- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
அத்தியாயம் – 6
மருத்துவமனையில், நோயாளி ஒருவரை பார்த்துக் கொண்டு இருந்த ப்ரீத்தியை தேடி ஓடி வந்தாள் நர்ஸ் ஒருத்தி.
“டாக்டர்! சீக்கிரம் வாங்க, அங்க அந்த தாத்தா குடிச்சிட்டு எல்லோரையும் போட்டு அடிச்சிகிட்டு இருக்கார்” என்று பதற்றத்துடன் கூறி அவளை கையோடு கூட்டி சென்றாள்.
மருத்துவமனை ரிசப்ஷனில், அந்த முதியவர் ஒரு கையில் பெரிய கத்தியும், ட்ரிப்ஸ் ஏற்றும் அந்த கம்புடனும் நின்று கொண்டு, யாரையும் கிட்ட நெருங்க விடாமல் மிரட்டிக் கொண்டு இருந்தார்.
“அவர் கையில் எப்படி, இவ்வளவு பெரிய கத்தி வந்தது?” என்று பக்கத்தில் இருந்த நர்ஸிடம் கேட்டாள் ப்ரீத்தி.
“அவர் பேத்தி ஆப்பிள் கட் பண்ண, கத்தி அங்கே வச்சு இருந்தா. கொஞ்சம் அவ அந்த பக்கம் போன உடனே, இவர் கத்தியை எடுத்துட்டு வந்து இங்க இருந்து போகணும்ன்னு ரகளை பண்ணுறார் டாக்டர்” என்று கூறியவளை பார்த்து முறைத்தார்.
“இப்படி இருக்கிறார்ன்னு தெரிஞ்சு தான, இருபத்தி நாலு மணி நேரமும் இவரை கண்காணிக்க, நர்ஸ் ரெண்டு பேரை போட்டது. இவருக்கு டுயுட்டி நர்ஸ் யாரு இப்போ?” என்று விசாரித்தாள் ப்ரீத்தி.
“சரவணனும், ஹேமாவும் தான் டாக்டர். அவங்க அப்போ ட்ரிப்ஸ் மாத்த போனாங்க, அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு” என்று அந்த நர்ஸ் கூறவும், பல்லை கடித்தாள் ப்ரீத்தி.
“ஒருத்தர் போனா போதாதா, சரி injection ரெடி பண்ணுங்க” என்று கூறிவிட்டு அவரை நோக்கி முன்னேறினாள்.
அவரோ கிட்டே வராதே, வந்தால் குத்திக் கொள்வேன் என்னை என்பது போல் மிரட்டிக் கொண்டு இருந்தார்.
“தாத்தா! உங்களுக்கு இப்போ குடிக்கணும் அதான, சரி வாங்க உங்க கதையை சொல்லிகிட்டே குடிங்க. உங்க கதையை நான் கேட்குறேன் தாத்தா, அதை கீழே போடுங்க” என்று கூறிக் கொண்டே மெதுவாக அவரை நெருங்கினாள்.
“நீ பொய் சொல்லுற, என் கஷ்டம் உனக்கு புரியாது. எனக்கு இப்போ உடனே டாஸ்மார்க் போகணும், வழியை விடுங்க” என்று இப்பொழுது கத்தியை தன் கழுத்துக்கு நேராக பிடித்துக் கொண்டு, நின்று இருந்தார்.
அங்கு இருந்த ஒவ்வொருவருக்கும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. ப்ரீத்தி மட்டுமே சற்று தைரியமாக அவரை நெருங்கிக் கொண்டு இருந்தாள்.
அப்பொழுது உள்ளே வந்த வருண், இதை பார்த்து அதிர்ந்தான். ப்ரீத்தியின் செயல், அவனுக்கு முட்டாள்தனமாக தோன்றியது.
“எல்லோரும் அமைதியா இருக்கும் பொழுது, இவ மட்டும் ஏன் இப்படி அசட்டுத்தனமா அவர் கிட்ட போறா” என்று எண்ணினான்.
ஆனால், அடுத்து ப்ரீத்தி செய்த செயல் அவனை வியப்பில் ஆழ்த்தியது. அவரிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்துக் கொண்டே, அவரின் கவனம் முழுவதையும் தன் மீது இருக்குமாறு பார்த்துக் கொண்டாள்.
பின் இருந்து இருவர் இவர் அறியாமல், இவரை நெருங்கிக் கொண்டு இருந்தனர். ஒரு கட்டத்தில் அவர் கையில் இருந்த கத்தியை, அவர் உணரும் முன்பாக இவள் அதை எடுத்துக் கொண்டாள்.
அதிர்ந்து, அவர் அதை அவளிடம் இருந்து வாங்க, மற்றொரு கையில் இருந்த ட்ரிப்ஸ் கம்பியை கொண்டு, அவளை தாக்க கம்பியை உயர்த்தும் பொழுது, வருண் அவளை பிடித்து பின் இழுத்துக் கொண்டான்.
அதற்குள் அந்த முதியவர் பின் நின்று இருந்த இருவர், அவரை பிடித்து நிறுத்தி அவள் கொண்டு வர சொன்ன ஊசியை எடுத்து, அவருக்கு போட்டு விட்டனர்.
மயங்கிய அவரை, உடனே ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து அவரின் அறைக்கு அழைத்து சென்றனர். வருணின் பிடியில் இன்னும் இருந்த ப்ரீத்தி, அவனிடம் நன்றி உரைத்துவிட்டு விலகி நின்றாள்.
“இப்படி தான் ஸ்டன்ட் பண்ணுவியா நீ, அவர் உன் மேல கத்தியை சொருகி இருந்தா என்ன ஆகி இருக்கும்” என்று கோபத்தில் அவளிடம் சிடுசிடுத்தான்.
“அவருக்கு, அப்படி எண்ணம் எல்லாம் கிடையாது. அதனால தான் நான் தைரியமா, அவர் கிட்ட நெருங்கவே போனேன். இன்னைக்கு உங்க ரிபோர்ட்ஸ் வந்துடுச்சு, மாத்திரை எல்லாம் எழுதி இருக்கேன்”.
“உங்க food chart கூட ரெடி ஆகிடுச்சு, இனி இதை தான் நீங்க follow செய்யணும். அப்புறம் இன்னைக்கு வீட்டுல மாலை நாலு மணி ல இருந்து, நான் ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் செய்துடுவேன்”.
“உங்க வேலை எல்லாம் அதுக்கு தகுந்த மாதிரி, இனி மாத்திகோங்க. எவ்வளவு நேரம் ட்ரீட்மென்ட் இருக்கும்ன்னு, சொல்ல முடியாது, அது உங்க ஒத்துழைப்பு பொறுத்து” என்று அவனுடன் அவள் இருந்த அறைக்கு, நடந்து வந்து கொண்டு இருக்கும் பொழுது
கூறினாள்.
அவளின் அறைக்கு வந்து, அவனை அமர சொல்லிவிட்டு இவள் அவனுடைய ரிபோர்ட்ஸ் எல்லாம், பீரோவில் இருந்து எடுத்துக் கொண்டு வந்து அவள் இடத்தில் வந்து அமர்ந்தாள்.
மீண்டும் ஒரு முறை அதை படித்து பார்த்துவிட்டு, அவனிடம் சில விளக்கங்கள் எல்லாம் கொடுத்துவிட்டு, அவள் தயாரித்த food chart மற்றும் சாப்பிடும் மாத்திரைகள் எல்லாம் அவன் கையில் கொடுத்தாள்.
“தேங்க்ஸ் டாக்டர், அப்புறம் இனி இப்படி ஸ்டன்ட் பண்ணாதீங்க, ஒவ்வொரு முறையும் நான் உங்களை காப்பாத்த முடியாது பாருங்க” என்று அவளுக்கு ஒரு கொட்டு வைத்துவிட்டு சென்றான்.
அவன் அப்படி கூறி சென்றதும், கோபத்தில் பல்லை கடித்தாள். அப்பொழுது பார்த்து, உள்ளே சாஹித்யா பாடிக் கொண்டே வரவும், கோபத்தை அவள் மீது காட்ட தொடங்கினாள்.
“எப்போ வர சொன்னா, நீ எப்போ வர? சரி, நான் சொன்ன வேலை என்னாச்சு? முடிச்சியா, இல்லையா” என்று கேட்டாள் ப்ரீத்தி.
“முடிச்சிட்டேன் ப்ரீத்தி, நான் உன் கிட்ட சில விஷயம் பேசணும், இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வரியா நீ” என்று கேட்டாள் சாஹித்யா.
“இல்லை சாஹி, இன்னைக்கு தான் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க போறேன் அவருக்கு. இன்னைக்கு அவரை பேச வைக்கணும், அப்போ தான் முழு உண்மையும் சொல்லும் பொழுது, அவருக்கு சஞ்சனாவோட மரணம் எப்படிபட்டதுன்னு தெரியும்” என்று கூறி பெருமூச்சு விட்டாள்.
“அது சரி தான், ஆமா இப்போ எதுக்கு வந்த உடனே என் மேல கோபம் வந்தது உனக்கு. இப்போ தான், வருண் போனதை பார்த்தேன், அப்போ சம்திங் சம்திங் நடந்ததா யா” என்று சிரிப்புடன் கேட்டவளை, முறைத்தாள் ப்ரீத்தி.
“நானே, அவனை அடிக்க முடியலையேன்னு கோபத்தில் இருக்கேன், நீ என்னனா சம்திங் சம்திங்னா கேட்குற” என்று பல்லை கடித்தவளை பார்த்து முழித்தாள் சாஹித்யா.
“என்ன டி நடந்தது? நீ இப்படி ரியாக்ட் பண்ணுற அளவுக்கு” என்று கேட்டாள் சாஹித்யா.
நடந்ததை எடுத்துக் கூறிக் கொண்டே வந்தவள், அவன் கூறி சென்ற வார்த்தையையும் எடுத்துக் கூறியவளுக்கு மீண்டும் கோபம் வந்தது.
“சரி, சரி நான் கிளம்புறேன் ப்ரீத்தி. நாளைக்கு நைட் கண்டிப்பா வீட்டுக்கு வா, பேசியே ஆகணும்” என்று அழுத்தமாக கூறிய சாஹியை பார்த்து சரியென்றாள்.
அடுத்து அடுத்து குவிந்த வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு, அவள் வீட்டிற்கு வரும் பொழுது மூணு மணியாகி இருந்தது. வருண் அவனின் அலுவலக அறையில் இருக்கிறான் என்பதை, சமையல் செய்யும் அம்மா இவளிடம் தெரிவித்த பின், இவள் மாடியில் இருக்கும் அவள் அறைக்கு சென்றாள்.
மருத்துவமனையில், நோயாளி ஒருவரை பார்த்துக் கொண்டு இருந்த ப்ரீத்தியை தேடி ஓடி வந்தாள் நர்ஸ் ஒருத்தி.
“டாக்டர்! சீக்கிரம் வாங்க, அங்க அந்த தாத்தா குடிச்சிட்டு எல்லோரையும் போட்டு அடிச்சிகிட்டு இருக்கார்” என்று பதற்றத்துடன் கூறி அவளை கையோடு கூட்டி சென்றாள்.
மருத்துவமனை ரிசப்ஷனில், அந்த முதியவர் ஒரு கையில் பெரிய கத்தியும், ட்ரிப்ஸ் ஏற்றும் அந்த கம்புடனும் நின்று கொண்டு, யாரையும் கிட்ட நெருங்க விடாமல் மிரட்டிக் கொண்டு இருந்தார்.
“அவர் கையில் எப்படி, இவ்வளவு பெரிய கத்தி வந்தது?” என்று பக்கத்தில் இருந்த நர்ஸிடம் கேட்டாள் ப்ரீத்தி.
“அவர் பேத்தி ஆப்பிள் கட் பண்ண, கத்தி அங்கே வச்சு இருந்தா. கொஞ்சம் அவ அந்த பக்கம் போன உடனே, இவர் கத்தியை எடுத்துட்டு வந்து இங்க இருந்து போகணும்ன்னு ரகளை பண்ணுறார் டாக்டர்” என்று கூறியவளை பார்த்து முறைத்தார்.
“இப்படி இருக்கிறார்ன்னு தெரிஞ்சு தான, இருபத்தி நாலு மணி நேரமும் இவரை கண்காணிக்க, நர்ஸ் ரெண்டு பேரை போட்டது. இவருக்கு டுயுட்டி நர்ஸ் யாரு இப்போ?” என்று விசாரித்தாள் ப்ரீத்தி.
“சரவணனும், ஹேமாவும் தான் டாக்டர். அவங்க அப்போ ட்ரிப்ஸ் மாத்த போனாங்க, அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு” என்று அந்த நர்ஸ் கூறவும், பல்லை கடித்தாள் ப்ரீத்தி.
“ஒருத்தர் போனா போதாதா, சரி injection ரெடி பண்ணுங்க” என்று கூறிவிட்டு அவரை நோக்கி முன்னேறினாள்.
அவரோ கிட்டே வராதே, வந்தால் குத்திக் கொள்வேன் என்னை என்பது போல் மிரட்டிக் கொண்டு இருந்தார்.
“தாத்தா! உங்களுக்கு இப்போ குடிக்கணும் அதான, சரி வாங்க உங்க கதையை சொல்லிகிட்டே குடிங்க. உங்க கதையை நான் கேட்குறேன் தாத்தா, அதை கீழே போடுங்க” என்று கூறிக் கொண்டே மெதுவாக அவரை நெருங்கினாள்.
“நீ பொய் சொல்லுற, என் கஷ்டம் உனக்கு புரியாது. எனக்கு இப்போ உடனே டாஸ்மார்க் போகணும், வழியை விடுங்க” என்று இப்பொழுது கத்தியை தன் கழுத்துக்கு நேராக பிடித்துக் கொண்டு, நின்று இருந்தார்.
அங்கு இருந்த ஒவ்வொருவருக்கும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. ப்ரீத்தி மட்டுமே சற்று தைரியமாக அவரை நெருங்கிக் கொண்டு இருந்தாள்.
அப்பொழுது உள்ளே வந்த வருண், இதை பார்த்து அதிர்ந்தான். ப்ரீத்தியின் செயல், அவனுக்கு முட்டாள்தனமாக தோன்றியது.
“எல்லோரும் அமைதியா இருக்கும் பொழுது, இவ மட்டும் ஏன் இப்படி அசட்டுத்தனமா அவர் கிட்ட போறா” என்று எண்ணினான்.
ஆனால், அடுத்து ப்ரீத்தி செய்த செயல் அவனை வியப்பில் ஆழ்த்தியது. அவரிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்துக் கொண்டே, அவரின் கவனம் முழுவதையும் தன் மீது இருக்குமாறு பார்த்துக் கொண்டாள்.
பின் இருந்து இருவர் இவர் அறியாமல், இவரை நெருங்கிக் கொண்டு இருந்தனர். ஒரு கட்டத்தில் அவர் கையில் இருந்த கத்தியை, அவர் உணரும் முன்பாக இவள் அதை எடுத்துக் கொண்டாள்.
அதிர்ந்து, அவர் அதை அவளிடம் இருந்து வாங்க, மற்றொரு கையில் இருந்த ட்ரிப்ஸ் கம்பியை கொண்டு, அவளை தாக்க கம்பியை உயர்த்தும் பொழுது, வருண் அவளை பிடித்து பின் இழுத்துக் கொண்டான்.
அதற்குள் அந்த முதியவர் பின் நின்று இருந்த இருவர், அவரை பிடித்து நிறுத்தி அவள் கொண்டு வர சொன்ன ஊசியை எடுத்து, அவருக்கு போட்டு விட்டனர்.
மயங்கிய அவரை, உடனே ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து அவரின் அறைக்கு அழைத்து சென்றனர். வருணின் பிடியில் இன்னும் இருந்த ப்ரீத்தி, அவனிடம் நன்றி உரைத்துவிட்டு விலகி நின்றாள்.
“இப்படி தான் ஸ்டன்ட் பண்ணுவியா நீ, அவர் உன் மேல கத்தியை சொருகி இருந்தா என்ன ஆகி இருக்கும்” என்று கோபத்தில் அவளிடம் சிடுசிடுத்தான்.
“அவருக்கு, அப்படி எண்ணம் எல்லாம் கிடையாது. அதனால தான் நான் தைரியமா, அவர் கிட்ட நெருங்கவே போனேன். இன்னைக்கு உங்க ரிபோர்ட்ஸ் வந்துடுச்சு, மாத்திரை எல்லாம் எழுதி இருக்கேன்”.
“உங்க food chart கூட ரெடி ஆகிடுச்சு, இனி இதை தான் நீங்க follow செய்யணும். அப்புறம் இன்னைக்கு வீட்டுல மாலை நாலு மணி ல இருந்து, நான் ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் செய்துடுவேன்”.
“உங்க வேலை எல்லாம் அதுக்கு தகுந்த மாதிரி, இனி மாத்திகோங்க. எவ்வளவு நேரம் ட்ரீட்மென்ட் இருக்கும்ன்னு, சொல்ல முடியாது, அது உங்க ஒத்துழைப்பு பொறுத்து” என்று அவனுடன் அவள் இருந்த அறைக்கு, நடந்து வந்து கொண்டு இருக்கும் பொழுது
கூறினாள்.
அவளின் அறைக்கு வந்து, அவனை அமர சொல்லிவிட்டு இவள் அவனுடைய ரிபோர்ட்ஸ் எல்லாம், பீரோவில் இருந்து எடுத்துக் கொண்டு வந்து அவள் இடத்தில் வந்து அமர்ந்தாள்.
மீண்டும் ஒரு முறை அதை படித்து பார்த்துவிட்டு, அவனிடம் சில விளக்கங்கள் எல்லாம் கொடுத்துவிட்டு, அவள் தயாரித்த food chart மற்றும் சாப்பிடும் மாத்திரைகள் எல்லாம் அவன் கையில் கொடுத்தாள்.
“தேங்க்ஸ் டாக்டர், அப்புறம் இனி இப்படி ஸ்டன்ட் பண்ணாதீங்க, ஒவ்வொரு முறையும் நான் உங்களை காப்பாத்த முடியாது பாருங்க” என்று அவளுக்கு ஒரு கொட்டு வைத்துவிட்டு சென்றான்.
அவன் அப்படி கூறி சென்றதும், கோபத்தில் பல்லை கடித்தாள். அப்பொழுது பார்த்து, உள்ளே சாஹித்யா பாடிக் கொண்டே வரவும், கோபத்தை அவள் மீது காட்ட தொடங்கினாள்.
“எப்போ வர சொன்னா, நீ எப்போ வர? சரி, நான் சொன்ன வேலை என்னாச்சு? முடிச்சியா, இல்லையா” என்று கேட்டாள் ப்ரீத்தி.
“முடிச்சிட்டேன் ப்ரீத்தி, நான் உன் கிட்ட சில விஷயம் பேசணும், இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வரியா நீ” என்று கேட்டாள் சாஹித்யா.
“இல்லை சாஹி, இன்னைக்கு தான் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க போறேன் அவருக்கு. இன்னைக்கு அவரை பேச வைக்கணும், அப்போ தான் முழு உண்மையும் சொல்லும் பொழுது, அவருக்கு சஞ்சனாவோட மரணம் எப்படிபட்டதுன்னு தெரியும்” என்று கூறி பெருமூச்சு விட்டாள்.
“அது சரி தான், ஆமா இப்போ எதுக்கு வந்த உடனே என் மேல கோபம் வந்தது உனக்கு. இப்போ தான், வருண் போனதை பார்த்தேன், அப்போ சம்திங் சம்திங் நடந்ததா யா” என்று சிரிப்புடன் கேட்டவளை, முறைத்தாள் ப்ரீத்தி.
“நானே, அவனை அடிக்க முடியலையேன்னு கோபத்தில் இருக்கேன், நீ என்னனா சம்திங் சம்திங்னா கேட்குற” என்று பல்லை கடித்தவளை பார்த்து முழித்தாள் சாஹித்யா.
“என்ன டி நடந்தது? நீ இப்படி ரியாக்ட் பண்ணுற அளவுக்கு” என்று கேட்டாள் சாஹித்யா.
நடந்ததை எடுத்துக் கூறிக் கொண்டே வந்தவள், அவன் கூறி சென்ற வார்த்தையையும் எடுத்துக் கூறியவளுக்கு மீண்டும் கோபம் வந்தது.
“சரி, சரி நான் கிளம்புறேன் ப்ரீத்தி. நாளைக்கு நைட் கண்டிப்பா வீட்டுக்கு வா, பேசியே ஆகணும்” என்று அழுத்தமாக கூறிய சாஹியை பார்த்து சரியென்றாள்.
அடுத்து அடுத்து குவிந்த வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு, அவள் வீட்டிற்கு வரும் பொழுது மூணு மணியாகி இருந்தது. வருண் அவனின் அலுவலக அறையில் இருக்கிறான் என்பதை, சமையல் செய்யும் அம்மா இவளிடம் தெரிவித்த பின், இவள் மாடியில் இருக்கும் அவள் அறைக்கு சென்றாள்.