- Joined
- Aug 2, 2020
- Messages
- 2,437
- Reaction score
- 6,519
தமயந்தி கிளம்பிச் செல்லவும், “இந்த உச்சி வெயில் நேரத்துல என்ன முக்கியமான வேலையிருக்கப் போகுது? யாருகூடவே ஊரைச் சுத்த கிளம்பிட்டாங்க.. ரெக்கமென்டேஷன்ல வந்தா என்ன வேணா செய்யலாம்ன்னு நினைப்பு போல?” சத்தமாக மாதவன் புலம்ப,
“ஏன் மாதவன்.. அவங்க வந்து ஒரு வருஷம் ஆகப்போகுது.. வேலையில குறை சொல்லவே முடியாது. தெரியலைன்னாலும் கேட்டு, படிச்சு செஞ்சிடறாங்க. அனாவசியமா லீவ் போடறத்தில்ல. அப்படியிருக்க, நீங்க பேசறது நியாயமா? ஏதோ வேலை இருக்கப் போய்த்தானே போயிருக்காங்க?” ரேவந்த் கேட்கவும்,
“அது என்னவோ படிச்சு ஒருவேலை கிடைக்காதான்னு நிறைய பேர் கஷ்டப்பட்டுட்டு இருக்கும்போது, சிபாரிசுல வரவங்களைப் பார்த்தாலே எனக்கு பிடிக்கிறதில்லை. கோபம் தான் வருது..” அவனது பதிலைக் கேட்டவன்,
“அவங்க என்னைக்குமே அந்த அட்வான்டேஜ் எடுத்ததில்லையே. அவங்க டேலேன்டட், ஹார்ட்வொர்க் செய்யறாங்க. இன்னும் அவங்க என்ன தான் செய்வாங்க? கொஞ்சம் பார்த்து பேசுங்க.. என்னவோ சொல்லணும்ன்னு தோணிச்சு சொல்லிட்டேன்..” ரேவந்த் அதோடு பேச்சை முடித்துக்கொள்ள, சிறிது நேரம் அவனைப் பார்த்த மாதவன் தோள்குலுக்களோடு அந்தப் பேச்சை விடுத்தான்..
பார்க்கிங்கில் கார்த்திக் காத்திருக்கவும், “உங்க காருக்கு என்ன ஆச்சு? ஏன் கார் வாங்க அவசரப்படறீங்க? எங்கயாவது காரை இடிச்சிட்டீங்களா?” காலையிலிருந்து மண்டையைக் குடைந்துக்கொண்டிருந்த கேள்விகளை அவள் அடுக்க, கார்த்திக் கையை நீட்டினான்.
“என்ன ஆச்சு?” கையைப் பிடித்து ஆராயத் துவங்க, அவளது அன்பில் நெகிழ்ந்தவன்,
“எனக்கோ காருக்கோ ஒண்ணும் இல்லைம்மா. எனக்கு அந்தக் காரை மாத்தணும்.. அவ்வளவு தான்.. உன் வண்டி சாவியைக் கொடு. நான் எடுக்கறேன்..” அவன் கேட்கவுமே, அவனை அதிசயப்பிறவி போலப் பார்த்தாள்.
“இப்போவே ஏன் அந்தக் காரை மாத்தனும்ன்னு அடம் பிடிக்கறீங்க? நைட் உங்களுக்கு ஃப்ளைட் இருக்கு. போயிட்டு வந்து நிதானமா பார்த்து வாங்கிக்கலாம்ல? என்ன அடம்டா சாமி..” புலம்பிக்கொண்டே வண்டியின் சாவியைக் கொடுத்தவள், ஹெல்மெட்டையும் நீட்டினாள்.
அதை அணிந்துக் கொண்டு, “சீக்கிரம் வண்டியில ஏறு..” என, அவனை முறைத்து,
“ஆபிசை விட்டு வெளிய போய் நில்லுங்க. நான் வரேன்..” என்றபடி முன்னே நடக்க, ‘இவ ஒருத்தி நேரம் காலம் இல்லாம..’ புலம்பியபடி அவள் சொன்னதைச் செய்தவன், அவளுடன் கார் ஷோரூமிற்குச் சென்றான்.
‘உட்கார்ந்து பாரு. டெஸ்ட் டிரைவ் செய்துப் பாரு.’ அவன் சொல்லவுமே, அவனை விசித்திரமாய் பார்த்தபடி, சொன்னதைச் செய்தவள்,
“நல்லா இருக்கு. நீங்க ட்ரை பண்ணுங்க.” என,
“இல்லம்மா.. உனக்கு ஈசியா இருந்தா போதும்.. நான் ஏற்கனவே ஓட்டி இருக்கேன். உனக்கு ஓகே தானே. இதுவே புக் பண்ணிடலாமா? கலர் சூஸ் பண்ணு..” என, அவன் பக்கம் சாய்ந்து,
“விட்டா ’ஒரு கார் பார்சல்’ன்னு சொல்லுவீங்க போலருக்கே. வாய் வலிக்க, கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கேன். பதில் வருதா பாரு.” நக்கலடிக்க, அவளது கையுடன் கைக் கோர்த்துக் கொண்டான்.
அவனது முகத்தைப் பார்க்கவும், “எனக்கு அந்தக் கார் வேண்டாம். பார்த்தாலே ஒரு மாதிரி கில்டியா பிடிக்காம போயிருச்சு. அது தான் உடனே மாத்தறேன். இப்போ புக் பண்ணிட்டா ஊருல இருந்து வந்ததும் டெலிவெரி எடுத்துக்கலாம்.” விளக்கம் சொன்னவன், காரை புக் செய்துவிட்டே வெளியில் வந்தான்.
வண்டியின் அருகில் வந்ததும், “நிஜமாவே எதுவும் அடிப்படலைல. உங்க கார் எங்க?” என்று கேட்டபடி, கோவில் திருநீரை நீட்ட,
“எனக்கு அதுல எல்லாம் நம்பிக்கை இல்ல..” அவனது தயக்கத்தைப் பார்த்தவள், திருநீரை அவனது நெற்றியில் வைத்துவிட்டு,
“ஆண்டவா.. இந்தப் பிள்ளைக்கு நல்லபுத்தியைக் கொடு..” என்று வேண்ட, “கொழுப்பு உனக்கு. வாயாடி..” என்று சிரித்தவனின் மனது நிரம்பியிருந்தது.