Hi mam
மஹா பரிசுத்தம் என்ன என்பது பற்றி ஷ்யாமுக்கு அளிக்கும் விளக்கம் மிக நன்று,ஆனால் அதை கேட்ட ஷ்யாமுக்கு புரியவில்லையே,இதையெல்லாம் கேட்ட ஷ்யாமுக்கு மஹா எவ்வளவு தெளிவான பெண் என்று ஆச்சரியம்தான் மிஞ்சியுள்ளது,ஷ்யாமின் எந்த மிரட்டலுக்கும் மஹா அஞ்சாமல் அந்த மிரட்டல்களுக்கு அதற்குரிய விளக்கங்களை நிமிர்வோடும் தைரியத்தோடும் சொல்லும் மஹாவை அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் பார்க்கின்றாரே தவிர அதனை புரிந்து கொள்ள மறுக்கின்றாரே,இருவருக்கும் எதில் பொருத்தம் இருக்கோ இல்லையோ தங்கள் நிலையிலிருந்து கொஞ்சமும் கீழிறங்காமல் இருப்பதில் வெகு பொருத்தம்,ஷ்யாம் தப்பை சரியென்று நினைத்து மஹாவிடம் வாதாடுவதாகட்டும்,மஹா சரியை சரி என்று வாதாடுவதாகட்டும் ,தங்கள் நிலையை விட்டுக்கொடுக்காமல் ,அப்படியே நிலையாய் நின்று உனக்கு நான் சளைத்தவரில்லை என்று மற்றவருக்கும் உணர்த்துவதும் ஆஹா என்னவொரு பொருத்தம், மஹா ஷ்யாம் என்ன மிரட்டினாலும் உள்ளுக்குள் பயந்தாலும் வெளியே நிமிர்வாய் காட்டி தன்னுடைய எதிர்ப்பை காட்டுவதாகட்டும் இருவருக்கும் பொருத்தமோ பொருத்தம்,கோபமுள்ள ஒருவன் எதற்காக இவ்வளவு அக்கறையாக மஹாவை கவனிக்கணும்,அவர்களிடையே கண்ணுக்கு தெரியாத நட்பு இழை மட்டுமல்ல அதனோடு சேர்ந்து காதல் இழையும் இருக்கின்றது,அதை அவர்கள் உணரப்போகும் தருணம் எதுவென்றுதான் தெரியவில்லை.
நன்றி