வணக்கம் டியர்ஸ்,
அத்தியாயம் 7
தேவதாவின் அப்பாவைப் பெரிய பணக்காரர் எனச் சொல்லி விட முடியாது. பாரம்பரியமாய் நடுத்தர அளவில் ஒரு ஜவுளி கடை வைத்திருந்தார். இந்தக் கடை அவர் தாத்தா ஆரம்பித்தது. அடுத்தடுத்து வந்தவர்கள் எல்லாம் அதை விரிவுப்படுத்தாமல், வருவதைக் கொண்டு வாழ்ந்து முடித்திருந்தார்கள். தேவராஜூமே அப்படித்தான் இருந்தார்.
அவர்களது வீடு நடுத்தர வர்க்க மக்கள் வாழும் இடத்தில் அமைந்திருந்தது. சுற்றிலும் மலர் தோட்டம் இருக்க, நடுவே அழகானதொரு இல்லம். அந்த இல்லத்தில் மக்கள் கூட்டம் குழுமி இருந்தது. அழுகைச் சத்தமும் ஒப்பாரி சத்தமும் காதை நிறைத்தது. வீட்டின் நடு கூடத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது தேவராஜீன் பூத உடல். அதன் அருகே அமர்ந்து கதறிக் கொண்டிருந்தாள் தேவதா. அவள் தாத்தாவோ, பேத்தியின் அருகிலேயே ஒரு நாற்காலியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.
“அந்த யமனுக்கு உசுரு ஒன்னு வேணும்னா, என் உசுர எடுத்துட்டுப் போயிருக்கக் கூடாதா? வயசுக்கு வந்த பொம்பளப் புள்ளைக்கு ஒன்னும் பண்ணிப் பார்க்காம நட்டாத்துல விட்டுட்டுப் போயிட்டானே! ஐயோ கடவுளே” எனும் அவர் கதறல் கல் நெஞ்சையும் கரைத்தது.
தாத்தனின் புலம்பலில் இவளுக்கு இன்னுமே கண்ணீர் பெருக்கெடுத்தது. தேவதாவின் காலோஜ் மேட் எனும் போர்வையில் அங்கேயே இருந்து எல்லாவற்றுக்கும் உதவிக் கொண்டிருந்த சங்கத்தமிழனுக்குத் தன்னவளின் கண்ணீர் மனதைப் போட்டுப் பிசைந்தது. அருகில் நின்று ஆறுதல் சொல்லக் கூட வழி இல்லாது மறுகி நின்றான்.
ஐ.சி.யூவில் மயங்கி கீழே விழுந்து கிடந்தவளை கண்ட நொடியில் இருந்து அவளைத் தன் கை வளைவுக்குள்ளே வைத்துக் கொள்ள வேண்டும் எனத் துடித்தது இவனுக்கு! ஆனால், இறப்புக்கு வந்திருந்த சொந்தபந்தங்கள், நண்பர்கள் எல்லோர் முன்னும் அவள் காட்சிப் பொருளாகிப் போகக் கூடாது எனத் தள்ளியே நின்றான்.
நிற்காமல் வழிந்த கண்ணீரைத் துடைக்கக் கூட சக்தியின்றி கண்ணாடி பெட்டியில் இருந்த தகப்பனையேப் பார்த்திருந்தாள் தேவதா. கடைசி மூச்சை விடும் முன் அவர் பேசிய வார்த்தைகள் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன.
“அம்மாடி! தேவதா”
“அப்பா!” எனக் கண் கலங்கினாள் இவள்.
போன தடவைப் பார்த்ததை விட இன்னும் இளைத்திருந்தார். கண்களில் மட்டும் ஒளி இருந்தது.
“அப்பா உன் அம்மாவைத் தேடிப் போகற நேரம் வந்திடுச்சு போலடா!”
“ஐயோ! அப்படிலாம் சொல்லாதீங்கப்பா”
அவரது கண்களிலும் கண்ணீர் வழிந்தது.
“பொம்பள புள்ளய எல்லோரும் பொத்தி வளர்ப்பாங்க! ஆனா நானோ, யாரயும் சார்ந்து நீ வாழ கூடாதுன்ற எண்ணத்துல உன்னை வளர்த்தேன். நான் இல்லைன்னா கூட என் மக இந்த பூமியில பொழச்சிப்பான்ற நம்பிக்கை எனக்கு இருக்கு தேவதா! உனக்கு அன்பையும், பாசத்தையும் நான் காட்டல! ஏன்னா எனக்கு காட்டத் தெரியல! உங்கம்மா கிட்டயும் நான் இப்படித்தான் இருந்தேன்! ஆனா அவ அதையெல்லாம் எதிர்ப்பார்த்தது போலக் காட்டிக்கிட்டதே இல்ல! அன்பையும், பாசத்தையும், காதலையும் அள்ளிக் குடுத்தா எனக்கு! கிடைக்கற வரைக்கும் அதோட அருமை தெரியல! கடை, புடவை, பணம்னு வாழ்ந்துட்டேன். உடம்பு சரியில்லாம அவ இருந்தப்போ கூட நான் அதை சீரியஸா எடுத்துக்கல! எல்லாருக்கும் வரதுதானேன்னு அலட்சியமா இருந்துட்டேன். கடைசி ஸ்டேஜ்லதான் உயிர்க்கொல்லி நோய்னு தெரிஞ்சது! அவளும் போராடிப் பார்த்து முடியாம போய் சேர்ந்துட்டா!” என்றவருக்கு மூச்சு வாங்கியது.
“அப்பா!” எனக் கலங்கியவள் அவர் நெஞ்சை நீவி விட்டாள்.
பின் மெல்ல மீண்டும் பேச ஆரம்பித்தார் தேவராஜ்.
“அவ போனதும்தான் வாழ்க்கைல என் சந்தோஷமும் கூடவே போய்டுச்சுன்னு புரிஞ்சது. குற்ற உணர்ச்சி என்னைப் போட்டுக் கொன்னது! பொண்டாட்டிய இன்னும் கொஞ்சம் கேர் எடுத்துப் பார்த்துருக்கலாமே, இன்னும் கொஞ்சம் அன்பா பேசிருக்கலாமே, ஒரு வாய் சோறு ஊட்டி விட்டிருக்கலாமேனு பல எண்ணங்கள். ஒவ்வொன்னும் நெஞ்சைக் குத்திக் கிழிச்சது! இப்படியே எனக்குள்ளேயே புழுங்கிப் போய் கிடந்தேன்! வாழ்க்கைல இனி எந்த சந்தோசத்துக்கும் லாயக்கில்லாதவன் நானுன்னு மனசுல பலமா விழுந்து போச்சு! உங்கம்மா கூடவே போய்டனும்னு நெனைச்சேன். ஆனா நீ இருக்கியே! எப்படி போக?” என்றவரின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தது.
“நீ அப்பான்னு ஓடி வரப்போ, ஐயோ அவ இருந்து அனுபவிக்க வேண்டிய அன்பில்லையா இது! அவள யமனுக்குத் தூக்கிக் குடுத்துட்டு நான் எப்படி உன் பாசத்த அனுபவிக்கறதுன்னு உள்ளுக்குள்ள துடிக்கும்! அதனாலத்தான் உன்னை ஒதுக்கி வச்சேன்”
இவளுக்கு மனது சுருக்கென வலித்தது.
‘செத்துப் போனவங்களுக்கு நீங்க செய்யாத அன்புக்காக, உசுரோட இருந்த எனக்கு அன்ப மறுத்து என் மனசைக் கொன்னுட்டீங்களேப்பா’ என நினைத்தவள், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தகப்பன் முன்னே எதையும் சொல்லவில்லை.
“அதோட நீ வளர ஆரம்பிக்கவும், உடம்புல மாற்றங்கள் தெரியவும் ஒரே தவிப்பா போச்சு எனக்கு! அம்மான்னு ஒருத்தி இருந்து இது என்ன, அது என்னன்னு உனக்கு விளக்கிச் சொல்லி, எப்படி நடக்கனும்னு உன்னை கைட் பண்ண இருந்திருக்கனும்! என் அலட்சியத்துனால இல்லாம போய்ட்டான்னு இன்னும் உடைஞ்சுப் போய்ட்டேன்! அதனாலத்தான் உனக்கு கைட் பண்ணறதுக்கு ஏதுவா ஒரு ஸ்கூல்ல சேர்த்து அங்கயே தங்க வச்சேன்!”
“போதும்பா ரொம்ப பேசாதிங்க! மூச்சு வாங்குது பாருங்க!”
“இருமா! பேசி முடிச்சிடறேன்! இனிமே பேச சான்ஸ் கிடைக்குமோ என்னமோ! உன்னை இண்டிபெண்டண்டா வளர்த்தேன்! ஏன் தெரியுமா? நீ உன்னைப் பார்த்துக்குவன்னு தெரிஞ்சா, உங்கம்மா கிட்ட சீக்கிரம் போய்டலாமேன்னுதான்! இந்த அப்பா உனக்கொரு கல்யாணம் கட்டி வைக்கலியேன்னு நெனைச்சிறாத பாப்பா! கல்யாணத்த விட படிப்பும் தன்னம்பிக்கையும்தான் உனக்கு நல்ல வழிய காட்டும்! உங்கம்மா என்னைக் கல்யாணம் கட்டி என்ன சுகத்த கண்டுட்டா!!! உசுர விட்டதுதான் மிச்சம்! நாள பின்ன உன்னை நல்லபடி பார்த்துக்குவான்னு நீ நம்பற ஒருத்தன கட்டிக்கோடா! இந்த அப்பாவோட ஆசீர்வாதம் உனக்கு எப்பவுமே இருக்கும்”
“இப்படிலாம் பேசாதீங்கப்பா! தூரமா இருந்தாலும், எனக்குன்னு அப்பான்ற ஒருத்தர் இருக்காரு! அவரோட அக்கறை எனக்கு
அத்தியாயம் 7
தேவதாவின் அப்பாவைப் பெரிய பணக்காரர் எனச் சொல்லி விட முடியாது. பாரம்பரியமாய் நடுத்தர அளவில் ஒரு ஜவுளி கடை வைத்திருந்தார். இந்தக் கடை அவர் தாத்தா ஆரம்பித்தது. அடுத்தடுத்து வந்தவர்கள் எல்லாம் அதை விரிவுப்படுத்தாமல், வருவதைக் கொண்டு வாழ்ந்து முடித்திருந்தார்கள். தேவராஜூமே அப்படித்தான் இருந்தார்.
அவர்களது வீடு நடுத்தர வர்க்க மக்கள் வாழும் இடத்தில் அமைந்திருந்தது. சுற்றிலும் மலர் தோட்டம் இருக்க, நடுவே அழகானதொரு இல்லம். அந்த இல்லத்தில் மக்கள் கூட்டம் குழுமி இருந்தது. அழுகைச் சத்தமும் ஒப்பாரி சத்தமும் காதை நிறைத்தது. வீட்டின் நடு கூடத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது தேவராஜீன் பூத உடல். அதன் அருகே அமர்ந்து கதறிக் கொண்டிருந்தாள் தேவதா. அவள் தாத்தாவோ, பேத்தியின் அருகிலேயே ஒரு நாற்காலியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.
“அந்த யமனுக்கு உசுரு ஒன்னு வேணும்னா, என் உசுர எடுத்துட்டுப் போயிருக்கக் கூடாதா? வயசுக்கு வந்த பொம்பளப் புள்ளைக்கு ஒன்னும் பண்ணிப் பார்க்காம நட்டாத்துல விட்டுட்டுப் போயிட்டானே! ஐயோ கடவுளே” எனும் அவர் கதறல் கல் நெஞ்சையும் கரைத்தது.
தாத்தனின் புலம்பலில் இவளுக்கு இன்னுமே கண்ணீர் பெருக்கெடுத்தது. தேவதாவின் காலோஜ் மேட் எனும் போர்வையில் அங்கேயே இருந்து எல்லாவற்றுக்கும் உதவிக் கொண்டிருந்த சங்கத்தமிழனுக்குத் தன்னவளின் கண்ணீர் மனதைப் போட்டுப் பிசைந்தது. அருகில் நின்று ஆறுதல் சொல்லக் கூட வழி இல்லாது மறுகி நின்றான்.
ஐ.சி.யூவில் மயங்கி கீழே விழுந்து கிடந்தவளை கண்ட நொடியில் இருந்து அவளைத் தன் கை வளைவுக்குள்ளே வைத்துக் கொள்ள வேண்டும் எனத் துடித்தது இவனுக்கு! ஆனால், இறப்புக்கு வந்திருந்த சொந்தபந்தங்கள், நண்பர்கள் எல்லோர் முன்னும் அவள் காட்சிப் பொருளாகிப் போகக் கூடாது எனத் தள்ளியே நின்றான்.
நிற்காமல் வழிந்த கண்ணீரைத் துடைக்கக் கூட சக்தியின்றி கண்ணாடி பெட்டியில் இருந்த தகப்பனையேப் பார்த்திருந்தாள் தேவதா. கடைசி மூச்சை விடும் முன் அவர் பேசிய வார்த்தைகள் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன.
“அம்மாடி! தேவதா”
“அப்பா!” எனக் கண் கலங்கினாள் இவள்.
போன தடவைப் பார்த்ததை விட இன்னும் இளைத்திருந்தார். கண்களில் மட்டும் ஒளி இருந்தது.
“அப்பா உன் அம்மாவைத் தேடிப் போகற நேரம் வந்திடுச்சு போலடா!”
“ஐயோ! அப்படிலாம் சொல்லாதீங்கப்பா”
அவரது கண்களிலும் கண்ணீர் வழிந்தது.
“பொம்பள புள்ளய எல்லோரும் பொத்தி வளர்ப்பாங்க! ஆனா நானோ, யாரயும் சார்ந்து நீ வாழ கூடாதுன்ற எண்ணத்துல உன்னை வளர்த்தேன். நான் இல்லைன்னா கூட என் மக இந்த பூமியில பொழச்சிப்பான்ற நம்பிக்கை எனக்கு இருக்கு தேவதா! உனக்கு அன்பையும், பாசத்தையும் நான் காட்டல! ஏன்னா எனக்கு காட்டத் தெரியல! உங்கம்மா கிட்டயும் நான் இப்படித்தான் இருந்தேன்! ஆனா அவ அதையெல்லாம் எதிர்ப்பார்த்தது போலக் காட்டிக்கிட்டதே இல்ல! அன்பையும், பாசத்தையும், காதலையும் அள்ளிக் குடுத்தா எனக்கு! கிடைக்கற வரைக்கும் அதோட அருமை தெரியல! கடை, புடவை, பணம்னு வாழ்ந்துட்டேன். உடம்பு சரியில்லாம அவ இருந்தப்போ கூட நான் அதை சீரியஸா எடுத்துக்கல! எல்லாருக்கும் வரதுதானேன்னு அலட்சியமா இருந்துட்டேன். கடைசி ஸ்டேஜ்லதான் உயிர்க்கொல்லி நோய்னு தெரிஞ்சது! அவளும் போராடிப் பார்த்து முடியாம போய் சேர்ந்துட்டா!” என்றவருக்கு மூச்சு வாங்கியது.
“அப்பா!” எனக் கலங்கியவள் அவர் நெஞ்சை நீவி விட்டாள்.
பின் மெல்ல மீண்டும் பேச ஆரம்பித்தார் தேவராஜ்.
“அவ போனதும்தான் வாழ்க்கைல என் சந்தோஷமும் கூடவே போய்டுச்சுன்னு புரிஞ்சது. குற்ற உணர்ச்சி என்னைப் போட்டுக் கொன்னது! பொண்டாட்டிய இன்னும் கொஞ்சம் கேர் எடுத்துப் பார்த்துருக்கலாமே, இன்னும் கொஞ்சம் அன்பா பேசிருக்கலாமே, ஒரு வாய் சோறு ஊட்டி விட்டிருக்கலாமேனு பல எண்ணங்கள். ஒவ்வொன்னும் நெஞ்சைக் குத்திக் கிழிச்சது! இப்படியே எனக்குள்ளேயே புழுங்கிப் போய் கிடந்தேன்! வாழ்க்கைல இனி எந்த சந்தோசத்துக்கும் லாயக்கில்லாதவன் நானுன்னு மனசுல பலமா விழுந்து போச்சு! உங்கம்மா கூடவே போய்டனும்னு நெனைச்சேன். ஆனா நீ இருக்கியே! எப்படி போக?” என்றவரின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தது.
“நீ அப்பான்னு ஓடி வரப்போ, ஐயோ அவ இருந்து அனுபவிக்க வேண்டிய அன்பில்லையா இது! அவள யமனுக்குத் தூக்கிக் குடுத்துட்டு நான் எப்படி உன் பாசத்த அனுபவிக்கறதுன்னு உள்ளுக்குள்ள துடிக்கும்! அதனாலத்தான் உன்னை ஒதுக்கி வச்சேன்”
இவளுக்கு மனது சுருக்கென வலித்தது.
‘செத்துப் போனவங்களுக்கு நீங்க செய்யாத அன்புக்காக, உசுரோட இருந்த எனக்கு அன்ப மறுத்து என் மனசைக் கொன்னுட்டீங்களேப்பா’ என நினைத்தவள், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தகப்பன் முன்னே எதையும் சொல்லவில்லை.
“அதோட நீ வளர ஆரம்பிக்கவும், உடம்புல மாற்றங்கள் தெரியவும் ஒரே தவிப்பா போச்சு எனக்கு! அம்மான்னு ஒருத்தி இருந்து இது என்ன, அது என்னன்னு உனக்கு விளக்கிச் சொல்லி, எப்படி நடக்கனும்னு உன்னை கைட் பண்ண இருந்திருக்கனும்! என் அலட்சியத்துனால இல்லாம போய்ட்டான்னு இன்னும் உடைஞ்சுப் போய்ட்டேன்! அதனாலத்தான் உனக்கு கைட் பண்ணறதுக்கு ஏதுவா ஒரு ஸ்கூல்ல சேர்த்து அங்கயே தங்க வச்சேன்!”
“போதும்பா ரொம்ப பேசாதிங்க! மூச்சு வாங்குது பாருங்க!”
“இருமா! பேசி முடிச்சிடறேன்! இனிமே பேச சான்ஸ் கிடைக்குமோ என்னமோ! உன்னை இண்டிபெண்டண்டா வளர்த்தேன்! ஏன் தெரியுமா? நீ உன்னைப் பார்த்துக்குவன்னு தெரிஞ்சா, உங்கம்மா கிட்ட சீக்கிரம் போய்டலாமேன்னுதான்! இந்த அப்பா உனக்கொரு கல்யாணம் கட்டி வைக்கலியேன்னு நெனைச்சிறாத பாப்பா! கல்யாணத்த விட படிப்பும் தன்னம்பிக்கையும்தான் உனக்கு நல்ல வழிய காட்டும்! உங்கம்மா என்னைக் கல்யாணம் கட்டி என்ன சுகத்த கண்டுட்டா!!! உசுர விட்டதுதான் மிச்சம்! நாள பின்ன உன்னை நல்லபடி பார்த்துக்குவான்னு நீ நம்பற ஒருத்தன கட்டிக்கோடா! இந்த அப்பாவோட ஆசீர்வாதம் உனக்கு எப்பவுமே இருக்கும்”
“இப்படிலாம் பேசாதீங்கப்பா! தூரமா இருந்தாலும், எனக்குன்னு அப்பான்ற ஒருத்தர் இருக்காரு! அவரோட அக்கறை எனக்கு