அத்தியாயம் – 5
பொள்ளாச்சியிலிருந்து கருமத்தம்பட்டிக்கு வந்த பாரதி ரொம்ப சந்தோசமாக இருந்தாள்.. அங்கே அவளைக் கட்டுப்பாடு விதிக்க யாருமே இல்லை என்றே சொல்லலாம்..
அவளின் பெரிய அக்காவிற்கு இரண்டு பசங்கள், இரண்டு பெண்கள்.. அவளின் சின்ன அக்காவிற்கு ஒரு பையன், ஒரு பொண்ணு என்று சின்ன பட்டாளமே இருந்தது!
காலையில் எழுந்ததும் அம்மாவிடம் சொல்லிவிட்டு பெரிய அக்கா பாக்கியம் வீட்டிற்கு சென்றால் அங்கே குழந்தைகளுடன் பெரிய போர்களமே நடக்கும்..
“அக்கா..” என்று அழைத்தவள் காலில் கொலுசுகள் சரசரக்க, வீட்டிற்குள் சென்றாள்
“வா பாரதி..” என்று அழைத்த பாக்கியம் பிள்ளைகளுக்கு காலை உணவு பண்ணிக்கொண்டு இருக்க, “எங்க அக்கா பசங்களை யாரையும் காணவில்லை..?” என்றவள் பிள்ளைகள் தங்கி இருக்கும் அறைக்குள் சென்று பார்க்க,
“டேய் சித்தி எழுந்திரிடா..” என்று தம்பியை எழுப்பினாள் சிவரதி
“டேய் பசங்களா..?” என்று பாரதி பிள்ளைகளை அழைக்க, “தித்தி பாலு எழு வா...” என்று கடைசி வாண்டு பாரதிக்கு கட்டளை இட,
“என்ன நித்திக்குட்டி எழுந்து விட்டது போல தெரிகிறது...?” என்று அவளின் கடைசி மகனை தூக்கிக்கொண்டு வெளியே செல்ல,
“சித்தி அம்மா கேட்ட நாங்க இன்னும் எழுந்திரிக்கவில்லை என்று சொல்லுங்க...” என்று சிவரதி, ராஜா, சூர்யா மூவரும் போர்வையை இழுத்துப் போத்திக்கொண்டு தூங்க ஆரமித்தது..
“அக்கா நித்தி எழுந்துவிட்டான் பால் கேட்கிறான்..” என்று கூறியவள், “காலையில் என்ன சமையல்..?” என்று கேட்டுக் கொண்டே பாலை ஆத்தி நித்திக்கு கொடுத்தாள்
“சப்பாத்தி, உருளைக்கிழங்கு குருமா செல்லாம் என்று இருக்கிறேன்.. நீ மாவு பினைந்துவிடு, நான் குருமா வைத்து விடுகிறேன்..” என்று கூறியவர் பாரதியை மாவு பிசைய சொல்ல,
“கோதுமை மாவு எங்க அக்கா இருக்கிறது..?” என்று கேட்டுக் கொண்டே பிள்ளைகள் இருக்கும் அறைக்குள் சென்றவள், “ஏய் சிவரதி, ராஜா, சூர்யா ஆளுக்கு எத்தனை சப்பாத்தி சாப்பிடுவீங்க..?” என்று கேட்க,
“சித்தி இன்னைக்கு சப்பாத்தியா..?” என்று கேட்ட மூவரும், “ஆளுக்கு ஆறு சாப்பிடுவோம் சித்தி.. ஆனால் அம்மா எங்களுக்கு இரண்டு போதும் என்று தானே சொல்வாங்க..” என்று வருத்தமாகக் சிவரதி கூற,
“சித்தி எதுக்கு இருக்கேன்..? மாவு அதிகம் பினைந்துவிடுகிறேன்.. என்னை மாட்டிவிடாமல் நீங்கள் சாப்பிட வேண்டும்..” என்று கூறிய பாரதி சமையல் அறையை நோக்கிச் சென்றாள்..
அதற்குள் பக்கத்துக்கு வீட்டில் இருந்த செல்வி எதற்கோ பாக்கியாவை அழைக்க, “பாரதி நீ மாவு பினைந்துக் கொண்டிரும்மா.. இந்த செல்வி என்னைக் கூப்பிட்டால் என்ன என்று கேட்டு வருகிறேன்..அப்படியே இவனையும் பார்த்துக்கொண்டு இரும்மா..” என்று நித்திலனை தொட்டிலில் போட்டுவிட்டுச் சென்றவள்,
சப்பாத்தி, உருளைக்கிழங்கு குருமா வைக்கும் வரையில் வரவே இல்லை, ‘நல்ல அக்கா எப்படித்தான் இப்படி இருக்காளோ..? இந்த மச்சானும் எதுவும் கேட்பதே இல்லை..” என்று மனதில் நினைத்துக் கொண்டு வேலையை செய்து முடிக்க, மெதுவாக எழுந்து குளித்துவிட்டு சாப்பிட வந்த பிள்ளைகள்,
“சித்தி வாசனை சூப்பர்..” என்று கூறி ஆளுக்கு ஒரு தட்டை எடுத்துவைத்து சாப்பிட அமரும் வரையில் வெளியே சென்ற பாக்கியம் வெட்டியாக பேசிக்கொண்டிருக்க,
அவர்களுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு சமையல் மேடையில் அமர்ந்த பிள்ளைகள், “சித்தி நீங்க சாப்படலையா..?” என்று கேட்ட சிவரதி,
“ஏய் ரதி அம்மாதான் சித்தியிடம் வேலையைக் கொடுத்துவிட்டு வெட்டியாக பேச போய்விட்டது.. சித்தி நமக்கு பசிக்கும் என்று சமையல் செய்திருக்காங்க..” என்று அவளின் அண்ணன் ராஜா கூற,
“அண்ணா சித்தி பாவம் இல்ல அவங்களுக்கும் பசிக்கும் இல்ல..” என்று கூறிய சூர்யா
“நாம் முதலில் அவர்களுக்கு கொடுப்போம்..” என்று கூறிவிட்டு பாரதிக்கும் தட்டை எடுத்து சப்பாத்தியைப் போட்டு குருமாவை ஊத்திக் கொடுக்க, நால்வரும் சேர்ந்து சாப்பிட ஆரமித்தனர்
முதலில் சாப்பிட்ட பாரதி பிள்ளைகளுக்கும் பரிமாற, அவர்களும் சாப்பிட்டு முடிக்கும் பொழுது வந்த பாக்கியம், “எல்லாம் செய்துவிட்டாயா..? பிள்ளைகள் எல்லாம் சாப்பிடாங்களா..?” என்று கேட்க,
“பார்த்தீங்களா அண்ணா சித்தியை வேலை செய்ய சொல்லிவிட்டு சென்றவர் சரியாக சாப்பிடு முடிக்கும் பொழுது வருகிறார்கள்..” என்று மெதுவாகக் கூறினாள் சிவரதி
“மூவரும் எத்தனை சப்பாத்தி சாப்டீங்க..?” என்று கேட்க, “அம்மா ஒன்றை சப்பாத்தி கூட சாப்பிடவே முடியவில்லை..” என்று சூர்யா வேகமாக சொல்ல
“எனக்கு தெரியும் எவ்வளவு செய்தாலும் நீங்க இரண்டு கூட சாப்பிட மாட்டிங்க என்று எனக்குத் தெரியும்..” என்று பாக்கியம் சொல்ல,
‘மூவரும் சேர்ந்து இருபது சப்பாத்தி முழுங்கியது என்று சொன்னால் என்னோட உடன்பிறப்பு என்னை நம்புமா..?” என்று மனதில் நினைத்தவள்,
‘இவள் ஆளுக்கு இரண்டு செய்துக் கொடுத்தால் அந்த பிள்ளைகள் என்ன பண்ணும் பாவம்.. பேருதான் பணக்கார வீட்டுப் பிள்ளைகள்.. ஆனால் சாப்பாடு இல்லாமல் அவர்கள் தவிப்பது யாருக்கு தெரியும்..’ என்று நினைத்தவள் அவர்களின் பேச்சில் கவனம் செலுத்த,
“பாவம் அம்மா சித்தி இத்தனை வேலை செய்துவிட்டு இன்னும் சாப்பிடவே இல்லை..” என்று மெகா சைஸில் ரீல் விட்டான்
“டேய் நான் இப்பொழுது தான் சாப்பிட்டேன்..” என்று கூறியவளை முறைத்தான் ராஜா
“நீங்க என்ன வேலைகாரியா..? இவங்க வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரங்க, நீங்க இருவரும் ஒரே மாதிரி இருக்கீங்க சித்தி.. கண்டிப்பா இவங்க எதுவும் உங்களுக்கு செய்ய போவது கிடையாது அப்படி இருக்கும் பொழுதுதான் உங்களுக்கு நான் சொல்வது உண்மை என்று புரியும்..” என்று கூறினான் அந்த பத்து வயது சிறுவன்
ஆனால் அவன் சொன்னது உண்மையில் நடக்கும் என்பதை அவள் அறியவில்லை..
அதன்பிறகு சின்ன அக்கா வீட்டிற்கு செல்ல அங்கேயும் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குள் நுழையும் போது, “பாரதி என்னதான் நினைத்துக்கொண்டு இருக்கிறாய்..?” என்று திட்டியபடியே வேலையை செய்தார்..
“என்னம்மா நம்ம அக்காங்க தானே அம்மா..?” என்று அக்காங்களுக்கு பரிந்து பேசவே, “இன்னைக்கு சொல்கிறேன் பாரதி நீ நினைப்பது போல உன்னோட அக்காங்க இருவரும் நல்லவள்கள் கிடையாது..” என்று சொல்ல,
“என்னங்க அம்மா நீங்க பெத்த பெண்ணையே நீங்க இப்படி சொல்றீங்க..?” என்று கேட்க, “நான் அவர்களைப் பற்றி தெரிந்தால் தான் சொல்கிறேன்.. நாம் ஒன்னும் சொத்து, சுகம் என்று இருக்கவில்லை என்றாலும்கூட நிம்மதி இருக்கிறது.. உன்னை அவர்கள் இருவரும் வேலைகாரியாக நடத்துகின்றனர்..” என்று கூறியவர் தொடர்ந்து,
“இல்லங்க அம்மா நாளைக்கு என்னுடைய பிள்ளைகளுக்கு அவர்கள் செய்ய மாட்டார்களா..?” என்று கேட்க,
“நான் இன்று சொல்வது உனக்கு கசக்கும் பாரதி, ஆனால் நான் சொல்வது எல்லாம் நடக்கும் போது நான் இருக்கிறேனோ இல்லையோ தெரியாது ஆனால் நான் சொன்ன சொற்கள் இருக்கும் அன்று நினைப்பாய் அம்மா எவ்வளவு சரியாக சொன்னார்கள் என்று நினைத்து கண்ணீர் விடும் நேரத்தில் யாரும் உன்னுடன் இருக்க மாட்டார்கள்..” என்று கூறினார்
ஆனால் அவர் சொல்வதும் ஒருநாள் நடக்கும் என்பதையும் பாரதி அறியவில்லை.. அதைப்பற்றி கவலைப்படவும் இல்லை அவள் எப்பொழுதும் போலவே சின்ன அக்கா பெரிய அக்கா அவர்களுடைய பிள்ளைகள் என்று சந்தோசமாக வலம் வந்தாள்
பொள்ளாச்சியிலிருந்து கருமத்தம்பட்டிக்கு வந்த பாரதி ரொம்ப சந்தோசமாக இருந்தாள்.. அங்கே அவளைக் கட்டுப்பாடு விதிக்க யாருமே இல்லை என்றே சொல்லலாம்..
அவளின் பெரிய அக்காவிற்கு இரண்டு பசங்கள், இரண்டு பெண்கள்.. அவளின் சின்ன அக்காவிற்கு ஒரு பையன், ஒரு பொண்ணு என்று சின்ன பட்டாளமே இருந்தது!
காலையில் எழுந்ததும் அம்மாவிடம் சொல்லிவிட்டு பெரிய அக்கா பாக்கியம் வீட்டிற்கு சென்றால் அங்கே குழந்தைகளுடன் பெரிய போர்களமே நடக்கும்..
“அக்கா..” என்று அழைத்தவள் காலில் கொலுசுகள் சரசரக்க, வீட்டிற்குள் சென்றாள்
“வா பாரதி..” என்று அழைத்த பாக்கியம் பிள்ளைகளுக்கு காலை உணவு பண்ணிக்கொண்டு இருக்க, “எங்க அக்கா பசங்களை யாரையும் காணவில்லை..?” என்றவள் பிள்ளைகள் தங்கி இருக்கும் அறைக்குள் சென்று பார்க்க,
“டேய் சித்தி எழுந்திரிடா..” என்று தம்பியை எழுப்பினாள் சிவரதி
“டேய் பசங்களா..?” என்று பாரதி பிள்ளைகளை அழைக்க, “தித்தி பாலு எழு வா...” என்று கடைசி வாண்டு பாரதிக்கு கட்டளை இட,
“என்ன நித்திக்குட்டி எழுந்து விட்டது போல தெரிகிறது...?” என்று அவளின் கடைசி மகனை தூக்கிக்கொண்டு வெளியே செல்ல,
“சித்தி அம்மா கேட்ட நாங்க இன்னும் எழுந்திரிக்கவில்லை என்று சொல்லுங்க...” என்று சிவரதி, ராஜா, சூர்யா மூவரும் போர்வையை இழுத்துப் போத்திக்கொண்டு தூங்க ஆரமித்தது..
“அக்கா நித்தி எழுந்துவிட்டான் பால் கேட்கிறான்..” என்று கூறியவள், “காலையில் என்ன சமையல்..?” என்று கேட்டுக் கொண்டே பாலை ஆத்தி நித்திக்கு கொடுத்தாள்
“சப்பாத்தி, உருளைக்கிழங்கு குருமா செல்லாம் என்று இருக்கிறேன்.. நீ மாவு பினைந்துவிடு, நான் குருமா வைத்து விடுகிறேன்..” என்று கூறியவர் பாரதியை மாவு பிசைய சொல்ல,
“கோதுமை மாவு எங்க அக்கா இருக்கிறது..?” என்று கேட்டுக் கொண்டே பிள்ளைகள் இருக்கும் அறைக்குள் சென்றவள், “ஏய் சிவரதி, ராஜா, சூர்யா ஆளுக்கு எத்தனை சப்பாத்தி சாப்பிடுவீங்க..?” என்று கேட்க,
“சித்தி இன்னைக்கு சப்பாத்தியா..?” என்று கேட்ட மூவரும், “ஆளுக்கு ஆறு சாப்பிடுவோம் சித்தி.. ஆனால் அம்மா எங்களுக்கு இரண்டு போதும் என்று தானே சொல்வாங்க..” என்று வருத்தமாகக் சிவரதி கூற,
“சித்தி எதுக்கு இருக்கேன்..? மாவு அதிகம் பினைந்துவிடுகிறேன்.. என்னை மாட்டிவிடாமல் நீங்கள் சாப்பிட வேண்டும்..” என்று கூறிய பாரதி சமையல் அறையை நோக்கிச் சென்றாள்..
அதற்குள் பக்கத்துக்கு வீட்டில் இருந்த செல்வி எதற்கோ பாக்கியாவை அழைக்க, “பாரதி நீ மாவு பினைந்துக் கொண்டிரும்மா.. இந்த செல்வி என்னைக் கூப்பிட்டால் என்ன என்று கேட்டு வருகிறேன்..அப்படியே இவனையும் பார்த்துக்கொண்டு இரும்மா..” என்று நித்திலனை தொட்டிலில் போட்டுவிட்டுச் சென்றவள்,
சப்பாத்தி, உருளைக்கிழங்கு குருமா வைக்கும் வரையில் வரவே இல்லை, ‘நல்ல அக்கா எப்படித்தான் இப்படி இருக்காளோ..? இந்த மச்சானும் எதுவும் கேட்பதே இல்லை..” என்று மனதில் நினைத்துக் கொண்டு வேலையை செய்து முடிக்க, மெதுவாக எழுந்து குளித்துவிட்டு சாப்பிட வந்த பிள்ளைகள்,
“சித்தி வாசனை சூப்பர்..” என்று கூறி ஆளுக்கு ஒரு தட்டை எடுத்துவைத்து சாப்பிட அமரும் வரையில் வெளியே சென்ற பாக்கியம் வெட்டியாக பேசிக்கொண்டிருக்க,
அவர்களுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு சமையல் மேடையில் அமர்ந்த பிள்ளைகள், “சித்தி நீங்க சாப்படலையா..?” என்று கேட்ட சிவரதி,
“ஏய் ரதி அம்மாதான் சித்தியிடம் வேலையைக் கொடுத்துவிட்டு வெட்டியாக பேச போய்விட்டது.. சித்தி நமக்கு பசிக்கும் என்று சமையல் செய்திருக்காங்க..” என்று அவளின் அண்ணன் ராஜா கூற,
“அண்ணா சித்தி பாவம் இல்ல அவங்களுக்கும் பசிக்கும் இல்ல..” என்று கூறிய சூர்யா
“நாம் முதலில் அவர்களுக்கு கொடுப்போம்..” என்று கூறிவிட்டு பாரதிக்கும் தட்டை எடுத்து சப்பாத்தியைப் போட்டு குருமாவை ஊத்திக் கொடுக்க, நால்வரும் சேர்ந்து சாப்பிட ஆரமித்தனர்
முதலில் சாப்பிட்ட பாரதி பிள்ளைகளுக்கும் பரிமாற, அவர்களும் சாப்பிட்டு முடிக்கும் பொழுது வந்த பாக்கியம், “எல்லாம் செய்துவிட்டாயா..? பிள்ளைகள் எல்லாம் சாப்பிடாங்களா..?” என்று கேட்க,
“பார்த்தீங்களா அண்ணா சித்தியை வேலை செய்ய சொல்லிவிட்டு சென்றவர் சரியாக சாப்பிடு முடிக்கும் பொழுது வருகிறார்கள்..” என்று மெதுவாகக் கூறினாள் சிவரதி
“மூவரும் எத்தனை சப்பாத்தி சாப்டீங்க..?” என்று கேட்க, “அம்மா ஒன்றை சப்பாத்தி கூட சாப்பிடவே முடியவில்லை..” என்று சூர்யா வேகமாக சொல்ல
“எனக்கு தெரியும் எவ்வளவு செய்தாலும் நீங்க இரண்டு கூட சாப்பிட மாட்டிங்க என்று எனக்குத் தெரியும்..” என்று பாக்கியம் சொல்ல,
‘மூவரும் சேர்ந்து இருபது சப்பாத்தி முழுங்கியது என்று சொன்னால் என்னோட உடன்பிறப்பு என்னை நம்புமா..?” என்று மனதில் நினைத்தவள்,
‘இவள் ஆளுக்கு இரண்டு செய்துக் கொடுத்தால் அந்த பிள்ளைகள் என்ன பண்ணும் பாவம்.. பேருதான் பணக்கார வீட்டுப் பிள்ளைகள்.. ஆனால் சாப்பாடு இல்லாமல் அவர்கள் தவிப்பது யாருக்கு தெரியும்..’ என்று நினைத்தவள் அவர்களின் பேச்சில் கவனம் செலுத்த,
“பாவம் அம்மா சித்தி இத்தனை வேலை செய்துவிட்டு இன்னும் சாப்பிடவே இல்லை..” என்று மெகா சைஸில் ரீல் விட்டான்
“டேய் நான் இப்பொழுது தான் சாப்பிட்டேன்..” என்று கூறியவளை முறைத்தான் ராஜா
“நீங்க என்ன வேலைகாரியா..? இவங்க வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரங்க, நீங்க இருவரும் ஒரே மாதிரி இருக்கீங்க சித்தி.. கண்டிப்பா இவங்க எதுவும் உங்களுக்கு செய்ய போவது கிடையாது அப்படி இருக்கும் பொழுதுதான் உங்களுக்கு நான் சொல்வது உண்மை என்று புரியும்..” என்று கூறினான் அந்த பத்து வயது சிறுவன்
ஆனால் அவன் சொன்னது உண்மையில் நடக்கும் என்பதை அவள் அறியவில்லை..
அதன்பிறகு சின்ன அக்கா வீட்டிற்கு செல்ல அங்கேயும் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குள் நுழையும் போது, “பாரதி என்னதான் நினைத்துக்கொண்டு இருக்கிறாய்..?” என்று திட்டியபடியே வேலையை செய்தார்..
“என்னம்மா நம்ம அக்காங்க தானே அம்மா..?” என்று அக்காங்களுக்கு பரிந்து பேசவே, “இன்னைக்கு சொல்கிறேன் பாரதி நீ நினைப்பது போல உன்னோட அக்காங்க இருவரும் நல்லவள்கள் கிடையாது..” என்று சொல்ல,
“என்னங்க அம்மா நீங்க பெத்த பெண்ணையே நீங்க இப்படி சொல்றீங்க..?” என்று கேட்க, “நான் அவர்களைப் பற்றி தெரிந்தால் தான் சொல்கிறேன்.. நாம் ஒன்னும் சொத்து, சுகம் என்று இருக்கவில்லை என்றாலும்கூட நிம்மதி இருக்கிறது.. உன்னை அவர்கள் இருவரும் வேலைகாரியாக நடத்துகின்றனர்..” என்று கூறியவர் தொடர்ந்து,
“இல்லங்க அம்மா நாளைக்கு என்னுடைய பிள்ளைகளுக்கு அவர்கள் செய்ய மாட்டார்களா..?” என்று கேட்க,
“நான் இன்று சொல்வது உனக்கு கசக்கும் பாரதி, ஆனால் நான் சொல்வது எல்லாம் நடக்கும் போது நான் இருக்கிறேனோ இல்லையோ தெரியாது ஆனால் நான் சொன்ன சொற்கள் இருக்கும் அன்று நினைப்பாய் அம்மா எவ்வளவு சரியாக சொன்னார்கள் என்று நினைத்து கண்ணீர் விடும் நேரத்தில் யாரும் உன்னுடன் இருக்க மாட்டார்கள்..” என்று கூறினார்
ஆனால் அவர் சொல்வதும் ஒருநாள் நடக்கும் என்பதையும் பாரதி அறியவில்லை.. அதைப்பற்றி கவலைப்படவும் இல்லை அவள் எப்பொழுதும் போலவே சின்ன அக்கா பெரிய அக்கா அவர்களுடைய பிள்ளைகள் என்று சந்தோசமாக வலம் வந்தாள்