தானே ஒருவரை ஒருவர் பார்ப்பது
உண்மைதான் சிஸ்டர்..விதி நினைத்தால் தானே ஒருவரை ஒருவர் பார்ப்பது
தேங்க்ஸ் சிஸ்டர்..Nice ud tq mam
thanks priya sis..aasha ezhil meeting very nice......
?????? ada paruda namma aasha ethirparkave ila inum knjam ud ku apm than avala kadubenganu nenachn ipove kaditnga sema twist ???“அம்மா அண்ணா கையில் போனை கொடுங்க..” என்று கூறியதும் மகனிடம் போனை கொடுத்த சுமித்ரா,
“இந்த உன்னிடம் தான் பேசணுமாம்..” என்று கொடுக்க காரை சாலை ஓரத்தில் நிறுத்தியவன்,
“சொல்லு இனியா என்ன விஷயம்..?” என்றான்..
அவன் அப்படி கேட்டதும், “அண்ணா உன்னைப் பார்க்க வேண்டும் போல இருக்கிறது..” என்று சொல்லவும் அன்னையுடன் ஷாப்பிங் செய்து முடிந்த கையோடு அவர்களை வீட்டில் விட்டவன்,
“அம்மா நான் தங்கையைப் பார்த்துவிட்டு வருகிறேன்..” என்று சொல்ல, “அன்பு இப்பொழுது எப்படி முடியும்..?” என்று கேட்ட சுமித்ராவிற்கு புன்னகையைப் பதிலென கொடுத்தவன்,
“ம்ம் முடியும் அம்மா.. நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன்..” என்று சொல்ல இனியாவிற்காக எடுத்த புதுத்துணியை அவனின் கையில் கொடுத்து,
“இது இனியாவிற்கு எடுத்தது கண்ணா அவளிடம் கொடுத்துவிடு..” என்று சொல்லவும் அன்னையைப் பார்த்து சிரித்தவன்,
“ம்ம் சரிம்மா..” என்று வாங்கிக் கொண்டவனைப் பார்த்து சிரித்த சுமித்ரா, “உன்னோட தம்பிக்கு என்ன பதில் சொல்லட்டும்..?!” என்று கேட்டதும்,
“நான் தங்கையைப் பார்த்துவிட்டு வந்துவிடுவேன்.. இன்னொரு முறை இனியாவைப் பார்க்க போகும் பொழுது அவனையும் கூட்டிட்டு போகிறேன் என்று சொல்லுங்க.. அப்பாவிடமும் சொல்லிவிடுங்க..” என்று கூறியவன் தங்கையைப் பார்க்க கிளம்பி சென்னை ஏர்போர்ட் வந்தவன் திருச்சிக்கு பிளாட்டில் சென்றான்.
அங்கிருந்து காரில் சென்றவன் அயலூர் வந்ததும் தங்கள் வீட்டிற்கு செல்லும் இடம் வந்ததும், காருக்கு காசைக் கொடுத்து அனுப்பியவன், மெல்ல இறங்கித் தோப்பிற்குள் நடக்க ஆரமித்தான்..
அவனின் சிந்தனை எங்கோ இருக்க அவன் அந்த வழியை வேடிக்கைப் பார்த்தவண்ணம் வந்துக் கொண்டிருக்க, “என்னை காப்பாத்துங்க.. என்னை காப்பாத்துங்க..” என்று குரல்கேட்டு தனது பார்வையை சுழற்றினான்..
அவன் வரும் திசையில் ஓடிவந்த ஆஷா அவனைக் கடந்து சிரிப்புடன் ஓட அவளைப் பார்த்தவன், “இவள் என்ன இப்படி சிரித்துக் கொண்டே ஓடுகிறாள்..? இவளா காப்பாத்துங்க என்று குரல் கொடுத்தது..?” என்று ஆஷா சென்ற திசையைப் பார்த்து தனக்குதானே கேட்டுக்கொண்டே திரும்பியவன் மீது வந்து பலமாக மோதினாள் எழில்விழி..
அவள் இடித்ததில் கொஞ்சம் தடுமாறிய அன்பரசன் சுதார்த்து நிற்கும் முன்னே, அவரின் முகத்தைப் பார்க்காது, “நான் தான் கவனிக்காமல் வந்து உங்களை இடித்துவிட்டேன்.. என்னை மன்னித்துவிடுங்கள்..” என்று கத்திக் கொண்டே ஆஷாவைத் துரத்திக்கொண்டு சென்றுவிட்டாள் எழில்விழி..
எழில் இருந்த சந்தோஷத்தில் தான் யாரை இடித்தோம் என்பதைக் கூட கவனிக்காமல் போக அவளின் முகத்தைப் பார்க்க நினைத்தவன்,
அவள் சென்ற திசையைப் பார்த்து, “இந்த பொண்ணு ரொம்ப சந்தோசமாக இருக்கிறாள் போல அதுதான் இடித்து நின்று ஸாரி கேட்க கூட நேரம் இல்லாமல் யாரையோ துரத்திக் கொண்டு ஓடுகிறாள்..” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்ட அன்பரசன் தனது பாட்டியையும் தங்கையையும் பார்க்க தோப்பிற்குள் புகுந்து நடக்க ஆரமித்தான்..
[ஐயோ அன்பு நீ சரியான லூசு.. உன்னை இடித்துவிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடுபவள் தான் உன்னோட எழில் என்பது உனக்கே தெரியல..?! எல்லாம் காலத்தின் கொடுமை]
கொஞ்சம் தூரம் சென்றதும் அவனின் கண்ணில் அந்த கட்டப்பை படவே, ‘இது யாரோடது..’ என்று மனதில் நினைத்தவன், அதில் இருந்த துணியை பார்த்தும்,
“இது அந்த பொண்ணோட பை போல.. இங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டாள்..” என்று நினைத்தவன், அதை உடன் எடுத்துக் கொண்டு அவனின் பாட்டியின் வீட்டை நோக்கி நடக்க ஆரமித்தான்..
எதுக்கோ வாசலுக்கு வந்த இனியா அன்பரசன் வருவதைப் பார்த்து, “பாட்டி அண்ணா வந்துவிட்டான்..” என்று வீட்டிற்குள் குரலைக் கொடுத்துவிட்டு அண்ணனை நோக்கி ஓடினாள்.. இனியா தன்னை நோக்கி ஓடிவருவதைப் பார்த்து, “இன்னைக்கு என்ன எல்லோரும் ஓட்டிடே இருக்கிறீங்க..?” என்று கேட்ட அண்ணனை வேற்று கிரகவாசியைப் பார்ப்பது போல பார்த்தாள்.
“யார் ஓடியதைப் பார்த்தீங்க சார்..” என்று இடுப்பில் கையூன்றி அவனை முறைத்துப் பார்த்தாள் இனியா. அவளைப் பார்த்த
“ம்ம் இப்போதான் இந்த தோப்பில் இரண்டும் பெண்கள் ஓட்டப்பந்தயம் நடத்தினார்கள்..” என்று அவன் சொல்லவும் அவனின் முகத்தைப் பார்த்த இனியா,
“அது யாரு அண்ணா நம்ம தோப்பில் ஓட்டப்பந்தயம் வைத்தது..?” என்று கேட்டவள் அவனின் கையில் இருந்த கட்டபையைப் பார்த்துவிட்டு, “அண்ணா இந்த பை உன்னிடம்..?” என்று சந்தேகம் கேட்டாள் இனியா..
“ம்ம் வரும் பொழுது சொன்னேன் இல்லை இரண்டு பெண்கள் ஓடியதைப் பார்த்தேன் என்று அதில் இருந்த இருவரின் ஒருவரின் பைதான் என்று நினைக்கிறேன்..” என்று அவளின் கையில் கொடுக்க அப்பொழுது வெளியே வந்த ஜெயந்திம்மா
“டேய் அன்பு என்னடா தீடிரென்று வந்து நிற்கிறாய்..?” என்று கேட்டவர் அவனின் கையில் இருந்த பையைப் பார்த்து, “இதை யார் உன்னிடம் கொடுத்தது..?” என்று கேட்டதும்,
“நீங்க இருவரும் இந்த பையில் தான் கவனமாக இருக்கிறீங்க.. வரும் வழியில் கீழே கிடந்தது..அதுதான் எடுத்துட்டு வந்தேன்.. எப்படியும் இந்த பையைத் தேடி அவர்கள் இங்கே தான் வர வேண்டும்.. அப்படி வந்தாள் அவர்களிடம் கொடுத்துவிடுங்கள்..” என்று இனியா கையில் கொடுத்தவன் வீட்டிற்குள் சென்றான்..
அவன் உள்ளே செல்லவும், “பாட்டி இது எழிலுக்கு நாம் கொடுத்தது.. இதை எப்படி மறந்தாள்.. கையில் வைத்திருக்கும் பொருள் தவறியது கூட தெரியாமல் ஓடி இருக்கிறாள் என்றால் அவளுக்கு ஏதாவது பிரச்சனையா..?” என்று பாட்டியைப் பார்த்து கேட்டாள்..
“தெரியல கண்ணம்மா.. ஆனால் இந்த பையைத் தேடி அவள் வருவாள்..” என்று ஜெயந்திம்மா வீட்டிற்குள் செல்லும் முன்னரே,
“ஜெயந்திம்மா..” என்று மூச்சிரைக்க ஓடி வந்தாள் எழில்விழி.. அவளின் முகத்தைப் பார்த்த இருவருக்கும் அவளின் முகத்தில் இருந்த சந்தோசம் அவர்களுக்கு வியப்பைக் கொடுத்தது..
அவளைப் பார்த்தும் முகம் மலர்ந்த இனியா, “என்ன எழில் உனக்கு கொடுத்த புதுத்துணியைக் காணவில்லையா..?!” என்று சிரிப்புடன் கேட்டதும்,
“ம்ம் அதை இங்கேயே விட்டுட்டு போயிட்டேன் போல வீடுவரை போய்விட்டு மறுபடியும் வருகிறேன்..” என்று சொல்ல அவளின் சந்தோசம் கண்டு,
“என்னம்மா இன்னைக்கு இவ்வளவு சந்தோசமாக இருக்கிறாய்..?” என்று பாசத்துடன் கேட்டார் ஜெயந்திம்மா..
“என்னோட தோழி என்னைப் பார்க்க வந்திருக்கிறாள் ஜெயந்திம்மா.. நான் அப்புறம் வந்து நடந்ததைச் சொல்கிறேன்..” என்று இனியாவிடம் பையை வாங்கியவள் ஓடிவிட்டாள்..
அவள் சென்றதும் ஜெயந்திம்மாவைப் பார்த்த இனியா, “ஆகமொத்தம் அன்புவும் எழிலும் சந்திக்கவே இல்லை.. அண்ணா கையில் பையைப் பார்த்தும் நான் தான் கொஞ்சம் அதிகமாக எதிர்பார்த்தேன்.. கடைசியில் இரண்டும் சந்திக்கவே இல்லையா..?!” என்று ஏமாற்றத்துடன் கூறியவள் வீட்டிற்குள் சென்றாள்..
“நாம் என்னதான் அவர்களை சந்திக்க வைக்க நினைத்தாலும் அது நாம் நினைக்கும் பொழுது நடக்காது.. அது நாம் எதிர்பாராத தருணத்தில் அது தானாகவே நடக்கும்..” என்று சொல்லிவிட்டு அவளின் பின்னோடு வீட்டிற்கு நுழைந்த ஜெயந்திம்மா,
“அன்பு வீட்டில் எல்லோரும் எப்படி இருக்காங்க..” என்று கேட்டதும், “ம்ம் எல்லோரும் நல்ல இருக்காங்க பாட்டி..” என்று கூறியவன்,
“இனியா எதுக்கு அண்ணாவைப் பார்க்கணும் என்று கூறினாய்..?” என்று கேட்டான்.. அவனை அழைத்தான் காரணம் சொல்லாமல், “இந்த வாரம் ஊரில் திருவிழா.. அதுதான் உன்னைப் பார்க்கணும் என்று வர வைத்தேன்..” என்று கூறினாள்
“அம்மாவிடம் நான் சாயந்திரம் வருகிறேன் என்று சொல்லிட்டு வந்திருக்கிறேன்..” என்று சொல்ல, “நான் அம்மாவிடம் சொல்கிறேன்.. இந்த வாரம் நீ இங்குதான் இருக்கிறாய்..” என்று சொல்ல
“என்னமோ பண்ணுங்க..” என்று கூறியவன், “பாட்டி இந்தாங்க” என்று அவர்கள் கையில் ஒரு பார்சலைக் கொடுக்க, “என்ன அன்பு இது..?” என்று கேட்டார்..
“நீங்க கேட்ட நாவல் தான் எல்லாம் இருக்கு பாட்டி..” என்று கூறியவன் அவனது அறைக்கு செல்ல, இனியாவும் அவளின் அறைக்கு செல்ல ஜெயந்திம்மா அமைதியாக நடப்பதைப் பார்த்துக் கொண்டே நின்றார்..