மனம்️20
பாலி!
பாலியில் மர வீடுகள் அதிகம். ஒரு இயற்கையோடு கூடிய அழகிய வாழ்வு அது.
அப்படிப்பட்ட ஒரு மர வீடு தான் இவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான்கு அடுக்காக பிரிக்கப்பட்டிருந்தது அது. கீழே தாங்களே சமைத்து உன்ன விரும்புபவர்களுக்கு ஏற்றார் போன்ற ஒரு சிறிய சமையலறை. மேலே ஒரு பெரிய ஹால் அதன் நடுவில் ஒரு பொந்து போன்ற அமைப்பு இருந்தது. அந்த பொந்தை மூடி இருந்த திரையை விலக்கிப் பார்த்தால் வெளியே ஒரு பெரிய பால்கணி இருந்தது.
அதற்கும் மேல் சிற்பி மூடிய முத்து போன்ற அமைப்பில் அழகிய படுக்கை அறை இருந்தது. அங்கு வருபவர்களுக்கு தனிமை தேவைப்படும் என்பதால் அது முடிய அமைப்பிலேயே இருந்தது. அதற்கும் மேலே சென்றால் மாடி, ஒரு கூம்பு போன்ற அமைப்பில் மரங்களைக் கொண்டு அழகாக மூடப்பட்டிருந்தது அது.
“வாவ் செமயா இருக்குல!” ராம் கூற, அவ்வளவு நேரம் வீட்டை பார்த்துக் கொண்டிருந்தவள் அவனைப் பார்த்தாள்.
சிரித்தபடி இருப்பதால் அவன் கன்னத்தில் எப்பொழுதும் இருக்கும் அந்த அழகிய குழி அவளை ஈர்த்தது. அதைப் பார்த்துக் கொண்டே,
“ரொம்ப அழகா இருக்கு.” என்றாள் சாத்வி.
அவளின் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை திரும்பிப் பார்க்க வைத்தது ராமை.
அவன் பார்க்கும் போதும் அவனை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவளை பார்க்க, இவனுக்குத்தான் என்னவோ போலானது.
“என்னாச்சு இவளுக்கு ஏன் இப்படி பார்த்து வைக்கிறா?” எனத் தனக்குத்தானே கேட்டுக் கொண்டவன் வீட்டை நோட்டம் விடுவது போல் வேறு புறம் திரும்பிக் கொண்டான்.
“கொஞ்சம் வெளியே போயிட்டு வரலாமா?” கேட்டாள் சாத்வி.
“அதுக்கு என்ன போலாமே.” என கிளம்பினான் ராம் அவர்களின் தேவைக்காக அந்த வீட்டின் வெளியேயே அவர்களுடைய கார் ஒன்று காத்திருந்தது.
வழக்கம்போல டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்ட சாத்வி, அவனை வழியை பார்க்க சொன்னாள். கூகுள் ஆண்டவரின் உதவியுடன் அவர்கள் போய் சேர வேண்டிய சூப்பர் மார்க்கெட்க்கு போய் சேர்ந்தார்கள்.
“இங்க எதுக்கு வந்திருக்கோம்?” என ராம் கேட்க,
“செல்ப்குக்கு அந்த வீட்ல எல்லாமே இருந்துச்சு இல்ல நம்ம கொஞ்சம் திங்ஸ் வாங்கிட்டு போனா நாமளே சமைச்சு சாப்பிடலாம் இல்ல.”
“நல்ல ஐடியா தான் ஆனா இங்க வந்தும் ரெஸ்ட் எடுக்காம சமைச்சுட்டு இருக்க மாதிரி இருக்காது உனக்கு?”
“என்ஜாய் பண்ணி பண்ற எந்த வேலையும் கஷ்டம் இல்ல.” எனக் கூறியவள் சமையலை செய்வதற்கான அனைத்துப் பொருட்களையும் வாங்கினாள்.
ஒரு தள்ளுவண்டி எடுத்துக் கொண்டவன் அவள் போடும் அனைத்தையும் தள்ளிக் கொண்டே வந்தான். பின் பில் கவுண்டரில் பணம் செலுத்த அவனே சென்று நிற்க, அவனை சென்று காரை பார்க்கையில் இருந்து வெளியே எடுத்து வர சொல்லி இவளே பணம் செலுத்தும் இடத்திலிருந்த வரிசையில் நிற்க ஆரம்பித்தாள்.
அவன் காரை எடுத்து வருவதற்குள் இவளும் பணம் செலுத்தி விட்டு பொருட்களை தூக்கிக் கொண்டு வர, அவ்வளவு பொருட்களின் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வரும் அவளை முறைத்துக் கொண்டே வந்தவன்,
“நான் வரத்துக்குள்ள உனக்கு என்ன அவ்ளோ அவசரம்.” என அவளை கடிந்துக் கொண்டு அந்த பொருட்களை அவனே தூக்கி காரின் டிக்கியில் வைத்தான்.
வழக்கம்போல அவளே டிரைவ் செய்துக் கொண்டு போக, அந்த மர வீட்டின் முன் கார் நின்றது.
“நீங்க போய் கொஞ்சம் ரெஃப்ரெஷ் ஆயிடுவாங்க அதுக்குள்ள நான் சமையல் வேலையை பாக்குறேன்.” என அவனை மேலே அனுப்பி வைத்தால் அவள்.
அவனுக்கு பிடித்தார் போல் இனிப்பு, இன்று டிராவல் செய்து வந்ததால் சீக்கிரமாக செரிக்குமாறு இருக்கும் உணவு மட்டும் செய்தாள்.
“பிளைட்ல கொடுத்த புட் எனக்கு சட்டே ஆகல செம பசி என்ன செஞ்ச?” எனக் கேட்டுக்கொண்டே ராம் இறங்கி வர,
“பசிக்குதா முன்னாடியே சொல்லி இருக்க கூடாதாப்பா இன்னும் சீக்கிரம் ரெடி பண்ண ட்ரை பண்ணி இருப்ப இல்ல?” என வாய் கூறிக் கொண்டு இருந்தாலும் அவனின் பசி உணர்ந்து தட்டில் அனைத்தையும் பரிமாறிக் கொண்டே கேட்டாள் சாத்வி.
“இப்ப மட்டும் என்ன லேட்டா? நம்ம வந்து கொஞ்ச நேரம் தான் இருக்கும். நீ அதுக்குள்ள இவ்ளோ ரெடி பண்ணி இருக்கியே! நான் உனக்கு சமையல்ல ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சு வந்தேன். பாத்தா நீ எல்லாத்தையும் முடிச்சிட்டு இருக்க.” எனக் கூறிக்கொண்டு அவள் வைத்த இட்லி, சாம்பார் மற்றும் சட்னியை சாப்பிட்டுக் கொண்டே அவள் தட்டில் உணவை எடுத்து வைத்தான்.
“பசிக்குதுன்னு சொன்னீங்க நீங்க முதல்ல சாப்பிடுங்க. இதோ நான் எடுத்து வச்சுக்கிறேன்.” என அவள் தட்டில் சாம்பார் சட்னி ஊத்திக்கொண்டு அவன் அருகே அமர்ந்து சாப்பிட துவங்கினாள்.
மேலும், “நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து சமைக்கலாம். இன்னைக்கு பிளைட்ல சாப்பிட்டா அந்த ஃபுட் ரொம்ப ஸ்பைசி. அதான் நல்லா செரிமானம் ஆகட்டும்னு சாதாரணமா இட்லி சாம்பார் சட்னினு செஞ்சேன். டயர்டா இருப்பீங்களேனு தான் இன்னைக்கு உங்கள இந்த சமையல் வேலைக்குள்ள இழுக்கல. நீங்க ரெஃப்ரெஷாகி வரதுக்குள்ள ரெடி பண்ணிடலாம்னு பார்த்தேன்.” என விளக்கமும் கொடுத்தாள்.
“சரி சரி ஒன்னும் பிரச்சனை இல்ல உனக்கு ஹெல்ப் பண்ணலாமேன்னு தான் சொன்னேன் நாளைல இருந்து நாம சேர்ந்தே செய்யலாம்.” எனச் சொன்னவன், அவள் நீட்டிய ஏதோ ஒரு புதுவிதமான உணவைப் பார்த்து வியந்தான்.
“இது என்னது?” எனது வாங்கியபடி அவன் கேட்க,
“இது ஒரு இந்தோனேஷியன் டெசேர்ட். உங்களுக்கு இனிப்பு ரொம்ப புடிக்கும் இல்ல அதான் ட்ரை பண்ணேன். எப்படி இருக்குன்னு பாருங்க?” என அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒரு பழுப்பும் வெள்ளையும் கலந்த நீரில் விளையாடிக் கொண்டிருந்தது குட்டியான வெள்ளை உருண்டைகள். அந்த இனிப்பை பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருந்தது.
அதில் ஒரு உருண்டையை எடுத்து வாயில் போட்டவன் அதை சுவைத்து சாப்பிட்டான்.
“செமையா இருக்கு சது.” என்றவன் அதன் சுவையில் மயங்கி,
“செமையா செஞ்சிருக்க சது.” என்றவன் அவள் இதழில் மென்மையாக இதழ் பதித்து செல்ல, இவ்வளோ அப்படியே சிலை என அமர்ந்து விட்டாள்.
அவள் செய்த அந்த புது வகையான இனிப்பு புர்பூர் சும்சும் எனப்படும் ஒரு இந்தோனேசிய வகை இனிப்பு.
அதாவது சக்கரைவள்ளி கிழங்கை அவித்து நன்றாக மசித்து அதில் கொஞ்சம் அரிசி மாவு, சிறிது தேங்காய் பால் கலந்து அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, அதன் பின் நாட்டு சக்கரை பாகில் அந்த அரிசி மாவு உருண்டையை போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். அந்த அரிசி மாவு உருண்டைகள் முழுவதுமாக அந்த நாட்டுச்சக்கரை பாகுலேயே கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் போதே ரம்பை இலை(பாண்டன் லீவ்ஸ்) சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்ட பின் இறக்க வேண்டும்.
ராமிற்கு இனிப்பு வகைகள் பிடிக்கும் என்று அவள் கேள்விப்பட்ட நாளிலிருந்து யூடியூம் உதவியால் பல வகையான இனிப்புகளை பார்த்துக் கொண்டிருந்தாள். இங்கே இந்தோனேசியா உணவு வகைகள் பிரபலம் என்பதால். அதில் இருக்கும் இனிப்பு வகைகள் அவனுக்கு செய்து கொடுக்க வேண்டும் என்ற ஆசையில் முதல் முதலில் ட்ரை செய்தது அது. எனவே, தான் அவ்வளவு ஆர்வமாக அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் இவள் செய்த அந்த இனிப்பிற்கு அவன் சட்டென்று இப்படி முத்தமிட்டு செல்வான் என்பதை எதிர்பார்க்காதவள் சிலையானாள்.
கைகளை கழுவி விட்டு வந்தவன் அவள் அதே இடத்தில் அப்படியே அமர்ந்திருப்பதை பார்த்தவுடன் சிரித்தான். இப்பொழுதெல்லாம் அவனுக்கு அடிக்கடி இவ்வாறு சிரிப்பு வருவதை நினைத்து தன் தலையில் அடித்துக் கொண்டவன் மேலே சென்று விட்டான்.
வெகு நேரம் அப்படியே அமர்ந்திருந்தவள் சுயநினைவு வரப்பெற்று பார்க்க, அங்கே அவன் இல்லை அவன் மட்டும் இல்லை டேபிளில் எந்த பாத்திரம் இல்லை உள்ளே கிச்சனில் சென்று பார்த்தால் அனைத்து பாத்திரங்களும் துலக்கி வைத்திருந்தான் ராம்.
சாப்பிட்ட தட்டை மட்டும் துலக்கி வைத்தவள் மேலே சென்றாள்.
மேலே ஹாலில் இருக்கும் அந்த பிறம்பு நாற்காலியில் அமர்ந்திருந்தான் ராம்.
“உக்காந்துட்டே தூங்கிட்டு போல இருக்கு.” சட்டென்றுக் கேட்ட ராமின் குரலில் அவனை திரும்பிப் பார்க்க, அவனும் இவளை பார்த்து வசீகரமாக சிரித்துக் கொண்டிருந்தான்.
“வர வர நீங்க சரியில்லைங்க.” எனப் பட்டென கூறிய சாத்வியை அதே சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் ராம்.
“வரவர நான் சரியில்லைன்னா என்ன சரியில்ல?”
“அது டக்குனு கேட்டா எப்படி சொல்றது?” என இவள் தந்தி அடிக்க,
“சரி நானே பாயிண்ட்டுக்கு வரேன். இப்ப நான் முத்தம் கொடுத்தது உனக்கு ஏதாவது பிரச்சனையா?”
‘ஐயோ! இப்படி ஒரு கேள்வியை கேட்கிறானே இப்ப நான் என்ன பதில் சொல்றது?’
“மனசுக்குள்ள நினைக்கிறது நிறுத்திட்டு என்கிட்ட ஸ்ட்ரைட்டா பேசு.” என சட்டென்று ராம் கூற,
“இப்படி கேட்டா நான் என்ன பதில் சொல்றதுன்னு நெனச்சேன்.” எனத்தான் நினைத்ததை அவனிடம் கூறினான்.
“உன் மனசுல என்ன படுதோ அதை சொல்லு நான் கிஸ் பண்றது உனக்கு ஏதாவது அன்கம்ஃபர்டபுலா பீல் ஆகுதா?” என அவன் நேரடியாக கேட்டான்.
‘இல்லை’ எனத் தலையாட்டினாள் அவள்.
“எப்பவுமே எனக்குள்ள ஒரு தனிமை உணர்வு இருந்துட்டே இருக்கும். உன்ன பார்த்த இந்த ஒரு மாசமா அது எங்க காணாம போச்சுன்னு தெரியல. உன் கூட இருக்க எனக்கு பிடிச்சிருக்கு. உன் கூட டைம் ஸ்பென்ட் பண்றது ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. நீ பேசுற விஷயங்கள், நீ பண்ற சின்ன சின்ன ஆக்டிவிட்டீஸ் கூட எனக்கு பிடிச்சிருக்கு. அன்னைக்கு உன்கிட்ட நான் சொன்னேன்ல அர்ஜுன் கூட நான் இப்படி எல்லாம் டைம் ஸ்பென்ட் பண்ணுவேன்னு எதெல்லாம் எனக்கு பிடிக்கும்னு. அத எனக்கு பண்ணனும் தானே அன்னைக்கு பீச்சுக்கு போலாமானு கேட்டு என் கூட பீச்ல டைம் ஸ்பென்ட் பண்ணது. அப்புறம் மூவி பார்க்கலாமான்னு கேட்டு ரொம்ப நாள் கழிச்சு நம்ம வீட்டு தியேட்டர்ல போயி படம் பாத்தது. இதெல்லாம் எனக்காக தானே செஞ்ச?” என அவன் கேள்வி கேட்டு நிறுத்த,
ஆமென தலையாட்டினாள் இவள்.
“ஏன்?”
“நாம லைஃப்ல இனிமே ஒண்ணா தான் வாழ போறோம். என் கூடவே இருக்க போறவங்களை சந்தோஷமா வச்சுக்கணும்ற ஒரு எண்ணம் தான்.” எனப் பதில் கூறினாள் சாத்வி.
மேலும், “நான் மட்டும் இல்லையே நீங்களும் என்ன நல்லா பாத்துக்குறிங்க என்னோட இந்த தூங்குற பழக்கத்துக்கு எங்க அம்மா என்னை எவ்வளவு திட்டு வாங்க தெரியுமா? உனக்கு இப்ப புரியாது நான் சொல்றது. கல்யாணமாகி போற இடத்துல புருஷன் கிட்ட வாங்கி கட்டிக்கும் போது தெரியும்னு அவ்வளவு திட்டுவாங்க. என்ன நீங்க அந்த விஷயத்துக்காக திட்டினதே இல்ல. எப்பவும் நான் தூங்கிட்டேன்னா என்ன குழந்தை மாதிரி பார்த்துக்கிறீங்க. அது மட்டுமா கல்யாணம் ஆயிட்டாலே அந்த பொண்ணு நமக்கு சொந்தம்ற நினைப்புல அவளோட எண்ணத்த கூட மதிக்காம கல்யாணம் பண்ணி கற்பழிக்கிற ஆண்களுக்கு மத்தியில என்ன கேட்காம என் சுண்டு விரல் நகத்தை கூட தொட்டதில்லை நீங்க.”
“அதுக்கு பதில் தான் இன்னைக்கு உன்ன கேக்காம கிஸ் பண்ணிட்டேனே!” என அவன் சிரித்துக் கொண்டே கூற,
“அது…உங்க சந்தோஷத்தோட வெளிப்பாடு உங்களுக்கு அந்த ஸ்வீட் அவ்வளவு புடிச்சிருக்குன்னு அர்த்தம்.” எனக் கூறியவளை இறுக்க அணைத்துக் கொண்டான் அவன்.
“நீ என்ன ரொம்ப நல்லா புரிஞ்சுகிட்ட சது.” என்றவன்
“ஐயோ! இப்பதான் நீ எனக்கு நல்ல சர்டிபிகேட் எல்லாம் கொடுத்த, அதுக்குள்ள உன்ன கேக்காம கட்டி புடிச்சிட்டேனே!” என போலியாய் பயந்தவனை முதுகில் ஒரு அடி போட்டவள்.
“ரொம்ப பண்ணாதீங்க.”
“அப்ப இனிமே இதுக்கெல்லாம் பர்மிஸ்ஸன் வேண்டியது இல்லையா?” என அவன் அவளையே பார்த்துக் கொண்டு கேட்க,
“இன்னைக்கு கிஸ் பன்னதுக்கும் கட்டி பிடிச்சதுக்கும் பர்மிஸ்ஸன் கேட்டீங்களா என்ன?”
“இல்லையே.”
“அதுக்கு நான் ஏதாவது சொன்னேனா?”
“இல்லையே.”
“அப்படின்னா என்ன அர்த்தம்?”
“என்ன அர்த்தம்?”
“இதுக்கெல்லாம் பர்மிஷன் தேவை இல்லைனு அர்த்தம்.” என அவள் கூறவும் அவளைப் பார்த்து சிரித்து வைத்தான் ராம்.
மனம் கொள்ளை போகுமா…