• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Yen kalangarai vilakkame 52.1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riya Dev

SM Exclusive
Author
Joined
Apr 22, 2018
Messages
653
Reaction score
2,992
Location
Chennai
சாப்பிட்டு முடித்து அறைக்கு சென்றான்.

அங்கு சென்றவன் மொபைலை பார்க்க நிலாவிடம் இருந்து மெசேஜ் வந்திருந்தது .

"ஹே பக்கி திமிர் தான!!

" என்கிட்ட பேசாம தூங்கிருவியா டா?? என கேக்க

ரிஷியோ "ஆமா நீ ஜாலியா தான ஊருக்கு போற அங்க போனா எல்லாரையும் பாத்துட்டு என்ன மறந்திருவ" இப்போ மட்டும் நான் ஏன் பேசணும்?? என்று செல்ல சண்டை போட்டான்.

இப்போது நிலா கால் செய்தாள்.

அதை எடுத்தவனிடம்

"இப்போ என்னடா வேணும் உனக்கு??

" உன்கிட்ட சொல்லாம வந்த மாதிரி ஸீன் போடற எருமை" என்றாள்.

" ஹ்ம்ம் எனக்கு இப்போ நீ என்ன மிஸ் பண்றியான்னு தெரியணும்!! என்றான்.

அதை கேட்டதும்

வேண்டுமென்றே

"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லயே!! என்றாள்.

" ஓ!! ஓகே என்ன மிஸ் பண்ணாத பொண்ணுகிட்ட பேசறதா இல்ல "நான் நீ ஊருலேர்ந்து வர வரைக்கும் நான் உனக்கு கால் பண்ண மாட்டேன்...

நீ என்ன எப்போ மிஸ் பன்றியோ அப்போ நீயே எனக்கு கால் பண்ணு" என்றான்.

" அட அறிவாளி!! இப்போ யாராம் கால் பண்ணது??? நான் தான..

" சரி சாப்டியா ??என கேட்டாள்.

" ஹ்ம்ம்" என்றான்.

" ஹே ரிஷிபய்யா ஒழுங்கா பேசு டா !!ஏன் இப்டி பண்ற ???என கேட்டவளுக்கு பதிலை

போனில் முத்தமாக சொன்னான்.

முதலில் புரியாதவள் பின்னர் சட்டென்று மொபைலை கட் செய்தாள்.

முகமெல்லாம் சிவந்து அந்த குளிரிலும் வேர்த்தது .


திரும்பவும் ரிஷியிடமிருந்து கால் வர ஒரு கணம் தயங்கியவள் பின்னர் எடுத்து

"ஹே பிசாசு குரங்கு ஏன்டா இப்டி பண்ண ??என கத்தினாள் .

நான் என்ன பண்ணேன் ???பேசிட்டருக்கும் போது நீ தான போன் கட் பண்ண" என்றான்.
வேண்டுமென்றே..

" பொய் சொல்லாத இதே வேலையா போச்சு !

"அம்மாகூட ட்ரைன்ல வரும் போது கூட நீ தான் போன் பண்ணி பேசின...

ஆனா இல்லவே இல்லைனு பொய் சொன்னேல்ல !!இப்போ பேசிட்டருக்கும் போது நீ ...

என நிறுத்

" நான்....??? என கேட்டான் ரிஷி.

"தெரியாத மாதிரி நடிக்காத என மீண்டும் சண்டை போட்டாள்.

இப்போது அவளை சீண்டும் ஆவல் அவனுள் வந்தது .

"அவ்ளோ கஷ்டம்னா ஏன் என்னோட கால் அட்டென்ட் பண்ண சொல்லுடி ??என்றான்.

" அது உன்ன திட்றதுக்கு தான் கொஞ்சறதுக்கு ஒன்னும் இல்ல" என்றாள்.

" ஆமாமா கொஞ்சிட்டாலும் நீ... போயேன்...

" வேஸ்ட் பார்ட்டி உன்னயெல்லாம் எந்த லிஸ்ட்ல வைக்கிறதுனு தெரியல ஹ்ம்ம்... என வார

"ஹலோ என்ன ஓவரா பேசுற" என்றாள்.

அவளை வம்பிழுப்பது ரிஷிக்கு பிடித்த செயலாதலால் அதை தொடர்ந்தான்.

"நிலா நா பெரிய கொம்பா???

போடி! போடி! டம்மி பீஸ்... என கூற

"யாருடா ??டம்மி பீஸ் நீ தாண்டா

டூமாங்கோலி "என கத்த மீண்டுமாய் அவளை சீண்ட

திரும்ப திரும்ப

மொபைலில் முத்தமிட


அதற்கு மேல் பேச்சு தகராறு செய்தது நிலாவிற்கு...

இவனுக்கு எவ்ளோ திமிர் இருந்தா என எண்ணியவளிடம்

"என்ன நிலா மேடம் ஆப் ஆயிட்டிங்க?? என சிரிக்க கடுப்பானாள் நிலா.

" மவனே போன்ல அடிக்க முடியாதுன்னு இப்டி பண்றியா?? என கத்த

எஸ் ..எஸ்.. மை டியர் பொண்டாட்டி நீ தான் என்ன மிஸ் பண்ணலைல அப்புறம் நான் என்ன பண்ணா என்ன மிச்செஸ் நிலா?? என கேட்டான்.

" உன்ன ....என கத்தியவளுக்கு பதிலாக பாட தொடங்கினான்.

" இச்சு தா இச்சு தா கன்னத்துல இச்சு தா "என பாட

கால் கட் செய்தாள் நிலா.

மீண்டுமாய் ரிஷியிடமிருந்து கால் வரவில்லை மாறாக மெசேஜ் செய்தான்.

" நீ யா கால் பண்ணாதான் பேசுவேன்"என அனுப்பியிருந்தான்.

அதை பார்த்தவள் "

போடா லூசு பையா !!என அவளறியாமல் சிரித்தாள்.

இங்கே ரிஷி மெல்லிய புன்னகையோடு நிலாவின் தலையணையை கட்டி கொண்டு படுத்திருந்தான்..

நிலாவுக்கு தூக்கம் வர மறுத்தது மணி 3 தாண்டி இருந்தது.

மொபைலை கையில் எடுத்தவள் ஹ்ம்ம் தூங்கிருப்பான் இந்நேரம் என நினைத்தவள்..

" ஹே எருமை என மெசேஜ் செய்தாள்.

ரிஷி "சொல்லுடி பக்கி!

நிலா அதை பார்த்ததும் பட்டென்று எழுந்தவள்

"நீ இன்னும் தூங்கலையா ???

ரிஷி ; "நல்லா தூங்கி டிரீம்ஸ்ல உன்னோட டூயட் பாடி இப்போதான் முழிச்சேன்"

நிலா :"அய்யடா போதும் நாளைக்கு ஆபீஸ் போகணும்ல தூங்கு

ரிஷி:" ஹ்ம்ம் நீ இல்லாம தூக்கம் வரல டி உனக்கும் அப்டித்தான்னு தெரியும் !@உடனே இல்லையே பொய் சொல்லாத!!

சரி அதுவே உண்மையா இருந்தாலும்

"பொய்யாவது மிஸ் யூ ரிஷின்னு சொல்லு" அதை படித்தவளுக்கு ஏதோ போல் ஆனது .

உடனே அவனுக்கு கால் செய்தாள்.

முதல் ரிங்கிலேயே எடுத்தவனிடம்

"இப்போ எதுக்கு இப்படியெல்லாம் பேசிட்ருக்க??

" உன்ன மிஸ் பண்ணுவேன்னு உனக்கு தெரியாது????

" மூச்சுக்கு முன்னுறு தடவை ரிஷி ரிஷினு இருந்தவ.... மிஸ் பண்ணாம இருப்பேனா??? ஹ்ம்ம் என கேட்டாள்.

அதை கேட்டு சிரித்தவன்

"சும்மா ஒரு பிட் போட்டேன் உடனே ஒத்துக்கிட்ட "என கிண்டலடிக்க

" ஹே பிராடு சே! உனக்காக பீல் பண்ணேன் பாரு "என்ன சொல்லணும்! என முடிக்கும் முன்னே

ரிஷி "லவ் யூ நிலா" என்றான்.

அதை கேட்டு சில நொடிகள் அமைதியானாள் .

பின்னர் அவளே "ஹ்ம்ம் நீ ....நீ..
தூங்கு நான் வைக்கட்டுமா?? என்றாள் .

"ஹ்ம்ம் ஓகே வீட்டுக்கு போனதும் கால் பண்ணு" என்றான்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top