• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Yen kalangarai vilakkame 49

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riya Dev

SM Exclusive
Author
Joined
Apr 22, 2018
Messages
653
Reaction score
2,992
Location
Chennai
நீயே..
நான் ஆகி போனதால்...
நீ வேறு நான் வேறல்லடி..

நீ உணரும் காலம் ...
தொலைவில் இல்லையடி...


அத்தியாயம் 49


அவளை சிறிது நேரம் பார்த்தவன் முன்னே வந்து அமர்ந்து தண்ணீர் குடிக்க செய்தான்.

அவளை பார்த்தவனை கேள்வியாய் நோக்கினாள் நிலா.

அவள் நெற்றியை தட்டியவன்

"இங்க ஏதாச்சும் உனக்கு இருக்கா?? படிச்சவ தான நீ??? யோசிக்கவே மாட்டியா?? என்றான்.

ஏதோ சொல்ல வந்தவளை

" வாய திறந்த அவ்ளோதான்! சொல்லிட்டேன் !

"ஒருத்தன் டைம் பாஸ்க்கு உன்னோடு பழகிட்டு போயிருக்கான்!! அதை புரிஞ்சுக்க முடியல உன்னால...

அவன் உன்ன லவ் பண்ணல..... நீ பண்ணதுக்கு பேரு லவ் இல்ல.....

காதலையும் கருணையையும் போட்டு குழப்பிட்டு... சரி விடு!!! அத நான் ஒண்ணும் சொல்லல!!

ஆனா உன்ன பத்தி அக்கறைப்படாத நினைக்காத ஒருத்தன நெனைச்சு நாலு வருஷமா அழுதுட்டு இருக்கியே????

" எனக்கே ஆச்சர்யமா இருக்கு நான் பாத்த நிலாவா இதுனு!!!

" மூணு வருஷத்துக்கு முன்னாடி அந்த பப்ல தைரியமா என்ன எதிர்த்து கேள்வி கேட்டியே அந்த நிலாவா நீ???

" அத்தனை ஸ்டுடென்ட்ஸ் இன்ஸ்பயர் பண்ண ப்ரொபஸர் நிலா வா இப்டி பேசுறது!!@

" அன் பிலிவபிள் மேன் மிலிட்ரிக்காரர் பொண்ணுக்கு இவ்ளோ தான் தன்னம்பிக்கையா????

ஹ்ம்ம் சொல்லு.... என்ன விடு...

நான் இப்போ வந்தவன் உங்கப்பாவை பத்தி யோசிச்சு பாத்தியா???

நீ இப்டி இருந்தா ரொம்ப வருத்தப்படுவார் தான??

என்ன லவ் பண்ற... பண்ணல.... அத விடு ..

உன் மனசு உண்மையா என்ன விரும்புதுன்னு கொஞ்சம் யோசி!!!

" யாருக்காகவோ உன்னோட உன்ன சுத்தி இருக்கிறவங்க சந்தோஷத்தை அழிக்கிறது சரியா சொல்லு"? என்றான்.

நான் ஒன்னு கேக்குறேன்..

இதுவே எனக்கு நடந்து நான் உன்கிட்ட வந்து சொன்னா??

என்ன சொல்லிருப்ப?? நீ ..என்றான்.

பின்னர் அவனே "நான் சொல்லட்டுமா??

ரிஷி நடந்ததை நினைச்சி பீல் பண்ணாத...

பிரச்சனையா கவலையோடு பாத்த வழி கிடைக்காது ...
அக்கரையோடு பாரு அப்டினு சொல்லிருப்பா...

" அப்படித்தானா நீ ஏண்டி பீல் பண்ற??

" உன் அன்ப... கேர்.. இழந்த அவன் தான் பீல் பண்ணனும் புரியுதா??

" உன்ன சுத்தி இருக்கிற எல்லாரும் உன் மேல உயிரா இருக்காங்க"
"
"ஏன்னா நீ ஒரு வரம்... எங்களுக்கு கிடைச்ச வரம்...

" மக்கு பொண்ணே!!!

உன்னல்லாம் என்ன பண்றது???

" இப்போதாண்டி உன் மேல இன்னும் லவ் அதிகமாகுது.... நிஜமா...

சரி நீ சொல்ற மாதிரியே வைச்சுக்குவோம்..

நீ சொல்ற மாதிரி..

உன் ஆளு... அதான்..

அந்த கமல்..

நிலா நிலா ஓடி வா...
நில்லாமல் ஓடி வா னு ...


வந்து கூப்டான்னு வை"

உனக்கும் அவன் கூட வாழுறது தான் சரினு பட்டா போய்ட்டே இரு" நான் தடுக்க மாட்டேன்".

" என் வாழ்க்கையை ஸ்பாயில் பண்ணிட்டேன்னு நீ கில்டியா பீல் பண்ண வேண்டாம்"

"உனக்கு ஒரு கமல் கிடைச்ச மாதிரி எனக்கு இருக்கவே இருக்கா ஷிவானி அதான் புஜ்ஜிமா"

" பாத்துக்கலாம் விடு" என்றான்.

இப்போது அவனை முறைத்தாள் நிலா.

" என்ன முறைக்கிற..

" முட்டைக்கண்ணி அப்டி பாக்காத சொல்லிட்டேன்..
அந்த கமல் மட்டும் ஏன் கைல கெடைச்சான் ..


" அப்டியே கட்டிப்பிடிச்சு தேங்க்ஸ் ப்ரோனு சொல்லணும் !!!

"ஏன்னா அவன் மட்டும் ஓகே சொல்லிருந்தானா???

" நினைக்கவே கடுப்பா இருக்கு பா ....

"சரியான கிறுக்கன் போல...

உன்னை போய் விட்டுட்டு போயிருக்கான்...

நான் மட்டும் அவன் எடத்துல இருந்திருக்கேன் தூக்கிட்டு போய் தாலி கட்டிருப்பேன்...

" இட்'ஸ ஓகே அவன் எடுத்த முடிவு எனக்கு சாதகமா அமைஞ்சதுல்ல.... என்றான்.

இப்போது அருகில் இருந்த தலையணையை அவன் மீது எறிந்திருந்தாள் நிலா.

அதை பிடித்தவன்..

" ஹே பொண்டாட்டி இவ்ளோ சொன்னதுக்கப்புறமும்...

" நான் வைச்சது உண்மையான லவ் மறக்க முடியாதுனு....

ஏதாச்சும் டயலாக் விட்ட ...

அப்புறம் எதை பத்தியும் நெனைக்க முடியாம பிஸி ஆக்கிடுவேன்.....

புரியல...

நீ தான் சொல்லிருக்க...


"ஒரு பொண்ணு...

ஒரு பையன்...

அப்டினு அதான் நடக்கும்" புரியுதா?? என்றான்.

இப்போது போடா லூசு என நிலா கூற அவள் அருகில் வந்து தலையை அழுத்தி

"ஹாப்பியா இருடா!!! உன்ன கஷ்டப்படுத்தற எந்த விஷயமும் நடக்காது" என்றான்.

சிறு புன்னகையுடன் எழுந்தவளை நிறுத்தி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரியா தேவ் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top