Premalatha
முதலமைச்சர்
Very thrilling and interesting ? can’t wait for next update
தமிழ் எங்க ஆதி எங்க? மூன்று அத்தியாயமாக தமிழை காணவில்லை. எதுவும் பிரச்சனையாக இருக்குமா கூடிய விரைவில் என்ன நடந்தது என்று சொல்லுங்கவீரேந்திரன் கூர்மையாய் பார்த்தபடி நிற்கவும் சண்முகம் மேலும் "நான் இந்த லேடிக்கிட்ட அப்பதிலிருந்து சொல்லிட்டிருக்கேன் சார்... தேவையில்லாம இப்படி கத்தி ஊரை கூட்டிராங்க" என்றான்.
அந்த பெண்ணை வீரேந்திரன் பார்க்கவும் அருகிலிருந்த பெண் கான்ஸ்டெபிள் காதோரம் "ஏசிபி சார்... வந்துட்டார்... போச்சு" என்று பயமுறுத்தி கொண்டிருந்தாள்.
வீரேந்திரன் அந்த பெண்ணை நோக்கி வந்தவன் நிதானித்து "என்னம்மா பிரச்சனை ?... பயப்படாம சொல்லுங்க" என்றான்.
அவள் கண்ணீரை பெருக்க சண்முகம் ஏதொ சொல்ல யத்தனிக்க முற்பட, அவன் அவரை கைகாண்பித்து நிறுத்தினான்.
"நீ சொல்லும்மா"
அந்த பெண் தன்னை தைரியப்படுத்தி கொண்டு "பாவி... என் வாழ்க்கையே கெடுத்துட்டான் சார்... கல்யாணமாகி ஏழு வருஷமாகுது... எனக்கு தெரியாம வேறு ஒரு குடும்பம் வைச்சிருக்கான்... " என்று சொல்லி தாரை தாரையாய் கண்ணீர் வடித்தார்.
வீரேந்திரன் ஆழமாய் அவனை பார்த்தவன் "பொண்டாட்டிக்கு தெரியாம வேறு ஒரு குடும்பம் வைச்சிருக்கியா...?!" என்று கேட்டான்.
அவன் முகத்தில் திகில் சூழ்ந்திட படபடப்பாய் நின்றவனை கூர்மையாய் நோக்கி "ஹ்ம்ம்ம்... கேட்டதுக்கு பதில் சொல்லு" என்றான்.
அவன் அச்சத்தோடு பதில் பேசாமல் நிற்பதை வைத்தே அவன் மனஎண்ணத்தை படித்தவன், அடுத்த நொடியே அவன் கன்னம் சிவந்திட அறைந்துவிட்டு கோபமாக "உன்னை மாறி ஆளெல்லாம் மன்னிக்கவே கூடாதுறா... ஹ்ம்ம்... இதே போல துரோகத்தை உங்க அப்பா உங்க அம்மாவுக்கு செஞ்சா மன்னிச்சிருவியாடா... ராஸ்கல்... உன்னை எல்லாம்" என்று மீண்டும் அடிக்க கை ஓங்கியவன் பின் அவ்வாறு செய்யாமல் சண்முகம் புறம் பார்வையை திருப்பினான்.
"இவன் பேர்ல எஃப் ஐ ஆர் போடுங்க..." என்று சொல்ல அனோ தயங்கியபடி "சார் பேஃம்லி பிராப்ளம்... கொஞ்சம் யோசிச்சி" என்றதும் அவன் முகம் கோப கனலாய் மாறியது.
"அப்போ மன்னிசிடலாம்... என்ன சண்முகம்... "
"இல்ல சார்"
அவன் அந்த விளக்கங்களை கேட்க விரும்பாமல் "ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோங்க... சமூக விரோதிகள், தீவிராவிதகள்,கொலைகாரனுங்க, வானத்தில இருந்து குதிக்கிறதில்லை... மோசமான குடும்ப அமைப்புகள்... மோசமான பேரண்ட்ஸ்... அங்கிருந்துதான் உருவாகிறாங்க... இந்த தப்பை மன்னிச்சா நாளைக்கு இவன் ஒரு தப்பான உதாரணமா மாறுவான்... இவன் செஞ்சது ரொம்ப சாதாரணமான விஷயமாயிடும்... தப்போட ஆணி வேறை விட்டுவிட்டு கிளையை வெட்டிக்கிட்டிறது பைத்தியகாரத்தனம்... இவனுங்கதான் சமூக சீர்கேடுகளுக்கு முதல் காரணம்" என்று சொல்லிவிட்டு அந்த பெண் புறம் திரும்பி "இதபாரும்மா... இன்னைக்கு இப்படி எல்லாம் பேசிட்டு... நாளைக்கு புரிஷன் கிரிஷன்னு வர கூடாது... சொல்லிட்டேன்" என்று கண்டிப்பாய் உரைத்துவிட்டு தன் அறையை நோக்கி சென்றான்.
அவன் சென்றபின் அந்த இடமே புயலடித்து ஓய்ந்தது போல் அமைதி சூழ்ந்தது.
வீரேந்திரன் கவலையோடு தன் இருக்கையில் அமர்ந்து கொள்ள, அவன் மனம் சட்டென காவல் நிலையத்திற்குள் நுழைந்த போது நிகழ்ந்த கலட்டாவை எண்ணி கொண்டன.
அந்த பெண்ணின் ஆவேசம் தமிழை நினைவுப்படுத்தியது.
'வர கோபத்துக்கு உன்னை குத்தி கொன்னுடுலாம்னு இருக்கு' என்று அந்த பெண் சொன்ன போது அன்றிரவு தமிழ் ஆக்ரோஷமாய் 'என்னை விடு நான் அவனை கொல்லனும்' என்று சொன்னதோடு பொருத்தி பார்த்தான்.
அப்போதுதான் அவன் மனதிற்குள் 'தமிழ் உணர்ச்சி வசப்பட்டா நிச்சயம்
கொலை கூட பண்ணுவா... கனவில அவ கத்தினதை பார்த்தா அது வெறும் கோபம்தான்...அவ எதையும் ப்ளேன் பண்ணி பண்ணல.. பட் கோபத்தில கத்தியை எடுக்கிறவங்க குத்ததானே செய்வாங்க... யாருமே லாவகமா கழுத்தை வெட்டுவாங்களா என்ன ? தட் மீன்ஸ்... கோபத்தில அவ கொலை பண்ண கத்தி எடுத்திருக்கலாம்... அப்போ யாராவது அவளை தடுத்திருக்கனும்... கனவில கூட அவ சொன்னதை பார்த்தா... அவ கூட யாராச்சும் இருந்திருக்கலாம்.. அதே நேரத்தில அந்த கத்தியை வேற யாரோ அவளை மாட்டி விட யூஸ் பண்ணி இருக்காங்க'
இவ்வாறாக அடுக்கடுக்காய் தன் எண்ண அலைகளை படரவிட்டவன், தேடிய கேள்விக்கான விடை கிட்டியதாக தோன்றியது. மனதின் பாரம் லேசாய் இறங்கியது
அப்போதுதான் வீரேந்திரனுக்கு தமிழின் கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டது காஞ்சிபுரத்தில் என்ற தகவல் வந்து சேர, அவன் அதிர்ந்து போனான்.
அப்படியெனில் அவள் ஏன் இன்னும் வந்து சேரவில்லை ? இந்த கேள்வியோடு அவள் கடைசியாய் அழைத்த அழைப்புகளின் விவரங்களை படித்தான்.
அதில் இருந்த சந்தேகத்துரிய அழைப்பு ஆதிபரமேஸ்வரி.
பாரதி பத்திரிக்கையில் தான் சந்தித்தவளாயிற்றே. அன்று நடந்தவற்றை நினைவுப்படுத்தியவன் நிச்சயம் அவளுக்கு தமிழை நன்றாகவே தெரிந்திருக்க கூடும் என்று அன்றே கணித்துவிட்டான்.
எனில் தன் கணிப்பு சரிதான். அன்று ஆதி தன்னிடம் சொன்னது பொய். இவர்கள் இருவருக்குமே தர்மாவின் வழக்கில் ஏதோ முக்கிய தொடர்பிருக்கிறது.
இவன் இந்த சிந்தனையோடு ஆதிபரமேஸ்வரிக்கு அழைக்க அவள் போஃனுமே துரதிஷ்டவசமாய் அணைத்து வைக்கப்பட்டதாக பதில் வந்தது.
அவன் பதட்டம் அதிகரித்தது.
இருவரும் ஏதோ ஆபத்தில் சிக்கி கொண்டிருக்க கூடும் என அவன் மூளை எச்சரித்து கொண்டிருந்தது.
ஆதியின் அலுவலகத்தில் விசாரித்தவன் அவள் இல்லை என்பதை அறிந்து வீட்டிற்கு போஃன் செய்தான்.
இறுதியாய் விஷ்வாவிடம் அவன் அலைப்பேசியில் விசாரிக்க, அவனுக்கு தலையில் இடியே இறங்கியது. நேற்றே அவளுக்கு நடந்த விபத்தால் அவன் கதிகலங்கி போயிருந்தான்.
இப்போது மீண்டும் இன்னொரு அதிர்ச்சியா ? அதனை தாங்கும் அளவுக்காய் பலமான இதயம் அவனிக்கில்லை.
வீரேந்திரன் கேள்விக்கெல்லாம் விஷ்வாவால் பதிலளிக்க முடியவில்லை. இருந்தும் நடந்த விபத்தை பற்றி விவரிக்க இந்த தகவல் வீரேந்திரனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இறுதியாய் விஷ்வாவிடம் "கவலைபடாதீங்க... உங்க வொஃய்ப்க்கு ஒண்ணும் ஆகாது... கண்டுபிடிச்சிடலாம்" என்று அவனுக்கு தைரியம் கூறிவது போல தன் மனதிற்கும் நம்பிக்கை வார்த்தைகளை புகட்டி கொண்டான்.
ஆனால் அவன் மனம் பலவீனப்பட்டு கொண்டே வந்தது.
******
வாசகர்களே
உங்களின் கருத்துக்கள்தான் என்னை உற்சாகப்படுத்தி விரைவாய் பதிவுகளை தர உதவுகிறது. அதற்கு கோடானு நன்றிகள்.
இன்றும் உங்கள் கருத்துகளுக்காக ஆவலாய் காத்திருக்கிறேன். மறக்காமல் லைக் பட்டனையும் அழுத்திவிடுங்கள்.