Jothijk
புதிய முகம்
In
Theஹாய் மக்களே
எல்லாரும் எப்படி இருக்கீங்க? வீணையடி நீ எனக்கு முடிய போகுதுன்னு ஒரே ஒரு வார்த்தையை போட்டதுக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் ஒரே மாதிரியான புலம்பல்கள். முடிய போகுதா என்று!
ஒருவர் சொன்ன மாதிரி இந்த ஸ்டோரி லைனுக்கு இன்னும் ரெண்டென்ன நாலு பாகம் கூட எழுதலாம். அவ்ளோ கன்டன்ட் இருக்கு. இல்லைன்னு சொல்லலை. ஆனா இப்ப வரைக்கும் முடிந்த பாகங்களின் எண்ணிக்கை நாலு மக்களே! இதை எப்படி மூன்றாக்குவது என்று தலையை பியைத்து கொண்டு இருக்கிறேன்.
யார் சொல்லியும் ஸ்டோரி லைனை மாற்ற மாட்டேன் என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா. ஸ்டோரி லைன் இதுதான். இன்னும் ஒரு எபி அண்ட் ஒரு epilogue இருக்கு. நீங்க பீல் பண்ற விஷயம் எல்லாம் அதில் வந்துவிடும் என்று நான் நம்புகிறேன்.
இத்தனை பேரின் புலம்பல்களுக்கு காரணமும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். எல்லாருமே கதையில் ரொம்பவும் ஆழ்ந்து விட்டார்கள் என்பதுதான் அது. ஆனால் கதைக்கு ஒரு கட்டத்தில் endcard போட்டுத்தானே தீர வேண்டும். விஜி என்பவன் ஒரு அத்தியாயம் அல்ல... வாழ்க்கை முழுவதும் தொடரும் தொடர்கதை. கார்த்திக் பிருந்தா பார்ட் இதில் வரவில்லை தான். ஆனால் அது தனி sequel. இந்த கதை ஷ்யாம் மஹா வின் வாழ்க்கையில் ஒரு பகுதி. Shyam and maha எப்படி ShyaMa வாகிறார்கள் என்பது தான் அது.
ஆனால் கண்டிப்பாக கார்த்திக் பிருந்தா பார்ட் காக இன்னொரு தனி sequel எழுதுவேன். அப்போதும் ஷ்யாம் மஹா வருவார்கள். அது தனி!
ஆனால் இன்னொன்றும் சொல்லத்தான் வேண்டும். எப்படியும் எழுத ஆரம்பித்து நிறுத்த முடியாமல் வளர்ந்த அத்தியாயங்களும் உண்டு. சப்போஸ் ஒன்றோடு முடியவில்லை என்றால் கண்டிப்பாக அடுத்தும் வரலாம். ஒருவர் சொன்னது போல... final 1, final 2, final 3 என்று... அதை விட இன்னும் ஒரு பார்ட் எழுதி ஐந்து பார்ட் ஸ்டோரியாக கூட கொடுக்கலாம். ஹஹ ஆனா இது பப்ளிஷ் ஆகும் போது மொத்தமாக எத்தனை பேரால் afford பண்ண முடியும் என்றும் யோசித்து பார்க்க வேண்டும் அல்லவா... இப்போதே நான்கு பார்ட்ஐ மூன்று பார்ட் ஆக்குவதா ரெண்டு பார்ட் ஆக்குவதா ன்னு யோசிச்சுட்டு இருக்கேன் மக்களே... இன்னும் வேணும்னா... மீ பாவம்...