"வில்லனின் வீணையவள் "
அடை மழை,இரவோடு இருளும் போட்டியிட்டுக்கொண்டிருக்கும் நேரமது.
நிலவும் பயந்து மேகத்துள் ஒளிந்துக் கொள்ள,செயற்கை ஒளிகளும் தன் உயிர் நிறுத்திட நினைத்து விட்டு விட்டு ஒளிரும் ஒளியானது அதன் நிறம் கொண்டு திகிலை உண்டு செய்ய,எங்கும் இருளும் அதன் கறுமையும் நெடுஞ்சாலை எங்கிலும் மின்மினியாய் ஒருசில வாகனங்கள் வந்து செல்ல அதோடு சேர்ந்த கடுங்காற்றும் அவளைச் சுற்றி சத்தமிட்டு கொண்டிருந்தது.
அமைதிப்பெண்ணவள் எங்கனம் தாங்குவாள்?
அவள் கண்களில் கண்டதென்னவோ அச்சத்தின் உச்சம்.
மழையில் நனைந்துவிட்ட பறவையாய் சிறகை விரித்து பறந்திட தவிக்க,
அவள் மேல்,இயற்கை சற்று இரக்கம் தான் போலும்.
தாய் பறவையாய் ஓர் காவலன் அங்கே…
அவனோ அறியான் அவள் சிறகொடிந்த பறவையென.
தன் பிறப்பின் முதல் பார்த்ததென்னவோ தன் இல்ல நாயகன் தனக்கு ஓர் வில்லனாய்.
வில்லனே ஆனாலும் அவளுக்கு மட்டுமல்ல,அனைத்து உயிர்களுக்கும் அவர்களது இல்லத் தலைவன் தானே நாயகன்.
இல்ல நாயகனை விரும்பிய மனம் தன் கனவுநாயகனை அதைக்கொண்டு ஆசைக்கொள்ள,அவன் மனம் மட்டும் தன்னை கொள்ளைக்கொள்ளும் பாசத்தை வழங்கிட வேண்டும் என்று நினைத்தாள்.
நினைந்ததென்னவோ ராட்சசன் உருவில் ஓர் அழகிய மனம் படைத்த காதலன்.
வந்ததென்னவோ எந்த பெண்ணும் மயங்கிவிடும் புன்னகையோடு ராட்சனின் மனம் படைத்த தேவன்.
யாரிடம் சேர்ந்தாள்?
யார் துணை தந்தார்?
யாருக்கு யாரோ?
விதி உன்னை எவரிடமும் கொண்டு சேர்க்குமோ?
சீக்கிரமே தெரிந்துகொள்வாய்...காத்திரு.
காலங்கள் உனக்காகவே.
"உன் அழகுக் கண்களுக்கு,உன் குணம் பொருந்தவில்லையடா… காதல் தேவனே! - நீ எனக்கு மட்டும் வில்லனா?"
அடை மழை,இரவோடு இருளும் போட்டியிட்டுக்கொண்டிருக்கும் நேரமது.
நிலவும் பயந்து மேகத்துள் ஒளிந்துக் கொள்ள,செயற்கை ஒளிகளும் தன் உயிர் நிறுத்திட நினைத்து விட்டு விட்டு ஒளிரும் ஒளியானது அதன் நிறம் கொண்டு திகிலை உண்டு செய்ய,எங்கும் இருளும் அதன் கறுமையும் நெடுஞ்சாலை எங்கிலும் மின்மினியாய் ஒருசில வாகனங்கள் வந்து செல்ல அதோடு சேர்ந்த கடுங்காற்றும் அவளைச் சுற்றி சத்தமிட்டு கொண்டிருந்தது.
அமைதிப்பெண்ணவள் எங்கனம் தாங்குவாள்?
அவள் கண்களில் கண்டதென்னவோ அச்சத்தின் உச்சம்.
மழையில் நனைந்துவிட்ட பறவையாய் சிறகை விரித்து பறந்திட தவிக்க,
அவள் மேல்,இயற்கை சற்று இரக்கம் தான் போலும்.
தாய் பறவையாய் ஓர் காவலன் அங்கே…
அவனோ அறியான் அவள் சிறகொடிந்த பறவையென.
தன் பிறப்பின் முதல் பார்த்ததென்னவோ தன் இல்ல நாயகன் தனக்கு ஓர் வில்லனாய்.
வில்லனே ஆனாலும் அவளுக்கு மட்டுமல்ல,அனைத்து உயிர்களுக்கும் அவர்களது இல்லத் தலைவன் தானே நாயகன்.
இல்ல நாயகனை விரும்பிய மனம் தன் கனவுநாயகனை அதைக்கொண்டு ஆசைக்கொள்ள,அவன் மனம் மட்டும் தன்னை கொள்ளைக்கொள்ளும் பாசத்தை வழங்கிட வேண்டும் என்று நினைத்தாள்.
நினைந்ததென்னவோ ராட்சசன் உருவில் ஓர் அழகிய மனம் படைத்த காதலன்.
வந்ததென்னவோ எந்த பெண்ணும் மயங்கிவிடும் புன்னகையோடு ராட்சனின் மனம் படைத்த தேவன்.
யாரிடம் சேர்ந்தாள்?
யார் துணை தந்தார்?
யாருக்கு யாரோ?
விதி உன்னை எவரிடமும் கொண்டு சேர்க்குமோ?
சீக்கிரமே தெரிந்துகொள்வாய்...காத்திரு.
காலங்கள் உனக்காகவே.
"உன் அழகுக் கண்களுக்கு,உன் குணம் பொருந்தவில்லையடா… காதல் தேவனே! - நீ எனக்கு மட்டும் வில்லனா?"