ஹாய் பட்டூஸ்
First Late ah வந்ததுக்கு Sorry sorry sorry. பசங்களுக்கு vacation, அது முடிஞ்சு திரும்பி வந்தா, dubai மலையில் online class மாட்டிக்கிட்டேன். இனி correct பதிவு வந்துரும்னு நம்புறேன். இன்னும் ஒரு மூணு பதிவில் கதை முடிஞ்சிடும்.
Happy reading
“இன்னும் ஒரு மாசத்துல எனக்கு கல்யாணம்!!!” அருந்ததி சொன்னதை கேட்ட பிரகாஷின் கைகள் சட்டென்று அவளிடமிருந்து விலகியது. தனிச்சையாக உடல் இரண்டடி பின் நகர்ந்தது. அதுவரை சுற்றியிருந்த மோக வலை அறுந்தது. தன் காதில் விழுந்த வார்த்தைகளை உறுதி படுத்திக்கொள்ள அவள் முகத்தை உற்றுப் பார்த்தான்.
அவன் விலகலை உணர்ந்தாலும் பதுமையின் விழிகள் மூடியே இருந்தது. அதனால் பிரகாஷால் அவள் விழிகளை கொண்டு அவளது உணர்வுகளை படிக்க முடியவில்லை. ஆனால் அவன் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது, “உங்களை பிடிக்கலைன்னு நிரூபிக்க இதை விட பெரிய ப்ரூப் வேணுமா?” என்ற அவளது அலட்சியமான கேள்வி. அந்த அலட்சியத்திற்கு பின் கொட்டி கிடந்தது மழையளவு துயரமும் வருத்தமும்.
புருவம் சுருக்கியவன், “நீ என்ன சொல்ல வர?”
இப்போது கண்களை திறந்து அவன் முகம் பார்த்து, “என் கல்யாணத்துக்கு தேதி குறிச்சாச்சு. இன்னும் இருபத்தாறு நாளில் என் கல்யாணம். பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குறாங்க.” தெளிவாக, அழுத்தமாக சொன்னாள். தனக்குத்தானே மனதில் பதிய வைக்க முயன்றதால், அந்த அழுத்தம் என சொல்லவும் வேண்டுமா???
ஆம்! அருந்ததியின் சம்மதம் கிடைத்தவுடன் ஜோசியரைப் பார்த்து, ஒரே முகூர்த்த நாளில் அடுத்தடுத்து மூன்று திருமணங்களையும் நடத்த நாள் குறித்து விட்டனர். திருமணத்தை கோவையிலும், திருமண வரவேற்பை சென்னையிலும் நடத்த உள்ளனர். வரும் வெள்ளிக்கிழமை திருமண ஜவுளி, மாங்கல்யம் எடுக்க உள்ளனர். அன்றே பத்திரிக்கையை தேர்வு செய்து அச்சிடக் கொடுக்க போகின்றனர்.
“இந்தக் கல்யாண ஏற்பாடு உன்னோட விருப்பத்தோடு தான் நடக்குதா?”
“என் சம்மதம் இல்லாமல் எங்க வீட்டில எதுவும் செய்ய மாட்டாங்க?”
“அப்ப இது உன் விருப்பம்?”
“ஆமா!”
“மாப்பிள்ளை யார்? பேர் என்ன? என்ன பண்றான்?” அடுக்கடுக்காக கேட்டான்.
அவன் கேள்விகளுக்கு பதில் தெரியாத அருந்ததி, “ப்ச்! அதை தெரிஞ்சு நீங்க என்ன பண்ணப் போறீங்க? வீட்ல பேசி முடிச்சிட்டாங்க. இனி என் வாழ்க்கையில் இருந்து ஒதுங்கிப் போயிருங்க.”
“வீட்ல பேசி முடிச்சாங்க ஓகே. உனக்கு விருப்பமா?” மீண்டும் அதையே கேட்டான்.
“ஆமா”
“நல்ல யோசிச்சு சொல்லு, அந்த கல்யாணத்தை நீ விரும்பறையா?”
‘நானே கஷ்டப்பட்டு மனசு ரெடி பண்ணா இவன் வேற?’ என கோபம் வந்தது. அந்த எரிச்சலை மறைக்காமல், “ஆமா! ஆமா! ஆமா! ஏன் திரும்ப திரும்ப இதையே கேட்கறீங்க? நீங்க எத்தனை முறை கேட்டாலும் என்னோட பதில் ஒன்னு தான்… என் சம்மதத்தோடு தான் எல்லாம் நடக்குது” கத்தினாள்.
“சத்தமா பேசிட்டா ஒரு பொய் உண்மையாகிடாது. நான் கேட்டது உன் விருப்பத்தை பத்தி. சம்மதத்தை இல்லை”
அருந்ததியின் புருவங்கள் முடிச்சிட்டது. “ரெண்டும் ஒன்னு தான்…”
“இல்லை, ரெண்டும் வேற வேற… விருப்பம் இல்லாமலும் சம்மதம் சொல்லலாம்”
“அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் சம்மதிச்சு, என்னோட கல்யாண ஏற்பாடும் தொடங்கியாச்சு. நீங்க விலகிடுங்க…” அதுலயே நின்றாள்.
ஆடவனுக்கு கோபம் வந்தது. “அப்ப நீ என்னை விரும்புறது பொய்யா? ஈஸியா விலக சொல்ற…”
“குட் ஜோக்! நான் உங்களை விரும்புறேன்னு எப்ப சொன்னேன்? உங்க கற்பனைக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது” திடமாக சொன்னாலும் பதுமையின் மனம் கதறி துடித்தது.
“வெல் அது என் கற்பனையாகவே இருக்கட்டும்… அப்ப உன் காதல் உனக்கு வேண்டாம்?”
“நான் உங்களை காதலிக்கவே இல்லை, அப்புறம் வேண்டாமான்னு கேட்டா என்ன அர்த்தம்?” மனதை கல்லாக்கி கொண்டு சீறினால்.
“உன் மனச தொட்டு சொல்லு. நீ என்னை காதலிக்கலை?” உஷ்ணமாக கேட்டான்.
“இல்லை”
“என் மேல் சத்தியம் பண்ணு. அதை நான் நம்புறேன்.” சரியாக கிடுக்கு பிடி போட்டான்.
அருந்ததி மனம் பதற, “சத்தியம் எல்லாம் பண்ண முடியாது” அவசரமாக மறுத்தாள்.
“அப்ப வா, உங்க வீட்ல வந்து என்னை விரும்புறேன்னு சொல்லு.”
“உங்க பேச்சைக் கேட்டு, அவங்க சந்தோஷத்தை நான் கெடுக்க மாட்டேன்.”
“அதுக்காக விருப்பமே இல்லாம வீட்ல சொல்ற பையனை கல்யாணம் பண்ண போறயா?” எரிச்சலாக கேட்டான்.
அடிபட்ட பார்வை பார்த்தவள், “என் குடும்ப சந்தோஷம் எனக்கு முக்கியம். அதுக்காக நான் எதுவும் செய்வேன்.”
“சோ உன் குடும்பத்துக்காக உன் காதலை விட தயாராகிட்ட.”
“...”
“உன் குடும்பத்தை யோசிச்ச நீ, என்னை பத்தி யோசிச்சியா?”
‘உங்களைப் பத்தி யோசிச்சதாலும் தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்… உங்களுக்கு நான் வேண்டாம்…’ சத்தமின்றி உள்ளம் கதறியது.
“நானும் என்னோட காதலும் உனக்கு ஒண்ணுமே இல்லையா?”
பதிலின்றி போக சற்று நேரம் அவளை வெறித்தவன், “ஓகே ஃபயின்! நம்ம காதலை உணர்ந்தும் நீ இப்படி ஒரு முடிவெடுத்திருக்க. தெரிஞ்சே எல்லாம் செய்ற உன்கிட்ட பேசி எந்த யூசூமில்லை. இனி நீயா வந்து என்னை விரும்புறதா சொல்ற வரை இதைப் பத்தி பேச மாட்டேன். அதுக்குள்ள காலம் கடக்காமல் இருக்க ஆண்டவனை வேண்டுக்கிறேன். இன்னைக்கு ஒரு நாள் என்னை அட்ஜஸ்ட் செஞ்சுக்கோ.” என்றவன் அடுத்த நொடி அந்த டென்ட்டை விட்டு வெளியேறினான்.
கால்கள் பலமில்லாமல் மடிய, சரிந்து கீழே அமர்ந்த அருந்ததி, முகம் மூடி, ‘நான் உங்க காதலுக்கு தகுதி இல்லாதவ. அந்தஸ்துக்கு பொருத்தமில்லாதவ. என்னை மறந்துட்டு உங்களுக்கு பொருத்தமான பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ... நான் உங்களுக்கு வேண்டாம்’ என மனதோடு அறற்றினாள்.
தன் அழுகை அவனுக்குத் தெரியக்கூடாது என மௌனமாக கண்ணீர் வடித்தாள். நீர் வற்றும் வரை அழுது கரைந்தவள், அந்த அயர்வில் அப்படியே உறங்கியிருந்தாள்.
அவளை விட்டு சென்ற பிரகாஷ் மனம் கொதிக்க குளிரில் நின்றிருந்தான். கோபத்தில் மனம் எரிமலையாக கொதித்தது.
‘பைத்தியக்காரி! பொய் மேல பொய்! நீ என்னை விரும்பலைன்னு சொன்னா அதை நான் நம்பிடுவேனா? நான் என்ன, பிறந்த குழந்தை கூட அதை நம்பாது. நீ என்னை விரும்பாமத்தான், என்னை நம்பி ஆளில்லாத இந்த இடத்தில், என்கூட தனியா இருக்கியா? இந்த நம்பிக்கை உன் காதலை சொல்லலையா? காதல் இல்லாமல் தான் நான் தொடும் போது ஐஸ் கட்டியா உருகுனியா? ஒரு துளி பிடித்தமின்மையை, நீ காட்டியிருந்தாலும் நான் உன்னைவிட்டு விலகி இருப்பேன். ஆனா உன் குடும்பத்துக்காக நம் காதலை தூக்கிப் போட தயாராகிட்ட இல்ல.’ பிரகாஷின் மனம் தகித்தது. மனதோடு மருகி நின்றான். மனதின் வெம்மை கடுங்குளிரை கூட உணர விடவில்லை.
அதை நினைக்க நினைக்க பிரகாஷுக்கு மனம் ஆறவில்லை. நேரம் கடக்க, கோபம் குறைவதற்கு பதில் ஏறியது, ‘டாமிட்! நம் காதலுக்காக நான் என்னவெல்லாம் செஞ்சிருக்கேன் நீ ரொம்ப ஈஸியா அதை தூக்கி போடுற. இனி நீயா உன் காதலை சொல்லி, நான் தான் உனக்கு முக்கியம்னு வரணும். அதுவரை நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்.’ கோபத்தில் பிதற்றினான்.
நீண்ட நேர அலைக்கழிப்பிற்கு பின் மனம் சற்று சமன்பட்டது. அதன் பிறகே ஊசியாக உடலை துளைத்த குளிரை உணர்த்தவனின் கால்கள், டென்ட்டை நோக்கி நகர்ந்தது. வாசலில் வந்து நின்றவன் சில நொடி தயக்கத்திற்கு பின் உள் நுழைந்தான்.
அமர்ந்தவாறு உறங்கியிருந்த தன் பேபி டாலை பார்த்தவனின் மனம் வலித்தது. அவள் கன்னங்களில் படிந்திருந்த கண்ணீரின் தடம் அவனுக்கு வேதனை அளிப்பதற்கு பதில் மகழ்ச்சியை கொடுத்தது. அவனுக்காக அவனவள் சிந்திய கண்ணீர், அவனுக்கு மகிழ்ச்சியளிக்காமல் இருக்குமா என்ன?
இவ்வளவு நேரம் மனதிலிருந்த தகிப்பு அடங்கியது. எரிமலையாக கொதித்துக் கொண்டிருந்த உணர்வின் கொந்தளிப்பு அடங்கியது. உதடுகள் லேசாக விரிந்தது. உடல் தளர அவளை நெருங்கி, பூப்போல் அவளை கைகளில் அள்ளி படுக்கையில் கிடத்தினான்.
சிறிது நேரம் வைத்த கண் வாங்காமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தவன், “ஏன் பேபி தேவையில்லாமல் உன்னை நீயே வருத்திகிற. உன் மனசில் என்ன குழப்பம்? அது என்னவா இருந்தாலும் அதை தூக்கி போடு. நான் உன்னை அப்படியே விட மாட்டேன். உன் கழுத்தில் தாலினு ஒன்னு ஏறுனா அது என் கையால் தான்… அது இன்னும் உனக்கு புரியலையா? இட்ஸ் ஓகே சீக்கிரம் புரிஞ்சிடும். அதுக்கு முன்னாடி உன் லவ்வை நீ என்கிட்ட சொல்லனும்…” அவள் முகம் மறைத்த முடியை விலக்கி பிறை நுதல், நாசி, கண்கள், கண்ணம் என இதமாக உதடு பதித்தவன், “ரொம்ப காக்க வச்சிடாத ஸ்மால் பேபி” என மீண்டும் ஒரு ஆழ்ந்த முத்தத்தை பதித்து, அவளை அணைத்துக்கொண்டு படுத்தான்.
அவன் தன்னை தூக்கியது, பேசியது, முத்தமிட்டது என எதையும் உணராமல் பதுமையென கிடந்தால் அருந்ததி. காலையில் அவள் எழும் முன்பே அவன் எழுந்து வெளியே சென்று விட்டான். அதனால் அது அவளுக்கு தெரியாமலே போனது. ‘நான் எப்படி படுக்கைக்கு வந்தேன்?’ என்ற குழப்பத்துடன் அன்றைய நாளை தொடங்கினாள். ‘மேபி தூக்க கலக்கத்தோடு வந்து படுத்திருப்பேன். அதனால் மறந்திருக்கும்’ தனக்குத்தானே பதிலும் சொல்லிக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் உள்ளே வந்த பிரகாஷின் பார்வை அவளில் படிந்தது. இரவு அணிந்திருந்த புடவையை இன்னும் மாற்றவில்லை. சிற்பமாக தன்முன் நின்ற பெண்ணை ரசிக்க தொடங்கிய கண்களுக்கு கஷ்டப்பட்டு தடை விதித்தான். அவளுக்கு தேவையான பேஸ்ட், பிரஸ், உடையை கொடுத்துவிட்டு சட்டென்று வெளியேறினான். பேசாமல் செல்லும் அவனை மனதில் வலியுடன் பார்த்திருந்தால் அருந்ததி.
அதன் பிறகும் பேசிக்கொள்ளாமல் தயாரானவர்கள், அவர்களது விமானம் வரவும், அதிலேறி சென்னையை அடைந்தனர். அவளது அப்பார்ட்மெண்ட் வாசலில் விட்டவன், “ஃபுட்டுக்கு ஆர்டர் போடுறேன். கொஞ்ச நேரத்தில் வந்துடும்” என அவள் முகம் பார்க்காமல் சொல்லிவிட்டு, முறையாக விடை பெறாமல் காரை கிளப்பினான். அவனது பாராமுகம் அருந்ததியின் மனவலியை இரட்டிப்பாக்கியது.
First Late ah வந்ததுக்கு Sorry sorry sorry. பசங்களுக்கு vacation, அது முடிஞ்சு திரும்பி வந்தா, dubai மலையில் online class மாட்டிக்கிட்டேன். இனி correct பதிவு வந்துரும்னு நம்புறேன். இன்னும் ஒரு மூணு பதிவில் கதை முடிஞ்சிடும்.
Happy reading
“இன்னும் ஒரு மாசத்துல எனக்கு கல்யாணம்!!!” அருந்ததி சொன்னதை கேட்ட பிரகாஷின் கைகள் சட்டென்று அவளிடமிருந்து விலகியது. தனிச்சையாக உடல் இரண்டடி பின் நகர்ந்தது. அதுவரை சுற்றியிருந்த மோக வலை அறுந்தது. தன் காதில் விழுந்த வார்த்தைகளை உறுதி படுத்திக்கொள்ள அவள் முகத்தை உற்றுப் பார்த்தான்.
அவன் விலகலை உணர்ந்தாலும் பதுமையின் விழிகள் மூடியே இருந்தது. அதனால் பிரகாஷால் அவள் விழிகளை கொண்டு அவளது உணர்வுகளை படிக்க முடியவில்லை. ஆனால் அவன் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது, “உங்களை பிடிக்கலைன்னு நிரூபிக்க இதை விட பெரிய ப்ரூப் வேணுமா?” என்ற அவளது அலட்சியமான கேள்வி. அந்த அலட்சியத்திற்கு பின் கொட்டி கிடந்தது மழையளவு துயரமும் வருத்தமும்.
புருவம் சுருக்கியவன், “நீ என்ன சொல்ல வர?”
இப்போது கண்களை திறந்து அவன் முகம் பார்த்து, “என் கல்யாணத்துக்கு தேதி குறிச்சாச்சு. இன்னும் இருபத்தாறு நாளில் என் கல்யாணம். பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குறாங்க.” தெளிவாக, அழுத்தமாக சொன்னாள். தனக்குத்தானே மனதில் பதிய வைக்க முயன்றதால், அந்த அழுத்தம் என சொல்லவும் வேண்டுமா???
ஆம்! அருந்ததியின் சம்மதம் கிடைத்தவுடன் ஜோசியரைப் பார்த்து, ஒரே முகூர்த்த நாளில் அடுத்தடுத்து மூன்று திருமணங்களையும் நடத்த நாள் குறித்து விட்டனர். திருமணத்தை கோவையிலும், திருமண வரவேற்பை சென்னையிலும் நடத்த உள்ளனர். வரும் வெள்ளிக்கிழமை திருமண ஜவுளி, மாங்கல்யம் எடுக்க உள்ளனர். அன்றே பத்திரிக்கையை தேர்வு செய்து அச்சிடக் கொடுக்க போகின்றனர்.
“இந்தக் கல்யாண ஏற்பாடு உன்னோட விருப்பத்தோடு தான் நடக்குதா?”
“என் சம்மதம் இல்லாமல் எங்க வீட்டில எதுவும் செய்ய மாட்டாங்க?”
“அப்ப இது உன் விருப்பம்?”
“ஆமா!”
“மாப்பிள்ளை யார்? பேர் என்ன? என்ன பண்றான்?” அடுக்கடுக்காக கேட்டான்.
அவன் கேள்விகளுக்கு பதில் தெரியாத அருந்ததி, “ப்ச்! அதை தெரிஞ்சு நீங்க என்ன பண்ணப் போறீங்க? வீட்ல பேசி முடிச்சிட்டாங்க. இனி என் வாழ்க்கையில் இருந்து ஒதுங்கிப் போயிருங்க.”
“வீட்ல பேசி முடிச்சாங்க ஓகே. உனக்கு விருப்பமா?” மீண்டும் அதையே கேட்டான்.
“ஆமா”
“நல்ல யோசிச்சு சொல்லு, அந்த கல்யாணத்தை நீ விரும்பறையா?”
‘நானே கஷ்டப்பட்டு மனசு ரெடி பண்ணா இவன் வேற?’ என கோபம் வந்தது. அந்த எரிச்சலை மறைக்காமல், “ஆமா! ஆமா! ஆமா! ஏன் திரும்ப திரும்ப இதையே கேட்கறீங்க? நீங்க எத்தனை முறை கேட்டாலும் என்னோட பதில் ஒன்னு தான்… என் சம்மதத்தோடு தான் எல்லாம் நடக்குது” கத்தினாள்.
“சத்தமா பேசிட்டா ஒரு பொய் உண்மையாகிடாது. நான் கேட்டது உன் விருப்பத்தை பத்தி. சம்மதத்தை இல்லை”
அருந்ததியின் புருவங்கள் முடிச்சிட்டது. “ரெண்டும் ஒன்னு தான்…”
“இல்லை, ரெண்டும் வேற வேற… விருப்பம் இல்லாமலும் சம்மதம் சொல்லலாம்”
“அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் சம்மதிச்சு, என்னோட கல்யாண ஏற்பாடும் தொடங்கியாச்சு. நீங்க விலகிடுங்க…” அதுலயே நின்றாள்.
ஆடவனுக்கு கோபம் வந்தது. “அப்ப நீ என்னை விரும்புறது பொய்யா? ஈஸியா விலக சொல்ற…”
“குட் ஜோக்! நான் உங்களை விரும்புறேன்னு எப்ப சொன்னேன்? உங்க கற்பனைக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது” திடமாக சொன்னாலும் பதுமையின் மனம் கதறி துடித்தது.
“வெல் அது என் கற்பனையாகவே இருக்கட்டும்… அப்ப உன் காதல் உனக்கு வேண்டாம்?”
“நான் உங்களை காதலிக்கவே இல்லை, அப்புறம் வேண்டாமான்னு கேட்டா என்ன அர்த்தம்?” மனதை கல்லாக்கி கொண்டு சீறினால்.
“உன் மனச தொட்டு சொல்லு. நீ என்னை காதலிக்கலை?” உஷ்ணமாக கேட்டான்.
“இல்லை”
“என் மேல் சத்தியம் பண்ணு. அதை நான் நம்புறேன்.” சரியாக கிடுக்கு பிடி போட்டான்.
அருந்ததி மனம் பதற, “சத்தியம் எல்லாம் பண்ண முடியாது” அவசரமாக மறுத்தாள்.
“அப்ப வா, உங்க வீட்ல வந்து என்னை விரும்புறேன்னு சொல்லு.”
“உங்க பேச்சைக் கேட்டு, அவங்க சந்தோஷத்தை நான் கெடுக்க மாட்டேன்.”
“அதுக்காக விருப்பமே இல்லாம வீட்ல சொல்ற பையனை கல்யாணம் பண்ண போறயா?” எரிச்சலாக கேட்டான்.
அடிபட்ட பார்வை பார்த்தவள், “என் குடும்ப சந்தோஷம் எனக்கு முக்கியம். அதுக்காக நான் எதுவும் செய்வேன்.”
“சோ உன் குடும்பத்துக்காக உன் காதலை விட தயாராகிட்ட.”
“...”
“உன் குடும்பத்தை யோசிச்ச நீ, என்னை பத்தி யோசிச்சியா?”
‘உங்களைப் பத்தி யோசிச்சதாலும் தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்… உங்களுக்கு நான் வேண்டாம்…’ சத்தமின்றி உள்ளம் கதறியது.
“நானும் என்னோட காதலும் உனக்கு ஒண்ணுமே இல்லையா?”
பதிலின்றி போக சற்று நேரம் அவளை வெறித்தவன், “ஓகே ஃபயின்! நம்ம காதலை உணர்ந்தும் நீ இப்படி ஒரு முடிவெடுத்திருக்க. தெரிஞ்சே எல்லாம் செய்ற உன்கிட்ட பேசி எந்த யூசூமில்லை. இனி நீயா வந்து என்னை விரும்புறதா சொல்ற வரை இதைப் பத்தி பேச மாட்டேன். அதுக்குள்ள காலம் கடக்காமல் இருக்க ஆண்டவனை வேண்டுக்கிறேன். இன்னைக்கு ஒரு நாள் என்னை அட்ஜஸ்ட் செஞ்சுக்கோ.” என்றவன் அடுத்த நொடி அந்த டென்ட்டை விட்டு வெளியேறினான்.
கால்கள் பலமில்லாமல் மடிய, சரிந்து கீழே அமர்ந்த அருந்ததி, முகம் மூடி, ‘நான் உங்க காதலுக்கு தகுதி இல்லாதவ. அந்தஸ்துக்கு பொருத்தமில்லாதவ. என்னை மறந்துட்டு உங்களுக்கு பொருத்தமான பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ... நான் உங்களுக்கு வேண்டாம்’ என மனதோடு அறற்றினாள்.
தன் அழுகை அவனுக்குத் தெரியக்கூடாது என மௌனமாக கண்ணீர் வடித்தாள். நீர் வற்றும் வரை அழுது கரைந்தவள், அந்த அயர்வில் அப்படியே உறங்கியிருந்தாள்.
அவளை விட்டு சென்ற பிரகாஷ் மனம் கொதிக்க குளிரில் நின்றிருந்தான். கோபத்தில் மனம் எரிமலையாக கொதித்தது.
‘பைத்தியக்காரி! பொய் மேல பொய்! நீ என்னை விரும்பலைன்னு சொன்னா அதை நான் நம்பிடுவேனா? நான் என்ன, பிறந்த குழந்தை கூட அதை நம்பாது. நீ என்னை விரும்பாமத்தான், என்னை நம்பி ஆளில்லாத இந்த இடத்தில், என்கூட தனியா இருக்கியா? இந்த நம்பிக்கை உன் காதலை சொல்லலையா? காதல் இல்லாமல் தான் நான் தொடும் போது ஐஸ் கட்டியா உருகுனியா? ஒரு துளி பிடித்தமின்மையை, நீ காட்டியிருந்தாலும் நான் உன்னைவிட்டு விலகி இருப்பேன். ஆனா உன் குடும்பத்துக்காக நம் காதலை தூக்கிப் போட தயாராகிட்ட இல்ல.’ பிரகாஷின் மனம் தகித்தது. மனதோடு மருகி நின்றான். மனதின் வெம்மை கடுங்குளிரை கூட உணர விடவில்லை.
அதை நினைக்க நினைக்க பிரகாஷுக்கு மனம் ஆறவில்லை. நேரம் கடக்க, கோபம் குறைவதற்கு பதில் ஏறியது, ‘டாமிட்! நம் காதலுக்காக நான் என்னவெல்லாம் செஞ்சிருக்கேன் நீ ரொம்ப ஈஸியா அதை தூக்கி போடுற. இனி நீயா உன் காதலை சொல்லி, நான் தான் உனக்கு முக்கியம்னு வரணும். அதுவரை நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்.’ கோபத்தில் பிதற்றினான்.
நீண்ட நேர அலைக்கழிப்பிற்கு பின் மனம் சற்று சமன்பட்டது. அதன் பிறகே ஊசியாக உடலை துளைத்த குளிரை உணர்த்தவனின் கால்கள், டென்ட்டை நோக்கி நகர்ந்தது. வாசலில் வந்து நின்றவன் சில நொடி தயக்கத்திற்கு பின் உள் நுழைந்தான்.
அமர்ந்தவாறு உறங்கியிருந்த தன் பேபி டாலை பார்த்தவனின் மனம் வலித்தது. அவள் கன்னங்களில் படிந்திருந்த கண்ணீரின் தடம் அவனுக்கு வேதனை அளிப்பதற்கு பதில் மகழ்ச்சியை கொடுத்தது. அவனுக்காக அவனவள் சிந்திய கண்ணீர், அவனுக்கு மகிழ்ச்சியளிக்காமல் இருக்குமா என்ன?
இவ்வளவு நேரம் மனதிலிருந்த தகிப்பு அடங்கியது. எரிமலையாக கொதித்துக் கொண்டிருந்த உணர்வின் கொந்தளிப்பு அடங்கியது. உதடுகள் லேசாக விரிந்தது. உடல் தளர அவளை நெருங்கி, பூப்போல் அவளை கைகளில் அள்ளி படுக்கையில் கிடத்தினான்.
சிறிது நேரம் வைத்த கண் வாங்காமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தவன், “ஏன் பேபி தேவையில்லாமல் உன்னை நீயே வருத்திகிற. உன் மனசில் என்ன குழப்பம்? அது என்னவா இருந்தாலும் அதை தூக்கி போடு. நான் உன்னை அப்படியே விட மாட்டேன். உன் கழுத்தில் தாலினு ஒன்னு ஏறுனா அது என் கையால் தான்… அது இன்னும் உனக்கு புரியலையா? இட்ஸ் ஓகே சீக்கிரம் புரிஞ்சிடும். அதுக்கு முன்னாடி உன் லவ்வை நீ என்கிட்ட சொல்லனும்…” அவள் முகம் மறைத்த முடியை விலக்கி பிறை நுதல், நாசி, கண்கள், கண்ணம் என இதமாக உதடு பதித்தவன், “ரொம்ப காக்க வச்சிடாத ஸ்மால் பேபி” என மீண்டும் ஒரு ஆழ்ந்த முத்தத்தை பதித்து, அவளை அணைத்துக்கொண்டு படுத்தான்.
அவன் தன்னை தூக்கியது, பேசியது, முத்தமிட்டது என எதையும் உணராமல் பதுமையென கிடந்தால் அருந்ததி. காலையில் அவள் எழும் முன்பே அவன் எழுந்து வெளியே சென்று விட்டான். அதனால் அது அவளுக்கு தெரியாமலே போனது. ‘நான் எப்படி படுக்கைக்கு வந்தேன்?’ என்ற குழப்பத்துடன் அன்றைய நாளை தொடங்கினாள். ‘மேபி தூக்க கலக்கத்தோடு வந்து படுத்திருப்பேன். அதனால் மறந்திருக்கும்’ தனக்குத்தானே பதிலும் சொல்லிக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் உள்ளே வந்த பிரகாஷின் பார்வை அவளில் படிந்தது. இரவு அணிந்திருந்த புடவையை இன்னும் மாற்றவில்லை. சிற்பமாக தன்முன் நின்ற பெண்ணை ரசிக்க தொடங்கிய கண்களுக்கு கஷ்டப்பட்டு தடை விதித்தான். அவளுக்கு தேவையான பேஸ்ட், பிரஸ், உடையை கொடுத்துவிட்டு சட்டென்று வெளியேறினான். பேசாமல் செல்லும் அவனை மனதில் வலியுடன் பார்த்திருந்தால் அருந்ததி.
அதன் பிறகும் பேசிக்கொள்ளாமல் தயாரானவர்கள், அவர்களது விமானம் வரவும், அதிலேறி சென்னையை அடைந்தனர். அவளது அப்பார்ட்மெண்ட் வாசலில் விட்டவன், “ஃபுட்டுக்கு ஆர்டர் போடுறேன். கொஞ்ச நேரத்தில் வந்துடும்” என அவள் முகம் பார்க்காமல் சொல்லிவிட்டு, முறையாக விடை பெறாமல் காரை கிளப்பினான். அவனது பாராமுகம் அருந்ததியின் மனவலியை இரட்டிப்பாக்கியது.