திரண்ட அன்பில் என்னை
எக்குதப்பாய் சிக்க வைத்து,
யாரோ அவள் என்ற
எண்ணத்தை உடைத்தெறிந்து,
விடியாத இரவுகளில்
மனதோடு கதையடித்து,
கவலை சூழ்கையில் உயிர்
தேடும் ஜீவனாக உருமாறி,
வாழ்வின் பௌர்ணமியாக
பேச்சால் மனம் குளிர வைத்து,
சந்தன பூங்காற்றாய்
என் ஜன்னல் தேடி வந்து,
காதல் சன்யாசியாக
திரிந்த என்னை அவள்,
கதையால் காதலிலே
கூத்து கட்டி அழகு பார்த்து,
எழுத்துகளால் உறவு கொண்ட
கரிசல் காட்டு பெண்ணிற்கு,
நிழல் தோழியின் மனம்
நிறைந்த நிஜமான பிறந்த
நாள் வாழ்த்துக்கள்!
Happy birthday @Yuvakarthika