• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Yen kalangarai vilakkame 33

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riya Dev

SM Exclusive
Author
Joined
Apr 22, 2018
Messages
653
Reaction score
2,992
Location
Chennai
என்னை எனக்கே ...
பிடிக்கவில்லை ..
சில சமயங்களில்..
ஏனெனில்..
எனக்கு..
உன்னை பிடிக்கிறதே!!

என் வாழ்வின் மாற்றங்கள்..
தரப்போவது ..
ஏற்றங்களையா??
ஏமாற்றங்களையா??


அத்தியாயம் 33


அமர்நாத் ..

ஆர் கே வின் தந்தை..



சிறு வயதிலேயே அம்மாவை இழந்த ஆர் கே வை வளர்த்தது அவர்தான். குறை தெரிய கூடாதென்ற மிகவும் செல்லமாக வளர்த்தவர்.. நல்லவனாக வளர்க்க தவறினார்.

போலீசில் பெரிய பதவியில் இருந்தவர் ஆர் கே வினால் ராஜினாமா செய்தனர்.

சௌமியா கேசில் நிலாவுடன் பேசியது அவரால் மறக்க முடியாதது!! அன்று..

" உன் பிரண்டு பேரு கெட்டு போகும்!! நீ வீணா ஸ்டேஷனுக்கு கோர்ட்டுக்கும் அலையனும்!! யோசிச்சுக்கோ" என்கிறார் நிலாவிடம்..

அவரை வெறுமையான ஒரு பார்வையுடன் நிலா கூறினாள் "உங்களுக்கு ஒரு பையனோ பொண்ணோ இருந்து இப்டி இருந்து போனா இப்படித்தான் பேசுவீங்களா??

' எல்லாரும் எப்பவும் ஒரே மாதிரி இருந்திரமாட்டாங்க சார்!! பாக்கலாம் நாளைக்கு உங்க நிலைமை கூட மாறலாம்""என கூறிவிட்டு கண்ணீருடன் சென்றாள்.



அவளுடைய பேச்சு ஒரு வித சாபமாய் தோன்றியது அவருக்கு !!


பின்னர் ஆர் கே வுடன் மலேஷியா சென்று விட்டார் ..அவரும் ரிஷியின் தந்தை மூன்று மாதம் சுய நினைவில்லாமல் போகவே அவரிடம் எதுவும் சொல்லாமல் மன சிதைவுக்கு ஆளான ஆர் கே வுடன் ஊரை விட்டு சென்றவர்..



அன்று தான் மீண்டும் மூர்த்தியை பார்க்க வந்திருந்தார் ..

மிகவும் சந்தோஷமாக காணப்பட்ட அவரை பார்க்க கொஞ்சம் பொறாமையாக கூட இருந்தது!!

அவருக்கு அப்படி அவர் ரிஷியின் கல்யாண ஆல்பத்தை காட்டும் போது தான் நிலாவை பார்த்தான் அமர்நாத்.


முதலில் எங்கையோ பார்த்த முகம் போல் தோன்ற மீண்டும் மீண்டும் அதை பார்க்க அவருக்கு தெரிந்தது !!

ஆனால் இவள் எப்படி ரிஷிக்கு மனைவியாய் ??என யோசனையில் இருந்தார் ..

ஆனால் மூர்த்தியோ வார்த்தைக்கு வார்த்தை நிலாவை புகழ்ந்து கொண்டிருக்க உண்மையில் கசந்தது..
அவருக்கு ..

உண்மையை கூறினார் ரிஷியின் தந்தையிடம்..




இன்று..




திகைத்து போய் நின்றுந்தான் ரிஷி .இது எப்படி அப்பாவுக்கு என யோசிக்கும் போதே அவர் தன்னை பார்த்து கொண்டிருப்பது தெரிய...

" அப்பா நிலா மேல எந்த தப்பும் இல்ல!! அவளுக்கு உண்மை தெரியாமல் அப்டி செஞ்சுட்டா" என அவர் கையை பிடித்து கொண்டு கூறினான் ..

தந்தை நிலாவை தப்பாக நெனைக்க கூடாதென்ற பதட்டம் அவன் குரலில் தெரிந்தது..

ரிஷியின் தந்தையோ தோய்ந்த குரலில் "மன்னிச்சிருப்பா நான் உன்ன நம்பாம போய்டேன் @!

என கூற "அப்பா அதல்லாம் பரவாயில்ல நீங்க சீக்ரம் சரி ஆகி வாங்க பேசிக்கலாம் !!ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணாதீங்க!! என கூறினான்..

அவனை பார்த்து கொண்டிருந்தவரின் விழியில் நீர் நிறைந்தது..


அந்த அறையை விட்டு வெளியே வந்தவன் அன்னையிடம் விசாரிக்க அவருக்கு எதுவும் தெரியவில்லை..

ரிஷிக்கு புரிந்தது amarnath பார்த்த வேலைதான் இது!

கெட்டதிலயும் ஒரு நல்லது என்னவெனில் ரிஷியை அவர் புரிந்து கொண்டது ..

ஆனால் நிலா பற்றி என்ன யோசித்திருப்பார் இதையெல்லாம் அமரிடம் சொல்லி திரும்ப அங்கே நிலா நின்று கொண்டிருந்தாள்..



ரிஷியை பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்தாள்..

அவள் அருகில் வந்தவன் நிலா என்றழைக்க பதில் சொல்லாமல் விசும்பினாள்..

அதை பார்த்தவன் :ஷ் "பாப்பு! என்ன இப்போ எதுக்கு அழகை?? அப்பாக்கு சரி ஆயிடும்" என கூறினான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள் "ரிஷி நான் உன்னை ....தெரியாம ..

கம்பளைண்ட் ....சத்தியமா நீ இவ்ளோ கஷ்டப்படிருப்பேன்னு....

என்னால அப்பா ....


என வார்த்தை வராமல் திணறயவாறு அழ ..

அவள் தலையை நெஞ்சோடு வைத்து அழுத்தியவன் "ஒண்ணுமில்லடி!! விடு எல்லாம் நடக்கணும்னு இருந்திருக்கு!! நீ மட்டுமே எல்லாத்துக்கும் காரணமில்லை.. அழாதடி !!இப்போ எல்லாமே சரி ஆயிடுச்சு" என கூற தலையை நிமிர்த்தி



"என்னை மன்னிச்சிருடா" என பார்வையாலேயே கேட்க

"போ அம்மாவை போய் பாரு அவங்களுக்கு எதுவும் தெரியாது !!நாம சொல்லி கஷ்டப்படுத்த வேண்டாம் "என்றான்.


அவனிடமிருந்து விலகியவள் அமைதியாக சென்றாள்..

விஷயம் கேள்விப்பட்டு நிலாவின் தந்தையும் தாயும் ரிஷியின் தந்தை பார்க்க வந்திருந்தார்கள்..


ஒரு வாரத்திலேயே ஜெனரல் வார்டுக்கு மாற்றியவர்கள் சில தினங்களில் டிஸ்சார்ஜ் செய்தனர் .

இந்த நாட்களில் மூர்த்திக்கும் பாகிரதிக்கும் தேவையானதை பார்த்து பார்த்து கவனித்து கொண்டாள் ..

நிலா மனம் குற்றவுணர்ச்சியால் துவண்டாலும் வெளி காட்டி கொள்ளவில்லை..

ஆனால் ரிஷிக்கு மட்டும் தெரிந்தது அவள் பழைய நிலாவாக இல்லையென!!

ரிஷியின் தந்தை தன்னை எப்படி எண்ணுவாரோ என்ற தயக்கத்திலேயே அவரிடம் சகஜமாக பேசவில்லை நிலா!!


அவரும் அன்று ரிஷியிடம் பேசிய பிறகு அது பற்றி பேசவில்லை அமைதியாக நிலா செய்வதையெல்லாம் பார்த்து கொண்டிருந்தார்..

இரண்டு வாரம் ஆகி இருந்து இப்போது வாக்கிங் ஸ்டிக் வைத்து மெதுவாக நடக்க தொடங்கி இருந்தார் .மூர்த்தி..

நிலாவின் தந்தை அவரிடம்" சம்மந்தி நாங்க வந்து ரெண்டு வாரம் ஆகுது !!நாளைக்கு நைட் கெளம்பலாம்னு இருக்கோம் "என்றார் .


"ரொம்ப தேங்க்ஸ் சம்மந்தி !!அவளோ தூரத்தில் இருந்து வந்து எங்களுக்கு துணையா இருந்து... உங்களுக்கு ரொம்ப சிரமம் என்ன?? கூற



"அய்யோ அப்படியெல்லாம் இல்லங்க உங்களுக்கு சரி ஆனதே சந்தோஷம் எங்களுக்கு!!! என்ன கூற அங்கே ரிஷியும் நிலாவும் வந்தனர்... அ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top