“நான் செஞ்சது தப்புதான் வெட்டு சார். ஏதோ பயத்துல உங்க பக்கத்துல வந்துப் படுத்துட்டேன். சின்ன புள்ள தெரியாம வந்துப் படுத்துட்டனே, இம்மாம் பெருசு வளந்துருக்கீங்களே போடின்னு துரத்தி விட வேண்டியது தானே? எதுக்கு உள்ள தள்ளி நல்லா படுன்னு சொன்னீங்க? அதனால உங்க மேலயும் தப்பு இருக்கு. தப்புக்கு தப்பு சரியா போச்சு. அதை விட்டுட்டு ஏதாச்சும் திட்டுனீங்க, அப்புறம் அமைதியான அபிய ஆங்கார அபியா பார்ப்பீங்க!” என அவனுக்கு சான்ஸ் கொடுக்காமலே பொரிய ஆரம்பித்தாள்.
வார்த்தை வராமல் அசந்துப் போனான் சதா. நெருங்கி அவள் அருகில் வந்தவன், கழுத்தின் வெளியே தொங்கிக் கொண்டிருந்த தாலியைக் காட்டி,
“என்னதிது?” என கேட்டான்.
“அவனை நிமிர்ந்துப் பார்த்தவள்,
“தாலி” என பதில் அளித்தாள்.
“இது உன் கழுத்துல இருக்கற வரைக்கும், எந்த நேரத்துல நீ என் பக்கத்துல வந்துப் படுத்தாலும் தப்பில்லை. அதனால தப்பு செஞ்சிட்டேன்னு இன்னொரு முறை சொல்லாதே!” இதை சொல்லும் போது அவள் கண்களைப் பார்த்துதான் சொன்னான் சதா.
“அப்போ சரி. நீங்க பேசனும்னு சொன்னதுல நான் அப்படியே டர்ராயிட்டேன் (பயந்துட்டேன்). நேத்து நைட் மாதிரியே தினமும் பக்கதுலயே படுத்துக்கவா வெட்டு சார்? நான் உங்களை எந்த தொல்லையும் பண்ண மாட்டேன். உங்க மூச்சு சத்தம் தாலாட்டு மாதிரி என்னை நிம்மதியா தூங்க வச்சது”
‘நீ தொல்லை பண்ணனும்னு தான் நான் ஆசை படறேன் அபி’
பார்வையை மூக்கில் வைத்தவன்,
“நீ கேக்கறதுக்கு நான் சரி சொல்லனும்னா, நான் கேக்கறதுக்கும் நீ சரி சொல்லனும்” என புதிர் போட்டான்.
“என்ன வெட்டு சார்?”
“என் பக்கத்துல நீ படுத்துக்கலாம், ஆனா நான் வாசனைப் பிடிக்க உன் கையைக் குடுக்கனும். சரியா?” (அடேய், மிடிலடா உன்னோட!)
“அடச்சை! இவ்வளவுதானே? நான் கூட என்னம்மோன்னு பயந்துட்டேன். இந்த டீலீங் எனக்கு ஓகே. ஒரு கவிதையோட நம்ம டீலிங்க ஆரம்பிச்சு வைப்போம். ஓகேவா வெட்டு சார்?”
“வேணான்னா விடவா போற? சரி எடுத்து விடு, கேட்போம்”
“அவ்வளவு கஸ்டப்பட்டு ஒன்னும் நீங்க கேக்க வேணாம்!” முறுக்கிக் கொண்டாள் அபி.
“கஸ்டம்லாம் இல்ல அபி. உன் மொக்கை கவிதைய, சாரி சாரி, சக்கைப் போடு போடற கவிதைய கேட்க குடுத்து வச்சிருக்கனும்” என கண்களால் சிரித்தான் சதா.
“கிண்டல் பண்ணுறீங்கன்னு தெரியுது. இருந்தாலும் நான் கவிதை சொல்லுற மூட்ல இருக்கேன். அதனால சொல்லுறேன்.
யானைக்கு இருக்கு தும்பிக்கை
நான் கும்புடற சாமி அம்பிகை
உங்க மேல இருக்கு நம்பிக்கை
மோந்துக்க தருவேனே இந்தக்கை!!!!” என சொல்லி தன் வலது கையை நீட்டினாள்.
அந்த கவிதையால் தன்னையறியாமல், கூட்டுக்குள் சுருண்டிருந்த சதாவை மீண்டும் வெளியே கொண்டு வந்தாள் அபி.
கலகலவென நகைத்தவாறே அவளை நெருங்கி நீட்டிய கையைப் பிடித்தவன் அப்படியே அவளை வாரி அணைத்துக் கொண்டான்.
“யூ ஆர் ச்சான்ஸ்லெஸ் அபி!” சிரித்தவாறே குனிந்து அவள் கழுத்தை வாசனைப் பிடிக்க ஆரம்பித்தான் அவன்.
சதாவின் செய்கையில் நெளிந்தவள்,
“கை மோந்துப் பார்க்கறது மட்டும்தான் நம்ம டீலிங்ல இருக்கு. கழுத்துக்கு நம்ம எந்த அக்ரிமெண்டும் போட்டு கவிதை படிக்கல வெட்டு சார். விடுங்க! “ என தள்ளினாள் அபி.
அணைப்பில் இருந்து அவளை மெல்ல விடுவித்தவன், விட்ட வேகத்திலே மீண்டும் அருகே இழுத்தான்.
“இந்த ஒரு தடவை மட்டும் அபி. அப்படியே ட்ரக் மாதிரி உன் வாசம் என்னை என்னமோ பண்ணுது. ப்ளீஸ் அபி! உன்னை தொடக்கூட மாட்டேன். கழுத்தடியில வாசம் மட்டும் பிடிச்சிக்கறேன்” கிட்டதட்ட கெஞ்சினான்.
அவன் முகத்தை ஒரு நொடி அமைதியாக நோக்கியவள்,
“சரி, ஆனா தொடாம மோந்துக்குங்க. தொட்டீங்கன்னா கை வாசம் டீலிங்க கூட கேன்சல் பண்ணிருவேன்” என மிரட்டினாள்.
அவளைப் பிடித்திருந்த கையை விட்டவன், உடல் உரசாமல் கொஞ்சம் இடைவெளி விட்டு நின்றுக் கொண்டான்.
“தலையை ஒரு பக்கமா சாய்ச்சுக்கோ அபி.” கரகரப்பாக குழைந்து வந்தது அவனின் குரல்.
அவள் தலையை சாய்த்து கழுத்தைக் காட்டவும், மெல்லக் குனிந்து மூக்கு நுனி மட்டும் கழுத்தில் உரச அவள் வாசனையை ஆழ்ந்து உள்ளிழுத்தான். சோப் வாசனையோடு அவளின் பிரத்தியேக வாசமும் சேர்ந்து சதாவை ஒரு மாயலோகத்துக்கு இழுத்து சென்றது.
‘இப்போ செத்து சுண்ணாம்பா போக சொன்னா கூட போயிருவேன் கேசரி! யப்பா என்ன வாசம்டா சாமி, உசுர உரசிப் போற வாசம்!’ (தலைகீழா வந்தாலும் தலைப்பு வந்துருச்சி, ப்ளீஸ் நோட் திஸ் போய்ண்ட்)
அவன் கூர் மூக்கு கழுத்தை தொட்டதும், தேகம் சிலிர்த்து அடங்கியது அபிக்கு. உடம்பில் உள்ள பல நரம்புகள் பின்னி பிணைந்து நாட்டியமாடும் இடமல்லவா மாந்தரின் கழுத்து! ஆண் பிள்ளையாய் சுற்றி திரிந்தவளின், நுண்ணிய உணர்வுகளை அவன் மூக்கின் உராய்வு தட்டி எழுப்பியது.
அவசரமாக சதாவைத் தள்ளி விட்டவள்,
“இனிமே கையோட நிறுத்திக்குங்க வெட்டு சார். இப்ப பண்ணது எனக்குப் பிடிக்கல. மறுபடியும் இப்படி செஞ்சீங்க, மூஞ்சி இருக்கும் ஆனா அதுல மூக்கு இருக்காது” என திட்டியபடி வெளியேற முனைந்தாள்.
அவள் தள்ளியதால், கிரிக்கேட் பார்க்கும் புருஷன் கையில் இருந்த டீவி ரிமோட்டைப் பிடுங்கி விட்டது போல விழித்தவன் சட்டென சமாளித்துக் கொண்டான்.
“நில்லு அபி! நீ பக்கத்துல வந்தாலே நான் பேச வரது மறந்து கவனம் திசை மாறி போயிருது. ஐம் சாரி. இனிமே நீயே கழுத்தக் காட்டாம, நான் வாசம் பிடிக்க மாட்டேன். இப்போ வந்து உட்காரு. நேத்து பேச நினைச்சத இன்னிக்காவது பேசலாம்.” என்றவன் கட்டிலில் போய் அமர்ந்துக் கொண்டான். அவளும் இடைவெளி விட்டு அமர்ந்துக் கொண்டு அவன் முகத்தைப் பார்த்தாள்.
“அபி, அப்பாவ பற்றி தான் உன் கிட்ட பேசனும். நம்ம கல்யாணம் நடந்த அவசரத்துல இதைப் பற்றி நான் விலாவரியா உன் கிட்ட சொல்ல முடியாம போயிருச்சு.”
“அப்பாவுக்கு என்னமோ சரியில்லைன்ற வரைக்கும் எனக்குப் புரியுது. ஏன் இப்படி ஆயிட்டாரு வெட்டு சார்?”
“அபி, அவருக்கு டிமேன்ஷியான்னு ஒரு வகை நோய். அதை எப்படி விளக்கறது! ஹ்ம்ம். அது மனம், உடல் இரண்டும் சம்மந்தப் பட்ட ஒரு வகை பிரச்சனை. நோய்ன்னு சொல்ல வேணாமே, எனக்கு மனசு வரல அபி. இப்போ அவர் ஒரு குழந்தை மாதிரி. அப்படித்தான் அவர நாம பார்த்துக்கனும். சில சமயம் எல்லா விஷயமும் ஞாபகம் இருக்கும், சில சமயம் எல்லாம் மறந்துரும். நல்லா பேசிட்டே இருப்பாரு, திடீர்னு வயலண்டா ஆகிருவாரு. ஒரு தடவை நல்ல மனநிலையில இருந்தப்போ என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி அழுதாரு. சத்தியம் பண்ண சொன்னாரு. அதுக்கு முன்ன என் வாழ்க்கையில ஒரு துணை வேணும்னு நான் நினைச்சதே இல்ல. அவரோட அழுகை என்னை ரொம்ப பாதிச்சிருச்சு அபி. அவருக்காக தான் கல்யாணம் செய்ய முடிவெடுத்தேன்.”
சற்று நேரம் அமைதியாய் இருந்தான் சதா. பின் அவள் கண்களை நோக்கி,
“உன்னைப் பார்த்ததும் தான் எனக்காக கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணுச்சு” என தொண்டையை செருமிக் கொண்டு சொன்னான்.
சதாவின் முகத்தில் தோன்றிய மென்மையைக் கண்டவளுக்கு, படபடவென வந்தது. அன்று மருந்தின் அரை மயக்கத்தில் இருந்தப் போதே நண்பர்கள் இருவரும் பேசியதை கேட்டிருந்தாள் அபி. காதலா என தெரியாது என்றவனின் கண்களில் வழிந்த காதலை இந்த சில நாட்களில் அடிக்கடி உணர்ந்திருக்கிறாள் அவள். ஆனால்