அத்தியாயம் – 6
பிரதீபன், முரளி, ராகவன் மூவரும் வேறொரு தரிபட்டறையில் சேர்ந்தனர்.. எங்கே ராமு என்று தானே கேட்கிறீங்க..? ராமு ஒரு விபத்தில் இறந்துவிட, அவனது நினைவுகளை மறக்க, வேறொரு தரிபட்டறைக்கு மூவரும் சென்றனர்..
பிரதீபன் அவனுடைய பதினாறு வயதின் தொடக்கம் அவனுக்கு கடவுள் கொடுத்த ஒரு வரம் என்று சொல்லலாம்! அவன் வேலை செய்ய சென்ற இடத்தில் துளசி என்ற ஒருவரை சந்தித்தான்..
அவனது வாழ்வில் மறக்க முடியாத காலக்கட்டம் அவரின் சந்திப்பு... இந்த துளசி யார் என்று யோசிக்கிறீங்க..?!
அன்றைய விடியல் யாருக்கு அழகாக விடிந்ததோ இல்லையோ பிரதீபன் வாழ்க்கையில் ஒரு நல்ல உதயம்..!
அன்று மூவரும் சேர்ந்து வேறொரு தரிபட்டறைக்கு செல்ல வழிமுழுதும் பிரதீபனுக்கு நல்ல உபதேசம் நடந்தது.. அவனோ எப்பொழுதும் போல நண்பர்கள் சொல்வதை அந்த காதில் வாங்கி இந்த காதில் விடு என்ற லெவலில் இருந்தான்..
அவர்கள் வீட்டில் இருந்து நடந்து செல்லும் தொலைவுதான் என்ற நிலையில் மூவரும் காலை நேரத்தில் சாலையில் நடக்கும் போக்குவரத்து பார்த்து ரசித்த வண்ணம் நடந்துக் கொண்டிருந்தான் பிரதீபன்
இருப்பக்க தார் தார் சாலையில் காலை நேரம் எல்லோரும் ஏதோவொரு வேலைக்கு செல்ல, அவர்களைப் பார்த்த வண்ணம் நடந்து வர பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டு சாலையில் நடக்கும் சின்ன விபத்துகள் அதில் ஏற்படும் சின்ன காயங்கள் என்று மற்றவரின் அனைத்து விதமான அசைவுகளையும் கண்காணித்தபடியே வந்தான் பிரதீபன்..
“டேய் பிரதீபா அங்கேயும் போய் உன்னோட வழக்கமான சேட்டையை ஆரமித்து விடாதே..” என்று ராகவன் சொல்லிக் கொண்டு வர,
“இந்த பெண்ணிற்கு இந்த உடை நல்ல இல்ல இவள் சேலை கட்டினால் அம்மன் சிலை போல இருப்பாள்..” என்று அவனை கடந்து சென்ற பெண்ணைப் பார்த்துக் கூறினான்
“டேய் நாம் என்ன சொல்லிட்டு வரோம்! இவன் என்ன சொல்கிறான் பாரு..?” என்று தலையில் அடித்துக் கொண்டான் முரளி
“டேய் முரளி நான் தப்பான கண்ணோட்டத்தில் அந்த பெண்ணைப் பார்க்கவில்லை.. அவள் அணிந்திருக்கும் பாவாடை தாவணியை விடவும் அவளுக்கு சேலை தான் அழகாக இருக்கும்.. அதை தான் சொன்னேன்..” என்று பிரதீபன் சொல்ல
“அது அவளை திருமணம் செய்பவன் முடிவு பண்ணனும்..” என்று பல்லைக் கடித்தான் ராகவன்
“அடலூசுகளா.. ஒரு தையல் காரன் என்ன நினைப்பான்..?” என்று நண்பர்களிடம் கேள்வி கேட்க, “என்ன நினைப்பான் என்று நீயே சொல்லு..?” என்று கடுப்புடன் கூறினான் ராகவன்
“ஒரு பெண்ணிற்கு ஒரு ஜாக்கெட் தைக்கிறான் என்றால் அந்த பெண்ணிற்கு எப்படி தைத்தால் நல்ல இருக்கும்..? அந்த பெண்ணின் முகம், நிறம், ஆகியவற்றிற்கு தன்னுடைய ஜாக்கெட் எப்படி இருக்க வேண்டும் என்று யோசிப்பான்.. அதேபோல நானும் அந்த பெண்ணின் முகத்தின் அழகிற்கு அந்த பெண்ணிற்கு பாவாடை தாவணியை விடவும் சேலைதான் அந்த பெண்ணிற்கு அழகாக இருக்கும்..” என்று சொல்ல நண்பர்கள் இருவரும் அவனது விளக்கம் கேட்டு அசந்து போய் நின்றனர்..
சிலநொடிக்கு முன்னே பார்த்த ஒரு பெண்ணிற்கு எந்த வகையில் அவளின் அழகு சுடர் விடும் என்று நொடியில் கணித்த பிரதீபனைப் பார்த்து அசந்து விட்டனர்..
இப்படியே பேசிக்கொண்டே தரிபட்டறைக்கு வந்து மூவரும் சேர்ந்தனர்.. அவர்கள் தரிபட்டறைக்குள் நுழைந்ததும் முதலில் பிரதீபன் கண்டது துளசியைத்தான்..
“நீங்கள் மூவரும் தான் வேலைக்கு கேட்டு வந்ததா..?” என்று கேட்டாள் துளசி..
“ஆமாம் அக்கா.. முதலாளி இல்லைங்களா..” என்று கேட்டான் பிரதீபன்..
“முதலாளி வெளியே போயிருக்கிறார் தம்பி.. நீங்கள் வேலையை பாருங்கள்..” என்று சொன்னவள் தார் ஓட்டச் சென்றாள்..
மூவரும் அவள் காட்டிய இடத்தில் ஆளுக்கு இரண்டு தரிகளாக பிரித்துக்கொண்டு ஓட்ட ஆரமிக்க, டேப்ரேக்கார்டில் பாடல்கள் ஒளித்த வண்ணம் இருந்தது..
அந்த பாடல்கள் அனைத்தும் பிரதீபனுக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.. அவன் அந்த பாடல்களைக் கேட்டுக் கொண்டே வேகமாக வேலை செய்ய இவனைக் கண்காணித்த வண்ணம் வேலை செய்தனர் முரளியும், ராகவனும்..
ஆனால் போன முதல் வாரம் வரை அங்கே இருந்த யாரிடமும் பிரதீபன் பேசவே இல்லை.. அதை பார்த்த துளசி, “டேய் தம்பி உன்னோட பெயர் என்ன..?” என்று கேட்டாள்
“என்னோட பெயர் பிரதீபன் அக்கா..” என்று சொன்னவன் அவனின் வேலையை பார்க்க ஆரமித்தான்
“உன்னோட ஊர் எது பிரதீபா..?” என்று மெதுவாக பேச்சுக் கொடுத்தாள் துளசி
“சொந்த ஊர் ஈரோடு தான் அக்கா..” என்று சொல்ல, “நீ இப்பொழுது எங்கே இருக்கிறாய்..?” என்று கேட்டாள் அவள்
“நான் பள்ளிபாளையத்தில் இருக்கிறேன் அக்கா..” என்று தன்னிடைய விவரம் சொன்னவன், வேலையிலும் கவனம் செலுத்தினான்
“உன்னுடன் பிறந்தவங்க..?” என்று அவள் கேட்க, “அக்கா, அண்ணன், நான் வீட்டில் கடைசி பையன்..” என்று சொல்ல,
முரளி ராகவனிடம், “டேய் இங்கே பேசுவது பிரதீபன் தானா..? என் கண்ணை என்னால் நம்பமுடியவில்லை..” என்று சொல்ல,
“எனக்கும் அதுதான் ஒன்றுமே புரியலை முரளி..” என்று சொன்னவன் வேலையில் கவனம் செலுத்த இரண்டாவது வார சம்பளமும் வாங்கிவிட்டான்..
மூன்றாவது வாரத்தின் தொடக்கத்தில் அவனது சேட்டைகள் கொஞ்ச கொஞ்சமாக வெளிவர ஆரமித்தது..
அன்றும் அது போலவே அவனுக்கு பிடித்த பாடல்,
“செம்மறியாடே செம்மறியாடே செய்வது சரியாய சொல்
செவத்த பொண்ணு இவத்த நின்னு தவிக்கலமா சொல்..” என்று பாடல் வரிகள் பாட, அந்த நேரம் தார்குச்சிகள் தீர்ந்துவிட, அதையேடுக்க உழவன் மகனில் ராதிகா அந்த பாடலில் ஓடுவது போலவே ஓடியவனைப் பார்த்த முரளியும், ராகவனும் தலையில் அடித்துக் கொண்டார்கள்
அவன் தரிபட்டறைக்குள் நுழைந்தது முதலிருந்து பிரதீபனைப் பார்த்துக் கொண்டிருந்த துளசிக்கு அவனை மிகவும் பிடித்துவிட்டது! வேலையைக் கூட ரசித்து செய்ய சிலரால் மட்டுமே முடியும்.. அப்படி விருப்பத்துடன் செய்தால், வேலையில் இருக்கும் சோர்வு தெரியாது..
அவன் தார்குச்சியை எடுத்துவிட்டு திரும்ப துளசி நன்றாகவே சிரித்துவிட்டாள்.. அவள் சிரிப்பதைப் பார்த்த பிரதீபன், “நீங்க எதுக்கு அக்கா சிரிக்கிறீங்க..” என்று முகத்தில் அரும்பிய சிரிப்புடன் கேட்டான் பிரதீபன்
“உன்னைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.. இந்த வயதில் எதைப்பற்றியும் கவலை இல்லாமல் இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா..” என்று கேட்டாள் துளசி
“கவலைப்படுவதால் மட்டும் கவலை வந்து நமக்கு சோறு போடுமா அக்கா..?” என்று எதிர்கேள்வி கேட்ட பிரதீபனைப் பார்த்து திகைத்தாள் துளசி
“அப்போ உனக்கு எதைப்பற்றியும் கவலை இல்லையா..?” என்று சிரிப்புடன் கேட்டாள் துளசி
“இல்லையே இப்போதைக்கு எனக்கு இந்த பாட்டை மறுபடியும் இன்னொரு முறை கேட்டால் மட்டும் போதும்.. இப்போதைக்கு என்னோட தேவை இதுதான்..” என்று சொல்ல அந்த பாட்டும் முடிந்திருந்தது..
“ஒருவருக்கு தேவை வருவதால் மட்டுமே நாளை பற்றிய சிந்தனை வருகிறது, அந்த சிந்தனை வலுபெற்று கவலையாக மாறுகிறது.. இந்த நொடியை மட்டுமே நேசித்துப் பாருங்கள் அதன் சுவையே தனி!” என்று சொன்னவன் தன்னுடைய வேலையில் ஈடுபட்டான்
பிரதீபன், முரளி, ராகவன் மூவரும் வேறொரு தரிபட்டறையில் சேர்ந்தனர்.. எங்கே ராமு என்று தானே கேட்கிறீங்க..? ராமு ஒரு விபத்தில் இறந்துவிட, அவனது நினைவுகளை மறக்க, வேறொரு தரிபட்டறைக்கு மூவரும் சென்றனர்..
பிரதீபன் அவனுடைய பதினாறு வயதின் தொடக்கம் அவனுக்கு கடவுள் கொடுத்த ஒரு வரம் என்று சொல்லலாம்! அவன் வேலை செய்ய சென்ற இடத்தில் துளசி என்ற ஒருவரை சந்தித்தான்..
அவனது வாழ்வில் மறக்க முடியாத காலக்கட்டம் அவரின் சந்திப்பு... இந்த துளசி யார் என்று யோசிக்கிறீங்க..?!
அன்றைய விடியல் யாருக்கு அழகாக விடிந்ததோ இல்லையோ பிரதீபன் வாழ்க்கையில் ஒரு நல்ல உதயம்..!
அன்று மூவரும் சேர்ந்து வேறொரு தரிபட்டறைக்கு செல்ல வழிமுழுதும் பிரதீபனுக்கு நல்ல உபதேசம் நடந்தது.. அவனோ எப்பொழுதும் போல நண்பர்கள் சொல்வதை அந்த காதில் வாங்கி இந்த காதில் விடு என்ற லெவலில் இருந்தான்..
அவர்கள் வீட்டில் இருந்து நடந்து செல்லும் தொலைவுதான் என்ற நிலையில் மூவரும் காலை நேரத்தில் சாலையில் நடக்கும் போக்குவரத்து பார்த்து ரசித்த வண்ணம் நடந்துக் கொண்டிருந்தான் பிரதீபன்
இருப்பக்க தார் தார் சாலையில் காலை நேரம் எல்லோரும் ஏதோவொரு வேலைக்கு செல்ல, அவர்களைப் பார்த்த வண்ணம் நடந்து வர பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டு சாலையில் நடக்கும் சின்ன விபத்துகள் அதில் ஏற்படும் சின்ன காயங்கள் என்று மற்றவரின் அனைத்து விதமான அசைவுகளையும் கண்காணித்தபடியே வந்தான் பிரதீபன்..
“டேய் பிரதீபா அங்கேயும் போய் உன்னோட வழக்கமான சேட்டையை ஆரமித்து விடாதே..” என்று ராகவன் சொல்லிக் கொண்டு வர,
“இந்த பெண்ணிற்கு இந்த உடை நல்ல இல்ல இவள் சேலை கட்டினால் அம்மன் சிலை போல இருப்பாள்..” என்று அவனை கடந்து சென்ற பெண்ணைப் பார்த்துக் கூறினான்
“டேய் நாம் என்ன சொல்லிட்டு வரோம்! இவன் என்ன சொல்கிறான் பாரு..?” என்று தலையில் அடித்துக் கொண்டான் முரளி
“டேய் முரளி நான் தப்பான கண்ணோட்டத்தில் அந்த பெண்ணைப் பார்க்கவில்லை.. அவள் அணிந்திருக்கும் பாவாடை தாவணியை விடவும் அவளுக்கு சேலை தான் அழகாக இருக்கும்.. அதை தான் சொன்னேன்..” என்று பிரதீபன் சொல்ல
“அது அவளை திருமணம் செய்பவன் முடிவு பண்ணனும்..” என்று பல்லைக் கடித்தான் ராகவன்
“அடலூசுகளா.. ஒரு தையல் காரன் என்ன நினைப்பான்..?” என்று நண்பர்களிடம் கேள்வி கேட்க, “என்ன நினைப்பான் என்று நீயே சொல்லு..?” என்று கடுப்புடன் கூறினான் ராகவன்
“ஒரு பெண்ணிற்கு ஒரு ஜாக்கெட் தைக்கிறான் என்றால் அந்த பெண்ணிற்கு எப்படி தைத்தால் நல்ல இருக்கும்..? அந்த பெண்ணின் முகம், நிறம், ஆகியவற்றிற்கு தன்னுடைய ஜாக்கெட் எப்படி இருக்க வேண்டும் என்று யோசிப்பான்.. அதேபோல நானும் அந்த பெண்ணின் முகத்தின் அழகிற்கு அந்த பெண்ணிற்கு பாவாடை தாவணியை விடவும் சேலைதான் அந்த பெண்ணிற்கு அழகாக இருக்கும்..” என்று சொல்ல நண்பர்கள் இருவரும் அவனது விளக்கம் கேட்டு அசந்து போய் நின்றனர்..
சிலநொடிக்கு முன்னே பார்த்த ஒரு பெண்ணிற்கு எந்த வகையில் அவளின் அழகு சுடர் விடும் என்று நொடியில் கணித்த பிரதீபனைப் பார்த்து அசந்து விட்டனர்..
இப்படியே பேசிக்கொண்டே தரிபட்டறைக்கு வந்து மூவரும் சேர்ந்தனர்.. அவர்கள் தரிபட்டறைக்குள் நுழைந்ததும் முதலில் பிரதீபன் கண்டது துளசியைத்தான்..
“நீங்கள் மூவரும் தான் வேலைக்கு கேட்டு வந்ததா..?” என்று கேட்டாள் துளசி..
“ஆமாம் அக்கா.. முதலாளி இல்லைங்களா..” என்று கேட்டான் பிரதீபன்..
“முதலாளி வெளியே போயிருக்கிறார் தம்பி.. நீங்கள் வேலையை பாருங்கள்..” என்று சொன்னவள் தார் ஓட்டச் சென்றாள்..
மூவரும் அவள் காட்டிய இடத்தில் ஆளுக்கு இரண்டு தரிகளாக பிரித்துக்கொண்டு ஓட்ட ஆரமிக்க, டேப்ரேக்கார்டில் பாடல்கள் ஒளித்த வண்ணம் இருந்தது..
அந்த பாடல்கள் அனைத்தும் பிரதீபனுக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.. அவன் அந்த பாடல்களைக் கேட்டுக் கொண்டே வேகமாக வேலை செய்ய இவனைக் கண்காணித்த வண்ணம் வேலை செய்தனர் முரளியும், ராகவனும்..
ஆனால் போன முதல் வாரம் வரை அங்கே இருந்த யாரிடமும் பிரதீபன் பேசவே இல்லை.. அதை பார்த்த துளசி, “டேய் தம்பி உன்னோட பெயர் என்ன..?” என்று கேட்டாள்
“என்னோட பெயர் பிரதீபன் அக்கா..” என்று சொன்னவன் அவனின் வேலையை பார்க்க ஆரமித்தான்
“உன்னோட ஊர் எது பிரதீபா..?” என்று மெதுவாக பேச்சுக் கொடுத்தாள் துளசி
“சொந்த ஊர் ஈரோடு தான் அக்கா..” என்று சொல்ல, “நீ இப்பொழுது எங்கே இருக்கிறாய்..?” என்று கேட்டாள் அவள்
“நான் பள்ளிபாளையத்தில் இருக்கிறேன் அக்கா..” என்று தன்னிடைய விவரம் சொன்னவன், வேலையிலும் கவனம் செலுத்தினான்
“உன்னுடன் பிறந்தவங்க..?” என்று அவள் கேட்க, “அக்கா, அண்ணன், நான் வீட்டில் கடைசி பையன்..” என்று சொல்ல,
முரளி ராகவனிடம், “டேய் இங்கே பேசுவது பிரதீபன் தானா..? என் கண்ணை என்னால் நம்பமுடியவில்லை..” என்று சொல்ல,
“எனக்கும் அதுதான் ஒன்றுமே புரியலை முரளி..” என்று சொன்னவன் வேலையில் கவனம் செலுத்த இரண்டாவது வார சம்பளமும் வாங்கிவிட்டான்..
மூன்றாவது வாரத்தின் தொடக்கத்தில் அவனது சேட்டைகள் கொஞ்ச கொஞ்சமாக வெளிவர ஆரமித்தது..
அன்றும் அது போலவே அவனுக்கு பிடித்த பாடல்,
“செம்மறியாடே செம்மறியாடே செய்வது சரியாய சொல்
செவத்த பொண்ணு இவத்த நின்னு தவிக்கலமா சொல்..” என்று பாடல் வரிகள் பாட, அந்த நேரம் தார்குச்சிகள் தீர்ந்துவிட, அதையேடுக்க உழவன் மகனில் ராதிகா அந்த பாடலில் ஓடுவது போலவே ஓடியவனைப் பார்த்த முரளியும், ராகவனும் தலையில் அடித்துக் கொண்டார்கள்
அவன் தரிபட்டறைக்குள் நுழைந்தது முதலிருந்து பிரதீபனைப் பார்த்துக் கொண்டிருந்த துளசிக்கு அவனை மிகவும் பிடித்துவிட்டது! வேலையைக் கூட ரசித்து செய்ய சிலரால் மட்டுமே முடியும்.. அப்படி விருப்பத்துடன் செய்தால், வேலையில் இருக்கும் சோர்வு தெரியாது..
அவன் தார்குச்சியை எடுத்துவிட்டு திரும்ப துளசி நன்றாகவே சிரித்துவிட்டாள்.. அவள் சிரிப்பதைப் பார்த்த பிரதீபன், “நீங்க எதுக்கு அக்கா சிரிக்கிறீங்க..” என்று முகத்தில் அரும்பிய சிரிப்புடன் கேட்டான் பிரதீபன்
“உன்னைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.. இந்த வயதில் எதைப்பற்றியும் கவலை இல்லாமல் இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா..” என்று கேட்டாள் துளசி
“கவலைப்படுவதால் மட்டும் கவலை வந்து நமக்கு சோறு போடுமா அக்கா..?” என்று எதிர்கேள்வி கேட்ட பிரதீபனைப் பார்த்து திகைத்தாள் துளசி
“அப்போ உனக்கு எதைப்பற்றியும் கவலை இல்லையா..?” என்று சிரிப்புடன் கேட்டாள் துளசி
“இல்லையே இப்போதைக்கு எனக்கு இந்த பாட்டை மறுபடியும் இன்னொரு முறை கேட்டால் மட்டும் போதும்.. இப்போதைக்கு என்னோட தேவை இதுதான்..” என்று சொல்ல அந்த பாட்டும் முடிந்திருந்தது..
“ஒருவருக்கு தேவை வருவதால் மட்டுமே நாளை பற்றிய சிந்தனை வருகிறது, அந்த சிந்தனை வலுபெற்று கவலையாக மாறுகிறது.. இந்த நொடியை மட்டுமே நேசித்துப் பாருங்கள் அதன் சுவையே தனி!” என்று சொன்னவன் தன்னுடைய வேலையில் ஈடுபட்டான்