அவள்..
தானும் இதற்க்கு ஒரு காரணம் என எண்ணி வெதும்பினாள்..
அதன் பின் ரிஷியின் தந்தைக்கு மூன்று மாதத்திற்கு பின் நினைவு திரும்பியது..
அதிலிருந்து ரிஷியிடம் பேசுவதை நிறுத்தி இருந்தார்..
ரிஷி தனக்குள் இறுகி போனான்..
தந்தை தன்னை நம்பவில்லை என்பதே அவனுக்கு பேரிடியாக இருந்தது..
அதன் பின் அவனுடைய ஒரே குறிக்கோள் ஆர் கே குரூப் ஆப் கம்பனிஸ்...
அவன் முழுவதுமாய் மாறி போனான்...
இதையெல்லாம் உடனிருந்து பார்த்தவன் அமர்..
இப்போது நிலாவிடம் சொல்லி கொண்டிருக்க சிலையென அமர்ந்திருந்தாள் நிலா..
" ரிஷி நல்லவன் மா!! அவன் மேல எந்த தப்பும் இல்ல!! என சொல்லும் போதே
"அய்யோ! அண்ணா! வந்து கொஞ்ச நாள்லயே எனக்கு தெரிஞ்சிருச்சு அவர் நல்லவர்னு!!
அந்த ஆர் கே பத்தி கூட அவர்கிட்ட நான் கேக்கல பழசை பேச வேண்டாம்னு தான்!!!
ஆனா என்னோட அவசரத்துனால நாலு வருஷமா அப்பா என முகத்தை மூடி அழுதாள்..
" தப்பு பண்ணிட்டேன்!! பெரிய தப்பு பண்ணிட்டேன் என கதற..
அழாத நிலா இப்போ ரெண்டாவது தடவை கடவுள் ரிஷி வாழ்க்கைல உன்ன கொண்டு வந்திருக்கார் ..
"தப்பையெல்லாம் சரி செய்றதுக்கு ஒரு வாய்ப்பா" என கூற நிலா அமரை பார்த்து ..
"கண்டிப்பா அண்ணா!! எல்லாத்தையும் சரி ஆக்குவேன்" அப்பாக்கு ஒண்ணும் ஆகாது!!
" எல்லாம் பழைய மாதிரி மாறணும்" என கூறி ரிஷியை நோக்கி சென்றாள்..
அன்னையின் அருகில் அமர்ந்திருந்தவன் அருகில் செல்ல டாக்டர் ரிஷியை அழைத்தார்..
ரிஷி! அப்பாக்கு நினைவு திரும்பிருச்சு" உன்ன கூப்பிடறார்" என கூற கடவுளுக்கு நன்றி கூறியவாறு அவர் அறைக்கு சென்றான்..
அங்கே மிகவும் சிரமத்துடன் ஆக்சிஜென் மாஸ்க்கை எடுக்க சொன்னவர் ரிஷியை அருகில் அழைத்தார் ..
கண்ணீரோடு அருகில் சென்றவனிடம் "நீ ஜெயிலுக்கு போக காரணமா இருந்தது நிலாவா???? என கேட்டார்.
இதை சற்றும் எதிர்பாக்காத ரிஷி திகைத்து நின்றான்..
வெளிச்சம் வரும்....
தானும் இதற்க்கு ஒரு காரணம் என எண்ணி வெதும்பினாள்..
அதன் பின் ரிஷியின் தந்தைக்கு மூன்று மாதத்திற்கு பின் நினைவு திரும்பியது..
அதிலிருந்து ரிஷியிடம் பேசுவதை நிறுத்தி இருந்தார்..
ரிஷி தனக்குள் இறுகி போனான்..
தந்தை தன்னை நம்பவில்லை என்பதே அவனுக்கு பேரிடியாக இருந்தது..
அதன் பின் அவனுடைய ஒரே குறிக்கோள் ஆர் கே குரூப் ஆப் கம்பனிஸ்...
அவன் முழுவதுமாய் மாறி போனான்...
இதையெல்லாம் உடனிருந்து பார்த்தவன் அமர்..
இப்போது நிலாவிடம் சொல்லி கொண்டிருக்க சிலையென அமர்ந்திருந்தாள் நிலா..
" ரிஷி நல்லவன் மா!! அவன் மேல எந்த தப்பும் இல்ல!! என சொல்லும் போதே
"அய்யோ! அண்ணா! வந்து கொஞ்ச நாள்லயே எனக்கு தெரிஞ்சிருச்சு அவர் நல்லவர்னு!!
அந்த ஆர் கே பத்தி கூட அவர்கிட்ட நான் கேக்கல பழசை பேச வேண்டாம்னு தான்!!!
ஆனா என்னோட அவசரத்துனால நாலு வருஷமா அப்பா என முகத்தை மூடி அழுதாள்..
" தப்பு பண்ணிட்டேன்!! பெரிய தப்பு பண்ணிட்டேன் என கதற..
அழாத நிலா இப்போ ரெண்டாவது தடவை கடவுள் ரிஷி வாழ்க்கைல உன்ன கொண்டு வந்திருக்கார் ..
"தப்பையெல்லாம் சரி செய்றதுக்கு ஒரு வாய்ப்பா" என கூற நிலா அமரை பார்த்து ..
"கண்டிப்பா அண்ணா!! எல்லாத்தையும் சரி ஆக்குவேன்" அப்பாக்கு ஒண்ணும் ஆகாது!!
" எல்லாம் பழைய மாதிரி மாறணும்" என கூறி ரிஷியை நோக்கி சென்றாள்..
அன்னையின் அருகில் அமர்ந்திருந்தவன் அருகில் செல்ல டாக்டர் ரிஷியை அழைத்தார்..
ரிஷி! அப்பாக்கு நினைவு திரும்பிருச்சு" உன்ன கூப்பிடறார்" என கூற கடவுளுக்கு நன்றி கூறியவாறு அவர் அறைக்கு சென்றான்..
அங்கே மிகவும் சிரமத்துடன் ஆக்சிஜென் மாஸ்க்கை எடுக்க சொன்னவர் ரிஷியை அருகில் அழைத்தார் ..
கண்ணீரோடு அருகில் சென்றவனிடம் "நீ ஜெயிலுக்கு போக காரணமா இருந்தது நிலாவா???? என கேட்டார்.
இதை சற்றும் எதிர்பாக்காத ரிஷி திகைத்து நின்றான்..
வெளிச்சம் வரும்....