• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

varamai vantha urave 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kavi nila

மண்டலாதிபதி
Author
Joined
Sep 4, 2019
Messages
263
Reaction score
741
Location
chennai
அனைவரும் டைனிங் டேபிளில் இருக்க, மித்ரனின் ஃபோன் அலறியது. தன் நன்பனின் பெயரை பார்த்து, “சொல்லுடா இங்க எப்ப வரப்போற..... நான் வைட் பன்றேன். நீ வந்த அப்புறம் தான் இந்த வேலையை ஆரம்பிக்கனும். சரிடா”


“ம்மா.... புது ப்ராஜெட் விஷயமா எனக்கு நிறைய வேலை இருக்கு. ப்ராஜெட் விசயமா என் பிரெண்டு வேற வரான். நானும் என் பிரென்டும் நம்ம வீட்டுலே ஸ்டே பன்னிக்கவா”.


எதுக்கு கண்ணா, இந்த மாமா வீட்டில் இடம் இல்லையா என்ன. இரண்டு பேரும் இங்கயே இருங்க. உன் பிரெண்டு தானே. கூட்டுக் கொண்டு வா, என சன்முகம் கூறினார், “



ஆமாம் டா இங்கேயே இரு. விச்சு தானே. கூட்டுக் கொண்டு வா.


சரி மாமா,



அம்மா நான் கிளம்பிறேன். வரும் போது அவனோடு தான் வருவேன், என கிளம்ப இருந்தவனையே சம்யுத்தா பார்த்துக் கொண்டு இருந்தாள்.


என்ன ஆச்சு இவளுக்கு நம்மலை சாப்பிடுடாற மாதிரி பார்க்குறா. எதோ ஒன்னு இருக்கு என யோசனையுடன், “என்ன” என்று தன் புருவத்தை துக்கி கேட்டான்.



அதற்கு என்ன சொல்லுவது என்ன தெரியாமல் தலை அசைத்தாள். அவளுடைய கண்களே அவளின் நிலை விளக்க,


ஆன்ட்டி நான் பக்கத்தில் இருக்கிற கோவிலுக்கு போய்ட்டு வரேன்.


சரி மா. டேய் கண்ணா, பக்கத்தில இருக்கிற கோவில் விட்டுவிடு டா என சுந்தரி கூறினாள்.



சரி மா என இருவரும் காரில் சென்றனர்.


அவளே சொல்லட்டும் என அவனும் எப்படி ஆரம்பிப்பது என அவளும் அமைதியாகவே வந்தனர்.


பிறகு மித்ரனே, “என் கிட்ட என்ன சொல்லனும்” என அமைதியை கலைத்தான்.


நான் சொல்லுவேன். பட் கோபமப்படாம பதில் சொல்லனும் சரியா, என கேட்க அவனும் சம்மதமாக தலை அசைத்தான்.


“நீங்க சஹானாயை லவ் பன்றீங்களா. பன்னா ப்ளீஸ் இத்தோட அவளை மறந்துடுங்க. அவ ஒருத்தரை லவ் பன்றாளாம். உங்க கிட்ட எப்படி சொல்றதுனு தெரியாமா இருந்தா. அவங்க அப்பா கிட்ட கூட இன்னும் சொல்லையாம் ப்ளீஸ் ப்ளீஸ்” என தன் கண்களை முடிக்கொண்டு வேகமாக சொன்னாள்.


முதலில் அதிர்ந்தாளும் பின் அவளுடைய முக பாவனைகளை பார்த்துக் கொண்டு இருந்தான்.


“முதலில் கண்ணை திறந்து பாருங்க. நான் சஹானாவை லவ்லாம் பன்னலா. அம்மா கேட்டாங்கனு தான் ஒத்துக்கிட்டேன். அவளே என் கிட்ட சொல்லியிருக்களாம்.”


“நான் கூட சொன்னேன். அவ தான் நீ கோபப்படுவிங்க அது இது என்று நிறைய சொன்னா.”
எந்த கோவிலுக்கு போகனும், என்று கேட்டான்



எனக்கு இந்த ஏரியாவே புதுசு. உங்க கிட்ட பேச தான் கோவிலுக்கு போறேன்னு சொன்னேன். நான் இங்கே இறங்கிக்கிறேன். ஆட்டோவில் வீட்டுக்கு போறேன். நீங்க கிளம்புங்க.


ஏரியாவே புதுசுனு சொல்லுறிங்க. இருங்க நானே வீட்டில் ட்ராப் பன்றேன். சஹானா யாரை லவ் பன்றா பெயரை சொன்னால, என கேட்க


தன்னிடம் சஹானா கூறியதை சொன்னாள்.


“பையனுடைய பெயரை மட்டும் சொல்ல சொல்லுங்க, தூக்கிடலாம்”. இதற்குள் வீடு வந்துவிட, வந்து நான் சஹானா கிட்ட பேசுறேன்.


சிரித்துக் கொண்டே டபுள் ஓகே.


*********


மித்ரனின் அலுவலகம் மிகவும் பரபரப்பாக இருந்தது. மிக பெரிய ப்ராஜெட், பல பெரிய கம்பனிகளுக்கு மத்தியில் அவனின் திறமைக்கு கிடைத்த பரிசு. அவனின் நன்பன் விஷாலும் அவனுக்கு உதவியாக வந்துள்ளான்.



பல போட்டி கம்பெனிகள் இருந்தாலும் தீனா குருப் ஆப் கம்பெனி தான் அவனின் மிக பெரிய போட்டி. அவனின் அலைபேசி அழைத்தது.
நம்பரை பார்த்து தீனா தான் கால் பன்னறாங்க, என காலை ஆன் செய்தான்.


“என்ன சார், ப்ராஜெட் உங்களுக்கு வந்துருச்சுனு ரொம்ப சந்தோஷமா இருப்பிங்களே. அந்த ப்ராஜெடை எப்படி என் கிட்ட வர வைக்கனும் என்று எனக்கு தெரியும். பார்த்து உன்னை உன்னைவிட எங்க ஆளுங்க தான் எப்ப ரொம்ப தீவிரமா கண்கானிக்கிறேன். என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது.” என அவனிடம் பேசிவிட்டு அவனின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் வைத்துவிட்டான், தீனா என்ற தீனதயாளன்.


இவன் தொல்லை வேற தாங்க முடிலைடா, என்று விஷாலிடம் கூறினான்.


தீனா என்ற தீனதயாளன், இளம் தொழிலதிபர். பேச்சாலும் தன் திறமையாலும் அனைவரையும் தன் பக்கம் இழுக்கும் திறமையானவன். மிகவும் நல்லவன். அவனிடம் உள்ள ஒரே குறை தனக்கு வேண்டும் என்றால் வேண்டும். யாருடையதாக இருந்தாலும் அவனுக்கு வேண்டும். எப்படியாது தன்னிடம் வரவழைத்துக் கொள்வான். அதுவும் அவனது திறமையே.


இருவரையும் வேலை தன் பக்கம் இழுத்துக் கொண்டது.



*******



மாலை நேரம், சஹானா, ஸ்ரீ மற்றும் சம்யுத்தா தோட்டத்தில் விளையாடிக் கொண்டு இருந்தனர்.


அப்பொழுது சம்யுத்தா சஹானாவிடம், “உங்க லவ்வர் பெயர் என்ன?”


வாவ்! லவ் லாம் பன்ற என் கிட்ட மட்டும் சொல்லாத, யாரு அந்த லக்கி. சீக்கிரம் சொல்லு நான் அண்ணா கிட்ட சொல்லி உனக்கு ரூட்டை கிளியர் பன்றேன்” என ஸ்ரீ கூறினாள்.


அதை நான் எப்பாவோ சொல்லிட்டேன். இப்ப பெயரை மட்டும் சொல்லு.


சஹானா பெயரை சொல்ல திரும்பும் போது, “என் கண்னுக்கு அவங்க இங்க இருக்கிறா மாதிரியே இருக்கு டி” என அவள் பார்க்கும் திசையை இருவரும் பார்க்க


காரில் இருந்து மித்ரனுடன் விஷாலும் வந்து கொண்டு இருந்தான்.


இவங்க தானா நீ லவ் பன்றவங்க. இரு நாங்க இரண்டு பேரும் போய் கிட்ட பார்த்து விட்டு வரேன். நீ வர கூடாது, இப்ப உள்ள போ என கூறிவிட்டு அவர்களிடம் சென்றனர்.


எப்படி இருக்கீங்க அண்ணா. பார்த்து ரொம்ப நாளாச்சு, என ஸ்ரீ விஷாலிடம் கேட்டாள்.


சுப்பர் மா என பேசிக்கொண்டே பக்கத்தில் இருக்கும் சம்யுத்தாவை பார்த்தான். பார்த்து,
இவங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கோ பார்த்து இருக்கேன் எங்கனு தான் தெரியலை என யோசித்துக் கொண்டு இருக்கும் போதே,



ஹாய், நான் சம்யுத்தா. இந்த வீட்டுக்கு விருந்தாளி. உங்களை பார்ததுல ரொம்ப சந்தோஷம் என கூறினாள்.


சரி வாங்க உள்ள போகலாம் என மித்ரன் அழைக்கவும், உள்ளே சென்றனர்.


விஷாலை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான். பின் அவனை ரூமிற்கு அழைத்து சென்றான்.


*******


அனைவரும் இரவு உணவிற்காக ஹாலில் இருக்க, மித்ரன் மாடியில் இருந்து வந்து கொண்டு இருந்தான். அப்பொழுது அவனை இரு கைகள் இழுத்தது. இழுத்த வேகத்தில் இழுத்தவர் மீதே மோதிக்கொண்டான். இழுத்த கைகளுக்கு சொந்தகாரி நம் சம்யுத்தா.


யார் இது? என கத்த வந்தவனின் வாயை கைகளால் முடினாள்.


நான் தான் கத்தாதிங்க. யாராவது வந்திட போறாங்க. ஒரு விஷயத்தை சொல்ல தான் கூப்பிட்டேன்.


கூப்பிடியா.. உனக்கே அநியாயமா தெரியலா. போறவனை இழுத்துவிட்டு கூப்பிட்டியாம்.

சரி சொல்லு எதுக்கு இப்படி ஒரு இடத்திற்கு வந்துயிருக்கோம், என கூறிக்கொண்டே அவளை பார்த்தான்.

அப்பொழுது தான் அவளை பார்த்தான். என்ன கண்னுடா இது நம்மளை இப்படி காந்தம் மாதிரி இழுக்குது. பேசும் போது முடி முடி திறக்கும் இமை, நெற்றில் விழும் ஒற்றைமுடியை பற்றிக் கொள்ளும் கைகள், ரோஜாவின் இதழ்கள் போன்ற செவ்விதழ் என தன்னை மறந்து அவளை பார்த்து கொண்டுயிருந்தான்.


“இப்ப என்ன பன்றது. நீங்க பேசறீங்களா?” என சம்யுனைத்த கேட்க, தன் சுயநினைவுக்கு வந்தவன், ச்சா நம் யோசனை எங்க எல்லாம் போகுது. இவள் வேற என்ன சொன்னானு தெரியலை.


என்ன பா, என கேட்டான்.


அவனை தலையில் தட்டிவிட்டாள். பின் “அதான் சொன்னேன் லா விஷால் தான் சஹானா லவ் பன்ற பையன்னு. நீங்க உங்க ப்ரென்டு கிட்ட பேசறீங்களா இல்லை நான் போய் பேசவா”


சிரித்துக் கொண்டே, “நீயும் பேச வேண்டாம், நானும் பேச வேண்டாம். முதல சஹானாவை பேச சொல்லுவோம். நைட் என் ரூமிற்கு கூட்டிக்கொண்டு வா. இப்ப போகலாமா” என அவளிடம் கேட்க,


போங்க நான் தான் உங்களை போக வேண்டாம்னு கையை பிடித்....... அப்பொழுது தான் பார்த்தான் அவளின் கை அவனின் சட்டை காலரை பிடித்துக் கொண்டு இருப்பதை.


சாரி நான் கவனிங்களை, என சொல்லிக் கொண்டே அவன் கண்களை பார்த்தால் அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டே இருந்தான். கண்கள் இரண்டும் சிக்கிக்கொண்டு அதில் இருந்து வெளியே வர மனம் இல்லாமல் இருந்தது. எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. சத்தம் கேட்ட பின் தான் சுற்றத்தை பார்த்தனர். பின்,


நான்.... சங்கீ கூப்பிட்டா போறேன், என சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடினாள். மனதிற்குள் இதுக்கு அப்புறம் அவங்க கண்களை பார்த்த உன் கண்னு நொன்டி எடுத்துடுவேன், என தனக்கு தானே கூறிக்கொண்டாள். விழுங்கிற மாதிரியே பார்க்கீறாங்க.


மித்ரனும் சிரித்துக் கொண்டே சென்றுவிட்டான்.


இருவரையும் இரு ஜோடி கண்கள் பார்த்துக் கொண்டு இருந்ததை இருவரும் அறியவில்லை.


*********


டைனிங் டேபிளில் மித்ரன் பக்கத்தில் அமர்ந்து இருந்தான் விஷால். அங்கு வந்த சஹானாவை பார்த்தான். சஹானா அவனை பார்த்து கண் சிமிட்டினாள். அதை பார்த்து அதிர்ந்தான்.


தன் நன்பனின் அதிர்வை கவனித்தாலும் சாப்பாட்டில் கவனம் செலுத்தினான்.


சம்யுத்தா கண்களால் மித்ரனிடம் அதை காட்ட அவனும் அதை பார்த்து சிரித்தான்.


இருவரும் சிரிப்பதை பார்த்த திவ்யா அகிலிடம், “எங்க நடக்கிறதே புரியலை. மாடிப்படிக் கீழ மித்ரனும் சம்யுத்தாவும் ஒன்னா ரொம்ப க்ளோச இருந்தாங்க. ஆனா என்ன பேசனாங்கனு தெரியாது. இப்ப கூட என்னமோ கண்ணாலே பேசறாங்க. நமக்கு தெரியாம என்னமோ நடக்கிறது”.


ஆமாம் அண்ணி. சங்கீ கூட பார்த்தாலாம். அவளுக்கு கூட இவங்க என்ன பேசனாங்கனு தெரியலை, என தன் பங்கிற்கு சொன்னான் முகில்.


ஓஓஓ..... அவனை விடு. நீ சொல்லு உனக்கும் சங்கீக்கும் நடுவில் சம்திங்... சம்திங்... தானே, என முகிலை கிண்டல் செய்தாள் திவ்யா.


அண்ணீ... என்னை விட மித்ரன் அத்தான் பெரியவங்க. முதலை அவங்களை பார்ப்போம்.


இன்னும் பெட்டரா சமாளிச்சு இருக்கலாம். இப்ப விடுறேன். என் தங்கச்சீ தானே என் கிட்ட வந்து தானே ஆகனும்.


தெய்வமே.........

இரண்டு பேரும் முதலில் சாப்பிடுங்க, என அகில் இருவரிடமும் சொன்னான்.


*********


அம்மா......... என தன் தாயிடம் பேசுவதற்காக தன் தாயின் அறைக்கு வந்தான் மித்ரன்.


சொல்லுபா என்ன விஷயம்.


ம்மா, நான் சொல்லுவேன் நீங்க கோபப்பட கூடாது. அதே மாதிரி யாரையும் தீட்டக் கூடாது. சரியா?


என்னடா சொல்ல போற. ஆனா எனக்கு பிடிக்காததை சொல்ல போறனு மட்டும் தெரியுது.


அது... எனக்கும் சஹானாவுக்கும் கல்யானம் பன்னலாம்னு சொன்னீங்கல அது...... அது வேண்டாம் மா. அவளுக்கு வேற ஒருத்தரை பிடித்துக் இருக்காம். இன்னும் மாமா கிட்ட கூட சொல்லையாம். ப்ளீஸ் மா, என தன் தாயின் முகத்தை பார்த்தான்.


முதலில் அதிர்ந்தாளும் பின், “யாருடா பையன். நல்ல பையனானு பார்க்கனும். அவ என் மருமகளா வரலைனாலும் எப்பவும் சந்தோஷமா இருக்கனும் டா. முதல அதை பார்ப்போம்”.


யாரு சொன்ன அவள் உங்க மருமகள் இல்லைனு, இப்பவும் அவள் உங்க மருமகள் தான் மா.


என்னடா சொல்ற எனக்கு இருக்கிறது ஒரே பையன் தான். அப்புறம் எப்படி,


ம்மா, விஷாலும் உங்களுக்கு பையன் தானே மா.


ஆமா டா கண்ணா. அவனும் எனக்கு மகன் தான். நீயும் அவனும் எனக்கு ஒன்னுதான்.


அப்புறம் என்ன மா விஷாலும் சஹானாவும் கல்யானம் பன்னிக்கிட்ட உங்களுக்கு அவ மருமகள் தானே.



ஓஓஓஓஓ...... அதை கல்யானத்தை பத்தி பேசும் போதே சொல்லியிருக்கலாமே டா. நான் அப்பவே அண்ணாகிட்ட பேசியிருப்பேன்லா.


அடா அம்மா இன்னும் விஷால் ஓ.கே சொல்லலையாம். சஹானாவே ரொம்ப கவலையா இருக்காள். சம்யுத்தா தான் சொன்னாங்க. முதல போய் விஷால் கிட்ட பேசனும்.


நீ பேசிட்டு சொல்லுடா நான் அண்ணா கிட்ட பேசறேன்.



******
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top