Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
தேடல்
விஷ்வா வீரேந்திரன் சொன்ன தகவல்களை கேட்டு அதிர்ச்சியில் அப்படியே சோபாவில் அமர்ந்தவன், சில நிமிடங்கள் சிலையாகவே கிடந்தான்.
நேற்று நடந்த விபத்தின் காரணத்தால் இந்த தகவல் அவனை ரொம்பவும் அச்சப்படுத்தியிருந்தது.
ஆதியின் தைரியத்தை பற்றி அவனுக்கு தெரியும். எதையும் சமாளிக்கும் இரும்பு மனிஷிதான். ஆனால் தான் அப்படி இல்லயே !
காலையில் இருந்து ஓயாமல் ஒலித்த அவளின் அலைபேசி அவளின் ஆபத்திற்கான எச்சரிக்கை மணியாக இருக்க கூடும் என்று அவன் அறிந்திருந்தானா என்ன ?
அந்த அழைப்பை ஏற்றி பேசிய பின்தான் அவள் அவசர அவசரமாய் புறப்பட்டு சென்றாள். எங்கே ஏது என்று கூட தெரிவிக்கவில்லை. தானும் அவளை கேட்கவில்லை. அப்படி அவளிடம் அவன் கேட்டும் பழக்கமில்லை.
மெல்ல அதிர்ச்சியிலிருந்து மீண்டவன் தன் கைப்பேசி எடுத்து அவன் பங்கிற்கு ஆதியின் அலைபேசிக்கு அழைத்து பார்த்தான்.
ஒரு முறையல்ல... பல முறை... திரும்ப திரும்ப ஒரே பதில்தான் ஒலித்தது.
'ஸ்விட்ச்ட் ஆஃப்'
எரிச்சலடைந்தவன் கோபத்தோடு அருகிலிருந்து பூஜாடியை தூக்கியெறிய அது நொறுங்கி போயிருந்தது.
அவன் செயலை கண்டு கருணாகரன் அதட்டலாய் "டே விஷ்வா... ? கோபத்தில கையில கிடைக்கிறத எல்லாம் தூக்கி போட்டிறது என்னடா பழக்கம் ... அந்தளவுக்கு இப்ப என்னாயிடுச்சு ?" என்று கேட்டார்.
அவன் சீற்றமாக எழுந்த நின்றபடி "என்னாயிடுச்சா ?உங்க ஆசை மருமகளை காணோமா... எங்க போனா... என்ன ஏதுன்னு ஒண்ணும் தெரியல... போஃன் பண்ணா... ஸ்விட்ச்ட் ஆஃப்..." அவன் வார்த்தைகளில் கோபத்தை கக்கினாலும் அவன் விழிகளில் நீர் துளிர்த்து வீழ்ந்தன.
அவன் தோள்களை கருணாகரன் தடவியபடி "பயப்படாதே விஷ்வா... ஆதி புத்திசாலியான பொண்ணு... அப்படி எந்த பிரச்சனையிலும் மாட்டிக்க மாட்டா.. வந்திருவாடா... நீ தைரியமா இரு" என்றார்.
சாரதா பதட்டத்தோடு "அதெப்படிங்க தைரியமா இருக்கிறது... விஷ்வா சொல்றதை பார்த்தா எனக்கும் ரொம்ப பயமா இருக்கு... செல்லம்மாவுக்கு வேற இந்த விஷயம் தெரிஞ்சா? " என்று கேட்ட மாத்திரத்தில் விஷ்வா விருட்டென நிமிர்ந்தான்.
"வேண்டாம்மா... செல்லம்மா ஆன்டிக்கிட்ட மட்டும் சொல்லிடாதீங்க.. அவங்க ரொம்ப பயந்நதிடுவாங்க... அப்படியே அவங்க ஆதியை பத்தி விசாரிச்சா ஏதாவது சொல்லி சமாளிங்க... ஆதி அவளோட ப்ரண்டோட காஞ்சிபுரம்தான் கிளம்பினாலாம்... நானும் காஞ்சிபுரம் போய் என்ன ஏதுன்னு பார்த்துட்டு கால் பன்றேன்... நீங்க பயப்படாம இருங்க" என்றபடி எழுந்து கொண்டு புறப்பட தயாரானான்.
சாரதாவும் கருணாகரனும் மாறிமாறி பார்த்து கொண்டனர்.
கருணாகரன் யோசனைகுறியோடு "ஆதியை பத்தி எங்களுக்கு எந்த பயமும் இல்ல.. நாங்க தைரியமாதான் இருக்கோம்.. நீ எது செய்றதா இருந்தாலும் கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பண்ணு" என்றதும் விஷ்வாவின் முகத்திலிருந்த வருத்தமெல்லாம் மாறி மீண்டும் கோபமாய் உருவெடுத்தது.
பொறுமை என்ற வார்த்தைதான் அவன் அகராதியிலேயே கிடையாதே!
"இந்த அட்வைஸ் எல்லாம் எனக்கு பண்ணுங்க... ஏன் ? உங்க மருமகளுக்கு பண்ண வேண்டியதுதானே... அந்த திமிரு பிடிச்சவளை என் தலையில கட்டி வைச்சாலும் வைச்சீங்க... தினமும் என்னை டென்ஷன்படுத்தியே உயிரை எடுக்கிறா..." என்று சீற்றத்தோடு சொல்லிவிட்டு விறுவிறுவென வெளியேறினான்.
கருணாகரன் தன் மனைவியிடம் "என்ன சாரதா ?!... நாம என்னவோ இவனை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைச்ச மாதிரி இல்ல பேசிட்டு போறான்"
"அவன் பேசினது இப்போ ரொம்ப முக்கியமா... ஆதிக்கு என்னவோன்னு நானே பதட்டத்தில இருக்கேன்" என்றார்.
"எதுக்கு பதட்டம் ?!... ஆதிக்கு இதெல்லாம் புதிசில்ல... ஆதி எல்லா பிரச்சனையையும் சமாளிச்சிடுவா... எனக்கு இப்போ உன் மகனை நினைச்சாதான் கவலையா இருக்கு, இவன் கோபத்தாலும் அவசரத்தாலும் என்ன பண்ணுவான்னோ" என்று அவர் கவலையுற சாரதாவிற்கு இப்போது யாருக்காக வருத்தப்படுவதென்றே குழப்பம் உண்டானது.
****
மஹாபலிபுரம் சாலையோரத்தில் தமிழின் கார் துணையின்றி நின்றிருந்த தகவல் வந்தது.
அடுத்த கணமே வீரேந்திரன் அந்த இடத்திற்கு விரைந்திருந்தான்.
அந்த கார் சாலையின் ஒதுக்குபுறமாய் நின்றிருந்தது. அவன் சென்ற உடனே காரின் உள்ளே முழுவதும் ஆராயத் தொடங்கினான். உள்ளே அவன் பார்வைக்கு எந்த பொருளும் தென்படவில்லை.
எத்தனையோ வழக்குகளை வெகுசமார்த்தியமாய் கையாண்டவனுக்கு இன்று ஏனோ அவ்வாறு செயல்பட முடியவில்லை. காவலனாக அல்லது கணவனாக.... இரண்டுமாகவும் செயல்பட முடியாத இரட்டை நிலை.
அந்த காரை அலசி ஆராய்ந்தவனின் கண்களுக்கு எதுவும் புலப்படாமல் போக,
இறுதியாய் டேஷ் போர்ட்டை திறந்தவன் அதிலிருந்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தை எடுத்தான்.
அதனை பார்த்த நொடி தளர்ந்திருந்த அவன் உணர்வுகள் எல்லாம் கிளர்ந்து உயிர்பித்து கொண்டன.
அதற்கு காரணம் அந்த புத்தகம் அவளின் மனோதிடத்தையும் தைரியத்தையும் அவனுக்கு நினைவுகூர்ந்தது.
அந்த புத்தகத்தை தன் மார்போடு அணைத்து கொண்டு 'எங்கடி இருக்க... என் தமிழச்சிசிசிசி ..?' என்று தவிப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் கேட்டு கொண்டான்.
அவனின் வெளித்தோற்றம் இறுகி இருந்தாலும் உள்ளுக்குள் அவளுக்காக கொஞ்சம் கொஞ்சமாய் மருகி கொண்டிருந்தான்.
இத்தனை நாளாய் தான்தான் அவளை ஆளுமை செய்து கொண்டிருந்தோம் என்ற எண்ணம் வெறும் மாயை என்று இப்போதுதான் புரிந்தது.
அவள்தான் தன்னை ஆளுமை செய்து கொண்டிருக்கிறாள். தன் எண்ணங்களை... தன் உணர்வுகளை... தன் காதலை... ஒட்டுமொத்தமாய் தன்னையே...
இதுநாள் வரை கடமைதான் முக்கியமென்று திரும்ப திரும்ப சொன்னதற்கு பிண்ணனியில், அவள் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்தவளாய் மாறிவிட்டதை ஏற்று கொள்ள மனமின்றி இருந்த அவனின் ஈகோவின் பங்களிப்பு...
இப்போது அந்த ஈகோவும் கர்வமும் சரிந்து போயிருந்தது. அவள் மீதான காதல் மட்டுமே மிச்சமாயிருந்தது.
கண்ணீரை வெளிக்கொணர அவன் கண்கள் காத்திருக்க அதற்கான வாய்ப்பை தராமல் சுதாரித்து கொண்டான்.
இப்படி எண்ணமிட்டபடி அவன் அந்த புத்தகத்தை புரட்ட, அதிலிருந்த காகிதங்கள் கீழே விழுந்தன. அதனை அவசரமாய் கரத்தில் எடுத்து பிரித்தான்.
'உன் நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேருக்கும் ஆபத்து.
அவங்க இரண்டு பேரையும் காப்பாத்த சொல்லி உன் குலதெய்வத்தை நல்லா வேண்டிக்கோ !
ஆனா உங்க குலதெய்வம்தான் கடலில் மூழ்கிடிச்சாமே.
எதை வைச்சி வேண்டிப்ப?'
என்று ஏதோ சூட்சமமாய் எழுதியிருப்பதை படித்தவன் ரொம்பவும் குழம்பி போனான்.
ஆதிக்கும் ரகுவிற்கும் ஏற்படுத்தப்பட்ட விபத்து தமிழை மிரட்டுவதற்காகவோ! இதில் குலதெய்வம் என்று எதை அர்த்தப்படுத்தி எழுதியிருந்தது என்பதை அவனால் விளங்கி கொள்ள முடியவில்லை.
அது தமிழுக்கு மட்டுமே புரிய கூடிய ரகசியமோ ? என்று சிந்தித்தவன், இதுதான் ரவி சொன்ன கடிதமாக இருக்கமுடியும் என்று தீர்மானித்தான்.
உடனடியாக அந்த புத்தகத்திலிருந்த மற்றொமொரு காகிதத்தையும் பிரிக்கலானான்.
அதிலிருந்த எழுத்துக்கள் வட்டமும் கோடுமாய் புரியாமல் இருக்க அது ரமணியம்மாள் உரைத்த கடிதம் என்பதை யூகித்தான்.
இதற்கான அர்த்தத்தை உடனே அறிந்து கொள்ள வேண்டும். கல்வெட்டியல் அறிந்த யாரையாவது அணுக வேண்டும் என எண்ணி ஸ்டேஷனுக்கு புறப்பட்டான்.
வானில் இருள் சூழ சூழ, வீரேந்திரனின் மனதிலும் மெல்ல மெல்ல இருள் படர தொடங்கியது.
இந்த நொடிவரை ஏதோ ஒரு சிறு நம்பிக்கை அவனுக்குள் ஓட்டிக் கொண்டிருந்தது.
அதற்கு காரணம் ஆதியும் தமிழும் பத்திரிக்கை துறையில் இருப்பவர்கள். இருவருமே தைரியத்திற்கும் புத்திசாலித்தனத்திற்கும் குறைந்தவர்கள் அல்ல. சவாலான காரியங்ளில் ஈடுபடுவது அவர்கள் வேலைகளில் நிச்சயம் பழக்கமான ஓன்றாக இருக்கும்.
ஆகையால் அவர்கள் அத்தனை சுலபமாய் தொலைந்திருப்பார்கள் அல்லது கடத்தப்பட்டிருப்பார்கள் என்று அவன் எண்ணவில்லை.
ஆனால் இப்போது அவளின் கார் தனியே நின்றதை பற்றி எண்ணியவனின் நம்பிக்கை மொத்தமாய் உடைந்து போக செய்திருந்தது.
இதற்கு மேல் காலதாமதம் செய்யாமல் அவர்களை தேடுவதற்கான பணியை தீவிரப்படுத்த எண்ணியவன், ஆதிபரமேஸ்வரி மற்றும் தமிழின் புகைபடங்களையும் எல்லா காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தான்.
அவனின் சந்தேகமெல்லாம் தர்மாவின் பிண்ணனியிலிருந்து அந்த சிலைகளை கடத்தும் கும்பல் மீதுதான். அவர்கள்தாள் இதை செய்திருக்க முடியும். ஆனால் இப்போதுவரை அந்த கும்பலை பற்றிய எந்த வித தகவலும் காவல்துறையிடம் இல்லை.
அவர்கள் எங்கிருந்து செயல்படுகிறார்கள் எப்படி சிலைகளை கடத்துகிறார்கள், அந்த சிலைகள் எந்த மார்க்கமாக வேற்றுநாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது இப்படியாக எந்த வித தகவலும் கிடைக்க பெறாமல் எல்லாமே மர்மமாகவே இருந்தது.
ஆனால் பல சிலைகள் காணாமல் போனதும் அதற்கு பிண்ணனியில் தர்மாவின் கைங்கரியம் இருக்கிறது என்பது மட்டுமே காவல்துறைக்கு கிடைத்த ஒரே ரகசிய தகவல். அப்பொழுதே இந்த வழக்கு அவன் பொறுப்பிற்கு வந்துவிட்டது.
தர்மாவை கையும் களவுமாய் பிடித்துவிடலாம் என்று காத்திருந்த சமயத்தில்தான் அவரும் மரணித்தார்.
ரொம்பவும் தாமதமாய் அந்த வழக்கில் அவன் நுழைந்தது போல் காட்டிக் கொண்டாலும் முன்னமே அவன் பல தகவல்களை ரகசியமாய் சேகரித்திருந்தான்.
தர்மாவின் மரணத்திற்கான விடையும் அந்த மர்ம கும்பல் பற்றிய விவரங்களை ஒரு சேர அறிய வேண்டுமெனில் மீண்டும் அவர்கள் ஏதேனும் ஒரு கடத்தலில் ஈடுபட வேண்டும். அப்போதே திட்டமிட்டு அவர்களின் கூட்டத்தை பிடிக்க இயலும் என்று எண்ணி அதற்காக காத்துகிடந்தான்.
இந்த எண்ணங்களோடு யோசனையில் ஆழ்ந்தவன், ஸ்டேஷனை வந்தடைந்தான்.
வேகமாய் தன் அறைக்குள் சென்று அந்த கல்வெட்டெழுத்துக்கள் பற்றி தெரிந்தவர்கள் யாரையாவது தொடர்பு கொண்டு அந்த கடிதத்தின் அர்த்தத்தை கண்டிப்பிடிக்கும் முயற்சியில் முனைப்பாய் இறங்கினான்.
அவனின் முயற்சியின் பலனாக அந்த கடித்ததின் அர்த்தம் விளங்கிற்று.
'நாங்க தேடிற அந்த பொக்கிஷம் உன்கிட்டதான் இருக்குன்னு எங்களுக்கு தெரியும். அதை நீயே கொடுத்திட்டா உனக்கும், உன்னை சுற்றியிருக்கவங்களுக்கும் நல்லது.
அப்படி கொடுக்கலன்னா விளைவுகள் ரொம்ப விபரீதமா இருக்கும் செந்தமிழ்.
யோசிச்சி முடிவெடு'
வீரேந்திரனுக்கு இதனை தெரிந்து கொண்டதும் பதட்டம் அதிகரிக்க, தமிழ் எப்படி இதனை எதிர்கொண்டிருப்பாள் என்று யோசிக்கலானான்.
விஷ்வா வீரேந்திரன் சொன்ன தகவல்களை கேட்டு அதிர்ச்சியில் அப்படியே சோபாவில் அமர்ந்தவன், சில நிமிடங்கள் சிலையாகவே கிடந்தான்.
நேற்று நடந்த விபத்தின் காரணத்தால் இந்த தகவல் அவனை ரொம்பவும் அச்சப்படுத்தியிருந்தது.
ஆதியின் தைரியத்தை பற்றி அவனுக்கு தெரியும். எதையும் சமாளிக்கும் இரும்பு மனிஷிதான். ஆனால் தான் அப்படி இல்லயே !
காலையில் இருந்து ஓயாமல் ஒலித்த அவளின் அலைபேசி அவளின் ஆபத்திற்கான எச்சரிக்கை மணியாக இருக்க கூடும் என்று அவன் அறிந்திருந்தானா என்ன ?
அந்த அழைப்பை ஏற்றி பேசிய பின்தான் அவள் அவசர அவசரமாய் புறப்பட்டு சென்றாள். எங்கே ஏது என்று கூட தெரிவிக்கவில்லை. தானும் அவளை கேட்கவில்லை. அப்படி அவளிடம் அவன் கேட்டும் பழக்கமில்லை.
மெல்ல அதிர்ச்சியிலிருந்து மீண்டவன் தன் கைப்பேசி எடுத்து அவன் பங்கிற்கு ஆதியின் அலைபேசிக்கு அழைத்து பார்த்தான்.
ஒரு முறையல்ல... பல முறை... திரும்ப திரும்ப ஒரே பதில்தான் ஒலித்தது.
'ஸ்விட்ச்ட் ஆஃப்'
எரிச்சலடைந்தவன் கோபத்தோடு அருகிலிருந்து பூஜாடியை தூக்கியெறிய அது நொறுங்கி போயிருந்தது.
அவன் செயலை கண்டு கருணாகரன் அதட்டலாய் "டே விஷ்வா... ? கோபத்தில கையில கிடைக்கிறத எல்லாம் தூக்கி போட்டிறது என்னடா பழக்கம் ... அந்தளவுக்கு இப்ப என்னாயிடுச்சு ?" என்று கேட்டார்.
அவன் சீற்றமாக எழுந்த நின்றபடி "என்னாயிடுச்சா ?உங்க ஆசை மருமகளை காணோமா... எங்க போனா... என்ன ஏதுன்னு ஒண்ணும் தெரியல... போஃன் பண்ணா... ஸ்விட்ச்ட் ஆஃப்..." அவன் வார்த்தைகளில் கோபத்தை கக்கினாலும் அவன் விழிகளில் நீர் துளிர்த்து வீழ்ந்தன.
அவன் தோள்களை கருணாகரன் தடவியபடி "பயப்படாதே விஷ்வா... ஆதி புத்திசாலியான பொண்ணு... அப்படி எந்த பிரச்சனையிலும் மாட்டிக்க மாட்டா.. வந்திருவாடா... நீ தைரியமா இரு" என்றார்.
சாரதா பதட்டத்தோடு "அதெப்படிங்க தைரியமா இருக்கிறது... விஷ்வா சொல்றதை பார்த்தா எனக்கும் ரொம்ப பயமா இருக்கு... செல்லம்மாவுக்கு வேற இந்த விஷயம் தெரிஞ்சா? " என்று கேட்ட மாத்திரத்தில் விஷ்வா விருட்டென நிமிர்ந்தான்.
"வேண்டாம்மா... செல்லம்மா ஆன்டிக்கிட்ட மட்டும் சொல்லிடாதீங்க.. அவங்க ரொம்ப பயந்நதிடுவாங்க... அப்படியே அவங்க ஆதியை பத்தி விசாரிச்சா ஏதாவது சொல்லி சமாளிங்க... ஆதி அவளோட ப்ரண்டோட காஞ்சிபுரம்தான் கிளம்பினாலாம்... நானும் காஞ்சிபுரம் போய் என்ன ஏதுன்னு பார்த்துட்டு கால் பன்றேன்... நீங்க பயப்படாம இருங்க" என்றபடி எழுந்து கொண்டு புறப்பட தயாரானான்.
சாரதாவும் கருணாகரனும் மாறிமாறி பார்த்து கொண்டனர்.
கருணாகரன் யோசனைகுறியோடு "ஆதியை பத்தி எங்களுக்கு எந்த பயமும் இல்ல.. நாங்க தைரியமாதான் இருக்கோம்.. நீ எது செய்றதா இருந்தாலும் கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பண்ணு" என்றதும் விஷ்வாவின் முகத்திலிருந்த வருத்தமெல்லாம் மாறி மீண்டும் கோபமாய் உருவெடுத்தது.
பொறுமை என்ற வார்த்தைதான் அவன் அகராதியிலேயே கிடையாதே!
"இந்த அட்வைஸ் எல்லாம் எனக்கு பண்ணுங்க... ஏன் ? உங்க மருமகளுக்கு பண்ண வேண்டியதுதானே... அந்த திமிரு பிடிச்சவளை என் தலையில கட்டி வைச்சாலும் வைச்சீங்க... தினமும் என்னை டென்ஷன்படுத்தியே உயிரை எடுக்கிறா..." என்று சீற்றத்தோடு சொல்லிவிட்டு விறுவிறுவென வெளியேறினான்.
கருணாகரன் தன் மனைவியிடம் "என்ன சாரதா ?!... நாம என்னவோ இவனை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைச்ச மாதிரி இல்ல பேசிட்டு போறான்"
"அவன் பேசினது இப்போ ரொம்ப முக்கியமா... ஆதிக்கு என்னவோன்னு நானே பதட்டத்தில இருக்கேன்" என்றார்.
"எதுக்கு பதட்டம் ?!... ஆதிக்கு இதெல்லாம் புதிசில்ல... ஆதி எல்லா பிரச்சனையையும் சமாளிச்சிடுவா... எனக்கு இப்போ உன் மகனை நினைச்சாதான் கவலையா இருக்கு, இவன் கோபத்தாலும் அவசரத்தாலும் என்ன பண்ணுவான்னோ" என்று அவர் கவலையுற சாரதாவிற்கு இப்போது யாருக்காக வருத்தப்படுவதென்றே குழப்பம் உண்டானது.
****
மஹாபலிபுரம் சாலையோரத்தில் தமிழின் கார் துணையின்றி நின்றிருந்த தகவல் வந்தது.
அடுத்த கணமே வீரேந்திரன் அந்த இடத்திற்கு விரைந்திருந்தான்.
அந்த கார் சாலையின் ஒதுக்குபுறமாய் நின்றிருந்தது. அவன் சென்ற உடனே காரின் உள்ளே முழுவதும் ஆராயத் தொடங்கினான். உள்ளே அவன் பார்வைக்கு எந்த பொருளும் தென்படவில்லை.
எத்தனையோ வழக்குகளை வெகுசமார்த்தியமாய் கையாண்டவனுக்கு இன்று ஏனோ அவ்வாறு செயல்பட முடியவில்லை. காவலனாக அல்லது கணவனாக.... இரண்டுமாகவும் செயல்பட முடியாத இரட்டை நிலை.
அந்த காரை அலசி ஆராய்ந்தவனின் கண்களுக்கு எதுவும் புலப்படாமல் போக,
இறுதியாய் டேஷ் போர்ட்டை திறந்தவன் அதிலிருந்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தை எடுத்தான்.
அதனை பார்த்த நொடி தளர்ந்திருந்த அவன் உணர்வுகள் எல்லாம் கிளர்ந்து உயிர்பித்து கொண்டன.
அதற்கு காரணம் அந்த புத்தகம் அவளின் மனோதிடத்தையும் தைரியத்தையும் அவனுக்கு நினைவுகூர்ந்தது.
அந்த புத்தகத்தை தன் மார்போடு அணைத்து கொண்டு 'எங்கடி இருக்க... என் தமிழச்சிசிசிசி ..?' என்று தவிப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் கேட்டு கொண்டான்.
அவனின் வெளித்தோற்றம் இறுகி இருந்தாலும் உள்ளுக்குள் அவளுக்காக கொஞ்சம் கொஞ்சமாய் மருகி கொண்டிருந்தான்.
இத்தனை நாளாய் தான்தான் அவளை ஆளுமை செய்து கொண்டிருந்தோம் என்ற எண்ணம் வெறும் மாயை என்று இப்போதுதான் புரிந்தது.
அவள்தான் தன்னை ஆளுமை செய்து கொண்டிருக்கிறாள். தன் எண்ணங்களை... தன் உணர்வுகளை... தன் காதலை... ஒட்டுமொத்தமாய் தன்னையே...
இதுநாள் வரை கடமைதான் முக்கியமென்று திரும்ப திரும்ப சொன்னதற்கு பிண்ணனியில், அவள் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்தவளாய் மாறிவிட்டதை ஏற்று கொள்ள மனமின்றி இருந்த அவனின் ஈகோவின் பங்களிப்பு...
இப்போது அந்த ஈகோவும் கர்வமும் சரிந்து போயிருந்தது. அவள் மீதான காதல் மட்டுமே மிச்சமாயிருந்தது.
கண்ணீரை வெளிக்கொணர அவன் கண்கள் காத்திருக்க அதற்கான வாய்ப்பை தராமல் சுதாரித்து கொண்டான்.
இப்படி எண்ணமிட்டபடி அவன் அந்த புத்தகத்தை புரட்ட, அதிலிருந்த காகிதங்கள் கீழே விழுந்தன. அதனை அவசரமாய் கரத்தில் எடுத்து பிரித்தான்.
'உன் நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேருக்கும் ஆபத்து.
அவங்க இரண்டு பேரையும் காப்பாத்த சொல்லி உன் குலதெய்வத்தை நல்லா வேண்டிக்கோ !
ஆனா உங்க குலதெய்வம்தான் கடலில் மூழ்கிடிச்சாமே.
எதை வைச்சி வேண்டிப்ப?'
என்று ஏதோ சூட்சமமாய் எழுதியிருப்பதை படித்தவன் ரொம்பவும் குழம்பி போனான்.
ஆதிக்கும் ரகுவிற்கும் ஏற்படுத்தப்பட்ட விபத்து தமிழை மிரட்டுவதற்காகவோ! இதில் குலதெய்வம் என்று எதை அர்த்தப்படுத்தி எழுதியிருந்தது என்பதை அவனால் விளங்கி கொள்ள முடியவில்லை.
அது தமிழுக்கு மட்டுமே புரிய கூடிய ரகசியமோ ? என்று சிந்தித்தவன், இதுதான் ரவி சொன்ன கடிதமாக இருக்கமுடியும் என்று தீர்மானித்தான்.
உடனடியாக அந்த புத்தகத்திலிருந்த மற்றொமொரு காகிதத்தையும் பிரிக்கலானான்.
அதிலிருந்த எழுத்துக்கள் வட்டமும் கோடுமாய் புரியாமல் இருக்க அது ரமணியம்மாள் உரைத்த கடிதம் என்பதை யூகித்தான்.
இதற்கான அர்த்தத்தை உடனே அறிந்து கொள்ள வேண்டும். கல்வெட்டியல் அறிந்த யாரையாவது அணுக வேண்டும் என எண்ணி ஸ்டேஷனுக்கு புறப்பட்டான்.
வானில் இருள் சூழ சூழ, வீரேந்திரனின் மனதிலும் மெல்ல மெல்ல இருள் படர தொடங்கியது.
இந்த நொடிவரை ஏதோ ஒரு சிறு நம்பிக்கை அவனுக்குள் ஓட்டிக் கொண்டிருந்தது.
அதற்கு காரணம் ஆதியும் தமிழும் பத்திரிக்கை துறையில் இருப்பவர்கள். இருவருமே தைரியத்திற்கும் புத்திசாலித்தனத்திற்கும் குறைந்தவர்கள் அல்ல. சவாலான காரியங்ளில் ஈடுபடுவது அவர்கள் வேலைகளில் நிச்சயம் பழக்கமான ஓன்றாக இருக்கும்.
ஆகையால் அவர்கள் அத்தனை சுலபமாய் தொலைந்திருப்பார்கள் அல்லது கடத்தப்பட்டிருப்பார்கள் என்று அவன் எண்ணவில்லை.
ஆனால் இப்போது அவளின் கார் தனியே நின்றதை பற்றி எண்ணியவனின் நம்பிக்கை மொத்தமாய் உடைந்து போக செய்திருந்தது.
இதற்கு மேல் காலதாமதம் செய்யாமல் அவர்களை தேடுவதற்கான பணியை தீவிரப்படுத்த எண்ணியவன், ஆதிபரமேஸ்வரி மற்றும் தமிழின் புகைபடங்களையும் எல்லா காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தான்.
அவனின் சந்தேகமெல்லாம் தர்மாவின் பிண்ணனியிலிருந்து அந்த சிலைகளை கடத்தும் கும்பல் மீதுதான். அவர்கள்தாள் இதை செய்திருக்க முடியும். ஆனால் இப்போதுவரை அந்த கும்பலை பற்றிய எந்த வித தகவலும் காவல்துறையிடம் இல்லை.
அவர்கள் எங்கிருந்து செயல்படுகிறார்கள் எப்படி சிலைகளை கடத்துகிறார்கள், அந்த சிலைகள் எந்த மார்க்கமாக வேற்றுநாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது இப்படியாக எந்த வித தகவலும் கிடைக்க பெறாமல் எல்லாமே மர்மமாகவே இருந்தது.
ஆனால் பல சிலைகள் காணாமல் போனதும் அதற்கு பிண்ணனியில் தர்மாவின் கைங்கரியம் இருக்கிறது என்பது மட்டுமே காவல்துறைக்கு கிடைத்த ஒரே ரகசிய தகவல். அப்பொழுதே இந்த வழக்கு அவன் பொறுப்பிற்கு வந்துவிட்டது.
தர்மாவை கையும் களவுமாய் பிடித்துவிடலாம் என்று காத்திருந்த சமயத்தில்தான் அவரும் மரணித்தார்.
ரொம்பவும் தாமதமாய் அந்த வழக்கில் அவன் நுழைந்தது போல் காட்டிக் கொண்டாலும் முன்னமே அவன் பல தகவல்களை ரகசியமாய் சேகரித்திருந்தான்.
தர்மாவின் மரணத்திற்கான விடையும் அந்த மர்ம கும்பல் பற்றிய விவரங்களை ஒரு சேர அறிய வேண்டுமெனில் மீண்டும் அவர்கள் ஏதேனும் ஒரு கடத்தலில் ஈடுபட வேண்டும். அப்போதே திட்டமிட்டு அவர்களின் கூட்டத்தை பிடிக்க இயலும் என்று எண்ணி அதற்காக காத்துகிடந்தான்.
இந்த எண்ணங்களோடு யோசனையில் ஆழ்ந்தவன், ஸ்டேஷனை வந்தடைந்தான்.
வேகமாய் தன் அறைக்குள் சென்று அந்த கல்வெட்டெழுத்துக்கள் பற்றி தெரிந்தவர்கள் யாரையாவது தொடர்பு கொண்டு அந்த கடிதத்தின் அர்த்தத்தை கண்டிப்பிடிக்கும் முயற்சியில் முனைப்பாய் இறங்கினான்.
அவனின் முயற்சியின் பலனாக அந்த கடித்ததின் அர்த்தம் விளங்கிற்று.
'நாங்க தேடிற அந்த பொக்கிஷம் உன்கிட்டதான் இருக்குன்னு எங்களுக்கு தெரியும். அதை நீயே கொடுத்திட்டா உனக்கும், உன்னை சுற்றியிருக்கவங்களுக்கும் நல்லது.
அப்படி கொடுக்கலன்னா விளைவுகள் ரொம்ப விபரீதமா இருக்கும் செந்தமிழ்.
யோசிச்சி முடிவெடு'
வீரேந்திரனுக்கு இதனை தெரிந்து கொண்டதும் பதட்டம் அதிகரிக்க, தமிழ் எப்படி இதனை எதிர்கொண்டிருப்பாள் என்று யோசிக்கலானான்.