Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
காதலை உணர்ந்த தருணம்
ஸ்வேதா அவர்கள் அருகில் வந்து நிற்க வீரேந்திரனின் முகம் களையிழந்து போனது. அவள் மீண்டும் தவறாக எண்ணிக் கொண்டாளோ என நினைத்துவிட்டு அவளிடம் நிலைமையை புரிய வைக்க யத்தனிப்பதற்குள் அவளே முந்தி கொண்டு, "வாட் அ ரோமான்டிக் சீன்... வீர்..." என்று சொல்லி மீண்டும் கை தட்ட இருவருமே அதிர்ந்தனர்.
வீரேந்திரன் அந்த நிலைமையை மேலும் மோசமாக்கிவிடலாம் இருக்க ஸ்வேதாவின் கரங்களை பிடித்து, "ஸ்வேதா வா... வீட்டுக்கு போய் பேசிக்கலாம்" என்றான்.
அவள் வெறுப்பாய் அவன் கையை உதறி, "எனக்கு இங்க இப்பவே பேசனும் வீர்... உனக்கு இப்ப டைம் இருக்கா பேசிறதுக்கு இல்ல... என்னை பார்த்ததும் பிஸியாயிட்டியா....?!" என்று குத்தலாக கேட்க, தமிழ் அவர்கள் இருவருக்கிடையில் தான் நிற்பது சரியில்லை என்று எண்ணிக் கொண்டவள் அங்கிருந்து செல்ல பார்க்க,
ஸ்வேதா குரல் கொடுத்து "எங்கே அதுக்குள்ள, வெயிட் பண்ணுங்க" என்றாள்.
தமிழ் சங்கடத்தில் சிக்கி கொண்டோமோ என தவித்திருக்க, ஸ்வேதா அவளை நோக்கி, "எனக்கு ஒரே ஒரு விஷயம் தெரியனும் ?" என்றாள்.
வீர் இவள் ஏதேனும் ஏடாகூடாமாய் கேட்க போகிறாளோ என்று எண்ணியபடி ஸ்வேதாவை வலுகட்டயாமாக கை பிடித்து இழுத்து "நீ வாய முடிட்டு முதல்ல என் கூட வா" என்றான்.
ஸ்வேதா அவள் கரத்தை அவன் பிடியிலிருந்து விலக்கி கொள்ள முடியாமல் தவித்தபடி, "விடு வீர்... இப்பவும் பேசலன்னா என் லைஃப்பே மொத்தமா ஸ்பாயிலாயிடும்" என்று சொல்ல
"நீ தப்பா புரிஞ்சிக்கிட்டு பேசிட்டிருக்க ஸ்வேதா..." என்றான் வீர்.
"நான் தப்பா புரிஞ்சிகிட்டு பேசிட்டிருக்கேனா... சரி அப்படியே இருக்கட்டும்... நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்... அப்போ அதை தெளிவு படுத்து வேண்டியது உன் கடமை இல்லயா ?!" என்று கேட்க
அவனுக்கோ அவளுக்கு புரிய வைக்க இயலாதென வெறுப்போடு அவள் கரத்தை உதறிவிட்டு நடப்பது நடக்கட்டும் என கையை கட்டி கொண்டு நிற்க, ஸ்வேதா அவனை நோக்கி "இவளுக்கும் உனக்கும் என்ன ரிலேஷன்ஷிப் வீர்" என்று கேட்டாள். அந்த கேள்வி தமிழை ஆழமாய் காயப்படுத்த தேவையில்லாமல் அவர்கள் விஷயத்தில் தலையிட விரும்பாமல் அப்போதைக்கு அமைதி காத்தாள்.
வீரேந்திரன் அவளை நோக்கி "நீ நினைக்கிற மாறி எங்களுக்குள்ள எந்தவொரு ரிலேஷன்ஷிப்பும் இல்ல... இன்னும் கேட்டா அவ பெயர் கூட எனக்கு சரியா தெரியாது..." என்று சொல்லும் போதே
ஸ்வேதா அவனை பார்த்து ஏளனமாய் புன்னகையித்துவிட்டு "என்ன சொன்ன வீர்?... பேர் கூட தெரியாதா ?!... நீ எங்கயோ போயிட்ட... அன்னைக்கு போலீஸ் ஸ்டேஷன்ல மீட்டிங்... இன்னைக்கு ஜாகிங் பிளேஸ்ல மீட்டிங்... ஆனா பேர் கூட தெரியாது... உன் பிரண்ட்ஸ்லாம் சொல்லும் போது கூட நம்ப முடியல... இப்ப நம்பிறேன்... நீ கண்டிப்பா காலேஜ் டேஸ்ல பிளே பாயாதான் இருந்திருப்ப" என்று சொல்ல வீரேந்திரன் கோபத்தோடு "போதும் நிறுத்து ஸ்வேதா... " என்றான் அதட்டலாக.
ஸ்வேதா அவனை நோக்கி "என்னை நிறுத்தி என்ன பண்ணப் போற வீர்...? அதான் அந்த மேகஸின்ல உன்னை பத்தி வந்து... ஊரே பேசிட்டிருக்கே... நான் கூட அது உண்மையோ பொய்யான்னு சந்தேகம் பட்டேன்... பட் அதெல்லாம் நூறு சதவீதம் உண்மைதான்" என்று சொல்லும் போது வீரேந்திரனின் பார்வை எரிச்சலோடு தமிழின் புறம் திரும்ப, அப்போது அவள் செய்த தவறின் விளைவுகளை எண்ணி அதிர்ந்து நின்றாள்.
ஸ்வேதா மீண்டும் அவனை நோக்கி "உனக்கு அவளைதான் பிடிச்சிருக்குன்னா... என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச வீர்... பேசாம நீ அவளையே கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே" என்றுரைக்க
தமிழின் பொறுமையெல்லாம் அந்த நொடி கறைந்து போனது. அப்போது அவள் அளவில்லாத சினத்தோடு "வாட் நான்ஸன்ஸ்... என்ன பேசிறோம்னு கொஞ்சம் யோசிச்சி பேசுங்க மிஸ்.ஸ்வேதா... இல்ல நான் தெரியாமதான் கேட்கிறென்... ஒரு ஆணும் பெண்ணும் பேசிட்டிருந்தா அது தப்பான ரிலேஷன்ஷிப்பாதான் இருக்கனும்னு ஏன் இப்படி அறிவுக்கெட்டதனமா கற்பனை பண்ணிக்கிறீங்க... நான் ஒரு ஜர்னலிஸ்ட்... அவர் ஒரு போலீஸ்...அதான் எங்களுக்குள்ள இருக்கிற ரிலேஷன்ஷிப் ரைட்... மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரியான எதுவும் எங்களுக்குள்ள இல்ல... முக்கியமான விஷயம் என்னன்னா... அவரை பத்தி மேகஸின்ல தப்பு தப்பா எழுதின ஆள் நான்தான்... பட் நான் அதை தப்புன்னு புரிஞ்சிகிட்டு சாரி கேட்கலாம்னுதான் வந்தேன்... அவரை மீட் பண்ணேன்... இன்னும் கேட்டா அவர் என்கிட்ட பேச கூட விருப்பப்படல... நான்தான் வலுகட்டாயமா வந்து அவர்கிட்ட சாரி கேட்கிறதுக்காக பேசினேன்... இப்ப புரிஞ்சிதா உங்களுக்கு... தேவையில்லாம இப்படி வார்த்தையை விடாதீங்க" என்று படபடவென அவள் பொறிந்து தள்ள ஸ்வேதா குற்றவுணர்வில் பதில் பேச முடியாமல் மௌனமாய் நின்றாள்.
தமிழ் மேலும் வீரேந்திரனை நோக்கி "ஸாரி ஏசிபி சார்... என்னால உங்களுக்கு நிறைய பிரச்சனை... தெரிஞ்சோ தெரியாமலோ எல்லாத்துக்கும் நானே காரணமாயிட்டேன்... இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டனும்னா இனிமே நாம இரண்டு பேரும் மீட் பண்ணிக்காம இருக்கிறதுதான் நல்லதுன்னு நான் நினைக்கிறேன்... இதுவே நம்ம லாஸ்ட் மீட்டிங்கா இருக்கட்டும்... குட் பை" என்று சொல்லிவிட்டு அவள் அவர்களை விடுத்து விலகி சென்றுவிட, அவனின் பார்வை அவளுடனே சென்று கொண்டிருந்தது.
ஸ்வேதா மெல்ல வீரேந்திரன் அருகில் வந்து நின்றபடி, "சாரி வீர்... நான் அவசரப்பட்டு பெரிய தப்பு செஞ்சிட்டேன்" என்று சொல்ல அவன் அவள் புறம் திரும்பி "யூ ஆர் ரைட் ... பெரிய தப்புதான்... பட் அது இன்னும் பெரிசாகாம இப்பவே நாம அந்த தப்பை திருத்திக்குவோம்" என்றான்.
ஸ்வேதாவும் தலையசைத்தபடி "இனிமே இந்த மாதிரி தப்பு" என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் குறுக்கிட்டு "நான் தப்புன்னு சொன்னது நீ என்னை சந்தேகபட்டதை இல்ல... நமக்கு முடிவாயிருக்கிற கல்யாணத்தை பத்தி... இப்ப நாம அந்த தப்பை திருத்திக்கலன்னா... அப்புறம் நாம வாழ்க்கை பூரா கஷ்டபட வேண்டி வரும்... ஏதோ கோபத்தில சொல்றேன்னு நினைக்க வேண்டாம்... நம்ம இரண்டு பேர் நல்லதுக்காகவும்தான் சொல்றேன்... என்னை விட பெட்டரான ஒருத்தனா... உன்னை நல்லா புரிஞ்சிக்கிட்டவனா... நீ நல்லா புரிஞ்சிக்கிட்டவனா பார்த்து மேரேஜ் பண்ணிக்கோ..." என்று சொல்ல ஸ்வேதா அதிர்ந்தபடி "வீர்" என்றான். ஆனால் அவன் நிதானமாக "பெட்டர் வீ கேன்ஸல் திஸ் மேரேஜ்" என்றான்.
ஸ்வேதா அவனை நோக்கி "பட் வீர் நம்ம கல்யாணத்துக்கு இன்னும் பத்துநாள்தான் இருக்கு" என்றாள்.
வீரேந்திரன் அலட்சிய புன்னகையோடு "பத்துநாள்தான் இருக்கா ?... அது உனக்கு இப்பதான் தெரிஞ்சிதா ? நீ அவசரப்பட்டு வார்த்தையா விட்டியே, அப்ப தெரியலியா ஸ்வேதா ?" என்று கேட்க அவள் தலைகவிழ்ந்தபடி பதில் இல்லாமல் நிற்க
வீரேந்திரன் பொறுமையோடு "லிஸன்... பத்துநாளுக்காக பார்த்தா அதுக்கப்புறம் வாழ்க்கை பூரா கஷ்டபட வேண்டி வரும்... இப்ப ஏத்துகிறதுக்கு கொஞ்சம் கஷ்டமாயிருந்தாலும்... அப்புறமா இந்த முடிவில இருக்கிற நல்லது... உனக்கே புரியும்" என்று அவன் சொன்ன நொடி ஸ்வேதாவிற்கு அவனை சமாதானபடுத்த முடியும் என்ற நம்பிக்கையற்று போனது. ஏனெனில் அவன் பேச்சில் அத்தனை தெளிவும் தீர்க்கமும் வெளிப்பட்டது.
அவன் வார்த்தைகளை மீறி எதுவும் பேசமுடியாமல் அவள் மனசோர்வோடு அங்கிருந்து புறப்பட்டுவிட்டாள்.
ஆனால் வீரேந்திரனோ அந்த இடத்தை விட்டு செல்ல முடியாமல் ஏதோ புரியாத தவிப்போடு கடலலைகளின் மீது பார்வையை பதித்தபடி நின்றிருந்தான்.
முந்தியடித்து கொண்டு மேலெழும்பி வந்த கடல் அலைகள் கரையை தொட்டதும் நுரையாய் காணாமல் தொலைந்து போவதை பார்க்க, வீரேந்திரனுக்கு தமிழின் மீதான வெறுப்பும் கோபமும் கூட அவ்விதமே கரைந்து காணாமல் போய்விட்டதோ என தோன்றியது.
சற்று நேரம் முன்பு... பார்க்க கூட விருப்பப்படவில்லை என நிராகரித்தவளை, இப்போது அவனின் மனம் பார்க்க ஏங்கியது. தினமும் பரபரவென சுழலும் அவனின் நேரத்தை அன்று தமிழ் களவாடி கொண்டு சென்றுவிட்டாள்.
இதுவே நம்முடைய கடைசி சந்திப்பு என்று அவள் முடிவாய் சொல்லிவிட்டு போக, முதல்முறையாய் அவனின் காதலை அவனே உணர்ந்த தருணம் அது.
ஸ்வேதா அவர்கள் அருகில் வந்து நிற்க வீரேந்திரனின் முகம் களையிழந்து போனது. அவள் மீண்டும் தவறாக எண்ணிக் கொண்டாளோ என நினைத்துவிட்டு அவளிடம் நிலைமையை புரிய வைக்க யத்தனிப்பதற்குள் அவளே முந்தி கொண்டு, "வாட் அ ரோமான்டிக் சீன்... வீர்..." என்று சொல்லி மீண்டும் கை தட்ட இருவருமே அதிர்ந்தனர்.
வீரேந்திரன் அந்த நிலைமையை மேலும் மோசமாக்கிவிடலாம் இருக்க ஸ்வேதாவின் கரங்களை பிடித்து, "ஸ்வேதா வா... வீட்டுக்கு போய் பேசிக்கலாம்" என்றான்.
அவள் வெறுப்பாய் அவன் கையை உதறி, "எனக்கு இங்க இப்பவே பேசனும் வீர்... உனக்கு இப்ப டைம் இருக்கா பேசிறதுக்கு இல்ல... என்னை பார்த்ததும் பிஸியாயிட்டியா....?!" என்று குத்தலாக கேட்க, தமிழ் அவர்கள் இருவருக்கிடையில் தான் நிற்பது சரியில்லை என்று எண்ணிக் கொண்டவள் அங்கிருந்து செல்ல பார்க்க,
ஸ்வேதா குரல் கொடுத்து "எங்கே அதுக்குள்ள, வெயிட் பண்ணுங்க" என்றாள்.
தமிழ் சங்கடத்தில் சிக்கி கொண்டோமோ என தவித்திருக்க, ஸ்வேதா அவளை நோக்கி, "எனக்கு ஒரே ஒரு விஷயம் தெரியனும் ?" என்றாள்.
வீர் இவள் ஏதேனும் ஏடாகூடாமாய் கேட்க போகிறாளோ என்று எண்ணியபடி ஸ்வேதாவை வலுகட்டயாமாக கை பிடித்து இழுத்து "நீ வாய முடிட்டு முதல்ல என் கூட வா" என்றான்.
ஸ்வேதா அவள் கரத்தை அவன் பிடியிலிருந்து விலக்கி கொள்ள முடியாமல் தவித்தபடி, "விடு வீர்... இப்பவும் பேசலன்னா என் லைஃப்பே மொத்தமா ஸ்பாயிலாயிடும்" என்று சொல்ல
"நீ தப்பா புரிஞ்சிக்கிட்டு பேசிட்டிருக்க ஸ்வேதா..." என்றான் வீர்.
"நான் தப்பா புரிஞ்சிகிட்டு பேசிட்டிருக்கேனா... சரி அப்படியே இருக்கட்டும்... நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்... அப்போ அதை தெளிவு படுத்து வேண்டியது உன் கடமை இல்லயா ?!" என்று கேட்க
அவனுக்கோ அவளுக்கு புரிய வைக்க இயலாதென வெறுப்போடு அவள் கரத்தை உதறிவிட்டு நடப்பது நடக்கட்டும் என கையை கட்டி கொண்டு நிற்க, ஸ்வேதா அவனை நோக்கி "இவளுக்கும் உனக்கும் என்ன ரிலேஷன்ஷிப் வீர்" என்று கேட்டாள். அந்த கேள்வி தமிழை ஆழமாய் காயப்படுத்த தேவையில்லாமல் அவர்கள் விஷயத்தில் தலையிட விரும்பாமல் அப்போதைக்கு அமைதி காத்தாள்.
வீரேந்திரன் அவளை நோக்கி "நீ நினைக்கிற மாறி எங்களுக்குள்ள எந்தவொரு ரிலேஷன்ஷிப்பும் இல்ல... இன்னும் கேட்டா அவ பெயர் கூட எனக்கு சரியா தெரியாது..." என்று சொல்லும் போதே
ஸ்வேதா அவனை பார்த்து ஏளனமாய் புன்னகையித்துவிட்டு "என்ன சொன்ன வீர்?... பேர் கூட தெரியாதா ?!... நீ எங்கயோ போயிட்ட... அன்னைக்கு போலீஸ் ஸ்டேஷன்ல மீட்டிங்... இன்னைக்கு ஜாகிங் பிளேஸ்ல மீட்டிங்... ஆனா பேர் கூட தெரியாது... உன் பிரண்ட்ஸ்லாம் சொல்லும் போது கூட நம்ப முடியல... இப்ப நம்பிறேன்... நீ கண்டிப்பா காலேஜ் டேஸ்ல பிளே பாயாதான் இருந்திருப்ப" என்று சொல்ல வீரேந்திரன் கோபத்தோடு "போதும் நிறுத்து ஸ்வேதா... " என்றான் அதட்டலாக.
ஸ்வேதா அவனை நோக்கி "என்னை நிறுத்தி என்ன பண்ணப் போற வீர்...? அதான் அந்த மேகஸின்ல உன்னை பத்தி வந்து... ஊரே பேசிட்டிருக்கே... நான் கூட அது உண்மையோ பொய்யான்னு சந்தேகம் பட்டேன்... பட் அதெல்லாம் நூறு சதவீதம் உண்மைதான்" என்று சொல்லும் போது வீரேந்திரனின் பார்வை எரிச்சலோடு தமிழின் புறம் திரும்ப, அப்போது அவள் செய்த தவறின் விளைவுகளை எண்ணி அதிர்ந்து நின்றாள்.
ஸ்வேதா மீண்டும் அவனை நோக்கி "உனக்கு அவளைதான் பிடிச்சிருக்குன்னா... என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச வீர்... பேசாம நீ அவளையே கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே" என்றுரைக்க
தமிழின் பொறுமையெல்லாம் அந்த நொடி கறைந்து போனது. அப்போது அவள் அளவில்லாத சினத்தோடு "வாட் நான்ஸன்ஸ்... என்ன பேசிறோம்னு கொஞ்சம் யோசிச்சி பேசுங்க மிஸ்.ஸ்வேதா... இல்ல நான் தெரியாமதான் கேட்கிறென்... ஒரு ஆணும் பெண்ணும் பேசிட்டிருந்தா அது தப்பான ரிலேஷன்ஷிப்பாதான் இருக்கனும்னு ஏன் இப்படி அறிவுக்கெட்டதனமா கற்பனை பண்ணிக்கிறீங்க... நான் ஒரு ஜர்னலிஸ்ட்... அவர் ஒரு போலீஸ்...அதான் எங்களுக்குள்ள இருக்கிற ரிலேஷன்ஷிப் ரைட்... மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரியான எதுவும் எங்களுக்குள்ள இல்ல... முக்கியமான விஷயம் என்னன்னா... அவரை பத்தி மேகஸின்ல தப்பு தப்பா எழுதின ஆள் நான்தான்... பட் நான் அதை தப்புன்னு புரிஞ்சிகிட்டு சாரி கேட்கலாம்னுதான் வந்தேன்... அவரை மீட் பண்ணேன்... இன்னும் கேட்டா அவர் என்கிட்ட பேச கூட விருப்பப்படல... நான்தான் வலுகட்டாயமா வந்து அவர்கிட்ட சாரி கேட்கிறதுக்காக பேசினேன்... இப்ப புரிஞ்சிதா உங்களுக்கு... தேவையில்லாம இப்படி வார்த்தையை விடாதீங்க" என்று படபடவென அவள் பொறிந்து தள்ள ஸ்வேதா குற்றவுணர்வில் பதில் பேச முடியாமல் மௌனமாய் நின்றாள்.
தமிழ் மேலும் வீரேந்திரனை நோக்கி "ஸாரி ஏசிபி சார்... என்னால உங்களுக்கு நிறைய பிரச்சனை... தெரிஞ்சோ தெரியாமலோ எல்லாத்துக்கும் நானே காரணமாயிட்டேன்... இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டனும்னா இனிமே நாம இரண்டு பேரும் மீட் பண்ணிக்காம இருக்கிறதுதான் நல்லதுன்னு நான் நினைக்கிறேன்... இதுவே நம்ம லாஸ்ட் மீட்டிங்கா இருக்கட்டும்... குட் பை" என்று சொல்லிவிட்டு அவள் அவர்களை விடுத்து விலகி சென்றுவிட, அவனின் பார்வை அவளுடனே சென்று கொண்டிருந்தது.
ஸ்வேதா மெல்ல வீரேந்திரன் அருகில் வந்து நின்றபடி, "சாரி வீர்... நான் அவசரப்பட்டு பெரிய தப்பு செஞ்சிட்டேன்" என்று சொல்ல அவன் அவள் புறம் திரும்பி "யூ ஆர் ரைட் ... பெரிய தப்புதான்... பட் அது இன்னும் பெரிசாகாம இப்பவே நாம அந்த தப்பை திருத்திக்குவோம்" என்றான்.
ஸ்வேதாவும் தலையசைத்தபடி "இனிமே இந்த மாதிரி தப்பு" என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் குறுக்கிட்டு "நான் தப்புன்னு சொன்னது நீ என்னை சந்தேகபட்டதை இல்ல... நமக்கு முடிவாயிருக்கிற கல்யாணத்தை பத்தி... இப்ப நாம அந்த தப்பை திருத்திக்கலன்னா... அப்புறம் நாம வாழ்க்கை பூரா கஷ்டபட வேண்டி வரும்... ஏதோ கோபத்தில சொல்றேன்னு நினைக்க வேண்டாம்... நம்ம இரண்டு பேர் நல்லதுக்காகவும்தான் சொல்றேன்... என்னை விட பெட்டரான ஒருத்தனா... உன்னை நல்லா புரிஞ்சிக்கிட்டவனா... நீ நல்லா புரிஞ்சிக்கிட்டவனா பார்த்து மேரேஜ் பண்ணிக்கோ..." என்று சொல்ல ஸ்வேதா அதிர்ந்தபடி "வீர்" என்றான். ஆனால் அவன் நிதானமாக "பெட்டர் வீ கேன்ஸல் திஸ் மேரேஜ்" என்றான்.
ஸ்வேதா அவனை நோக்கி "பட் வீர் நம்ம கல்யாணத்துக்கு இன்னும் பத்துநாள்தான் இருக்கு" என்றாள்.
வீரேந்திரன் அலட்சிய புன்னகையோடு "பத்துநாள்தான் இருக்கா ?... அது உனக்கு இப்பதான் தெரிஞ்சிதா ? நீ அவசரப்பட்டு வார்த்தையா விட்டியே, அப்ப தெரியலியா ஸ்வேதா ?" என்று கேட்க அவள் தலைகவிழ்ந்தபடி பதில் இல்லாமல் நிற்க
வீரேந்திரன் பொறுமையோடு "லிஸன்... பத்துநாளுக்காக பார்த்தா அதுக்கப்புறம் வாழ்க்கை பூரா கஷ்டபட வேண்டி வரும்... இப்ப ஏத்துகிறதுக்கு கொஞ்சம் கஷ்டமாயிருந்தாலும்... அப்புறமா இந்த முடிவில இருக்கிற நல்லது... உனக்கே புரியும்" என்று அவன் சொன்ன நொடி ஸ்வேதாவிற்கு அவனை சமாதானபடுத்த முடியும் என்ற நம்பிக்கையற்று போனது. ஏனெனில் அவன் பேச்சில் அத்தனை தெளிவும் தீர்க்கமும் வெளிப்பட்டது.
அவன் வார்த்தைகளை மீறி எதுவும் பேசமுடியாமல் அவள் மனசோர்வோடு அங்கிருந்து புறப்பட்டுவிட்டாள்.
ஆனால் வீரேந்திரனோ அந்த இடத்தை விட்டு செல்ல முடியாமல் ஏதோ புரியாத தவிப்போடு கடலலைகளின் மீது பார்வையை பதித்தபடி நின்றிருந்தான்.
முந்தியடித்து கொண்டு மேலெழும்பி வந்த கடல் அலைகள் கரையை தொட்டதும் நுரையாய் காணாமல் தொலைந்து போவதை பார்க்க, வீரேந்திரனுக்கு தமிழின் மீதான வெறுப்பும் கோபமும் கூட அவ்விதமே கரைந்து காணாமல் போய்விட்டதோ என தோன்றியது.
சற்று நேரம் முன்பு... பார்க்க கூட விருப்பப்படவில்லை என நிராகரித்தவளை, இப்போது அவனின் மனம் பார்க்க ஏங்கியது. தினமும் பரபரவென சுழலும் அவனின் நேரத்தை அன்று தமிழ் களவாடி கொண்டு சென்றுவிட்டாள்.
இதுவே நம்முடைய கடைசி சந்திப்பு என்று அவள் முடிவாய் சொல்லிவிட்டு போக, முதல்முறையாய் அவனின் காதலை அவனே உணர்ந்த தருணம் அது.