• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

VIDUKATHAIYAI NAAN-2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

juliyana

நாட்டாமை
Joined
Sep 22, 2018
Messages
87
Reaction score
197
Location
chennai
தந்தையின் அழைப்பில் கீழே சென்றவன் பூஜை செய்ய வேளை நெருங்குவதாக கூறவும் மனைவியிடம் குடும்ப நலனுக்கு பூஜை செய்ய

கிளம்புவதாக கூறி விடை பெற்ற்றவன் என்னவோ தோன்ற மனைவியின் நெற்றியில் முத்தமிட்டான்.

நான் சென்று வருகிறேன்.....ம்...சீக்கிரம் வந்துடுங்க...சரி மா....

மனதில் சந்தோஷத்துடன் வெளியேறியவன் மாந்த்ரீகன் கூறிய இடத்துக்கு பூஜை செய்ய சென்றான்...அங்கு அவனுக்கு முன் அவன் குருவாக

நினைத்த மாந்த்ரீகன் அமர்ந்திருந்தான்...வா விக்ரமா.......பூஜை செய்ய தயாராக இருக்கிறாயா?

ம்...நான் தயார்...அவன் மனைவியையே நினைத்து கொண்டிருந்ததால் மாந்த்ரீகனை சந்தேகிக்க இயலவில்லை...


என்னையே நோக்கு....விக்ரமா ...நான் கூறுவதை திருப்பி கூறு...மறுப்பேதும் இல்லாமல் அவன் கூறியதை திருப்பி கூறினான்...அந்நேரம் அவன்

உடம்பிற்குள் மாந்த்ரீகன் புகுந்து விட்டான்....


இந்துமதி ....என்ன மாமா, விக்ரமனை ........பாம்பு கடித்து விட்டதாம்...மருத்துவர் வீட்டில் உள்ளான் என்று செய்தி வந்தது....நான் செல்ல

போகிறேன்..என்னுடன் நீயும் வருகிறாயா.....

என்ன!!!! அவரை பாம்பு கடித்து விட்டதா.........தாயே என்ன சோதனை ..அன்பான கணவனை கொடுத்த நீ என்னிடம் இருந்து அவரை பறித்து விடாதே

..என்று அழுத்தவாறே அவருடன் புறப்பட்டாள்....

வண்டியிலிருந்து இருவரும் இறங்கி நடக்க ஆரம்பித்தனர்...மாமா இன்னும் எவ்வளவு தூரம் போணும் ...இங்க தான் பக்கத்துல

இருக்கு......போய்டலாம்....

இறைவனை வேண்டியவாறு சென்று கொண்டிருந்தாள் ...செல்ல வேண்டிய இடம் வந்ததும்.இதுதான் மருத்துவர் வீடு என்றார்... இதுவா மருத்துவர்

வீடு மாமா என்று நம்ப இயலாமல் கேட்டாள் .ஏனென்றால் பார்ப்பதற்கு பாழடைந்த வீடு போன்று இருந்தது...ஆமாம் ...நீ உள்ள போ ..

ம்..சரி மாமா என்று உள்ளே நுழைந்தாள் ..அங்கே விக்ரமன் அமர்ந்த நிலையில் இருந்தான்...அவனருகில் சென்றவள் ,'அத்தான்! உங்களுக்கு ஒன்னும்

இல்லியே ,மாமா.............உங்கள பாம்பு கடிச்சிருச்சுனு சொன்னாரு....நான் ரொம்ப பதறி போய்ட்டேன்...என் உயிர் என் கிட்ட இல்ல...உங்கள பாத்ததுக்கு

அப்புறம் தான் நிம்மதியா இருக்குது.......


அப்படியா....ஆனா நீ இருக்கிற வரைக்கும் எனக்கு நிம்மதியில்லியே...என்ன சொல்றீங்க அத்தான் ..


ம்....உன் உயிர் போனாதான் எனக்கு நிம்மதினு சொல்றேன்....அத்தான்................................................

தான் உயிருக்கு உயிராய்....நேசித்த கணவனின் கையாலே மரணிப்பதை நினைத்து உயிர் போகும் முன் மிகுந்த வேதனை அடைந்தாள்....தன்னை

உயிர் போன்று நினைத்தவன் இன்று .....ஏன் இப்படி மாறிப்போனான்....அவனுடைய கண்களை நோக்கியவாறு துடிதுடித்து இறந்தாள் .........................

அவள் இறந்த சில நொடிகளில் மாந்த்ரீகன் விக்ரமன் உடம்பிலிருந்து வெளியேறினான்.....விக்ரமனுக்கு என்ன நடந்தது என்று உணர முடியவில்லை...

மயக்கத்திலிருந்து தெளிந்தது போல் இருந்தது....தன் கண் முன் தன மனைவி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து துடிதுடித்தான்.............



என்ன ஆச்சு மதி உனக்கு....ஐயோ உன்னை இப்படி பார்க்க என்னால் முடியவில்லை மதி....

என் மதிய என்ன பண்ணீங்க ......சொல்லுங்க அப்பா...சொல்லுங்க குருவே

ம்...நாங்க எதுவும் பண்ல ...உன் கையாலே தான் அவளை பலி குடுத்துருக்க......என்ன நான்.....என் உயிருக்கு உரியவளை பலிகொடுத்தேனா ...............என்ன

உளறுறீங்க...................ஆமாம் உன் கை தான் அவளை வெட்டியது......ஆனால் நீ அல்ல ..

இது கோபப்பட நேரம் அல்ல என்று எண்ணியவன் மனதை ஒருநிலை படுத்தி தன் சக்தியின் மூலம் நடந்தவைகளை மனக்கண் முன்

கண்டான்....வெகுண்டெழுந்தான்.....

குருவே நான் உங்களை நம்பியதற்கு என் முதுகில் குத்திவிட்டிர்கள்....அப்பா உங்க உயிரை காப்பாற்ற என் மனைவி உயிரை எடுத்துவிட்டிர்கள் ..

விக்ரமா....புத்தி பேதலித்த போல் உளறாதே...



என்ன நான் உளறுகிறேனா..பெற்ற மகனையே உங்கள் உயிரை காப்பாற்ற கொல்ல நினைத்தவர் தானே நீங்கள் ....உங்களுக்கு எங்கே புரியும்

என்னவளின் பிரிவின் துயரம்....இந்த உயிருக்காக தானே இவளின் உயிரை எடுத்தீர்கள்...என் வாரிசையும் என் மனைவியையும் பறித்த உங்களுக்கு

நான் கொடுக்கும் தண்டனை உங்கள் கண் முன் உங்கள் வாரிசின் மரணத்தை பார்ப்பது தான்....


விக்ரமா..........................???என்ன ....இந்த மாந்த்ரீங்கனுக்கு என்னால் தண்டனை கொடுக்க முடியாவிட்டாலும் ....என்னையும் அறியாமல் தீய சக்திகளை

வழிபட்டதற்காக எனக்கு இந்த தண்டனை கிடைத்ததாக ஏற்று கொள்கிறேன்.... தெய்வ சக்தியே என்னை ஏற்று கொள்ளுங்கள்....மனமார என்

மன்னிப்பை என்று கொள்ளுங்கள்.....என் உயிரை ஏற்று கொள்ளுங்கள்...என்னவள் இல்லாத உலகத்தில் நான் வாழ விரும்பவில்லை......உன்னை காக்க

தவறியது மட்டும் இல்லாமல், என்னை மீறி நடந்தாலும் என் கைகள் தான் உன் உயிரை பறித்தது என் அன்பே....நீ வணங்கும் தெய்வம் என்

மன்னிப்பை ஏற்று கொண்டால் உன்னோடு வாழ அடுத்த பிறவியிலாவது சந்தர்ப்பம் கொடுக்கட்டும்...உன்னை இமையாய் பாதுகாப்பேன் அன்பே

.............என்று உரைத்தவனாய் ஆயுதத்தை கையில் எடுத்து தன் உயிரை மாய்த்து கொண்டான்...



----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரிஷி.................என்ன மா..............என்னப்பா சாப்பிட வானு எவ்ளோ தடவ கூப்பிடறது...நீ கொஞ்சம் கூட உன் உடம்ப கேர் பண்ண மாட்டேங்குற...நீ டாக்டரா

இருந்தும் உன் உடம்பை கவனிக்க மாட்டேங்குற...சரியான நேரத்துக்கு சாப்பிட மாட்டேங்குற.......இப்படி இருந்தா எப்படி பா........

சாரி.............மா..............ஒரு patient பத்தி போன் ல பேசிட்டிருந்தேன்...ஜூனியர் கிட்ட...அதுதான்.....

எந்நேரமும் மத்தவுங்கள பத்தியே யோசிச்சிட்டு இருக்க.....உன்ன பத்தியும் யோசிக்கனும்....அதுக்கென்னமா....என்ன பத்தி யோசிக்க தான் நீங்க

இருக்கீங்களே.....ம்... நான் இருக்கேன் தான் ...எனக்கும் வயசாயிடிச்சு....உன் பின்னால ஓடி வர முடில....நீ ஒரு கல்யாணம் பண்ணிகிட்டனா உன்

பொண்டாட்டி உன்ன பாத்துப்பா .. .நான் எங்காவது கோயில், குளம் னு சுத்தி பாக்க போய்டுவேன்...உன் அப்பாவும் சுத்த போர் ..எப்பப்பாத்தாலும்

பிசினஸ், பிசினஸ் னு இருந்தாரு,,,இப்பவும் அப்படிதான் இருக்காரு...அப்படி சம்பாதிச்சு யாருக்கு குடுக்க போறாரு......நான் பெத்த பையனும்

ஹாஸ்பிடல் னு சுத்தறான்....ஒரு மருமக வந்தா தான் எனக்கு பேச்சுத்துணைக்காது ஆள் இருக்கும்....


மா.....இந்த காலத்துல எந்த மருமகமா ..மாமியார் கிட்ட உட்கார்ந்து பேசுறாங்க....அதுவும் சரிதான்...சரி சண்டை போடவாது செய்வேனே ...

உங்களுக்கு சண்டை போடனுனா....அப்பாக்கு போன் பண்ணி சண்டை போடுங்க....என் பொண்டாட்டி கூட தான் சண்டை போடணுமா..............

அடப்பாவி ! இதுக்கு முன்னாடி கல்யாணத்த பத்தி பேசுனப்போ research பண்றேன், கொஞ்ச நாள் போகட்டும் னு சொன்ன...என்னக்கு தெரியாது நீயா

இப்போவே உன் முடிவை சொல்லணும்...நான் உன் மெயில்க்கு அனுப்புன பொண்ணு போட்டோஸ் எல்லாம் பாத்துட்டியா....உனக்கு யாரை

பிடிச்சிருக்குனு நீ சொல்லித்தான் ஆகணும்....

அம்மா! எனக்கு யாரையும் பிடிக்கல...( உண்மையில் அந்த மெயில் தாயிடம் இருந்து வந்தது என்று தெரிந்தவுடன் இதற்காகத்தான் அனுப்பிருப்பார்

என்று பார்க்காமலே டெலீட் செய்துவிட்டான்...

அவன் அப்படிதான்.....இதுவரை எந்த பெண்ணோடும் நட்பு ரீதியாக கூட பழகியதில்லை....அவன் அன்பாக பேசும் ஒரே பெண்மணி அவனின் தாய்

தான்....நல்ல உயரம்....வெண்மையான நிறம் ,,,,அடர்ந்த முடி...கூர்ந்த கண்கள்.....அனைவரையும் நொடியில் எடை போடும் திறமை அவன் கண்களுக்கு

இருந்தது...பார்த்தவர் வியக்கும் அளவிற்கு ஆண்மைக்கு இலக்கணமாய் திகழ்ந்தான்....ஆனால் கல்லூரி காலத்திலேயே பெண்கள் பேசவந்தால் கூட

ஒதுங்கி சென்று விடுவான்....

உன்ன வச்சிட்டு ரொம்ப கஷ்டம் டா....ஏன் டா இப்படி இருக்க..உன் friends எல்லாருக்கும் marriage ஆயிடிச்சு .உனக்கு இப்பவே 34

வயசாகுது....அவங்களுக்கு குழந்தை, குட்டின்னு இருக்குது...ஆனா உனக்கு ..நேத்து கூட உன் frined சதிஷ் அவன் பொண்ணோட பர்த்டேக்கு

வரச்சொல்லி போன் பண்ணுனான்...உனக்கு எப்போ marriage னு கேக்றான்..... இன்னும் எதுவும் சொல்லமாட்டேங்குறானு சொன்னதுக்கு...ஆண்ட்டி எந்த

பையனாது ஒரு பொண்ணு லவ் ப்ரொபோஸ் பண்ணா கை நீட்டி அடிப்பானா? ..சரி பிடிக்கலைன்னா அட்வைஸ் பண்ணுவான்.ஆனா உங்க பையன்

காலேஜ் படிக்கறப்பவே ஒரு பொண்ணு ப்ரொபோஸ் பண்ணானு கை நீட்டி அடிச்சான்.....அது உங்களுக்கும் தெரியும் .அவனை நீங்க கவுன்சிலிங்

கூட்டிட்டு போறது நல்லதுன்னு சொல்றான்....

அம்மா! அந்த பொண்ணு நான் ஒத்துக்கலைனா சத்துடுவேன்னு சொல்லுச்சு அதுதான் அடிச்சேன்...அவுங்க அப்பா, அம்மா கிட்ட சொல்லி அட்வைஸ்

பண்ண சொன்னேன்...

அம்மா நான் marrige பண் ணமாட்டேனு சொல்லல...கொஞ்சம் time குடுங்க....

எப்போ உன் பிரண்ட்ஸ் குழந்தைங்க உன்ன தாத்தான்னு கூப்பிட்ற வரைக்குமா.........

அதற்குள் போன் வந்துவிட , இதுதான் வாய்ப்பென்று விடைபெற்று வெளியில் சென்று விட்டான்....
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஜூலியானா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top