Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
உலக புத்தக தின வாழ்த்துக்களோடு இன்றைய அத்தியாயம்...
சுமை சுகமானது
நாட்கள் கடந்து மாதங்களாக மாறியிருக்க வீரேந்திரன் சிலைக்கடத்தல் வழக்கில் தீவிரமாய் இறங்கியிருந்தான். உமேஷ் தர்மாவை கொலை செய்த குற்றத்தை ஏற்று கொண்டாலும் சிலை கடத்தல் நெட்வொர்க் பற்றிய முழுமையான தகவல் அவனிடமே இல்லை.
அதுவும் இல்லாமல் தர்மாவின் கொலை வழக்கு எப்போது சிலைக்கடத்தல் மற்றும் பொக்கிஷங்களை கடத்தும் குற்றம் சார்ந்து விசாரிக்கப்பட ஆரம்பித்ததோ, அன்றிலிருந்து வீரேந்திரனுக்கு பெருமளவிலான இடையூறுகளும் வர ஆரம்பித்தன.
உயர்மட்ட அரசியல்வாதிகள் அவனை அந்த வழக்கின் விசாரணை அதிகாரி என்ற பதவியிவிருந்து நீக்க யத்தனிக்க, அந்த நேரத்தில் தமிழச்சி மற்றும் பாரதி பத்திரிக்கை இதனை மக்களின் பார்வைக்கு கொண்டு சேர்த்தது.
அந்த வழக்கின் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் மக்களால் அதிகம் பகிரப்பட, வீரேந்திரனின் தடை நீங்கி அவனே அதன் விசாரணை அதிகாரியாய் தொடர்ந்தான்.
மக்களின் சக்திக்கு முன் அரசியல் சக்திகளும் அடிப்பணியவே நேரிட்டன.
அவன் மீண்டும் அந்த வழக்கில் முழு மூச்சோடு செயல்பட தொடங்கினான்.
அந்த குற்றத்தின் பிண்ணனியில் இருக்கும் அந்த பெரிய நெட்வொர்க் கொஞ்சம் கொஞ்சமாய் அவன் பிடிக்குள் சிக்க தொடங்கியது.
இதற்கு பிண்ணனியில் அறநிலைத்துறை அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவர இன்னும் பரவலாய் இந்த வழக்கு பேசப்பட்டது.
வீரேந்திரன் குற்றவாளிகளை பிடிப்பதில் மட்டும் தீவிரம் காட்டாமல் தொலைந்து போன சிலைகளையும் பொக்கிஷங்களை மீட்பதிலும் அதிதீவிரமாய் இருந்தான்.
செய்தி தாள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் அவனை பற்றிய பாராட்டுரைகள் ஓயாமல் ஒலிக்க தொடங்கின.
இவற்றை எல்லாம் கண்ட மகேந்திர பூபதி பூரித்து போயிருந்தார்.
இருப்பினும் தன் மகனை அழைத்து பாராட்ட மனம்வராமல் தன் ஈகோவை கெட்டியாய் பிடித்து கொண்டிருந்தார்.
கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு மேலாய் மகனுடன் பேச்சு வார்த்தையே இல்லை.
அதற்கு காரணம் வீரேந்திரன் தன் மனைவிதான் முக்கியம் என்று வீட்டை விட்டு வெளியேறியது.
எந்த தந்தைக்குதான் கோபத்தை வரவழைக்காது ?அதுதான் அவரின் ஈகோவை அதிகமாய் வேரூன்றி வளரச் செய்திருந்தது. ஆனால் அது அவர் பக்கத்திலான நியாயம் மட்டுமே!
கட்டிய மனைவியை வீட்டிற்குள் வர விடாமல் தடுக்கும் தந்தையிடம் எத்தனையோ விதமாய் சமாதானம் பேசி பார்த்தவன் இறுதியாய் முடியாமல் மனைவியோடு தானும் வெளியேறிவிட்டான்.
இத்தகைய நிலையில் மகேந்திர பூபதி அரண்மனையை இடித்துவிட்டு பெரியளவிலான பிரொஜக்ட்டை அங்கே கொண்டுவர எண்ணியிருந்தார்.
அதுவும் இயலாமல் போக அடிப்பட்ட சிங்கம் போல அவ்வப்போது தன் மனைவியிடம் மட்டும் கர்ஜித்து கொண்டிருந்தார்.
இன்றும் தொலைக்காட்சியில் மகனின் முகத்தை பார்த்து அவருக்குள் இருந்த ஏக்கத்தையும் வேதனையையும் மனைவியிடம் காட்டிக் கொண்டிருந்தார்.
"உன் மகனுக்கு நேத்து வந்தவதான் முக்கியம்... நம்மல பத்தி கொஞ்சங் கூட அக்கறையே இல்லை" என்று உரைக்க மேஜை மீது உணவு பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்த சந்திரா இறுகிய முகத்தோடு அவர் முன்பு வந்து நின்றார்.
"உங்களுக்கு மட்டும் அவனை பத்தி கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா? மருமக மகனைவிட அந்த அரண்மனைதான் ரொம்ப முக்கியமா ..?" என்று கேள்வி எழுப்பினார்.
"ஆமான்டி... அவனுக்கு அவன் பிடிவாதம்னா... எனக்கு என் பிடிவாதம்... நான் அந்த அரண்மனையை இடிக்காம விடமாட்டேன்" என்றார்.
சந்திராவிற்கு தன் கணவன் இத்தனைக்கு பிறகும் அந்த அரண்மனை விஷயத்தில் இறங்கி வராமல் உச்சாணி கொம்பிலேயே நிற்கிறாரே என வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது.
என்ன செய்வது? அதுதான் மகேந்திரனின் குணம்.. அதுதான் வீரேந்திரனின் குணமும் கூட...
வீரேந்திரனும் அவ்வாறே தன் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்காமல் அரண்மனையில் தன் மனைவியோடு தங்கியிருந்தான்.
அவர்கள் அங்கே இருக்கும் வரை தன் தந்தை அரண்மனையை தகர்க்க முயற்சிக்கமாட்டார் என்பதே அவன் எண்ணம்.
இந்த கோபத்தை எல்லாம் மகேந்திரபூபதி விக்ரமவர்மனிடம் திருப்பியிருந்தார். அவரின் தொழில் முதற்கொண்டு எல்லாவற்றையும் முடக்கி தன் பணத்தை உடனடியாய் திருப்பி தரும்படி பணித்திருந்தார்.
விக்ரமவர்மன் ரொம்பவும் மனம் நொந்திருந்திருக்க தமிழ்தான் இவை எல்லாவற்றிற்றுக்கும் காரணம் என்ற கோபம் அவருக்கு!
இந்த சமயத்தில் விஜயா தேவியை தமிழுக்கு துணையாக அரண்மனைக்கு அனுப்பியிருப்பது அறிந்து அவர் அதீத சீற்றமானார்.
"யாரை கேட்டு நீ தேவியை அனுப்பின...?" என்றார்.
"இல்லை தமிழ்தான் அவ்வளவு பெரிய அரண்மனையில தனியா கஷ்டமாயிருக்குன்னு" என்று அவர் தயங்கி சொல்லும் போதே இடைமறித்தவர்
"அவ அந்த அரண்மனை தான் முக்கியம்னு நம்ம எல்லோரையும் தூக்கி எரிஞ்சிட்டு போயிட்டா ?...அப்புறம் என்ன ?!"
"அப்படி எல்லாம் இல்லங்க... தமிழ் அப்படி எல்லாம் யோசிக்க மாட்டா"
அவர் முகத்தில் வெறுப்பு கலந்த ஒரு புன்னகை இழையோடியது.
"என்ன விஜயா? நானும் கொஞ்ச நாளா பார்க்கிறேன்... உன் பிள்ளையும்... நீயும்... அவளை தலையில தூக்கி வைச்சி ஆடிறீங்க... இனிமே என்னால எந்த பிரோஜனமும் இல்லன்னு... அவ பக்கம் சாயிறீங்களாக்கும்" என்றான்.
விஜயாவிற்கு அவர் சொன்னதற்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. சொத்திற்காகவும் பணத்திற்காகவும் ஆசைப்பட்ட போதெல்லாம் இப்படி ஒரு பழி சுமத்தப்படவில்லையே !
ஆனால் இன்று அவர் மனம் திருந்தியிருந்த நிலையில் அந்த வார்த்தை அவரை ரொம்பவும் காயப்படுத்தியிருக்க அப்படியே மௌனகதியில் நின்றார்.
ரவி தந்தை சொன்னதெல்லாம் கேட்டபடியே பின்னோடு வந்தவன் "ஏன் இப்படி எல்லாம் பேசிறீங்கப்பா?... நானும் அம்மாவும் சொத்து பணம்னு ஒரு காலத்தில யோசிச்சிருக்கோம்... ஆனா அதெல்லாம் ஒண்ணுமே இல்லன்னு அக்கா எங்களுக்கு புரிய வைச்சிட்டா... எவ்வளவோ நாங்க அக்காவுக்கு எதிரா செஞ்சிருக்கும்... அதெல்லாம் தெரிஞ்சும்... அக்கா எங்களை விட்டு கொடுக்கல.. அப்பதான் பணம் காசைவிட உறவு பெரிசுன்னு புரிஞ்சுது... இப்ப கூட அக்கா அந்த அரண்மனைக்காக இவ்வளவு தூரம் நிற்கிறான்னா அதுக்கு காரணம் இல்லாம இருக்காது" என்று பொறுமையாய் விளக்க, அவனின் பேச்சும் அதில் வெளிப்பட்ட முதிர்ச்சியும் விக்ரமவர்மனுக்கு புதிராகவே இருந்தது.
இருந்தும் விக்ரமவர்மனுக்கு அவரின் மனக்குமறல் அடங்கவில்லை.
அவர் தன் மகனை நோக்கி "உனக்கு நம்ம நிலைமை புரியுதா இல்லையா... தமிழ் கையெழுத்து போடலன்னா நம்ம எல்லோரும் நடுத்தெருவுல நிற்கனும்" என்றார்.
ரவி சிறிதும் யோசிக்காமல் "அக்கா நம்மல அப்படி விட்டிற மாட்டாப்பா... இந்த பிரச்சனையை அக்கா சரி பண்ணிடுவா... நீங்க பாருங்க" என்று தீர்க்கமாய் சொல்லிவிட்டு அவன் அதற்கு மேல் தன் தந்தையிடம் அந்த விஷயம் குறித்து விவாதிக்காமல் அகன்றான்.
விக்ரமவர்மனுக்கு தமிழுக்கும் இடையிலான உறவில் ஆரம்பித்திலிருந்தே பெரும் இடைவெளி இருந்தது.
அந்த இடைவெளியை அவரின் தந்தை சிம்மவர்மன்தான் நிரப்பியிருந்தார். ஆனால் அவர் மரணத்திற்கு பின் தந்தைக்கும் மகளுக்கும் இடையில் ஏற்பட்ட வெற்றிடம் நிரப்படாமலே இருந்தது.
இன்றளவிலும் அது அப்படியே இருக்க, பிரச்சனைகள் ஓய்ந்து அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் நாளும் வெகு தொலைவில் இல்லை.
*********
சிம்மவாசல் அரண்மனையை விட்டு வெகுதொலைவு வந்த அந்த கார், ஒரு கோவிலின் முன்புற வாசலில் வந்து நின்றது.
தமிழ் தனக்கே உரிய கம்பீரத்தோடு இறங்க தேவியும் அவளோடு இறங்கினாள்.
தேவி வண்ண
தவாணியில் மின்னிக் கொண்டிருக்க, தமிழோ எப்போதும் போலான அவளின் உடையிலும் நடையிலும் மாற்றங்கள் இல்லை. ஜீன்ஸ் பேன்டும் நீல நிற டாப்ஸும் அதே மார்டன் தமிழச்சிதான்.
அக்கா தங்கை இருவருக்கும் மலைக்கும் மடுவுக்கான வித்தயாசம். இருவரும் வேறு வேறு பாணியான உடையமைப்பில் இருக்க, தேவி உள்ளே செல்வதற்கு முன் பூக்கடையின் வாசலில் நின்றபடி "அக்கா இரு... பூ வாங்கிட்டு வர்றேன்" என்றாள்.
"நீ வாங்கிக்கோ தேவி"
"அப்படியெல்லாம் சொல்ல கூடாது... " என்றவளை தமிழ் முறைத்து பார்த்தாள். தான் விரும்பாதவற்றை தன் மீது தினிக்காதே என்பது போன்ற பார்வை.
அவளுக்கு திருமணத்திற்கு பின்பு வேறொரு பிம்பமாய் தன்னை மாற்றிக் கொள்ள இன்றளவும் அவள் மனம் ஏற்கவில்லை. முன்பு எப்படி இருந்தாலோ அப்படியே தன்னை அடையாளப்படுத்தி கொள்ளவே எண்ணினாள்.
தமிழ் அக்காவின் பார்வை புரிந்தவளாய் திரும்பி "ஒரு மொழம் கொடுங்கக்கா" என்று சொல்லும் போதே "இல்ல இரண்டு மொழமா கொடுத்திருங்க" என்றது ஒரு ஆண்மை நிரம்பிய குரல்.
திரும்பி பார்த்தவளுக்கு ரகு நிற்பது புரிய சட்டென்று உதட்டில் தவழ வந்த புன்னகை வெளிவராமல் உள்ளேயே சென்று ஒளிந்து கொண்டது.
முகத்தை திருப்பிக் கொண்டு அந்த பெண்ணிடம் மீண்டும் "ஒரு மொழம் கொடுங்கக்கா போதும்" என்று சொல்ல அவன் பின்னோடு நின்றபடி "உன் லாங் ஹேருக்கு பத்துமா? !" என்று கேட்டு புருவத்தை உயர்த்தி அவன் உதிர்த்த புன்னகை அவள் இதயத்தோடு சென்று ஒட்டிக் கொள்ள, அவள் இன்னும் சிலநொடிகள் இங்கிருந்தால் தான் அவனிடம் முற்றிலுமாய் தொலைந்தே போவோம் என எண்ணியவள் தன் தமக்கையை தேடினாள்.
அவள் அங்கு இல்லை.
கோவிலுக்குள் சென்றிருப்பாள் என எண்ணி உள்ளே சென்றுவிட அந்த பூக்காரப் பெண்ணோ பூ வாங்கிவிட்டு செல்ல சொல்லி கதற, அவள் திரும்பவேயில்லை.
அந்த பெண் தனக்கு நடக்க இருந்த வியாபாரத்தை கெடுத்துவிட்டான் என எண்ணி ரகுவை பார்த்து வசைமாறி பொழிந்தாள்.
தேவி சென்ற திசையிலேயே நிலைகுத்தி பார்த்து கொண்டிருந்தவன் அந்த பெண்ணின் பாராட்டு மழைகளை காது கொடுத்தும் கேட்கவில்லை.
இப்படி ஒரு தேவதை தனக்கு உரிமையாவாளா என்ற ஏக்கம் ஆனந்தம் தவிப்பு என எல்லா உணர்வுகளும் அவனுக்குள் பின்னிப் பிணைந்திருக்க இறுதியாய் அவனை பார்த்து அந்த பூ விற்கும் பெண் முறைப்போடு "காலங்காத்தால பொழப்பை கெடுக்க வந்துட்டானுங்க.. உன்னை மாதிரி பொம்பள புள்ளகிட்ட வம்பு பன்றவனை எல்லாம் போலீஸ்ல பிடிச்சி கொடுக்கனும்" என்று சொல்லவும் அவனுக்காக பரிந்து கொண்டு வந்தாள் அவன் உயிர் தோழி.
"நானும் பார்த்திட்டிருக்கேன்.. நீங்க ரொம்ப ஓவரா பேசிட்டிருக்கீங்க... அவன் யாருன்னு தெரியாமாம்மா... மஹாபலிபுரம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்" என்றுரைக்க அந்த பெண் முதற்கொண்டு அந்த காட்சியை நேரம் போகாமல் பார்த்திருந்த அனைவரும் வாயடைத்து போயினர்.
இப்போது ரகு சுதாரித்தபடி தன் தோழியின் கரத்தை பற்றி ஓரமாய் அழைத்து வந்தவன் "இப்ப எதுக்கு சம்பந்தமில்லாம என் டீடைல்ஸ் எல்லாம் அந்த அம்மாகிட்ட கொடுத்திட்டிருக்க" என்றான்.
"டே அந்த லேடி ஓவரா பேசுது... உன்னையே போலீஸ்ட்ட பிடிச்சி கொடுத்திருவன்னு சொல்லுது... அதான் உன் பவர் என்னன்னு சொன்னேன்." என்று அவள் இறுக்கத்தோடு பதிலுரைத்தாலும் அதிலுள்ள குறும்புதனத்தை அவன் அறிந்து கொண்டான்.
சுமை சுகமானது
நாட்கள் கடந்து மாதங்களாக மாறியிருக்க வீரேந்திரன் சிலைக்கடத்தல் வழக்கில் தீவிரமாய் இறங்கியிருந்தான். உமேஷ் தர்மாவை கொலை செய்த குற்றத்தை ஏற்று கொண்டாலும் சிலை கடத்தல் நெட்வொர்க் பற்றிய முழுமையான தகவல் அவனிடமே இல்லை.
அதுவும் இல்லாமல் தர்மாவின் கொலை வழக்கு எப்போது சிலைக்கடத்தல் மற்றும் பொக்கிஷங்களை கடத்தும் குற்றம் சார்ந்து விசாரிக்கப்பட ஆரம்பித்ததோ, அன்றிலிருந்து வீரேந்திரனுக்கு பெருமளவிலான இடையூறுகளும் வர ஆரம்பித்தன.
உயர்மட்ட அரசியல்வாதிகள் அவனை அந்த வழக்கின் விசாரணை அதிகாரி என்ற பதவியிவிருந்து நீக்க யத்தனிக்க, அந்த நேரத்தில் தமிழச்சி மற்றும் பாரதி பத்திரிக்கை இதனை மக்களின் பார்வைக்கு கொண்டு சேர்த்தது.
அந்த வழக்கின் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் மக்களால் அதிகம் பகிரப்பட, வீரேந்திரனின் தடை நீங்கி அவனே அதன் விசாரணை அதிகாரியாய் தொடர்ந்தான்.
மக்களின் சக்திக்கு முன் அரசியல் சக்திகளும் அடிப்பணியவே நேரிட்டன.
அவன் மீண்டும் அந்த வழக்கில் முழு மூச்சோடு செயல்பட தொடங்கினான்.
அந்த குற்றத்தின் பிண்ணனியில் இருக்கும் அந்த பெரிய நெட்வொர்க் கொஞ்சம் கொஞ்சமாய் அவன் பிடிக்குள் சிக்க தொடங்கியது.
இதற்கு பிண்ணனியில் அறநிலைத்துறை அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவர இன்னும் பரவலாய் இந்த வழக்கு பேசப்பட்டது.
வீரேந்திரன் குற்றவாளிகளை பிடிப்பதில் மட்டும் தீவிரம் காட்டாமல் தொலைந்து போன சிலைகளையும் பொக்கிஷங்களை மீட்பதிலும் அதிதீவிரமாய் இருந்தான்.
செய்தி தாள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் அவனை பற்றிய பாராட்டுரைகள் ஓயாமல் ஒலிக்க தொடங்கின.
இவற்றை எல்லாம் கண்ட மகேந்திர பூபதி பூரித்து போயிருந்தார்.
இருப்பினும் தன் மகனை அழைத்து பாராட்ட மனம்வராமல் தன் ஈகோவை கெட்டியாய் பிடித்து கொண்டிருந்தார்.
கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு மேலாய் மகனுடன் பேச்சு வார்த்தையே இல்லை.
அதற்கு காரணம் வீரேந்திரன் தன் மனைவிதான் முக்கியம் என்று வீட்டை விட்டு வெளியேறியது.
எந்த தந்தைக்குதான் கோபத்தை வரவழைக்காது ?அதுதான் அவரின் ஈகோவை அதிகமாய் வேரூன்றி வளரச் செய்திருந்தது. ஆனால் அது அவர் பக்கத்திலான நியாயம் மட்டுமே!
கட்டிய மனைவியை வீட்டிற்குள் வர விடாமல் தடுக்கும் தந்தையிடம் எத்தனையோ விதமாய் சமாதானம் பேசி பார்த்தவன் இறுதியாய் முடியாமல் மனைவியோடு தானும் வெளியேறிவிட்டான்.
இத்தகைய நிலையில் மகேந்திர பூபதி அரண்மனையை இடித்துவிட்டு பெரியளவிலான பிரொஜக்ட்டை அங்கே கொண்டுவர எண்ணியிருந்தார்.
அதுவும் இயலாமல் போக அடிப்பட்ட சிங்கம் போல அவ்வப்போது தன் மனைவியிடம் மட்டும் கர்ஜித்து கொண்டிருந்தார்.
இன்றும் தொலைக்காட்சியில் மகனின் முகத்தை பார்த்து அவருக்குள் இருந்த ஏக்கத்தையும் வேதனையையும் மனைவியிடம் காட்டிக் கொண்டிருந்தார்.
"உன் மகனுக்கு நேத்து வந்தவதான் முக்கியம்... நம்மல பத்தி கொஞ்சங் கூட அக்கறையே இல்லை" என்று உரைக்க மேஜை மீது உணவு பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்த சந்திரா இறுகிய முகத்தோடு அவர் முன்பு வந்து நின்றார்.
"உங்களுக்கு மட்டும் அவனை பத்தி கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா? மருமக மகனைவிட அந்த அரண்மனைதான் ரொம்ப முக்கியமா ..?" என்று கேள்வி எழுப்பினார்.
"ஆமான்டி... அவனுக்கு அவன் பிடிவாதம்னா... எனக்கு என் பிடிவாதம்... நான் அந்த அரண்மனையை இடிக்காம விடமாட்டேன்" என்றார்.
சந்திராவிற்கு தன் கணவன் இத்தனைக்கு பிறகும் அந்த அரண்மனை விஷயத்தில் இறங்கி வராமல் உச்சாணி கொம்பிலேயே நிற்கிறாரே என வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது.
என்ன செய்வது? அதுதான் மகேந்திரனின் குணம்.. அதுதான் வீரேந்திரனின் குணமும் கூட...
வீரேந்திரனும் அவ்வாறே தன் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்காமல் அரண்மனையில் தன் மனைவியோடு தங்கியிருந்தான்.
அவர்கள் அங்கே இருக்கும் வரை தன் தந்தை அரண்மனையை தகர்க்க முயற்சிக்கமாட்டார் என்பதே அவன் எண்ணம்.
இந்த கோபத்தை எல்லாம் மகேந்திரபூபதி விக்ரமவர்மனிடம் திருப்பியிருந்தார். அவரின் தொழில் முதற்கொண்டு எல்லாவற்றையும் முடக்கி தன் பணத்தை உடனடியாய் திருப்பி தரும்படி பணித்திருந்தார்.
விக்ரமவர்மன் ரொம்பவும் மனம் நொந்திருந்திருக்க தமிழ்தான் இவை எல்லாவற்றிற்றுக்கும் காரணம் என்ற கோபம் அவருக்கு!
இந்த சமயத்தில் விஜயா தேவியை தமிழுக்கு துணையாக அரண்மனைக்கு அனுப்பியிருப்பது அறிந்து அவர் அதீத சீற்றமானார்.
"யாரை கேட்டு நீ தேவியை அனுப்பின...?" என்றார்.
"இல்லை தமிழ்தான் அவ்வளவு பெரிய அரண்மனையில தனியா கஷ்டமாயிருக்குன்னு" என்று அவர் தயங்கி சொல்லும் போதே இடைமறித்தவர்
"அவ அந்த அரண்மனை தான் முக்கியம்னு நம்ம எல்லோரையும் தூக்கி எரிஞ்சிட்டு போயிட்டா ?...அப்புறம் என்ன ?!"
"அப்படி எல்லாம் இல்லங்க... தமிழ் அப்படி எல்லாம் யோசிக்க மாட்டா"
அவர் முகத்தில் வெறுப்பு கலந்த ஒரு புன்னகை இழையோடியது.
"என்ன விஜயா? நானும் கொஞ்ச நாளா பார்க்கிறேன்... உன் பிள்ளையும்... நீயும்... அவளை தலையில தூக்கி வைச்சி ஆடிறீங்க... இனிமே என்னால எந்த பிரோஜனமும் இல்லன்னு... அவ பக்கம் சாயிறீங்களாக்கும்" என்றான்.
விஜயாவிற்கு அவர் சொன்னதற்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. சொத்திற்காகவும் பணத்திற்காகவும் ஆசைப்பட்ட போதெல்லாம் இப்படி ஒரு பழி சுமத்தப்படவில்லையே !
ஆனால் இன்று அவர் மனம் திருந்தியிருந்த நிலையில் அந்த வார்த்தை அவரை ரொம்பவும் காயப்படுத்தியிருக்க அப்படியே மௌனகதியில் நின்றார்.
ரவி தந்தை சொன்னதெல்லாம் கேட்டபடியே பின்னோடு வந்தவன் "ஏன் இப்படி எல்லாம் பேசிறீங்கப்பா?... நானும் அம்மாவும் சொத்து பணம்னு ஒரு காலத்தில யோசிச்சிருக்கோம்... ஆனா அதெல்லாம் ஒண்ணுமே இல்லன்னு அக்கா எங்களுக்கு புரிய வைச்சிட்டா... எவ்வளவோ நாங்க அக்காவுக்கு எதிரா செஞ்சிருக்கும்... அதெல்லாம் தெரிஞ்சும்... அக்கா எங்களை விட்டு கொடுக்கல.. அப்பதான் பணம் காசைவிட உறவு பெரிசுன்னு புரிஞ்சுது... இப்ப கூட அக்கா அந்த அரண்மனைக்காக இவ்வளவு தூரம் நிற்கிறான்னா அதுக்கு காரணம் இல்லாம இருக்காது" என்று பொறுமையாய் விளக்க, அவனின் பேச்சும் அதில் வெளிப்பட்ட முதிர்ச்சியும் விக்ரமவர்மனுக்கு புதிராகவே இருந்தது.
இருந்தும் விக்ரமவர்மனுக்கு அவரின் மனக்குமறல் அடங்கவில்லை.
அவர் தன் மகனை நோக்கி "உனக்கு நம்ம நிலைமை புரியுதா இல்லையா... தமிழ் கையெழுத்து போடலன்னா நம்ம எல்லோரும் நடுத்தெருவுல நிற்கனும்" என்றார்.
ரவி சிறிதும் யோசிக்காமல் "அக்கா நம்மல அப்படி விட்டிற மாட்டாப்பா... இந்த பிரச்சனையை அக்கா சரி பண்ணிடுவா... நீங்க பாருங்க" என்று தீர்க்கமாய் சொல்லிவிட்டு அவன் அதற்கு மேல் தன் தந்தையிடம் அந்த விஷயம் குறித்து விவாதிக்காமல் அகன்றான்.
விக்ரமவர்மனுக்கு தமிழுக்கும் இடையிலான உறவில் ஆரம்பித்திலிருந்தே பெரும் இடைவெளி இருந்தது.
அந்த இடைவெளியை அவரின் தந்தை சிம்மவர்மன்தான் நிரப்பியிருந்தார். ஆனால் அவர் மரணத்திற்கு பின் தந்தைக்கும் மகளுக்கும் இடையில் ஏற்பட்ட வெற்றிடம் நிரப்படாமலே இருந்தது.
இன்றளவிலும் அது அப்படியே இருக்க, பிரச்சனைகள் ஓய்ந்து அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் நாளும் வெகு தொலைவில் இல்லை.
*********
சிம்மவாசல் அரண்மனையை விட்டு வெகுதொலைவு வந்த அந்த கார், ஒரு கோவிலின் முன்புற வாசலில் வந்து நின்றது.
தமிழ் தனக்கே உரிய கம்பீரத்தோடு இறங்க தேவியும் அவளோடு இறங்கினாள்.
தேவி வண்ண
தவாணியில் மின்னிக் கொண்டிருக்க, தமிழோ எப்போதும் போலான அவளின் உடையிலும் நடையிலும் மாற்றங்கள் இல்லை. ஜீன்ஸ் பேன்டும் நீல நிற டாப்ஸும் அதே மார்டன் தமிழச்சிதான்.
அக்கா தங்கை இருவருக்கும் மலைக்கும் மடுவுக்கான வித்தயாசம். இருவரும் வேறு வேறு பாணியான உடையமைப்பில் இருக்க, தேவி உள்ளே செல்வதற்கு முன் பூக்கடையின் வாசலில் நின்றபடி "அக்கா இரு... பூ வாங்கிட்டு வர்றேன்" என்றாள்.
"நீ வாங்கிக்கோ தேவி"
"அப்படியெல்லாம் சொல்ல கூடாது... " என்றவளை தமிழ் முறைத்து பார்த்தாள். தான் விரும்பாதவற்றை தன் மீது தினிக்காதே என்பது போன்ற பார்வை.
அவளுக்கு திருமணத்திற்கு பின்பு வேறொரு பிம்பமாய் தன்னை மாற்றிக் கொள்ள இன்றளவும் அவள் மனம் ஏற்கவில்லை. முன்பு எப்படி இருந்தாலோ அப்படியே தன்னை அடையாளப்படுத்தி கொள்ளவே எண்ணினாள்.
தமிழ் அக்காவின் பார்வை புரிந்தவளாய் திரும்பி "ஒரு மொழம் கொடுங்கக்கா" என்று சொல்லும் போதே "இல்ல இரண்டு மொழமா கொடுத்திருங்க" என்றது ஒரு ஆண்மை நிரம்பிய குரல்.
திரும்பி பார்த்தவளுக்கு ரகு நிற்பது புரிய சட்டென்று உதட்டில் தவழ வந்த புன்னகை வெளிவராமல் உள்ளேயே சென்று ஒளிந்து கொண்டது.
முகத்தை திருப்பிக் கொண்டு அந்த பெண்ணிடம் மீண்டும் "ஒரு மொழம் கொடுங்கக்கா போதும்" என்று சொல்ல அவன் பின்னோடு நின்றபடி "உன் லாங் ஹேருக்கு பத்துமா? !" என்று கேட்டு புருவத்தை உயர்த்தி அவன் உதிர்த்த புன்னகை அவள் இதயத்தோடு சென்று ஒட்டிக் கொள்ள, அவள் இன்னும் சிலநொடிகள் இங்கிருந்தால் தான் அவனிடம் முற்றிலுமாய் தொலைந்தே போவோம் என எண்ணியவள் தன் தமக்கையை தேடினாள்.
அவள் அங்கு இல்லை.
கோவிலுக்குள் சென்றிருப்பாள் என எண்ணி உள்ளே சென்றுவிட அந்த பூக்காரப் பெண்ணோ பூ வாங்கிவிட்டு செல்ல சொல்லி கதற, அவள் திரும்பவேயில்லை.
அந்த பெண் தனக்கு நடக்க இருந்த வியாபாரத்தை கெடுத்துவிட்டான் என எண்ணி ரகுவை பார்த்து வசைமாறி பொழிந்தாள்.
தேவி சென்ற திசையிலேயே நிலைகுத்தி பார்த்து கொண்டிருந்தவன் அந்த பெண்ணின் பாராட்டு மழைகளை காது கொடுத்தும் கேட்கவில்லை.
இப்படி ஒரு தேவதை தனக்கு உரிமையாவாளா என்ற ஏக்கம் ஆனந்தம் தவிப்பு என எல்லா உணர்வுகளும் அவனுக்குள் பின்னிப் பிணைந்திருக்க இறுதியாய் அவனை பார்த்து அந்த பூ விற்கும் பெண் முறைப்போடு "காலங்காத்தால பொழப்பை கெடுக்க வந்துட்டானுங்க.. உன்னை மாதிரி பொம்பள புள்ளகிட்ட வம்பு பன்றவனை எல்லாம் போலீஸ்ல பிடிச்சி கொடுக்கனும்" என்று சொல்லவும் அவனுக்காக பரிந்து கொண்டு வந்தாள் அவன் உயிர் தோழி.
"நானும் பார்த்திட்டிருக்கேன்.. நீங்க ரொம்ப ஓவரா பேசிட்டிருக்கீங்க... அவன் யாருன்னு தெரியாமாம்மா... மஹாபலிபுரம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்" என்றுரைக்க அந்த பெண் முதற்கொண்டு அந்த காட்சியை நேரம் போகாமல் பார்த்திருந்த அனைவரும் வாயடைத்து போயினர்.
இப்போது ரகு சுதாரித்தபடி தன் தோழியின் கரத்தை பற்றி ஓரமாய் அழைத்து வந்தவன் "இப்ப எதுக்கு சம்பந்தமில்லாம என் டீடைல்ஸ் எல்லாம் அந்த அம்மாகிட்ட கொடுத்திட்டிருக்க" என்றான்.
"டே அந்த லேடி ஓவரா பேசுது... உன்னையே போலீஸ்ட்ட பிடிச்சி கொடுத்திருவன்னு சொல்லுது... அதான் உன் பவர் என்னன்னு சொன்னேன்." என்று அவள் இறுக்கத்தோடு பதிலுரைத்தாலும் அதிலுள்ள குறும்புதனத்தை அவன் அறிந்து கொண்டான்.