வணக்கம் டியர்ஸ்,
அத்தியாயம் 6
சென்னை செண்ட்ரல் ரயில் நிலைய பத்தாவது ப்ளாட்பாரத்தில் நின்றிருந்தாள் தேவதா. அவளோடு ரயில் வரும் பாதையைப் பார்த்தபடி நின்றிருந்தான் சங்கத்தமிழன்.
அவனது கையைப் பற்றிய தேவதா,
“வீட்டுல திட்ட மாட்டாங்களா சங்கு?” எனக் கேட்டாள்.
“என்னையா? திட்டறதா? அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்னைப் பார்த்து விளையாட்டா திட்டக் கூட மனசு வராது ஏஞ்சல்! அவங்க ப்ரின்ஸ் நானு! எது செஞ்சாலும் அதுக்கு காரணம் இருக்கும்னு புரியும்! உன்னைப் பத்தியும் அவங்களுக்குத் தெரியும்! ராத்திரி ட்ரைன்ல எப்படி உன்னைத் தனியா கோவை வரைக்கும் அனுப்பறது! அதான் நான் கூடப் போய்ட்டு வரேன்னு சொல்லிட்டேன்! ஓகேன்னு தலையாட்டிட்டாங்க! என் தங்கச்சி மலர் இருக்காளே, அவளும் வரேன்னு நின்னா! நான் என்ன ட்ரீப்கா போறேன்! இன்னொரு தடவை கூட்டிப் போறேன்னு சொல்லிட்டு வந்தேன்” எனப் புன்னகைத்தான் இவன்.
“உன்னோட ஃபேமிலி செம்ம ஸ்வீட் சங்கு”
“உதை வாங்கப் போற நீ” எனக் கடுகடுத்தான் இவன்.
“ஏன்???”
“அது என்ன உன்னோட ஃபேமிலி? நம்மளோட ஃபேமிலினு சொல்லு!” என்றான் இவன்.
முகம் மலர, இன்னும் நெருங்கி நின்றாள் இவள்.
“கீப் டிஸ்டன்ஸ்!” என முறுக்கிக் கொண்டான் தமிழ்.
“சங்கு! என் செல்லம்ல! ஐம் சாரி! இனிமே இப்படி பிரிச்சுப் பேச மாட்டேன்!”
“நான் சட்டுன்னு கமிட் ஆக மாட்டேன் ஏஞ்சல்! கமிட் ஆகிட்டா ஹண்ட்ரெட் பெர்ஸண்ட் குடுப்பேன்! வேலையாகட்டும், இல்ல உறவாகட்டும்!”
முந்தைய தினம் மோதிரம் மாற்றி காதல் சொல்லி முடித்து, இவள் ஹாஸ்டல் அறைக்குப் போன நொடி, இவளது அப்பா தேவராஜீடம் இருந்து போன் வந்திருந்தது. தாத்தா இவளைப் பார்க்க ஆசைப்படுவதாகவும், மறுநாளே கிளம்பி வா என்றும் சொல்லி அழைப்பை துண்டித்து விட்டார் அவர்.
உடனே இவள் சங்கத்தமிழனுக்கு அழைத்து விட்டாள்.
“என்னடா! அதுக்குள்ள என்னை மிஸ் பண்ணுறியா?”
“என் பக்கத்துல இல்லாத எல்லா நொடியும் உன்னை மிஸ் பண்ணிட்டுத்தான் இருப்பேன் சங்கு! இது வேற விசயம்”
“என்னாச்சு ஏஞ்சல்?”
“அப்பா நாளைக்கே கிளம்பி கோவைக்கு வர சொல்லிருக்காரு! குரல் வேற சரியில்ல அவருக்கு! ட்ரேன் டிக்கேட் வாங்கற முன்னுக்கு உன் கிட்ட சொல்லிடனும்னுதான் போன் பண்ணேன்”
“மாமா ஏன் திடீர்னு வர சொல்லிருக்காரு?”
“மாமாவா?” என அதிர்ச்சியானாள் இவள்.
அந்த பக்கம் சற்று நேரம் அமைதி.
“சங்கு?”
“ஹ்ம்ம்”
“என்ன சைலண்டாகிட்டீங்க?”
“உங்கப்பாவ நான் மாமான்னு கூப்பிட்டதுல உனக்கு ஏன் இவ்ளோ அதிர்ச்சி?”
“இப்போத்தான் மோதிரம் போட்டு விட்ட நீ! உடனே எங்கப்பாவ மாமான்னு நீ மென்ஷன் பண்ணா எனக்கு ஜெர்க் ஆகுமா ஆகாதா!!! கொஞ்சம் டைம் குடு மேன்”
“நான் படிச்சு முடிக்கனும், அப்பா கன்சர்ன்ல புகுந்து செட்டிலாகனும்! நீயும் படிச்சு முடிக்கனும்! உனக்குப் பிடிச்சது போல எதாவது வேலைக்கு சேரனும்! நீ செட்டிலான அடுத்த செகண்டே நாம ரெண்டு பேரும் லீகலா ஃபேமிலியா ஆகற வேலையப் பார்க்க ஆரம்பிச்சிடுவேன்! அதன் பிறகு இந்த சாங்கியம், சடங்கு, தாலி, இதெல்லாம் நம்ம பெத்தவங்களோட சாய்ஸ்! அதெல்லாம் நடக்க பல வருசங்கள் எடுக்கலாம்! நாம இப்போதிலிருந்தே இதுக்கெல்லாம் நம்மள தயார்ப்படுத்திக்கனும் ஏஞ்சல்! இந்த நொடி என் மனசுல நீ என்னோட மனைவியாத்தான் பதிஞ்சு இருக்க! அதை காட்டத்தான் உன்னோட பிள்ளையார் முன்னாடி நமக்குள்ளயே ஒரு குட்டி ஒப்பந்தமா மோதிரம் மாத்திக்கிட்டோம்! சோ, நான் மனைவியா நெனைக்கற உன்னோட அப்பா எனக்கு மாமாத்தானே?” எனப் பெரிதாய் விளக்கம் கொடுக்க, இவளுக்கு மனம் நெகிழ்ந்து விட்டது.
“சங்கு!”
“ஹ்ம்ம்”
“நான் வேணும்னா நம்ம உறவுக்கு ஆரம்பப்புள்ளிய வச்சிருக்கலாம். ஆனா நீதான் அதை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துட்டுப் போயிருக்க! எனக்கு சந்தோஷத்துல பேச்சே வரல சங்கு!”
“இனிமே எதிலயும் என்னைத் தள்ளி வைக்கக் கூடாது! ஊருக்குப் போறேன்னு லாஸ்ட் மினிட்ல சொல்லாம, டிக்கேட் போடற முன்னே கால் பண்ணதுனால உன்னை மன்னிச்சி விடறேன்! சரி விஷயத்துக்கு வா! மாமா எதுக்கு வர சொன்னாரு?”
“தாத்தாவுக்கு அடிக்கடி உடம்பு முடியாம போகும்! வயசாச்சில்ல! எப்பவும் உள்ளதுதானேன்னு தாத்தாவுக்கு இப்படி இருக்குமான்னு மட்டும் போன் போட்டு சொல்வாரு! இந்த முறைதான் வர சொல்லுறாரு! கொஞ்சம் சீரியஸ் போல! ஆனா என் கிட்ட காட்டிக்கல உங்க மாமா”
உங்க மாமா எனும் பதத்தில் புன்னகை வந்தது இவனுக்கு.
“சரி! நான் டிக்கேட் போடறேன் தேவதா”
“ஏன்? இத்தனை வருஷம் நான் டிக்கேட் போட்டு போய்ட்டு வரலயா? முன்னாடியே சொல்லிருக்கேன்! நான் குடுக்கனும், நீ எடுக்கனும் பாலிஸிலாம் வேணாம்னு”
“நமக்கு டிக்கேட் நான் எடுக்கறேன்! சாப்பாடு வேணும்னா நீ பார்த்துக்கோ”
“நமக்கா?”
“எஸ்! நமக்குத்தான்! தனியா போக வேணாமே! நானும் துணைக்கு வரேன்”
“ஹலோ!!!!”
“புரியுது! இத்தனை நாளா தனியாத்தானே போனேன்!!! அதானே!!! அப்போ நீ தேவதா தேவராஜ்! இப்போ தேவதா சங்கத்தமிழன்! தனியாலாம் அனுப்ப முடியாது”
“ஓவர் பிடிவாதம் சங்கு உனக்கு”
“இருந்துட்டுப் போகுது”
“சரி வாங்க! டிக்கேட் போட்டுட்டு டீட்டேய்ல் அனுப்புங்க! பாய்”
“லவ் யூ ஏஞ்சல்”
“சொல்லமாட்டேன்! கோபமா இருக்கேன்”
அந்தப் பக்கம் சிரிப்புச் சத்தம் கேட்டது.
“நான் செம்ம அடமண்ட் தெரியுமா! உனக்காகத்தான் நெறைய விட்டுக் குடுக்கறேன் தேவதா! ப்ளீஸ்! கோபப்படாத!”
“இண்டிபெண்டனா இருக்கனும்னு பழக்கப்படுத்தப்பட்டிருக்கேன் சங்கு! சட்டுன்னு டிபெண்டனா இருக்க வரல! ஆனாலும் எனக்குன்னு செய்ய ஆள் இருக்குன்னு நெனைக்கறப்போ சந்தோஷமாத்தான் இருக்கு! கிவ் மீ சம் டைம் டு அட்ஜஸ்ட் சங்கு”
“கண்டிப்பாடா! இப்போ லவ் யூ சொல்லு”
“ஐ லவ் யூ சங்கு” எனப் புன்னகையுடன் அழைப்பைத் துண்டித்திருந்தாள்.
இவள் சங்கத்தமிழனின் தாடையைப் பிடித்துக் கொஞ்சி கெஞ்சி மலை இறக்கவும், சேரன் எக்ஸ்பிரஸ் வந்து சேரவும் சரியாக இருந்தது. பண்டிகை தினங்களாக இல்லாமல் இருக்க, பயண சீட்டு எடுப்பதில் சிரமம் இருக்கவில்லை இவனுக்கு. ஏசி கோச்சில் மேலும் கீழும் பெர்த் எடுத்திருந்தான் இருவருக்கும். உள்ளே சென்று சீட்டுக்குக் கீழே பேக்கை வைத்து விட்டு, ஒரே இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள் இருவரும்.
கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். இவர்கள் பக்கத்து பெர்த் இரண்டுமே காலியாகத்தான் இருந்தது. ஆனால் நடைப்பாதைக்கு அந்தப் பக்கம் இருந்த சீட்டில் வயதான கணவன் மனைவி இருவர் வந்து அமர்ந்தார்கள். இவர்களைப் பார்த்து அவர்கள் புன்னகைக்க, இவர்களும் புன்னகைத்து வைத்தார்கள். சிறிது நேரம், எந்த ஊர் எங்கே போகிறார்கள் எனப் பேச்சு வார்த்தை நடந்தது. தன் மனைவி என்றே தேவதாவை அறிமுகப்படுத்தினான் சங்கத்தமிழன். அவனது உரிமை உணர்வு இவளுக்கும் இனிக்கவே செய்தது.
டி.டி.ஆர் வந்து பயணச் சீட்டைப் பரிசோதித்து விட்டு செல்லும் வரை காத்திருந்தார்கள் அந்த வயதானவர்கள். அதன் பிறகு அந்த கணவர் மேல் பெர்த்தில் படுத்துக் கொள்ள, மனைவி கீழ் பெர்த்தில் படுத்துக் கொண்டார். சற்று நேரத்தில் மெல்லிய குறட்டைச் சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது.
இவன் தனது பேகில் இருந்து, கனமான சால்வை ஒன்றை எடுத்து, தேவதாவுக்குப் போர்த்தி விட்டான். அவளோ அவளது பேக்கில் இருந்து தனது ஸ்வெட்டரை எடுத்து அவன் மேல் போட்டு நீளக் கையை கழுத்தில் கட்டி விட்டாள். மீண்டும் இருவரும் அருகருகே அமர்ந்து கொண்டார்கள்.
“நாமளும் பல வருஷம் கடந்து இப்படி ஆகிருவோம்ல” என அந்த வயதானவர்களைக் காட்டிக் கேட்டான் சங்கத்தமிழன்.
“ஆக மாட்டோம்”
“ஏன்டி?”
“அந்த பாட்டி, தாத்தாவுக்கு குளிருமேன்னு ஒரு ஸ்வெட்டர் கூட எடுத்துக் குடுக்கல! அந்த தாத்தாவோ, பாட்டிக்கு சீட்ட அட்ஜஸ்ட் பண்ணி படுத்துக்க ஹெல்ப் பண்ணல! அவங்கவங்க வேலைய அவங்கவங்க பார்க்கறாங்க! நாம அப்படி இருக்க மாட்டோம் சங்கு டியர்! எனக்கானத எல்லாத்தையும் செய்யனும்னு நீ ஒத்தக் காலுல நிப்ப! என் சங்குக்குத் தேவையானத நான்தான் செய்வேன்னு நானும் நிப்பேன்!” எனச் சொல்லி முறுவலித்தாள் தேவதா.
இவனும் புன்னகையுடன் அவள் கைப்பற்றிக் கொண்டான்.
“பசிக்குதா சங்கு?”
அத்தியாயம் 6
சென்னை செண்ட்ரல் ரயில் நிலைய பத்தாவது ப்ளாட்பாரத்தில் நின்றிருந்தாள் தேவதா. அவளோடு ரயில் வரும் பாதையைப் பார்த்தபடி நின்றிருந்தான் சங்கத்தமிழன்.
அவனது கையைப் பற்றிய தேவதா,
“வீட்டுல திட்ட மாட்டாங்களா சங்கு?” எனக் கேட்டாள்.
“என்னையா? திட்டறதா? அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்னைப் பார்த்து விளையாட்டா திட்டக் கூட மனசு வராது ஏஞ்சல்! அவங்க ப்ரின்ஸ் நானு! எது செஞ்சாலும் அதுக்கு காரணம் இருக்கும்னு புரியும்! உன்னைப் பத்தியும் அவங்களுக்குத் தெரியும்! ராத்திரி ட்ரைன்ல எப்படி உன்னைத் தனியா கோவை வரைக்கும் அனுப்பறது! அதான் நான் கூடப் போய்ட்டு வரேன்னு சொல்லிட்டேன்! ஓகேன்னு தலையாட்டிட்டாங்க! என் தங்கச்சி மலர் இருக்காளே, அவளும் வரேன்னு நின்னா! நான் என்ன ட்ரீப்கா போறேன்! இன்னொரு தடவை கூட்டிப் போறேன்னு சொல்லிட்டு வந்தேன்” எனப் புன்னகைத்தான் இவன்.
“உன்னோட ஃபேமிலி செம்ம ஸ்வீட் சங்கு”
“உதை வாங்கப் போற நீ” எனக் கடுகடுத்தான் இவன்.
“ஏன்???”
“அது என்ன உன்னோட ஃபேமிலி? நம்மளோட ஃபேமிலினு சொல்லு!” என்றான் இவன்.
முகம் மலர, இன்னும் நெருங்கி நின்றாள் இவள்.
“கீப் டிஸ்டன்ஸ்!” என முறுக்கிக் கொண்டான் தமிழ்.
“சங்கு! என் செல்லம்ல! ஐம் சாரி! இனிமே இப்படி பிரிச்சுப் பேச மாட்டேன்!”
“நான் சட்டுன்னு கமிட் ஆக மாட்டேன் ஏஞ்சல்! கமிட் ஆகிட்டா ஹண்ட்ரெட் பெர்ஸண்ட் குடுப்பேன்! வேலையாகட்டும், இல்ல உறவாகட்டும்!”
முந்தைய தினம் மோதிரம் மாற்றி காதல் சொல்லி முடித்து, இவள் ஹாஸ்டல் அறைக்குப் போன நொடி, இவளது அப்பா தேவராஜீடம் இருந்து போன் வந்திருந்தது. தாத்தா இவளைப் பார்க்க ஆசைப்படுவதாகவும், மறுநாளே கிளம்பி வா என்றும் சொல்லி அழைப்பை துண்டித்து விட்டார் அவர்.
உடனே இவள் சங்கத்தமிழனுக்கு அழைத்து விட்டாள்.
“என்னடா! அதுக்குள்ள என்னை மிஸ் பண்ணுறியா?”
“என் பக்கத்துல இல்லாத எல்லா நொடியும் உன்னை மிஸ் பண்ணிட்டுத்தான் இருப்பேன் சங்கு! இது வேற விசயம்”
“என்னாச்சு ஏஞ்சல்?”
“அப்பா நாளைக்கே கிளம்பி கோவைக்கு வர சொல்லிருக்காரு! குரல் வேற சரியில்ல அவருக்கு! ட்ரேன் டிக்கேட் வாங்கற முன்னுக்கு உன் கிட்ட சொல்லிடனும்னுதான் போன் பண்ணேன்”
“மாமா ஏன் திடீர்னு வர சொல்லிருக்காரு?”
“மாமாவா?” என அதிர்ச்சியானாள் இவள்.
அந்த பக்கம் சற்று நேரம் அமைதி.
“சங்கு?”
“ஹ்ம்ம்”
“என்ன சைலண்டாகிட்டீங்க?”
“உங்கப்பாவ நான் மாமான்னு கூப்பிட்டதுல உனக்கு ஏன் இவ்ளோ அதிர்ச்சி?”
“இப்போத்தான் மோதிரம் போட்டு விட்ட நீ! உடனே எங்கப்பாவ மாமான்னு நீ மென்ஷன் பண்ணா எனக்கு ஜெர்க் ஆகுமா ஆகாதா!!! கொஞ்சம் டைம் குடு மேன்”
“நான் படிச்சு முடிக்கனும், அப்பா கன்சர்ன்ல புகுந்து செட்டிலாகனும்! நீயும் படிச்சு முடிக்கனும்! உனக்குப் பிடிச்சது போல எதாவது வேலைக்கு சேரனும்! நீ செட்டிலான அடுத்த செகண்டே நாம ரெண்டு பேரும் லீகலா ஃபேமிலியா ஆகற வேலையப் பார்க்க ஆரம்பிச்சிடுவேன்! அதன் பிறகு இந்த சாங்கியம், சடங்கு, தாலி, இதெல்லாம் நம்ம பெத்தவங்களோட சாய்ஸ்! அதெல்லாம் நடக்க பல வருசங்கள் எடுக்கலாம்! நாம இப்போதிலிருந்தே இதுக்கெல்லாம் நம்மள தயார்ப்படுத்திக்கனும் ஏஞ்சல்! இந்த நொடி என் மனசுல நீ என்னோட மனைவியாத்தான் பதிஞ்சு இருக்க! அதை காட்டத்தான் உன்னோட பிள்ளையார் முன்னாடி நமக்குள்ளயே ஒரு குட்டி ஒப்பந்தமா மோதிரம் மாத்திக்கிட்டோம்! சோ, நான் மனைவியா நெனைக்கற உன்னோட அப்பா எனக்கு மாமாத்தானே?” எனப் பெரிதாய் விளக்கம் கொடுக்க, இவளுக்கு மனம் நெகிழ்ந்து விட்டது.
“சங்கு!”
“ஹ்ம்ம்”
“நான் வேணும்னா நம்ம உறவுக்கு ஆரம்பப்புள்ளிய வச்சிருக்கலாம். ஆனா நீதான் அதை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துட்டுப் போயிருக்க! எனக்கு சந்தோஷத்துல பேச்சே வரல சங்கு!”
“இனிமே எதிலயும் என்னைத் தள்ளி வைக்கக் கூடாது! ஊருக்குப் போறேன்னு லாஸ்ட் மினிட்ல சொல்லாம, டிக்கேட் போடற முன்னே கால் பண்ணதுனால உன்னை மன்னிச்சி விடறேன்! சரி விஷயத்துக்கு வா! மாமா எதுக்கு வர சொன்னாரு?”
“தாத்தாவுக்கு அடிக்கடி உடம்பு முடியாம போகும்! வயசாச்சில்ல! எப்பவும் உள்ளதுதானேன்னு தாத்தாவுக்கு இப்படி இருக்குமான்னு மட்டும் போன் போட்டு சொல்வாரு! இந்த முறைதான் வர சொல்லுறாரு! கொஞ்சம் சீரியஸ் போல! ஆனா என் கிட்ட காட்டிக்கல உங்க மாமா”
உங்க மாமா எனும் பதத்தில் புன்னகை வந்தது இவனுக்கு.
“சரி! நான் டிக்கேட் போடறேன் தேவதா”
“ஏன்? இத்தனை வருஷம் நான் டிக்கேட் போட்டு போய்ட்டு வரலயா? முன்னாடியே சொல்லிருக்கேன்! நான் குடுக்கனும், நீ எடுக்கனும் பாலிஸிலாம் வேணாம்னு”
“நமக்கு டிக்கேட் நான் எடுக்கறேன்! சாப்பாடு வேணும்னா நீ பார்த்துக்கோ”
“நமக்கா?”
“எஸ்! நமக்குத்தான்! தனியா போக வேணாமே! நானும் துணைக்கு வரேன்”
“ஹலோ!!!!”
“புரியுது! இத்தனை நாளா தனியாத்தானே போனேன்!!! அதானே!!! அப்போ நீ தேவதா தேவராஜ்! இப்போ தேவதா சங்கத்தமிழன்! தனியாலாம் அனுப்ப முடியாது”
“ஓவர் பிடிவாதம் சங்கு உனக்கு”
“இருந்துட்டுப் போகுது”
“சரி வாங்க! டிக்கேட் போட்டுட்டு டீட்டேய்ல் அனுப்புங்க! பாய்”
“லவ் யூ ஏஞ்சல்”
“சொல்லமாட்டேன்! கோபமா இருக்கேன்”
அந்தப் பக்கம் சிரிப்புச் சத்தம் கேட்டது.
“நான் செம்ம அடமண்ட் தெரியுமா! உனக்காகத்தான் நெறைய விட்டுக் குடுக்கறேன் தேவதா! ப்ளீஸ்! கோபப்படாத!”
“இண்டிபெண்டனா இருக்கனும்னு பழக்கப்படுத்தப்பட்டிருக்கேன் சங்கு! சட்டுன்னு டிபெண்டனா இருக்க வரல! ஆனாலும் எனக்குன்னு செய்ய ஆள் இருக்குன்னு நெனைக்கறப்போ சந்தோஷமாத்தான் இருக்கு! கிவ் மீ சம் டைம் டு அட்ஜஸ்ட் சங்கு”
“கண்டிப்பாடா! இப்போ லவ் யூ சொல்லு”
“ஐ லவ் யூ சங்கு” எனப் புன்னகையுடன் அழைப்பைத் துண்டித்திருந்தாள்.
இவள் சங்கத்தமிழனின் தாடையைப் பிடித்துக் கொஞ்சி கெஞ்சி மலை இறக்கவும், சேரன் எக்ஸ்பிரஸ் வந்து சேரவும் சரியாக இருந்தது. பண்டிகை தினங்களாக இல்லாமல் இருக்க, பயண சீட்டு எடுப்பதில் சிரமம் இருக்கவில்லை இவனுக்கு. ஏசி கோச்சில் மேலும் கீழும் பெர்த் எடுத்திருந்தான் இருவருக்கும். உள்ளே சென்று சீட்டுக்குக் கீழே பேக்கை வைத்து விட்டு, ஒரே இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள் இருவரும்.
கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். இவர்கள் பக்கத்து பெர்த் இரண்டுமே காலியாகத்தான் இருந்தது. ஆனால் நடைப்பாதைக்கு அந்தப் பக்கம் இருந்த சீட்டில் வயதான கணவன் மனைவி இருவர் வந்து அமர்ந்தார்கள். இவர்களைப் பார்த்து அவர்கள் புன்னகைக்க, இவர்களும் புன்னகைத்து வைத்தார்கள். சிறிது நேரம், எந்த ஊர் எங்கே போகிறார்கள் எனப் பேச்சு வார்த்தை நடந்தது. தன் மனைவி என்றே தேவதாவை அறிமுகப்படுத்தினான் சங்கத்தமிழன். அவனது உரிமை உணர்வு இவளுக்கும் இனிக்கவே செய்தது.
டி.டி.ஆர் வந்து பயணச் சீட்டைப் பரிசோதித்து விட்டு செல்லும் வரை காத்திருந்தார்கள் அந்த வயதானவர்கள். அதன் பிறகு அந்த கணவர் மேல் பெர்த்தில் படுத்துக் கொள்ள, மனைவி கீழ் பெர்த்தில் படுத்துக் கொண்டார். சற்று நேரத்தில் மெல்லிய குறட்டைச் சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது.
இவன் தனது பேகில் இருந்து, கனமான சால்வை ஒன்றை எடுத்து, தேவதாவுக்குப் போர்த்தி விட்டான். அவளோ அவளது பேக்கில் இருந்து தனது ஸ்வெட்டரை எடுத்து அவன் மேல் போட்டு நீளக் கையை கழுத்தில் கட்டி விட்டாள். மீண்டும் இருவரும் அருகருகே அமர்ந்து கொண்டார்கள்.
“நாமளும் பல வருஷம் கடந்து இப்படி ஆகிருவோம்ல” என அந்த வயதானவர்களைக் காட்டிக் கேட்டான் சங்கத்தமிழன்.
“ஆக மாட்டோம்”
“ஏன்டி?”
“அந்த பாட்டி, தாத்தாவுக்கு குளிருமேன்னு ஒரு ஸ்வெட்டர் கூட எடுத்துக் குடுக்கல! அந்த தாத்தாவோ, பாட்டிக்கு சீட்ட அட்ஜஸ்ட் பண்ணி படுத்துக்க ஹெல்ப் பண்ணல! அவங்கவங்க வேலைய அவங்கவங்க பார்க்கறாங்க! நாம அப்படி இருக்க மாட்டோம் சங்கு டியர்! எனக்கானத எல்லாத்தையும் செய்யனும்னு நீ ஒத்தக் காலுல நிப்ப! என் சங்குக்குத் தேவையானத நான்தான் செய்வேன்னு நானும் நிப்பேன்!” எனச் சொல்லி முறுவலித்தாள் தேவதா.
இவனும் புன்னகையுடன் அவள் கைப்பற்றிக் கொண்டான்.
“பசிக்குதா சங்கு?”