Chitrasaraswathi
முதலமைச்சர்
பதிவை சுவாரசியமாக கொண்டு செல்லுகின்ற உங்கள் பாணி அருமை அடுத்த பதிவை உடன் தரவு ம்
Nice updateதமிழிடம் ஏதோ பொக்கிஷம் இருக்கிறது. அந்த கடத்தல் கும்பலுக்கு அது தெரிந்து இருக்ககூடும். ஆனால் அது என்ன பொக்கிஷம்?
வீரேந்திரன் அவளின் அலுவலகத்தில் நடைபெற்ற திருட்டை பற்றி நினைவுகூர்ந்தவன், தன் மெயிலுக்கு வந்திருந்த அந்த சிசிடீவி காட்சிகளை பார்த்தான்.
அவள் கேபின் முழுக்க இருள் சூழ்ந்தபடி இருக்க இருளில் மறைந்தவாறு முகத்தை மூடியிருந்த மர்ம நபர் நுழைந்து அவள் மேஜை பொருட்களை ஆராய்வதையும், பிறகு டிராவின் பூட்டை உடைத்து அதிலிருந்த எதையோ எடுத்து தன் பேகில் நுழைத்துவிட்டு பின் ஒரு லெட்டரை எடுத்து மேஜை மீது வைத்துவிட்டு புறப்படுவதையும் பார்த்தவன் நிச்சயம் அவன் எடுத்தது அந்த டைரியாகதான் இருக்க கூடும் என்று எண்ணி கொண்டான்.
அப்படி என்ன அந்த டைரி முக்கியத்துவம் வாய்ந்தது.
அதை எதற்காக தமிழ் தர்மாவின் அறையிலிருந்து எடுத்தாள்.
சுழலில் மாட்டிய உணர்வு...
எல்லாமே புதிர்களாய் இருக்க அந்த புதிர்களுக்கு விடையளிக்க தமிழால் மட்டுமே முடியும். ஆனால் இப்போது அவள் எங்கே என்ற கேள்விக்கே அவனிடம் விடையில்லை.
அந்த பொக்கிஷத்திற்காகதான் அவளை கடத்தியிருப்பார்கள் என்று கணித்தவன்
அதனை பற்றிய தகவல் நிச்சயம் தர்மாவின் வீட்டில் கிடைக்க பெறலாம் என அந்த இரவில் அங்கே புறப்பட்டு சென்றான்.
தர்மாவின் அறையில் இருந்த ஓவியங்களை மீண்டும் பார்வையிட்டான்.
அந்த கப்பல்கள், கோவில், இறைவியின் சிலை, அடுத்த ஓவியம் இல்லாத ஒரு பலகை...
இவையெல்லாம் தமிழின் முன்னோர்களின் வரலாறு என ரகு, தமிழ் சொன்னதாக உரைத்ததை இப்போது நினைவுபடுத்தி கொண்டான்.
அந்த காலியான பலகையில் என்ன ஓவியம் இருந்திருக்க கூடும்...
மற்ற மூன்று ஓவியங்களுக்கும் தொடர்புடையதாகவும்
அதே நேரத்தில் அந்த பொக்கிஷத்தை குறித்த ஏதோ ஒரு முக்கியமான தகவல்தான் அந்த கடைசி ஓவியமாக இருக்கும்..?
அந்த சமயத்தில்தான் அவனின் கைப்பேசி ஒலித்து அவன் எண்ணங்களை திசைதிருப்ப, அதனை எடுத்த போது அவன் அம்மாவின் அழைப்பு...
தமிழை காணோம் என்பதை பற்றிய விஷயம் தெரிந்திருக்குமா என்ற யோசனையோடு அழைப்பை ஏற்றான்.
அவர் குரல் நடுக்கத்தோடு "எங்க இருக்க வீர் ?" என்று கேள்வி எழுப்பினார்.
அம்மாவுக்கு தமிழை காணோம் என்கிற விஷயம் தெரிந்திருக்குமா என்று சந்தேகித்தவன், எதற்கும் விஷயத்தை தானே வெளிப்படுத்திவிடாமல் " நான் ஸ்டேஷன்லதான் இருக்கேன்... ஏன் கேட்கிறீங்க..." என்றான்.
"அதில்ல வீர்... வந்ததிலிருந்து உங்க அப்பா ஒண்ணும் சரியில்லை... அவர் பேசிறதெல்லாம் கேட்டு எனக்கு ரொம்ப பயமாயிருக்கு"
"என்ன சொன்னாரு ?"
"அவருக்கு தமிழ் மேல ஏதாச்சும் கோபமா தெரியலடா... அவ இனிமே இந்த வீட்டுக்கு மருமக இல்லன்னு சொல்றாரு... இனிமே அவ இந்த வீட்டு வாசப்படியே மிதிக்க கூடாதாம்" என்றார்.
ஏற்கனவே பிரச்சனைகள் தலைக்கு மேல் இருக்க இவற்றை எல்லாம் கேட்டு இன்னும் வெறுப்படைந்தவன் "அவருக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சும்மா... நீங்க டென்ஷனாகதீங்க" என்றான்.
"டே... என்னடா பேசிற ?!"
"நான் எதுவும் பேச விரும்பல... அவரும் தேவையில்லாம எதுவும் பேசிட்டிருக்க வேண்டாம்னு சொல்லுங்க... நான் போஃனை வைக்கிறேன்" என்று சொல்லும் போதே அருகில் அவன் தந்தையின் குரல் கேட்டது.
' உன் பிள்ளைகிட்ட நான் சொன்னதெல்லாம் சொல்லிட்டிருக்கியா... ஹ்ம்ம்... அவன் பொண்டாட்டிக்கு அந்த அரண்மனைதான் முக்கியமா... அவன் முக்கயமில்லையாம்... இதையும் சொல்லு ..." என்றார்.
அவன் கோபமாக தன் அம்மாவிடம் "மா... போஃனை ஸ்பீக்கர்ல போடுங்க" என்றான்.
"எதுக்கு வீர் ?" என்று சந்திரா கேட்க "சொல்றதை செய்யுங்கமா" என்றான் அதிகார தொனியில்.
அவன் சொன்னதை போலவே சந்திராவும் போஃனை ஸ்பீக்கரில் போட்டுவிட்டார்.
"அப்பா..." என்றழைக்க எதிர்புறத்தில் பதில் இல்லை. ஆனால் அவர் கேட்டு கொண்டிருப்பார் என்பதை அறிந்தவன் பேசத் தொடங்கினான்.
"நல்லா கேட்டுங்கோ... இந்த ஜென்மத்தில தமிழ்தான் எனக்கு மனைவி உங்களுக்கு மருமக... அதை யாராலயும் இனி மாத்தவும் முடியாது... மறுக்கவும் முடியாது"
எதிர்புறத்தில் மகேந்திரனின் குரல் கம்பீரமாய் ஒலித்தது.
"நான் எதையும் மாத்தனும்னோ மறைக்கனும்னோ நினைக்கல வீர்... எனக்கு வேண்டியதெல்லாம் அந்த அரண்மனை... அவ்வளவேதான்"
"அந்த அரண்மனையை அவ ரொம்ப நேசிக்கிறா... அதை விட்டுடுங்க..."
"முடியாது... அந்த அரண்மனையை டெமாலிஷ் பண்ணதான் போறேன்"
"நெவர்... அந்த அரண்மனையில இருந்து ஒரு செங்கலை கூட யாரும் பெயர்த்தெடுக்க விடமாட்டேன்... சொல்லிட்டேன்" என்று தீர்க்கமாய் சொல்லி அவர் பதிலுக்கு காத்திராமல் அடுத்த கணமே அழைப்பை துண்டித்துவிட்டான்.
அந்த சம்பாஷணை முடிந்ததும் வீரேந்திரனுக்கு மின்னல் போல ஒரு எண்ணம் தோன்றி மறைய,
அந்த கடைசி ஓவியம் என்னவாக இருக்கும் என்பதை அப்போது யூகித்தான்.
************
இருள் சூழ்ந்த அறை
அந்த அறை முழுக்கவும் இருள் கவ்வி கொண்டிருந்தது.
சற்று முன்பு நிகழ்ந்தது என்ன ? எப்படி தப்பித்து இந்த அறைக்குள் வந்தோம். ஆதி தனக்குத்தானே கேட்டு குழம்பி கொண்டாள்.
அதே நேரம் நடந்தவை எல்லாம் தமிழின் சாமர்த்தியத்தால் நிகழ்ந்தது என்பதும் அவளுக்கு புரிந்தது.
அந்த அறையின் இருள் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்க்க முடியாதளவில் அடர்ந்திருந்தது. ஆதலால் அந்த இரு தோழிகளும் தங்கள் கரங்களை இறுக்கி கோர்த்து கொண்டனர்.
மேலும் அந்த அறைக்குள் காலடி சத்தங்களும் கூச்சல்களும் கேட்டு அவர்களை கொஞ்சம் திகிலூட்டி கொண்டிருந்தன.
அப்போது அந்த அறையின் மேலிருந்த சிறு துவாரத்தின் வழியே ஏதோ ஒரு ஒளி நுழைந்து அந்த இடத்தை நிரப்ப, அந்த இரு தோழிகளின் மனதிலும் நம்பிக்கையின் ஒளி படர்ந்தது.
அது ஏதோ ஒளி அல்ல. வான்மதியோனின் ஒளி... அன்று நிலவின் வருகை மட்டும் இல்லாமல் போயிருந்தால் அவர்கள் மொத்தமாய் இருளுக்குள் மூழ்கிகிடக்க வேண்டியதுதான்.
அந்த அறைக்குள் காற்றில்லை. போதாக் குறைக்கு அந்த அறை முழுக்கவும் அசுத்தமாயிருக்க, ஆதிக்கு தும்மல் வந்து 'ஹச்' என்று தும்மிவிட்டாள்.
தமிழ் அவசரமாய் தன் கரத்தால் ஆதியின் வாயை பொத்திவிட்டு, உடனடியாக அடுத்த தும்மலை அவள் வெளிவிட்டாள்.
பிறகு இருவருமாக சேர்ந்தே தொடர்ந்து 'ஹச் ஹச் ஹச்' என்று தும்மிவிட, ஒரு குரல் ஈனஸ்வரத்தில் கேட்டது.
"எங்கடி இருக்கீங்க..?"
அடுத்து அதிகாரமாய் ஒரு குரல் "நல்லா தேடுங்கடா" என்றும்
பின்பு இன்னொரு குரல் மிரட்டல் தொனியில் "எங்கிருந்தாலும் விட மாட்டோம்... நீங்க தப்பிக்க முடியாது!"
இந்த குரல்களுக்கெல்லாம் பதிலுரையாய் "முடிஞ்சா பிடிச்சி பாருங்கடா" என்று தமிழ் சவாலாய் உரைக்க, ஆதி உடனே தன் தோழியின் கரத்தில் சுருக்கென கிள்ளிவிட்டாள்.
வாடி என் தமிழச்சி... முடிவை நோக்கிய பயணம்...
உங்களின் கருத்துதான் என்னுடைய பலமான ஊக்கம்... அதுவல்லாது என் எழுத்துபிழைகளையும் பொறுத்தமைக்கு ரொம்பவும் நன்றி...
இப்படியே தொடர் ஊக்கத்தை தந்து கொண்டிருக்கவும்...
விரைவில்... நான் அவள் இல்லை பயணத்தை ஆரம்பிப்போம்.
மறவாமல் லைக் பட்டனை அழுத்திவிடுங்கள்.
Thank you my dear friends
Thanks paAwesome episode dear. U make us sit on the edge of the seat every time.
Dont worry bhagyaEnnathu story ah mudikkaporeengalah? I can't accept this..??? yethukka ivalo seekiram finish panreenga..? Please thamizh and veer character ah eppdiyaavathu continue pannunga..like part1,part2..thamizh character kku anthaalavu potential irukku.. innum niraiya antique things excavate panramaathiri, nammaloda kadathappatta silaikalai meetedukra maathiri..ippadi eppdiyaavathu intha story line ah continue pannunga..please please ..don't stop this story as such as...this is my humble request.consider it..I really gonna miss thamizhachi?????...I just love this story....