• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholanthen Penne! - 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
அப்பொழுதுதான் ஆபீஸிற்குள் நுழைந்தவன் தனது வேலையைத் தொடர, தனது வேலை முடிந்ததும் மற்ற எதிலும் மனம் செல்லாமல் இருக்க அப்படியே சேரில் சாய்ந்து கண்மூடினான் அன்பரசன்..

எழில் வந்த நேரமோ என்னமோ வானம் திடீரென்று இருட்டி மெல்ல மழை பொழிய ஆரமிக்க, அந்த குளிர்ந்த காற்று அவளை வருடிசெல்ல, அவள் அந்த மழையிலும் மனம் தளராமல் நின்றிருந்தாள் எழில்விழி.. இயற்கையை என்றும் ரசிப்பது போல இன்றும் ரசித்தாள்..

அவளுக்காக மழைமேகங்கள் ஒன்றிணைத்து அவளுக்கு தங்களின் ஆசியையும், வாழ்த்தையும் மழையாக பொழிய அந்த குளிர்ந்த தென்றல் அவளை தீண்டிவிட்டு ஜன்னலில் வழியாக சென்று அவனின் முகத்தை வருடியதும் கண்விழித்தவன் ஜன்னலின் அருகில் சென்றான்..

அவன் பார்வை அந்த மரத்தின் அடியில் நின்றிருந்த ஒரு பெண்ணின் மீது படிய, “யார் இவள் இங்கே எதற்கு நிற்கிறாள்..?!” என்று தனக்கு தானே கேட்டவன் மணியைப் பார்க்க கடிகாரம் மாலை மணி ஆறு என்று அவனுக்கு அறிவித்தது..

“இந்த நேரத்தில் இந்த பெண் இங்கே எதற்கு நிற்கிறாள்..?” என்ற கேள்வியுடன் நிமிர்ந்தவனுக்கு காபி எடுத்து வந்தான் டீக்கடையில் வேலை செய்யும் குட்டிப்பையன்..

அவனிடம் ஜன்னலின் கதவுகள் வழியாக ஒரு பெண்ணை சுட்டிக்காட்டி, “டேய் அந்தப்பெண் எப்பொழுதில் இருந்து இங்கே நிற்கிறாள்..?” என்று கேட்டான்..

அவன் கைகாட்டிய திசையில் பார்த்த அந்த பையன், “அண்ணா அவங்க மதியம் மூன்று மணியில் இருந்து இங்கே நிற்கிறாங்க.. ஏனோ தெரியல அண்ணா அந்த அக்கா அழுத மாதிரி இருந்தது..” என்று அவன் கூற அன்புவின் பார்வை அவளின் விழிகளைத் தீண்ட அப்பொழுது கண்ணைத் துடைத்துக் கொண்டு நின்றிருந்தாள் அந்தப்பெண்..

அவள் கண்கலங்க ஒரே காரணம் சென்னையில் அவளுக்கு ஆஷாவைத் தவிர வேறு யாரையும் தெரியாது.. ‘தன்னை இங்கே வா என்று சொல்லிவிட்டு இவள் எங்கே போனாள் என்று எழிலுக்கு ஒரு பக்கம் கோபம் வந்தாலும், அவளுக்கு ஏதாவது வேலைகள் இருக்கலாம்..’ என்று தன்னைத்தானே சமாதானம் செய்துக் கொண்டு அமைதியாக நின்றிந்தாள்..

அன்பு அந்த டீக்கடைக்கார பையனிடம், “அந்த அக்காவை நான் உள்ளே வர சொல்லி சொன்னதாக சொல்லு..” என்று கூறியவன் மீண்டும் ஒருமுறை மணியைப் பார்த்துவிட்டு அவன் ஜன்னல் அருகில் நிற்க வெளியே வந்த அந்த சிறுவன்,

அவளின் அருகில் வந்து, “அக்கா உங்களை வக்கீல் அண்ணா உள்ளே கூப்பிட்டார்..” என்று சொல்ல எழில்விழியோ, “இல்ல தம்பி வேண்டாம் நான் இங்கேயே நிற்கிறேன்..” என்று கூறியதும்,

“அக்கா அந்த அண்ணனும் பெரிய வக்கீல் தான் அக்கா நீங்க பயப்படாமல் போங்க.. இந்த மழையில் மரத்தடியில் எவ்வளவு நேரம் நிற்பீங்க..?” என்று அவளை ஆபீஸ் அறைக்குள் அழைத்துச் சென்று அமர வைத்தவன் தனது வேலையைப் பார்க்க சென்றான்..

அவள் அறைக்குள் வந்ததும் அவளின் பார்வை அந்த ஆபீசை சுற்றி வந்தது.. அவனின் அறை சின்னதாக இருந்தாலும் அவன் அமைத்திருக்கும் டேபிள் அதன் மேல் சில ஃபைல்கள்.. அவன் அமர ஒரு சேரும், கிளைன்ட் வந்தால் அமர்ந்து பேச இரண்டு சேரும் அவனின் பின்னாடி அனைத்தும் சட்ட புத்தகம் அடுக்கப்பட்டு அறை மிகவும் அழகாக பராமரிக்கப்பட்டிருந்தது..

அவள் அறைக்குள் வந்ததும் அவளின் முகம் பார்த்த அன்புவிற்கு மனதில் ஒரு சிறிய சலனம்.. இதுவரை எந்த பொண்ணையும் பார்த்து அவன் மனம் சலனப்பட்டது கிடையாது..

அனால் அவளைப் பார்த்த அந்த நொடியே அவனின் மனம் சலபட்டிருப்பது அவனுக்கு புரிந்தது.. அவளின் முகம் அவனுக்கு எழிலை நினைவு படுத்த, ‘அவள் எங்கே இங்கே வரப்போகிறாள்..?’ என்று யோசிக்க, அவளைக் கூர்ந்து கவனிக்க ஆரமித்தான்..

எழில்விழியின் விழியில் தொலைந்த நாளில் இருந்து அவன் எந்த பெண்ணின் விழிகளையும் நேருக்கு நேர் பார்ப்பதே கிடையாது.. அவனின் மனம் இன்று அவன் கட்டுப்பாட்டை விட்டு வெளியே வந்து, ‘அவளின் விழிகளை ஒரு நொடி பார்..!’ என்று அன்புவிற்கு கட்டளையிட, அவளின் விழிகளைப் பார்த்தான் அன்பரசன்..

அவளின் படபடக்கும் இமை என்ற பட்டாம்பூச்சியை பதட்டத்தை வெளிபடுத்திய வண்ணம் இருந்த அவளின் கருவிழிகளைப் பார்த்தவன் கண்மூடி அவளின் விழியை கண்ணுக்குள் கொண்டுவர அவனின் நினைவுகள் பின்னோக்கி சென்று எழில்விழியைப் பார்த்த நாளில் அவனின் மனதில் வரைந்த அவளின் விழிகளின் ஓவியத்துடன் அவன் ஒப்பிட அவளின் விழிகள் அவனுக்கு அவள் யார் என்பதை உணர்த்தியது..

‘இந்த விழிகள்.. இந்த விழிகள்.. அவளின் விழிகள் தான்.. இந்த விழியில் தான் நான் என்னைத் தொலைத்தேன்..’ என்று அவன் உணர்ந்த மறுநொடியே கண்களைத் திறந்து அவளைப் பார்த்தவனின் பார்வை அவளை ஒரு உரிமையுடன் தழுவியது..

சிவப்பு நிறத்தில் பச்சை கலரில் பாடர் வைத்த காட்டன் புடவையில் எந்த ஒப்பனையும் இன்றி அழகாக இருந்தாள்.. அவளின் முடி அன்று போல இன்றும் அவளின் இடையோடு உறவாடியது.. அந்த விழிகளில் ஒரு பதட்டம் இருக்க கூர்மையான நாசி, ரோஜா இதழைப் போல சிவந்த இதழ்கள்.. எழில் அன்று போல இன்று ஒரு அழகிய கவிதை ஒன்று அவனின் முன்னே அமர்ந்திருப்பது போல உணர்ந்தான் அன்பரசன்..

அவனின் பார்வை தன்னை வட்டமிடுவதைப் பார்த்து நிமிர்ந்துப் பார்த்தவள் பார்வையால் அவனை வெட்டிவிட நினைத்தாள்.. அவனை நிமிர்ந்து பார்த்து எது பேசினாலும் கேட்டுக் கொண்டிருக்க இது அயலூர் என்று உணர்ந்தவள் அமைதியாக இருந்தாள்.

இருப்பினும் அவளின் மனதில், ‘இப்படி பார்க்கிறான் இவன் நல்லவனா..? இல்லை கெட்டவனா..?’ என்று யோசித்தவள் ஒரு நிமிடம் அவனின் முகம் பார்த்தாள்..

அன்புவின் முகம் பார்த்தும், ‘இவரை நான் எங்கையோ பார்த்திருக்கிறேன்..’ என்று தோன்றவே மூளையை கசக்கி யோசிக்க ஆரமிக்க அந்த அறை எங்கிலும் அமைதி பரவிக்கிடக்க, அவள் தன்னைப் பார்த்தும் அவளின் பார்வையின் பொருள் உணர்ந்து கொண்டான்..

“ஹலோ மேடம் என்ன யோசிக்கிறீங்க..?? இவன் நல்லவனா..? கெட்டவனா..?” என்ற நினைக்கிறீங்க..” என்று அவன் மெல்ல புன்னகைத்தவண்ணம் கேட்டதும், அவனை அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்த எழில், “இல்லை அப்படியெல்லாம் நினைக்கவில்லை..” என்று கூறினாள்..

அவள் மெதுவாகக் கூறியதைக் கேட்டவன், ‘நீ இன்னும் அந்த தயக்கத்தை விடவே இல்லையா..?!’ என்று மனதில் அவளிடம் பேசியவன்,“நீங்க யாரைப் பார்க்க வந்திருக்கீங்க..?” என்று கேட்டான் அன்பு.. அவனின் மனம் அவளைப் பார்த்ததில் இருந்து தனது இதயத்துடிப்பை எகிறச்செய்தது..

“நான் இங்கே ஜூனியராக வேலை செய்யும் ஆஷாவைப் பார்க்க வந்தேன்..” என்று சொன்னதும், அன்பு அவனின் மனதில், ‘நீதான் வந்திருப்பது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.. என்னை மட்டும் உனக்குள் வாங்கிக் கொள்ளும் உனது விழிகள் என்னை திருப்பித் தர மறுப்பதும் ஏனோ..?!’ என்று அவன் மனதில் பேச அவளின் மனம் அவளுக்கு ஏதோ ஒன்றை உணர்த்த அவனை நிமிர்ந்து பார்த்தாள்..

அவனும் அந்தநேரம் அவளை நிமிர்ந்து பார்க்க அவனின் விழிகள் அவளின் விழியுடன் ஒரு நிமிடத்திற்கும் குறையாமல் உறவாட, அவனின் விழிகளைப் பார்த்தும் அவளின் விழிகள், ‘அன்பு..’ என்று அவனின் பெயரை மனதில் உச்சரிக்க அவனை அடையாளம் கண்டுகொண்டாள்.. இருப்பினும் அதனை அவனிடம் அவள் வெளிபடுத்தவில்லை..

அவர்கள் அதிகம் பேசாவிட்டாலும் அவர்கள் மனங்கள் இரண்டும் இடைவிட்டாது பேசியது.. வெளியே மழை பொழிய அந்த குளிர்ச்சி ஜன்னல் வழியாக பயணித்து இருவருக்கும் ஒரு ஏகாந்த நிலையை ஏற்படுத்த ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க எங்கிருந்தோ கேட்ட ஒரு குருவியின் சத்தத்தில் இருவரின் பார்வையும் பிரிந்தது.. அவனும் தன்னை வெளிபடுத்தவில்லை.. அவளும் தன்னை வெளிபடுத்தவில்லை..

தான் எதற்கு சென்னை வந்தோம் என்பதை மறந்த வண்ணம் அவள் இருக்க இருவருக்கும் இடையே இருந்த அமைதியைக் கலைத்தது அன்பரசனே!

“ஆஷா ஒரு கேஸ் விஷயமாக வெளியே சென்றிருக்கிறாள்..” என்று கூறியதும், “ஓ அவள் எப்பொழுது வருவாள்..?” என்று அவனிடம் கேட்டதும், “அவள் எப்பொழுது வருவாள் என்று தெரியவில்லைங்க..” என்று கூறியவன்,

“உங்களின் பெயர்..” என்று கேட்டதும் அவள் பார்வையால் அவனை வெட்டுவது போல பார்த்தாள். அவனின் மனம், ‘இவனுக்கு என்னை தெரியவில்லையா..? இவனிடம் நான் எப்படி உண்மையைச் சொல்ல..? இவன் என்னை முழுவதும் மறந்துவிட்டான்..’ என்று மனம் வருத்தியது..

“பெயர் கேட்டதுக்கு எதுக்குங்க இப்படி முறைக்கிறீங்க..?” என்று குரலில் தனது குறும்பை வெளிபடுத்தியவன் முகத்தில் எந்த மாறுதலும் இல்லாமல் கூறியவனின் விழிகள் அவனை அவளுக்கு காட்டி கொடுக்க, ‘எல்லாவற்றிலும் விளையாட்டு..’ என்று செல்லமாக அவனை திட்டியவள்,

“எழில்விழி..” என்று கூறியதும், “ம்ம் ஆஷா உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறாள்..” என்று மட்டும் சொல்லியவன், “மதியம் சாப்பிட்டீங்களா..?” என்று கேட்டதும்,

“ம்ம் சாப்பிட்டேன்..” என்று கூறியவள் அமைதியாக அமர்ந்திருக்க அவனும் அவளைப் பார்த்த வண்ணம் அமைதியாக அமர்ந்திருந்தான்.. அவர்கள் இப்படி அமர்ந்திருக்க அப்பொழுது ஆபீஸ் உள்ளே வந்த ஆஷா,

“ஏய் எழில்விழி.. நீ எப்பொழுது வந்தாய்..” என்று கேட்டதும் அவளை முறைத்தவள் மெல்லிய குரலில், “நீ எங்கேடி போனாய்..?! நான் வந்ததில் இருந்து எத்தனை முறை உனக்கு போன் பண்ணினேன்..” என்று அவள் கோபத்தில் சொல்ல, “ஆஷா கேஸ் பற்றிய விவரம் எல்லாம் தயாரா..? இவங்க மதியத்தில் இருந்து உன்னை எதிர்பார்த்துட்டு இருக்காங்க.. நீ இப்பொழுது தான் வருகிறாய்.. மணியைப் பாரு எட்டு இப்பொழுது அவங்க எப்படி ஊருக்கு போவாங்க..” என்று கேட்டான்..

இருவரையும் சந்தேகக் கண்ணோட்டத்தில் பார்த்த ஆஷா, “அன்பு நீங்க இருவரும் அறிமுகம் ஆகவே இல்லையா..?” என்று கேட்டதும், “ம்ஹூம்..” என்றான்..

“உனக்காவது இவரை அடையாளம் தெரியுதா எழில்..?” என்று கேட்டதும், இல்லை என்று உதட்டை பிதுக்கினாள் எழில்.. இவர்கள் முகம் இரண்டும் ஆஷாவிற்கு பழக்கப்பட்ட ஒன்று என்பதால் இருவரையும் ஆராய்ந்து கொண்டு நிற்க,

அப்பொழுது உள்ளே நுழைந்த ஆதி, அவளின் அருகில் நின்றிருந்த பெண்ணைப் பார்த்து, “ஆஷா இவங்க யாரு..?” என்று கேட்டான்..

“இவள் தான் எழில்விழி.. என்னோட உயிர் தோழி..” என்று சந்தோசமாகக் கூறியவள், “எழில் இவர் அன்பரசன் என்னோட சீனியர்.. இவர் ஆதித்யா இவரும் சீனியர் படிப்பில் மட்டும்..” என்று கூறியவள், அன்பும் ஆதியும் புன்னகை செய்தனர்..

“ஏய் எழில் இவர் நம்ம ஸ்கூலில் நான் டிப்பன் திருடி எடுத்து வந்து சாப்பிடுவேன் இல்ல.. அதே அன்பரசன் தான்..” என்று அவளிடம் சொல்ல அவனை நிமிர்ந்து பார்த்தவள் எதுவும் பேசவே இல்லை.. அவர்களின் விழிகள் மட்டும் பேசியது.. அவளின் கண்களில் அதிர்ச்சியை எதிர்பார்த்து காத்திருந்த ஆஷாவிற்கு ஏமாற்றத்தை தந்தாள் எழில்விழி..

அவர்கள் இருவரையும் பார்த்த ஆதி ஆஷா இருவரும், தங்களுக்குள் பார்வையைப் பரிமாறிக் கொண்டவர்கள்.. “நிஜத்திலேயே நீங்கள் இருவரும் சந்தித்ததே இல்லையா..?” என்று வருத்ததுடன் கேட்டாள் ஆஷா..

அவளைப் பார்த்த அன்பரசன், “நானே இவங்களை இப்பொழுதுதான் பார்க்கிறேன்..” என்று அவன் இவர்களின் சந்திப்பை மறைக்க, “எனக்கு இவரின் பார்த்த ஞாபகமே இல்லை ஆஷா..” என்று கூறினாள் எழில்விழி..

அவர்கள் சந்திப்பு நிகழ்ந்ததை சொல்லாமல் இருவரும் ஒரே மாதிரி மறைத்து வழக்கம்போல் ஆஷாவைப் புலம்பவிட, “ஹையோ..” என்று தலைமேல் கைவைத்து அமர்ந்தவளைப் பார்த்து அன்பு, ஆதி, எழில் மூவருக்கும் சிரிப்பு வர மூவரும் சேர்ந்து சிரித்தனர்..
Ada pongaya mudiyalada samy ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top