உறவெனும் ஊஞ்சல்
காலையில் அனைவருக்கும் காபி கொடுத்து விட்டு, "இன்று காலை என்ன டிபன் செய்யலாம் ?", என்று பாரதி தனக்குள் கேட்டுக் கொண்டாள். நடுத்தர வயது. சற்று பூசினாற்போல உடல் தோற்றம். தலையில் மெலிதான நரை அவள் வயதை மெளனமாக கூறியது.
"அடை செய்வோமா?", என்று தனக்கு தானே பாரதி முணுமுணுக்க, அடை என்றதும் அவளுக்கு தன் அம்மா ஞாபகம் வந்து விட்டது. "தன் தாயின் கைப் பக்குவம் வருமா?", என்ற எண்ணம் மேலோங்க, " அன்பிற்குக் கடிவாளம் இட்டுக் கொண்டாலும் மனதின் போக்கை கட்டுப் படுத்தவா முடிகிறது? ",தன்னையே கடிந்து கொண்டாள் பாரதி.
மனதின் போக்கை மாற்றத் தோட்டத்திற்கு வந்தாள் பாரதி. பூத்துக் குலுங்கிய மலர்கள்."பூக்கள் அம்மாவுக்குப் பிடிக்குமே..", என்ற எண்ணம் தோன்ற, தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் பாரதி.. சில்லென்ற காற்று முகத்தை வருட மனம் லேசாகியது. வானம் மேகம் சூழ்ந்து கருமையாய் காட்சியளித்தது. மழை வருமோ? என அவள் நினைப்பதற்குள் சட் சட்டென்று மழைத் துளிகள் மண்ணைத் தொட்டன. அவளையும் நனைத்து விட்டன.
தன் தாய் எழுதிய கவிதை அவளுக்கு நினைவு வந்தது..
மழையே,
தரையின் மீது
சட் சட் சட்டென
உன் ஒலி சங்கீதம்..
பூவின் மீது
துளி துளியாய்
உன் நீர் துளி ரம்மியம்...
என் முகத்தில்
முத்து முத்தாய்
உன் முத்துக்கள் குளுமை.
மழைத் துளி பாரதியைத் தீண்ட, "ஏண்டி பாரதி அறிவு இருக்கா?", எங்கிருந்தோ ஒலிப்பது போல் அவள் தாயின் குரல் பாரதியின் சிந்தனையைக் கலைத்தது. குரல் ஓர் பிரமை. ஆனால் அந்த அன்பிற்குத் தான் எத்தனைச் சக்தி? அவள் கண்ணீரும் முத்து முத்தாய் மழை நீரோடு கரைந்தது.
ஜன்னல் வழியாக பாரதியை பார்த்துக் கொண்டிருந்த அவள் கணவன் ரமேஷ், "என்ன அம்மா ஞாபகமா?" என்று ஜன்னல் கம்பியை பிடித்துக்கொண்டு அவளைப் பார்த்தபடி வினவினான்.
"அதெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாம் முடிந்து விட்டது. அவை முறிந்து போன உறவுகள்", என சிடுசிடுத்துக் கொண்டே சமையல் அறை நோக்கி விரைந்தாள் பாரதி .
இன்று நேற்றல்ல ஐந்து வருடங்களாய் அவளால் ரமேஷிடம் சிடுசிடுக்கத்தான் முடிந்தது. தன் எண்ண ஓட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கட்டுப்படுத்த முடியாத எண்ண ஓட்டத்தின் விளைவு தான் இந்த சிடுசிடுப்பு. இதைப் புரிந்து கொண்ட ரமேஷின் முகத்தில் ஏளன நகை இழையோடியது .
சிந்தனை ஓட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து சமையல் அறைக்குச் சென்ற, பாரதி அடை வார்த்துக் கொண்டிருந்தாள். அடையின் மணம் வீடெங்கும் பரவி அனைவரையும் உணவருந்த அழைத்தது. சுடச்சுட அடையைத் தட்டில் வாங்கிக் கொண்டு அதற்கு வெண்ணெய்யையும் தொட்டுக் கொண்டு சிறுசிறு துண்டுகளாய் ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் மாதுரி, பாரதியின் செல்ல மகள்.
"அம்மா உன் கை பக்குவமே கைப்பக்குவம்... என்ன ருசி என்ன ருசி...", எனச் சிலாகித்தாள் மாதுரி.
"எல்லாம் இங்கிருக்கும் வரை தான்.. திருமணம் முடிந்து விட்டால் எல்லாம் மாறி விடும்.. மறந்தும் விடும்....", என்று கேலி பேசினாள் பாரதி.
" என்ன அம்மா... என்னை உங்களை மாதிரி நினைசீங்களா?", என்று மாதுரி முடிப்பதற்குள் பாரதியின் முகம் சுண்டைக்காயாய் சுருங்கியது. வாடிய தன் முகத்தைப் பார்த்த மாதுரி பதறிவிட்டாள். " அம்மா சாரி. Really I didn’t mean it. Sorry sorry..,", என்று தன் தாயைச் சமாதானம் படுத்தினாள்.
“மாதுரி நீ காலேஜ்க்கு கிளம்பு. I will take care ..." என்றான் ரமேஷ். "அப்பா.. sorry அப்பா..", என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள் மாதுரி. ரமேஷ் பாரதியிடம், நீ உன் குழந்தைகளுக்கு ஓர் நல்ல உதாரணமாக இருந்திருக்க வேண்டும் ", என்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தபடி பாரதியின் முகம் பார்த்து கூறினான்.
பாரதியோ, "குழந்தைகள் என்னிடம் சுயகௌரவம் கற்றுக் கொள்ளட்டும்...." என்று கூறிவிட்டு அடை வார்க்கச் சென்றாள். வீட்டில் நடக்கும் சின்னச் சின்ன பிரச்சனைகளில் கௌரவம் காப்பாற்றப்படுவதில்லை. உறவுகள் காப்பாற்றப்பட வேண்டும். விட்டுக் கொடுத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்...", என்று தான் சொல்ல நினைப்பதை அழுத்தமாகச் சொல்லி முடித்தான் ரமேஷ்.
சிந்தனையோடு வேலைகளை முடித்து விட்டு ஓய்வாக ஊஞ்சலில் அமர்ந்தாள் பாரதி. ஐந்து வருடங்களாய் அந்தப் பெட்டி அவள் கண்முன்னே சிரித்துக் கொண்டிருந்தது.
முன்பெல்லாம் ரமேஷ் அவளைச் சீண்டினால், பாரதி விடுக்கும் செல்ல மிரட்டல், " நான் என் அம்மா வீட்டிற்குச் சென்று விடுவேன். அப்புறம் நீங்கள் எல்லாரும் தான் கஷ்டப்பட வேண்டும்." அதன்பின், ரமேஷும், மாதுரியும் வேண்டாம் தாயே என்று அவளைக் கெஞ்சுவதும் அடிக்கடி நடக்கும் ஓர் விளையாட்டு. இப்பொழுது புரிகிறது "அது விளையாட்டல்ல.. ஓர் ஆனந்த நிகழ்ச்சி என்று..."
போக்கிடமற்றவள் அல்ல பெண்.
பல உறவுகள் அவளைத் தூண்களாய் தாங்கி நிற்கும் வரை அவள் ஓர் அழியா சாம்ராஜ்யம்...!!!
பாரதியின் எண்ணங்கள் பின் நோக்கிச் சென்றன. நான் தான் தாய் வீட்டில் நடந்த பிரச்சினையில் நிதானம் தவறி விட்டேனோ? தேவை இல்லாமல் வார்த்தைகளைக் கொட்டி விட்டேனோ?
ரமேஷ் அன்று சொன்ன வார்த்தைகள் இன்றும் அவள் காதில் ஒலித்தது. "அவசரப்படாதே பாரதி.. நீ சொல்வது நியாயம். ஆனால் நீ பேசும் வார்த்தைகள் உன்னைத் துக்கத்தில் ஆழ்த்தும்."
பாரதியின் மனம் கேட்பதெல்லாம் ஒரே ஒரு கேள்வியைத் தான்." நான் சண்டையிடுவதே ரமேஷுக்காகத் தானே... ஆனால் இவரே நம்மைக் குறை கூறுகிறாரே... இது ஏன்...?"
அன்று சண்டையிட்டு பெட்டியை எடுத்து வந்தவள் பாரதி. இன்று வரை தாய் வீடு செல்லவில்லை. கொண்டு வந்த பெட்டியை இன்னும் பிரிக்கவில்லை. பெட்டி அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறது.. ஐந்து வருடங்களாய்...!!
காலையில் அனைவருக்கும் காபி கொடுத்து விட்டு, "இன்று காலை என்ன டிபன் செய்யலாம் ?", என்று பாரதி தனக்குள் கேட்டுக் கொண்டாள். நடுத்தர வயது. சற்று பூசினாற்போல உடல் தோற்றம். தலையில் மெலிதான நரை அவள் வயதை மெளனமாக கூறியது.
"அடை செய்வோமா?", என்று தனக்கு தானே பாரதி முணுமுணுக்க, அடை என்றதும் அவளுக்கு தன் அம்மா ஞாபகம் வந்து விட்டது. "தன் தாயின் கைப் பக்குவம் வருமா?", என்ற எண்ணம் மேலோங்க, " அன்பிற்குக் கடிவாளம் இட்டுக் கொண்டாலும் மனதின் போக்கை கட்டுப் படுத்தவா முடிகிறது? ",தன்னையே கடிந்து கொண்டாள் பாரதி.
மனதின் போக்கை மாற்றத் தோட்டத்திற்கு வந்தாள் பாரதி. பூத்துக் குலுங்கிய மலர்கள்."பூக்கள் அம்மாவுக்குப் பிடிக்குமே..", என்ற எண்ணம் தோன்ற, தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் பாரதி.. சில்லென்ற காற்று முகத்தை வருட மனம் லேசாகியது. வானம் மேகம் சூழ்ந்து கருமையாய் காட்சியளித்தது. மழை வருமோ? என அவள் நினைப்பதற்குள் சட் சட்டென்று மழைத் துளிகள் மண்ணைத் தொட்டன. அவளையும் நனைத்து விட்டன.
தன் தாய் எழுதிய கவிதை அவளுக்கு நினைவு வந்தது..
மழையே,
தரையின் மீது
சட் சட் சட்டென
உன் ஒலி சங்கீதம்..
பூவின் மீது
துளி துளியாய்
உன் நீர் துளி ரம்மியம்...
என் முகத்தில்
முத்து முத்தாய்
உன் முத்துக்கள் குளுமை.
மழைத் துளி பாரதியைத் தீண்ட, "ஏண்டி பாரதி அறிவு இருக்கா?", எங்கிருந்தோ ஒலிப்பது போல் அவள் தாயின் குரல் பாரதியின் சிந்தனையைக் கலைத்தது. குரல் ஓர் பிரமை. ஆனால் அந்த அன்பிற்குத் தான் எத்தனைச் சக்தி? அவள் கண்ணீரும் முத்து முத்தாய் மழை நீரோடு கரைந்தது.
ஜன்னல் வழியாக பாரதியை பார்த்துக் கொண்டிருந்த அவள் கணவன் ரமேஷ், "என்ன அம்மா ஞாபகமா?" என்று ஜன்னல் கம்பியை பிடித்துக்கொண்டு அவளைப் பார்த்தபடி வினவினான்.
"அதெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாம் முடிந்து விட்டது. அவை முறிந்து போன உறவுகள்", என சிடுசிடுத்துக் கொண்டே சமையல் அறை நோக்கி விரைந்தாள் பாரதி .
இன்று நேற்றல்ல ஐந்து வருடங்களாய் அவளால் ரமேஷிடம் சிடுசிடுக்கத்தான் முடிந்தது. தன் எண்ண ஓட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கட்டுப்படுத்த முடியாத எண்ண ஓட்டத்தின் விளைவு தான் இந்த சிடுசிடுப்பு. இதைப் புரிந்து கொண்ட ரமேஷின் முகத்தில் ஏளன நகை இழையோடியது .
சிந்தனை ஓட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து சமையல் அறைக்குச் சென்ற, பாரதி அடை வார்த்துக் கொண்டிருந்தாள். அடையின் மணம் வீடெங்கும் பரவி அனைவரையும் உணவருந்த அழைத்தது. சுடச்சுட அடையைத் தட்டில் வாங்கிக் கொண்டு அதற்கு வெண்ணெய்யையும் தொட்டுக் கொண்டு சிறுசிறு துண்டுகளாய் ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் மாதுரி, பாரதியின் செல்ல மகள்.
"அம்மா உன் கை பக்குவமே கைப்பக்குவம்... என்ன ருசி என்ன ருசி...", எனச் சிலாகித்தாள் மாதுரி.
"எல்லாம் இங்கிருக்கும் வரை தான்.. திருமணம் முடிந்து விட்டால் எல்லாம் மாறி விடும்.. மறந்தும் விடும்....", என்று கேலி பேசினாள் பாரதி.
" என்ன அம்மா... என்னை உங்களை மாதிரி நினைசீங்களா?", என்று மாதுரி முடிப்பதற்குள் பாரதியின் முகம் சுண்டைக்காயாய் சுருங்கியது. வாடிய தன் முகத்தைப் பார்த்த மாதுரி பதறிவிட்டாள். " அம்மா சாரி. Really I didn’t mean it. Sorry sorry..,", என்று தன் தாயைச் சமாதானம் படுத்தினாள்.
“மாதுரி நீ காலேஜ்க்கு கிளம்பு. I will take care ..." என்றான் ரமேஷ். "அப்பா.. sorry அப்பா..", என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள் மாதுரி. ரமேஷ் பாரதியிடம், நீ உன் குழந்தைகளுக்கு ஓர் நல்ல உதாரணமாக இருந்திருக்க வேண்டும் ", என்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தபடி பாரதியின் முகம் பார்த்து கூறினான்.
பாரதியோ, "குழந்தைகள் என்னிடம் சுயகௌரவம் கற்றுக் கொள்ளட்டும்...." என்று கூறிவிட்டு அடை வார்க்கச் சென்றாள். வீட்டில் நடக்கும் சின்னச் சின்ன பிரச்சனைகளில் கௌரவம் காப்பாற்றப்படுவதில்லை. உறவுகள் காப்பாற்றப்பட வேண்டும். விட்டுக் கொடுத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்...", என்று தான் சொல்ல நினைப்பதை அழுத்தமாகச் சொல்லி முடித்தான் ரமேஷ்.
சிந்தனையோடு வேலைகளை முடித்து விட்டு ஓய்வாக ஊஞ்சலில் அமர்ந்தாள் பாரதி. ஐந்து வருடங்களாய் அந்தப் பெட்டி அவள் கண்முன்னே சிரித்துக் கொண்டிருந்தது.
முன்பெல்லாம் ரமேஷ் அவளைச் சீண்டினால், பாரதி விடுக்கும் செல்ல மிரட்டல், " நான் என் அம்மா வீட்டிற்குச் சென்று விடுவேன். அப்புறம் நீங்கள் எல்லாரும் தான் கஷ்டப்பட வேண்டும்." அதன்பின், ரமேஷும், மாதுரியும் வேண்டாம் தாயே என்று அவளைக் கெஞ்சுவதும் அடிக்கடி நடக்கும் ஓர் விளையாட்டு. இப்பொழுது புரிகிறது "அது விளையாட்டல்ல.. ஓர் ஆனந்த நிகழ்ச்சி என்று..."
போக்கிடமற்றவள் அல்ல பெண்.
பல உறவுகள் அவளைத் தூண்களாய் தாங்கி நிற்கும் வரை அவள் ஓர் அழியா சாம்ராஜ்யம்...!!!
பாரதியின் எண்ணங்கள் பின் நோக்கிச் சென்றன. நான் தான் தாய் வீட்டில் நடந்த பிரச்சினையில் நிதானம் தவறி விட்டேனோ? தேவை இல்லாமல் வார்த்தைகளைக் கொட்டி விட்டேனோ?
ரமேஷ் அன்று சொன்ன வார்த்தைகள் இன்றும் அவள் காதில் ஒலித்தது. "அவசரப்படாதே பாரதி.. நீ சொல்வது நியாயம். ஆனால் நீ பேசும் வார்த்தைகள் உன்னைத் துக்கத்தில் ஆழ்த்தும்."
பாரதியின் மனம் கேட்பதெல்லாம் ஒரே ஒரு கேள்வியைத் தான்." நான் சண்டையிடுவதே ரமேஷுக்காகத் தானே... ஆனால் இவரே நம்மைக் குறை கூறுகிறாரே... இது ஏன்...?"
அன்று சண்டையிட்டு பெட்டியை எடுத்து வந்தவள் பாரதி. இன்று வரை தாய் வீடு செல்லவில்லை. கொண்டு வந்த பெட்டியை இன்னும் பிரிக்கவில்லை. பெட்டி அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறது.. ஐந்து வருடங்களாய்...!!
Last edited: