அத்தியாயம் – 3
காலையில் எழுந்தவுடன் வீட்டைவிட்டு வெளியே பாரதி அந்த வெயிலில் நன்றாக சுற்றிவிட்டு மதியம் சாப்பிட வந்தாள். பின்வாசல் வழியாக வீட்டின் உள்ளே நுழைந்த பாரதி,
“அடியே பிரபா அம்மா எங்கேடி!” என்று கேட்டவண்ணம் உள்ளே வந்தாள்..
“அம்மா மாவு ஆட்டுகிறார்கள் குட்டி! என்ன காலையில் இருந்து உன்னோட ஆட்டம் எப்படி போகிறது..?” என்று சிரிப்புடன் கேட்ட பிரபாவதி சமையலுக்கு காய்கறிகளை நறுக்க ஆரமித்தாள்.
“நான்கு பம்பரம் வென்றுவிட்டேன்! பாவம் சின்ன பசங்க என்னிடம் தோற்றுவிட்டனர்..” என்று கலகலவென்று சிரித்தாள் பாரதி..
“எங்கேடி இந்த சுதாவை இன்னும் காணவில்லை.. வாசுவும் அப்பொழுதே வந்துவிட்டான்..” என்று கேட்டாள் பிரபாவதி
“அவனா என்னை ஒருத்தன் கிண்டல் பண்ணியதற்கு அவனோட மண்டையை பிளந்துவிட்டான்..” என்று ரகசியம் போல கூறினாள் பாரதி
“ஏய் என்னடி இது விளையாட போகதே என்று சொன்னாலும் கேட்பதில்லை, இப்போ பாரு அவன் வம்பில் மாட்டிக் கொண்டான்.. அதுதான் வாசு அப்பவே வந்துவிட்டானா..?” என்று சமையல் அறைக்குள் சென்றாள் பிரபா
“பிரபா சுதாவுக்கு ஒன்னும் ஆகாது.. அவன் அடித்ததைப் பார்த்தவள் நான் மட்டுமே..” என்று பெருமையாகக் கூறினாள் பாரதி
“அடிபாவி இதில் அண்ணனும் தங்கையும் கூட்டாகச் சேர்ந்து இன்னொருத்தன் மண்டையைப் பிளந்தது அப்பாவிற்கு தெரிந்தது!” என்று அவள் வாயைத் திறக்கும் முன்னாடியே அவளின் பின்னோடு வந்த பாரதி அவளின் வாயில் பச்சை மிளகாயை வைத்து அழுத்த அதைத் தெரியாமல் கடித்த பிரபா
“ஸ்ஸ் ஆஆஆ!” என்று அலறியவள், காரம் தண்ணீரை எடுத்துக் குடித்தவள் சக்கரையை எடுத்து வாயில் போட்டாள்.. கண்களில் கண்ணீர் வழிய, பக்கத்தில் இருந்த விறகு கட்டையில் ஒன்றை எடுத்தவள்,
பாரதியை அடிக்க துரத்த, “ஏய் பாரதி ஓட்டாதே நில்லுடி! இல்ல என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது..” என்று கத்த, வெளியே இருந்து உள்ளே வந்த மீனாட்சி,
“ஏய் பிரபா வயசிற்கு ஏற்றது போல பேசிப்பழகு!” என்று மீனாட்சி பிரபாவை அதட்டல் போட பெரியவள் துரத்தியதால் கிணத்துமேட்டில் அமர்ந்திருந்த பாரதி,
“நல்ல சொல்லுங்க அம்மா அவளுக்கு எத்தனை சொன்னாலும் அறிவே இல்லை..” என்று போட்டுக் கொடுக்க, அவளை முறைத்த பிரபா,
“அம்மா அவள்தான் என்னோட வாயில் மிளகாயை வைத்துவிட்டாள்.. காரம் உயிரே போகிறது..” என்று பிரபா கண்களில் கண்ணீருடன் சொல்ல,
“விடும்மா சின்னப்பெண் தெரியாமல் செய்திருப்பாள்.. அதுக்குப்போய் இப்படியா கண்ணை கசக்குவது..?” என்று மகளின் கண்ணீரைத் துடைத்து விட்டவர் உள்ளே செல்ல அவரின் பின்னோடு சென்றாள் பிரபா
கிணத்துமேட்டில் அமர்ந்திருந்த பாரதி, “அப்பாடி பிசாசிடம் இருந்து தப்பிக்க வைத்த அம்மாவிற்கு கோவில் கட்டிக் கும்பிடலாம்..” என்று தனது அடுத்த விளையாட்டுகளைப் பட்டியல் போட்ட வண்ணம் அமர்ந்திருந்தாள்
இவ்வாறு வீட்டில் எல்லாவிதமான சேட்டையும் செய்வது நம்ம பாரதியே! ஆனால் அவள் எதிலும் மாட்டவே மாட்டாள். ‘தவறே செய்தாலும் அதை மற்றவர்கள் கண்டு பிடிக்காத வண்ணம் செய்ய வேண்டும்’ என்பது அவளின் கொள்கைகளில் ஒன்று!
அவளை யாரும் கண்டிக்க மாட்டார்கள் வீட்டின் கடைக்குட்டி மேல் அண்ணன் அக்கா ஐவருக்கும் ரொம்ப செல்லம் அதிகம் அதானால் தானோ என்னமோ அவளுக்கு பயமே கிடையாது! ஒரு ஆண் போலவே வளர்க்கப்பட்டாள்! அவள் சொல்வதற்கு அக்கா, அண்ணன் அனைவரும் அடங்கிப் போவார்கள்!
அதேபோல சில வியங்களில் மட்டும் விளையாட்டாக பொய் சொல்லிவிட்டு அடுத்த நொடியே உண்மையையும் சொல்லிவிடுவாள்!
இப்படியே சிரித்த வண்ணம் நாட்கள் கடந்து செல்ல, அடுத்து பிரபாவிற்கு திருமணம் நடக்க அவளை வால்பாறையில் கட்டிக்கொடுத்தனர். வீட்டில் இருந்து பிரபா போக, ராதா வீட்டிற்குள் வந்தாள்.
கண்ணனுக்கு திருமணம் நடக்க அவளின் அண்ணியாக வந்தாள் ராதா..!
நாட்கள் கடந்து செல்ல பதிமூன்று வயதினை அடைந்த பாரதி, பத்து பசங்களுக்கு நடுவே ஒற்றைப் பெண்ணாக இருந்து கில்லிவிளையாடிக் கொண்டிருந்தாள்..
அதைப் பார்த்த சுதாவின் தோழன் ஒருவன், “டேய் சுதா அங்கே விளையாடுவது உன்னுடைய தங்கை பாரதிதானே..?” என்று கேட்டான்
அவன் காட்டிய திசையைப் பார்த்த சுதா, “ம்ம் ஆமாடா பாரதிதான்..” என்று சொல்லவே,
“டேய் உன்னுடைய தங்கை என்ன இப்படி கொஞ்சம் கூட பயமே இல்லாமல் பத்து பசங்கள் நடுவே விளையாடிக் கொண்டு இருக்கிறாள்.. அவளுடைய வயதைச் சேர்ந்த பெண் தான் என்னுடைய தங்கையும் அவள் என்ன இப்படியா இருக்கிறாள்..?” என்று ஒருமாதிரியாக கேட்டான்
“டேய் வார்த்தையை அளந்து பேசுடா.. யாருடைய தங்கையை என்ன பேசறா.. அடித்தால் ஒரு அடிக்கு தாங்க மாட்ட, என்னுடைய தங்கை எத்தனை பசங்களுக்கு நடுவில் இருந்தாலும் அவளது குணம் அப்படி கிடையாது.. இனிமேல் உன்னோட நட்பு எனக்கு வேண்டாம்..” என்ற சுதா பாரதி பக்கம் திரும்பி
“ஏய் பாரதி என்னடி விளையாட்டு முடிந்ததா..?” என்று குரல் கொடுத்தவன் பாரதியின் அருகில் செல்ல, அவளும் தனது நண்பர்களிடம் விடைப்பெற்று சுதாவுடன் கிளம்பினாள்
“என்ன சுதா ரொம்ப கோபமாக இருக்கிறாய்..? என்ன விஷயம் சொல்லு ஒரு கைப்பார்த்து விடலாம்! சொல்லு சுதா என்ன பிரச்சனை..?” என்று கேட்டாள் பாரதி
“எல்லாம் உன்னால் வந்ததுதான் பாரதி..” என்று கூறியவண்ணம் வந்தான் வாசு
“என்னால் என்னடா பிரச்சனை உங்களின் இருவருக்கும்..?” என்று புரியாமல் கேட்டாள்
“நீ எந்த நேரமும் பசங்களுடன் விளையாடுவதைப் பார்த்து எங்களின் நண்பர்கள் எல்லாம் எங்களை கேலி செய்கின்றனர்..” என்று வாசு உண்மையைக் கூற,
“இதுக்குதான் இப்படி மூஞ்சியை வைத்திருக்கிறீர்கள்..?” என்று அவளின் இரண்டு அண்ணன்களையும் பார்த்துக் கேட்டவள்
“இனிமேல் நான் பசங்களுடன் விளையாட மாட்டேன்..” என்று கூறியவள், அண்ணனின் முகம் பார்த்தவள்
“சரிடா வாங்க வீட்டிற்கு போகலாம்” என்று கூறியவள், “அதுதான் சொல்வதைக் கேட்கிறேன் என்று சொல்கிறேன் இல்ல கொஞ்சம் சிரிங்கடா இஞ்சி தின்ன குரங்குகளா..” என்று அவள் கூற அவர்களின் முகத்தில் சிரிப்பு வந்தது, அவர்கள் வீட்டு நோக்கி சென்றனர்..
காலையில் எழுந்தவுடன் வீட்டைவிட்டு வெளியே பாரதி அந்த வெயிலில் நன்றாக சுற்றிவிட்டு மதியம் சாப்பிட வந்தாள். பின்வாசல் வழியாக வீட்டின் உள்ளே நுழைந்த பாரதி,
“அடியே பிரபா அம்மா எங்கேடி!” என்று கேட்டவண்ணம் உள்ளே வந்தாள்..
“அம்மா மாவு ஆட்டுகிறார்கள் குட்டி! என்ன காலையில் இருந்து உன்னோட ஆட்டம் எப்படி போகிறது..?” என்று சிரிப்புடன் கேட்ட பிரபாவதி சமையலுக்கு காய்கறிகளை நறுக்க ஆரமித்தாள்.
“நான்கு பம்பரம் வென்றுவிட்டேன்! பாவம் சின்ன பசங்க என்னிடம் தோற்றுவிட்டனர்..” என்று கலகலவென்று சிரித்தாள் பாரதி..
“எங்கேடி இந்த சுதாவை இன்னும் காணவில்லை.. வாசுவும் அப்பொழுதே வந்துவிட்டான்..” என்று கேட்டாள் பிரபாவதி
“அவனா என்னை ஒருத்தன் கிண்டல் பண்ணியதற்கு அவனோட மண்டையை பிளந்துவிட்டான்..” என்று ரகசியம் போல கூறினாள் பாரதி
“ஏய் என்னடி இது விளையாட போகதே என்று சொன்னாலும் கேட்பதில்லை, இப்போ பாரு அவன் வம்பில் மாட்டிக் கொண்டான்.. அதுதான் வாசு அப்பவே வந்துவிட்டானா..?” என்று சமையல் அறைக்குள் சென்றாள் பிரபா
“பிரபா சுதாவுக்கு ஒன்னும் ஆகாது.. அவன் அடித்ததைப் பார்த்தவள் நான் மட்டுமே..” என்று பெருமையாகக் கூறினாள் பாரதி
“அடிபாவி இதில் அண்ணனும் தங்கையும் கூட்டாகச் சேர்ந்து இன்னொருத்தன் மண்டையைப் பிளந்தது அப்பாவிற்கு தெரிந்தது!” என்று அவள் வாயைத் திறக்கும் முன்னாடியே அவளின் பின்னோடு வந்த பாரதி அவளின் வாயில் பச்சை மிளகாயை வைத்து அழுத்த அதைத் தெரியாமல் கடித்த பிரபா
“ஸ்ஸ் ஆஆஆ!” என்று அலறியவள், காரம் தண்ணீரை எடுத்துக் குடித்தவள் சக்கரையை எடுத்து வாயில் போட்டாள்.. கண்களில் கண்ணீர் வழிய, பக்கத்தில் இருந்த விறகு கட்டையில் ஒன்றை எடுத்தவள்,
பாரதியை அடிக்க துரத்த, “ஏய் பாரதி ஓட்டாதே நில்லுடி! இல்ல என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது..” என்று கத்த, வெளியே இருந்து உள்ளே வந்த மீனாட்சி,
“ஏய் பிரபா வயசிற்கு ஏற்றது போல பேசிப்பழகு!” என்று மீனாட்சி பிரபாவை அதட்டல் போட பெரியவள் துரத்தியதால் கிணத்துமேட்டில் அமர்ந்திருந்த பாரதி,
“நல்ல சொல்லுங்க அம்மா அவளுக்கு எத்தனை சொன்னாலும் அறிவே இல்லை..” என்று போட்டுக் கொடுக்க, அவளை முறைத்த பிரபா,
“அம்மா அவள்தான் என்னோட வாயில் மிளகாயை வைத்துவிட்டாள்.. காரம் உயிரே போகிறது..” என்று பிரபா கண்களில் கண்ணீருடன் சொல்ல,
“விடும்மா சின்னப்பெண் தெரியாமல் செய்திருப்பாள்.. அதுக்குப்போய் இப்படியா கண்ணை கசக்குவது..?” என்று மகளின் கண்ணீரைத் துடைத்து விட்டவர் உள்ளே செல்ல அவரின் பின்னோடு சென்றாள் பிரபா
கிணத்துமேட்டில் அமர்ந்திருந்த பாரதி, “அப்பாடி பிசாசிடம் இருந்து தப்பிக்க வைத்த அம்மாவிற்கு கோவில் கட்டிக் கும்பிடலாம்..” என்று தனது அடுத்த விளையாட்டுகளைப் பட்டியல் போட்ட வண்ணம் அமர்ந்திருந்தாள்
இவ்வாறு வீட்டில் எல்லாவிதமான சேட்டையும் செய்வது நம்ம பாரதியே! ஆனால் அவள் எதிலும் மாட்டவே மாட்டாள். ‘தவறே செய்தாலும் அதை மற்றவர்கள் கண்டு பிடிக்காத வண்ணம் செய்ய வேண்டும்’ என்பது அவளின் கொள்கைகளில் ஒன்று!
அவளை யாரும் கண்டிக்க மாட்டார்கள் வீட்டின் கடைக்குட்டி மேல் அண்ணன் அக்கா ஐவருக்கும் ரொம்ப செல்லம் அதிகம் அதானால் தானோ என்னமோ அவளுக்கு பயமே கிடையாது! ஒரு ஆண் போலவே வளர்க்கப்பட்டாள்! அவள் சொல்வதற்கு அக்கா, அண்ணன் அனைவரும் அடங்கிப் போவார்கள்!
அதேபோல சில வியங்களில் மட்டும் விளையாட்டாக பொய் சொல்லிவிட்டு அடுத்த நொடியே உண்மையையும் சொல்லிவிடுவாள்!
இப்படியே சிரித்த வண்ணம் நாட்கள் கடந்து செல்ல, அடுத்து பிரபாவிற்கு திருமணம் நடக்க அவளை வால்பாறையில் கட்டிக்கொடுத்தனர். வீட்டில் இருந்து பிரபா போக, ராதா வீட்டிற்குள் வந்தாள்.
கண்ணனுக்கு திருமணம் நடக்க அவளின் அண்ணியாக வந்தாள் ராதா..!
நாட்கள் கடந்து செல்ல பதிமூன்று வயதினை அடைந்த பாரதி, பத்து பசங்களுக்கு நடுவே ஒற்றைப் பெண்ணாக இருந்து கில்லிவிளையாடிக் கொண்டிருந்தாள்..
அதைப் பார்த்த சுதாவின் தோழன் ஒருவன், “டேய் சுதா அங்கே விளையாடுவது உன்னுடைய தங்கை பாரதிதானே..?” என்று கேட்டான்
அவன் காட்டிய திசையைப் பார்த்த சுதா, “ம்ம் ஆமாடா பாரதிதான்..” என்று சொல்லவே,
“டேய் உன்னுடைய தங்கை என்ன இப்படி கொஞ்சம் கூட பயமே இல்லாமல் பத்து பசங்கள் நடுவே விளையாடிக் கொண்டு இருக்கிறாள்.. அவளுடைய வயதைச் சேர்ந்த பெண் தான் என்னுடைய தங்கையும் அவள் என்ன இப்படியா இருக்கிறாள்..?” என்று ஒருமாதிரியாக கேட்டான்
“டேய் வார்த்தையை அளந்து பேசுடா.. யாருடைய தங்கையை என்ன பேசறா.. அடித்தால் ஒரு அடிக்கு தாங்க மாட்ட, என்னுடைய தங்கை எத்தனை பசங்களுக்கு நடுவில் இருந்தாலும் அவளது குணம் அப்படி கிடையாது.. இனிமேல் உன்னோட நட்பு எனக்கு வேண்டாம்..” என்ற சுதா பாரதி பக்கம் திரும்பி
“ஏய் பாரதி என்னடி விளையாட்டு முடிந்ததா..?” என்று குரல் கொடுத்தவன் பாரதியின் அருகில் செல்ல, அவளும் தனது நண்பர்களிடம் விடைப்பெற்று சுதாவுடன் கிளம்பினாள்
“என்ன சுதா ரொம்ப கோபமாக இருக்கிறாய்..? என்ன விஷயம் சொல்லு ஒரு கைப்பார்த்து விடலாம்! சொல்லு சுதா என்ன பிரச்சனை..?” என்று கேட்டாள் பாரதி
“எல்லாம் உன்னால் வந்ததுதான் பாரதி..” என்று கூறியவண்ணம் வந்தான் வாசு
“என்னால் என்னடா பிரச்சனை உங்களின் இருவருக்கும்..?” என்று புரியாமல் கேட்டாள்
“நீ எந்த நேரமும் பசங்களுடன் விளையாடுவதைப் பார்த்து எங்களின் நண்பர்கள் எல்லாம் எங்களை கேலி செய்கின்றனர்..” என்று வாசு உண்மையைக் கூற,
“இதுக்குதான் இப்படி மூஞ்சியை வைத்திருக்கிறீர்கள்..?” என்று அவளின் இரண்டு அண்ணன்களையும் பார்த்துக் கேட்டவள்
“இனிமேல் நான் பசங்களுடன் விளையாட மாட்டேன்..” என்று கூறியவள், அண்ணனின் முகம் பார்த்தவள்
“சரிடா வாங்க வீட்டிற்கு போகலாம்” என்று கூறியவள், “அதுதான் சொல்வதைக் கேட்கிறேன் என்று சொல்கிறேன் இல்ல கொஞ்சம் சிரிங்கடா இஞ்சி தின்ன குரங்குகளா..” என்று அவள் கூற அவர்களின் முகத்தில் சிரிப்பு வந்தது, அவர்கள் வீட்டு நோக்கி சென்றனர்..