வணக்கம் டியர்ஸ்,
அத்தியாயம் 8
“ஏஞ்சல்!”
“ஹ்ம்ம்ம்”
“என்ன ஒரே யோசனையா இருக்க நீ?”
“ஒன்னுமில்ல சங்கு! சும்மா ஏதேதோ நினைவுகள்.”
அன்று படிக்க வேண்டுமென இவனுக்கு மேசேஜ் போட்டு விட்டு நூலகத்துக்கு வந்திருந்தாள் தேவதா.
கல்லூரி ஆரம்பிக்கும் முன்னும் முடிந்த பின்னும் மட்டுமே அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வார்கள்! சனிக்கிழமைகளில் பல சமயம் இவனுக்கு ப்ராஜெக்ட் வேலைகள் இருக்கும். அவளுக்கும் சில சமயங்களில் அந்நாளில் காலை வகுப்புகள் இருக்கும். அதோடு அந்த நாளில்தான் தேவையானப் பொருட்களை வாங்கி வர மேகலாவுடன் வெளியே செல்வாள். ஞாயிற்றுக் கிழமைகளில் தேவதாவுக்கு துணிகளைத் துவைக்க, முகம் மற்றும் தலை முடி பராமரிப்பு என அதற்கே நேரம் சரியாய் இருக்கும்.
மாதத்திற்கு இரு ஞாயிறாவது, அனிதா சமைத்ததை எடுத்து வந்து அவளுக்கும் அவளது தோழி மேகலாவுக்கும் கொடுத்து விட்டுப் போவான் சங்கத்தமிழன்.
“ஏன் சங்கு சிரமப்படறீங்க?” எனக் கேட்டால்,
“ஞாயிறு வீட்டுல சமையல் தடபுடல் படும் தேவதா. அப்பா அன்னைக்குத்தான் ஃபுல் டே வீட்டுல இருப்பாரு! அதனால அம்மா ஜமாய்ச்சிடுவாங்க! ஒரு காலத்துல ஃபுல் கட்டு கட்டிட்டு ஜாலியா வீட்டுல உள்ளவங்க கூட அவுட்டிங் போவேன். இப்போலாம் எதாச்சும் ஸ்பெஷல் சாப்பாடு இருந்தா, உன் ஞாபகம் வந்திடுது! ஹாஸ்டல்ல வெந்ததையும் வேகாததையும் நீ சாப்பிட்டு இருக்கறப்போ, நான் மட்டும் நல்லா சாப்பிடறதான்னு ஒப்பமாட்டுது ஏஞ்சல். எவ்ரி சண்டே கூட கொண்டு வந்து குடுப்பேன்! நீதான் வேணாம்னு என்னைத் தடுத்து வச்சிருக்க!” என்பான்.
நூலகத்துக்கு வந்திருந்தவளைக் காண வந்திருந்தான் சங்கத்தமிழன். அவளும் படிக்க வேண்டும், அவனுக்கும் அவளைப் பார்க்க வேண்டும்! அவள் படித்துக் கொண்டிருக்க, அருகிலேயே அமர்ந்து அமைதியாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். படிப்பதும் நோட்ஸ் எடுப்பதுமாக அவள் இருந்தாலும், ஏதோ சரியில்லை எனப் புரிந்தது இவனுக்கு! அதனால்தான் என்ன யோசனை எனக் கேட்டான். அவளிடம் இருந்து மழுப்பலான பதில் வரவும்,
“வெளிய போய் பேசலாம் வா” என அழைத்தான்.
“படிக்கனும் சங்கு”
“நானும் பார்த்துட்டுத்தான் இருக்கேன்! இவ்ளோ நேரம் ஒரு பக்கம் கூட நீ முழுசா படிக்கல! எப்பவும் உன் பக்கத்துல நான் உட்கார்ந்திருந்தா, படிக்கற பாடத்தோட சாராம்சத்த மெல்லியக் குரல்ல எனக்கு விளக்கிட்டே நோட்ஸ் எழுதுவ! இன்னிக்கு உன்னோட கான்சேண்ட்ரேஷன் மிஸ்ஸிங்! சும்மா இங்க உட்கார்ந்து டைம் வேஸ்ட் பண்ணாம ஹாஸ்டல்ல போய் படி! இப்போ வா” என வலுக் கட்டாயமாக வெளியே அழைத்து வந்தான்.
அவர்கள் எப்போதும் அமரும் மரத்தடியில் அன்றும் அமர்ந்தார்கள்.
“அப்பாவ மிஸ் பண்ணுறியாடா?”
இல்லையெனத் தலையாட்டியவள்,
“அப்பா இறந்துட்டதா நான் நெனைக்கறது இல்ல சங்கு! கோவைல எப்பவும் போல அவர் சேலை வியாபாரம் செஞ்சிகிட்டு பத்திரமா இருக்கறதாத்தான் என் மூளையையும் மனசையும் ஏமாத்தி வச்சிருக்கேன்! பல வருஷமா அவரை விட்டுத் தள்ளித்தானே இருந்திருக்கேன்! சோ இப்பவும் அப்படித்தான் இருக்கறதா நெனைச்சிக்கறேன்! அது கஷ்டமாவும் இல்ல” என்றாள் பெண்.
பெருமூச்சுடன் அவளது கையைப் பற்றி அழுத்திக் கொடுத்தான் இவன்.
“வேற என்ன பிரச்சனை? என் கிட்ட எதாச்சும் சொல்லனுமாடா?” எனக் கேட்டான் சங்கத்தமிழன்.
நெற்றியைத் தேய்த்துக் கொண்டவள்,
“அப்படி ஒன்னும் இல்ல சங்கு” என்றாள்.
“உன் கிளாஸ் மேட் உமேஷ் பத்தி கூட சொல்ல வேண்டாமா என் கிட்ட?”
அதிர்ச்சியாய் அவனைப் பார்த்தாள் தேவதா.
“எப்படித் தெரியும்?”
“உன்னை என் வைஃப்னு சும்மா சொல்லி வச்சேன்னு நெனைக்கறியா தேவதா? உன் பெர்சனல் ஸ்பேஸ்ல தலையிடாம ஒதுங்கி நிக்கறதுனால, பெர்சனலா உன்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்காம இருப்பேனா?” எனக் கேட்டான் இவன்.
அமைதியாக இருந்தாள் தேவதா.
“நீயே என் கிட்ட சொல்லுவன்னு வெய்ட் பண்ணிட்டே இருந்தேன்டா! தள்ளி வச்சிட்டப் பார்த்தியா என்னை! மனசு வலிக்குது தேவதா”
“தள்ளி எல்லாம் வைக்கல சங்கு! காலேஜ் லாஸ்ட் இயர்ல, உனக்கு எந்த பிரச்சனையும் வரக் கூடாதுன்னு நெனைச்சித்தான் எதையும் உன் கிட்ட சொல்லல! என் மேல நீ எவ்ளோ போசெசிவ்வா இருக்கன்னு எனக்குத் தெரியாதா! அடிதடின்னு போய்ட்டா, உனக்குத்தான் பிரச்சனையாகிடும் சங்கு! அதான் நானே ஹேண்டில் பண்ண முயற்சி பண்ணேன்” என்றவளுக்குக் கண்கள் கலங்கியது.
“நீ இண்டிபெண்டெண்டா இருக்கனும்னு நினைக்கற பாலிசிய நானும் மதிக்கறேன் ஏஞ்சல். அதனாலத்தான் நீயே ஹேண்டில் பண்ணிக்குவன்னு வெய்ட் பண்ணேன். எப்போ முயற்சி பண்ணேன்னு பாஸ்ட் டென்ஸ்ல சொன்னியோ, அப்பவே உன் கை மீறிப் போய்டுச்சுன்னு புரிஞ்சிருச்சு! இனி நான் பார்த்துக்கறேன்”
“பெருசா பிரச்சனை பண்ணிடாதே சங்கு!”
“டோண்ட் வொரி! இந்த பிசாத்து பையன எல்லாம் நெனச்சி நீ டென்ஸ்ட் ஆகாதே! தலைவலி வந்திடப் போகுது! கோவைல இருந்து வந்ததுல இருந்து அடிக்கடி தலைவலிக்குதுன்னு சொல்லற! நானும் டாக்டர்ட்டலாம் கூட்டிட்டுப் போய்ட்டேன்! ஸ்ட்ரேஸ்னால வந்த தலைவலின்னு சொன்னாருதானே அவரு! இப்போ பாரு, இன்னிக்கு முழுக்க நெத்தியைத் தேய்ச்சுட்டே இருக்க! மருந்து கொண்டு வந்தியா?”
“இருக்கு சங்கு”
“மருந்து போட்டுட்டு, போய் ஹாஸ்டல்ல ரெஸ்ட் எடு தேவதா”
“வேணாம்”
“என்ன வேணாம்?” எனக் கேட்டவன் டென்ஷன் ஆகியிருந்தான்.
“சும்மா மருந்து போடக் கூடாதுடா! அப்புறம் அதுவே அடிக்ட் ஆகிடும்! லேசா வலிச்சா கூட மருந்து போடனும்னு தோணும்!”
“எல்லாத்துக்கும் ஒரு வியாக்கியானம் சொல்லு, பாட்டிக் கிழவி” எனத் திட்டியவன் எழுந்து நின்று அவளது நெற்றியை மிருதுவாக நீவி விட்டான்.
அப்படியே சரிந்து அவனது வயிற்றில் முகத்தைத் புதைத்துக் கொண்டாள் இவள்.
“அச்சோ ஏஞ்சல்! ஆளுங்க நடமாடற இடம்! உரசாம தள்ளுடி!”
“இப்போ என்ன கிஸ்ஸா அடிச்சேன்! ஓவரா பண்ணாதே சங்கு!” என்றவள் அவனை நிமிர்ந்து பார்த்துக் கண்ணடித்தாள்.
விரிந்த புன்னகையுடன் இரு விரலால் அவள் உதட்டைக் கிள்ளி, தன் விரலுக்கே முத்தமிட்டுக் கொண்டான் இவன்.
“சைவ முத்தம் வேணா போ” எனச் சிணுங்கினாள் இவள்.
“அது அதுக்கு நேரமிருக்கு, காலமிருக்கு ஏஞ்சல்!” எனச் சொல்லியவன் குனிந்து அவள் உச்சியில் இதழ் பதித்தான்.
“இப்போ கிளம்பிப் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு” எனப் பிள்ளையார் இருப்பிடம் வரை விட்டு விட்டுப் போனான் சங்கத்தமிழன்.
ஹாஸ்டல் உள்ளே இவள் நுழைய,
“தேவதா!! உனக்கு விசிட்டர் வந்திருக்காங்க” எனக் குரல் கேட்டது.
“விசிட்டரா? என்னைத் தேடி வர அளவுக்கு அப்படி யாரும் இல்லையே” என முணுமுணுத்தபடியே அலுவலக அறைக்குப் போனாள் தேவதா.
அங்கே ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார்.
அவரைப் பார்த்ததும்,
“மஞ்சு அத்தை?” எனக் கேள்வியாகக் கேட்டாள் இவள்.
அவர் முகம் மலர்ந்து போனது.
“குட்டிமா!!! என்னைத் தெரியுமாடா உனக்கு?”
அத்தியாயம் 8
“ஏஞ்சல்!”
“ஹ்ம்ம்ம்”
“என்ன ஒரே யோசனையா இருக்க நீ?”
“ஒன்னுமில்ல சங்கு! சும்மா ஏதேதோ நினைவுகள்.”
அன்று படிக்க வேண்டுமென இவனுக்கு மேசேஜ் போட்டு விட்டு நூலகத்துக்கு வந்திருந்தாள் தேவதா.
கல்லூரி ஆரம்பிக்கும் முன்னும் முடிந்த பின்னும் மட்டுமே அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வார்கள்! சனிக்கிழமைகளில் பல சமயம் இவனுக்கு ப்ராஜெக்ட் வேலைகள் இருக்கும். அவளுக்கும் சில சமயங்களில் அந்நாளில் காலை வகுப்புகள் இருக்கும். அதோடு அந்த நாளில்தான் தேவையானப் பொருட்களை வாங்கி வர மேகலாவுடன் வெளியே செல்வாள். ஞாயிற்றுக் கிழமைகளில் தேவதாவுக்கு துணிகளைத் துவைக்க, முகம் மற்றும் தலை முடி பராமரிப்பு என அதற்கே நேரம் சரியாய் இருக்கும்.
மாதத்திற்கு இரு ஞாயிறாவது, அனிதா சமைத்ததை எடுத்து வந்து அவளுக்கும் அவளது தோழி மேகலாவுக்கும் கொடுத்து விட்டுப் போவான் சங்கத்தமிழன்.
“ஏன் சங்கு சிரமப்படறீங்க?” எனக் கேட்டால்,
“ஞாயிறு வீட்டுல சமையல் தடபுடல் படும் தேவதா. அப்பா அன்னைக்குத்தான் ஃபுல் டே வீட்டுல இருப்பாரு! அதனால அம்மா ஜமாய்ச்சிடுவாங்க! ஒரு காலத்துல ஃபுல் கட்டு கட்டிட்டு ஜாலியா வீட்டுல உள்ளவங்க கூட அவுட்டிங் போவேன். இப்போலாம் எதாச்சும் ஸ்பெஷல் சாப்பாடு இருந்தா, உன் ஞாபகம் வந்திடுது! ஹாஸ்டல்ல வெந்ததையும் வேகாததையும் நீ சாப்பிட்டு இருக்கறப்போ, நான் மட்டும் நல்லா சாப்பிடறதான்னு ஒப்பமாட்டுது ஏஞ்சல். எவ்ரி சண்டே கூட கொண்டு வந்து குடுப்பேன்! நீதான் வேணாம்னு என்னைத் தடுத்து வச்சிருக்க!” என்பான்.
நூலகத்துக்கு வந்திருந்தவளைக் காண வந்திருந்தான் சங்கத்தமிழன். அவளும் படிக்க வேண்டும், அவனுக்கும் அவளைப் பார்க்க வேண்டும்! அவள் படித்துக் கொண்டிருக்க, அருகிலேயே அமர்ந்து அமைதியாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். படிப்பதும் நோட்ஸ் எடுப்பதுமாக அவள் இருந்தாலும், ஏதோ சரியில்லை எனப் புரிந்தது இவனுக்கு! அதனால்தான் என்ன யோசனை எனக் கேட்டான். அவளிடம் இருந்து மழுப்பலான பதில் வரவும்,
“வெளிய போய் பேசலாம் வா” என அழைத்தான்.
“படிக்கனும் சங்கு”
“நானும் பார்த்துட்டுத்தான் இருக்கேன்! இவ்ளோ நேரம் ஒரு பக்கம் கூட நீ முழுசா படிக்கல! எப்பவும் உன் பக்கத்துல நான் உட்கார்ந்திருந்தா, படிக்கற பாடத்தோட சாராம்சத்த மெல்லியக் குரல்ல எனக்கு விளக்கிட்டே நோட்ஸ் எழுதுவ! இன்னிக்கு உன்னோட கான்சேண்ட்ரேஷன் மிஸ்ஸிங்! சும்மா இங்க உட்கார்ந்து டைம் வேஸ்ட் பண்ணாம ஹாஸ்டல்ல போய் படி! இப்போ வா” என வலுக் கட்டாயமாக வெளியே அழைத்து வந்தான்.
அவர்கள் எப்போதும் அமரும் மரத்தடியில் அன்றும் அமர்ந்தார்கள்.
“அப்பாவ மிஸ் பண்ணுறியாடா?”
இல்லையெனத் தலையாட்டியவள்,
“அப்பா இறந்துட்டதா நான் நெனைக்கறது இல்ல சங்கு! கோவைல எப்பவும் போல அவர் சேலை வியாபாரம் செஞ்சிகிட்டு பத்திரமா இருக்கறதாத்தான் என் மூளையையும் மனசையும் ஏமாத்தி வச்சிருக்கேன்! பல வருஷமா அவரை விட்டுத் தள்ளித்தானே இருந்திருக்கேன்! சோ இப்பவும் அப்படித்தான் இருக்கறதா நெனைச்சிக்கறேன்! அது கஷ்டமாவும் இல்ல” என்றாள் பெண்.
பெருமூச்சுடன் அவளது கையைப் பற்றி அழுத்திக் கொடுத்தான் இவன்.
“வேற என்ன பிரச்சனை? என் கிட்ட எதாச்சும் சொல்லனுமாடா?” எனக் கேட்டான் சங்கத்தமிழன்.
நெற்றியைத் தேய்த்துக் கொண்டவள்,
“அப்படி ஒன்னும் இல்ல சங்கு” என்றாள்.
“உன் கிளாஸ் மேட் உமேஷ் பத்தி கூட சொல்ல வேண்டாமா என் கிட்ட?”
அதிர்ச்சியாய் அவனைப் பார்த்தாள் தேவதா.
“எப்படித் தெரியும்?”
“உன்னை என் வைஃப்னு சும்மா சொல்லி வச்சேன்னு நெனைக்கறியா தேவதா? உன் பெர்சனல் ஸ்பேஸ்ல தலையிடாம ஒதுங்கி நிக்கறதுனால, பெர்சனலா உன்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்காம இருப்பேனா?” எனக் கேட்டான் இவன்.
அமைதியாக இருந்தாள் தேவதா.
“நீயே என் கிட்ட சொல்லுவன்னு வெய்ட் பண்ணிட்டே இருந்தேன்டா! தள்ளி வச்சிட்டப் பார்த்தியா என்னை! மனசு வலிக்குது தேவதா”
“தள்ளி எல்லாம் வைக்கல சங்கு! காலேஜ் லாஸ்ட் இயர்ல, உனக்கு எந்த பிரச்சனையும் வரக் கூடாதுன்னு நெனைச்சித்தான் எதையும் உன் கிட்ட சொல்லல! என் மேல நீ எவ்ளோ போசெசிவ்வா இருக்கன்னு எனக்குத் தெரியாதா! அடிதடின்னு போய்ட்டா, உனக்குத்தான் பிரச்சனையாகிடும் சங்கு! அதான் நானே ஹேண்டில் பண்ண முயற்சி பண்ணேன்” என்றவளுக்குக் கண்கள் கலங்கியது.
“நீ இண்டிபெண்டெண்டா இருக்கனும்னு நினைக்கற பாலிசிய நானும் மதிக்கறேன் ஏஞ்சல். அதனாலத்தான் நீயே ஹேண்டில் பண்ணிக்குவன்னு வெய்ட் பண்ணேன். எப்போ முயற்சி பண்ணேன்னு பாஸ்ட் டென்ஸ்ல சொன்னியோ, அப்பவே உன் கை மீறிப் போய்டுச்சுன்னு புரிஞ்சிருச்சு! இனி நான் பார்த்துக்கறேன்”
“பெருசா பிரச்சனை பண்ணிடாதே சங்கு!”
“டோண்ட் வொரி! இந்த பிசாத்து பையன எல்லாம் நெனச்சி நீ டென்ஸ்ட் ஆகாதே! தலைவலி வந்திடப் போகுது! கோவைல இருந்து வந்ததுல இருந்து அடிக்கடி தலைவலிக்குதுன்னு சொல்லற! நானும் டாக்டர்ட்டலாம் கூட்டிட்டுப் போய்ட்டேன்! ஸ்ட்ரேஸ்னால வந்த தலைவலின்னு சொன்னாருதானே அவரு! இப்போ பாரு, இன்னிக்கு முழுக்க நெத்தியைத் தேய்ச்சுட்டே இருக்க! மருந்து கொண்டு வந்தியா?”
“இருக்கு சங்கு”
“மருந்து போட்டுட்டு, போய் ஹாஸ்டல்ல ரெஸ்ட் எடு தேவதா”
“வேணாம்”
“என்ன வேணாம்?” எனக் கேட்டவன் டென்ஷன் ஆகியிருந்தான்.
“சும்மா மருந்து போடக் கூடாதுடா! அப்புறம் அதுவே அடிக்ட் ஆகிடும்! லேசா வலிச்சா கூட மருந்து போடனும்னு தோணும்!”
“எல்லாத்துக்கும் ஒரு வியாக்கியானம் சொல்லு, பாட்டிக் கிழவி” எனத் திட்டியவன் எழுந்து நின்று அவளது நெற்றியை மிருதுவாக நீவி விட்டான்.
அப்படியே சரிந்து அவனது வயிற்றில் முகத்தைத் புதைத்துக் கொண்டாள் இவள்.
“அச்சோ ஏஞ்சல்! ஆளுங்க நடமாடற இடம்! உரசாம தள்ளுடி!”
“இப்போ என்ன கிஸ்ஸா அடிச்சேன்! ஓவரா பண்ணாதே சங்கு!” என்றவள் அவனை நிமிர்ந்து பார்த்துக் கண்ணடித்தாள்.
விரிந்த புன்னகையுடன் இரு விரலால் அவள் உதட்டைக் கிள்ளி, தன் விரலுக்கே முத்தமிட்டுக் கொண்டான் இவன்.
“சைவ முத்தம் வேணா போ” எனச் சிணுங்கினாள் இவள்.
“அது அதுக்கு நேரமிருக்கு, காலமிருக்கு ஏஞ்சல்!” எனச் சொல்லியவன் குனிந்து அவள் உச்சியில் இதழ் பதித்தான்.
“இப்போ கிளம்பிப் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு” எனப் பிள்ளையார் இருப்பிடம் வரை விட்டு விட்டுப் போனான் சங்கத்தமிழன்.
ஹாஸ்டல் உள்ளே இவள் நுழைய,
“தேவதா!! உனக்கு விசிட்டர் வந்திருக்காங்க” எனக் குரல் கேட்டது.
“விசிட்டரா? என்னைத் தேடி வர அளவுக்கு அப்படி யாரும் இல்லையே” என முணுமுணுத்தபடியே அலுவலக அறைக்குப் போனாள் தேவதா.
அங்கே ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார்.
அவரைப் பார்த்ததும்,
“மஞ்சு அத்தை?” எனக் கேள்வியாகக் கேட்டாள் இவள்.
அவர் முகம் மலர்ந்து போனது.
“குட்டிமா!!! என்னைத் தெரியுமாடா உனக்கு?”