• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaadi en thamizhachi - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

How was the epi?

  • மிகநன்று

    Votes: 108 91.5%
  • நன்று

    Votes: 11 9.3%
  • முன்னேற்றம் தேவை

    Votes: 0 0.0%

  • Total voters
    118

kayalvizhi.ravi.10

மண்டலாதிபதி
Joined
Jan 20, 2018
Messages
489
Reaction score
589
Location
pondicherry
Nice ud! நல்ல நட்பு நாமக்கு என்றும் தோள் கொடுக்கும் இன்பத்திலும் துன்பத்திலும், அப்படி பட்ட நட்பை பெற்ற தமிழ் அதிர்ஷ்டசாலி.
 




  • Like
Reactions: Jai

Ishwarya

நாட்டாமை
Joined
Jan 22, 2018
Messages
67
Reaction score
62
Location
Chennai
Semma epi....Frnds kuda irukara time tha besst time... Rendu perum pesi mannipu ketuta.. avaloda thappana ennam urvana reason sollita... Athuvey Avanga Rendu per kittayum oru step close aha vachudunchu.. Swetha pathi Enna solla pora ipa...??
 




Durai

புதிய முகம்
Joined
Jan 21, 2018
Messages
4
Reaction score
1
Location
Madurai
நட்பு

(தமிழச்சியை வாசகர்கள் நீங்கள் விரைவாய் பார்க்க அல்லது படிக்க ஆசைப்பட்டதால் உங்கள் விருப்பத்திற்கு இணங்க)

செந்தமிழ் தன் தந்தை சொன்ன வார்த்தைகளால் ரொம்பவும் மனதளவில் காயப்பட்டிருந்தாள். அவள் மனம் முழுக்க வலியும் வேதனையும் நிரம்பியிருக்க, தேவியோ அவளுக்கு துணையாய் சமாதானமான வார்த்தைகளை உரைத்து தேற்ற முயற்ச்சித்து கொண்டிருந்தாள்.

செந்தமிழை பொறுத்த வரை அன்னை தந்தையின் பாசம் என்பது கானல் நீராகவே போய்விட, தாத்தாவின் அரவணைப்பில் மட்டுமே வளர்ந்த அவளுக்கு கணவன் மற்றும் வாழப் போகும் குடும்பத்தின் மீது அதீதமான எதிர்பார்ப்புகளும் கனவுகளும் நிறைவே இருந்தன. இப்போது அதுவுமே தன் விருப்பம் போல் நடக்க போவதில்லை என்ற ஏமாற்றம் அவளை வேதனையுற செய்திருந்தது.

அவள் இந்த உலகத்திலேயே அதிகமாய் நேசித்தது அவளின் தாத்தா சிம்மவர்மன்தான். அந்த இழப்பு அவள் வாழ்க்கையை புரட்டி போட்டது. அவளை ரொம்பவும் தனிமைப்படுத்தியது.

இப்போது மீண்டும் அத்தகைய ஒரு மோசமான மனநிலைக்கு அவள் தள்ளப்பட்டிருக்க, அதனால் ஏற்பட்ட மனச்சோர்வால் எந்த வேலையிலும் ஈடுபட முடியாமல் அறைக்குள்ளேயே முடங்கி கிடந்தாள்.

விக்ரமவர்மனின் மனதையும் தமிழின் இந்த நிலைமை பாதித்திருக்க மகளை எதிர்கொள்ளும் தைரியம் இப்போதைக்கு அவரிடம் இல்லை. தேவிக்கோ செந்தமிழின் நிலையை புரிந்து கொள்ளவும் அவளுக்கு ஆறுதல் கூறவும் முதிர்ச்சி இல்லை.

விடிந்து இப்போது பொழுதும் சாய்ந்து மாலை நேரம் உதயமாக, தமிழுக்கு அந்த நாளே முழுவதுமாய் இருளடர்ந்திருந்தது. அந்த சமயத்தில் ரகு அவளை காண வீட்டிற்கு வந்திருந்தான்.

அவனை பார்த்ததும் விஜயா ஜாடை மாடையாய் அவர்களின் நட்பை தாழ்த்தி பேச, அதை கேட்க அழுத்தமாய் அவனுக்குள் கோபம் உதித்த போதும் எதுவும் பேசாமல் தமிழ் அறை நோக்கி விரைந்தான். அப்போது எதிரே வந்த தேவியை பார்த்து "தமிழ் வீட்டில இருக்காளா ?" என்று கேட்க

அவளோ வருத்தமான முகப்பாவனையோடு "ம்ம்ம்... ஆனா வீட்டில கொஞ்சம் பிரச்சனை... அக்கா ரொம்ப அப்செட்டா இருக்காங்க?" என்றதும்

விஜயா குரலை உயர்த்தி "ஏ தேவி வா இங்க... இதெல்லாம் உங்க அக்கா சொல்லாமலா இவர் இங்க வந்திருப்பாரு" என்றுரைக்க ரவியின் முகம் மேலும் கோபமாய் மாற தேவி கண்ணசைவால் தன் தாய் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

தமிழின் அறைக்குள் நுழைந்த ரகுவின் பார்வை படுக்கையில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தவளை பார்த்து வேதனையுற்றது.

அவள் அவனின் வருகையை பார்த்ததும் முகத்தை துடைத்து கொண்டு "வா ரகு... வர்ற போறேன்னு ஒரு கால் கூட பண்ணி சொல்லல" என்றாள்.

ரகு அவள் அருகில் இயல்பாய் அமர்ந்தபடி "இப்போதான் டைம் கிடைச்சது... உடனே உன்னை பார்க்கலாம்னு... ஆனா இங்க வந்து பார்த்தா நீ இப்படி இருக்க" என்றான்.

அவள் இயல்பாய் இருக்க முயன்றபடி "எப்படி இருக்கேன்... ஐம் குட்... கொஞ்சம் உடம்புக்கு முடியல... அவ்வளவுதான்" என்று சமாளித்தாள்.

"இந்த கதையெல்லாம் என்கிட்ட விடாதே... வரும் போது தேவியை பார்த்துட்டுதான் வந்தேன்..." என்றான்.

அவள் பதில் பேசாமல் மௌனமாகிட ரகு அவளை நோக்கி "என்னடி ஆச்சு... அதுவும் நீ இந்தளவுக்கு சோர்ந்து போயிர்க்கன்னா... ஏதாவது பெரிய பிராப்ள்மா ?!..." என்று கேட்க

அவள் பெருமூச்செறிந்தபடி "என் மேரேஜ்... அதுதான் இப்போ பெரிய பிரச்சனை" என்றாள்.

ரகு சிரித்துவிட்டு "அது உனக்கெப்படி பிரச்சனை... உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவனுக்குதானே பிரச்சனை" என்றான்.

"போ ரகு.. நானே ரொம்ப டிப்பிரஸ்ட்டா இருக்கேன்... நீ என்னன்னா நேரங் காலம் இல்லாம கேலி பண்ணிக்கிட்டு" என்றாள்.

ரகு மெலிதான புன்னகையோடு "டிப்பிரஸ்ட்டா இருக்கியா ?!... புதுசா ஏதோ சொல்ற... நம்ப முடியலியே" என்றவனை அவள் முறைத்து பார்த்தாள்.

அவன் அந்த அறையின் கம்பீரமான பாரதியின் ஓவியத்தின் முன் நின்றபடி "எப்பவும் இந்த பாரதியார் முகத்தை பார்த்தா... தைரியம் வரும் உத்வேகம் வரும்... எல்லா பிரச்சனைகளும் கடந்து வர்ற சக்தி கிடைக்கும்னு சொல்லுவ... வாட் ஹேப்பன் டூ ஆல் தட்" என்று கேட்க

அவள் விரக்தியான புன்னகையோடு "ம்ம்ம்... வரும்தான்... ஆனா என்னதான் இருந்தாலும் இட்ஸ் ஜஸ்ட் அ பெயின்ட்டிங்... இட் கான்ட் ஸ்ப்பீக் ரைட்... பாரதி எனக்கு தைரியத்தை கொடுப்பாரு... என்னதான் நான் தைரியமா திமிரா இருந்தாலும் ... அதெல்லாத்தையும் கடந்து... ஒரு ஸ்டிராங் ஸப்போர்ட் வேணும்... உயிருள்ள என் உணர்வுகளை புரிஞ்சிக்க எனக்கு ஒரு உறவு வேணும்... ஜஸ்ட் லைக் மை பாரதி...அதே போல ஷார்ப் ஐஸ்ஸோட ...எதுக்காகவும் யார்கிட்டயும் தலைவணங்காத திமிரோட.... யார் முன்னாடியும் விட்டு கொடுக்காத தான்ங்கிற அந்த அகங்காரத்தோட... எனக்கு ஒரு பிரச்சனைன்னா முன்னாடி நின்னு தாங்கி பிடிச்சிக்கிற துணிவோட..." என்று வரிசையாய் தன் மனக்கற்பனைகளை நண்பனிடம் விவரிக்க

ரகு சிந்தித்தபடி "ஓ... அப்படி... பட் அந்த மகாகவி பாரதியே உன் மேல இரக்கப்பட்டு மேலிருந்து இறங்கி வந்தால்தான்டி உண்டு" என்றான்.

"அதெல்லாம் நடக்காது ரகு... ட்ரீம்ஸ் ஆர் ஆல்வேஸ் ட்ரீம்ஸ்..." என்றாள் விரக்தியோடு.

ரகுவிற்கு அவள் பேச்சில் தெரிந்த விரக்தி அவன் மனதிலும் வேதனையை புகுத்த அவன் வார்த்தைகளின்றி மௌனமாய் அமர்ந்து அவளை சமாதானபடுத்தும் வழிகளை யோசிக்கலானான்.

அப்போதுதான் தமிழ் தன் நண்பன் மனதையும் தான் வேதனைக்குள்ளாக்கி விட்டோமோ என புரிந்தவள் பேச்சை மாற்றும் விதமாய் "சரி நீ சென்னைக்கு வந்த வேலை முடிஞ்சிதா ?!" என்று கேட்க

அவனும் அப்போதைக்கு அந்த சூழ்நிலையை மாற்ற எண்ணி "ம்ம்ம்.. ஒரளவுக்கு முடிஞ்சிது" என்றான்.

"ஆமாம்... அந்த ஏசி வீரேந்திரன் கூட உனக்கென்ன வேலை ?" என்று கேட்க

"அது அந்த ஆர்க்கியாலஜிஸ்ட் தர்மா டெத் கேஸ் இருக்கு இல்ல... அதை இனிமே அவர்தான் விசாரிக்க போறாரு... நான் அவர் கூட இருந்த அசிஸ்ட் பண்ண போறேன்... அதுக்காகதான் கமிஷனர் ஆபிஸ் வரைக்கும் போயிட்டு அப்படியே அவரையும் மீட் பண்ண போனேன்..." என்றான்.

தமிழ் யோசனையோடு "நீ சொல்றத பார்த்தா... ஏதோ பழமையான பொருளை கடத்திற மாதிரி கேங் இன்வால்வ் ஆயிருப்பாங்களா ?!" என்று கேட்க

"ம்ம்ம்... அந்த மாதிரியான பாயின்ட்லதான் இன்விஸ்டிகேஷன் பண்ணிட்டிருக்கோம்... பட் பெரிசா க்ளூ கிடைக்கல... ஆனா அவர் ரூம்ல இருந்த இந்த பெய்ன்டிங்" என்று சொல்லி தன் கைப்பேசியை எடுத்தவன் அதிலிருந்த சில கருப்பு வெள்ளை ஓவியங்களை அவளிடம் காட்டினான்.

வரிசையாய் அந்த ஓவியங்களை பார்த்தவளின் விழிகள் அகல விரிய அந்த வியப்புகுறியை ரகுவும் கவனித்தான்.

ரகு அவளிடம் "உனக்கு இதை பத்தி எதாச்சும் தெரியுமா ?!" கேட்க

அவள் பதில்பேசாமல் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தாள்.

"தமிழ் என்னாச்சு ?!" என்று ரகு கேட்க அவள் அவனிடம் "எனக்கு இந்த பெயின்ட்டிங்ஸ் எல்லாம் நேர்ல பார்க்கனுமே" என்றாள்.

ரகு ஆர்வமாய் "உனக்கு ஏதாச்சும் புரியுதா?.. இதுக்கும் அவர் மார்டர்க்கும் சம்பந்தம் இருக்குமா ?" என்று வினவ

தமிழ் அழுத்தமாக "அதெல்லாம் என்கிட்ட இப்ப கேட்காதே ரகு... எனக்கு அந்த ஆர்க்யாலஜிஸ்ட் தங்கியிருந்த இடத்தை பார்க்கனும்" என்றாள்.

"நாட் பாஸிப்பிள்... இப்போ அந்த இடம் போலீஸ் கஸ்டடில இருக்கு... வேண்ணா ஏசிபி வீரேந்திரன் அனுமதியோடு" என்று சொன்னதும்

"நோ... நீயும் நானும் மட்டும் போவோம்... யாருக்கும் தெரியாமா... ரகசியமா" என்று அவள் சொல்ல அவன் அதிர்ந்தான்.

"ஏய்... மொத்தமா என் வேலைக்கே உலை வைக்க ஐடியா பண்ணிட்டிருக்கியா ?!" என்று ரகு கேட்டான்.

"போலீஸானதும் பயந்தாகோளியா மாறிட்டியாடா ?!... .நம்ம ஸ்கூல் டேஸ்ல சேலஞ்சிங்கான மேட்டர்னா முன்னாடி நிக்கிற ரகு இப்ப எங்க...?!" என்று அவள் கேட்க

"என்னடி உசுப்பேத்திறியா?!.. அந்த ஏசிபிக்கு மட்டும் தெரிஞ்சிது... நோண்டி நொங்கெடுத்திருவான்"

"பெரிய ஏசிபி... அவன் என்ன அப்படி கிழிச்சிருவான்னு பார்க்கலாம்... நீ அத பத்தி எல்லாம் யோசிக்காதே
ரகு... உன்னால முடியுமா முடியாதான்னு மட்டும் சொல்லு" என்றாள்.

அவன் அவள் அப்படி கேட்பதன் காரணம் புரியாமல் தயங்க அவளே மீண்டும், "ரகு ப்ளீஸ்... இதுல ஒரு முக்கியமான மேட்டர் இருக்குடா... அதனாலதான் சொல்றேன்..." என்றாள்.

"என்ன மேட்டர் ?"

"நான் அதபத்தி அப்புறம் சொல்றேன் ரகு... பட் ப்ளீஸ் நீ என்னை கூட்டிட்டு போ... ஏதோ விளையாட்டா சொல்றன்னு நினைக்காதே... ரியலி இட்ஸ் ஸீர்யஸ்" என்று அவள் சொல்லும் விதத்தில் ஏதோ முக்கியமான விஷயம் ஒலிந்திருப்பதை உணர்ந்து கொண்டான்.

எனினும் தயக்கத்தோடு அவளிடம் "அப்படின்னா... இத பத்தி நாம ஏசிபி வீரேந்திரன் கிட்ட பேசலாமே ?!" என்றான்.

"ஸ்டாப் இட் ரகு... அந்த வீரேந்திரன் பத்தி பேசாதே... ஹீ இஸ் சச் அ இரிடேட்டிங் மேன்... அன்னைக்கு அவன் என்கிட்ட பேசின பேச்சிருக்கே... என்னால அதை மறக்கவே முடியாது... அவன் விஷயத்தில நான் ஒரு பெரிய தப்பு செஞ்சிட்டேன்... அந்த கில்டீனஸ்... அதுக்காகதான் அவனை மீட் பண்ணி சாரி கேட்கனும்னு நினைக்கிறேன்... இல்லன்னா... அவனை நான் பார்க்க கூட விருப்பப்படல" என்று அவள் சொல்லும் போதே அவளின் விழிகள் அத்தனை வெறுப்பை உமிழ்ந்தது.

ரகுவிற்கு அவளின் வெறுப்பை எப்படி எடுத்து கொள்வதென்றே புரியாமல் நிற்க தமிழ் அவனின் ஒற்றை பதிலுக்காக காத்திருந்தாள். அவனும் யோசித்துவிட்டு அரைமனதோடு தலையசைத்து சம்மதம் உரைத்தான்.

"சரி...உனக்கு அந்த ஆர்க்கியாலஜிஸ்ட் வீடு தெரியுமா ?!" என்று ரகு அவளை நோக்கி வினவ

"ம்ம்ம்...காஞ்சிபுரத்திலதானே... தெரியும்... அங்கேதானே எங்க சொந்த ஊர் இருக்கு... நானும் அவர் வீட்டுக்கு ஒரே தடவை போயிருக்கேன்... பட் சரியா ஞாபகம் இல்ல" என்றாள்.

"பைஃன்... போவோம்... என்னைக்கு எப்போன்னு சொல்றேன்... அப்போ போவோம்" என்றான்.

இருவருமே இவ்வாறான சம்பாஷணைக்கு பிறகு அறையை விட்டு வெளியே பேசிக் கொண்டே வர, அத்தனை நேரம் அவள் முகத்தில் படர்ந்திருந்த சோகம் மொத்தமாய் விலகியிருந்தது.

தேவி வியப்போடு "ஏதாச்சும் மேஜிக் பண்ணிங்களா... அக்கா நார்மலாயிட்டா ?" என்று ரகுவிடம் கேட்க

அங்கிருந்த ரவிவர்மன் தேவியிடம் "அது மேஜிக் எல்லாம் இல்ல தேவி..." என்றான்.

தேவி ரவியை நோக்க ,அவன் சூட்சமமாய் புன்னகையித்து "அதெல்லாம் உன் வயசுக்கு புரியாது... நீ சின்ன பொண்ணு" என்றான்.

ரகு அவன் பேச்சை கேட்டு எரிச்சலடைய தமிழ் அவனிடம் சமிஞ்சையால் புறப்பட சொன்னாள்.

ரவிவர்மன் விடாமல் "என்ன ரகு சார் அதுக்குள்ள கிளம்பிட்டீங்க... நீங்க வந்த வேலை முடிஞ்சிருச்சு போல" என்றதும் ரகு அவனிடம் கோபத்தை காட்ட முயற்சிக்க தமிழ் அவனை கட்டாயப்படுத்தி தடுத்து வெளியே அழைத்து கொண்டு போனாள்.

ரகு எரிச்சலோடு "இவனை எப்படி நீ டால்ரேட் பண்ணிட்டிருக்க... எனக்கு வந்த ஆத்திரத்துக்கு" என்று சினத்தோடு சொல்ல அவளோ அமைதியாக "சேரு மேல கல்லை தூக்கி எரிஞ்சா அது நம்ம மேலதான் தெறிக்கும்... அவன்கிட்ட போய் நீ வாயக் கொடுக்கிறதும் அப்படிதான்... ஜஸ்ட் இக்னோர் ஹிம்" என்றாள்.

ரகுவும் அவள் சொன்னதை ஆமோதித்தபடி "சரி ஒகே... நான் கிளம்பிறேன்... அப்புறம் நான் சொல்ல வந்ததையே மறந்துட்டேன் பாரு" என்றான்.

"என்னது ?"

"நீ அந்த ஏசிபியை மீட் பண்ணி சாரி கேட்கனும்னு சொன்னே இல்ல"

"ஆமாம் சொன்னேன்... பட் எப்படி மீட் பன்றது"

"ஆபிஸ்ல எல்லாம் கஷ்டம்... பட் ஒரு ஐடியா இருக்கு"

"வாட் ?"

"அவன் டேய்லி யூஷ்வலா... எலியாட் பீச்ல ஜாக்கிங் போவான்... அங்கே வேணா மீட் பண்ணலாம்" என்றான் ரகு.

"குட் ஐடியா ரகு" என்று அவனை பாராட்டிவிட அவனும் அவளிடம் விடைபெற்று கொள்ள அவனை வழியனுப்பிவிட்டு வீட்டிற்குள் சென்றாள்.

அத்தனை நேரம் அவளை முழுவதுமாய் ஆட்கொண்டிருந்த மனவேதனை எல்லாம் நண்பனை கண்ட மாத்திரத்தில் விடை பெற்று கொண்டுவிட்டதை எண்ணும் போதே அவளுக்கே வியப்பாய் இருந்தது. தோள் கொடுக்க நண்பன் இருந்தால் துயரமெல்லாம் பறந்து ஓடிவிடும். புனிதமான ஆண் பெண் நட்பு என்பது குறிஞ்சி மலரை போல ரொம்பவும் அரிதாய் கிடைக்க பெறும் பொக்கிஷம். ஆனால் எல்லோருக்கும் அத்தகைய நட்பு வாய்க்க பெறுவதில்லை என்பதுதான் உண்மை.
Enakku appadi oru nanban irukkan.
 




Niran

மண்டலாதிபதி
Joined
Jan 19, 2018
Messages
144
Reaction score
104
Location
Chennai
Hi moni dear nice ud pa raghu so sweet unmaiyave eppadi oru purinjukura nama namakae puriya vaikura natpu kidaipathu varam than
 




Sankari

நாட்டாமை
Joined
Jan 20, 2018
Messages
23
Reaction score
22
Age
29
Location
Chennai
Raghu pola oru friend ellarukum irundha evvalavu nalla irukum....Avanga natpu romba azhagu .....And acp sir vandhale andha scene paraparappai maari vidukirathu.....??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top