விமானம் தரை இறங்கியதும் அனைவரும் இறங்கி விமான நிலையத்தில் அவரவர் உடைமைகளை எடுத்துக்கொண்டனர். ருத்ராவும் முகிலனும் வெளியே வர.. அவர்களுக்காக காத்திருந்த காரில் முகிலன் ஏறி அமர்ந்து கொண்டான். ருத்ராவை பார்க்க.. அவள் இவனை முறைத்து பார்த்து பின்... காரின் மறுபக்கத்தில் ஏறி கொண்டாள்.
தான் பேசினால் தான் யாருக்கு வந்த விருந்தோ என்று எந்த எதிர்வினையும் இன்றி தனது சரிபாதி இருக்கிறாளே.. எதற்கு பேசணும் என்று நன்றாக பேசும் அவளிடமும் பேச்சை கட் செய்துவிட்டான் முகிலன்.
ருத்ராவிற்கு தான் என்னவோ போல் இருந்தது.. வரும் போது நன்றாக பேசிக்கொண்டே வந்து.. இங்கு வந்து மூஞ்சியை திருப்பவும் அவளிற்கு கோபம் வந்தது.
அவள் முதன்முதலாக வீட்டை பிரிந்து வரும் துக்கத்தில் பேச்சு வராமல் இருக்க.. அவனது விளக்கம் மற்றும் அக்கறை சிறிது ஆறுதலாக இருந்தது உண்மைதான். ஆனால், ஏனோ அதை அவனிடம் சொல்லி மனதை பகிரவோ ஆறுதல் தேடவோ முடியவில்லை.
நன்றாக தூங்கியதால், இப்போது தூக்கம் வராமல் கண்களும் மூளையும் ப்ரெஷ் ஆக இருக்க... காரின் நிசப்தமும் மனதின் தனிமைக்கு தீனி போட.. அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல்,
“நாம இப்போ எங்க போறோம்”
என்று முகிலனிடம் கேட்டாள் ருத்ரா.
இப்போது அவன் அவள் பேசியதை கேட்காதது போல் வெளியே இருட்டில் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தான். அப்போது தான் ருத்ராவிற்கு அவன் கோபமாக இருப்பதே தெரிந்தது.
பின் தயங்கி..
“ஏன் பேசாம இருக்கீங்க”
என்று ஒரு வழியாக கேட்டு விட...
“நான் பேசுனா மட்டும் நீ காது குடுத்து கேட்டியா... அப்புறம் நீ பேசுனா நான் ஏன் காதுல வாங்கணும்...”
என்றான் இருட்டில் இருந்து பார்வையை அகற்றாமல்.
அதை கேட்டதும் இவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை...
“நான் எங்க வீட்ட...”
என்று கூறும் போதே தொண்டையில் பெரிய பந்துபோல் துக்கம் தொண்டையை அடைத்தது...
அவள் அதற்கு மேல் பேசாமல் திரும்பி விட... முகிலன் அவசரமாக திரும்பி பார்த்தான்... முகம் காட்டவில்லை என்றாலும் ருத்ராவின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை பக்கவாட்டில் இருந்தே பார்த்துவிட்டான்.
அவன் மனது ஏனோ கசிந்தது... இதுவரை கோபப்பட்டு மட்டுமே பார்த்த அவளது முகத்தில் அழுகை பொருத்தமில்லாதது போல் தோன்றியது.
உடனே அவன்...
“நாம போக போற இடம் சஸ்பென்ஸ்... உனக்கு அந்த இடம் பிடிக்கும் பாரு...”
என்றான்.
“ம்ம்ம்... சரி”
என்றதோடு கண்மூடி கார் கதவில் சாய்ந்தாள் ருத்ரா.
உண்மையை சொன்னால், அவனிற்கு இப்படி அடங்கி போகும் ருத்ராவை பிடிக்கவே இல்லை. வார்த்தைக்கு வார்த்தை எதிர்ப்பேச்சு பேசும் கோவக்கார ருத்ராவை தான் எதிர்பார்த்தான்.
அவள் பேச வந்தா வீம்பு பிடிக்கிறோம்... அவள் பேசவில்லை என்றாலும் மனதை சுருக்குறோம்... கொஞ்சம் ஓவரா தான் போறோமோ என்று அவனிற்கே தோன்றி விட அத்தோடு அவனும் கண்மூடி பின்னால் சாய்ந்துவிட்டான்.
ஏர்போர்ட்டில் இருந்து 2 மணி நேர பயணத்திற்கு பிறகு அதாவது நள்ளிரவு இரண்டு மணி அளவில் கார் ஒரு பிரமாண்ட ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நின்றது.
முகிலன் ருத்ராவை அழைத்துக்கொண்டு ரிசப்ஷன் நோக்கி சென்றான். ரூமின் சாவி வாங்கி கொண்டு, உள்ளே செல்லாமல் மீண்டும் வெளியே செல்ல...
சிறிது தூரம் நடந்ததும் தான் ருத்ரா அந்த வித்தியாசத்தை உணர்ந்தாள். கால் மண்ணுக்குள் புதைந்து புதைந்து நடக்க.. அது கடற்கரை மணல் என்று தெரிந்தது. பின் நிமிர்ந்து பார்க்க... சற்று தூரத்தில் தனி தனி வீடு போல் வரிசையாக ஒரே டிசைனில் மரத்தாலான காட்டேஜ் நிலத்தில் இருந்து சற்று உயரமாக கட்டப்பட்டிருந்தது.
அதனை நெருங்க, நெருங்க கடல் அலைகளின் ஓம் கார சத்தம் அந்த இரவின் அமைதியை கிழித்துக்கொண்டு காதில் இன்னிசை மீட்டியது.
முகிலன் தன் கையில் உள்ள சாவியை கொண்டு படியேறி கதவினை திறந்தான், பின் அவளை பார்த்து புன்னகைக்க அந்த இடத்தின் ஏகாந்தம் மற்றும் குளிர்ச்சி ருத்ராவின் மனதை ஊடுருவி லேசாக்கியது.
அவளும் புன்னகையோடு உள்ளே நுழைந்தாள்.
உள்ளே சகல வசதிகளோடு அந்த கடற்கரை வீடு அமைதியாக வீற்றிருந்தது. ஹால் மற்றும் அதன் பக்கவாட்டில் இரண்டு அறைகள் மூடி இருக்க, காரில் வந்த பயண களைப்பு தீர ருத்ராவிற்கு குளிக்க வேண்டும் போல் இருந்தது. அங்கிருத்த ஒரு அறையை திறந்து முகிலன் நுழைந்ததும் ருத்ரா எங்கு போவது என்று குழம்பினாள்.
அவன் பின்னால் சென்றால் தப்பாக நினைப்பானோ இல்லை தனியாக சென்றால் தப்பாக நினைப்பானோ என்று யோசித்தவாறு இரண்டு அறைக்கும் செல்லாமல் நடுவில் நிற்க...
உள்ளே சென்று ருத்ரா வரவில்லை என்றதும் அவளை தேடி வெளியே வந்த முகிலன், அவள் வெளியே தயங்கி நிற்கவும்...
“இங்க என்ன பண்ற ருத்ரா...”
என்று கேட்டான்.
அவளோ...
“இல்ல... நான் எங்க... இல்ல... எந்த ரூம்ல தங்கணும்”
என்று கேட்டாள்.
“இப்போ நாம ஹஸ்பன்ட் அண்ட் வைப்... ஒரே ரூம்ல தான் இருக்கனும்... இங்க தனியா இருந்தா அதே தான் எங்க வீட்டுல.... சாரி நம்ம வீட்டுலயும் தோணும்... சோ உள்ள வா...”
என்றான்.
அதை கேட்டு அதிர்ந்த ருத்ரா ஏதேதோ எண்ணத்தோடு அவனை பார்க்க...
அவளது முகபாவத்தில் சிரிப்பு வந்தது முகிலனிற்கு, ஆனால் அதனை மனதினுள் அடக்கியவன்...
“அதுவும் இல்லாம இன்றைக்கு நமக்கு பிரஸ்ட் நைட் வேற எப்படி தனியா படுக்க, கொண்டாட வேண்டாம்”
என்று ஒரு மார்க்கமாக பார்த்தபடி அவளருகே நெருங்க...
அவன் ஆசைப்பட்ட கோவக்கார ருத்ரா வெளிவந்தாள்...
“ஏய்... அங்கேயே இரு பக்கத்துல வராத...”
என்று உள்ளுக்குள் நடுங்கி வெளியே கோபத்தில் சீற...
“வந்தா...”
என்றவாறு நெருங்கியே வந்துக்கொண்டிருந்தான்.
“இப்போ நீ என்னை தொட்ட... அப்புறம் நான் நாளக்கி மீட்டிங் வர மாட்டேன்... எதுக்காக நீ என்னை கல்யாணம் பண்ணுனியோ அதற்கு அர்த்தமில்லாம போயிரும்...”
என்று மனதில் நீண்ட நாட்களாக உறுத்தியதை கொண்டு மிரட்டினாள்.
அவள் அவ்வாறு கூறியதும் அவனது உல்லாசம் வடிந்தது... சும்மா சீண்டி பார்க்க நினைத்தவனை அவள் சீண்டி விட்டாள்.
“ஆமா நான் தான் உன்னை இந்த ப்ராஜெக்ட்காக கல்யாணம் பண்ணுனேன்... அம்மணி எதுக்காக என்னை கல்யாணம் பண்ணுனீங்க... அதுவும் வீராவேசமா நிறுத்த போறேன்னு சொல்லி..”
என்று பதிலிற்கு குத்தி காமித்துவிட்டான்.
அதை கேட்டதும் அவளது கண்கள் கலங்கியது... ச்ச... இது என்ன அடிக்கடி கண் கலங்கிட்டு... என்றவாறு அதனை உள்ளிழுக்க...
அதை பார்த்து முகிலன் ஆயாசமாக தலையை கோதினான்... ஒரு நாளையே ஓட்ட முடியலன்ன... வாழ்நாள் முழுக்க எப்படி இருக்க போறோம் என்று தோன்ற... கொஞ்சம் கடினப்பட்டு தன்னை சமன் செய்தவன்..
அவளருகே சென்று...
“வா பயபடாம வந்து படு... நமக்கு இன்னும் நிறைய காலம் நீண்டிருக்கு... ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சி அதுக்கப்புறம் நாம வாழ்கையை வாழலாம்...”
என்றான்.
அவளும் பெருமூச்சோடு... அவனை தாண்டி அறையினுள் நுழைந்தாள். பின் மனதின் போராட்டத்தில் உடல் களைப்படைய... அந்த பெரிய கட்டிலில் ஒரு ஓரமாக சென்று படுத்துக்கொண்டாள்.
முகிலனும் விளக்கை அனைத்து அடுத்த பக்கம் படுத்துக்கொண்டான். வெகுநேரம் போராடி அதிகாலை நான்கு மணிக்கே இருவரும் கண் அசந்தனர்.
சிறிது நேரத்தில் ருத்ராவின் போன் “சஷ்டியை நோக்க சரவண பவனார்” என்று கந்த சஷ்டி கவசம் இசைத்தது.
அதன் ஒலியில் விழித்தவள், அதை சட்டென்று அனைத்து திரும்பி பார்க்க... முகிலன் அசைந்து மறுபுறம் திரும்பி படுத்தான்.
தான் பேசினால் தான் யாருக்கு வந்த விருந்தோ என்று எந்த எதிர்வினையும் இன்றி தனது சரிபாதி இருக்கிறாளே.. எதற்கு பேசணும் என்று நன்றாக பேசும் அவளிடமும் பேச்சை கட் செய்துவிட்டான் முகிலன்.
ருத்ராவிற்கு தான் என்னவோ போல் இருந்தது.. வரும் போது நன்றாக பேசிக்கொண்டே வந்து.. இங்கு வந்து மூஞ்சியை திருப்பவும் அவளிற்கு கோபம் வந்தது.
அவள் முதன்முதலாக வீட்டை பிரிந்து வரும் துக்கத்தில் பேச்சு வராமல் இருக்க.. அவனது விளக்கம் மற்றும் அக்கறை சிறிது ஆறுதலாக இருந்தது உண்மைதான். ஆனால், ஏனோ அதை அவனிடம் சொல்லி மனதை பகிரவோ ஆறுதல் தேடவோ முடியவில்லை.
நன்றாக தூங்கியதால், இப்போது தூக்கம் வராமல் கண்களும் மூளையும் ப்ரெஷ் ஆக இருக்க... காரின் நிசப்தமும் மனதின் தனிமைக்கு தீனி போட.. அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல்,
“நாம இப்போ எங்க போறோம்”
என்று முகிலனிடம் கேட்டாள் ருத்ரா.
இப்போது அவன் அவள் பேசியதை கேட்காதது போல் வெளியே இருட்டில் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தான். அப்போது தான் ருத்ராவிற்கு அவன் கோபமாக இருப்பதே தெரிந்தது.
பின் தயங்கி..
“ஏன் பேசாம இருக்கீங்க”
என்று ஒரு வழியாக கேட்டு விட...
“நான் பேசுனா மட்டும் நீ காது குடுத்து கேட்டியா... அப்புறம் நீ பேசுனா நான் ஏன் காதுல வாங்கணும்...”
என்றான் இருட்டில் இருந்து பார்வையை அகற்றாமல்.
அதை கேட்டதும் இவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை...
“நான் எங்க வீட்ட...”
என்று கூறும் போதே தொண்டையில் பெரிய பந்துபோல் துக்கம் தொண்டையை அடைத்தது...
அவள் அதற்கு மேல் பேசாமல் திரும்பி விட... முகிலன் அவசரமாக திரும்பி பார்த்தான்... முகம் காட்டவில்லை என்றாலும் ருத்ராவின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை பக்கவாட்டில் இருந்தே பார்த்துவிட்டான்.
அவன் மனது ஏனோ கசிந்தது... இதுவரை கோபப்பட்டு மட்டுமே பார்த்த அவளது முகத்தில் அழுகை பொருத்தமில்லாதது போல் தோன்றியது.
உடனே அவன்...
“நாம போக போற இடம் சஸ்பென்ஸ்... உனக்கு அந்த இடம் பிடிக்கும் பாரு...”
என்றான்.
“ம்ம்ம்... சரி”
என்றதோடு கண்மூடி கார் கதவில் சாய்ந்தாள் ருத்ரா.
உண்மையை சொன்னால், அவனிற்கு இப்படி அடங்கி போகும் ருத்ராவை பிடிக்கவே இல்லை. வார்த்தைக்கு வார்த்தை எதிர்ப்பேச்சு பேசும் கோவக்கார ருத்ராவை தான் எதிர்பார்த்தான்.
அவள் பேச வந்தா வீம்பு பிடிக்கிறோம்... அவள் பேசவில்லை என்றாலும் மனதை சுருக்குறோம்... கொஞ்சம் ஓவரா தான் போறோமோ என்று அவனிற்கே தோன்றி விட அத்தோடு அவனும் கண்மூடி பின்னால் சாய்ந்துவிட்டான்.
ஏர்போர்ட்டில் இருந்து 2 மணி நேர பயணத்திற்கு பிறகு அதாவது நள்ளிரவு இரண்டு மணி அளவில் கார் ஒரு பிரமாண்ட ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நின்றது.
முகிலன் ருத்ராவை அழைத்துக்கொண்டு ரிசப்ஷன் நோக்கி சென்றான். ரூமின் சாவி வாங்கி கொண்டு, உள்ளே செல்லாமல் மீண்டும் வெளியே செல்ல...
சிறிது தூரம் நடந்ததும் தான் ருத்ரா அந்த வித்தியாசத்தை உணர்ந்தாள். கால் மண்ணுக்குள் புதைந்து புதைந்து நடக்க.. அது கடற்கரை மணல் என்று தெரிந்தது. பின் நிமிர்ந்து பார்க்க... சற்று தூரத்தில் தனி தனி வீடு போல் வரிசையாக ஒரே டிசைனில் மரத்தாலான காட்டேஜ் நிலத்தில் இருந்து சற்று உயரமாக கட்டப்பட்டிருந்தது.
அதனை நெருங்க, நெருங்க கடல் அலைகளின் ஓம் கார சத்தம் அந்த இரவின் அமைதியை கிழித்துக்கொண்டு காதில் இன்னிசை மீட்டியது.
முகிலன் தன் கையில் உள்ள சாவியை கொண்டு படியேறி கதவினை திறந்தான், பின் அவளை பார்த்து புன்னகைக்க அந்த இடத்தின் ஏகாந்தம் மற்றும் குளிர்ச்சி ருத்ராவின் மனதை ஊடுருவி லேசாக்கியது.
அவளும் புன்னகையோடு உள்ளே நுழைந்தாள்.
உள்ளே சகல வசதிகளோடு அந்த கடற்கரை வீடு அமைதியாக வீற்றிருந்தது. ஹால் மற்றும் அதன் பக்கவாட்டில் இரண்டு அறைகள் மூடி இருக்க, காரில் வந்த பயண களைப்பு தீர ருத்ராவிற்கு குளிக்க வேண்டும் போல் இருந்தது. அங்கிருத்த ஒரு அறையை திறந்து முகிலன் நுழைந்ததும் ருத்ரா எங்கு போவது என்று குழம்பினாள்.
அவன் பின்னால் சென்றால் தப்பாக நினைப்பானோ இல்லை தனியாக சென்றால் தப்பாக நினைப்பானோ என்று யோசித்தவாறு இரண்டு அறைக்கும் செல்லாமல் நடுவில் நிற்க...
உள்ளே சென்று ருத்ரா வரவில்லை என்றதும் அவளை தேடி வெளியே வந்த முகிலன், அவள் வெளியே தயங்கி நிற்கவும்...
“இங்க என்ன பண்ற ருத்ரா...”
என்று கேட்டான்.
அவளோ...
“இல்ல... நான் எங்க... இல்ல... எந்த ரூம்ல தங்கணும்”
என்று கேட்டாள்.
“இப்போ நாம ஹஸ்பன்ட் அண்ட் வைப்... ஒரே ரூம்ல தான் இருக்கனும்... இங்க தனியா இருந்தா அதே தான் எங்க வீட்டுல.... சாரி நம்ம வீட்டுலயும் தோணும்... சோ உள்ள வா...”
என்றான்.
அதை கேட்டு அதிர்ந்த ருத்ரா ஏதேதோ எண்ணத்தோடு அவனை பார்க்க...
அவளது முகபாவத்தில் சிரிப்பு வந்தது முகிலனிற்கு, ஆனால் அதனை மனதினுள் அடக்கியவன்...
“அதுவும் இல்லாம இன்றைக்கு நமக்கு பிரஸ்ட் நைட் வேற எப்படி தனியா படுக்க, கொண்டாட வேண்டாம்”
என்று ஒரு மார்க்கமாக பார்த்தபடி அவளருகே நெருங்க...
அவன் ஆசைப்பட்ட கோவக்கார ருத்ரா வெளிவந்தாள்...
“ஏய்... அங்கேயே இரு பக்கத்துல வராத...”
என்று உள்ளுக்குள் நடுங்கி வெளியே கோபத்தில் சீற...
“வந்தா...”
என்றவாறு நெருங்கியே வந்துக்கொண்டிருந்தான்.
“இப்போ நீ என்னை தொட்ட... அப்புறம் நான் நாளக்கி மீட்டிங் வர மாட்டேன்... எதுக்காக நீ என்னை கல்யாணம் பண்ணுனியோ அதற்கு அர்த்தமில்லாம போயிரும்...”
என்று மனதில் நீண்ட நாட்களாக உறுத்தியதை கொண்டு மிரட்டினாள்.
அவள் அவ்வாறு கூறியதும் அவனது உல்லாசம் வடிந்தது... சும்மா சீண்டி பார்க்க நினைத்தவனை அவள் சீண்டி விட்டாள்.
“ஆமா நான் தான் உன்னை இந்த ப்ராஜெக்ட்காக கல்யாணம் பண்ணுனேன்... அம்மணி எதுக்காக என்னை கல்யாணம் பண்ணுனீங்க... அதுவும் வீராவேசமா நிறுத்த போறேன்னு சொல்லி..”
என்று பதிலிற்கு குத்தி காமித்துவிட்டான்.
அதை கேட்டதும் அவளது கண்கள் கலங்கியது... ச்ச... இது என்ன அடிக்கடி கண் கலங்கிட்டு... என்றவாறு அதனை உள்ளிழுக்க...
அதை பார்த்து முகிலன் ஆயாசமாக தலையை கோதினான்... ஒரு நாளையே ஓட்ட முடியலன்ன... வாழ்நாள் முழுக்க எப்படி இருக்க போறோம் என்று தோன்ற... கொஞ்சம் கடினப்பட்டு தன்னை சமன் செய்தவன்..
அவளருகே சென்று...
“வா பயபடாம வந்து படு... நமக்கு இன்னும் நிறைய காலம் நீண்டிருக்கு... ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சி அதுக்கப்புறம் நாம வாழ்கையை வாழலாம்...”
என்றான்.
அவளும் பெருமூச்சோடு... அவனை தாண்டி அறையினுள் நுழைந்தாள். பின் மனதின் போராட்டத்தில் உடல் களைப்படைய... அந்த பெரிய கட்டிலில் ஒரு ஓரமாக சென்று படுத்துக்கொண்டாள்.
முகிலனும் விளக்கை அனைத்து அடுத்த பக்கம் படுத்துக்கொண்டான். வெகுநேரம் போராடி அதிகாலை நான்கு மணிக்கே இருவரும் கண் அசந்தனர்.
சிறிது நேரத்தில் ருத்ராவின் போன் “சஷ்டியை நோக்க சரவண பவனார்” என்று கந்த சஷ்டி கவசம் இசைத்தது.
அதன் ஒலியில் விழித்தவள், அதை சட்டென்று அனைத்து திரும்பி பார்க்க... முகிலன் அசைந்து மறுபுறம் திரும்பி படுத்தான்.