• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஹலோ மிஸ் இம்சையே ஆனந்தத் தொல்லையே -21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ramya Swaminath

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 2, 2020
Messages
2,437
Reaction score
6,519



தமயந்தி கிளம்பிச் செல்லவும், “இந்த உச்சி வெயில் நேரத்துல என்ன முக்கியமான வேலையிருக்கப் போகுது? யாருகூடவே ஊரைச் சுத்த கிளம்பிட்டாங்க.. ரெக்கமென்டேஷன்ல வந்தா என்ன வேணா செய்யலாம்ன்னு நினைப்பு போல?” சத்தமாக மாதவன் புலம்ப,

“ஏன் மாதவன்.. அவங்க வந்து ஒரு வருஷம் ஆகப்போகுது.. வேலையில குறை சொல்லவே முடியாது. தெரியலைன்னாலும் கேட்டு, படிச்சு செஞ்சிடறாங்க. அனாவசியமா லீவ் போடறத்தில்ல. அப்படியிருக்க, நீங்க பேசறது நியாயமா? ஏதோ வேலை இருக்கப் போய்த்தானே போயிருக்காங்க?” ரேவந்த் கேட்கவும்,

“அது என்னவோ படிச்சு ஒருவேலை கிடைக்காதான்னு நிறைய பேர் கஷ்டப்பட்டுட்டு இருக்கும்போது, சிபாரிசுல வரவங்களைப் பார்த்தாலே எனக்கு பிடிக்கிறதில்லை. கோபம் தான் வருது..” அவனது பதிலைக் கேட்டவன்,

“அவங்க என்னைக்குமே அந்த அட்வான்டேஜ் எடுத்ததில்லையே. அவங்க டேலேன்டட், ஹார்ட்வொர்க் செய்யறாங்க. இன்னும் அவங்க என்ன தான் செய்வாங்க? கொஞ்சம் பார்த்து பேசுங்க.. என்னவோ சொல்லணும்ன்னு தோணிச்சு சொல்லிட்டேன்..” ரேவந்த் அதோடு பேச்சை முடித்துக்கொள்ள, சிறிது நேரம் அவனைப் பார்த்த மாதவன் தோள்குலுக்களோடு அந்தப் பேச்சை விடுத்தான்..

பார்க்கிங்கில் கார்த்திக் காத்திருக்கவும், “உங்க காருக்கு என்ன ஆச்சு? ஏன் கார் வாங்க அவசரப்படறீங்க? எங்கயாவது காரை இடிச்சிட்டீங்களா?” காலையிலிருந்து மண்டையைக் குடைந்துக்கொண்டிருந்த கேள்விகளை அவள் அடுக்க, கார்த்திக் கையை நீட்டினான்.

“என்ன ஆச்சு?” கையைப் பிடித்து ஆராயத் துவங்க, அவளது அன்பில் நெகிழ்ந்தவன்,

“எனக்கோ காருக்கோ ஒண்ணும் இல்லைம்மா. எனக்கு அந்தக் காரை மாத்தணும்.. அவ்வளவு தான்.. உன் வண்டி சாவியைக் கொடு. நான் எடுக்கறேன்..” அவன் கேட்கவுமே, அவனை அதிசயப்பிறவி போலப் பார்த்தாள்.

“இப்போவே ஏன் அந்தக் காரை மாத்தனும்ன்னு அடம் பிடிக்கறீங்க? நைட் உங்களுக்கு ஃப்ளைட் இருக்கு. போயிட்டு வந்து நிதானமா பார்த்து வாங்கிக்கலாம்ல? என்ன அடம்டா சாமி..” புலம்பிக்கொண்டே வண்டியின் சாவியைக் கொடுத்தவள், ஹெல்மெட்டையும் நீட்டினாள்.

அதை அணிந்துக் கொண்டு, “சீக்கிரம் வண்டியில ஏறு..” என, அவனை முறைத்து,

“ஆபிசை விட்டு வெளிய போய் நில்லுங்க. நான் வரேன்..” என்றபடி முன்னே நடக்க, ‘இவ ஒருத்தி நேரம் காலம் இல்லாம..’ புலம்பியபடி அவள் சொன்னதைச் செய்தவன், அவளுடன் கார் ஷோரூமிற்குச் சென்றான்.

‘உட்கார்ந்து பாரு. டெஸ்ட் டிரைவ் செய்துப் பாரு.’ அவன் சொல்லவுமே, அவனை விசித்திரமாய் பார்த்தபடி, சொன்னதைச் செய்தவள்,

“நல்லா இருக்கு. நீங்க ட்ரை பண்ணுங்க.” என,

“இல்லம்மா.. உனக்கு ஈசியா இருந்தா போதும்.. நான் ஏற்கனவே ஓட்டி இருக்கேன். உனக்கு ஓகே தானே. இதுவே புக் பண்ணிடலாமா? கலர் சூஸ் பண்ணு..” என, அவன் பக்கம் சாய்ந்து,

“விட்டா ’ஒரு கார் பார்சல்’ன்னு சொல்லுவீங்க போலருக்கே. வாய் வலிக்க, கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கேன். பதில் வருதா பாரு.” நக்கலடிக்க, அவளது கையுடன் கைக் கோர்த்துக் கொண்டான்.

அவனது முகத்தைப் பார்க்கவும், “எனக்கு அந்தக் கார் வேண்டாம். பார்த்தாலே ஒரு மாதிரி கில்டியா பிடிக்காம போயிருச்சு. அது தான் உடனே மாத்தறேன். இப்போ புக் பண்ணிட்டா ஊருல இருந்து வந்ததும் டெலிவெரி எடுத்துக்கலாம்.” விளக்கம் சொன்னவன், காரை புக் செய்துவிட்டே வெளியில் வந்தான்.

வண்டியின் அருகில் வந்ததும், “நிஜமாவே எதுவும் அடிப்படலைல. உங்க கார் எங்க?” என்று கேட்டபடி, கோவில் திருநீரை நீட்ட,

“எனக்கு அதுல எல்லாம் நம்பிக்கை இல்ல..” அவனது தயக்கத்தைப் பார்த்தவள், திருநீரை அவனது நெற்றியில் வைத்துவிட்டு,

“ஆண்டவா.. இந்தப் பிள்ளைக்கு நல்லபுத்தியைக் கொடு..” என்று வேண்ட, “கொழுப்பு உனக்கு. வாயாடி..” என்று சிரித்தவனின் மனது நிரம்பியிருந்தது.
 




Ramya Swaminath

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 2, 2020
Messages
2,437
Reaction score
6,519
“கோவில் பிரசாதம் கொடுத்தா எடுத்துக்கணும்.. புரியுதா?” அவளது மிரட்டலில் பவ்யமாக தலையசைத்து,

“நான் காரை சேல் பண்ணிட்டேன். போதுமா? சாப்பிடப் போகலாமா?” அவன் கேட்கவும்,

“ஹான்.. சாப்பிட்டேன்.. ஒரு மணி நேரம் தான் பெர்மிஷன் கேட்டு வந்தேன். போகலாமா? லேட் ஆகிருச்சு..” என அவன் வண்டியை எடுக்க, அவனது தோளைப் பிடித்து அவள் ஏறி அமரவும், அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“இம்சை.. அப்படியே பேசாம ஒரு பைக்கையும் வாங்கிடலாமா? இப்படி போறதும் நல்லா இருக்கே.” சீரியஸாகக் கேட்டவனின் தோளில் அடித்தவள்,

“என் வண்டி இருக்கு போதும்.. இப்போ வண்டியை எடுங்கப் போறீங்களா இல்ல நான் ஓட்டவா? எனக்கு டைம் ஆகுது..” என, அவளது கோபத்தை ரசித்தபடி வண்டியை எடுத்தான்.

“சரி எல்லாம் பேக் பண்ணிட்டீங்களா? சிரீஷ் ஊருக்குப் போயிட்டாங்களா?” அவளது கேள்விகளுக்கு பதிலளித்தபடி அலுவலகத்திற்கு வந்தவன்,

“நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு கிளம்பிருவேன். நீ வெளிய போகும்போது ஜாக்கிரதையா வண்டியை ஓட்டு. நான் தினமும் நைட்ல கால் செய்யறேன். என்னை நல்லா மிஸ் பண்ணு. ஏன்னா நானும் உன்னை மிஸ் பண்ணுவேன்..” அவனது கண்கள் அவளது முகத்தினில் பதிய, தமயந்திக்கோ தொண்டையடைத்தது..

“நீங்களும் வேலையோட ஒழுங்கா ரெஸ்ட்டும் எடுங்க. ஒருவாரமாவே நல்ல அலைச்சல். அப்பப்போ மெசேஜ் போடுங்க..” அதற்கு மேல் அழுகை வரும்போலிருக்க,

“நான் ஃப்ளேஸ்க்குப் போறேன். உங்களுக்கு என்னப்பா நீங்க லேட்டா வந்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க. எனக்கு அப்படியா? பை..” கேலி செய்தபடி நகர்ந்தாள்.

“என்னைக் கேட்கவும் ஒருத்தர் இருக்காங்களே.. இத்தனை நேரம் கேள்வியை மட்டும் தானே கேட்டுட்டு இருந்தாங்க.” அவனது பதிலில், டக்கென்று திரும்பி அழகு காட்டியபடி லிப்டின் உள்ளே செல்ல,

“நான் சாப்பிட்டு வரேன். பசிக்குது..” உணவுத் தளத்தின் பட்டனை அழுத்த, அவளுக்கும் வயிறு கெஞ்சியது.

‘கொஞ்ச நேரம் சீட்டுக்கு போயிட்டு அப்பறம் போய் எதையாவது சாப்பிட்டு வரலாம்..’ என்று நினைத்தவள், தனது இடத்திற்குச் சென்று, கடகடவென்று தண்ணீரை குடிக்க, ரேவந்த் அவளைப் பார்த்தான்.

“சாப்பிடலையா?” அவனது கேள்விக்கு மறுப்பாக தலையசைத்து,

“கொஞ்ச நேரம் கழிச்சு போய் ஏதாவது சாப்பிட்டு வரேன். இப்போ டைம் ஆகிருச்சு..” என்றவள், தனது லேப்டாப்பை இயக்கினாள்.

மீண்டும் அவள் தண்ணீரைப் பருகவும், நேராக கேண்டீன் சென்ற ரேவந்த், அங்கு கார்த்திக் இருப்பதைப் பார்த்துக் குழம்பினான். ‘இவரு இங்க சாப்பிட வந்திருக்காருன்னா ஒருவேளை அவ சாப்பிட்டான்னு நினைச்சிட்டாரோ?’ என்று யோசிக்க, அவனைப் பார்த்த கார்த்திக், அருகில் வந்தான்.

“ஹாய் ரேவந்த்.. எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா?” அவன் கேட்கவும், திகைத்த ரேவந்த்,

“சொல்லுங்க சார்.. என்ன செய்யணும்?” என்று கேட்கவும்,

“இதை எல்லாம் தமயந்திக்கிட்ட கொஞ்சம் கொடுக்க முடியுமா? சாப்பிட கூப்பிட்டதுக்கு சாப்பிட்டேன்னு பொய் சொல்லிட்டு, வேலை செய்யப் போயிட்டா சின்sசியர் சிகாமணி..” என்றபடி ஒரு கவரைக் கொடுக்க, ரேவந்திற்கு வியப்பாக இருந்தது.

“சார்.. அவங்களை சாப்பிட்டு தான் போகணும்ன்னு சொல்லி இருக்கலாமே? தண்ணிய குடிச்சிட்டு உட்கார்ந்திருக்காங்க..” அவன் சொல்லவும்,

“கேட்டதுக்கு தான் கால்ல சுடுதண்ணிய கொட்டிக்கிட்டவளைப் போல ஓடி வந்தாளே..” என்று புலம்ப, அவன் கொடுத்த கவரை வாங்கிக்கொண்டு,

“நானும் அவங்களுக்கு ஏதாவது வாங்கிட்டு போகலாம்ன்னு தான் வந்தேன். தேங்க்யூ சார்.” என்றவன், அப்பொழுது தான் கார்த்திக்கின் நெற்றியிலிருந்த திருநீரை கவனித்து, ‘கோவிலுக்கு போயிட்டு வந்திருப்பாங்களோ? அதனால தான் சாப்பிடாம போனாங்களோ?’ யோசிக்க,

“தேங்க்ஸ் ரேவந்த். இப்போ நீங்க இங்க வரலைன்னா நான் கொண்டு வந்து கொடுக்கலாம்ன்னு இருந்தேன். அப்பறம்..” என்று இழுத்து, “தேங்க்ஸ்..” என்று முடிக்க,

“புரியுது சார்..” குறும்பாகச் சொன்ன ரேவந்த், அவனிடம் விடைப்பெற்று, அவளது அருகில் பையை வைக்க, தமயந்தி அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

“மேலே இருந்து வந்தது..” கேலியாகச் சொல்லவும், அந்தக் கவரைத் திறந்துப்பார்த்தவள்,

‘வாவ் ஃப்ரைட் ரைஸ்.. ஃப்ரெஞ்சு ப்ரைஸ்.. லவ் யூ மை மேன்..’ மனதினில் சொல்லிவிட்டு, வேலையுடன் உண்ணவும் செய்ய, வயிறுடன் மனதும் நிறைந்துப் போனது..
விமானம் ஏறும் வரை கார்த்திக், அவளிடம் பேசிக்கொண்டிருக்க, “சரிம்மா.. ஃப்ளைட்க்கு கால் செய்துட்டாங்க. ரீச் ஆகிட்டு மெசேஜ் போடறேன்.. நாளைக்கு ஆபிஸ்க்குப் போகணும்.. நீ தூங்கப் போ.. பைம்மா..” என்று விடைப்பெற,
“ஹ்ம்ம் பை கார்த்திக்.. டேக் கேர்.” விடைப்பெற்று போனை வைத்தவளுக்கு அந்த பிரிவு மனதை அழுத்தியது. உறக்கம் வராமல் புரண்டு எழுந்து, அலுவலகத்திற்கு கிளம்பியவளின் தலை வின்வின்னென்று வலித்தது.
“தலைவலிக்குதுன்னா பேசாம லீவ் போடேன்..” அவளது தலைக்கு தைலத்தைத் தேய்த்தபடி பாட்டி சொல்ல, அவரது மடியில் சாய்ந்தவள்,
“ஒரு மாதிரி லோன்லியா இருக்கு பியூட்டி. கடுப்பாயிருக்கு. அழுக வரும்போல இருக்கு..” தனது மனதைச் சொல்ல,
“பேசாம கல்யாணம் பண்ணிக்கோயேன்..” என்றபடி அவளது தலையைக் கோத, சில நிமிடங்களில்,

“ஆசை தோசை.. சரி பியூட்டி நான் ஆபிஸ்க்கு கிளம்பறேன். டைம் ஆகுது.” சூடாக போட்டுக்கொடுத்த டீயைக் குடித்தவள், அலுவலகத்திற்குச் செல்ல, அதை விட அவளுக்கு சோதனைக் காத்திருந்தது..
 




Ramya Swaminath

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 2, 2020
Messages
2,437
Reaction score
6,519
அவனில்லாத கட்டிடமும் உயிரற்றது போலிருக்க, ‘என்னையா என்னை இப்படி செய்து வச்சிருக்க? உன்னை யாரு அன்னைக்கு பீச்சுக்கு வரச் சொன்னது? அத்தனை பேர் என்னை வேடிக்கைப் பார்த்த பொழுது நீ மட்டும் என்னை ஏன் விழாம பிடிச்ச? இப்போ என்னை வதைக்கிற..’ அவனைத் திட்டியவள், பொழுதுகளை நெட்டித்தள்ளினாள்.

ஒருவாரம் கடந்திருந்த நிலையில், ஒரு சனிக்கிழமை இரவு அவளது அறையில் கார்த்திக்குடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தாள். “இல்ல.. இல்ல.. செம ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா? இன்னைக்கு பீச்ல விளையாடிட்டு இருந்தேனா?” அவள் கதை சொல்லிக்கொண்டிருக்க, குழந்தையை உறங்க வைத்துக்கொண்டிருந்த விஜய்க்கு அவளது குரல் எட்டியது.

மணியைப் பார்த்தவன், “இந்த நேரத்துல இவ யாருக்கிட்ட பேசிட்டு இருக்கா?” யோசனையுடன் அவளது கதவினருகில் சென்று கவனிக்க, தொடர்ந்து அவளது குரல் ஒலித்தது.

சில நிமிடங்கள் நின்றவன், அவளது கதவைத் தட்ட, “ஹையோ யாரோ கதவைத் தட்டறாங்க..” கார்த்திக்கிடம் ரகசியமாகச் சொன்னவள், மெல்ல கதவைத் திறந்தாள்..

அங்கு குழந்தையுடன் நின்றுக் கொண்டிருந்த விஜய்யைப் பார்த்தவள், “என்னாச்சு மாமா.. குட்டா தூங்கலையா?” அவள் கேட்கவும்,

“யாருக்கிட்ட இந்த நேரத்துல பேசிட்டு இருக்க?” விஜயின் கேள்வியில், அவளிடம் தாவியக் குழந்தையை தூக்கிக்கொண்டவள்,

“சும்மா வந்தனா கூட அரட்டையடிச்சிட்டு இருந்தேன் மாமா.. அவ இப்போ தான் ஷிப்ட் முடிச்சிட்டு வந்தா..” எனவும், அவளது கையிலிருந்த போனில் அதைக் கேட்டவனோ பல்லைக் கடித்தான்.

‘நந்தி.. அது எப்படிடா நடுராத்திரியில கூட மூக்கு வேர்க்குது உனக்கு..’ கார்த்திக் புலம்ப,

“ஓ.. இவனைத் தூங்க வைக்க வெளிய வந்தேன். உன்குரல் கேட்டுச்சு.. அது தான்..” அவன் சொல்லவும்,

“அவனோட பால் பாட்டிலை கொடுங்க மாமா.. நான் அவனை இங்கேயே தூங்க வைக்கிறேன்..” எனவும், அவளது கையில் பால் பாட்டிலைக் கொடுத்தவன்,

“தேங்க்ஸ் தமயந்தி.. ரொம்ப நேரமா ட்ரை செய்யறேன் முடியல. நீ அவன் அழுதான்னா எனக்கு கால் பண்ணு.. நான் வந்து தூக்கிட்டு போறேன்..” என்றவன், அவனது அறைக்குச் செல்ல, குழந்தையை பெட்டில் கிடத்தியவள், தனது மொபைலை எடுத்தாள்.
‘உர்ர்’ரென்று கார்த்திக் காத்திருக்கவும், ‘ஹையோ.. இப்போ இவரு வேற என்னை கடிப்பாரே?’ என்று நினைத்தவள், “கா..ர்த்..திக்..” என்று இழுக்க,

“போ.. போய் உன் குட்டா கூட விளையாடு.. நான் ஊர் சுத்தப் போறேன்.. கொஞ்ச நேரம் பேச விடறானா அந்த விஜய்.. நந்தி.. நந்தி..” என்று திட்ட,

“இந்த நேரத்துல ரூம்ல குரல் கேட்டா என்னவோ ஏதோன்னு நினைக்க மாட்டாங்களா? சும்மா எங்க மாமாவைக் குறை சொல்லாதீங்க.” என்றவள், ‘கார்த்திக்.’ மீண்டும் இழுக்க,

“இப்போ என்ன குட்டாவைத் தூங்க வைக்கப் போற? அப்படித் தானே?” அவனது கேள்விக்கு, பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு தலையசைக்க, அவளது மடியிலேறிய குழந்தை, மொபைலை எட்டிப்பார்த்து, அவனைப் பார்த்துச் சிரித்தது.

அதைப் பார்த்ததும் அவனது முகத்தினிலும் புன்னகை மலர, “டேய் குட்டிப்பையா.. என்னோட டைமை நீ அடிக்கடி பிடுங்கிடற. உன்னை நேர்ல பார்க்கும்போது என்ன செய்யறேன் பாரு..” என, அவள் குழந்தையின் கன்னத்தில் முத்தமிடவும், அவளது தலைமுடியைப் பிடித்திழுத்து அவளது கன்னத்தில் கடித்து எச்சில்படுத்த,

“அவளைக் கடிக்காதேடா. வலிக்கப் போகுது.. என்னை வெறுப்பேத்திட்டு இருக்கான் பாரு..” அவன் புலம்ப, அவளது கன்னங்கள் சூடேறியது..

“அதெல்லாம் வலிக்காது.. சரி.. பைப்பா... ஹேவ் எ நைஸ் டே.. நான் அவனைத் தூங்க வைக்கிறேன்..” என்றவள், விடைப்பெற்று போனை வைக்க, குழந்தையை பிடித்திருந்தவளை ரசித்தவனின் மனதினில் ஆயிரம் கற்பனைகள் விரிந்தது.

நாட்கள் நகர, அன்று கார்த்திக் திரும்பி வருவதாகச் சொல்லியிருந்த நாள்.. அவனது பிறந்தநாளும் கூட. இரண்டு நாட்களாக பேக்கிங் ஷாப்பிங் என்று அவனது பொழுதுகள் கழிய அவளிடம் சரியாக பேச முடியாமல் போனது. அவன் விமானம் ஏறியதாக சொன்னச் செய்திக்குப் பிறகு, வந்து சேர்ந்த செய்தி எதுவுமில்லை.

கீர்த்திகாவிற்கு போன் செய்துக் கேட்க, ‘தெரியலையேக்கா.. அப்பாவும் நானும் அங்க தான் போயிட்டு இருக்கோம். பார்த்துட்டு மெசேஜ் அனுப்பறேன்.’ என்று சொன்னவளிடமிருந்தும் அதற்குப் பிறகு எந்தச் செய்தியுமில்லாமல் போனது..

அவளது மனது படபடக்க, கார்த்திக்கின் போனிற்கு முயன்றாள். அவனது போனும் எடுக்கப்படாமல் போகவும், அவளது கவனம் வேலையில் பதிய மறுத்தது..

“என்னாச்சு தமயந்தி?” அருகிலிருந்த ரேவந்த் கேட்க,

“இன்னைக்கு கார்த்திக் வந்திருக்கணும். போனும் எடுக்கல. அவங்க தங்கையை எனக்கு மெசேஜ் பண்ணச் சொன்னா அவளும் செய்யல.. இங்க எனக்கு கான்சன்ட்ரேட் செய்ய முடியல...” அவளது பதிலைக் கேட்டவன்,

“ஒருவேளை ஃப்ளைட் டிலேவா இருக்குமோ.. கொஞ்ச நேரம் வெயிட் செய்துப் பாருங்க.” எனவும், ஒருபெருமூச்சுடன் பார்வையை மீண்டும் கணிணியில் பதித்தவள்,

“போய் ஏதாவது ஜூஸ் குடிச்சிட்டு வரேன்.. மண்டை காயுது..” என்றவள், கேஃபேடீரியாவிற்குச் sசெல்ல,


“எப்போப்பாரு சாப்பிடற இடத்துலேயே சுத்திட்டு இருந்தா இங்க வேலையை யாரு செய்யறது?” மாதவனின் குரல் அவளைத் தொடர, அதை மனதில் ஏற்கும் நிலையில் அவளில்லை. அவள் சென்ற சிறிது நேரத்தில் கார்த்திக், விஜயேந்தருடன் அலுவலகத்தினுள் நுழைந்தான்.
 




Ramya Swaminath

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 2, 2020
Messages
2,437
Reaction score
6,519
அவனைப் பார்த்ததும், “ஹையோ இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு இப்போ போய் ஜூஸ் குடிக்கப் போயிருக்காங்களே..” நினைத்துக்கொண்ட ரேவந்த், தமயந்திக்கு அழைக்க, அவளது செல்போன் அங்கேயே குரல் கொடுத்தது..

தனது அறைக்குள் நுழையும்பொழுது கார்த்திக்கின் பார்வையும் அவளது இடத்தில் பதிந்து, யோசனையுடன் ரேவந்தின் மீது படிந்தது..

அவன் மேலே கைக்காட்டவும், விஜயேந்திரனின் அருகில் சென்று ஏதோ சொன்னவன், அவசரமாக அவளைத் தேடிச் சென்றான். ஒரு டேபிளில் ஓரமாக அமர்ந்து ஏதோ யோசனையுடன் ஜூஸை உரிஞ்சிக்கொண்டிருந்தவளின் எதிரில் அமர்ந்தான்..

அவனைப் பார்த்தவள், ‘ம்ப்ச்..’ சலிப்புடன் முகத்தைத் திருப்பிக்கொள்ள,

“ஜூஸ்ல உப்பு எல்லாம் சரியா இருக்கா?” கிண்டலுடன் கேட்டவனைத் திகைப்புடன் பார்த்தவளின் கண்களிலிருந்து கரகரவென்று கண்ணீர் வழிந்தது..

“ஹே.. தமயந்தி.. என்னாச்சு? ஏன் இப்போ அழற? அழாதேம்மா.. ப்ளீஸ் என்னாச்சு உனக்கு?” அவன் பதற,

“காலையில இருந்து ஏன் போன் எடுக்கல? நீங்க வந்துட்டீங்கன்னு ஏன் மெசேஜ் செய்யல?” படபடவென்று கேட்கவும்,

“சும்மா உனக்கு சர்ப்ரைஸ் தரலாம்ன்னு பார்த்தா நீ இங்க எனக்கு சர்ப்ரைஸ் தந்துட்டு இருக்க? அழு மூஞ்சி..” அவன் செய்த கேலியில் அவனை முறைத்தவள், வேகமாக ஜூஸை உறிஞ்சினாள்.

“சாயந்திரம் கார் எடுக்கப் போகலாமா? அப்படியே வெளிய போகலாம்.. பர்த்டே ட்ரீட்க்கு..” அவன் சொல்லவும், அவளது இதழ்களில் மெல்லிய புன்னகைத் தோன்ற,

“விஷ் யூ எ வெரி ஹேப்பி பர்த்டே பாஸ். ட்ரீட்ன்னு சொல்லிட்டீங்க.. கிளம்பிடுவோம்.. எப்போ போகணும். எதுவா இருந்தாலும் ஒரு ஆறு ஆறரை மணிக்கு மேல சொல்லுங்க பாஸ். கொஞ்சம் கருணை காட்டுங்க..” அவனை வாழ்த்திவிட்டு கெஞ்சிக் கேட்கவும்,

“சரிம்மா.. ஆறு மணிக்கு வந்து எடுத்துக்கச் சொல்லிருக்காங்க. ஒரு அஞ்சரை மணிக்கா கிளம்பலாமா? உன்னோட வண்டி இங்கேயே இருக்கட்டும். நாளைக்கு எடுத்துக்கலாம்..” திட்டம் தீட்ட, அவளோ

“பெர்மிஷனா?” என்று இழுக்க,

‘ஆம்’ என்று தலையசைத்து, “அப்பா வந்திருக்காங்க.. வா.. கீழ போகலாம்.” என்ற தகவல் சொல்லவும்,

“ஹையோ இப்போ சொல்றீங்க.. கீழ போகலாம் வாங்க..” என்றவள், வேகமாக லிப்டில் நுழைய, கார்த்திக் அவளைப் பின்தொடர்ந்தான்.

வேகமாக அவளது இடத்திற்குச் செல்லவும், விஜயேந்தர் அவளைப் பார்த்து புன்னகைக்க, பதிலுக்கு புன்னகைத்தவள், அமைதியாக தனது இடத்திலமர்ந்தாள். கார்த்திக் அறைக்குள் செல்லவும்,

“என்னடா.. அவக்கிட்ட கார் எடுக்கப் போகனும்ன்னு சொல்லிட்டயா?” என்று கேட்க,

“சொன்னேன்.. பெர்மிஷன் போடணுமான்னு இழுக்கறா அந்த சின்சியர் சிகாமணி. நீங்க வந்திருக்கீங்கன்னு சொல்லவும் இங்க ஓடி வந்துட்டா..” அவன் சொல்லவும், தமயந்தியின் அருகில் சென்று நின்றார்.

அவரைப் பார்த்தவள் விழித்துக்கொண்டு எழுந்து நிற்கவும், “எப்படிம்மா இருக்க? வேலையெல்லாம் எப்படிப் போகுது?” என்று கேட்க,

“நல்லா இருக்கேன் அங்கிள். நீங்க எப்படி இருக்கீங்க? நல்லா போகுது அங்கிள்..” அவளது குரல் மைக் வைத்துத் தான் கேட்க வேண்டும் போல ஒலித்தது.

“வீட்டுக்கு வந்து ரொம்ப நாளாகிருச்சேம்மா? லட்டு வேற உன்னைப் பார்த்து ரொம்ப நாளாகுதுன்னு சொல்லிட்டு இருக்கா.. சாயந்திரம் வீட்டுக்கு வாயேன். அவ ரொம்ப ஹேப்பியா ஆகிடுவா. சர்ப்ரைஸ் பண்ணலாம்..” அவர் சொல்லவுமே, திரும்பி கார்த்திக்கைப் பார்த்தவள், விஜயேந்தரனைப் பார்த்து விழித்தாள்.

“ஹையோ அப்பா இப்போ அவளை ஏன் பயமுறுத்திட்டு இருக்கீங்க? பாருங்க அவ பேசத் தெரியாதவ போல முழிக்கிறா.. ஆபிஸ் டைம்ல அவளை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்..” கார்த்திக் சொல்லவும்,

“இங்க நான் தான் சேர்மேன்.. நான் சொல்றதை அவ செய்வ. நீ உன் வேலையைப் பாரு..” அவனிடம் சொன்னவர்,

“சாயந்திரம் ஒரு அஞ்சரை மணிக்கா கிளம்பி வரியாம்மா?” அவளிடம் கேட்டு, அவள் கார்த்திக்கைப் பார்க்கவும்,

“மாதவன். இன்னைக்கு தமயந்திக்கு பெர்மிஷன் கொடுங்களேன். அவளை ஒரு அஞ்சரைக்கு அனுப்பிடுங்க..” எனவும், தமயந்தி திகைத்து,
‘அங்கிள்..’ என்று அழைத்தாள்.

“என்னம்மா வரல்ல?” அவர் கேட்கவும், “ப்பா.. கொஞ்சம் அவளை பயமுறுத்தாம வாங்க.. அவ அழுதுடப் போறா..” கார்த்திக் அவரது காதைக் கடிக்க,

“என்ன தமயந்தி சேர்மன் கேட்கறார் இப்படி தயங்கறீங்க? போயிட்டு வாங்க..” மாதவன் வாய்த் திறக்கவும், ரேவந்த் தமயந்தியைப் பார்க்க, அவள் மீண்டும் கார்த்திக்கைப் பார்க்க, அவன் கண்களை மூடித் திறக்கவும், அவரைப் பார்த்து தலையசைத்தாள்.

“சரி அங்கிள்.. நான் வரேன்..” அவள் ஒப்புக்கொள்ள,


“குட் கேர்ள்.. அப்பறம் பார்க்கலாம்மா.. பை..” என்றபடி மீண்டும் தனது அறைக்குள் செல்லவும், டேபிளில் இருந்த அவளது கையை வருடியவிட்டு கார்த்திக் அவரைப் பின்தொடர, சேரில் அமர்ந்தவள் ஒரு பெருமூச்சை வெளியிட்டாள்.
 




Ramya Swaminath

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 2, 2020
Messages
2,437
Reaction score
6,519
சிரித்துக் கொண்டே தண்ணீர் பாட்டிலை ரேவந்த் நீட்ட, வாங்கிப் பருகியவள், மீண்டும் கார்த்திக்கைப் பார்க்க, தந்தை மகன் இருவரும் மும்முரமாக எதுவோ பேசிக்கொண்டிருந்தனர்.. ‘கொஞ்ச நேரத்துல அங்கிள் பயமுறுத்திட்டு போயிட்டாரே? இந்த கார்த்திக் பக்கத்துல நின்னு வேடிக்கைப் பார்த்துட்டு இருக்காரு. வரட்டும் கவனிக்கறேன்..’ மனதினில் கருவ, அவளது அருகில் ஜுனிதா வந்தமர்ந்தாள்.

கேள்வியாக அவள் பார்க்கவும், “என்ன உனக்கு சப்போர்ட் பலமா இருக்கு? நீ பயந்துப்போயிடுவியாமே?” அவள் கேலி செய்ய,

“நிஜமா அங்கிளைப் பார்த்து நான் டென்ஷனாகிட்டேன் நீ வேற..” அவளது பதிலில், அவளது தோளை இடித்த ஜூனிதா,

“ஆனாலும் ஹேன்ட்சமோட பார்வை உன்மேல தான் இருந்தது தெரியுமா? என்னம்மா ஏதாவது போகுதா?” அவளது கேள்விக்கு, வேகமாக மண்டையாட்டியவள்,

“இன்னும் கொஞ்ச நேரம் இங்க நீ இருந்தா மேடியோட அனல் பார்வை என் மேல விழும்.. நான் அப்படியே பஸ்பமாகிடுவேன்..” அவளது பதிலைக் கேட்ட ஜுனிதா, இடத்திற்குச் செல்ல,

“என்ன இன்னைக்கு ஸ்பெஷல்? ரெண்டுபேருமே வந்து இங்க நிக்கறாங்க?” ரேவந்தின் கேள்விக்கு,
‘கார்த்திக்கோட பர்த்டே..’ என்ற பதிலைக் கேட்டு,

“ஓ.. வீட்ல செலிப்ரேஷனா? நடத்துங்க மேடம்.” ரேவந்த் கேலியுடன் திரும்பிக்கொள்ள, அமைதியாக அந்த நாளை தமயந்தி கடத்தினாள்..

மணி ஐந்தை நெருங்கும் வேளையில், “நாம ஆட்டோல போயிடலாம். நான் கிளம்பும்போது நீயும் கிளம்பிடு..” கார்த்திக்கிடமிருந்து செய்தி வர, தமயந்தி குழப்பமாகப் பார்த்தாள்.

“அங்கிள் வீட்டுக்கு வரச் சொன்னாங்களே?” அவள் கேட்க,

“ஹான்.. அது அப்படித் தான்.. நான் கிளம்பினதும் கிளம்பிரு..” என்று அனுப்பிவிட்டு குறும்புடன் அவளைப் பார்க்க, அந்தப் பார்வையைக் கண்டு தலையிலடித்துக் கொண்டவள், வாஷ்ரூமிற்குச் சென்று முகத்தைக் கழுவிக் கொண்டு வந்தாள்.

கார்த்திக் கிளம்பத் தயாராக, தமயந்தியும் தனது பையுடன் மாதவனிடம் சென்று விடைப்பெற, “அது தான் பெரியயிடத்துல இருந்து அழைப்பு வந்திருக்கே. அப்பறம் நான் அனுப்பலைன்னா எப்படி? போங்க போங்க..” அவனது பதிலில் சில நொடிகள் தயங்கி நின்றவள்,

“தேங்க் யூ அண்ட் பை மாதவன்..” என்றவள், அனைவருக்கும் கையசைத்துவிட்டு, கார்த்திக்கைத் தொடர்ந்து நடக்க, ரேவந்த்தின் அருகில் வந்த ஜூனிதா,

“எனக்கு என்னவோ இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து போகறா போல இருக்கே..” என்று இழுக்க, தோளைக்குலுக்கி ‘இடத்திற்குச் செல்லுமாறு கைக்காட்ட, அவனை முறைத்தபடி அமர்ந்தாள்..

அலுவலகத்தை விட்டு வெளியில் வந்ததும், “கேப் புக் பண்ணிருக்கேன் இம்சை. காரை ரெடியா வைக்கச் சொல்லிட்டேன்..” என்றபடி அவளது அருகில் வர, அவனிடம் ஒரு கவரை எடுத்து நீட்டினாள்..

“என்னம்மா இது?” ஆவலுடன் வாங்கிப் பார்க்க,

“உங்களுக்கு பர்த்டேக்கு ஷர்ட் வாங்கினேன் கார்த்திக். நீங்க செய்த கலாட்டாவுல காலையில கொடுக்க முடியல..” அவள் சொல்லவுமே,

“ரொம்ப நல்லா இருக்கு இம்சை.. கலரும் சூப்பரா இருக்கு.” என்றவனின் செல்போன் சிணுங்க, அதை எடுத்துப் பேசி, கேப் வரவும், அவளுடன் கார் ஷோரூமிற்குச் சென்றான்..

அங்கு கார் தயாராக நிற்க, “நீ காரைப் பார்த்துட்டு இரு.. ஒரு ரெண்டு நிமிஷம் நான் வந்துடறேன்..” என்றவன், அங்கிருந்தவரிடம் எதுவோ கேட்டுவிட்டு உள்ளே செல்ல, புதிய காரை வருடி, அவன் மேல்மேலும் வளர வாழ்த்தினாள்..

காரைக் காட்டி அவளுக்கு அனைத்தையும் விளக்கம் சொல்ல, அவள் கொடுத்த சட்டையை அணிந்து வெளியில் வந்த கார்த்திக்கைப் பார்த்தவளின் கண்கள் அவனிடமே ஒட்டிக் கொண்டது.. “எப்படி இருக்கு?” அவளது அருகில் வந்தவனின் குரலில் கலைந்தவள்,

“ரொம்ப நல்லாருக்கு.. பிட்டிங் சரியா இருக்கா?” அவனது தோளில் பார்வைப் பதிய கேட்டவளின் கையைப் பிடித்துக் கொண்டு, “பெர்ஃபெக்ட். எனக்கு இந்த பாட்டர்ன் பிடிச்சிருக்கு..” என, அவனது கையை அழுத்தியவள்,

“அவங்க வெயிட் செய்யறாங்க..” எனவும், சாவியை அவளிடம் கொடுக்கும்படிக் கூற,

“நானா?” அவள் தயங்க,

“நீயே தான்.. காரை எடு..” எனவும், அவனைப் பார்த்து விழிக்க, “எடுன்னு சொல்றேன்ல.. பயப்படாம எடு..” எனவும், அவன் சொன்னபடியே சிறிது தூரம் நகர்த்தி நிறுத்தினாள்.

அதைப் பார்த்த கார்த்திக்கின் மனதினில் எதையோ கழுவிக் களைந்த நிம்மதி மனதினில் தோன்ற,
“போகலாமா?” என்று கேட்க,


“முதல்ல கோவிலுக்கு.. அப்பறம் எங்க போகணுமோ போகலாம்..” அவள் சொல்லவும், அவனிருந்த மனநிலையில் மறுக்கத் தோன்றாமல், அவளுடன் கோவிலுக்குச் சென்றான்..
 




Ramya Swaminath

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 2, 2020
Messages
2,437
Reaction score
6,519
ஹலோ தோழமைகளே..

இதோ அடுத்த பகுதியைப் பதித்துவிட்டேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களைத் தவறாமல் பதிவிடுங்கள். உங்களது கருத்துக்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.. உங்களது கருத்துக்களைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றிகள்..
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,601
Reaction score
7,780
Location
Coimbatore
அருமையான பதிவு
விஜய் இன்னும் கொஞ்சம்
மச்சினியை கவனிக்கலாம்:mad: :p 😛
அப்பா மகனுக்கு நல்லா
உதவி செய்றாறு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top