• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Matured content உயிர் 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
170
Reaction score
18
Location
Coimbatore
நம்ப முடியாத உண்மை!

வரலாற்றில்‌ பல சந்தர்ப்பங்களில்‌ ஆச்சரியமான பழக்கங்கள்‌, சடங்குகள்‌- செக்ஸ்‌ விஷயத்தில்‌ இருந்தன. இவற்றைப்‌ பற்றிய சுவாரஸ்யமான துணுக்குகள்‌ இந்த தொடரில்‌ ஆங்காங்கே இடம்பிடிக்கும்‌.

'செக்ஸ்‌ தொழிலாளிகள்‌' என கெளரவமான பெயரோடு இப்போது அழைக்கப்பட்டாலும்‌, விபசாரிகளுக்கு தங்கள்‌ தொழில்‌ பற்றி விளம்பரம்‌ செய்து கொள்ளும்‌ உரிமையை எந்த நாடும்‌ இதுவரை கொடுக்கவில்லை. இப்படிப்பட்ட பெண்களை சந்திப்பதற்காகவே சர்வதேச சுற்றுலாப்‌ பயணிகள்‌ வந்துகுவியும்‌ தாய்லாந்து போன்ற நாடுகளில்கூட விளம்பரங்களுக்கு அனுமதி இல்லை.

ஆனால்‌, பழங்கால ரோமில்‌ செக்ஸ்‌ தொழில்‌ செய்யும்‌ பெண்கள்‌ நூதனமான விளம்பர யுக்தியைக்‌ கையாண்டனர்‌. பல தேசங்களிலிருந்து வாணிபம்‌ செய்ய வரும்‌ வியாபாரிகள்‌, தொலைதூரப்‌ பகுதிகளிலிருந்து வந்து பணிபுரியும்‌ போர்வீரர்கள்‌ என பலரும்‌ பெண்களைத்‌ தேடி அலைவார்கள்‌. சந்தடிமிக்க சந்தைகளில்‌ யார்‌ இந்த வகைப்‌ பெண் என அடையாளம்‌ கண்டுபிடிப்பது அவர்களுக்கு சிரமமாக இருந்தது.

அவர்களின்‌ சிரமத்தைப்‌ போக்க விளம்பர யுக்தி ஒன்றை உருவாக்கியிருந்தார்கள்‌. செக்ஸ்‌ தொழிலாளிகள்‌ பிரத்யேகமான ஒருவகை செருப்பை அணிவார்கள்‌. இதன்‌ அடிப்பாகத்தில்‌ அச்சு எழுத்துக்களை செதுக்குவது மாதிரி ஒற்றை வரியில்‌ எழுத்துக்களை செதுக்கி வைத்திருப்பார்கள்‌. இவர்கள்‌ சாலைகளில்‌ நடக்கும்போது செருப்பு பதியும்‌ இடங்களில்‌ அந்த எழுத்துக்களும்‌ அச்சாக பதிந்து, என்னைப்‌ பின்தொடர்ந்து வா!' என அழைக்கும்‌.

சபல பார்ட்டிகள்‌ தலைகுனிந்து சாலையைப்‌ பார்த்தபடி வந்தால்‌, அவர்கள்‌ இந்த காலடித்‌ தடங்களைப்‌ பார்த்து பரவசமாகி அதைப்‌ பின்‌ தொடர்வார்கள்‌. அவர்கள்‌ விரும்பிய பார்ட்டி அங்கே காத்திருக்கும்‌.


மூன்றாயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்பே இதெல்லாம்‌ சாத்தியமாகி இருக்கிறது! இந்த ஆராய்ச்சி ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில்‌ மருத்துவக்‌ கல்லூரியில்‌ பணிபுரியும்‌ பெண்கள்‌, படிக்கும்‌ மாணவிகள்‌ என பலரும்‌ அந்த பரிசோதனைக்‌ கூடத்தின்‌ வராண்டா பக்கம்‌ வரவே பயந்தனர்‌. எப்போதும்‌ செக்ஸ்‌ தொழிலாளிகள்‌ கிண்டலும்‌, கேலியுமாக பேசிக்‌ கொண்டு உலா வரும்‌ இடம்‌ என்றால்‌ கேட்கவா வேண்டும்‌?

ஆனால்‌, நாளாக ஆக, ‘இவர்‌ நிஜமாகவே சீரியஸாக ஏதோ செய்கிறார்‌' என்பது அந்த வளாகத்தில்‌ பலருக்கும்‌ புரிந்தது. செக்ஸ்‌ தொழிலாளிகள்‌ மீதான ஆராய்ச்சியை திடீரென மாஸ்டர்ஸ்‌ நிறுத்‌திய போது மாணவிகளும்‌ நர்ஸுகளும்‌ இயல்பாகவே அவரை அணுகினார்கள்‌. தனது ஆராய்ச்சிக்கு குடும்பப்‌ பெண்கள்தான்‌ தேவை என்பதை அவர்‌ சொன்ன போது அவர்களில்‌ பலர்‌ அதற்கு முன்வந்‌தார்கள்‌.

தங்கள்‌ கணவர்களோடு வந்த நர்ஸ்கள்‌, பாய்‌ பிரண்டுகளைக்‌ கூட்டிக்‌ கொண்டு வந்த கல்லூரி மாணவிகள்‌, மாஸ்டர்ஸிடம் ஏற்கெனவே சிகிச்சை பெற வந்த பெண்கள்‌, தங்களுக்கு தெரிந்த தம்பதிகளை அனுப்பி வைத்த டாக்டர்கள்‌ என பலரும்‌ கைகொடுக்க வந்தனர்‌.

இப்போது அவருக்குத்‌ தேவை இந்த பெண்களிடம்‌ சரளமாக பேசி அவர்களிடமிருந்து தகவல்‌ களைத்‌ திரட்ட ஒரு பெண்‌ உதவியாளர்‌. பத்திரிகைகளில்‌ அவர்‌ ஒரு விளம்பரம்‌ கொடுத்தார்‌. 'முதிர்ந்த அனுபவம்‌ கொண்ட ஒரு இளம்பெண்‌ தேவை. அவர்‌ மனிதர்கள்‌ மீது ஆர்வம்‌ காட்ட வேண்டும்‌. ஒரு குழந்தை எங்கே உருவாகி எப்படி வருகிறது என்ற உண்மையைப்‌ புரிந்தவராக இருக்க வேண்டும்‌.

இந்த வித்தியாசமான விளம்பரத்தைப்‌ பார்த்து விட்டு அவரிடம்‌ வந்தார்‌ வர்ஜீனியா ஜான்சன்‌. உளவியல்‌ நிபுணரான வர்ஜீனியா ஜான்சன்‌ மோண்டானாவில்‌ பிறந்தவர்‌. மாஸ்டர்ஸை விட பத்து வயது இளையவர்‌. பாட்டுப்‌ பாடுவது, பத்திரிகைகளில்‌ எழுதுவது, விளம்பர ஆராய்ச்சி என பல வேலைகளை அவ்வப்போது பார்த்து வந்த வர்ஜீனியா ஜான்சனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள்‌ இருந்தன. மாஸ்டர்ஸின்‌ ஆராய்ச்சியில்‌ ஆர்வம்‌ காட்டி அவரது உதவியாளராக உடனே வேலைக்கு சேர்ந்தார்‌ அவர்‌.

அதன்பின்‌ மாஸ்டர்ஸும்‌ வர்ஜீனியா ஜான்சனும்‌ பரிசோதனைச்‌ சாலை படுக்கை அறைக்கு வந்தவர்களை ஆராயந்தனர்‌.

பரிசோதனைக்கு வந்தவர்கள்‌ மொத்தம்‌ 694 பேர்‌. இதில்‌ 312 பேர்‌ ஆண்கள்‌. 382 பெண்கள்‌. இவர்களில்‌ 552 பேர்‌ திருமணமாகி கணவன்‌, மனைவிகளாக வந்தவர்கள்‌. 98 பேர்‌ விவாகரத்து ஆனவர்கள்‌. 44 பேர்‌ திருமணம்‌ ஆகாதவர்கள்‌. ஆண்களைப்‌ பொறுத்தவரை 21 வயது இளைஞர்கள்‌ முதல்‌ 89 வயதில்‌ இருக்கும்‌ குடுகுடு கிழவர்கள்‌ வரை வெவ்வேறு வயதுகளில்‌ இருந்தார்கள்‌.

பெண்கள்‌... பதினெட்டு வயது கல்லூரி மாணவி முதல்‌ எழுபத்தெட்டு வயது பாட்டி வரை இருந்தார்கள்‌. ஆறு பேர்‌ கர்ப்பிணிகளாக பரிசோதனைக்கு வந்தார்கள்‌. அந்த சமயத்தில்‌ பரிசோதனைக்‌ கூடத்தில்‌ தங்கள்‌ கணவரோடு உறவு கொண்ட அவர்கள்‌, திரும்பவும்‌ குழந்தை பிறந்த பிறகு மீண்டும்‌ வந்தார்கள்‌. உறவு கொண்டார்கள்‌.

ஒருவழியாக ஆராய்ச்சி முடிந்து அதை புத்தகமாக வெளியிடும்‌ சமயம்‌... செக்ஸ்‌ என்ற வார்த்தையே பரபரப்பு கிளப்பக்‌ கூடியதாயிற்றே. அப்படி எதுவும்‌ வெற்று பரபரப்பு கிளம்பி, இந்த ஆராய்ச்சியின்‌ கண்ணியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில்‌ மாஸ்டர்ஸ்‌ உறுதியாக இருந்தார்‌.

“இது டாக்டர்களைக்‌ குறிவைத்து நடந்த ஆராய்ச்சி. இந்த ஆராய்ச்சி முடிவுகள்‌ அவர்களுக்கு உதவ வேண்டும்‌. செக்ஸ்‌ பிரச்னைகளோடு வருகிறவர்களுக்கு டாக்டர்கள்‌ உரிய சிகிச்சை தர இது வழிகாட்டியாக இருக்கும்‌. செக்ஸ்‌ பிரச்னையால்‌ குடும்பங்கள்‌ சிதறாமல்‌ இந்த புத்தகம்‌ தடுக்கும்‌' என அவர்‌ நம்பினார்‌.

அந்த புத்தகமே கடினமான மருத்துவ வார்த்தைகளால்‌ எழுதப்பட்டு இருந்தது. மருத்துவ புத்தகங்களை வெளியிடும்‌ பாஸ்டன்‌ நகரைச்‌ சேர்ந்த லிட்டில்‌ பிரெளன்‌ நிறு வனத்திடம்‌ புத்தக உரிமையைக்‌ கொடுத்த மாஸ்டர்ஸ்‌, “பொதுமக்களை வாங்கச்‌ சொல்லி விளம்பரம்‌ கொடுக்காதீர்கள்‌. என்‌ புத்தகத்தை டாக்டர்கள்‌ வாங்கினால்‌ போதும்‌” என்று சொன்னார்‌.

கவர்ச்சியான அட்டை எதுவும்‌ இல்லாமல்‌ ஏதோ பாட புத்தகம்‌ மாதிரி வெறும்‌ எழுத்துக்களை நிரப்பிய மேலட்டையோடுதான்‌ வெளியானது அது!

1966-ம்‌ ஆண்டு HUMAN SEXUAL RESPONSE’ என்ற பெயரைத்‌ தாங்கி அந்த புத்தகம்‌ வெளிவந்தது. ஆனால்‌, அது வெளியாவதற்கு சில நாட்கள்‌ முன்னதாக புத்தகத்தைப்‌ பற்றி அரைகுறையாக தெரிந்து கொண்டு பலர்‌ தாக்குதல்‌ தொடுத்தனர்‌.

“செக்ஸ்‌ உறவில்‌ இருக்கும்‌ இன்பத்தைப்‌ பற்றி மாஸ்டர்ஸ்‌ உணரவில்லை. மெக்கானிக்குகள்‌ பைக்கை ஓட்டி டிரையல்‌ பார்ப்பது மாதிரி இயந்திரத்தனமாக ஒரு அறையில்‌ தாம்பத்ய உறவைச்‌ செய்ய வைத்து அவர்‌ ஆராய்ச்சி செய்திருக்கிறார்‌. இப்படி அந்தரங்கத்தை அலசி ஆராய்ந்தால்‌ அதில்‌ இருக்கும்‌ சுவாரஸ்யம்‌ போய்விடும்‌. விலங்குகள்‌ கூட அதை சுகமாக அனுபவிக்கும்‌ போது மனிதன்‌ மட்டும்‌ இயந்‌திரத்தனமாக செக்ஸை அனுபவிக்‌கும்‌ பரிதாப ஜீவன்‌ ஆகிவிடுவான்‌” என்று சமூக ஆர்வலர்கள்‌ கூக்குரல்‌ போட்டனர்‌.

அந்த சமயத்தில்தான்‌ இப்படி ஒரு ஆராய்ச்சி நடந்த விஷயமே வெளியில்‌ தெரிந்தது.

இப்படி கிளம்பிய பரபரப்புகளே தீனி போட, மாஸ்டர்ஸும்‌, வர்ஜீனியா ஜான்சனும்‌ இணைந்து எழுதிய அந்த புத்தகம்‌ வந்த வேகத்‌ தில்‌ மளமளவென விற்றுத்‌ தீர்ந்தது. புரியாத மொழி... பத்து டாலர்‌ விலை என இருந்தாலும்‌ அது ஐம்பது லட்சம்‌ பிரதிகள்‌ விற்றது. டாக்டர்கள்‌ வாங்குவதற்கு முன்னரே சாதாரண பொதுஜனங்கள்தான்‌ வாங்கித்‌ தள்ளினர்‌.

இதுவரை நியூ யார்க்‌ டைம்ஸ்‌' பத்திரிகை வெளியிட்ட விற்பனைப்‌ பட்டியலில்‌ முதலிடம்‌ பிடித்த ஒரே மருத்துவ நூல்‌ அதுதான்‌. செக்ஸின்‌ போது நாடித்துடிப்பு எவ்வளவு அதிகரிக்கிறது... ரத்த அழுத்தம்‌ எவ்வளவு எகிறுகிறது... கண்ணுக்குள்‌ இருக்கும்‌ பாப்பா எப்படி நெகிழ்கிறது என பல விஷயங்களையும்‌ அந்த புத்தகம்‌ டெக்னிக்கலாக சொல்லியிருந்தா லும்‌ அதன்‌ வீரியம்‌ இன்னொரு பக்கத்தில்தான்‌ வெளிப்பட்டது.

காலம்‌ காலமாக செக்ஸ்‌ பற்றி இருந்துவந்த பல நம்பிக்கைகளை ஒட்டுமொத்தமாக தகர்த்தது அது.

(வயதுக்கு வந்த உடனே ஒருவர்‌ செக்ஸில்‌ ஈடுபட தயாராகி விடுவதாக நினைப்பது தவறு. உடல்‌, மனசு இரண்டும்‌ பக்குவப்பட வேண்டும்‌. அதன்‌ பின்னரே ஒருவரால்‌ செக்ஸில்‌ ஈடுபட முடியும்‌' என்றார்‌ மாஸ்டர்ஸ்‌.

செக்ஸ்‌ அறிவு என்பது தானாக வருவதில்லை. முறையாக கற்றுக்‌ கொள்ள வேண்டிய விஷயம்‌. 'சொல்லித்‌ தெரிவதில்லை மன்மதக்‌ கலை' என்கிற மாதிரியான பழமொழிகள்‌ எல்லாமே தப்பு. மீன்குஞ்சு பிறந்ததும்‌ நீந்தக்‌ கற்றுக்‌ கொள்வது மாதிரி அந்த வயது வந்ததும்‌ இதை தானாக கற்றுக்‌ கொள்வார்கள்‌ என நினைப்பது ஆபத்து. அதை பலர்‌ தப்பாக கற்றுக்‌ கொள்வதால்‌ பிரச்னைதான்‌ வருகிறது. அப்படிப்பட்டவர்கள்தான்‌ பிரச்னைகளில்‌ தவிக்கிறார்கள்‌ என்றார்‌ மாஸ்டர்ஸ்‌.

அதேபோல 'வயதானதும்‌ செக்ஸைக்‌ குறைத்துக்‌ கொள்ள வேண்டும்‌' என்று அதுவரை சொல்லப்பட்ட அட்வைஸையும்‌ அவர்‌ மறுத்தார்‌. 'உடல்‌ ஒத்துழைத்து, ஆர்வமுள்ள துணை கிடைத்தால்‌ எண்பது வயதிலும்‌ ஒருவர்‌ இருபது வயது இளைஞனைப்‌ போல செயல்படலாம்‌' என்றார்‌ அவர்‌.

மலட்டுத்‌ தன்மை' என லேபிள்‌ குத்தி பல பெண்கள்‌ குழந்தை பெற லாயக்கற்றவர்களாக ஒதுக்கப்படுவதை அவர்‌ கடுமையாக எதிர்த்தார்‌.

எப்போது, எப்படி உறவு கொள்ள வேண்டும்‌ என்ற விஷயம்‌ புரிந்தாலே இதில்‌ பாதி பிரச்னைகள்‌ தீர்ந்துவிடும்‌. மேலும்‌ இது தொடர்பான குறைபாடுகளில்‌ அறுபது சதவிகிதம்‌ ஆண்களிடம்தான்‌ இருக்கிறது. இதற்கு காரணம்‌ பயம்தான்‌' என்றார்‌ அவர்‌.

செக்ஸ்‌ என்பது ஏதோ குழந்தை பெறுவதற்கோ, உணர்ச்சிகளை கொட்டித்‌ தீர்த்துக்‌ கொள்வதற்கோ மட்டுமான விஷயம்‌ இல்லை. அது உடலுக்கு ஆரோக்கியம்‌ தரும்‌ ஒரு பழக்கம்‌. அந்த நெருக்கமான உறவின்‌ மூலம்‌ ஆணும்‌, பெண்ணும்‌ சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வது தான்‌ சமூக நியதி என்பது அவரது முடிவு.

செக்ஸில்‌ ஆண்களைப்‌ போலவே பெண்களும்‌ பரவச நிலையை அனுபவிக்கிறார்கள்‌. ஆண்களுக்கு விரைவாக பாலுணர்வு கிளர்ந்து எழுகிறது. ஆனால்‌, பெண்ணுக்கு இந்த கிளர்ச்சி தாமதமாகவே வருகிறது. பல சந்தர்ப்பங்களில்‌ பெண்கள்‌ இப்படி கிளர்ச்சி அடைய ஆரம்பிப்பதற்குள்‌ ஆண்கள்‌ முடித்து விடுகின்றனர்‌.

இதனால்‌ திருமணமான பெண்களில்‌ நான்கில்‌ ஒருவர்‌, பல ஆண்டுகள்‌ உறவுக்கு பிறகு கூட அந்த பரவசத்தை அனுபவித்ததில்லை. பெரும்பாலான ஆண்கள்‌ இப்படி பெண்களின்‌ உணர்வுகளை மதிக்காததால்‌ ஏற்படும்‌ வெறுப்புதான்‌ அந்த உறவின்‌ மீது பலருக்கு ஆர்வமே இல்லாமல்‌ செய்து விடுகிறது” என்றார்‌ அவர்‌.

முதல்‌ புத்தகம்‌ போலவே அடுத்தடுத்து இரண்டு புகழ்மிக்க புத்தகங்களை மாஸ்டஸும்‌ வர்ஜீனியா ஜான்சனும்‌ வெளியிட்டனர்‌. செக்ஸை ஆரம்பித்து முடிக்கும்‌ வரை உடலில்‌ ஏற்படும்‌ மாற்றங்களை நான்கு கட்டமாக அவர்கள்‌ பிரித்தனர்‌. இதில்‌ முதல்நிலை “உணர்ச்சி வசப்படும்‌ கட்டம்‌.' இதற்கு அடுத்தது, இந்த உணர்ச்சியை அப்படியே நிலைநிறுத்தி வைக்கும்‌ “பீடபூமி நிலை.' உச்சகட்ட இன்பத்தை அடைவது மூன்றாவது நிலை. இதன்பின்‌ ஓய்வெடுப்பது நான்காவது நிலை.

சரி... இதில்‌ என்ன லாபம்‌?

இதற்கு முன்பு வரை செக்ஸ்‌ பிரச்னைகளுக்கு ஒரே பெயர்தான்‌. பிரச்னையுள்ள ஆண்களை ‘ஆண்மையற்றவர்கள்‌' என்றும்‌, பெண்களை 'கிளர்ச்சியற்ற தன்மை உள்ளவர்கள்‌' எனவும்‌ வகை பிரித்திருந்தனர்‌. சிகிச்சையும்‌ அவர்களுக்கு ஒரே விதமானதுதான்‌.

காரில்‌ நான்கு டயர்கள்‌. அதில்‌ ஏதாவது ஒன்று பஞ்சராகி இருக்கும்‌. பஞ்சரை ஒட்டாமல்‌ நான்கு டயர்களுக்கும்‌ சும்மா காற்றடித்துக்‌ கொண்டிருந்தால்‌ எப்படி இருக்கும்‌? அந்த மாதிரிதான்‌ செய்தார்கள்‌. அதனால்‌ பலனும்‌ இல்லாமல்‌ போனது.

இப்போது இந்த இரண்டு வார்த்தைகளும்‌ செல்லாதவை ஆகிவிட்டன.

உலகம்‌ முழுக்க இனம்‌, நிறம்‌, நாடு, மொழி என பலவிதங்களில்‌ மனித இனம்‌ வித்தியாசப்பட்டு இருந்‌தாலும்‌ அவர்கள்‌ எல்லோருக்கும்‌ செக்ஸைப்‌ பொறுத்தவரை ஒரே மாதிரியான உணர்வுகளே இருக்கும்‌. இதில்‌ ஒருவருக்கு பிரச்னை என்றால்‌ ஒட்டுமொத்தமாகவே அவருக்கு எல்லாம்‌ முடியாமல்‌ இருக்க முடியாது. சிலருக்கு செக்ஸ்‌ ஆசையில்‌ தான்‌ பிரச்னை இருக்கும்‌.

ஆசை அதிகமாக இருக்கும்‌ அல்லது குறைவாக இருக்கும்‌. சிலருக்கு உணர்ச்சிவசப்பட்ட தன்மையை அப்படியே நிலைநிறுத்தி பரவசநிலைக்கு போக முடியாமல்‌ இருக்கும்‌. சிலருக்கு பரவச நிலையில்‌ பிரச்னை இருக்கும்‌. துரித ஸ்கலிதம்‌ ஆகிவிடும்‌. அவரை விசாரித்து இந்த நான்கில்‌ எந்த கட்டத்தில்‌ அவருக்கு பிரச்னை என்று கேட்டு, அதற்கு தகுந்த சிகிச்சை கொடுத்தால்‌ போதும்‌... பிரச்னை தீர்ந்துவிடும்‌ என்பது இந்த ஜோடி சொன்ன விஷயம்‌.

ஹெலன்‌ சிங்கர்‌ கெப்ளான்‌ என்ற உளவியல்‌ நிபுணர்‌, “எல்லாம்‌ சரி... ஆசையை விட்டுட்டீங்களே! மனதில்‌ ஆசை இல்லாமல்‌ இரண்டு பேருக்கு மத்தியில்‌ உறவு நடந்தால்‌ அதில்‌ பரவச நிலை வராது. அந்த ஆசையை மாஸ்டர்ஸ்‌ முழுமையாக தன்‌ ஆராய்ச்சியில்‌ புறக்கணித்து விட்டார்‌” என்று வேகப்பட்டார்‌.

ஆனால்‌, இந்த வகை சிகிச்சையில்‌ செக்ஸ்‌ தொடர்பான பிரச்னைகளில்‌ 99 சதவிகிதத்துக்கு தீர்வு இருக்கிறது என்ற மாஸ்டர்ஸும்‌, வர்ஜினியா ஜான்சனும்‌ இதற்காக ஒரு மையத்தையும்‌ தொடங்கினர்‌. அங்கு அவர்‌ தந்த ஒரு அதிரடி சிகிச்சை இன்னும்‌ பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

அது...தாயால்‌ வளர்க்க முடியாத குழந்தையை செவிலித்‌ தாய்‌ வளர்ப்பது மாதிரி, செக்ஸ்‌ அனுபவிப்பதில்‌ பிரச்னை உள்ள ஆண்களுக்கு செவிலித்‌ துணையாக பெண்‌ ஒருவரை அனுப்பி படுக்கையில்‌ செக்ஸை கற்றுத்தரும்‌ சிகிச்சை.

இதில்தான்‌ வாழ்க்கையில்‌ பெரும்‌ எதிர்ப்பை சந்தித்தார்‌ மாஸ்டர்ஸ்‌.

***************

நம்ப முடியாத உண்மை!

அமெரிக்காவில்‌ வெள்‌ளைக்‌ குடியேற்றங்கள்‌ நிகழ்ந்த பதினேழாம்‌ நூற்றாண்டு. அப்போது விவசாயம்‌ மட்டுமே பிரதான தொழிலாக இருந்தது. திருமணத்துக்கு முன்பு காதல்‌ சகஜமான விஷயம்‌. தங்கள்‌ காதலியைத்‌ தேடி தொலைதூர கிராமங்களிலிருந்து இளைஞர்கள்‌ குதிரையில்‌ வருவது வழக்கம்‌.

வரும்‌ இளைஞனுக்கு காதலி வீட்டில்‌ விருந்தும்‌ உண்டு. வருவது சாயங்காலம்‌ என்றால்‌ அந்த இளைஞனை இரவில்‌ வீடு திரும்ப அனுமதிக்க மாட்டார்கள்‌. வனவிலங்குகள்‌ தொந்தரவு அதிகம்‌.

மெழுகுவத்தி மட்டுமே அப்போது வெளிச்சம்‌ தரும்‌ ஒரே விஷயம்‌... அதுவும்‌ காஸ்ட்லி! வீட்டில்‌ இருக்கும்‌ எல்லோரும்‌ ஒரு அறையில்‌ மெழுகுவத்தியை ஏற்றி வைத்துக்‌ கொண்டு கும்பலாக தூங்குவார்கள்‌. குளிரில்‌ தரையில்‌ தூங்க முடியாது. கூடுதல்‌ படுக்கையும்‌ இருக்காது. அதனால்‌ அந்த இளைஞனை தன்‌ காதலியோடு சேர்ந்து ஒரே படுக்கையில்‌ படுத்துக்‌ கொள்ள அனுமதிப்பார்கள்‌. ஒரே ஹாலில்‌ ஒட்டுமொத்த குடும்பமும்‌ தூங்க, அதற்கு நடுவே அந்த காதல்‌ ஜோடி கிசுகிசு குரலில்‌ ரகசியம்‌ பேசிக்‌ கொண்டிருக்கும்‌.

இப்படி பக்கத்தில்‌ படுக்க அனுமதித்தாலும்‌ மற்ற விஷயங்களுக்கு தடை உண்டு. இரண்டு பேருக்கும்‌ நடுவே கழுத்திலிருந்து கால்‌ வரை நீளும்படி உயரமான ஒரு பலகையை தடுப்பாக நிற்கவைத்து விடுவார்கள்‌. இந்த பலகையைத்‌ தாண்டி அவர்கள்‌ முகத்தை பார்த்துக்‌ கொள்ளலாம்‌. முத்தமிடலாம்‌. அவ்வளவுதான்‌! இந்த மாதிரி பலகை அப்போது பல வீடுகளில்‌ இருந்தது. ‘சுருக்கு பலகை' என்று இதற்குப்‌ பெயர்‌.

இப்படி பலகை இல்லாத வீடுகளில்‌ இன்னொரு டெக்னிக்‌ வைத்திருந்தார்கள்‌. பெண்ணை இடுப்பளவு உயரமுள்ள ஒரு சாக்குப்பையில்‌ போட்டு கட்டி விடுவார்கள்‌. அப்புறம்‌ அந்த இளைஞனை தூங்க அனுமதிப்பார்கள்‌. இதைத்‌ தாண்டி அவர்களால்‌ எதுவும்‌ செய்துவிட முடி யாது என்பது பெற்றோர்களின்‌ கணிப்பு.

ஆனால்‌ ‘எல்லை தாண்டிய பயங்கர வாதத்தில்‌' ஈடுபட்ட இளைஞர்கள்‌ பல பேர்‌. அந்த சமயத்தில்‌ முப்பது சதவிகித பெண்கள்‌ திருமணத்துக்கு முன்பே கர்ப்பமானதாக புள்ளிவிவரங்கள்‌ சொல்கின்றன.
 




SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
170
Reaction score
18
Location
Coimbatore
வரலாற்றில்‌ முதல்முறையாக பரிசோதனைக்‌ கூடத்தில்‌ செக்ஸை நிகழ்த்த வைத்து, அதில்‌ ஆராய்ச்சிகள்‌ செய்த கையோடு சிகிச்சையிலும்‌ இறங்கினார்‌ மாஸ்டர்ஸ்‌. ஆராய்ச்சி நடந்த அதே செயின்ட்‌ லூயிஸ்‌ நகரில்‌ கடந்த 70-ம்‌ ஆண்டு அவரது மருத்துவ மனை துவங்கியது. அங்கு செக்ஸ்‌ குறைபாடுகளுக்கு அவர்‌ தந்த இரண்டு வார சிகிச்சை, பயங்கர பாப்புலர்‌ ஆனது.

“ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ படுக்கையில்‌ செக்ஸ்‌ உணர்வு இயல்பாகவே கிளர்ந்தெழும்‌. ஆனால்‌, ஏதோ ஒரு குறுக்கீடு ஏற்படும்‌ போதுதான்‌, அதில்‌ குறைபாடு ஏற்படுகிறது. அதற்கு சமூகம்‌ காரணமாக இருக்கலாம்‌. மதம்‌ காரணமாக இருக்கலாம்‌. அனுபவங்கள்‌ காரணமாக இருக்கலாம்‌. ஏதாவது மூட நம்பிக்‌கைகள்கூட காரணமாக இருக்கலாம்‌. அதை சரிசெய்யத்‌ தான்‌ சிகிச்சை.

எப்படி செய்வது என எதையும்‌ டாக்டர்‌ கற்றுத்தர முடியாது. அந்த தடைகளை அகற்றி அவர்களை இயல்பாக்கி விட்டால்‌ போதும்‌. அவர்களே இயற்கையாக நடந்து கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்‌” என்று வெளிப்படையாகவே தனது சிகிச்சை அணுகுமுறை பற்றி சொன்னார்‌ மாஸ்டர்ஸ்‌.

பெரும்பாலானவர்களுக்கு பிரச்னை ஏதாவது தப்பான முன் ‌அனுபவங்களாகவே இருக்கும்‌. திருமணத்துக்கு முன்‌ செக்ஸ்‌ தொழிலாளிகளிடம்‌ போயிருப்பார்கள்‌. பதற்றமும்‌, பயமும்‌, முதல்‌ தடவை என்கிற உணர்வும்‌ ஏராளமான

வியர்வையைக்‌ கிளப்பிவிட்டு எல்லாவற்றையும்‌ தப்பாக்கி இருக்கும்‌. அந்த தருணத்தில்‌, 'நான்‌ இதற்கெல்லாம்‌ லாயக்கில்லை' என்கிற மாதிரியான உணர்வு மனதில்‌ ஆழமாகப்‌ பதிந்து விட்டி ருக்கும்‌. அதை அகற்றுவது கஷ்டமான விஷயம்‌. திருமணத்துக்கு பிறகு மனைவியைத்‌ தொடும்போதெல்லாம்‌ அந்த உணர்வு மேலெழும்பி வர, செக்ஸ்‌ உணர்வு இல்லாமல்‌ போய்‌ விடும்‌.

இதேபோல சிறுவயதில்‌ பார்த்த செக்ஸ்‌ காட்சிகள்‌, நேர்ந்த துயரமான அனுபவங்கள்‌, அதனால்‌ எழுந்த பாதிப்புகள்‌... இப்படி பல விஷயங்கள்‌ ஆண்களையும்‌, பெண்களையும்‌ பாதித்து அவர்களை நோயாளிகள்‌ ஆக்குகின்றன.

மாஸ்டர்ஸ்‌ வெளிப்படையான சிகிச்சை முறையைத்‌ துவக்கியதற்கு முன்பெல்லாம்‌ உளவியல்‌ நிபுணர்கள்‌ தான்‌ இந்த மாதிரியான பிரச்னைகளுக்கு சிகிச்சை தருவார்கள்‌. பிரச்னை உள்ள ஆசாமி ரகசியமாக தனியாக வருவார்‌.

அவரின்‌ மனைவிக்குக்கூட கணவனின்‌ பிரச்னை தெரியாது, ஆண்டுக்கணக்கில்‌ நீளும்‌ சிகிச்சையில்‌ பலன்‌ பெரும்பாலும்‌ இருக்காது.

மாஸ்டர்ஸ்‌ புகுத்திய சிகிச்சைமுறை இதிலிருந்து வித்தியாசமானது. பிரச்னை உள்ளவர்‌ தனியாக வரக்‌ கூடாது. தன்‌ மனைவி அல்லது கணவனோடு வர வேண்டும்‌. இரண்டு வாரங்களும்‌ தினமும்‌ மருத்துவமனைக்கு வர வேண்டும்‌.

செக்ஸ்‌ சிகிச்சை தருவதில்‌ பயிற்சி பெற்ற ஒர்‌ ஆணும்‌, பெண்ணும்‌ ஜோடியாக அவர்கள்‌ முன்‌ அமர்ந்து பேசுவார்கள்‌. இயல்பாக இரண்டு ஜோடிகளும்‌ பேசிக்‌ கொண்டிருக்கும்போது பிரச்னை எங்கே என்பது புரிந்துவிடும்‌. கொஞ்சம்‌ உளவியல்‌ சிகிச்சை, கொஞ்சம்‌ மருத்துவ சிகிச்சை என இரண்டையும்‌ கலந்து கொடுத்தார்‌ மாஸ்டர்ஸ்‌. கிட்டத்தட்ட எண்பது சதவிகித ஜோடிகளுக்கு இதிலேயே பிரச்னை தீர்ந்து, அவர்கள்‌ வாழ்க்கையில்‌ முதல்முறையாக படுக்கை அறை சந்தோஷத்தை அனுபவித்தனர்‌.
பலருக்கு குழந்தையும்‌ பிறந்தது. இன்று உலகெங்கிலும்‌ பல நாடுகளிலும்‌ செக்ஸ்‌ பிரச்னைகளுக்கு தரப்படும்‌ சிகிச்சைக்கு அடிப்படை இதுதான்‌! ஆனால்‌, அவரைப்‌ போல இரண்டு வாரம்‌ வந்து தங்கச் சொல்லி யாரும்‌ வற்புறுத்துவதில்லை. அந்த காலத்திலேயே இந்த சிகிச்சைக்கு அவர்கள்‌ 5000 டாலர்‌ கட்டணம்‌ வசூலித்‌தார்கள்‌.

இரண்டு வாரம்‌ வேலைக்குப்‌ போகாமல்‌ பெட்டி படுக்கையைக்‌ கட்டிக்‌ கொண்டு வந்து நான்‌ சொல்லும்‌ இடத்தில்‌ தங்கு... இவ்வளவு ஃபிஸ்‌ கொடு' என்றெல்லாம்‌ நம்ம ஊரில்‌ சொல்ல முடியாது. இரண்டு வாரம்‌ சம்பாதிக்காமல்‌ இருந்தால்‌ அப்புறம்‌ அவர்கள்‌ டாக்டருக்கு எப்படி ஃபீஸ்‌ கொடுப்பார்கள்‌?

அது தவிர ஒரு செயற்கையான சூழ்நிலையில்‌ இரண்டு வாரம்‌ தங்கும்போது அவர்களுக்குள்‌ எப்படியாவது நெருக்கத்தை ஏற்படுத்தி உறவை சாத்தியமாக்கி விடும்‌. ஆனால்‌, திரும்பவும்‌ வீட்டுக்கு போனதும்‌ பழையபடி பிரச்னைதான்‌.

இதையெல்லாம்‌ கணக்கில்‌ எடுத்துக்‌ கொண்டு இப்போதைய சிகிச்சை முறை வேறு மாதிரியான வடிவம்‌ எடுத்திருக்கிறது. டாக்டரிடம்‌ ஐந்து முதல்‌ பத்து தடவை சிகிச்சைக்கு வந்தால்‌ போதும்‌... அங்கு தரப்படும்‌ சிகிச்சையை வைத்து வீட்டில்‌ போய்‌ அவர்கள்‌ நடைமுறைப்படுத்த வேண்டும்‌.

இதில்‌ சிகிச்சை என்பது மருந்து மற்றும்‌ மனரீதியான மாற்றங்களை ஏற்படுத்தும்‌ கவுன்சிலிங்‌ ஆகிய இரண்டும்‌ இணைந்தது. மனதில்‌ ஆசை இருந்து உடலும்‌ ஒத்துழைத்‌ தால்‌ மட்டுமே ஒருவரால்‌ செக்ஸில்‌ ஈடுபட முடியும்‌. இரண்டும்‌ இப்படி இணைந்து உறவில்‌ ஈடுபடும்‌ சந்தர்ப் பத்தில்‌ மனதில்‌ தோன்றும்‌ பயமோ, அல்லது வேறு ஏதோ உணர்வுகளோ அவர்களது கவனத்தை திசைதிருப்புகிறது. அதை மாற்றி நூறு சதவிகித ஈடுபாட்டுடன்‌ அவர்களை உறவு கொள்ள வைப்பதுதான்‌ சிகிச்சை. இதில்‌ வெறும்‌ மாத்திரைகள்‌ பலன்‌ தராது.

சும்மா அட்வைஸ்‌ கொடுத்தாலும்‌ வேலைக்கு ஆகாது. புதைகுழியில்‌ சிக்கி இருப்பவனுக்கு, 'பயப்படாதே தம்பி! ஒன்றும்‌ ஆகாது. நீ கவனமாக பார்த்து வந்திருக்கக்‌ கூடாதா?' என்றெல்லாம்‌ சொல்லப்படும்‌ அட்வைஸ்கள்‌ தேவையில்லை. அவனை அதிலிருந்து மேலே கொண்டுவர வேண்டும்‌.

அதுதான்‌ முக்கியம்‌.

செக்ஸ்‌ சிகிச்சையும்‌ இது மாதிரிதான்‌! அதை எப்படி செய்வது என்று சொல்லித்‌ தருவது சிகிச்சை இல்லை... அந்த உறவைத்‌ தடுக்கும்‌ பயம்‌ அல்லது தயக்கத்திலிருந்து மீண்டு வரும்‌ வழியைக்‌ கற்றுத்‌ தருவதுதான்‌ சிகிச்சை.

உதாரணமாக ஒரு குழந்தை கீழே விழுந்து அடிபட்டு சிராய்ப்பு ஏற்படுகிறது... உடனே அது அழுகிறது. அந்த வலியை மூளை உணர்வதால்‌ அது அழுகைக்கான கட்டளைகளை பிறப்பிக்கிறது... அதனால்‌ அழுகை வருகிறது.

அதே குழந்தைக்கு ஒரு சாக்லெட்‌ கொடுத்தால்‌ அதை சுவைத்ததும்‌ அழுகை நிற்கிறது. காரணம்‌, இந்த இனிப்பு, வலியை மறக்கடிக்கிறது.

கவனம்‌ திசை திரும்புவதுதான்‌ இதற்கு காரணம்‌. ஒவ்வொரு செயலுக்கும்‌ என்று மூளையில்‌ தனித்தனி பகுதிகள்‌ உண்டு. செக்ஸக்கும்‌ மூளை, தண்டுவடம்‌ ஆகிய இரண்டு இடங்களிலும்‌ தூண்டல்‌ தேவை. மனதில்‌ உணர்வு எழுந்ததும்‌, இவை தூண்டப்பட்டு செக்ஸ்‌ உறுப்புகளில்‌ அதிக ரத்த ஓட்டம்‌ பாய்ந்து அது உறவுக்கு தயாராகிறது. இந்த சமயத்தில்‌ வேறு ஏதோ நினைவுகள்‌ மனதை ஆக்கிரமிக்கும்போது மூளையின்‌ தூண்டுதல்‌ தற்காலிகமாக தடைபடுகிறது.

இதன்‌ எதிரொலியாக எல்லாமே கெட்டு விடுகிறது. இப்படி கவனம்‌ சிதறாமல்‌ நிலை நிறுத்துவதுதான்‌ சிகிச்சை. இப்போது ஒவ்வொரு குறைபாட்டுக்கும்‌ என பலவகை மருந்துகள்‌ வந்து விட்டதால்‌ எல்லாம்‌ சுலபமாக முடிகிறது.

ஆனால்‌, மாஸ்டர்ஸ்‌ காலத்தில்‌ இவ்வளவு மருந்துகள்‌ கிடையாது. அதனால்‌ ஒரு டாக்டருக்குரிய தொழில்‌ தர்மத்தை மீறி, அவரது கெளரவத்துக்கே களங்கம்‌ நேர்கிற ஒரு விஷயத்தை அவர்‌ முயன்று பார்த்தார்‌.

தம்பதிகளாக வருகிறவர்களுக்கு இரண்டு வார சிகிச்சை ஓகே! திருமணமாகாத ஒருவரோ, மனைவியை இந்த பிரச்னையால்‌ பிரிந்து தனியாக வாழும்‌ நிலையிலிருக்கும்‌ ஆணோ இந்த சிகிச்சைக்கு வந்தால்‌ என்ன செய்வது?

இதற்காகவே “செவிலித்‌ துணை' என்ற புதிய சிகிச்சையை அவர்‌ ஏற்படுத்தினார்‌. இதற்காக மாஸ்டர்ஸ்‌ பத்திரிகைகளில்‌ விளம்பரம்‌ கொடுத்து சில பெண்களையும்‌, ஆண்களையும்‌ தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்தார்‌. இந்த தொழிலுக்கு வரும்‌ அவர்கள்‌ திருமணம்‌ ஆகாதவர்களாக இருக்க வேண்டும்‌ அல்லது விவாகரத்து பெற்றவர்களாக இருக்க வேண்டும்‌ என்பது அவர்‌ விதித்த நிபந்தனை.

பிரச்னையோடு ஒருவர்‌ வந்தால்‌ அவரிடம்‌ டாக்டர்‌ முதலில்‌ விசாரிப்பார்‌. அவருக்கு செக்ஸை ஆரம்பிப்பதில்‌ பிரச்னையா, ஆரம்பத்தில்‌ கிளர்ந்த உணர்வுகளை அப்படியே நிலை நிறுத்துவதில்‌ பிரச்னையா, அல்லது உச்சகட்ட இன்பம்‌ கிடைக்கவில்லையா, வழக்கமில்லாத வலி ஏதாவது ஏற்படுகிறதா என்று விசாரிப்பார்‌. அதன்பிறகு செவிலித்‌ துணையை அழைத்து அவரை அந்த கிளையன்ட்டுக்கு அறிமுகம்‌ செய்து வைப்பார்‌ டாக்டர்‌.

அவருக்கு என்ன பிரச்னை... செவிலித்‌ துணை என்ன செய்ய வேண்டும்‌ என்பதை விளக்கமாக சொல்லி விடுவார்‌.

அதன்பிறகு டாக்டர்‌ இல்லாமல்‌ அவர்கள்‌ சந்தித்துக்‌ கொள்வார்கள்‌. ஒவ்வொரு முறையும்‌ இரண்டு மணி நேர பயிற்சி. முதலில்‌ படுக்கை அறைக்கு ரிலாக்ஸாக போக உதவும்‌ சில எளிமையான உடற்பயிற்சிகள்‌ சொல்லித்‌ தரப்படும்‌. பிறகு தன்‌ அந்தரங்க பாகங்கள்‌ எப்படி இருக்கிறது என்பதை தன்‌ உடலில்‌ காட்டி விளக்குவார்‌ செவிலித்‌ துணை.

அதன்பிறகு சும்மா தொட்டுக்‌ கொள்வதிலேயே எப்படி உணர்ச்சிகளைத்‌ தூண்டிவிடுவது என்று பயிற்சி. இந்த பயிற்சிக்குள்‌ இருவருமே அந்தரங்க மாக பேசிக்‌ கொள்ளுமளவுக்கு நெருக்கமாகி விடுவார்கள்‌. நெருக்கம்தானே உணர்ச்சிகளைத்‌ தூண்டிவிடுவதில்‌ பிரதான பங்கு வகிக்கிறது!

இந்த எல்லாம்‌ முடிந்த பிறகு கடைசியாகத்தான்‌ ஆடைகளற்ற உறவு. எல்லாமே ஏழெட்டு தடவை நிகழும்‌ சந்திப்புகளுக்குள்‌ நடந்து முடிந்து அவரது பிரச்னை தீர்ந்துவிடும்‌. மிகச்‌ சிலருக்கு மட்டுமே இன்னும்‌ கொஞ்ச காலம்‌ பிடிக்கும்‌.

(என்னிடம்‌ வந்த ஒருவருக்கு 52 தடவை பயிற்சி கொடுத்த பிறகுதான்‌ பிரச்னை தீர்ந்தது' என்று லிண்டா போயல்ட்ஸ்‌ என்ற செவிலித்‌ துணை தன்‌ அனுபவக்‌ கதைகளை எழுதும்போது குறிப்பிட்டு இருந்தார்‌. அநேகமாக இவர்தான்‌ அதிக நேரம்‌ எடுத்துக்‌ கொண்ட நபராக இருக்கும்‌!)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top