- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
அத்தியாயம் – 2
மருத்துவமனையில் op முடித்துவிட்டு, அவள் இடத்தில் வந்து அமர்ந்த ப்ரீத்தியை பிடித்துக் கொண்டாள் சாஹித்யா. அங்கு அவனிடம் என்ன பேசினாள், என்று அவளுக்கு தெரிய வேண்டி இருந்தது.
“சாஹி, patient வருண் பத்தின டிடைல்ஸ் இது போதாது, இன்னும் சில விபரம் எல்லாம் வேணும். நாளைக்கு காலை 10 மணிக்கு அவர் இங்க வந்திடுவார், அதுக்குள்ள எனக்கு எல்லா விபரமும் வேணும்” என்று கூறியவளை பார்த்து வாயை பிளந்தாள்.
“நிஜமாவா! நாளைக்கு ட்ரீட்மென்ட் வர ஒத்துகிட்டாரா! ப்ளீஸ் டி அப்படி என்ன டி சொன்ன, இப்படி உடனே வர ஒத்துகிட்டார்” என்று ஆர்வம் மேலோங்க கேட்டாள் சாஹித்யா.
“சஞ்சனா, உங்க பின்னாடி தான் இருக்கிறான்னு சொன்னேன். அதுக்கு அப்புறம் ஒரு வார்த்தை பேசல மனுஷன், பேஸ்து அடிச்சா மாதிரி நின்னுட்டார்”.
“இன்னும் கொஞ்ச நேரத்துல, நாளைக்கு வரேன் ட்ரீட்மென்ட்க்கு அவரே சொல்லுவார். நீ இப்போ போய் நான் சொன்ன வேலையை பார்த்துட்டு வா” என்று கூறியவளை பார்த்து முறைத்தாள் சாஹித்யா.
“ஏண்டி! உனக்கு பேய் கண்ணுக்கு தெரியும்ன்னு, எனக்கு தெரியும். ஆனா, அதுக்குன்னு ஒரு patient கிட்ட போய் இதை சொல்லலாமா டி லூசு” என்று பதிலுக்கு திட்டினாள் சாஹித்யா.
“சாஹி! உனக்கு நல்லா தெரியும், இதை நான் எங்கேயும் யார் கிட்டயும் சொன்னதில்லை. சொல்ல வேண்டிய சூழல் வரும் பொழுது மட்டும் தான், நான் வாயை திறந்து சொல்லி இருக்கேன். உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கா? இல்லையா?” என்று அவளை பார்த்து அழுத்தமாக கேட்டாள் ப்ரீத்தி.
“நம்பிக்கை இல்லாம தான், உன் கூட இருக்கேனா நானு. அது எல்லாம் நிறைய நம்பிக்கை இருக்கு, சரி நான் கிளம்புறேன்” என்று கூறிவிட்டு சென்றாள் சாஹித்யா.
அவள் சென்ற சிறிது நேரத்தில், வருண் இவளுக்கு கால் செய்து நாளை வருவதாக கூறினான். அவள் முகத்தில் சிறிது புன்னகை பூத்தது, முதல் அடியை வெற்றிகரமாக முடித்த திருப்தி புன்னகைக்க செய்தது.
காரில் வெகு தூரம் பயணித்த வருண், அவனின் காதலி சஞ்சனா பற்றி நினைத்துக் கொண்டு இருந்தான். முதன் முதலில், சென்னை பார்க் ஹோட்டலில் தான் அவன் சஞ்சனாவை சந்தித்தான்.
அன்று அவன் நண்பன் சந்தீப் திருமண ரிசெப்ஷன், பார்க் ஹோட்டலில் வைத்து. மும்பையில் வேலையை முடித்துக் கொண்டு, flight பிடித்து சென்னை வந்து இறங்கினான் அன்று மாலை ஆறு மணிக்கு.
ஏர்போர்டில், இவனை வரவேற்க அவனின் மற்ற நண்பர்கள் வந்து இருந்தனர். அவர்களோடு, இங்கே பார்க் ஹோட்டல் அறைக்கு வந்து ரெப்ரெஷ் செய்துவிட்டு, கீழே ஹாலில் நடைபெறும் விழாவுக்கு நண்பர்கள் சூழ சென்றான்.
ஹாலில், அங்கு இருந்த பெண்களை எல்லாம் நண்பர்கள் தங்களுக்குள் கலாய்க்க, இவன் மட்டும் அங்கு ஒரு சிறுமி செய்யும் சேட்டையை கவனித்துக் கொண்டு இருந்தான்.
கொழுக் மொளுக் கன்னம் வைத்து, அந்த சிறுமி பார்க்க கொள்ளை அழகாக இருந்தாள். தாய்க்கு தெரியாமல், அவள் எடுத்த மிட்டாயை நைசாக அவள் தாயின் பையிலே போட்டுவிட்டு, எடுத்த மிட்டாயை மட்டும் தன் தம்பியுடன் சேர்ந்து சாப்பிட்டாள் அந்த சிறுமி.
அதை தன் செல்பேசியில் பதியும் பொழுது தான், சஞ்சனாவை முதல் முறையாக பார்த்தான்.
“பாப்பு! மிட்டாய் அதிகமா சாப்பிட்டா பல் வலி வரும், அப்புறம் வயிறு ல புழு கடிக்கும் தெரியும் தான பாப்புக்கு. அப்புறம் ஏன் இப்படி நிறைய மிட்டாய் சாபிடுற பேபி?” என்று அந்த சிறுமியை கொஞ்சிக் கொண்டே கேட்டாள் சஞ்சனா.
அவளின் அழகும், அந்த குரலும் தான் அவனை முதலில் வசீகரித்தது. காதில் இருக்கும் அந்த தொங்கட்டான், அவள் அசைவுக்கு ஏற்ப ஆடிக் கொண்டே இருந்தது.
ஏனோ, முதல் பார்வையிலே அவள் அவனை ஈர்த்தாள் என்று சொன்னால் அது மிகவும் சரி. அவள் அங்கு இருந்து சென்ற பிறகு தான், தான் செய்து கொண்டு இருந்த செயல் அவனை திடுக்கிட வைத்தது.
“ச! இப்படியா அந்த பொண்ணுக்கு தெரியாம படம் பிடிப்போம், மாட்டினா அவ்வளவு தான், கம்பி எண்ணனும். முதல அதை டெலிட் செய்வோம், இல்லைனா மாட்டிப்போம்” என்று எண்ணிக் கொண்டே அந்த புகைப்படத்தை ஒவ்வொன்றாக அழித்துக் கொண்டே வந்தான்.
குறிப்பிட்ட ஒரு புகைப்படம் வரும் பொழுது அவனால், அதை அழிக்க முடியவில்லை. சிறுமியோடு, சிறுமியாக அந்த புகைபடத்தில் அவள் அவ்வளவு அழகாக இருந்தாள்.
அதை அழிக்க மனம் வராமல், அதை மட்டும் வைத்துக் கொண்டான். பின்பு அன்று விழா முடியவும், அவன் மறுநாள் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டு மும்பை பறந்தான்.
அவ்வப்பொழுது நினைவில், அவள் முகம் தோன்றினாலும் அதை சற்று சிரமத்துடன் ஒதுக்கி வைத்துவிட்டு, வேலையில் கவனத்தை திருப்பினான். என்ன தான் அவன், அவள் நினைவை ஒதுக்கி வைக்க முயன்றாலும் விதி அவனை சும்மா விடவில்லை.
அடுத்த மாதத்திலே, சஞ்சனா அவனின் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து இருந்தாள், அதுவும் அவனின் செயலாளராக.
“சார்! உங்களுக்கு செயலாளர் பதவிக்கு ஆள் கேட்டு இருந்தீங்களே, மேடம் மிஸ் சஞ்சனாவை செலக்ட் செய்து அனுப்பி இருக்காங்க சார்” என்று கூறி சஞ்சனாவை அறிமுகப்படுத்தினான் சஷாங், வருணின் தாய் அனன்யாவின் வலது கை.
சஞ்சனாவை பார்த்த வருண், முதலில் திடுகிட்டாலும் பின் சுதாரித்துக் கொண்டான்.
“வெல்கம் மிஸ் சஞ்சனா! ஐ அம் வருண் கியான், நைஸ் மீட்டிங் யூ” என்று கூறி கையை குலுக்க கை நீட்டினான்.
“ஹலோ சார்! ஐ அம் சஞ்சனா!” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
“வெல்! நீங்க இன்னைக்கே வேலை ஆரம்பிக்கலாம். சஷாங், மிஸ் பார்வதியை வர சொல்லுங்க” என்று அவன் கூறினான்.
“உங்களை பத்தி சுருக்கமா சொல்லுங்க, மிஸ் சஞ்சனா” என்று அவளை பற்றி தெரிந்து கொள்ள கேட்டான்.
தான் இங்கு இல்லாத நேரத்தில், தன் தாய் அனன்யா தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வது. தந்தையும் அடிக்கடி, இவனை போல் பிசினஸ் டூர் செல்வதால், அவன் தன் தாயிடம் தான் ஒப்படைத்து செல்வான்.
அப்படி அவன் இல்லாத சமயத்தில் தான், அவனின் அன்னை அவனுக்கு செயலாளர் தேர்ந்தெடுத்து இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான். தன் மனதை கொள்ளை கொண்டவளே, தனக்கு செயலாளராக வந்த சந்தோசம் அவன் முகத்தில்
அப்பட்டமாக தெரிந்தது.
இதுவரை, அவளை பற்றி ஏதும் தெரியாததால் அவளிடமே அவளை பற்றி கேட்டான். இத்தனைக்கும், இரண்டு நாள் முன்பே அவனின் தாய் அவனுக்கு அவளை பற்றி எல்லா விபரமும் தெரிவித்து இருந்தார், மின்னஞ்சல் மூலம்.
ஆனால், அதை அவன் அப்பொழுது திறந்து பார்க்கவில்லை. ஆகையால், அவள் மூலமே தெரிந்து கொள்ள துடித்தான்.
“என் பெயர் சஞ்சனா. என் அப்பா, அம்மா professors சென்னை ஜெயா எஞ்சினீரிங் காலேஜ் ல. நான் B.B.A. முடிச்சிட்டு, செக்ரட்டரி கோர்ஸ் முடிச்சு இருக்கேன். சொந்த ஊர் சென்னை, ஆனா அப்பா, அம்மா இன்னும் கொஞ்ச நாள் ல ரிடையராகி, இங்க மும்பை ல என் அண்ணா பாமிலியோட செட்டிலாக போறாங்க”.
“அதான் நான் என் ஜாப், இங்க மும்பை ல தேடி இப்போ இங்க வந்து இருக்கேன்” என்று தன்னை பற்றி சுருக்கமாகவும், தெளிவான ஆங்கிலத்திலும் பேசிய அவளை பார்த்து மனதிற்குள் பாராட்டிக் கொண்டான்.
அப்பொழுது, அவன் அழைத்து வர சொன்ன பார்வதி அங்கே வரவும், அவளை பார்வதிக்கு அறிமுகப்படுத்தி விட்டு, சஞ்சனாவுக்கு வேலைகளை கற்று தர கூறினான்.
அவர்கள் சென்ற பிறகு, தன் தாய் அனுப்பிய மின்னஞ்சலை திறந்து பார்த்தான். அதில் சஞ்சனா கூறிய விஷயங்களோடு, அவள் ஏற்கனவே இந்த வேலையில் அனுபவம் வாய்ந்தவள் என்று குறிப்பிட்டு இருந்தது.
மருத்துவமனையில் op முடித்துவிட்டு, அவள் இடத்தில் வந்து அமர்ந்த ப்ரீத்தியை பிடித்துக் கொண்டாள் சாஹித்யா. அங்கு அவனிடம் என்ன பேசினாள், என்று அவளுக்கு தெரிய வேண்டி இருந்தது.
“சாஹி, patient வருண் பத்தின டிடைல்ஸ் இது போதாது, இன்னும் சில விபரம் எல்லாம் வேணும். நாளைக்கு காலை 10 மணிக்கு அவர் இங்க வந்திடுவார், அதுக்குள்ள எனக்கு எல்லா விபரமும் வேணும்” என்று கூறியவளை பார்த்து வாயை பிளந்தாள்.
“நிஜமாவா! நாளைக்கு ட்ரீட்மென்ட் வர ஒத்துகிட்டாரா! ப்ளீஸ் டி அப்படி என்ன டி சொன்ன, இப்படி உடனே வர ஒத்துகிட்டார்” என்று ஆர்வம் மேலோங்க கேட்டாள் சாஹித்யா.
“சஞ்சனா, உங்க பின்னாடி தான் இருக்கிறான்னு சொன்னேன். அதுக்கு அப்புறம் ஒரு வார்த்தை பேசல மனுஷன், பேஸ்து அடிச்சா மாதிரி நின்னுட்டார்”.
“இன்னும் கொஞ்ச நேரத்துல, நாளைக்கு வரேன் ட்ரீட்மென்ட்க்கு அவரே சொல்லுவார். நீ இப்போ போய் நான் சொன்ன வேலையை பார்த்துட்டு வா” என்று கூறியவளை பார்த்து முறைத்தாள் சாஹித்யா.
“ஏண்டி! உனக்கு பேய் கண்ணுக்கு தெரியும்ன்னு, எனக்கு தெரியும். ஆனா, அதுக்குன்னு ஒரு patient கிட்ட போய் இதை சொல்லலாமா டி லூசு” என்று பதிலுக்கு திட்டினாள் சாஹித்யா.
“சாஹி! உனக்கு நல்லா தெரியும், இதை நான் எங்கேயும் யார் கிட்டயும் சொன்னதில்லை. சொல்ல வேண்டிய சூழல் வரும் பொழுது மட்டும் தான், நான் வாயை திறந்து சொல்லி இருக்கேன். உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கா? இல்லையா?” என்று அவளை பார்த்து அழுத்தமாக கேட்டாள் ப்ரீத்தி.
“நம்பிக்கை இல்லாம தான், உன் கூட இருக்கேனா நானு. அது எல்லாம் நிறைய நம்பிக்கை இருக்கு, சரி நான் கிளம்புறேன்” என்று கூறிவிட்டு சென்றாள் சாஹித்யா.
அவள் சென்ற சிறிது நேரத்தில், வருண் இவளுக்கு கால் செய்து நாளை வருவதாக கூறினான். அவள் முகத்தில் சிறிது புன்னகை பூத்தது, முதல் அடியை வெற்றிகரமாக முடித்த திருப்தி புன்னகைக்க செய்தது.
காரில் வெகு தூரம் பயணித்த வருண், அவனின் காதலி சஞ்சனா பற்றி நினைத்துக் கொண்டு இருந்தான். முதன் முதலில், சென்னை பார்க் ஹோட்டலில் தான் அவன் சஞ்சனாவை சந்தித்தான்.
அன்று அவன் நண்பன் சந்தீப் திருமண ரிசெப்ஷன், பார்க் ஹோட்டலில் வைத்து. மும்பையில் வேலையை முடித்துக் கொண்டு, flight பிடித்து சென்னை வந்து இறங்கினான் அன்று மாலை ஆறு மணிக்கு.
ஏர்போர்டில், இவனை வரவேற்க அவனின் மற்ற நண்பர்கள் வந்து இருந்தனர். அவர்களோடு, இங்கே பார்க் ஹோட்டல் அறைக்கு வந்து ரெப்ரெஷ் செய்துவிட்டு, கீழே ஹாலில் நடைபெறும் விழாவுக்கு நண்பர்கள் சூழ சென்றான்.
ஹாலில், அங்கு இருந்த பெண்களை எல்லாம் நண்பர்கள் தங்களுக்குள் கலாய்க்க, இவன் மட்டும் அங்கு ஒரு சிறுமி செய்யும் சேட்டையை கவனித்துக் கொண்டு இருந்தான்.
கொழுக் மொளுக் கன்னம் வைத்து, அந்த சிறுமி பார்க்க கொள்ளை அழகாக இருந்தாள். தாய்க்கு தெரியாமல், அவள் எடுத்த மிட்டாயை நைசாக அவள் தாயின் பையிலே போட்டுவிட்டு, எடுத்த மிட்டாயை மட்டும் தன் தம்பியுடன் சேர்ந்து சாப்பிட்டாள் அந்த சிறுமி.
அதை தன் செல்பேசியில் பதியும் பொழுது தான், சஞ்சனாவை முதல் முறையாக பார்த்தான்.
“பாப்பு! மிட்டாய் அதிகமா சாப்பிட்டா பல் வலி வரும், அப்புறம் வயிறு ல புழு கடிக்கும் தெரியும் தான பாப்புக்கு. அப்புறம் ஏன் இப்படி நிறைய மிட்டாய் சாபிடுற பேபி?” என்று அந்த சிறுமியை கொஞ்சிக் கொண்டே கேட்டாள் சஞ்சனா.
அவளின் அழகும், அந்த குரலும் தான் அவனை முதலில் வசீகரித்தது. காதில் இருக்கும் அந்த தொங்கட்டான், அவள் அசைவுக்கு ஏற்ப ஆடிக் கொண்டே இருந்தது.
ஏனோ, முதல் பார்வையிலே அவள் அவனை ஈர்த்தாள் என்று சொன்னால் அது மிகவும் சரி. அவள் அங்கு இருந்து சென்ற பிறகு தான், தான் செய்து கொண்டு இருந்த செயல் அவனை திடுக்கிட வைத்தது.
“ச! இப்படியா அந்த பொண்ணுக்கு தெரியாம படம் பிடிப்போம், மாட்டினா அவ்வளவு தான், கம்பி எண்ணனும். முதல அதை டெலிட் செய்வோம், இல்லைனா மாட்டிப்போம்” என்று எண்ணிக் கொண்டே அந்த புகைப்படத்தை ஒவ்வொன்றாக அழித்துக் கொண்டே வந்தான்.
குறிப்பிட்ட ஒரு புகைப்படம் வரும் பொழுது அவனால், அதை அழிக்க முடியவில்லை. சிறுமியோடு, சிறுமியாக அந்த புகைபடத்தில் அவள் அவ்வளவு அழகாக இருந்தாள்.
அதை அழிக்க மனம் வராமல், அதை மட்டும் வைத்துக் கொண்டான். பின்பு அன்று விழா முடியவும், அவன் மறுநாள் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டு மும்பை பறந்தான்.
அவ்வப்பொழுது நினைவில், அவள் முகம் தோன்றினாலும் அதை சற்று சிரமத்துடன் ஒதுக்கி வைத்துவிட்டு, வேலையில் கவனத்தை திருப்பினான். என்ன தான் அவன், அவள் நினைவை ஒதுக்கி வைக்க முயன்றாலும் விதி அவனை சும்மா விடவில்லை.
அடுத்த மாதத்திலே, சஞ்சனா அவனின் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து இருந்தாள், அதுவும் அவனின் செயலாளராக.
“சார்! உங்களுக்கு செயலாளர் பதவிக்கு ஆள் கேட்டு இருந்தீங்களே, மேடம் மிஸ் சஞ்சனாவை செலக்ட் செய்து அனுப்பி இருக்காங்க சார்” என்று கூறி சஞ்சனாவை அறிமுகப்படுத்தினான் சஷாங், வருணின் தாய் அனன்யாவின் வலது கை.
சஞ்சனாவை பார்த்த வருண், முதலில் திடுகிட்டாலும் பின் சுதாரித்துக் கொண்டான்.
“வெல்கம் மிஸ் சஞ்சனா! ஐ அம் வருண் கியான், நைஸ் மீட்டிங் யூ” என்று கூறி கையை குலுக்க கை நீட்டினான்.
“ஹலோ சார்! ஐ அம் சஞ்சனா!” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
“வெல்! நீங்க இன்னைக்கே வேலை ஆரம்பிக்கலாம். சஷாங், மிஸ் பார்வதியை வர சொல்லுங்க” என்று அவன் கூறினான்.
“உங்களை பத்தி சுருக்கமா சொல்லுங்க, மிஸ் சஞ்சனா” என்று அவளை பற்றி தெரிந்து கொள்ள கேட்டான்.
தான் இங்கு இல்லாத நேரத்தில், தன் தாய் அனன்யா தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வது. தந்தையும் அடிக்கடி, இவனை போல் பிசினஸ் டூர் செல்வதால், அவன் தன் தாயிடம் தான் ஒப்படைத்து செல்வான்.
அப்படி அவன் இல்லாத சமயத்தில் தான், அவனின் அன்னை அவனுக்கு செயலாளர் தேர்ந்தெடுத்து இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான். தன் மனதை கொள்ளை கொண்டவளே, தனக்கு செயலாளராக வந்த சந்தோசம் அவன் முகத்தில்
அப்பட்டமாக தெரிந்தது.
இதுவரை, அவளை பற்றி ஏதும் தெரியாததால் அவளிடமே அவளை பற்றி கேட்டான். இத்தனைக்கும், இரண்டு நாள் முன்பே அவனின் தாய் அவனுக்கு அவளை பற்றி எல்லா விபரமும் தெரிவித்து இருந்தார், மின்னஞ்சல் மூலம்.
ஆனால், அதை அவன் அப்பொழுது திறந்து பார்க்கவில்லை. ஆகையால், அவள் மூலமே தெரிந்து கொள்ள துடித்தான்.
“என் பெயர் சஞ்சனா. என் அப்பா, அம்மா professors சென்னை ஜெயா எஞ்சினீரிங் காலேஜ் ல. நான் B.B.A. முடிச்சிட்டு, செக்ரட்டரி கோர்ஸ் முடிச்சு இருக்கேன். சொந்த ஊர் சென்னை, ஆனா அப்பா, அம்மா இன்னும் கொஞ்ச நாள் ல ரிடையராகி, இங்க மும்பை ல என் அண்ணா பாமிலியோட செட்டிலாக போறாங்க”.
“அதான் நான் என் ஜாப், இங்க மும்பை ல தேடி இப்போ இங்க வந்து இருக்கேன்” என்று தன்னை பற்றி சுருக்கமாகவும், தெளிவான ஆங்கிலத்திலும் பேசிய அவளை பார்த்து மனதிற்குள் பாராட்டிக் கொண்டான்.
அப்பொழுது, அவன் அழைத்து வர சொன்ன பார்வதி அங்கே வரவும், அவளை பார்வதிக்கு அறிமுகப்படுத்தி விட்டு, சஞ்சனாவுக்கு வேலைகளை கற்று தர கூறினான்.
அவர்கள் சென்ற பிறகு, தன் தாய் அனுப்பிய மின்னஞ்சலை திறந்து பார்த்தான். அதில் சஞ்சனா கூறிய விஷயங்களோடு, அவள் ஏற்கனவே இந்த வேலையில் அனுபவம் வாய்ந்தவள் என்று குறிப்பிட்டு இருந்தது.