- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
அத்தியாயம் – 5
வேலையை முடித்துக் கொண்டு வருண் வீட்டிற்கு வந்த ப்ரீத்தியை, எதிர்கொண்டான் வருண். அவளை பார்க்கும் பொழுதே, அவள் மிகவும் அசதியாக இருக்கிறாள் என்று தெரிந்தது.
இருந்தாலும், அவளிடம் பேச வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் அவன்.
“சஞ்சு பத்தி கேட்கும் பொழுது, ஒன்னும் சொல்லல நீ முதல. இப்போ எப்படி சொல்ல ஒதுக்கிட்ட? அப்போ உன்னை மிரட்டினா, சஞ்சு சொல்ல சொல்லுவா உன்னை அப்படி தான?” என்று மிக தீவீரமாக கேட்டான்.
“ஹா ஹா! அப்போ சஞ்சு இருக்கான்னு நம்புறீங்க! என்று அவள் கூறவும், அவன் முழித்தான்.
“அப்படித்தான நீ எழுதி இருக்க, உனக்கு பேய் எல்லாம் கண்ணுக்கு தெரியும்ன்னு, அதான் அப்படி கேட்க தோனுச்சு” என்று மழுப்பிவிட்டு அவள் பதிலுக்காக காத்து இருந்தான்.
“சஞ்சு ஒன்னும் சொல்லல, நீங்க இருந்த கண்டிஷன் தான் என்னை சொல்ல வச்சது. சொல்ல போனா, என் சீனியர் சொல்லி தான் இந்த டைரி இப்போ உங்க கைக்கு கிடைச்சு இருக்கு”.
“இன்னும் முழுசா படிக்கல நினைக்கிறேன், படிங்க. நாளைக்கு ரிசல்ட் வந்திடும், அப்புறம் நாளைக்கு ஈவினிங் ல இருந்து ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணிடுறேன், குட் நைட்” என்று கூறி ஒரு கொட்டாவியை விட்ட படி மாடி ஏற போனாள்.
அதற்குள், வருண் அவளை அழைத்து சாப்பிட்டு செல்லுமாறு கூறவும், அவள் சாப்பிட்டு வந்ததாக கூறிவிட்டு மாடியில் இருக்கும் அவள் அறைக்கு சென்றாள். யோசனையுடன், அவன் தனதரைக்கு வந்து அந்த டைரியில், மீண்டும் விட்ட இடத்தில் இருந்து படிக்க தொடங்கினான்.
“பேய்! பேய்!”என்று கத்திக் கொண்டே ஓடினாள் சஞ்சு, ப்ரீத்தியை பார்த்து.
“நான் உனக்கு பேயா! இரு டி வரேன்!” என்று ப்ரீத்தி பதிலுக்கு அவளை துரத்திக் கொண்டே ஓடினாள்.
ஓடிக் களைத்து, இருவரும் சோபாவில் மூச்சு வாங்க அமர்ந்து இருந்தனர். பாட்டி அவர்களை சாப்பிட அழைக்க, இருவரும் தங்களை சுத்தம் செய்துக் கொண்டு வந்து சாப்பிட அமர்ந்தனர்.
“பாட்டி, ப்ரீத்திக்கு இப்படி பேய் கண்ணுக்கு தெரியுறது உங்களுக்கு கஷ்டமா இருக்கா” என்று சஞ்சனா கேட்டாள்.
“கஷ்டமா தான் இருந்தது முதல, ஆனா இதனால இவளுக்கு எந்த பிரச்சனையும் வராதுன்னு தெரிஞ்ச பின்னாடி கொஞ்சம் நிம்மதியா இருக்கு எனக்கு. ஆனா அது எல்லாம் பேய் இல்லை மா, ஆன்மா”.
“ஒரு ஆன்மா சுத்துது அப்படினா, அதுக்கு நிறைவேறாத ஆசை, கோபம் அப்படி இருக்கும். அப்புறம் திதி கொடுக்காம இருந்தாலும், அந்த ஆன்மா சுத்தும்”.
“எதுக்காக, அவங்க ஆன்மா சாந்தி அடையட்டும்ன்னு சொல்லுறாங்க? இப்படி அவங்க இருக்க கூடாதுன்னு தான், எல்லோரும் அப்படி சொல்லுறதே”/
“இதுல ரொம்ப பாவப்பட்ட ஆன்மா, எது தெரியுமா? வாழ வேண்டிய வயசுல வாழ முடியாம, அவங்க இறக்கும் பொழுது அந்த ஆன்மா எப்போவும் கண்ணீர் விட்டுகிட்டே இருக்கும்”.
“அந்த ஆன்மாக்கள் எல்லாம், திதி கொடுத்தும் மேல போக முடியாம, இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் தத்தளிச்சிக்கிட்டு இருப்பாங்க. இப்போ என் பயம் எல்லாம், இவளை கண்டு அந்த ஆன்மாக்கள் எல்லாம் பயப்ப்படுமேன்னு தான்” என்று கூறியவரை பார்த்து முறைத்தாள் ப்ரீத்தி.
சஞ்சனாவோ, பாட்டி கூறிய விதத்திலும், ப்ரீத்தியின் முறைப்பிலும் விழுந்து விழுந்து சிரித்தாள். அதன் பிறகு நேரம் அவர்களுக்கு, ரெட்கை கட்டி பறந்தது.
கல்லூரி திறக்கும் நாள் அன்று, இருவரும் ஒன்றாக வரும் பொழுது, அங்கே சஞ்சனாவின் பெற்றோர் இவர்களை எதிர்கொண்டனர்.
“சஞ்சு, பாட்டி சீரியஸா இருக்காங்க, உன்னை பார்க்கணும் சொல்லுறாங்க. நாம இப்போ மும்பை போகணும், படிப்பு அப்புறம் பார்த்துக்கலாம், இப்போ tc வாங்கிட்டோம் உனக்கு”.
“உன் திங்க்ஸ் எல்லாம் பாக் பண்ணி எடுத்துட்டு வா, நாம கிளம்பலாம்” என்று அவளின் பெற்றவர்கள் கூறவும், இருவரும் அதிர்ந்தனர்.
பழகிய குறுகிய காலத்தில், நல்ல ஒரு நட்பு கிடைத்தது ப்ரீத்திக்கு. இதுவரை அவளிடம் நெருங்காதவர்கள், சஞ்சனா வந்த பின் சற்று பேசினார்கள் அவ்வளவே.
இன்று அவள் செல்ல போகிறாள் எனவும், அதை அவளால் தாங்க முடியவில்லை. சஞ்சனாவுக்கும் இது அதிர்ச்சி என்றாலும், எப்படியும் திரும்பி இங்கே வந்து ஒரு முறை பார்த்து விட்டு செல்வேன் உன்னை, என்று அவளிடம் வாக்குறுதி கொடுத்த பின்னர் தான் அவளும் சற்று தெளிந்தாள்.
அவள் சென்ற பின், மீண்டும் தனிமை வாசம். தன்னை சுற்றி அதன் பின், அவளே ஒரு வட்டமிட்டுக் கொண்டு, அதில் இருந்து வெளியே வரவும் இல்லை, யாரையும் அனுமதிப்பதும் இல்லை.
படிப்பு, படிப்பு என்று அதையே பிடித்துக் கொண்டு, கவனம் முழுவதும் அதில் மட்டுமே இருந்தது. மேற்படிப்பு படித்து முடித்து, அவளுக்கு வேலை கிடைத்த உடன், முதல் வேலையாக அவள் அதை தன் பாட்டியிடம் தான் தெரிவித்தாள்.
“பாட்டி! எனக்கு வேலை கிடைச்சிடுச்சு, ஹே! அதுவும் மும்பையில். நம்ம அங்க போய் இருக்கலாம் பாட்டி இனி, சஞ்சுவை நாம அங்க பார்கலாம்” என்று குதித்தவளை பார்த்து சந்தோசம் அடைந்தார்.
ஆனால் மனதில் அதிக வருத்தம் இருந்தது அவருக்கு, நேற்று இரவு அந்த குடுகுடுப்பைகாரர் சொல்லி சென்ற செய்தியில் இருந்து. அதை குறித்தே அவர் யோசிதததில், அன்று இரவே அவர் இயற்கை எய்தினார்.
மகிழ்ச்சி கடலில் குதித்துக் கொண்டு இருந்த ப்ரீத்தி, பாட்டி இறந்ததை நம்ப முடியாமல் தவித்தாள். உறவுகளுக்கு தகவல் கொடுக்க வேண்டிய நேரத்தில் கூட, அவளால் தகவல் கொடுக்க முடியவில்லை.
முயன்று தன்னை கட்டுக்கு கொண்டு வந்து, ஒவ்வொரு உறவுக்கும் தகவல் சொல்லிவிட்டு, அடுத்து பார்க்க வேண்டிய வேலைகளை எல்லாம் அவள் ஒருத்தியே, சுழன்று சுழன்று பார்த்தாள்.
வந்த உறவுகளில், சிலர் அவளுக்கு உதவி புரிந்தாலும், சற்று எட்டியே நின்றனர். அவளும் அதை புரிந்து கொண்டு, எப்பொழுதையும் விட இறுக தொடங்கினாள்.
பாட்டிக்கு செய்ய வேண்டியதை எல்லாம் செய்துவிட்டு, மும்பை செல்லாமல் இங்கேயே இருபது கிலோமீட்டர் தொலைவில், தனக்கு ஒரு வேலை தேடிக் கொண்டு இங்கேயே இருந்து விட்டாள்.
மும்பை செல்ல வேண்டும் என்ற எண்ணம், கடலளவு அவளுக்கு இருந்தாலும், சஞ்சு எந்த மாதிரி இருக்கிறாள், எங்கு இருக்கிறாள் அவள் என்று ஒன்றும் தெரியாமல், அங்கே செல்ல அவளுக்கு விருப்பம் இல்லை.
அவள் அன்று சொன்னது போல், வருடம் ஒரு முறை தவறாமல் வந்து கொண்டு இருந்தாள், குறிப்பாக இவளை காண்பதற்கு. போன வருடத்தில் அவள் வரவும் இல்லை, அவளின் தொடர்பும் விட்டு போய் இருந்தது.
இப்பொழுது, மும்பையில் வேலை கிடைத்த பின் கூட பாட்டியுடன் சென்று தேடி, அவளுக்கு ஏதும் பிரச்சனை என்றால், அது குறித்து பேசி சரி செய்யலாம் என்ற எண்ணத்தில் மட்டுமே இருந்தாள்.
ஆனால், இப்பொழுது பாட்டி இல்லாமல் அவள் மட்டுமே செல்ல அவளுக்கு துளியும் விருப்பம் இல்லை. ஆகையால் இங்கேயே, வேலை தேடிக் கொண்டு தன்னை சுற்றி பெரிய வட்டமாக போட்டுக் கொண்டு, வேலை செய்வது மட்டுமே என் பணி, என்பது போல் இருந்து கொண்டாள்.
அவள் வீட்டிற்கு செல்லும் பாதையில் தான், ஒரு நாள் அவள் சஞ்சனாவை கண்டாள், அதுவும் ஆன்மாவாக அவள் சுற்றிக் கொண்டு இருக்கும் பொழுது. வண்டியை ஒட்டிக் கொண்டு வந்தவள், அவளை அப்படி ஒரு கோலத்தில் பார்த்துவிட்டு நிலை தடுமாறி கீழே விழுந்தாள் வண்டியோடு.
கையில் அடிபட்ட காயங்களுடன், அவள் தட்டு தடுமாறி எழும் பொழுது சஞ்சனா அவள் முன் தோன்றி, கண்ணீர் வடித்தாள்.
“சஞ்சு! என்ன டி இது? நீ தானா சஞ்சு! சொல்லு சஞ்சு, எப்படி சஞ்சு இப்படி?” என்று நம்ப முடியாமல் அவளை தொட்டு பார்த்தால், அவளால் தொட முடியவில்லை.
காரணம் புரிந்த பொழுது, தேம்பி தேம்பி அழுது அங்கேயே மயங்கி விட்டாள். மழை நீர் முகத்தில் தெரித்து விழவும், மயக்கம் சிறிது தெளிந்து எழுந்து பார்க்கும் பொழுது அவள் வண்டியும், அவளும் விழுந்து கிடந்து இருப்பது தெரிந்தது.
வேலையை முடித்துக் கொண்டு வருண் வீட்டிற்கு வந்த ப்ரீத்தியை, எதிர்கொண்டான் வருண். அவளை பார்க்கும் பொழுதே, அவள் மிகவும் அசதியாக இருக்கிறாள் என்று தெரிந்தது.
இருந்தாலும், அவளிடம் பேச வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் அவன்.
“சஞ்சு பத்தி கேட்கும் பொழுது, ஒன்னும் சொல்லல நீ முதல. இப்போ எப்படி சொல்ல ஒதுக்கிட்ட? அப்போ உன்னை மிரட்டினா, சஞ்சு சொல்ல சொல்லுவா உன்னை அப்படி தான?” என்று மிக தீவீரமாக கேட்டான்.
“ஹா ஹா! அப்போ சஞ்சு இருக்கான்னு நம்புறீங்க! என்று அவள் கூறவும், அவன் முழித்தான்.
“அப்படித்தான நீ எழுதி இருக்க, உனக்கு பேய் எல்லாம் கண்ணுக்கு தெரியும்ன்னு, அதான் அப்படி கேட்க தோனுச்சு” என்று மழுப்பிவிட்டு அவள் பதிலுக்காக காத்து இருந்தான்.
“சஞ்சு ஒன்னும் சொல்லல, நீங்க இருந்த கண்டிஷன் தான் என்னை சொல்ல வச்சது. சொல்ல போனா, என் சீனியர் சொல்லி தான் இந்த டைரி இப்போ உங்க கைக்கு கிடைச்சு இருக்கு”.
“இன்னும் முழுசா படிக்கல நினைக்கிறேன், படிங்க. நாளைக்கு ரிசல்ட் வந்திடும், அப்புறம் நாளைக்கு ஈவினிங் ல இருந்து ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணிடுறேன், குட் நைட்” என்று கூறி ஒரு கொட்டாவியை விட்ட படி மாடி ஏற போனாள்.
அதற்குள், வருண் அவளை அழைத்து சாப்பிட்டு செல்லுமாறு கூறவும், அவள் சாப்பிட்டு வந்ததாக கூறிவிட்டு மாடியில் இருக்கும் அவள் அறைக்கு சென்றாள். யோசனையுடன், அவன் தனதரைக்கு வந்து அந்த டைரியில், மீண்டும் விட்ட இடத்தில் இருந்து படிக்க தொடங்கினான்.
“பேய்! பேய்!”என்று கத்திக் கொண்டே ஓடினாள் சஞ்சு, ப்ரீத்தியை பார்த்து.
“நான் உனக்கு பேயா! இரு டி வரேன்!” என்று ப்ரீத்தி பதிலுக்கு அவளை துரத்திக் கொண்டே ஓடினாள்.
ஓடிக் களைத்து, இருவரும் சோபாவில் மூச்சு வாங்க அமர்ந்து இருந்தனர். பாட்டி அவர்களை சாப்பிட அழைக்க, இருவரும் தங்களை சுத்தம் செய்துக் கொண்டு வந்து சாப்பிட அமர்ந்தனர்.
“பாட்டி, ப்ரீத்திக்கு இப்படி பேய் கண்ணுக்கு தெரியுறது உங்களுக்கு கஷ்டமா இருக்கா” என்று சஞ்சனா கேட்டாள்.
“கஷ்டமா தான் இருந்தது முதல, ஆனா இதனால இவளுக்கு எந்த பிரச்சனையும் வராதுன்னு தெரிஞ்ச பின்னாடி கொஞ்சம் நிம்மதியா இருக்கு எனக்கு. ஆனா அது எல்லாம் பேய் இல்லை மா, ஆன்மா”.
“ஒரு ஆன்மா சுத்துது அப்படினா, அதுக்கு நிறைவேறாத ஆசை, கோபம் அப்படி இருக்கும். அப்புறம் திதி கொடுக்காம இருந்தாலும், அந்த ஆன்மா சுத்தும்”.
“எதுக்காக, அவங்க ஆன்மா சாந்தி அடையட்டும்ன்னு சொல்லுறாங்க? இப்படி அவங்க இருக்க கூடாதுன்னு தான், எல்லோரும் அப்படி சொல்லுறதே”/
“இதுல ரொம்ப பாவப்பட்ட ஆன்மா, எது தெரியுமா? வாழ வேண்டிய வயசுல வாழ முடியாம, அவங்க இறக்கும் பொழுது அந்த ஆன்மா எப்போவும் கண்ணீர் விட்டுகிட்டே இருக்கும்”.
“அந்த ஆன்மாக்கள் எல்லாம், திதி கொடுத்தும் மேல போக முடியாம, இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் தத்தளிச்சிக்கிட்டு இருப்பாங்க. இப்போ என் பயம் எல்லாம், இவளை கண்டு அந்த ஆன்மாக்கள் எல்லாம் பயப்ப்படுமேன்னு தான்” என்று கூறியவரை பார்த்து முறைத்தாள் ப்ரீத்தி.
சஞ்சனாவோ, பாட்டி கூறிய விதத்திலும், ப்ரீத்தியின் முறைப்பிலும் விழுந்து விழுந்து சிரித்தாள். அதன் பிறகு நேரம் அவர்களுக்கு, ரெட்கை கட்டி பறந்தது.
கல்லூரி திறக்கும் நாள் அன்று, இருவரும் ஒன்றாக வரும் பொழுது, அங்கே சஞ்சனாவின் பெற்றோர் இவர்களை எதிர்கொண்டனர்.
“சஞ்சு, பாட்டி சீரியஸா இருக்காங்க, உன்னை பார்க்கணும் சொல்லுறாங்க. நாம இப்போ மும்பை போகணும், படிப்பு அப்புறம் பார்த்துக்கலாம், இப்போ tc வாங்கிட்டோம் உனக்கு”.
“உன் திங்க்ஸ் எல்லாம் பாக் பண்ணி எடுத்துட்டு வா, நாம கிளம்பலாம்” என்று அவளின் பெற்றவர்கள் கூறவும், இருவரும் அதிர்ந்தனர்.
பழகிய குறுகிய காலத்தில், நல்ல ஒரு நட்பு கிடைத்தது ப்ரீத்திக்கு. இதுவரை அவளிடம் நெருங்காதவர்கள், சஞ்சனா வந்த பின் சற்று பேசினார்கள் அவ்வளவே.
இன்று அவள் செல்ல போகிறாள் எனவும், அதை அவளால் தாங்க முடியவில்லை. சஞ்சனாவுக்கும் இது அதிர்ச்சி என்றாலும், எப்படியும் திரும்பி இங்கே வந்து ஒரு முறை பார்த்து விட்டு செல்வேன் உன்னை, என்று அவளிடம் வாக்குறுதி கொடுத்த பின்னர் தான் அவளும் சற்று தெளிந்தாள்.
அவள் சென்ற பின், மீண்டும் தனிமை வாசம். தன்னை சுற்றி அதன் பின், அவளே ஒரு வட்டமிட்டுக் கொண்டு, அதில் இருந்து வெளியே வரவும் இல்லை, யாரையும் அனுமதிப்பதும் இல்லை.
படிப்பு, படிப்பு என்று அதையே பிடித்துக் கொண்டு, கவனம் முழுவதும் அதில் மட்டுமே இருந்தது. மேற்படிப்பு படித்து முடித்து, அவளுக்கு வேலை கிடைத்த உடன், முதல் வேலையாக அவள் அதை தன் பாட்டியிடம் தான் தெரிவித்தாள்.
“பாட்டி! எனக்கு வேலை கிடைச்சிடுச்சு, ஹே! அதுவும் மும்பையில். நம்ம அங்க போய் இருக்கலாம் பாட்டி இனி, சஞ்சுவை நாம அங்க பார்கலாம்” என்று குதித்தவளை பார்த்து சந்தோசம் அடைந்தார்.
ஆனால் மனதில் அதிக வருத்தம் இருந்தது அவருக்கு, நேற்று இரவு அந்த குடுகுடுப்பைகாரர் சொல்லி சென்ற செய்தியில் இருந்து. அதை குறித்தே அவர் யோசிதததில், அன்று இரவே அவர் இயற்கை எய்தினார்.
மகிழ்ச்சி கடலில் குதித்துக் கொண்டு இருந்த ப்ரீத்தி, பாட்டி இறந்ததை நம்ப முடியாமல் தவித்தாள். உறவுகளுக்கு தகவல் கொடுக்க வேண்டிய நேரத்தில் கூட, அவளால் தகவல் கொடுக்க முடியவில்லை.
முயன்று தன்னை கட்டுக்கு கொண்டு வந்து, ஒவ்வொரு உறவுக்கும் தகவல் சொல்லிவிட்டு, அடுத்து பார்க்க வேண்டிய வேலைகளை எல்லாம் அவள் ஒருத்தியே, சுழன்று சுழன்று பார்த்தாள்.
வந்த உறவுகளில், சிலர் அவளுக்கு உதவி புரிந்தாலும், சற்று எட்டியே நின்றனர். அவளும் அதை புரிந்து கொண்டு, எப்பொழுதையும் விட இறுக தொடங்கினாள்.
பாட்டிக்கு செய்ய வேண்டியதை எல்லாம் செய்துவிட்டு, மும்பை செல்லாமல் இங்கேயே இருபது கிலோமீட்டர் தொலைவில், தனக்கு ஒரு வேலை தேடிக் கொண்டு இங்கேயே இருந்து விட்டாள்.
மும்பை செல்ல வேண்டும் என்ற எண்ணம், கடலளவு அவளுக்கு இருந்தாலும், சஞ்சு எந்த மாதிரி இருக்கிறாள், எங்கு இருக்கிறாள் அவள் என்று ஒன்றும் தெரியாமல், அங்கே செல்ல அவளுக்கு விருப்பம் இல்லை.
அவள் அன்று சொன்னது போல், வருடம் ஒரு முறை தவறாமல் வந்து கொண்டு இருந்தாள், குறிப்பாக இவளை காண்பதற்கு. போன வருடத்தில் அவள் வரவும் இல்லை, அவளின் தொடர்பும் விட்டு போய் இருந்தது.
இப்பொழுது, மும்பையில் வேலை கிடைத்த பின் கூட பாட்டியுடன் சென்று தேடி, அவளுக்கு ஏதும் பிரச்சனை என்றால், அது குறித்து பேசி சரி செய்யலாம் என்ற எண்ணத்தில் மட்டுமே இருந்தாள்.
ஆனால், இப்பொழுது பாட்டி இல்லாமல் அவள் மட்டுமே செல்ல அவளுக்கு துளியும் விருப்பம் இல்லை. ஆகையால் இங்கேயே, வேலை தேடிக் கொண்டு தன்னை சுற்றி பெரிய வட்டமாக போட்டுக் கொண்டு, வேலை செய்வது மட்டுமே என் பணி, என்பது போல் இருந்து கொண்டாள்.
அவள் வீட்டிற்கு செல்லும் பாதையில் தான், ஒரு நாள் அவள் சஞ்சனாவை கண்டாள், அதுவும் ஆன்மாவாக அவள் சுற்றிக் கொண்டு இருக்கும் பொழுது. வண்டியை ஒட்டிக் கொண்டு வந்தவள், அவளை அப்படி ஒரு கோலத்தில் பார்த்துவிட்டு நிலை தடுமாறி கீழே விழுந்தாள் வண்டியோடு.
கையில் அடிபட்ட காயங்களுடன், அவள் தட்டு தடுமாறி எழும் பொழுது சஞ்சனா அவள் முன் தோன்றி, கண்ணீர் வடித்தாள்.
“சஞ்சு! என்ன டி இது? நீ தானா சஞ்சு! சொல்லு சஞ்சு, எப்படி சஞ்சு இப்படி?” என்று நம்ப முடியாமல் அவளை தொட்டு பார்த்தால், அவளால் தொட முடியவில்லை.
காரணம் புரிந்த பொழுது, தேம்பி தேம்பி அழுது அங்கேயே மயங்கி விட்டாள். மழை நீர் முகத்தில் தெரித்து விழவும், மயக்கம் சிறிது தெளிந்து எழுந்து பார்க்கும் பொழுது அவள் வண்டியும், அவளும் விழுந்து கிடந்து இருப்பது தெரிந்தது.