மிக அற்புதமான காவியம். யதார்த்தத்துடன் கூடிய ஒரு கதை நடை. சாரதி , வீரா இருவர்களிற்கிடையிலான புரிதலுடன் கூடிய காதல் அற்புதம். வீரா கதாபாத்திரம் வீரம், தைரியம், தன்னம்பிக்கை மற்றும் சகோதர பாசம் என்ற பின்னணியில் சித்தரித்திருப்பது அற்புதம்.வேலைக்கு போகும் பெண்களும், ஆதரவற்ற பெண்களும் எதிர் நோக்கும் பிரச்சனைகளை தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள். அதிலிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள ஆண்வேடமிடுவதும், அதில் அவள் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் தெளிவு படுத்தியிருப்பது பிரமாதம். இந்த கதையின் உயிர் துடிப்பே வீரசாரதி தான். தவறு செய்வது மனித இயல்பு. அதை திருத்தி கொள்பவன் சிறந்த மனிதன் அதற்கு உதாரணம் நம்ம சாரதி தான். கதை நகர்வு அதி அற்புதம். ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அழகாக படைத்துள்ளீர்கள். வீரா மாதிரி ஒரு நவயுக நங்கையை படைத்த உங்களுடைய எழுத்தாற்றல் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் சகி. மென்மேலும் பல படைப்புக்கள் படைத்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்?????????