ஹாய் தங்கம்ஸ் , நான் அடுத்த எபியோட வந்துட்டேன் .போன எபிக்கு லைக்ஸ் அன்ட் கமண்ட்ஸ் போட்ட எல்லோருக்கும் நன்றி பட்டூஸ் ....
நினைவில் தத்தளிக்கும் நேசமது 7 :
ARSHAD MULTISPECIALITY HOSPITAL
அந்த அறையின் கட்டிலில் அமர்ந்து அவள் யோசித்து கொண்டிருந்தாள் .தன்னை பற்றி தானே அறியாமல் இருப்பதை விட கொடுமை வேறெதுவும் இருக்குமா?? ,அவளின் இச்சிந்தனைக்கு காரணம் அவளின் இடதுகை மோதிர விரலில் இருந்த அந்த அழகான ரூபி மோதிரம்.
அந்த மோதிரம் ஜே என்னும் எழுத்தை வைரங்கள் கொண்டு வடிவமைத்து சிவப்பு நிற இதயத்தினுள் வைத்தது போல் இருந்தது .அந்த மோதிரத்தை கண்டே அவளது யோசனை. அதாவது அந்த மோதிரம் எவர் அளித்தது , அந்த ஜே என்பது எவரைக் குறிக்கும் , அல்லது அது அவளின் பெயரின் தொடக்கமா ?? என கேள்விகள் அவளின் யோசனையில் படையெடுத்தன .
அந்த மோதிரத்தை காணும் பொழுது அவள் அறியாமலே உடல் சிலிர்த்தது ,என்னென்றே அறியாமல் மனம் மகிழ்ச்சியாய் இருந்தது .அவளுக்கு தற்பொழுது எதுவுமே நினைவில்லை, ஆயினும் அவளது சிலிர்ப்புக்கு காரணம் என்ன என்னும் யோசனையுடன் கண்களை மூடிய பொழுது மறுபடியும் காதோரம் ஒரு குரல் கேட்டது . "மித்துமா இந்த மோதிரம் உனக்கு பிடிச்சிருக்காடா" ......சட்டென்று கண் விழித்துப் பார்த்தாள் . அறையில் அவள் மட்டுமே இருந்தாள் ,இது என்ன முதல்ல ஒரு குரல் ராணிம்மா என்றது தற்போது ஒரு குரல் மித்துமா என்கிறது இருக்குரல்களும் யாருடையது?? இரண்டு குரல்களும் ஏன் எனக்கு நெருக்கமாய் தோன்றுகிறது ?? அப்போ இந்த ஜே என்பது இரண்டாம் குரலுக்கு உரியவன் உடையதா அல்லது எனது பெயரின் தொடக்கமா இன்னும் எத்தனை நாட்களுக்கு என்னை இந்த குழப்பங்கள் தொடரப் போகிறது என தெரியலையே ??? ( shobbbbba எம்புட்டு கேள்வி கேக்குறா இந்த பொண்ணு .அதும் தனக்கு தானே வேற பேசுறா ,ஒருவேளை இவளும் விஷ்வாக்கு ஜோடி ஆ இருப்பாளோ??? )
முதல்ல எப்படியாவது ஆஸ்பிட்டல்ல விட்ட வெளிய போகணும் . நான் யாருன்னு தெரிஞ்சுக்கணும் அவள் தனக்குள்ளே முடிவெடுக்கும் பொழுதே வெளியே ஒரு பெண்ணின் குரல் அம்மா என வலியில் கதறியது . அதில் அறையை விட்டு வெளியே வந்தவள் கண்டது , ஒரு பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்ததை தான் . நர்ஸ்கள் எல்லோரும் அவசர அவசரமாக நடந்து கொண்டிருந்தனர் . ஒருவர் மற்றொருவரிடம் கேட்டுக் கொண்டிருந்தார், மாலதி டாக்டர் இன்னும் வரலையா ?அதற்க்கு அந்த மற்றொருவர் , மாலதி டாக்டர் எப்பவும் இந்த டைம்க்கு வந்துடுவாங்க. ஆனா இன்னிக்கு இன்னும் வரலையே இந்த பொண்ணுக்கு வேற வலி வந்துருச்சு என்ன பண்றது .
அந்தப் பெண் வலியில் கதறிக் கொண்டிருந்தார்.. அருகில் இருந்த அவரது கணவர்அவரது கைகளைப் பற்றிக்கொண்டு ப்ளீஸ் டீ பயப்படாத , இப்போ இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம பாப்பா வந்துருவா ...அந்த இளம் வயது கணவன் மனைவியின் வலியில் தனது கண்களில் தோன்றும் கண்ணீரை உள்ளிழித்து , தனது பயங்கள் அனைத்தையும் மறைத்து தான் அறிந்த வகைில் மனைவியை ஆறுதல்படுத்திக் கொண்டு இருந்தான்.
அடுத்த பத்து நிமிடங்களில் விஷ்வா ருத்ரமூர்த்தியாய் கண்கள் சிவக்க அந்த ஹாஸ்பிடலின் ஒரு அறையில் நின்றிருந்தான் . அவனை சுற்றி இருந்த அனைவரும் பயத்தில் அந்த ஏசி அறையிலும் வேர்வையில் குளித்திருந்தனர் .விஷ்வா அனைவரையும் கண்டு, எல்லோரும் என்ன பன்னிட்டு இருக்கீங்க?? டாக்டர் மாலதி இன்னுமா வரல ?? என்று கர்ஜித்தான் .அவனை என்றுமே இவ்வளவு கோபத்துடன் கண்டது இல்லாததால் அனைவரும் செய்வது அறியாமல் நடுங்கினர் .புல்ஷிட் இன்னும் என்ன வேடிக்கை பாக்குறீங்க கோ அண்ட் டூ எனிதிங் ...அந்த patient க்கும் குழந்தைக்கும் எதுனா ஆச்சி உங்க எல்லோரையும் வேலைய விட்டு தூக்கிடுவேன் ...அவன் சொல்லிட்டு இருக்கும் பொழுது தான் கண்டான் .அவனுடைய அந்த ஏஞ்சல் பெண் அவசர அவசரமாக அவனிருந்த அறைக்கு வந்திருந்ததை.
பிரசவ வலியில் துடிக்கும் பெண்ணை கண்டவளின் கால்கள் தானாய் அப்பெண்ணின் அருகில் சென்றன , சென்று அப்பெண்ணை ஆராய்ந்தவள் விஷ்வா ஹாஸ்பிடலினுள் நுழைவதை கண்டே அவன் பின் வந்தாள் .அவனின் கோபத்தை கண்டு தயங்கி நின்றவள் வெளியே அப்பெண் வலியில் துடிப்பதை கண்டு தன் தயக்கம் துறந்து அவசரமாய் விஷ்வா இருந்த அறை கதவை திறந்திருந்தாள் ...
வந்தவள் அவனிடம் டாக்டர் நான் இப்போ தான் அந்த பொண்ண பார்த்தேன் . எனக்கு என்னமோ இன்னும் அறை மணி நேரத்துல குழந்தை தலை திரும்பிடும்னு தோணுது . அதுவும் எந்த சிக்கலும் இல்லாம, ஆனா அந்த பொண்ணு ரொம்ப பலவீனமா இருக்கா என கடகட என்று ஒரு தேர்ந்த gynacologist போல கூறியவளை கண்டு அவ்வறையில் இருந்த அனைவரும் வியந்தனர் .முதலில் நடப்பிற்கு வந்த விஷ்வா அவளின் இச்செயலுக்கான காரணத்தை அறிந்து தன் இதழ்களில் தோன்றிய புன்னைகையை சில நொடிகளில் அழகாய் மறைத்துக்கொண்டான் .
நர்ஸ் போங்க போய் இவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க , ஹலோ ஏஞ்சல் என்ன அமைதி ஆகிட்டீங்க ...போங்க போய் அந்த பொண்ண பாருங்க , அப்றம் உங்கள மாறியே ஒரு குட்டி ஏஞ்சலையும் இந்த உலகுக்கு பாதுகாப்பா கொண்டுவாங்க best of luck ... அழகாய் புன்னைகைத்துக்கொண்டே அவளிடம் சொன்னான் ...
இவ்வளவு நேரமாய் அவனிடம் இருந்த கோபம் அவளை கண்டு விடை பெற்று சென்றதை அறிந்து சுற்றியிருந்த அனைவரும் ஆச்சரியம் கொண்டனர் .அவள் யார் என்று அவர்களில் எவருக்கும் தெரியாது . அவளை இந்த ஆஸ்பிட்டலில் சேர்த்து ட்ரீட்மெண்ட்டும் அவனே பார்த்துக் கொண்டான். அதை பற்றி சிந்திக்க நேரம் இன்றி வெளியே கதறும் பெண்ணின் குரலில் செய்யவேண்டியதை உணர்ந்து அனைவரும் விரைந்தனர் .
அவள் கூறியதை போல் அரை மணி நேரத்தில் குழந்தையின் தலை திரும்பியது . பின் அத்தனை சிரமம் இன்றி சுகப்பிரசவமாய் குழந்தை பிறந்தது . அக்குழந்தையை தனது கைகளில் ஏந்திய நொடி அவளுக்கு இதே அனுபவம் பலமுறை ஏற்பட்டது போல் தோன்றியது . அவள் கண் விழித்தே இரு நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது .அதுவும் அவள் யார் என்று கூட அவள் இன்னும் அறியவில்லை .இந்நிலையில் தான் எவ்வாறு இன்று விரைந்து இவ்வாறு செய்தோம் என அவள் யோசித்து தனக்குள் உழன்றாள் . அவளது யோசனையை கலைத்தது அவளது கைகளில் இருந்த குழந்தையின் அழுகைக் குரல் . அதைக் கே்ட பின்பே வெளியில் இருந்த அப்பெண்ணின் கணவன் நிம்மதிப்பெருமூச்செய்தினான் . இருவருக்கும் பெற்றவர்கள் இல்லா நிலையில் ஆறுதல் கூற எவருமில்லாமல் தவித்திருந்தவனின் கைகளில் அவனது குழந்தையை கொடுத்து உங்கள் மனைவி நன்றாக இருக்கிறார் என்று சொல்லி அவன் தவிப்பை போக்கி விட்டு தன் அறைக்கு வந்தவளின் சிந்தை அனைத்தும் தான் இத்தனை நேரம் செய்ததை பற்றியே இருந்தது . யோசித்ததில் தலை சுற்றுவது போல் தோன்றி அப்படியே மயங்கி விட்டாள்
குழந்தை பிறந்து விட்ட விஷயம் அறிந்த விஷ்வா குழந்தையை சென்று பார்த்துவிட்டு பின்பு இவள் அறைக்கு வந்தவன் , அங்கு அவள் மயங்கி கிடப்பதை கண்டு விரைந்து அவளுக்கு சிகிச்சை செய்தான் .
சரியாக அந்த நொடி ஒரு உருவம் கதவைத் திறந்து மிக வேகமாக உள்ளே வந்தது . கட்டிலில் இருந்தவளை கண்ட அவ்வுருவம் விரைந்து வந்து அவளது கட்டிலுக்கருகில் கீழே மண்டியிட்டு அவளது வலது கையை எடுத்து தனது இரு கரங்களுக்குள் வைத்துக்கொண்டது. கண்கள் இரண்டும் அவளை உச்சி முதல் பாதம் வரை ஏதேனும் ஆபத்தா என வேகவேகமாக அலசி ஆராய்ந்தது . அவ்வாறு எதுவும் இல்லை என்று அறிந்தபின் நிம்மதியுடன் விழி மூடியது. மூடிய விழிகளில் இருந்து முத்தாய் கண்ணீர் துளிகள் ஜனித்தது . இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த விஷ்வா இதை கண்டு கண்மூடி இருந்த உருவத்தின் தோள்களின் மீது தனது கரங்களை வைத்துஅழுத்தி ஜிஷ்ணு என அழைத்தான் . அதில் , தன் வேதனையை மறைத்தவன் , என்னாச்சு விஷ்வா ?? கண்ண விழிச்சிட்டானு தான சொன்ன . ஆனா இப்போ என்ன திரும்பவும் இப்படி இருக்கா ,என்னடா ஆச்சு சொல்லுடா .
மயக்கத்தில் இருந்த அவளுக்கு இவனது இவ்வேதனை குரல் கேட்டது . கேட்ட நொடி அவளது இதயம் வேகமாக துடித்தது ,கண்களை விரித்து அவனை கண்டுவிட எண்ணி ..கண்களை திறக்க போராடினாள் ..இயலாமையில் அவளது உதடுகள் அழுகையோடு முனுமுனுத்தது "ஜி்ணு பாவா" .....
நினைவுகள் தொலைத்த ...
சுயம் அறியா நிலையிலும்
அவனது வார்த்தைகள்
அவளது இதயத்தை தீண்டுமானால் ..
அவனது நேசம் எத்தைகையது ??
அந்நேசம் அவளை
கரை சேர்க்குமா..
அல்லது ...
நினைவறியா சுழலில்
சிக்கி தவிப்பவளை
அதில் மூழ்க செய்யுமா ??
- கரைவாள்
நினைவில் தத்தளிக்கும் நேசமது 7 :
ARSHAD MULTISPECIALITY HOSPITAL
அந்த அறையின் கட்டிலில் அமர்ந்து அவள் யோசித்து கொண்டிருந்தாள் .தன்னை பற்றி தானே அறியாமல் இருப்பதை விட கொடுமை வேறெதுவும் இருக்குமா?? ,அவளின் இச்சிந்தனைக்கு காரணம் அவளின் இடதுகை மோதிர விரலில் இருந்த அந்த அழகான ரூபி மோதிரம்.
அந்த மோதிரம் ஜே என்னும் எழுத்தை வைரங்கள் கொண்டு வடிவமைத்து சிவப்பு நிற இதயத்தினுள் வைத்தது போல் இருந்தது .அந்த மோதிரத்தை கண்டே அவளது யோசனை. அதாவது அந்த மோதிரம் எவர் அளித்தது , அந்த ஜே என்பது எவரைக் குறிக்கும் , அல்லது அது அவளின் பெயரின் தொடக்கமா ?? என கேள்விகள் அவளின் யோசனையில் படையெடுத்தன .
அந்த மோதிரத்தை காணும் பொழுது அவள் அறியாமலே உடல் சிலிர்த்தது ,என்னென்றே அறியாமல் மனம் மகிழ்ச்சியாய் இருந்தது .அவளுக்கு தற்பொழுது எதுவுமே நினைவில்லை, ஆயினும் அவளது சிலிர்ப்புக்கு காரணம் என்ன என்னும் யோசனையுடன் கண்களை மூடிய பொழுது மறுபடியும் காதோரம் ஒரு குரல் கேட்டது . "மித்துமா இந்த மோதிரம் உனக்கு பிடிச்சிருக்காடா" ......சட்டென்று கண் விழித்துப் பார்த்தாள் . அறையில் அவள் மட்டுமே இருந்தாள் ,இது என்ன முதல்ல ஒரு குரல் ராணிம்மா என்றது தற்போது ஒரு குரல் மித்துமா என்கிறது இருக்குரல்களும் யாருடையது?? இரண்டு குரல்களும் ஏன் எனக்கு நெருக்கமாய் தோன்றுகிறது ?? அப்போ இந்த ஜே என்பது இரண்டாம் குரலுக்கு உரியவன் உடையதா அல்லது எனது பெயரின் தொடக்கமா இன்னும் எத்தனை நாட்களுக்கு என்னை இந்த குழப்பங்கள் தொடரப் போகிறது என தெரியலையே ??? ( shobbbbba எம்புட்டு கேள்வி கேக்குறா இந்த பொண்ணு .அதும் தனக்கு தானே வேற பேசுறா ,ஒருவேளை இவளும் விஷ்வாக்கு ஜோடி ஆ இருப்பாளோ??? )
முதல்ல எப்படியாவது ஆஸ்பிட்டல்ல விட்ட வெளிய போகணும் . நான் யாருன்னு தெரிஞ்சுக்கணும் அவள் தனக்குள்ளே முடிவெடுக்கும் பொழுதே வெளியே ஒரு பெண்ணின் குரல் அம்மா என வலியில் கதறியது . அதில் அறையை விட்டு வெளியே வந்தவள் கண்டது , ஒரு பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்ததை தான் . நர்ஸ்கள் எல்லோரும் அவசர அவசரமாக நடந்து கொண்டிருந்தனர் . ஒருவர் மற்றொருவரிடம் கேட்டுக் கொண்டிருந்தார், மாலதி டாக்டர் இன்னும் வரலையா ?அதற்க்கு அந்த மற்றொருவர் , மாலதி டாக்டர் எப்பவும் இந்த டைம்க்கு வந்துடுவாங்க. ஆனா இன்னிக்கு இன்னும் வரலையே இந்த பொண்ணுக்கு வேற வலி வந்துருச்சு என்ன பண்றது .
அந்தப் பெண் வலியில் கதறிக் கொண்டிருந்தார்.. அருகில் இருந்த அவரது கணவர்அவரது கைகளைப் பற்றிக்கொண்டு ப்ளீஸ் டீ பயப்படாத , இப்போ இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம பாப்பா வந்துருவா ...அந்த இளம் வயது கணவன் மனைவியின் வலியில் தனது கண்களில் தோன்றும் கண்ணீரை உள்ளிழித்து , தனது பயங்கள் அனைத்தையும் மறைத்து தான் அறிந்த வகைில் மனைவியை ஆறுதல்படுத்திக் கொண்டு இருந்தான்.
அடுத்த பத்து நிமிடங்களில் விஷ்வா ருத்ரமூர்த்தியாய் கண்கள் சிவக்க அந்த ஹாஸ்பிடலின் ஒரு அறையில் நின்றிருந்தான் . அவனை சுற்றி இருந்த அனைவரும் பயத்தில் அந்த ஏசி அறையிலும் வேர்வையில் குளித்திருந்தனர் .விஷ்வா அனைவரையும் கண்டு, எல்லோரும் என்ன பன்னிட்டு இருக்கீங்க?? டாக்டர் மாலதி இன்னுமா வரல ?? என்று கர்ஜித்தான் .அவனை என்றுமே இவ்வளவு கோபத்துடன் கண்டது இல்லாததால் அனைவரும் செய்வது அறியாமல் நடுங்கினர் .புல்ஷிட் இன்னும் என்ன வேடிக்கை பாக்குறீங்க கோ அண்ட் டூ எனிதிங் ...அந்த patient க்கும் குழந்தைக்கும் எதுனா ஆச்சி உங்க எல்லோரையும் வேலைய விட்டு தூக்கிடுவேன் ...அவன் சொல்லிட்டு இருக்கும் பொழுது தான் கண்டான் .அவனுடைய அந்த ஏஞ்சல் பெண் அவசர அவசரமாக அவனிருந்த அறைக்கு வந்திருந்ததை.
பிரசவ வலியில் துடிக்கும் பெண்ணை கண்டவளின் கால்கள் தானாய் அப்பெண்ணின் அருகில் சென்றன , சென்று அப்பெண்ணை ஆராய்ந்தவள் விஷ்வா ஹாஸ்பிடலினுள் நுழைவதை கண்டே அவன் பின் வந்தாள் .அவனின் கோபத்தை கண்டு தயங்கி நின்றவள் வெளியே அப்பெண் வலியில் துடிப்பதை கண்டு தன் தயக்கம் துறந்து அவசரமாய் விஷ்வா இருந்த அறை கதவை திறந்திருந்தாள் ...
வந்தவள் அவனிடம் டாக்டர் நான் இப்போ தான் அந்த பொண்ண பார்த்தேன் . எனக்கு என்னமோ இன்னும் அறை மணி நேரத்துல குழந்தை தலை திரும்பிடும்னு தோணுது . அதுவும் எந்த சிக்கலும் இல்லாம, ஆனா அந்த பொண்ணு ரொம்ப பலவீனமா இருக்கா என கடகட என்று ஒரு தேர்ந்த gynacologist போல கூறியவளை கண்டு அவ்வறையில் இருந்த அனைவரும் வியந்தனர் .முதலில் நடப்பிற்கு வந்த விஷ்வா அவளின் இச்செயலுக்கான காரணத்தை அறிந்து தன் இதழ்களில் தோன்றிய புன்னைகையை சில நொடிகளில் அழகாய் மறைத்துக்கொண்டான் .
நர்ஸ் போங்க போய் இவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க , ஹலோ ஏஞ்சல் என்ன அமைதி ஆகிட்டீங்க ...போங்க போய் அந்த பொண்ண பாருங்க , அப்றம் உங்கள மாறியே ஒரு குட்டி ஏஞ்சலையும் இந்த உலகுக்கு பாதுகாப்பா கொண்டுவாங்க best of luck ... அழகாய் புன்னைகைத்துக்கொண்டே அவளிடம் சொன்னான் ...
இவ்வளவு நேரமாய் அவனிடம் இருந்த கோபம் அவளை கண்டு விடை பெற்று சென்றதை அறிந்து சுற்றியிருந்த அனைவரும் ஆச்சரியம் கொண்டனர் .அவள் யார் என்று அவர்களில் எவருக்கும் தெரியாது . அவளை இந்த ஆஸ்பிட்டலில் சேர்த்து ட்ரீட்மெண்ட்டும் அவனே பார்த்துக் கொண்டான். அதை பற்றி சிந்திக்க நேரம் இன்றி வெளியே கதறும் பெண்ணின் குரலில் செய்யவேண்டியதை உணர்ந்து அனைவரும் விரைந்தனர் .
அவள் கூறியதை போல் அரை மணி நேரத்தில் குழந்தையின் தலை திரும்பியது . பின் அத்தனை சிரமம் இன்றி சுகப்பிரசவமாய் குழந்தை பிறந்தது . அக்குழந்தையை தனது கைகளில் ஏந்திய நொடி அவளுக்கு இதே அனுபவம் பலமுறை ஏற்பட்டது போல் தோன்றியது . அவள் கண் விழித்தே இரு நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது .அதுவும் அவள் யார் என்று கூட அவள் இன்னும் அறியவில்லை .இந்நிலையில் தான் எவ்வாறு இன்று விரைந்து இவ்வாறு செய்தோம் என அவள் யோசித்து தனக்குள் உழன்றாள் . அவளது யோசனையை கலைத்தது அவளது கைகளில் இருந்த குழந்தையின் அழுகைக் குரல் . அதைக் கே்ட பின்பே வெளியில் இருந்த அப்பெண்ணின் கணவன் நிம்மதிப்பெருமூச்செய்தினான் . இருவருக்கும் பெற்றவர்கள் இல்லா நிலையில் ஆறுதல் கூற எவருமில்லாமல் தவித்திருந்தவனின் கைகளில் அவனது குழந்தையை கொடுத்து உங்கள் மனைவி நன்றாக இருக்கிறார் என்று சொல்லி அவன் தவிப்பை போக்கி விட்டு தன் அறைக்கு வந்தவளின் சிந்தை அனைத்தும் தான் இத்தனை நேரம் செய்ததை பற்றியே இருந்தது . யோசித்ததில் தலை சுற்றுவது போல் தோன்றி அப்படியே மயங்கி விட்டாள்
குழந்தை பிறந்து விட்ட விஷயம் அறிந்த விஷ்வா குழந்தையை சென்று பார்த்துவிட்டு பின்பு இவள் அறைக்கு வந்தவன் , அங்கு அவள் மயங்கி கிடப்பதை கண்டு விரைந்து அவளுக்கு சிகிச்சை செய்தான் .
சரியாக அந்த நொடி ஒரு உருவம் கதவைத் திறந்து மிக வேகமாக உள்ளே வந்தது . கட்டிலில் இருந்தவளை கண்ட அவ்வுருவம் விரைந்து வந்து அவளது கட்டிலுக்கருகில் கீழே மண்டியிட்டு அவளது வலது கையை எடுத்து தனது இரு கரங்களுக்குள் வைத்துக்கொண்டது. கண்கள் இரண்டும் அவளை உச்சி முதல் பாதம் வரை ஏதேனும் ஆபத்தா என வேகவேகமாக அலசி ஆராய்ந்தது . அவ்வாறு எதுவும் இல்லை என்று அறிந்தபின் நிம்மதியுடன் விழி மூடியது. மூடிய விழிகளில் இருந்து முத்தாய் கண்ணீர் துளிகள் ஜனித்தது . இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த விஷ்வா இதை கண்டு கண்மூடி இருந்த உருவத்தின் தோள்களின் மீது தனது கரங்களை வைத்துஅழுத்தி ஜிஷ்ணு என அழைத்தான் . அதில் , தன் வேதனையை மறைத்தவன் , என்னாச்சு விஷ்வா ?? கண்ண விழிச்சிட்டானு தான சொன்ன . ஆனா இப்போ என்ன திரும்பவும் இப்படி இருக்கா ,என்னடா ஆச்சு சொல்லுடா .
மயக்கத்தில் இருந்த அவளுக்கு இவனது இவ்வேதனை குரல் கேட்டது . கேட்ட நொடி அவளது இதயம் வேகமாக துடித்தது ,கண்களை விரித்து அவனை கண்டுவிட எண்ணி ..கண்களை திறக்க போராடினாள் ..இயலாமையில் அவளது உதடுகள் அழுகையோடு முனுமுனுத்தது "ஜி்ணு பாவா" .....
நினைவுகள் தொலைத்த ...
சுயம் அறியா நிலையிலும்
அவனது வார்த்தைகள்
அவளது இதயத்தை தீண்டுமானால் ..
அவனது நேசம் எத்தைகையது ??
அந்நேசம் அவளை
கரை சேர்க்குமா..
அல்லது ...
நினைவறியா சுழலில்
சிக்கி தவிப்பவளை
அதில் மூழ்க செய்யுமா ??
- கரைவாள்
Last edited: